புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:39 pm
» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
by heezulia Today at 8:39 pm
» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Jenila |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கவிதையில் யாப்பு
Page 10 of 29 •
Page 10 of 29 • 1 ... 6 ... 9, 10, 11 ... 19 ... 29
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
First topic message reminder :
யாப்பிலக்கணம்: ஒரு கவிதை அறிமுகம்
ரமணி, ஆகஸ்ட்-செப்டம்பர், 2012
இந்தத் தொடர் ஒரு சோதனை முயற்சி.
தொடரின் நோக்கம் கற்றுத் தருவதைவிடப் பகிர்ந்துகொள்வது.
கடந்த சில நாட்களாக நான் யாப்பிலக்கணம் பயில இறங்கி, அது இன்னும் தொடரும்போதே,
என் முயற்சியில் நான் பெற்ற செய்திகளை, மகிழ்வினை, வியப்புகளை, திருப்தியை
வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வது முதல் நோக்கம்.
யாப்பிலக்கணத்தை உரைநடையில் தரும்போது நேரிடும் மித மிஞ்சிய சொற்களின் அளவைக் குறைத்து
எளிதில் படித்து, பார்த்து, நினைக்க உதவும் வகையில்
கவிதை வரிகளில் தருவது தொடரின் இரண்டாவது நோக்கம்.
அப்படித் தரும்போது அது வாசகர்களுக்குப் பயன்தந்து, பிற நூல்களின் மூலம்
யாப்பிலக்கணம் மேலும் நன்கு பயில ஊக்கம் அளிக்கும் என்ற நம்பிக்கை மூன்றாவது நோக்கம்.
யாப்பின் ஒழுங்கில், இன்றைய வழக்கில் கவிதை புனைவது
வேறு விதத்தில் எழுதுவது போன்றே எளிதில் வருவது,
அதைவிட அதிகப் பெருமையும் திருப்தியும் தருவது
என்று இத்தொடரில் காட்டிட முயல்கிறேன்.
தொடரின் நிறை குறை பற்றிக் கவிதை ஆர்வலர்கள் அப்போதைக்கப்போதே பின்னூட்டம் இடலாம்.
வரும் பின்னூட்டங்களின் சீரிய கருத்துக்களை எடுத்தாண்டு, குறைகளைக் கூடியமட்டும் திருத்தி,
இறுதியில் எல்லோருக்கும் பயன்படும் வகையில் ஒரு மின்னூலாக்குவது என் இலக்கு.
யாப்பிலக்கணம்: ஒரு கவிதை அறிமுகம்
ரமணி, ஆகஸ்ட்-செப்டம்பர், 2012
இந்தத் தொடர் ஒரு சோதனை முயற்சி.
தொடரின் நோக்கம் கற்றுத் தருவதைவிடப் பகிர்ந்துகொள்வது.
கடந்த சில நாட்களாக நான் யாப்பிலக்கணம் பயில இறங்கி, அது இன்னும் தொடரும்போதே,
என் முயற்சியில் நான் பெற்ற செய்திகளை, மகிழ்வினை, வியப்புகளை, திருப்தியை
வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வது முதல் நோக்கம்.
யாப்பிலக்கணத்தை உரைநடையில் தரும்போது நேரிடும் மித மிஞ்சிய சொற்களின் அளவைக் குறைத்து
எளிதில் படித்து, பார்த்து, நினைக்க உதவும் வகையில்
கவிதை வரிகளில் தருவது தொடரின் இரண்டாவது நோக்கம்.
அப்படித் தரும்போது அது வாசகர்களுக்குப் பயன்தந்து, பிற நூல்களின் மூலம்
யாப்பிலக்கணம் மேலும் நன்கு பயில ஊக்கம் அளிக்கும் என்ற நம்பிக்கை மூன்றாவது நோக்கம்.
யாப்பின் ஒழுங்கில், இன்றைய வழக்கில் கவிதை புனைவது
வேறு விதத்தில் எழுதுவது போன்றே எளிதில் வருவது,
அதைவிட அதிகப் பெருமையும் திருப்தியும் தருவது
என்று இத்தொடரில் காட்டிட முயல்கிறேன்.
தொடரின் நிறை குறை பற்றிக் கவிதை ஆர்வலர்கள் அப்போதைக்கப்போதே பின்னூட்டம் இடலாம்.
வரும் பின்னூட்டங்களின் சீரிய கருத்துக்களை எடுத்தாண்டு, குறைகளைக் கூடியமட்டும் திருத்தி,
இறுதியில் எல்லோருக்கும் பயன்படும் வகையில் ஒரு மின்னூலாக்குவது என் இலக்கு.
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
வணக்கம் திரு. yarlpavanan
உங்கள் வாழ்த்து என்னை மேலும் என் பணியில் ஊக்குவிக்கும். உங்கள் புதுக்கவிதைகளை ஒரு glance பார்த்தபோது அவற்றை எளிதில் இணைக்குறள் ஆசிரியப்பாவில் எழுதலாம் என்று தோன்றுகிறது.
அன்புடன்,
ரமணி
உங்கள் வாழ்த்து என்னை மேலும் என் பணியில் ஊக்குவிக்கும். உங்கள் புதுக்கவிதைகளை ஒரு glance பார்த்தபோது அவற்றை எளிதில் இணைக்குறள் ஆசிரியப்பாவில் எழுதலாம் என்று தோன்றுகிறது.
அன்புடன்,
ரமணி
yarlpavanan wrote:தொடருங்கள்
தங்கள் கவிதைப் பயிற்சியை
பயிலுவோர்
நலமே நற்பயன் ஈட்டட்டும்!
தொடரைச் செவ்வனே நடாத்த
என் வாழ்த்துகள்!
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
பயிற்சி 7. தளை, பாவகை அறிதல்: விடை
நேஆ=நேரொன்றாசிரியத் தளை; நிஆ=நிரையொன்றாசிரியத் தளை; இவெ=இயற்சீர் வெண்டளை
வெவெ=வெண்சீர் வெண்டளை; கத=கலித்தளை வறி=ஒன்றிய வஞ்சித்தளை; வறா=ஒன்றாத வஞ்சித்தளை.
ஆபா=ஆசிரியப்பா வெபா=வெண்பா கபா=கலிப்பா வபா=வஞ்சிப்பா
பதினெண்1 கணனு2 மேத்தவும்3 படுமே4
எல்லா5 வுயிர்க்கு6 மேம7 மாகிய8
நீரற9 வறியாக்10 கரகத்துத்11
தாழ்சடைப்12 பொலிந்த13 வருந்தவத்14 தோற்கே.
இவெ நேஆ நிஆ நேஆ
இவெ நேஆ நேஆ இவெ
நிஆ இவெ வெவெ
நிஆ இவெ இவெ ஆபா
பயிற்சி 8. தளை, பாவகை அறிதல்: விடை
நேஆ=நேரொன்றாசிரியத் தளை; நிஆ=நிரையொன்றாசிரியத் தளை; இவெ=இயற்சீர் வெண்டளை
வெவெ=வெண்சீர் வெண்டளை; கத=கலித்தளை வறி=ஒன்றிய வஞ்சித்தளை; வறா=ஒன்றாத வஞ்சித்தளை.
ஆபா=ஆசிரியப்பா வெபா=வெண்பா கபா=கலிப்பா வபா=வஞ்சிப்பா
தாயெனக்கொளுந்1 தகையரும்பண்பீ2
ஈயெனமுயல்3 எறும்பியற்படு4
கரிநினைவிரு5 காகமென்னணை6
வரியெனவொறு7 திரிகயவரை
வறி வெவெ
வறி வறி
வறா வறி
வறி வபா
*****
நேஆ=நேரொன்றாசிரியத் தளை; நிஆ=நிரையொன்றாசிரியத் தளை; இவெ=இயற்சீர் வெண்டளை
வெவெ=வெண்சீர் வெண்டளை; கத=கலித்தளை வறி=ஒன்றிய வஞ்சித்தளை; வறா=ஒன்றாத வஞ்சித்தளை.
ஆபா=ஆசிரியப்பா வெபா=வெண்பா கபா=கலிப்பா வபா=வஞ்சிப்பா
பதினெண்1 கணனு2 மேத்தவும்3 படுமே4
எல்லா5 வுயிர்க்கு6 மேம7 மாகிய8
நீரற9 வறியாக்10 கரகத்துத்11
தாழ்சடைப்12 பொலிந்த13 வருந்தவத்14 தோற்கே.
இவெ நேஆ நிஆ நேஆ
இவெ நேஆ நேஆ இவெ
நிஆ இவெ வெவெ
நிஆ இவெ இவெ ஆபா
பயிற்சி 8. தளை, பாவகை அறிதல்: விடை
நேஆ=நேரொன்றாசிரியத் தளை; நிஆ=நிரையொன்றாசிரியத் தளை; இவெ=இயற்சீர் வெண்டளை
வெவெ=வெண்சீர் வெண்டளை; கத=கலித்தளை வறி=ஒன்றிய வஞ்சித்தளை; வறா=ஒன்றாத வஞ்சித்தளை.
ஆபா=ஆசிரியப்பா வெபா=வெண்பா கபா=கலிப்பா வபா=வஞ்சிப்பா
தாயெனக்கொளுந்1 தகையரும்பண்பீ2
ஈயெனமுயல்3 எறும்பியற்படு4
கரிநினைவிரு5 காகமென்னணை6
வரியெனவொறு7 திரிகயவரை
வறி வெவெ
வறி வறி
வறா வறி
வறி வபா
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
பயிற்சி 9. தளை, பாவகை அறிதல்
http://kavithaiyilyappu.blogspot.in/p/459-9.html
எண்ணிட்ட தளைகள் பதினைந்தும் பாவகையும்
தக்க ஈரெழுத்தால் கீழே
கலைந்த நிரலில் குறிக்கப் பட்டன.
எண்களை நோக்கி வரும்தளை யறிந்து
கலைந்த தளையின் எழுத்துகளை நேர்செய்து
சரியான நிரல்வர எழுதிக் குறித்து
இறுதியில் பாவின் எழுத்தையும் குறிக்கவும்.
நேஆ=நேரொன்றாசிரியத் தளை; நிஆ=நிரையொன்றாசிரியத் தளை; இவெ=இயற்சீர் வெண்டளை
வெவெ=வெண்சீர் வெண்டளை; கத=கலித்தளை வறி=ஒன்றிய வஞ்சித்தளை; வறா=ஒன்றாத வஞ்சித்தளை.
ஆபா=ஆசிரியப்பா வெபா=வெண்பா கபா=கலிப்பா வபா=வஞ்சிப்பா
செல்வப்போர்க்1 கதக்கண்ணன்2 செயிர்த்தெறிந்த3 சினவாழி4
முல்லைத்தார்5 மறமன்னர்6 முடித்தலையை7 முருக்கிப்போய்8
எல்லைநீர்9 வியன்கொண்மூ10 இடைநுழையும்11 மதியம்போல்12
மல்லலோங்13 கெழில்யானை14 மருமம்பாய்த்15 தொளித்ததே
வெவெ கத கபா நிஆ
கத வெவெ கத கத
கத கத கத கத
வெவெ கத கத நிஆ
பயிற்சி 10. தளை, பாவகை அறிதல்
http://kavithaiyilyappu.blogspot.in/p/459-10.html
எண்ணிட்ட தளைகள் ஏழும் பாவகையும்
தக்க ஈரெழுத்தால் கீழே
கலைந்த நிரலில் குறிக்கப் பட்டன.
எண்களை நோக்கி வரும்தளை யறிந்து
கலைந்த தளையின் எழுத்துகளை நேர்செய்து
சரியான நிரல்வர எழுதிக் குறித்து
இறுதியில் பாவின் எழுத்தையும் குறிக்கவும்.
நேஆ=நேரொன்றாசிரியத் தளை; நிஆ=நிரையொன்றாசிரியத் தளை; இவெ=இயற்சீர் வெண்டளை
வெவெ=வெண்சீர் வெண்டளை; கத=கலித்தளை வறி=ஒன்றிய வஞ்சித்தளை; வறா=ஒன்றாத வஞ்சித்தளை.
ஆபா=ஆசிரியப்பா வெபா=வெண்பா கபா=கலிப்பா வபா=வஞ்சிப்பா
வான்கரும்பே1 தொண்டை2 வளநாடு3 வான்கரும்பின்4
சாறேயந்5 நாட்டுத்6 தலையூர்கள்7 சாறட்ட
வெவெ இவெ வெவெ வெவெ
வெவெ இவெ வெவெ வெபா
*****
http://kavithaiyilyappu.blogspot.in/p/459-9.html
எண்ணிட்ட தளைகள் பதினைந்தும் பாவகையும்
தக்க ஈரெழுத்தால் கீழே
கலைந்த நிரலில் குறிக்கப் பட்டன.
எண்களை நோக்கி வரும்தளை யறிந்து
கலைந்த தளையின் எழுத்துகளை நேர்செய்து
சரியான நிரல்வர எழுதிக் குறித்து
இறுதியில் பாவின் எழுத்தையும் குறிக்கவும்.
நேஆ=நேரொன்றாசிரியத் தளை; நிஆ=நிரையொன்றாசிரியத் தளை; இவெ=இயற்சீர் வெண்டளை
வெவெ=வெண்சீர் வெண்டளை; கத=கலித்தளை வறி=ஒன்றிய வஞ்சித்தளை; வறா=ஒன்றாத வஞ்சித்தளை.
ஆபா=ஆசிரியப்பா வெபா=வெண்பா கபா=கலிப்பா வபா=வஞ்சிப்பா
செல்வப்போர்க்1 கதக்கண்ணன்2 செயிர்த்தெறிந்த3 சினவாழி4
முல்லைத்தார்5 மறமன்னர்6 முடித்தலையை7 முருக்கிப்போய்8
எல்லைநீர்9 வியன்கொண்மூ10 இடைநுழையும்11 மதியம்போல்12
மல்லலோங்13 கெழில்யானை14 மருமம்பாய்த்15 தொளித்ததே
வெவெ கத கபா நிஆ
கத வெவெ கத கத
கத கத கத கத
வெவெ கத கத நிஆ
பயிற்சி 10. தளை, பாவகை அறிதல்
http://kavithaiyilyappu.blogspot.in/p/459-10.html
எண்ணிட்ட தளைகள் ஏழும் பாவகையும்
தக்க ஈரெழுத்தால் கீழே
கலைந்த நிரலில் குறிக்கப் பட்டன.
எண்களை நோக்கி வரும்தளை யறிந்து
கலைந்த தளையின் எழுத்துகளை நேர்செய்து
சரியான நிரல்வர எழுதிக் குறித்து
இறுதியில் பாவின் எழுத்தையும் குறிக்கவும்.
நேஆ=நேரொன்றாசிரியத் தளை; நிஆ=நிரையொன்றாசிரியத் தளை; இவெ=இயற்சீர் வெண்டளை
வெவெ=வெண்சீர் வெண்டளை; கத=கலித்தளை வறி=ஒன்றிய வஞ்சித்தளை; வறா=ஒன்றாத வஞ்சித்தளை.
ஆபா=ஆசிரியப்பா வெபா=வெண்பா கபா=கலிப்பா வபா=வஞ்சிப்பா
வான்கரும்பே1 தொண்டை2 வளநாடு3 வான்கரும்பின்4
சாறேயந்5 நாட்டுத்6 தலையூர்கள்7 சாறட்ட
வெவெ இவெ வெவெ வெவெ
வெவெ இவெ வெவெ வெபா
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
பயிற்சி 9. தளை, பாவகை அறிதல்: விடை
நேஆ=நேரொன்றாசிரியத் தளை; நிஆ=நிரையொன்றாசிரியத் தளை; இவெ=இயற்சீர் வெண்டளை
வெவெ=வெண்சீர் வெண்டளை; கத=கலித்தளை வறி=ஒன்றிய வஞ்சித்தளை; வறா=ஒன்றாத வஞ்சித்தளை.
ஆபா=ஆசிரியப்பா வெபா=வெண்பா கபா=கலிப்பா வபா=வஞ்சிப்பா
செல்வப்போர்க்1 கதக்கண்ணன்2 செயிர்த்தெறிந்த3 சினவாழி4
முல்லைத்தார்5 மறமன்னர்6 முடித்தலையை7 முருக்கிப்போய்8
எல்லைநீர்9 வியன்கொண்மூ10 இடைநுழையும்11 மதியம்போல்12
மல்லலோங்13 கெழில்யானை14 மருமம்பாய்த்15 தொளித்ததே
கத கத கத வெவெ
கத கத கத வெவெ
நிஆ கத கத வெவெ
நிஆ கத கத கபா
பயிற்சி 10. தளை, பாவகை அறிதல்: விடை
நேஆ=நேரொன்றாசிரியத் தளை; நிஆ=நிரையொன்றாசிரியத் தளை; இவெ=இயற்சீர் வெண்டளை
வெவெ=வெண்சீர் வெண்டளை; கத=கலித்தளை வறி=ஒன்றிய வஞ்சித்தளை; வறா=ஒன்றாத வஞ்சித்தளை.
ஆபா=ஆசிரியப்பா வெபா=வெண்பா கபா=கலிப்பா வபா=வஞ்சிப்பா
வான்கரும்பே1 தொண்டை2 வளநாடு3 வான்கரும்பின்4
சாறேயந்5 நாட்டுத்6 தலையூர்கள்7 சாறட்ட
வெவெ இவெ வெவெ வெவெ
வெவெ இவெ வெவெ வெபா
*****
நேஆ=நேரொன்றாசிரியத் தளை; நிஆ=நிரையொன்றாசிரியத் தளை; இவெ=இயற்சீர் வெண்டளை
வெவெ=வெண்சீர் வெண்டளை; கத=கலித்தளை வறி=ஒன்றிய வஞ்சித்தளை; வறா=ஒன்றாத வஞ்சித்தளை.
ஆபா=ஆசிரியப்பா வெபா=வெண்பா கபா=கலிப்பா வபா=வஞ்சிப்பா
செல்வப்போர்க்1 கதக்கண்ணன்2 செயிர்த்தெறிந்த3 சினவாழி4
முல்லைத்தார்5 மறமன்னர்6 முடித்தலையை7 முருக்கிப்போய்8
எல்லைநீர்9 வியன்கொண்மூ10 இடைநுழையும்11 மதியம்போல்12
மல்லலோங்13 கெழில்யானை14 மருமம்பாய்த்15 தொளித்ததே
கத கத கத வெவெ
கத கத கத வெவெ
நிஆ கத கத வெவெ
நிஆ கத கத கபா
பயிற்சி 10. தளை, பாவகை அறிதல்: விடை
நேஆ=நேரொன்றாசிரியத் தளை; நிஆ=நிரையொன்றாசிரியத் தளை; இவெ=இயற்சீர் வெண்டளை
வெவெ=வெண்சீர் வெண்டளை; கத=கலித்தளை வறி=ஒன்றிய வஞ்சித்தளை; வறா=ஒன்றாத வஞ்சித்தளை.
ஆபா=ஆசிரியப்பா வெபா=வெண்பா கபா=கலிப்பா வபா=வஞ்சிப்பா
வான்கரும்பே1 தொண்டை2 வளநாடு3 வான்கரும்பின்4
சாறேயந்5 நாட்டுத்6 தலையூர்கள்7 சாறட்ட
வெவெ இவெ வெவெ வெவெ
வெவெ இவெ வெவெ வெபா
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
4.60. அடி
(நிலைமண்டில ஆசிரியப்பா)
அடியெனும் சொல்லின் பொருளாய் வருகிற
அடிக்கால் ஆதி பாதம் என்பன ... ... ... ... [அடிக்கால்=காலின் அடிப்பாகம்]
அடியெனும் உறுப்பில் ஆகி வருமே.
செய்யுள் எழுதல் சீர்களில் என்றால்
செய்யுள் பேசுதல் ஓசையில் என்றால்
செய்யுள் உருத்தல் பாவினில் என்றால்
செய்யுள் நடத்தல் அடிகளில் எனலாம்
செய்யுள் அடிகளில் பாவகை தெரியுமே.
சீர்களும் தளைகளும் பாவகை பெயர்பெற ... ... [அகவல், வெண்பா, வஞ்சி உரிச்சீர்கள்; கலித்தளை]
சீர்களும் தளைகளும் அடிகளில் தொடர
செய்யுளின் ஆதி வடிவே அடியென.
4.61. அடியென்பது
(நிலைமண்டில ஆசிரியப்பா)
இரண்டு முதலிய சீர்களைக் கொண்டு
முடிவது அடியென இலக்கணம் கூறும்
இதையே ஒன்று முதலிய தளைகள்
அடுத்து முடிவது அடியென உரைப்பரே.
முடிவது என்பது பொருள்குறித் தல்ல
முடிவது அடியில் சீர்தளைத் தொடுப்பே
முடிவது அடியெனில் தளையும் ஓசையும்
வடிவுறும் பொருளும் அடிகளில் தொடருமே.
(நிலைமண்டில ஆசிரியப்பா தனிச்சொல்லுடன்)
சீர்-தளை எண்ணிக்கை அடியினில் காண
சீர்களின் எண்ணில் ஒன்று குறைவெனத்
சீரிடைத் தளைகள் எண்ணிட வருமே.
எனினும்
சீர்களின் இடையிலும் அடிகளின் இடையிலும்
பாக்களில் தளைகள் பெரிதும் வருவதால்
ஈற்றுச் சீரின் தளையும் சேர்த்திட
சீர்-தளை எண்ணே அடியினில் சமமே.
இப்படிப்
பாவின் மொத்தச் சீர்களின் கணக்கில்
பாவின் மொத்தத் தளைகளின் கணக்கே
ஒன்று குறைவெனக் கண்டு கொள்க.
நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கு மாங்கே பொசியுமாம் -- தொல்லுலகில்
மேல்வந்த அடிகளில் சீர்களை எண்ணிட
1நெல்லுக் 2கிறைத்தநீர் 3வாய்க்கால் 4வழியோடிப்
5புல்லுக்கு 6மாங்கே 7பொசியுமாம் -- 8தொல்லுலகில்
மொத்தம் எட்டு வருவது காண்க.
மேல்வந்த அடிகளில் தளைகளை எண்ணிட
நெல்லுக்1 கிறைத்தநீர்2 வாய்க்கால்3 வழியோடிப்4
புல்லுக்கு5 மாங்கே6 பொசியுமாம்7 -- தொல்லுலகில்
மொத்தம் ஏழே வருவது காண்க.
*****
(நிலைமண்டில ஆசிரியப்பா)
அடியெனும் சொல்லின் பொருளாய் வருகிற
அடிக்கால் ஆதி பாதம் என்பன ... ... ... ... [அடிக்கால்=காலின் அடிப்பாகம்]
அடியெனும் உறுப்பில் ஆகி வருமே.
செய்யுள் எழுதல் சீர்களில் என்றால்
செய்யுள் பேசுதல் ஓசையில் என்றால்
செய்யுள் உருத்தல் பாவினில் என்றால்
செய்யுள் நடத்தல் அடிகளில் எனலாம்
செய்யுள் அடிகளில் பாவகை தெரியுமே.
சீர்களும் தளைகளும் பாவகை பெயர்பெற ... ... [அகவல், வெண்பா, வஞ்சி உரிச்சீர்கள்; கலித்தளை]
சீர்களும் தளைகளும் அடிகளில் தொடர
செய்யுளின் ஆதி வடிவே அடியென.
4.61. அடியென்பது
(நிலைமண்டில ஆசிரியப்பா)
இரண்டு முதலிய சீர்களைக் கொண்டு
முடிவது அடியென இலக்கணம் கூறும்
இதையே ஒன்று முதலிய தளைகள்
அடுத்து முடிவது அடியென உரைப்பரே.
முடிவது என்பது பொருள்குறித் தல்ல
முடிவது அடியில் சீர்தளைத் தொடுப்பே
முடிவது அடியெனில் தளையும் ஓசையும்
வடிவுறும் பொருளும் அடிகளில் தொடருமே.
(நிலைமண்டில ஆசிரியப்பா தனிச்சொல்லுடன்)
சீர்-தளை எண்ணிக்கை அடியினில் காண
சீர்களின் எண்ணில் ஒன்று குறைவெனத்
சீரிடைத் தளைகள் எண்ணிட வருமே.
எனினும்
சீர்களின் இடையிலும் அடிகளின் இடையிலும்
பாக்களில் தளைகள் பெரிதும் வருவதால்
ஈற்றுச் சீரின் தளையும் சேர்த்திட
சீர்-தளை எண்ணே அடியினில் சமமே.
இப்படிப்
பாவின் மொத்தச் சீர்களின் கணக்கில்
பாவின் மொத்தத் தளைகளின் கணக்கே
ஒன்று குறைவெனக் கண்டு கொள்க.
நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கு மாங்கே பொசியுமாம் -- தொல்லுலகில்
மேல்வந்த அடிகளில் சீர்களை எண்ணிட
1நெல்லுக் 2கிறைத்தநீர் 3வாய்க்கால் 4வழியோடிப்
5புல்லுக்கு 6மாங்கே 7பொசியுமாம் -- 8தொல்லுலகில்
மொத்தம் எட்டு வருவது காண்க.
மேல்வந்த அடிகளில் தளைகளை எண்ணிட
நெல்லுக்1 கிறைத்தநீர்2 வாய்க்கால்3 வழியோடிப்4
புல்லுக்கு5 மாங்கே6 பொசியுமாம்7 -- தொல்லுலகில்
மொத்தம் ஏழே வருவது காண்க.
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
4.62. அடி வகைகள்
(நிலைமண்டில ஆசிரியப்பா)
அடிகளின் அமைப்பை நிர்ணயம் செய்யும்
மரபுகள் இரண்டு வழிகள் இரண்டு:
சீர்கள் எண்ணுதல் எழுத்துகள் எண்ணுதல்
சீர்கள் எண்ணுதல் சீர்வகை அடியிலே
எழுத்துகள் எண்ணுதல் கட்டளை அடியிலே
வழக்கினில் பெரிதும் சீர்வகை அடிகளே.
கட்டளை அடிகள்:
கட்டளைக் கலித்துறை அடியொன் றினிலே
நேரில் தொடங்கின் பதினாறு எழுத்துகள்
நிறையில் தொடங்கின் பதினேழு எழுத்துகள்.
எண்ணப் படுகிற எழுத்துகள் வகையில்
ஒருமாத் திரையொலி உயிரும் உயிர்மெய்யுமே.
ஒற்றெழுத் துகளும் ஆய்த எழுத்தும்
குற்றிய லுகரமும் எண்ணப் படாதெனினும்
முற்றிய லுகரம் எண்ணப் பட்டுக்
கட்டளை அடியில் அளவினை வரைக்குமே. ... ... ... [தொல்.செய்.42]
தொல்காப் பியம்தரும் கட்டளை அடிகளில்
ஒல்கும் எழுத்துகள் ஓர்க்கும் போது
குறளடி யில்வரும் நான்குமுதல் ஆறுவரை
சிந்தடி யில்வரும் ஏழுமுதல் ஒன்பது
அளவடி பத்துமுதல் பதிநான் குவரை
நெடிலடி பதினைந் துமுதல் பதினேழு
கழிநெடில் பதினெட் டுமுதல் இருபதே.
எழுத்தில் இயங்கும் கட்டளை அடிக்கு
வி.எஸ். ராஜம் புத்தகம்* தருகிற ... ... ... [பக்.142]
உரைகளில் வருகிற சான்றுகள் கீழே.
’பேர்ந்து பேர்ந்து சார்ந்து சார்ந்து’
பே-பே சா-சா என்னும் நான்கு
குற்றிய லிகரம் கணக்கில் வராத
எழுத்துகள் வருவதால் குறளடி யாமே.
’நீர்வாய்க் கொண்ட நீல மூர்வாய்’
நீ-வா கொ-ட நீ-ல மூ-வா
எட்டெழுத் துவரும் சிந்தடி யாமே.
’நன்மணங் கமழும் பன்னல் லூர’
ந-ம-ண க-ம-ழு ப-ன லூ-ர
பத்தெழுத் துவரும் நேரடி யாமே.
’அணிநகை நசைஇய அரியமர் சிலம்பின்’
அ-ணி-ந-கை ந-சை-இ-ய அ-ரி-ய-ம சி-ல-பி
பதினைந் எழுத்தில் நெடிலடி யாமே.
’நளிமுழவு முழங்கிய அணிநிலவு மணிநகர்’
ந-ளி-மு-ழ-வு மு-ழ-கி-ய அ-ணி-நி-ல-வு ம-ணி-ந-க
பதினெட் டெழுத்தில் கழிநெடி லடியாம்.
[Ref: 'A Reference Grammar of Classical Tamil Poetry' by V.S.Rajam]
சீர்வகை அடிகள்:
சீர்வகை அடிகள் மொத்தம் ஐந்து.
குறிலடி சிந்தடி அளவடி நெடிலடி
கழிநெடிலடி யென்று வகைகள் ஐந்தே.
சீர்கள் இரண்டில் முடிவது குறளடி
சீர்கள் மூன்றில் முடிவது சிந்தடி
சீர்கள் நான்கில் முடிவது அளவடி
சீர்கள் ஐந்தில் முடிவது நெடிலடி
சீர்கள் ஆறும் மேலும் கழிநெடிலடி
சீர்கள் நான்கில் முடியும் அளவடி
அடியின் இயற்கை அளவெனச் சொல்வரே.
அடிகளின் பெயரெலாம் காரணப் பெயர்களே
வடிவினில் தீரக் குள்ளனைக் ’குறளன்’
அவனின் நெடியான் ’சிந்தன்’ நெடியான்
அவனினும் ’அளவிற் பட்டான்’ தீர
நெடியான் ’கழிய நெடியான்’ என்று
வடிவம் சுட்டிய பெயர்கள் வழக்கிலே
முன்னொரு காலம் மன்னிய தாலே
வடிவம் சுட்டி அடிப்பெயர் இட்டனரே.
’நாற்சீர் கொண்டது அடியெனப் படுமே’ ... ... ... [தொல்.செய்.31]
தளையும் தொடையும் நேரடி குறித்தே ... ... ... [நேரடி=அளவடி]
’அடியின் சிறப்பே பாட்டெனப் படுமே’ ... ... ... [தொல்.செய்.34]
அளவடி தொட்டே பிறவகை அடிகள்
அளவுகள் குறித்துப் பெயர்கள் பெறுவன.
அளவடி தொட்டே தொடைகளின் பெயர்களும்.
தளைகள் குறிக்கவும் பொதுவில் அளவடி.
அளவடி இயல்வன அகவற்பா வெண்பா
கலிப்பா ஆகிய மூவகைப் பாக்கள்
குறுவடி வஞ்சி சிறிதே வருவதாம்.
சீர்வகை அடிகள் நோக்கும் போது
சீர்களே கணக்கு வரிகள் அல்ல.
கழிநெடி லடிகள் பொதுவில் வரிகள்
ஒன்றின் மிக்கு எழுதப் படுமே.
*****
(நிலைமண்டில ஆசிரியப்பா)
அடிகளின் அமைப்பை நிர்ணயம் செய்யும்
மரபுகள் இரண்டு வழிகள் இரண்டு:
சீர்கள் எண்ணுதல் எழுத்துகள் எண்ணுதல்
சீர்கள் எண்ணுதல் சீர்வகை அடியிலே
எழுத்துகள் எண்ணுதல் கட்டளை அடியிலே
வழக்கினில் பெரிதும் சீர்வகை அடிகளே.
கட்டளை அடிகள்:
கட்டளைக் கலித்துறை அடியொன் றினிலே
நேரில் தொடங்கின் பதினாறு எழுத்துகள்
நிறையில் தொடங்கின் பதினேழு எழுத்துகள்.
எண்ணப் படுகிற எழுத்துகள் வகையில்
ஒருமாத் திரையொலி உயிரும் உயிர்மெய்யுமே.
ஒற்றெழுத் துகளும் ஆய்த எழுத்தும்
குற்றிய லுகரமும் எண்ணப் படாதெனினும்
முற்றிய லுகரம் எண்ணப் பட்டுக்
கட்டளை அடியில் அளவினை வரைக்குமே. ... ... ... [தொல்.செய்.42]
தொல்காப் பியம்தரும் கட்டளை அடிகளில்
ஒல்கும் எழுத்துகள் ஓர்க்கும் போது
குறளடி யில்வரும் நான்குமுதல் ஆறுவரை
சிந்தடி யில்வரும் ஏழுமுதல் ஒன்பது
அளவடி பத்துமுதல் பதிநான் குவரை
நெடிலடி பதினைந் துமுதல் பதினேழு
கழிநெடில் பதினெட் டுமுதல் இருபதே.
எழுத்தில் இயங்கும் கட்டளை அடிக்கு
வி.எஸ். ராஜம் புத்தகம்* தருகிற ... ... ... [பக்.142]
உரைகளில் வருகிற சான்றுகள் கீழே.
’பேர்ந்து பேர்ந்து சார்ந்து சார்ந்து’
பே-பே சா-சா என்னும் நான்கு
குற்றிய லிகரம் கணக்கில் வராத
எழுத்துகள் வருவதால் குறளடி யாமே.
’நீர்வாய்க் கொண்ட நீல மூர்வாய்’
நீ-வா கொ-ட நீ-ல மூ-வா
எட்டெழுத் துவரும் சிந்தடி யாமே.
’நன்மணங் கமழும் பன்னல் லூர’
ந-ம-ண க-ம-ழு ப-ன லூ-ர
பத்தெழுத் துவரும் நேரடி யாமே.
’அணிநகை நசைஇய அரியமர் சிலம்பின்’
அ-ணி-ந-கை ந-சை-இ-ய அ-ரி-ய-ம சி-ல-பி
பதினைந் எழுத்தில் நெடிலடி யாமே.
’நளிமுழவு முழங்கிய அணிநிலவு மணிநகர்’
ந-ளி-மு-ழ-வு மு-ழ-கி-ய அ-ணி-நி-ல-வு ம-ணி-ந-க
பதினெட் டெழுத்தில் கழிநெடி லடியாம்.
[Ref: 'A Reference Grammar of Classical Tamil Poetry' by V.S.Rajam]
சீர்வகை அடிகள்:
சீர்வகை அடிகள் மொத்தம் ஐந்து.
குறிலடி சிந்தடி அளவடி நெடிலடி
கழிநெடிலடி யென்று வகைகள் ஐந்தே.
சீர்கள் இரண்டில் முடிவது குறளடி
சீர்கள் மூன்றில் முடிவது சிந்தடி
சீர்கள் நான்கில் முடிவது அளவடி
சீர்கள் ஐந்தில் முடிவது நெடிலடி
சீர்கள் ஆறும் மேலும் கழிநெடிலடி
சீர்கள் நான்கில் முடியும் அளவடி
அடியின் இயற்கை அளவெனச் சொல்வரே.
அடிகளின் பெயரெலாம் காரணப் பெயர்களே
வடிவினில் தீரக் குள்ளனைக் ’குறளன்’
அவனின் நெடியான் ’சிந்தன்’ நெடியான்
அவனினும் ’அளவிற் பட்டான்’ தீர
நெடியான் ’கழிய நெடியான்’ என்று
வடிவம் சுட்டிய பெயர்கள் வழக்கிலே
முன்னொரு காலம் மன்னிய தாலே
வடிவம் சுட்டி அடிப்பெயர் இட்டனரே.
’நாற்சீர் கொண்டது அடியெனப் படுமே’ ... ... ... [தொல்.செய்.31]
தளையும் தொடையும் நேரடி குறித்தே ... ... ... [நேரடி=அளவடி]
’அடியின் சிறப்பே பாட்டெனப் படுமே’ ... ... ... [தொல்.செய்.34]
அளவடி தொட்டே பிறவகை அடிகள்
அளவுகள் குறித்துப் பெயர்கள் பெறுவன.
அளவடி தொட்டே தொடைகளின் பெயர்களும்.
தளைகள் குறிக்கவும் பொதுவில் அளவடி.
அளவடி இயல்வன அகவற்பா வெண்பா
கலிப்பா ஆகிய மூவகைப் பாக்கள்
குறுவடி வஞ்சி சிறிதே வருவதாம்.
சீர்வகை அடிகள் நோக்கும் போது
சீர்களே கணக்கு வரிகள் அல்ல.
கழிநெடி லடிகள் பொதுவில் வரிகள்
ஒன்றின் மிக்கு எழுதப் படுமே.
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
4.63. குறளடி
(நிலைமண்டில ஆசிரியப்பா)
ஒருதளை யடுத்து இருசீரில் முடிவது
குறளடி யென்னும் குறுவடி யாமே.
அடிவகை அனைத்திலும் குறுமை யுடையதாய்க்
கடிதின் ஒலிக்கக் குறளடி யெனப்படும்.
வஞ்சிப் பாவினுக் குறியது குறளடி
வஞ்சியடி யல்லாத தாய்வரும் குறளடிக்கு
நான்குமுதல் ஆறுவரை எழுத்தளவு கூறுவார்
தொல்காப் பியர்தம் தொல்கப் பியத்திலே. ... ... ... [தொல்.செ.35]
கட்டளைக் குறளடிச் சான்று:
கட்டளைக் குறளடிச் சான்றெனப் பார்க்க
ஒவ்வொரு அடியிலும் ஐந்தெழுத் துவரும்
வஞ்சித் துறையடி கீழே வருமே.
பேரறி வன்னான்
சார விருந்த
வூரினு மில்லென்
றார விகழ்ந்தே
---தொன்னூல் விளக்கம், 242
இவ்விதம் இன்னொரு சான்று பகர
ஒவ்வொரு அடியிலும் ஆறெழுத் துவரும்
செவ்விய குறளடி சூளா மணிதரும்.
நிரைத்த சாலிகை
நிரைத்த போனிரந்
திரைப்ப தேன்களே
விரைக்கொண் மாலையாய்
---சூளாமணி 738
குறளடிப் பொருளை ஆறெழுத் துவரும்
குறளடி களிலே கீழுள்ள வாறு
குறையா தெழுத நிறைவாய் விளங்குமே.
கரிய கவசமாய்க்
கருமை வண்டுகள்
நிரைந்து மொய்த்திடும்
நறுமை மாலையாய் ... ... ... [நறுமை=வாசனை]
மேல்வரும் சான்றுகள் சீர்வகை நோக்கிலும்
ஏலுதல் காண்க சீர்கள் இரண்டில் ... ... ... [ஏலுதல்=பொருந்துதல்]
இருவகை நோக்கிலும் குறளடி யெனவே.
சீர்வகைக் குறளடிச் சான்று:
எழுத்துகள் மிகினும் சீர்கள் இரண்டால்
குறளடி யெனவரும் புகழ்மிகு சான்று
தருவது யா.க. விருத்தி கீழே.
சுறமறிவன துறையெல்லாம்
இறவின்பன வில்லெல்லாம்
மீன்றிரிவின கிடங்கெல்லாம்
தேன்றாழ்வன பொழிலெல்லாம்
---யாப்பருங்கல விருத்தி, பக்.64
இவ்வடிகள் பொருள்நோக்கின்:
சுறாமீன் ஆறெல்லாம்
இறால்மீன் இல்நிறையும்
மீன்திரியும் அகழிகளில்
தேன்மலர்கள் சோலையிலே
*****
(நிலைமண்டில ஆசிரியப்பா)
ஒருதளை யடுத்து இருசீரில் முடிவது
குறளடி யென்னும் குறுவடி யாமே.
அடிவகை அனைத்திலும் குறுமை யுடையதாய்க்
கடிதின் ஒலிக்கக் குறளடி யெனப்படும்.
வஞ்சிப் பாவினுக் குறியது குறளடி
வஞ்சியடி யல்லாத தாய்வரும் குறளடிக்கு
நான்குமுதல் ஆறுவரை எழுத்தளவு கூறுவார்
தொல்காப் பியர்தம் தொல்கப் பியத்திலே. ... ... ... [தொல்.செ.35]
கட்டளைக் குறளடிச் சான்று:
கட்டளைக் குறளடிச் சான்றெனப் பார்க்க
ஒவ்வொரு அடியிலும் ஐந்தெழுத் துவரும்
வஞ்சித் துறையடி கீழே வருமே.
பேரறி வன்னான்
சார விருந்த
வூரினு மில்லென்
றார விகழ்ந்தே
---தொன்னூல் விளக்கம், 242
இவ்விதம் இன்னொரு சான்று பகர
ஒவ்வொரு அடியிலும் ஆறெழுத் துவரும்
செவ்விய குறளடி சூளா மணிதரும்.
நிரைத்த சாலிகை
நிரைத்த போனிரந்
திரைப்ப தேன்களே
விரைக்கொண் மாலையாய்
---சூளாமணி 738
குறளடிப் பொருளை ஆறெழுத் துவரும்
குறளடி களிலே கீழுள்ள வாறு
குறையா தெழுத நிறைவாய் விளங்குமே.
கரிய கவசமாய்க்
கருமை வண்டுகள்
நிரைந்து மொய்த்திடும்
நறுமை மாலையாய் ... ... ... [நறுமை=வாசனை]
மேல்வரும் சான்றுகள் சீர்வகை நோக்கிலும்
ஏலுதல் காண்க சீர்கள் இரண்டில் ... ... ... [ஏலுதல்=பொருந்துதல்]
இருவகை நோக்கிலும் குறளடி யெனவே.
சீர்வகைக் குறளடிச் சான்று:
எழுத்துகள் மிகினும் சீர்கள் இரண்டால்
குறளடி யெனவரும் புகழ்மிகு சான்று
தருவது யா.க. விருத்தி கீழே.
சுறமறிவன துறையெல்லாம்
இறவின்பன வில்லெல்லாம்
மீன்றிரிவின கிடங்கெல்லாம்
தேன்றாழ்வன பொழிலெல்லாம்
---யாப்பருங்கல விருத்தி, பக்.64
இவ்வடிகள் பொருள்நோக்கின்:
சுறாமீன் ஆறெல்லாம்
இறால்மீன் இல்நிறையும்
மீன்திரியும் அகழிகளில்
தேன்மலர்கள் சோலையிலே
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
4.63. குறளடி முயற்சி: கட்டளைக் குறளடி
(இணைக்குறள் ஆசிரியப்பா)
நாமும் குறளடி முயன்றிடு வோமா?
நான்குமுதல் ஏழுவரை
எழுத்துகள் வருகிற
கட்டளைக் குறளடி புனைவோம் முதலிலே.
கந்தன் சிந்தை வந்து விந்தை
என்னும் சொல்வகை அடியெது கைவர
நாமம் நம்முளம் ஏற்றுதல் செய்தல்
என்னும் சொல்வகை அயற்சீர் அமைய
கந்தனை எண்ணி
வந்தனை செய்து
விந்தைகள் புரிய வேண்டிடு வோமே.
நான்கு எழுத்துக் குறளடி: (வஞ்சித் துறை)
கந்தன் நாமம்
சிந்தை ஏற்றில்
வந்தே நம்முள்
விந்தை செய்வான்.
[சீர்கள்: எல்லாம் தேமா; தளைகள்: எல்லாம் நேரொன்றாசிரியம்; ஓசை: ஏந்திசை யகவல்]
ஐந்து எழுத்துக் குறளடி: (வஞ்சித் துறை)
கந்தனின் நாமம்
சிந்தையில் ஏற்ற
வந்தே நம்முளம்
விந்தைசெய் வானே!
[சீர்கள்: கூவிளம் தேமா; தளைகள்: இயற்சீர் வெண்டளை நேரொன்றாசிரியம்;
ஓசை: ஒழுகிசை யகவல்]
ஆறு எழுத்துக் குறளடி: (வஞ்சித் துறை)
கந்தனின் நாமமே
சிந்தையில் ஏற்றினால்
வந்துநம் மனதில்
விந்தைகள் செய்வானே!
[சீர்கள்: பெரிதும் கூவிளம்; தளைகள்: பெரிதும் வெண்டளை, ஆசிரியம் விரவல்; ஓசை: ஒழுகிசை யகவல்]
கந்தனின் நாமத்தைச்
சிந்தையில் ஏற்றினால்
வந்துநம் உள்ளத்தில்
விந்தைகள் செய்வானே!
[சீர்கள்: பெரிதும் கூவிளம்; தளைகள்: எல்லாம் வெண்டளை; ஓசை: ஒழுகிசைச் செப்பல்]
ஏழு எழுத்துக் குறளடி: (வஞ்சித் துறை)
கந்தனின் திருநாமம்
சிந்தையில் ஏற்றினாலே
வந்துநம் மனதிலே
விந்தைகள் செய்திடுவான்.
[சீர்கள்: பெரிதும் கூவிளம்; தளைகள்: பெரிதும் வெண்டளை, ஆசிரியம் விரவல்; ஓசை: ஒழுகிசை யகவல்]
*****
(இணைக்குறள் ஆசிரியப்பா)
நாமும் குறளடி முயன்றிடு வோமா?
நான்குமுதல் ஏழுவரை
எழுத்துகள் வருகிற
கட்டளைக் குறளடி புனைவோம் முதலிலே.
கந்தன் சிந்தை வந்து விந்தை
என்னும் சொல்வகை அடியெது கைவர
நாமம் நம்முளம் ஏற்றுதல் செய்தல்
என்னும் சொல்வகை அயற்சீர் அமைய
கந்தனை எண்ணி
வந்தனை செய்து
விந்தைகள் புரிய வேண்டிடு வோமே.
நான்கு எழுத்துக் குறளடி: (வஞ்சித் துறை)
கந்தன் நாமம்
சிந்தை ஏற்றில்
வந்தே நம்முள்
விந்தை செய்வான்.
[சீர்கள்: எல்லாம் தேமா; தளைகள்: எல்லாம் நேரொன்றாசிரியம்; ஓசை: ஏந்திசை யகவல்]
ஐந்து எழுத்துக் குறளடி: (வஞ்சித் துறை)
கந்தனின் நாமம்
சிந்தையில் ஏற்ற
வந்தே நம்முளம்
விந்தைசெய் வானே!
[சீர்கள்: கூவிளம் தேமா; தளைகள்: இயற்சீர் வெண்டளை நேரொன்றாசிரியம்;
ஓசை: ஒழுகிசை யகவல்]
ஆறு எழுத்துக் குறளடி: (வஞ்சித் துறை)
கந்தனின் நாமமே
சிந்தையில் ஏற்றினால்
வந்துநம் மனதில்
விந்தைகள் செய்வானே!
[சீர்கள்: பெரிதும் கூவிளம்; தளைகள்: பெரிதும் வெண்டளை, ஆசிரியம் விரவல்; ஓசை: ஒழுகிசை யகவல்]
கந்தனின் நாமத்தைச்
சிந்தையில் ஏற்றினால்
வந்துநம் உள்ளத்தில்
விந்தைகள் செய்வானே!
[சீர்கள்: பெரிதும் கூவிளம்; தளைகள்: எல்லாம் வெண்டளை; ஓசை: ஒழுகிசைச் செப்பல்]
ஏழு எழுத்துக் குறளடி: (வஞ்சித் துறை)
கந்தனின் திருநாமம்
சிந்தையில் ஏற்றினாலே
வந்துநம் மனதிலே
விந்தைகள் செய்திடுவான்.
[சீர்கள்: பெரிதும் கூவிளம்; தளைகள்: பெரிதும் வெண்டளை, ஆசிரியம் விரவல்; ஓசை: ஒழுகிசை யகவல்]
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
4.63. குறளடி முயற்சி: சீர்வகைக் குறளடி
(நிலைமண்டில ஆசிரியப்பா)
கட்டளைக் குறளடி முயன்ற பின்னர்
சீர்வகைக் குறளடி முயலுதல் எளிது
சீர்கள் இரண்டில் தளையொலி தகைக்கவே.
பலபலவென விடிந்தபோது
சலசலக்கும் நதியினிலே
கலகலத்திட நீராடி
சளசளவெனக் குருவிகத்தப்
பளபளத்திடும் நீறணிந்து
மளமளவென்று ஜபம்செய்ய
வஞ்சிப் பாவில் தனிச்சொல் முன்வரும்
கொஞ்சப் பகுதியிது; மீதம் உள்ளதைத்
தக்க தனிச்சொல் சுரிதகம் இவற்றின்
பக்க பலம்சேர்த்துப் பின்னர்க் காண்போம்.
விண்ணதிர்ந்திட மண்ணதிர்ந்திட
பண்ணிசைத்திடும் யானைமந்தை
உண்ணவரும் சேனையையெனக்
கண்ணெதிரினில் காட்சிதந்தால்
விண்ணவரும் வெருண்டிடாரோ?
இதுவும் வஞ்சிப் பாவின் பகுதி
இனிவரும் தனிச்சொல் சுரிதகம் கொண்டு
இதனின் எதிர்மறை பின்னர் முடிப்போம்.
*****
(நிலைமண்டில ஆசிரியப்பா)
கட்டளைக் குறளடி முயன்ற பின்னர்
சீர்வகைக் குறளடி முயலுதல் எளிது
சீர்கள் இரண்டில் தளையொலி தகைக்கவே.
பலபலவென விடிந்தபோது
சலசலக்கும் நதியினிலே
கலகலத்திட நீராடி
சளசளவெனக் குருவிகத்தப்
பளபளத்திடும் நீறணிந்து
மளமளவென்று ஜபம்செய்ய
வஞ்சிப் பாவில் தனிச்சொல் முன்வரும்
கொஞ்சப் பகுதியிது; மீதம் உள்ளதைத்
தக்க தனிச்சொல் சுரிதகம் இவற்றின்
பக்க பலம்சேர்த்துப் பின்னர்க் காண்போம்.
விண்ணதிர்ந்திட மண்ணதிர்ந்திட
பண்ணிசைத்திடும் யானைமந்தை
உண்ணவரும் சேனையையெனக்
கண்ணெதிரினில் காட்சிதந்தால்
விண்ணவரும் வெருண்டிடாரோ?
இதுவும் வஞ்சிப் பாவின் பகுதி
இனிவரும் தனிச்சொல் சுரிதகம் கொண்டு
இதனின் எதிர்மறை பின்னர் முடிப்போம்.
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
4.63. குறளடிப் பயிற்சி
http://kavithaiyilyappu.blogspot.in/p/blog-page_9.html
(நிலைமண்டில ஆசிரியப்பா)
நினைவிற் கொள்ள:
ஒருதளை யடுத்(து)இரு சீரில் முடியும்
குறளடி இருவகை: கட்டளை, சீர்வகை.
கட்டளை வகையில் எழுத்துகள் கணக்கு:
நாலோ ஐந்தோ ஆறோ என்று.
சீர்வகை அடிகளில் எழுத்துகள் மிகினும்
சீர்கள் இரண்டு இருத்தல் வேண்டுமே.
பயிற்சி 1. கட்டளைக் குறளடி யமைத்தல்
மாலைப் பொழுதில்
சாலை வழியில்
வாலைக் குமரி
பாலை வனமே
சோலை யானதே!
மேலுள்ள கட்டளைக் குறளடி எழுத்துகள்
கீழ்வரும் எண்களில் அமைந்தன. அவற்றைப்
பின்வரும் எண்களில் வருமாறு எழுதுக
கலைந்த சீரகள் ஒழுங்கில் அமைந்து
மாலை என்பது முதற்சீ ராகவே.
வந்தது:
2 3
2 3
2 3
2 3
வரவேண்டியது:
2 4
2 4
2 4
3 3
*****
http://kavithaiyilyappu.blogspot.in/p/blog-page_9.html
(நிலைமண்டில ஆசிரியப்பா)
நினைவிற் கொள்ள:
ஒருதளை யடுத்(து)இரு சீரில் முடியும்
குறளடி இருவகை: கட்டளை, சீர்வகை.
கட்டளை வகையில் எழுத்துகள் கணக்கு:
நாலோ ஐந்தோ ஆறோ என்று.
சீர்வகை அடிகளில் எழுத்துகள் மிகினும்
சீர்கள் இரண்டு இருத்தல் வேண்டுமே.
பயிற்சி 1. கட்டளைக் குறளடி யமைத்தல்
மாலைப் பொழுதில்
சாலை வழியில்
வாலைக் குமரி
பாலை வனமே
சோலை யானதே!
மேலுள்ள கட்டளைக் குறளடி எழுத்துகள்
கீழ்வரும் எண்களில் அமைந்தன. அவற்றைப்
பின்வரும் எண்களில் வருமாறு எழுதுக
கலைந்த சீரகள் ஒழுங்கில் அமைந்து
மாலை என்பது முதற்சீ ராகவே.
வந்தது:
2 3
2 3
2 3
2 3
வரவேண்டியது:
2 4
2 4
2 4
3 3
*****
- Sponsored content
Page 10 of 29 • 1 ... 6 ... 9, 10, 11 ... 19 ... 29
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 10 of 29
|
|