புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கவிதையில் யாப்பு - Page 8 Poll_c10கவிதையில் யாப்பு - Page 8 Poll_m10கவிதையில் யாப்பு - Page 8 Poll_c10 
69 Posts - 43%
ayyasamy ram
கவிதையில் யாப்பு - Page 8 Poll_c10கவிதையில் யாப்பு - Page 8 Poll_m10கவிதையில் யாப்பு - Page 8 Poll_c10 
66 Posts - 41%
T.N.Balasubramanian
கவிதையில் யாப்பு - Page 8 Poll_c10கவிதையில் யாப்பு - Page 8 Poll_m10கவிதையில் யாப்பு - Page 8 Poll_c10 
7 Posts - 4%
Dr.S.Soundarapandian
கவிதையில் யாப்பு - Page 8 Poll_c10கவிதையில் யாப்பு - Page 8 Poll_m10கவிதையில் யாப்பு - Page 8 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
கவிதையில் யாப்பு - Page 8 Poll_c10கவிதையில் யாப்பு - Page 8 Poll_m10கவிதையில் யாப்பு - Page 8 Poll_c10 
4 Posts - 2%
Balaurushya
கவிதையில் யாப்பு - Page 8 Poll_c10கவிதையில் யாப்பு - Page 8 Poll_m10கவிதையில் யாப்பு - Page 8 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
கவிதையில் யாப்பு - Page 8 Poll_c10கவிதையில் யாப்பு - Page 8 Poll_m10கவிதையில் யாப்பு - Page 8 Poll_c10 
2 Posts - 1%
prajai
கவிதையில் யாப்பு - Page 8 Poll_c10கவிதையில் யாப்பு - Page 8 Poll_m10கவிதையில் யாப்பு - Page 8 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
கவிதையில் யாப்பு - Page 8 Poll_c10கவிதையில் யாப்பு - Page 8 Poll_m10கவிதையில் யாப்பு - Page 8 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
கவிதையில் யாப்பு - Page 8 Poll_c10கவிதையில் யாப்பு - Page 8 Poll_m10கவிதையில் யாப்பு - Page 8 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதையில் யாப்பு - Page 8 Poll_c10கவிதையில் யாப்பு - Page 8 Poll_m10கவிதையில் யாப்பு - Page 8 Poll_c10 
432 Posts - 48%
heezulia
கவிதையில் யாப்பு - Page 8 Poll_c10கவிதையில் யாப்பு - Page 8 Poll_m10கவிதையில் யாப்பு - Page 8 Poll_c10 
305 Posts - 34%
Dr.S.Soundarapandian
கவிதையில் யாப்பு - Page 8 Poll_c10கவிதையில் யாப்பு - Page 8 Poll_m10கவிதையில் யாப்பு - Page 8 Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
கவிதையில் யாப்பு - Page 8 Poll_c10கவிதையில் யாப்பு - Page 8 Poll_m10கவிதையில் யாப்பு - Page 8 Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
கவிதையில் யாப்பு - Page 8 Poll_c10கவிதையில் யாப்பு - Page 8 Poll_m10கவிதையில் யாப்பு - Page 8 Poll_c10 
29 Posts - 3%
prajai
கவிதையில் யாப்பு - Page 8 Poll_c10கவிதையில் யாப்பு - Page 8 Poll_m10கவிதையில் யாப்பு - Page 8 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
கவிதையில் யாப்பு - Page 8 Poll_c10கவிதையில் யாப்பு - Page 8 Poll_m10கவிதையில் யாப்பு - Page 8 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
கவிதையில் யாப்பு - Page 8 Poll_c10கவிதையில் யாப்பு - Page 8 Poll_m10கவிதையில் யாப்பு - Page 8 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
கவிதையில் யாப்பு - Page 8 Poll_c10கவிதையில் யாப்பு - Page 8 Poll_m10கவிதையில் யாப்பு - Page 8 Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
கவிதையில் யாப்பு - Page 8 Poll_c10கவிதையில் யாப்பு - Page 8 Poll_m10கவிதையில் யாப்பு - Page 8 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதையில் யாப்பு


   
   

Page 8 of 29 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 18 ... 29  Next

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Thu Nov 08, 2012 8:38 am

First topic message reminder :

யாப்பிலக்கணம்: ஒரு கவிதை அறிமுகம்
ரமணி, ஆகஸ்ட்-செப்டம்பர், 2012

இந்தத் தொடர் ஒரு சோதனை முயற்சி.
தொடரின் நோக்கம் கற்றுத் தருவதைவிடப் பகிர்ந்துகொள்வது.
கடந்த சில நாட்களாக நான் யாப்பிலக்கணம் பயில இறங்கி, அது இன்னும் தொடரும்போதே,
என் முயற்சியில் நான் பெற்ற செய்திகளை, மகிழ்வினை, வியப்புகளை, திருப்தியை
வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வது முதல் நோக்கம்.

யாப்பிலக்கணத்தை உரைநடையில் தரும்போது நேரிடும் மித மிஞ்சிய சொற்களின் அளவைக் குறைத்து
எளிதில் படித்து, பார்த்து, நினைக்க உதவும் வகையில்
கவிதை வரிகளில் தருவது தொடரின் இரண்டாவது நோக்கம்.

அப்படித் தரும்போது அது வாசகர்களுக்குப் பயன்தந்து, பிற நூல்களின் மூலம்
யாப்பிலக்கணம் மேலும் நன்கு பயில ஊக்கம் அளிக்கும் என்ற நம்பிக்கை மூன்றாவது நோக்கம்.

யாப்பின் ஒழுங்கில், இன்றைய வழக்கில் கவிதை புனைவது
வேறு விதத்தில் எழுதுவது போன்றே எளிதில் வருவது,
அதைவிட அதிகப் பெருமையும் திருப்தியும் தருவது
என்று இத்தொடரில் காட்டிட முயல்கிறேன்.

தொடரின் நிறை குறை பற்றிக் கவிதை ஆர்வலர்கள் அப்போதைக்கப்போதே பின்னூட்டம் இடலாம்.
வரும் பின்னூட்டங்களின் சீரிய கருத்துக்களை எடுத்தாண்டு, குறைகளைக் கூடியமட்டும் திருத்தி,
இறுதியில் எல்லோருக்கும் பயன்படும் வகையில் ஒரு மின்னூலாக்குவது என் இலக்கு.





ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sun Dec 16, 2012 8:35 pm

4.50. தளை

தளைதல் என்றால் பிணித்தல் கட்டுதல்
தளைத்தல் எனினும் அதுவே யாகும்
தளையெனும் சொல்லில் விளையும் பொருள்கள்
கட்டு கயிறு விலங்கு சிலம்பென
ஒட்டிப் பிணைத்து இசைந்திட வைக்கும்

பூக்களை நாரினால் கட்டித் தளைக்கப்
பூச்சரம் ஒன்று உருவா வதுபோல்
சீர்களைச் செய்யுளில் இசையால் தளைக்க
சீர்களின் தொடரென அடியுரு வாகுமே.

4.51. தளையென்பது

சீரொடு சீர்சேர்த் தியற்றும் அடியிலே
சீர்களின் இடைநின் றவற்றைப் பிணித்திடும்
செய்யுளின் உறுப்பு தளையெனப் படுமே.

சீர்கள் இரண்டு சேரும் போது
முதலில் நிற்பது நின்றசீர் எனப்படும்
எதிரில் வருவது வரும்சீர் எனப்படும்.

இடமிருந்து வலமெழுதும் இன்றமிழ்ச் செய்யுளில்
இடப்புறம் நிற்பது நின்றசீர் ஆகும்
வலப்புறம் வருவது வரும்சீர் ஆகும்.

சீர்கள் இரண்டு தளைப்பது காண
நின்றசீர் ஈற்றசையுடன் வரும்சீர் முதலசை
ஒன்றுதலோ ஒன்றாமையோ நோக்கப் படுமே.
எனவே
நின்ற சீரின் ஈற்றசை யோடு
வருகிற சீரின் முதலசை யானது
ஒன்றியோ ஒன்றாதோ கூடி நிற்பது
தளையெனும் உறுப்பின் இலக்கண மாகுமே.

தளைகள் பெரிதும் சீரிடை வரினும்
அடிகளுக் கிடையிலும் தளைகள் வருவன
அடியிடைத் தளைகள் வருவது காண
நின்ற அடியின் ஈற்றுச்சீர் ஈற்றசையும்
வருகிற அடியின் முதற்சீர் முதலசையும்
ஒன்றுதலோ ஒன்றாமையோ நோக்கப் படுமே.

4.52. தளை வகைகள்

நேர்முன் நேரும் நிரைமுன் நிரையும்
வருவது ஒன்றிய தளையெனப் படுமே
நேர்முன் நிரையும் நிரைமுன் நேரும்
மாறி வருவது ஒன்றாத் தளையாம்.

தன்சீர் தனதொடு ஒன்றலும் உறழ்தலும்
என்றிரண் டாகும் இயம்பின தளையே.
---இலக்கண விளக்கம், 717

ஒன்றும் ஒன்றாத் தளைகள் குறிப்பில்
நின்ற சீரே சீர்ப்பெயர் தாங்கும்
எதிர்வரும் சீரின் முதலசை பெயர்பெறும்.

ஏனெனில்

நேர்முன் நேரசை ஒன்றிடும் போது
தேமா புளிமா இயற்சீர் ஈற்றுநேரோ
காய்ச்சீர் நான்கின் ஈற்றுநேரோ ஒன்றுமே
தேமா கூவிளம் முதல்வரும் நேருடனோ
தேமாங் கூவிளங் காய்முதல் நேருடனோ
தேமாங் கூவிளங் கனிமுதல் நேருடனோ.
அதாவது மாச்சீர் முன்வரும் நேரொன்றும்
அல்லது காய்ச்சீர் முன்வரும் நேரொன்றும்.

இவ்வாறு

நேர்முன் நேர்வரும் ஒன்றுதல் குறிக்க
மாமுன்நேர் காய்முன்நேர் என்னும் வாய்பாடும்
நிரைமுன் நிரைவரும் ஒன்றுதல் குறிக்க
விளம்முன்நிரை கனிமுன்நிரை என்னும் வாய்பாடும்

மற்றும்

நேர்முன் நிரைவரும் ஒன்றாமை குறிக்க
மாமுன்நிரை காய்முன்நிரை என்னும் வாய்பாடும்
நிரைமுன் நேர்வரும் ஒன்றாமை குறிக்க
விளம்முன்நேர் கனிமுன்நேர் என்னும் வாய்பாடும்
தளைகள் அறிய மிகவும் பயன்படும்.

தளைகளின் வாய்பாடில் ’முன்’எனும் சொல்லுக்கு
எதிர்வரும் என்று பொருள்கொளல் வேண்டுமே.

*****


ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sun Dec 16, 2012 9:30 pm

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
🐰



கவிதையில் யாப்பு - Page 8 425716_444270338969161_1637635055_n
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Mon Dec 17, 2012 7:04 pm

4.53. எழுவகைத் தளைகள்

சீர்முன் சீர்வர எழுந்திடும் தளைகள்
சீர்வகை சார்ந்து ஏழு வகைகளில்
எழுவது அறிதல் எளிதில் வருமே.

சீர்களின் வகைகள் மூன்றினில் அமையும்
ஈரசை பயிலும் இயற்சீர் ஒருவகை
மூவசை பயிலும் காய்ச்சீர் ஒருவகை
மூவசை பயிலும் கனிச்சீர் ஒருவகை.
ஈரசைச் சீர்கள் மொத்தம் நான்கு
மூவசைச் சீர்கள் மொத்தம் எட்டு.

இயற்சீர் நான்கும் ஆசிரிய வுரிச்சீர்
காய்ச்சீர் நான்கும் வெண்பா வுரிச்சீர்
கனிச்சீர் நான்கும் வஞ்சி யுரிச்சீர்
கலிப்பா வுக்கென்று தனிச்சீர் இலையெனினும்
கலிப்பா வுக்கோர் தனித்தளை யுண்டு.

நின்றசீர் வரும்சீர் ஒன்றிட வரும்தளை
நான்கு வகைகளில் அமையும்
ஒன்றாத தளைவகை மூன்றினில் அமையுமே.


ஈரசைச் சீர்நின்று இனிவரும் சீரோடு
நேரசை யொன்றுதல் நேரொன் றாசிரியம்
நிரையசை யொன்றுதல் நிரை யொன்றாசிரியம்.
நேர்நிரை யொன்றாமை இயற்சீர் வெண்டளை.

மூவசை பயிலும் சீர்வகை எட்டில்
காய்சீர் நின்று இனிவரும் சீரோடு
நேரசை யொன்றுதல் வெண்சீர் வெண்டளை
நிரையசை யொன்றாமை கலித்தளை யாகுமே.

கனிச்சீர் நின்று இனிவரும் சீரோடு
நிரையசை யொன்றுதல் ஒன்றிய வஞ்சித்தளை
நேரசை யொன்றாமை ஒன்றாத வஞ்சித்தளையே.

தளைகளின் பெயர்களை நோக்கிடும் போது
ஆசிரியப் பாவிற்குத் தளைகள் இரண்டும்
வெண்பா விற்குத் தளைகள் இரண்டும்
கலிப்பா விற்குத் தளையென ஒன்றும்
வஞ்சிப் பாவிற்குத் தளைகள் இரண்டும்
எழுவகைத் தளைகளும் பிரிதல் காண்போம்.


நேரொன் றாசிரியம் நிரையொன் றாசிரியம்
ஆயிரு தளைகள் ஆசிரியப் பாவிற்கும்
இயற்சீர் வெண்டளை வெண்சீர் வெண்டளை
ஆயிரு தளைகள் வெண்பா விற்கும்
கலித்தளை யொன்றே கலிப்பா விற்கும்
ஒன்றிய வஞ்சி ஒன்றாத வஞ்சி
ஆயிரு தளைகள் வஞ்சிப்பா விற்கும்
உரிய தளையென அறியப் படுமே.

ஒன்றிய தளைகள் நான்கு பெயரிலும்
ஒன்றாத் தளைகள் மூன்று பெயரிலும்
வந்திடும் என்று பொதுவில் அறிவோம்.

நின்றசீர் வரும்சீர் ஒரேவகை யாயின்
ஒன்றுதல் ஒன்றாமை சிறப்புடைத் தளைகளாம்
நின்றசீர் வரும்சீர் வேறுவகை யாயின்
ஒன்றுதல் ஒன்றாமை சிறப்பில்லாத் தளைகளாம்
அதாவது
இயற்சீரோ காய்ச்சீரோ அன்றிக் கனிச்சீரோ
நின்றதும் வருவதும் அதுவே ஆயின்
வந்திடும் தளைகள் சிறப்புடை யனவாம்
சீர்களின் வகைகள் கலந்து வருவது
சிறப்பில்லாத் தளைகள் என்பதை அறிவோம்.

4.54. தளை வாய்பாடுகள்

மேலே கண்ட தளைவகை விவரங்கள்
கீழே உள்ள வாய்பா டுகளில்
எளிதில் விளங்கி நினைவில் வைப்போம்.

மாமுன் நேர்வரின் நேரொன் றாசிரியம்
விளம்முன் நிரைவரின் நிரையொன் றாசிரியம்
மாமுன் நிரையோ விளம்முன் நேரோ
மாறி வருவது இயற்சீர் வெண்டளை
என்பன இயற்சீர் தளகள் வாய்பாடு.

காய்முன் நேர்வரின் வெண்சீர் வெண்டளை
காய்முன் நிரைவரின் கலித்தளை யாகும்
கனிமுன் நிரைவரின் ஒன்றிய வஞ்சி
கனிமுன் நேர்வரின் ஒன்றாத வஞ்சி
என்பன காய்கனிச் சீர்தளை வாய்பாடு.


*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Wed Dec 19, 2012 6:31 pm

4.55. எழுதளைச் சான்றுகள்

நேரொன்றாசிரியத்தளை:
வெற்றி வாழி வீரம் வாழி
...
உண்மை வாழி ஊக்கம் வாழி
---பாரதியார், விநாயகர் நான்மணி மாலை

வெற்/றி வா/ழி வீ/ரம் வா/ழி
உண்/மை வா/ழி ஊக்/கம் வா/ழி
தேமா தேமா தேமா தேமா

கண்ண தாசனின் கீழ்வரும் திரைப்பா
போன்று வருவது அரிதிலும் அரிது.
கண்ணன் என்னும் மன்னன் பேரைச் சொல்லச் சொல்ல
கல்லும் முள்ளும் பூவாய் மாறும் மெல்ல மெல்ல.

நிரையொன்றாசிரியத்தளை:
மங்கல குணபதி மணக்குளக் கணபதி!
---பாரதியார்

மங்/கல குண/பதி மணக்/குளக் கண/பதி!
கூவிளம் கருவிளம் கருவிளம் கருவிளம்

தேமா கூவிளம் கருவிளம் புளிமா
கூவிளம் கருவிளம் புளிமா தேமா
என்னும் நிரல்கள் தனித்தோ சேர்ந்தோ
மன்னும் சுழலில் நேர்நிரை யொன்றும்
ஆசிரியத் தளைகள் மட்டுமே வந்து
அகவல் ஒழுகிசை தகவுற அமையுமே.


நேரொன் றாசிரியம் நிரையொன் றாசிரியம்
வேறொன் றிலாது இவ்விரு தளைகளே
சீரிடை அடியிடை வருமா றெழுதினால்
சொற்களை வலிந்து கொள்வது நேர்ந்து
சொல்லும் பொருளோட்டம் தடைப்படு மாதலால்
இவற்றுடன் இயற்சீர் வெண்டளை விரவுதல்
அகவற் பாக்களில் பெரிதும் காணலாம்.

அகவற் றளைகள் இயற்சீர் வெண்டளை
அகவற் பாவில் விரவிடும் போது
அகவற் றளைகள் அதிகம் வந்தால்
அகவல் ஓசை தகவுறக் கேட்கும்.


இயற்சீர் வெண்டளை:
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடு வாழ்வார்.
---திருக்குறள் 001:03

மலர்/மிசை ஏ/கினான் மா/ணடி சேர்ந்/தார்
நில/மிசை நீ/டு வாழ்வார்.
கருவிளம் கூவிளம் கூவிளம் தேமா
கருவிளம் தேமா காசு

தளைகள் குறளில் நோக்கும் போது
விளம்முன் நேரும் மாமுன் நிரையும்
சீரிடை அடியிடைத் தளைத்து வந்து
இயற்சீர் வெண்டளை பயில்வது காண்க.

வெண்சீர் வெண்டளை:
யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையும் கல்லாத வாறு.
---திருக்குறள் 040:07

யா/தா/னும் நா/டா/மால் ஊ/ரா/மால் என்/னொரு/வன்
சாந்/துணை/யும் கல்/லா/த வாறு.

வெண்சீரின் வெண்டளையே வந்ததுகாண் இக்குறளில்
சீரிடையே பாதமிடை காய்முன்நேர் வந்திடவே.

மேல்வந்த அடிகள் இரண்டிலும் கூட
வெண்சீர் வெண்டளை பயில்வது நோக்குக.

கலித்தளை:
ஒருநோக்கம் பகல்செய்ய ஒருநோக்கம் இருள்செய்ய
இருநோக்கில் தொழில்செய்தும் துயில்செய்தும் இளைத்துயிர்கள்
---குமரகுருபரர், சிதம்பரச் செய்யுட்கோவை

ஒரு/நோக்/கம் பகல்/செய்/ய ஒரு/நோக்/கம் இருள்/செய்/ய
இரு/நோக்/கில் தொழில்/செய்/தும் துயில்/செய்/தும் இளைத்/துயிர்/கள்

காய்முன் நிரைவரும் கலித்தளையே இவ்வரிகளில்
சீரிடைப் பயில்வது எளிதில் காணலாம்

ஒன்றிய வஞ்சித்தளை:
யோகத்தினர் உரைமறையினர்
ஞானத்தினர் நய‍ஆகமப்
---கி.வா.ஜ.

யோ/கத்/தினர் உரை/மறை/யினர்
ஞா/னத்/தினர் நய/‍ஆ/கமப்

கனிமுன் நிரைவரும் ஒன்றிய வஞ்சித்தளை
இவ்வரிகளில் சீரிடைப் பயில்வது காண்க.

ஒன்றாத வஞ்சித்தளை:
புனல்பொழிவன சுனையெல்லாம்;
பூநாறுவ புறவெல்லாம்;
வரைமூடுவ மஞ்செல்லாம்;
---யா.கா.வி.

கனிமுன் நேர்வரும் ஒன்றாத வஞ்சித்தளை
இவ்வரிகளில் சீரிடைப் பயில்வது காண்க.

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Thu Dec 20, 2012 8:54 pm

4.56. எழுதளை நிரல்கள்

நாற்சீர் கொண்ட அளவடி யொன்றிலும்
நாற்சீர் அளவடி பல்கிடும் போதும்
சீரிடை அடியிடை ஒன்றெனத் தளைத்து
எழுவகைத் தளைகளும் எழுந்திடும் நிரல்வகை
சுழலுற வருவது கீழே காண்போம்.

நேரொன்றாசிரியத்தளை: தேமா
அடிகள் அனைத்திலும் தேமா வந்தால்
தேமா தேமா தேமா தேமா
என்னும் ஒன்றே நிரலில் சுழன்று
மாமுன் நேர்வரும் தொடரில் அமைய
நேரொன் றாசிரி யத்தளை பயின்று
ஏந்திசை யகவல் ஓங்கி வருமே.
சான்றாக
விண்ணும் மண்ணும் பண்ணும் விந்தை
எண்ணில் வாராக் கோடி கோடி

என்னும் அடிகளை நோக்கிடு வோமே.

நிரையொன்றாசிரியத்தளை: கருவிளம்
அடிகள் அனைத்திலும் கருவிளம் வந்தால்
கருவிளம் கருவிளம் கருவிளம் கருவிளம்
என்னும் ஒன்றே நிரலில் சுழன்று
விளம்முன் நிரைவரும் தொடரில் அமைய
நிரையொன் றாசிரி யத்தளை பயின்று
தூங்கிசை யகவல் ஏங்கி வருமே.
சான்றாக
விசும்பிலும் நிலத்திலும் நிகழ்ந்திடும் வியப்புகள்
விசித்தலில் அடங்கிடாக் கணக்கினில் விரியுமே ... ... ... [விசி=கட்டு]

என்னும் அடிகளை நோக்கிடு வோமே.

இயற்சீர் வெண்டளை: புளிமா
அடிகள் அனைத்திலும் புளிமா வந்தால்
புளிமா புளிமா புளிமா புளிமா
என்னும் ஒன்றே நிரலில் சுழன்று
மாமுன் நிரைவரும் தொடரில் அமைய
இயற்சீர் வெண்டளை மட்டும் பயின்று
தூங்கிசைச் செப்பல் ஏங்கி வருமே.
சான்றாக
விசும்பும் நிலமும் நிகழ்த்தும் வியப்பு
விசியில் அடங்காக் கணக்கில் விரியும்

என்னும் அடிகளை நோக்கிடு வோமே.

இயற்சீர் வெண்டளை: கூவிளம்
அடிகள் அனைத்திலும் கூவிளம் வந்தால்
கூவிளம் கூவிளம் கூவிளம் கூவிளம்
என்னும் ஒன்றே நிரலில் சுழன்று
விளம்முன் நேர்வரும் தொடரில் அமைய
இயற்சீர் வெண்டளை மட்டும் பயின்று
தூங்கிசைச் செப்பல் ஏங்கி வருமே.
சான்றாக
விண்ணிலும் மண்ணிலும் நேர்ந்திடும் விந்தைகள்
எண்ணிலே வந்திடாக் கோடிகள் ஆகுமே

என்னும் அடிகளை நோக்கிடு வோமே.

இயற்சீர் வெண்டளை: தேமா புளிமா கருவிளம் கூவிளம்
தேமா புளிமா கருவிளம் கூவிளம்
அடிகள் அனைத்திலும் மேலுள்ள நிரல்வர
இந்த நிரலே சுழலில் வந்து
மாமுன் நிரையும் விளம்முன் நேரும்
மாறி வந்திடும் தொடரில் அமைய
இயற்சீர் வெண்டளை மட்டும் பயின்று
தூங்கிசைச் செப்பல் ஏங்கி வருமே.
சான்றாக
விண்ணும் நிலமும் நிகழ்த்திடும் விந்தைகள்
எண்ணில் அடங்காக் கணக்கினில் ஆகுமே

என்னும் அடிகளை நோக்கிடு வோமே.

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Fri Dec 21, 2012 8:49 pm

வெண்சீர் வெண்டளை: தேமாங்காய்
அடிகளிலே தேமாங்காய்ச் சீரொன்றே வந்துநின்றால்
தேமாங்காய் தேமாங்காய் தேமாங்காய் தேமாங்காய்
என்றநிரல் சுற்றிவந்து வெண்பாவின் சீராகி
காய்முன்நேர் வந்துநிற்கும் வெண்சீரின் வெண்டளையில்
ஏந்திசையின் செப்பலோசை கேள்.

விண்ணோக்கின் மண்ணோக்கின் காண்கின்ற ஆச்சர்யம்
எண்ணேதும் கொள்ளாத எண்ணிக்கை யாயாகும்

மேல்வரிகள் காட்டிடுமே சான்று.

வெண்சீர் வெண்டளை: கூவிளங்காய்
அடிகளிலே கூவிளங்காய்ச் சீரொன்றே வந்துநின்றால்
கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய்
என்றநிரல் சுற்றிவந்து வெண்பாவின் சீராகி
காய்முன்நேர் வந்துநிற்கும் வெண்சீரின் வெண்டளையில்
ஏந்திசையின் செப்பலோசை கேள்.

விண்வெளியில் மண்ணிலத்தில் காணுகின்ற விந்தைபல
எண்களிலே வந்திடாத கோடிவகை யாகிடுமே

மேல்வரிகள் காட்டிடுமே சான்று.

வெண்சீர் வெண்டளை: தேமாங்காய் கூவிளங்காய் நிரல்
அடிகளிலே தேமாங்காய் கூவிளங்காய் வந்துநின்றால்
தேமாங்காய் கூவிளங்காய் தேமாங்காய் கூவிளங்காய்
என்றநிரல் சுற்றிவந்து வெண்பாவின் சீராகி
காய்முன்நேர் வந்துநிற்கும் வெண்சீரின் வெண்டளையில்
ஏந்திசையின் செப்பலோசை கேள்.

விண்மீதும் பூமியிலும் காண்கின்ற விந்தைகளே
எண்ணேதும் சுட்டிடாத எண்ணிக்கை யாகிடுமே

மேல்வரிகள் காட்டிடுமே சான்று.

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sat Dec 22, 2012 7:41 am

கலித்தளை: புளிமாங்காய்
அடிகளிலே புளிமாங்காய் இதுவொன்றே வருமானால்
புளிமாங்காய் புளிமாங்காய் புளிமாங்காய் புளிமாங்காய்
எனும்நிரலில் சுழல்வந்து கலிப்பாவின் அடிகளாகி
நிரைவருமுன் வரும்காயின் கலித்தளையே பயின்றுவந்து
எந்திசைத்துள் ளலோசையென எழுந்துவரச் செவியுறலாம்.

விசும்பின்கண் நிலத்தின்கண் நிகழ்கின்ற வியப்பேபார்
விசியேதும் அடக்காத கணக்கொன்றின் விரிவாகும்

கலித்தளையே பயின்றுவரும் வரிகளாகும் இதுமூன்றும்.

கலித்தளை: கருவிளங்காய்
அடிகளிலே கருவிளங்காய் இதுவொன்றே வருமானால்
கருவிளங்காய் கருவிளங்காய் கருவிளங்காய் கருவிளங்காய்
எனும்நிரலில் சுழல்வந்து கலிப்பாவின் அடிகளாகி
நிரைவருமுன் வரும்காயின் கலித்தளையே பயின்றுவந்து
எந்திசைத்துள் ளலோசையென எழுந்துவரச் செவியுறலாம்.

விசும்பினிலே நிலத்தினிலே நிகழ்ந்துவரும் வியப்புகளாம்
விசித்தலிலே அடங்கிடாத கணக்கினிலே விரிவதாகும்

கலித்தளையே பயின்றுவரும் வரிகளாகும் இவைமூன்றும்.

கலித்தளை: புளிமாங்காய் கருவிளங்காய் நிரல்
அடிகளிலே புளிமாங்காய் கருவிளங்காய் நிரல்வந்தால்
புளிமாங்காய் கருவிளங்காய் புளிமாங்காய் கருவிளங்காய்
எனும்நிரலில் சுழல்வந்து கலிப்பாவின் அடிகளாகி
நிரைவருமுன் வரும்காயின் கலித்தளையே பயின்றுவந்து
எந்திசைத்துள் ளலோசையென எழுந்துவரச் செவியுறலாம்.

விசும்பின்கண் நிலத்தினிலே நிகழ்கின்ற வியப்புகளாம்
விசியேதும் அடக்கிடாத கணக்கொன்றில் விரிவதாகும்

கலித்தளையே பயின்றுவரும் வரிகளாகும் இவைமூன்றும்.

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sun Dec 23, 2012 7:40 am

ஒன்றிய வஞ்சித்தளை: புளிமாங்கனி
அடிகள்தனில் புளிமாங்கனிக் கனிச்சீரிது முழுதும்வர
புளிமாங்கனி புளிமாங்கனி புளிமாங்கனி புளிமாங்கனி
எனும்நிரலதன் சுழலமைந்திட தளைவஞ்சியின் அடிகளாகிட
கனிமுன்நிரை யெனவொன்றிடும் தளைவஞ்சியே பயின்றுவந்திட
எந்திசைவரும் ஒலித்தூங்கலே அடங்கிவருதல் செவியில்வரும்.

விசும்பின்வெளி நிலத்தின்வெளி நிகழ்ந்தேவரும் வியப்பானது
விசியேதிலும் அடங்காவரும் கணக்கொன்றதன் விரிவாகுமே

கனியொன்றிடும் தளைவஞ்சியின் வரிகளாவன இவைமூன்றுமே.

ஒன்றிய வஞ்சித்தளை: கருவிளங்கனி
அடிகள்தனில் கருவிளங்கனிக் கனிச்சீரிது முழுதும்வர
கருவிளங்கனி கருவிளங்கனி கருவிளங்கனி கருவிளங்கனி
எனும்நிரலதன் சுழலமைந்திட தளைவஞ்சியின் அடிகளாகிட
கனிமுன்நிரை யெனவொன்றிடும் தளைவஞ்சியே பயின்றுவந்திட
எந்திசைவரும் ஒலித்தூங்கலே அடங்கிவருதல் செவியில்வரும்.

விசும்புமீதிலும் நிலவெளியிலும் தினம்நிகழ்கிற வியப்புகள்பல
விசியெதுவிலும் அடங்கிடாவரும் கணக்குதனிலே விரிந்துநிற்குமே

கனியொன்றிடும் தளைவஞ்சியின் வரிகளாவன இவைமூன்றுமே.

ஒன்றிய வஞ்சித்தளை: புளிமாங்கனி கருவிளங்கனி நிரல்
அடிகள்தனில் புளிமாங்கனி கருவிளங்கனி நிரல்வந்திடப்
புளிமாங்கனி கருவிளங்கனி புளிமாங்கனி கருவிளங்கனி
எனும்நிரலதன் சுழலமைந்திட தளைவஞ்சியின் அடிகளாகிட
கனிமுன்நிரை யெனவொன்றிடும் தளைவஞ்சியே பயின்றுவந்திட
எந்திசைவரும் ஒலித்தூங்கலே அடங்கிவருதல் செவியில்வரும்.

விசும்பின்வெளி நிலவெளியிலும் நிகழ்ந்தேவரும் வியப்புகள்பல
விசியேதிலும் அடங்கிடாவரும் கணக்கொன்றினில் விரிந்துநிற்குமே

கனியொன்றிடும் தளைவஞ்சியின் வரிகளாவன இவைமூன்றுமே.

ஒன்றாத வஞ்சித்தளை: தேமாங்கனி
அடிகள்தனில் தேமாங்கனிச் சீரொன்றென முற்றும்வர
தேமாங்கனி தேமாங்கனி தேமாங்கனி தேமாங்கனி
என்னும்நிரல் சுற்றில்வர வஞ்சித்தளை துஞ்சியேவர
கனிமுன்வரும் நேரசையினால் ஒன்றாதுள வஞ்சித்தளை
ஏந்திசைவரும் தூங்கலோசையாய் ஏங்கிவருதல் காதில்விழும்.

விண்ணின்வழி மண்ணின்வழி நேர்ந்தேவரும் ஆச்சர்யமே
எண்ணேதுமே கட்டாதுள எண்ணிக்கையில் நின்றேவரும்

கனியொன்றிடா வஞ்சித்தளை முற்றும்வரும் மூன்றடிகளில்.

ஒன்றாத வஞ்சித்தளை: கூவிளங்கனி
அடிகள்தனில் கூவிளங்கனிச் சீரொன்றென முற்றும்வர
கூவிளங்கனி கூவிளங்கனி கூவிளங்கனி கூவிளங்கனி
என்னும்நிரல் சுற்றில்வர வஞ்சித்தளை துஞ்சியேவர
கனிமுன்வரும் நேரசையினால் ஒன்றாதுள வஞ்சித்தளை
ஏந்திசைவரும் தூங்கலோசையாய் ஏங்கிவருதல் காதில்விழும்.

விண்வழியினில் மண்வழியினில் நேர்ந்திடுகிற ஆச்சரியமே
எண்வழியினில் கட்டவியலா எண்ணதுவினில் நின்றுவருமே

கனியொன்றிடா வஞ்சித்தளை முற்றும்வரும் மூன்றடிகளில்.

ஒன்றாத வஞ்சித்தளை: தேமாங்கனி கூவிளங்கனி நிரல்
அடிகள்தனில் தேமாங்கனி கூவிளங்கனி முற்றும்வர
தேமாங்கனி கூவிளங்கனி தேமாங்கனி கூவிளங்கனி
என்னும்நிரல் சுற்றில்வர வஞ்சித்தளை துஞ்சியேவர
கனிமுன்வரும் நேரசையினால் ஒன்றாதுள வஞ்சித்தளை
ஏந்திசைவரும் தூங்கலோசையாய் ஏங்கிவருதல் காதில்விழும்.

விண்ணின்வழி மண்வழியினில் நேர்ந்தேவரும் ஆச்சரியமே
எண்ணேதுமே கட்டவியலா எண்ணிக்கையில் நின்றுவருமே

கனியொன்றிடா வஞ்சித்தளை முற்றும்வரும் மூன்றடிகளில்.

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Mon Dec 24, 2012 8:43 am

4.57. எழுதளை நிரல்களின் வாய்பாடுகள்

எழுதளை நிரல்களின் சான்றுகள் பலவும்
பழுதற விரிவில் நோக்கிய பின்னர்
எழுதளை நிரல்களின் வாய்பா டுகளைச்
சுழல்வரச் சுருக்கமாய்க் குறிப்பென அமைப்போமே.

நேரொன்றாசிரியத்தளை:
நேரொன் றாசிரியத் தளைவர ஒரேவழி
தேமா தேமா தேமா தேமா
என்னும் சீர்களின் சுற்று மட்டுமே.

நிரையொன்றாசிரியத்தளை:
நிரையொன் றாசிரியத் தளைவர ஒரேவழி
கருவிளம் கருவிளம் கருவிளம் கருவிளம்
என்னும் சீர்களின் சுற்று மட்டுமே.

இயற்சீர் வெண்டளை:
இயற்சீர் வெண்டளை இசைந்தே வந்திடக்
கீழ்வரும் நிரல்களைத் தனிதனிச் சுற்றில்
ஒன்றோ பலவோ அடிகளில் உறுத்தலாம்:
புளிமா புளிமா புளிமா புளிமா
கூவிளம் கூவிளம் கூவிளம் கூவிளம்
தேமா புளிமா கருவிளம் கூவிளம்

வெண்சீர் வெண்டளை:
வெண்சீர் வெண்டளை விளங்கி வந்திடக்
கீழ்வரும் நிரல்களைத் தனித்தனி யாகவோ
ஒன்றாய்ச் சேர்த்தோ அடிகளில் அமைக்கலாம்.
தேமாங்காய் தேமாங்காய் தேமாங்காய் தேமாங்காய்
கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய்
தேமாங்காய் கூவிளங்காய் தேமாங்காய் கூவிளங்காய்

கலித்தளை:
கலித்தளை துள்ளிக் கலித்து வந்திடக்
கீழ்வரும் நிரல்களைத் தனித்தனி யாகவோ
ஒன்றாய்ச் சேர்த்தோ அடிகளில் அமைக்கலாம்.
புளிமாங்காய் புளிமாங்காய் புளிமாங்காய் புளிமாங்காய்
கருவிளங்காய் கருவிளங்காய் கருவிளங்காய் கருவிளங்காய்
புளிமாங்காய் கருவிளங்காய் புளிமாங்காய் கருவிளங்காய்

ஒன்றிய வஞ்சித்தளை:
ஒன்றிய வஞ்சித் தளைதூங்கி வந்திடக்
கீழ்வரும் நிரல்களைத் தனித்தனி யாகவோ
ஒன்றாய்ச் சேர்த்தோ அடிகளில் அமைக்கலாம்.
புளிமாங்கனி புளிமாங்கனி புளிமாங்கனி புளிமாங்கனி
கருவிளங்கனி கருவிளங்கனி கருவிளங்கனி கருவிளங்கனி
புளிமாங்கனி கருவிளங்கனி புளிமாங்கனி கருவிளங்கனி

ஒன்றாத வஞ்சித்தளை:
ஒன்றாத வஞ்சித் தளைதூங்கி வந்திடக்
கீழ்வரும் நிரல்களைத் தனித்தனி யாகவோ
ஒன்றாய்ச் சேர்த்தோ அடிகளில் அமைக்கலாம்.
தேமாங்கனி தேமாங்கனி தேமாங்கனி தேமாங்கனி
கூவிளங்கனி கூவிளங்கனி கூவிளங்கனி கூவிளங்கனி
தேமாங்கனி கூவிளங்கனி தேமாங்கனி கூவிளங்கனி

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Mon Dec 24, 2012 8:13 pm

4.58. தளைகள் மயக்கம்

ஒவ்வொரு பாவுக்கும் ஒன்றோ மேலோ
அவ்வகைத் தளையே உரித்தா யிருப்பினும்
அவ்வகைத் தளைவர இயற்றுதல் கடினம்.
இதனால்
வெண்பா தவிர்த்த பாவகை இனங்களில்
தன்தளை தவிரப் பிறதளை மயங்குமே.

வெள்ளையுட் பிறதளை விரவா அல்லன
எல்லாத் தளையும் மயங்கியும் வழங்கும்.
---யாப்பருங்கலம்


தன்தளை யொன்றே வந்த பாக்களில்
இன்னிசை இயல்பாய் நடக்கும்
இன்னிசை இயல்பாய் நடப்பது என்பது
ஏந்திசைத் தூங்கிசை வகைகளில் வருவதே.

பிறதளை மயங்கி வந்த பாக்களில்
ஒழுகிசை பிரிந்திசை வகைகள் வருதலால்
இன்னிசை இயல்பாய் நடத்தல் இயலாதே.

எல்லாத் தளையும் மயங்கினும் தன்றளை
அல்லாத் தளையாற் பாவினி தியலா
---யாப்பருங்கலம்


யாப்ப ருங்கல விருத்தி யுரைக்கும்
ஒருவகைப் பாவினில் பிறதளை மயங்குதல்
பலவகை யினிலே விகற்பித்து வருமே.

ஆசிரிய அடியுள் தளை மயக்கம்:
ஆசிரிய அடியினில் மயங்கிடும் தளைவகை
வெண்டளை ஆசிரியம்
வெண்டளை கலித்தளை
வெண்டளை மட்டுமே
கலித்தளை மட்டுமே
வெண்டளை வஞ்சித்தளை
வஞ்சி ஆசிரியம்
வஞ்சி கலித்தளை
என்று பலவகை விகற்பித்து வருமே.

சான்று [நேரிசை ஆசிரியப்பா]:
நெடுவரைச்1 சாரற்2 குறுங்கோட்டுப்3 பலவின்
விண்டுவார்4 தீஞ்சுளை5 வீங்குகவுட்6 கடுவ
னுண்டுசிலம்7 பேறி யோங்கிய விருங்கழைப்
படிந்தமாக் களிறு பயிற்றுமென்ப8
மடியாக்9 கொலைவில் லென்னையர் மலையே.

[1,2,4,5,9 இயற்சீர் வெண்டளை; 3,6,8 கலித்தளை; 7 வெண்சீர் வெண்டளை;]

கலி அடியுள் தளை மயக்கம்:
கலிவரும் அடியினில் மயங்கிடும் தளைவகை
தன்தளை ஆசிரியத் தளையுடன்
தன்தளை வெண்டளை
தன்தளை ஆசிரியம் வெண்டளை
வெண்டளை மட்டும்
ஆசிரியம் மட்டும்
தன்தளை வஞ்சித்தளை
வஞ்சி ஆசிரியம்
வஞ்சி வெண்டளை
வஞ்சி ஆசிரியம் தன்தளை
வஞ்சி தன்தளை வெண்டளை
வஞ்சி வெண்டளை ஆசிரியம்
வஞ்சித்தளை மட்டுமே
என்று பலவகை விகற்பித்து வருமே.

சான்று [சுரிதகத் தரவு கொச்சகக் கலிப்பா]:
குடநிலைத்1 தண்புறவிற்2 கோவல3 ரெடுத்தார்ப்பத்4
தடநிலைப்5 பெருந்தொழுவிற்6 றகையுறூ‍உ7 மரம்பாய்ந்து8
வீங்குமணிக்9 கயிறொரீ‍இத்10 தாங்குவனந்11 தோன்றப்போய்க்12
கலையினொடு13 முயலிரியக்14 கடிமுல்லை15 முறுவலிப்ப
எனவாங்கு
ஆனொடு16 புல்லிய17 பெரும்புதன்18 முனையுங்19
கானுடைத்20 தவர்தேர்21 சென்ற22 வாறே.

[தளைகள் 1-22 முறையே (தளைப் பெயரின் முதலெழுத்தால்):
இ,வெ,நி,க, நி,க,க,வெ, க,வெ,வெ,க, க,க,க, இ,நி,நி,நே, நி,நே,நே]

வஞ்சி அடியுள் தளை மயக்கம்:
வஞ்சி அடியினில் மயங்கிடும் தளைவகை
வெண்டளை மட்டும்
ஆசிரியம் மட்டும்
கலித்தளை மட்டும்
முச்சீர் அடிவரும் வஞ்சிப் பாவினில்
தன்தளை வெண்டளை
ஆசிரியம் தன்தளை
கலித்தளை தன்தளை
வெண்டளை ஆசிரியம்
வெண்டளை கலித்தளை
கலித்தளை ஆசிரியம்
என்று பலவகை விகற்பித்து வருமே.

சான்று [குறளடி வஞ்சிப்பா]:
கீழ்வரும் வஞ்சி பாவினில் தளைகள் கண்டு
பின்னர் அடைப்புக் குறிக்குள் உள்ள
தளைவகை எண்ணுடன் ஒப்புவது நோக்குக.

பூம்பொழிற் றண்கானல்
புனல்பொழி தண்படப்பை
வீநாறு பூங்காஞ்சிக்
கானாறு கோட்டெருமைக்
குழக்கன்று பிழைத்தோடிக்
காய்த்துறுப பெருஞ்செந்நெல்
தேய்த்துழக்கு மதுநோனார்
எனவாங்குத்
தீங்கழை வாங்கி விலங்கும்
பூம்புனல் ஊர புலம்பா னாளே.

[தளைகள்: தனிச்சொல் முன்னடிகள்:
இயற்சீர் வெண்டளை: 2; வெண்சீர் வெண்டளை: 6; கலித்தளை: 5]
தனிச்சொல் பின்னடிகள்:
இயற்சீர் வெண்டளை: 4; நேரொன்றசிரியத்தளை: 2;]

*****


Sponsored content

PostSponsored content



Page 8 of 29 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 18 ... 29  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக