புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
D. sivatharan | ||||
rajuselvam | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
கவிதையில் யாப்பு
Page 28 of 29 •
Page 28 of 29 • 1 ... 15 ... 27, 28, 29
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
First topic message reminder :
யாப்பிலக்கணம்: ஒரு கவிதை அறிமுகம்
ரமணி, ஆகஸ்ட்-செப்டம்பர், 2012
இந்தத் தொடர் ஒரு சோதனை முயற்சி.
தொடரின் நோக்கம் கற்றுத் தருவதைவிடப் பகிர்ந்துகொள்வது.
கடந்த சில நாட்களாக நான் யாப்பிலக்கணம் பயில இறங்கி, அது இன்னும் தொடரும்போதே,
என் முயற்சியில் நான் பெற்ற செய்திகளை, மகிழ்வினை, வியப்புகளை, திருப்தியை
வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வது முதல் நோக்கம்.
யாப்பிலக்கணத்தை உரைநடையில் தரும்போது நேரிடும் மித மிஞ்சிய சொற்களின் அளவைக் குறைத்து
எளிதில் படித்து, பார்த்து, நினைக்க உதவும் வகையில்
கவிதை வரிகளில் தருவது தொடரின் இரண்டாவது நோக்கம்.
அப்படித் தரும்போது அது வாசகர்களுக்குப் பயன்தந்து, பிற நூல்களின் மூலம்
யாப்பிலக்கணம் மேலும் நன்கு பயில ஊக்கம் அளிக்கும் என்ற நம்பிக்கை மூன்றாவது நோக்கம்.
யாப்பின் ஒழுங்கில், இன்றைய வழக்கில் கவிதை புனைவது
வேறு விதத்தில் எழுதுவது போன்றே எளிதில் வருவது,
அதைவிட அதிகப் பெருமையும் திருப்தியும் தருவது
என்று இத்தொடரில் காட்டிட முயல்கிறேன்.
தொடரின் நிறை குறை பற்றிக் கவிதை ஆர்வலர்கள் அப்போதைக்கப்போதே பின்னூட்டம் இடலாம்.
வரும் பின்னூட்டங்களின் சீரிய கருத்துக்களை எடுத்தாண்டு, குறைகளைக் கூடியமட்டும் திருத்தி,
இறுதியில் எல்லோருக்கும் பயன்படும் வகையில் ஒரு மின்னூலாக்குவது என் இலக்கு.
யாப்பிலக்கணம்: ஒரு கவிதை அறிமுகம்
ரமணி, ஆகஸ்ட்-செப்டம்பர், 2012
இந்தத் தொடர் ஒரு சோதனை முயற்சி.
தொடரின் நோக்கம் கற்றுத் தருவதைவிடப் பகிர்ந்துகொள்வது.
கடந்த சில நாட்களாக நான் யாப்பிலக்கணம் பயில இறங்கி, அது இன்னும் தொடரும்போதே,
என் முயற்சியில் நான் பெற்ற செய்திகளை, மகிழ்வினை, வியப்புகளை, திருப்தியை
வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வது முதல் நோக்கம்.
யாப்பிலக்கணத்தை உரைநடையில் தரும்போது நேரிடும் மித மிஞ்சிய சொற்களின் அளவைக் குறைத்து
எளிதில் படித்து, பார்த்து, நினைக்க உதவும் வகையில்
கவிதை வரிகளில் தருவது தொடரின் இரண்டாவது நோக்கம்.
அப்படித் தரும்போது அது வாசகர்களுக்குப் பயன்தந்து, பிற நூல்களின் மூலம்
யாப்பிலக்கணம் மேலும் நன்கு பயில ஊக்கம் அளிக்கும் என்ற நம்பிக்கை மூன்றாவது நோக்கம்.
யாப்பின் ஒழுங்கில், இன்றைய வழக்கில் கவிதை புனைவது
வேறு விதத்தில் எழுதுவது போன்றே எளிதில் வருவது,
அதைவிட அதிகப் பெருமையும் திருப்தியும் தருவது
என்று இத்தொடரில் காட்டிட முயல்கிறேன்.
தொடரின் நிறை குறை பற்றிக் கவிதை ஆர்வலர்கள் அப்போதைக்கப்போதே பின்னூட்டம் இடலாம்.
வரும் பின்னூட்டங்களின் சீரிய கருத்துக்களை எடுத்தாண்டு, குறைகளைக் கூடியமட்டும் திருத்தி,
இறுதியில் எல்லோருக்கும் பயன்படும் வகையில் ஒரு மின்னூலாக்குவது என் இலக்கு.
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
7.10. ஆசிரியப்பாவின் பொது இலக்கணம்
நாற்சீர் கொண்ட அளவடி கொண்டது
இயற்சீர் பயிலும் அயற்சீர் விரவும்
தன்தளை தழுவும் பிறதளை மயங்கும்
பின்னிரு கனிச்சீர் வருதற் கூடா
மூன்று முதலாப் பலவடி கொள்ளும்
அகவல் ஓசை சுகமுற நடக்கும்
தகவுற இந்த இலக்கணம் உகந்தது
அகவற் பாவெனும் ஆசிரியப் பாவே.
அகவல் முடிவில்-ஏ காரம் வந்தால்
மிகவும் சிறந்தது என்னும் மரபு
அன்றும் இன்றும் வழக்கில் உளதே.
அகவல் ஈற்றசை அன்றைய மரபில்
’ஏஓஈ ஆய்-ஐஎன்’ என்றா(று) அசைகளும்
காரிகை சொல்லும் ஈற்றசை இறுதியாம்;
ஒற்றில் எழுத்தில் வேறோர் அசையில்
இற்றிடும் பாக்கள் இன்றுநாம் காணலாம்.
7.11.. ஆசிரியப்பாவின் சீர்
தேமா புளிமா கருவிளம் கூவிளம்
ஈரசை இயலும் இச்சீர் நான்கும்
அகவற் சீராய் இயற்சீர் என்றும்
ஆசிரி யவுரிச் சீரெனப் படுமே.
இயற்சீர் நான்கும் இயலும் அகவலில்
அயற்சீர் விரவலாம் ஆயினும் நால்வகைக்
கனிகளில் கூவிளங் கருவிளங் கனியென
கனிச்சீர் நிரைநடு வருத்ற் கூடா.
தனிச்சீர் ஆகவே இயற்சீர் இருந்தும்
காய்ச்சீர் இடையே கலந்து வந்து
காம்பீர ஓசை வருமெனார் கி.வா.ஜ.
’கண்ணன் கழல்கள் காண்போம் மனதில்’
தேமா புளிமா தேமா புளிமா
மாச்சீர் களேவந்த ஆசிரிய அளவடியே.
’கண்ணனின் கழலிணை காணுவோம் மனதிலே’
கூவிளம் கருவிளம் கூவிளம் கருவிளம்
விளச்சீர் களேவந்த ஆசிரிய அளவடியே.
’கண்ணன் காலிணை நினைக்கும் உள்ளமே’
தேமா கூவிளம் புளிமா கூவிளம்
மாச்சீர் விளச்சீர் விரவி வந்ததே.
’கண்ணாநின் காலிணையைக் காணுவேன் மனதில்’
தேமாங்காய் கூவிளங்காய் கூவிளம் புளிமா
இயற்சீர் காய்ச்சீர் விரவி வந்ததே.
’கண்ணாநின் காலிணையைக் காணுவேனே என்மனதில்’
தேமாங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய்
அனைத்துச் சீர்களும் காய்ச்சீர் ஆகிட
அகவல் ஓசை வருதல் இன்றிச்
செப்பல் ஓசை பயில்வ தாகுமே.
’மல்லிகைமுகம் தன்னில் விழிச்சுரும்புகள் இரண்டு’
கூவிளங்கனி தேமா கருவிளங்கனி புளிமா
இவ்விரு கனிச்சீரும் வருதல் கூடாதே.
*****
நாற்சீர் கொண்ட அளவடி கொண்டது
இயற்சீர் பயிலும் அயற்சீர் விரவும்
தன்தளை தழுவும் பிறதளை மயங்கும்
பின்னிரு கனிச்சீர் வருதற் கூடா
மூன்று முதலாப் பலவடி கொள்ளும்
அகவல் ஓசை சுகமுற நடக்கும்
தகவுற இந்த இலக்கணம் உகந்தது
அகவற் பாவெனும் ஆசிரியப் பாவே.
அகவல் முடிவில்-ஏ காரம் வந்தால்
மிகவும் சிறந்தது என்னும் மரபு
அன்றும் இன்றும் வழக்கில் உளதே.
அகவல் ஈற்றசை அன்றைய மரபில்
’ஏஓஈ ஆய்-ஐஎன்’ என்றா(று) அசைகளும்
காரிகை சொல்லும் ஈற்றசை இறுதியாம்;
ஒற்றில் எழுத்தில் வேறோர் அசையில்
இற்றிடும் பாக்கள் இன்றுநாம் காணலாம்.
7.11.. ஆசிரியப்பாவின் சீர்
தேமா புளிமா கருவிளம் கூவிளம்
ஈரசை இயலும் இச்சீர் நான்கும்
அகவற் சீராய் இயற்சீர் என்றும்
ஆசிரி யவுரிச் சீரெனப் படுமே.
இயற்சீர் நான்கும் இயலும் அகவலில்
அயற்சீர் விரவலாம் ஆயினும் நால்வகைக்
கனிகளில் கூவிளங் கருவிளங் கனியென
கனிச்சீர் நிரைநடு வருத்ற் கூடா.
தனிச்சீர் ஆகவே இயற்சீர் இருந்தும்
காய்ச்சீர் இடையே கலந்து வந்து
காம்பீர ஓசை வருமெனார் கி.வா.ஜ.
’கண்ணன் கழல்கள் காண்போம் மனதில்’
தேமா புளிமா தேமா புளிமா
மாச்சீர் களேவந்த ஆசிரிய அளவடியே.
’கண்ணனின் கழலிணை காணுவோம் மனதிலே’
கூவிளம் கருவிளம் கூவிளம் கருவிளம்
விளச்சீர் களேவந்த ஆசிரிய அளவடியே.
’கண்ணன் காலிணை நினைக்கும் உள்ளமே’
தேமா கூவிளம் புளிமா கூவிளம்
மாச்சீர் விளச்சீர் விரவி வந்ததே.
’கண்ணாநின் காலிணையைக் காணுவேன் மனதில்’
தேமாங்காய் கூவிளங்காய் கூவிளம் புளிமா
இயற்சீர் காய்ச்சீர் விரவி வந்ததே.
’கண்ணாநின் காலிணையைக் காணுவேனே என்மனதில்’
தேமாங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய்
அனைத்துச் சீர்களும் காய்ச்சீர் ஆகிட
அகவல் ஓசை வருதல் இன்றிச்
செப்பல் ஓசை பயில்வ தாகுமே.
’மல்லிகைமுகம் தன்னில் விழிச்சுரும்புகள் இரண்டு’
கூவிளங்கனி தேமா கருவிளங்கனி புளிமா
இவ்விரு கனிச்சீரும் வருதல் கூடாதே.
*****
- MUGANIபுதியவர்
- பதிவுகள் : 5
இணைந்தது : 21/03/2014
படிக்க கொஞ்சம் சிரமமாக இருக்கிறது. ஆனாலும் படிக்க வேண்டிய ஒன்று.
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
7.12. ஆசிரியப்பாவின் தளை
மாமுன் நேர்வரும் நேரொன் றாசிரியம்
விளமுன் நிரைவரும் நிறையொன் றாசிரியம்
அகவற் பாவின் தகவுறு தளையெனவே.
இயற்சீர் பெரிதும் இயலும் அகவலில்
இயற்சீர் வெண்டளை விரவியே வந்திடும்
மூவசைச் சீர்கள் அருகியே வருதலால்
வெண்சீர் வெண்டளை அருகியே வந்திடும்.
மாமுன் நிரையும் விளம்முன் நேருமென
மாறியே வருவது இயற்சீர் வெண்டளை
காய்முன் நேர்வர வெண்சீர் வெண்டளையே.
காய்முன் நேர்வரும் கலித்தளை சிறிதே
ஆய்ந்தே வரலாம் ஆயினும் இருவகை
வஞ்சித் தளைகள் வருதற் கூடா.
நேரொன் றகவல் நிரையொன் றகவல்
இயற்சீர் வெண்டளை கீழ்வரும் அடிகளில்
அலகிட்ட சீர்களால் அறிந்து கொள்வீர்.
உள்ளார் கொல்லோ தோழி முள்ளிடை
இலவ மேறிய கலவ மஞ்ஞை
எரிபுகு மகரி ரேய்க்கும்
அரிபடு கள்ளியங் காடிறந் தோரே.
---ஐங்குறுநூறு
தேமா தேமா தேமா கூவிளம்
புளிமா கூவிளம் புளிமா தேமா
கருவிளம் புளிமா தேமா
கருவிளம் கருவிளம் கூவிளம் தேமா
புனைந்த சான்றுகள்
முழுதும் நேரொன்றாசியத் தளை:
வானாய்க் காற்றாய் மண்ணாய் ஆகி
ஊனில் ஆவி யூன்றச் செய்தே
காட்டில் ஆடும் காள கண்டன்
தேட்டாய்க் கொள்ளத் தீமை போமே.
முழுதும் நிரையொன்றாசிரியத் தளை:
வெளியென வளியென நிலமென உருவினன்
துளியென உயிரினை உடலிலே உறுத்தவன்
வனமதில் நடமிடும் வளர்மதிச் சடையனை
இனங்கொள வினைகளும் இலையென அழியுமே.
முழுதும் இயற்சீர் வெண்டளை:
வானெனக் காற்றென மண்ணென ஆனவன்
ஊனிலே ஆவியை யூன்றிடச் செய்தவன்
காட்டிலே ஆடிடும் காளமார் கண்டனைத்
தேட்டெனக் கொள்ளவே தீமைகள் போகுமே.
ஆசிரியத்தளை, வெண்டளை, கலித்தளை வந்தது:
வானெனவே காற்றெனவே நிலமெனவே ஆனவனே
ஊனிலே உயிரினை யூன்றச் செய்தவனாம்
காட்டிலே நடமிடும் காளமார் கண்டனைநாம்
தேட்டெனக் கொள்ளத் தீமைகள் போகாவோ?
*****
மாமுன் நேர்வரும் நேரொன் றாசிரியம்
விளமுன் நிரைவரும் நிறையொன் றாசிரியம்
அகவற் பாவின் தகவுறு தளையெனவே.
இயற்சீர் பெரிதும் இயலும் அகவலில்
இயற்சீர் வெண்டளை விரவியே வந்திடும்
மூவசைச் சீர்கள் அருகியே வருதலால்
வெண்சீர் வெண்டளை அருகியே வந்திடும்.
மாமுன் நிரையும் விளம்முன் நேருமென
மாறியே வருவது இயற்சீர் வெண்டளை
காய்முன் நேர்வர வெண்சீர் வெண்டளையே.
காய்முன் நேர்வரும் கலித்தளை சிறிதே
ஆய்ந்தே வரலாம் ஆயினும் இருவகை
வஞ்சித் தளைகள் வருதற் கூடா.
நேரொன் றகவல் நிரையொன் றகவல்
இயற்சீர் வெண்டளை கீழ்வரும் அடிகளில்
அலகிட்ட சீர்களால் அறிந்து கொள்வீர்.
உள்ளார் கொல்லோ தோழி முள்ளிடை
இலவ மேறிய கலவ மஞ்ஞை
எரிபுகு மகரி ரேய்க்கும்
அரிபடு கள்ளியங் காடிறந் தோரே.
---ஐங்குறுநூறு
தேமா தேமா தேமா கூவிளம்
புளிமா கூவிளம் புளிமா தேமா
கருவிளம் புளிமா தேமா
கருவிளம் கருவிளம் கூவிளம் தேமா
புனைந்த சான்றுகள்
முழுதும் நேரொன்றாசியத் தளை:
வானாய்க் காற்றாய் மண்ணாய் ஆகி
ஊனில் ஆவி யூன்றச் செய்தே
காட்டில் ஆடும் காள கண்டன்
தேட்டாய்க் கொள்ளத் தீமை போமே.
முழுதும் நிரையொன்றாசிரியத் தளை:
வெளியென வளியென நிலமென உருவினன்
துளியென உயிரினை உடலிலே உறுத்தவன்
வனமதில் நடமிடும் வளர்மதிச் சடையனை
இனங்கொள வினைகளும் இலையென அழியுமே.
முழுதும் இயற்சீர் வெண்டளை:
வானெனக் காற்றென மண்ணென ஆனவன்
ஊனிலே ஆவியை யூன்றிடச் செய்தவன்
காட்டிலே ஆடிடும் காளமார் கண்டனைத்
தேட்டெனக் கொள்ளவே தீமைகள் போகுமே.
ஆசிரியத்தளை, வெண்டளை, கலித்தளை வந்தது:
வானெனவே காற்றெனவே நிலமெனவே ஆனவனே
ஊனிலே உயிரினை யூன்றச் செய்தவனாம்
காட்டிலே நடமிடும் காளமார் கண்டனைநாம்
தேட்டெனக் கொள்ளத் தீமைகள் போகாவோ?
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
7.13. ஆசிரியப்பாவின் ஓசை வகைகள்
கூற்றும் மாற்றமும் ஆகவே ஒருவன்
வேற்றொரு வனுக்கு விடைகூறல் செப்பல்.
கூற்று என்பது வினவிக் கேட்டல்
மாற்றம் என்பது விடையாய்க் கூறுதல்.
கூற்றும் மாற்றமும் இன்றியே கருதியது
சாற்றல் வரையாது என்பதே அகவல்.
அகவல் ஓசையில் மூவகை யுண்டு.
நேர்நேர் இயற்றளை நேர்ந்தால் ஏந்திசை
நிரைநிரை இயற்றளை நிறைந்தால் தூங்கிசை
இயற்றளை யிரண்டும் இயன்றால் ஒழுகிசையே.
ஏந்திசை யகவ லோசை வருகிற
காரிகை மேற்கோள் கீழே வருவது ... ... ... [காரிகை=யாப்பருங்கலக் காரிகை]
ஈற்றுச் சீரில் மூவசை வரினும்
முழுதும் பயில்வது நேரொன் றாசிரியம்.
போது சாந்தம் பொற்ப ஏந்தி
ஆதி நாதற் சேர்வோர்
சோதி வானம் துன்னுவோரே.
---யா.கா. மேற்கோள்
தேமா தேமா தேமா தேமா
தேமா தேமா தேமா தேமா
தேமா தேமா தேமா கூவிளங்காய்
தூங்கிசை யகவ லோசை வருகிற
காரிகை மேற்கோள் கீழே வருவது
நிரையொன் றாசிரியம் முழுதும் பயில
ஈற்றய லடியினில் மூன்றே சீர்வர
நேரிசை அகவற் பாவகை யாகுமே.
அணிநிழல் அசோகமர்ந் தருள்நெறி நடாத்திய
மணிதிகழ் அவிரொளி வரதனைப்
பணிபவர் பவநனி பரிசறுப் பவரே.
---யா.கா. மேற்கோள்
கருவிளம் கருவிளம் கருவிளம் கருவிளம்
கருவிளம் கருவிளம் கருவிளம்
கருவிளம் கருவிளம் கருவிளம் புளிமா
ஒழுகிசை யகவ லோசை வருகிற
யா.கா. மே.கோ. கீழே வருவது
இயற்சீர் வெண்டளை ஆசிரி யம்வர.
குன்றக் குறவன் காதல் மடமகள்
வரையர மகளிர் புரையும் சாயலள்
ஐயள் அரும்பிய முலையள்
செய்ய வாயினள் மார்பினள் கணங்கே.
---யா.கா. மேற்கோள்
தேமா புளிமா தேமா கருவிளம்
கருவிளம் புளிமா புளிமா கூவிளம்
தேமா கருவிளம் புளிமா
தேமா கூவிளம் கூவிளம் புளிமா
---யா.கா. மேற்கோள்
7.14. ஆசிரியப்பாவின் அடி
ஆசிரி யம்மெனும் அகவற் பாவாம்
நாற்சீர் கொண்ட அளவடி கொண்டது
பாவின் சிற்றெல் லையடி மூன்று
பாவின் பேரெல் லைபா டுவுளமே.
நேரிசை அகவற் பாவில் ஈற்றயல்
மூன்றுசீர் கொண்ட சிந்தடி யாய்வரும்
ஈற்றயல் என்றது இறுதியின் முன்னடியே.
இணைக்குறள் அகவலில் அடிகள் விரவுமே
இடையிலே இருசீர் கொண்ட குறளடி
முச்சீர் கொண்ட சிந்தடி என்று
அச்சீர் அடிகள் ஒன்றோ பலவோ.
*****
கூற்றும் மாற்றமும் ஆகவே ஒருவன்
வேற்றொரு வனுக்கு விடைகூறல் செப்பல்.
கூற்று என்பது வினவிக் கேட்டல்
மாற்றம் என்பது விடையாய்க் கூறுதல்.
கூற்றும் மாற்றமும் இன்றியே கருதியது
சாற்றல் வரையாது என்பதே அகவல்.
அகவல் ஓசையில் மூவகை யுண்டு.
நேர்நேர் இயற்றளை நேர்ந்தால் ஏந்திசை
நிரைநிரை இயற்றளை நிறைந்தால் தூங்கிசை
இயற்றளை யிரண்டும் இயன்றால் ஒழுகிசையே.
ஏந்திசை யகவ லோசை வருகிற
காரிகை மேற்கோள் கீழே வருவது ... ... ... [காரிகை=யாப்பருங்கலக் காரிகை]
ஈற்றுச் சீரில் மூவசை வரினும்
முழுதும் பயில்வது நேரொன் றாசிரியம்.
போது சாந்தம் பொற்ப ஏந்தி
ஆதி நாதற் சேர்வோர்
சோதி வானம் துன்னுவோரே.
---யா.கா. மேற்கோள்
தேமா தேமா தேமா தேமா
தேமா தேமா தேமா தேமா
தேமா தேமா தேமா கூவிளங்காய்
தூங்கிசை யகவ லோசை வருகிற
காரிகை மேற்கோள் கீழே வருவது
நிரையொன் றாசிரியம் முழுதும் பயில
ஈற்றய லடியினில் மூன்றே சீர்வர
நேரிசை அகவற் பாவகை யாகுமே.
அணிநிழல் அசோகமர்ந் தருள்நெறி நடாத்திய
மணிதிகழ் அவிரொளி வரதனைப்
பணிபவர் பவநனி பரிசறுப் பவரே.
---யா.கா. மேற்கோள்
கருவிளம் கருவிளம் கருவிளம் கருவிளம்
கருவிளம் கருவிளம் கருவிளம்
கருவிளம் கருவிளம் கருவிளம் புளிமா
ஒழுகிசை யகவ லோசை வருகிற
யா.கா. மே.கோ. கீழே வருவது
இயற்சீர் வெண்டளை ஆசிரி யம்வர.
குன்றக் குறவன் காதல் மடமகள்
வரையர மகளிர் புரையும் சாயலள்
ஐயள் அரும்பிய முலையள்
செய்ய வாயினள் மார்பினள் கணங்கே.
---யா.கா. மேற்கோள்
தேமா புளிமா தேமா கருவிளம்
கருவிளம் புளிமா புளிமா கூவிளம்
தேமா கருவிளம் புளிமா
தேமா கூவிளம் கூவிளம் புளிமா
---யா.கா. மேற்கோள்
7.14. ஆசிரியப்பாவின் அடி
ஆசிரி யம்மெனும் அகவற் பாவாம்
நாற்சீர் கொண்ட அளவடி கொண்டது
பாவின் சிற்றெல் லையடி மூன்று
பாவின் பேரெல் லைபா டுவுளமே.
நேரிசை அகவற் பாவில் ஈற்றயல்
மூன்றுசீர் கொண்ட சிந்தடி யாய்வரும்
ஈற்றயல் என்றது இறுதியின் முன்னடியே.
இணைக்குறள் அகவலில் அடிகள் விரவுமே
இடையிலே இருசீர் கொண்ட குறளடி
முச்சீர் கொண்ட சிந்தடி என்று
அச்சீர் அடிகள் ஒன்றோ பலவோ.
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
7.15. ஆசிரியப்பா வகைகள்
அடிகள் தோறும் அளவடி வந்திடும்
அகவற் பாவின் வகைகள் நான்காம்
நேரிசை அகவலில் ஈற்றயல் சிந்தடி
இணைக்குறள் அகவலில் இடையிடைச் சிற்றடி
நிலைமண் டிலத்தில் அனைத்தும் அளவடி
அடிமறி மண்டில அளவடிப் பெருமையாய்
அடிகளே மாறினும் பொருளது மாறாதே.
ஓசையாற் பெயர்பெறும் நேரிசை யகவல்
அடியாற் பெயர்பெறும் இணைக்குறள் அகவல்
பொருளாற் பெயர்பெறும் நிலைமண் டிலமே
தொடையாற் பெயர்பெறும் அடிமறி மண்டிலம்.
ஆசிரியப் பாவகைப் பெயர்கள் குறித்து
ஆசிரியப் பாவகை அனைத்திலும் சொன்னால்
வாசக அடிகள் இவ்வா றமையுமே.
நேரிசை அகவல் வகையில் சொன்னால்
அடியாற் பெயர்பெறும் இணைக்குற ளாசிரியம்
அடிமறி மண்டிலம் தொடையால் பெயர்பெறும்
நேரிசை ஓசையாற் பெயர்பெறும்
நிலைமண் டிலமோ பொருளா லென்பரே.
இதையே இணைக்குறள் வகையில் சொன்னால்
அடியாற் பெயர்பெறும் இணைக்குற ளாசிரியம்
அடிமறி மண்டிலம் தொடையால்
நேரிசை ஓசையால்
நிலைமண் டிலமோ பொருளா லென்பரே.
இதுவே நிலைமண்டில வகையில் சொன்னால்
அடியாற் பெயர்பெறும் இணைக்குற ளாசிரியம்
அடிமறி மண்டிலம் தொடையால் பெயர்பெறும்
நேரிசை ஆசிரியம் ஓசையால் பெயர்பெறும்
நிலைமண் டிலமோ பொருளா லென்பரே.
அகவல் பெயர்களில் அடிமறி மண்டிலமே
அடியாற் பெயர்பெறும் இணைக்குறள் வகையே
அடிமறி மண்டிலம் தொடையால் பெயர்பெறுமே
நேரிசை அகவல் ஓசையாற் பெயர்பெறுமே
நிலைமண் டிலமோ பொருளாற் பெயர்பெறுமே.
மண்டிலம் என்பது சக்கரச் சுழற்சி
நிலைமண் டிலத்தில் கிடைநிலைச் சுழற்சி
அடிமறி மண்டிலத்தில் நிமிர்நிலைச் சுழற்சியே.
அகவல் என்பது பொதுவில் குறிப்பது
அடிகள் தோறும் அளவடி பயிலும்
நிலைமண் டிலவகைப் பாவென் பதுவே.
*****
அடிகள் தோறும் அளவடி வந்திடும்
அகவற் பாவின் வகைகள் நான்காம்
நேரிசை அகவலில் ஈற்றயல் சிந்தடி
இணைக்குறள் அகவலில் இடையிடைச் சிற்றடி
நிலைமண் டிலத்தில் அனைத்தும் அளவடி
அடிமறி மண்டில அளவடிப் பெருமையாய்
அடிகளே மாறினும் பொருளது மாறாதே.
ஓசையாற் பெயர்பெறும் நேரிசை யகவல்
அடியாற் பெயர்பெறும் இணைக்குறள் அகவல்
பொருளாற் பெயர்பெறும் நிலைமண் டிலமே
தொடையாற் பெயர்பெறும் அடிமறி மண்டிலம்.
ஆசிரியப் பாவகைப் பெயர்கள் குறித்து
ஆசிரியப் பாவகை அனைத்திலும் சொன்னால்
வாசக அடிகள் இவ்வா றமையுமே.
நேரிசை அகவல் வகையில் சொன்னால்
அடியாற் பெயர்பெறும் இணைக்குற ளாசிரியம்
அடிமறி மண்டிலம் தொடையால் பெயர்பெறும்
நேரிசை ஓசையாற் பெயர்பெறும்
நிலைமண் டிலமோ பொருளா லென்பரே.
இதையே இணைக்குறள் வகையில் சொன்னால்
அடியாற் பெயர்பெறும் இணைக்குற ளாசிரியம்
அடிமறி மண்டிலம் தொடையால்
நேரிசை ஓசையால்
நிலைமண் டிலமோ பொருளா லென்பரே.
இதுவே நிலைமண்டில வகையில் சொன்னால்
அடியாற் பெயர்பெறும் இணைக்குற ளாசிரியம்
அடிமறி மண்டிலம் தொடையால் பெயர்பெறும்
நேரிசை ஆசிரியம் ஓசையால் பெயர்பெறும்
நிலைமண் டிலமோ பொருளா லென்பரே.
அகவல் பெயர்களில் அடிமறி மண்டிலமே
அடியாற் பெயர்பெறும் இணைக்குறள் வகையே
அடிமறி மண்டிலம் தொடையால் பெயர்பெறுமே
நேரிசை அகவல் ஓசையாற் பெயர்பெறுமே
நிலைமண் டிலமோ பொருளாற் பெயர்பெறுமே.
மண்டிலம் என்பது சக்கரச் சுழற்சி
நிலைமண் டிலத்தில் கிடைநிலைச் சுழற்சி
அடிமறி மண்டிலத்தில் நிமிர்நிலைச் சுழற்சியே.
அகவல் என்பது பொதுவில் குறிப்பது
அடிகள் தோறும் அளவடி பயிலும்
நிலைமண் டிலவகைப் பாவென் பதுவே.
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
7.16. ஆசிரியப்பாவில் இயங்கும் நூல்கள்
தமிழ்சங்க காலச் தீந்தமிழ் நூல்களில்
பத்துப் பாட்டின் நூல்கள் அனைத்தும்
எட்டுத் தொகையில் பரிபாடல் கலித்தொகை
விட்டு மற்றவை அகவலமை நூல்களே.
காப்பிய நூல்களின் யாப்பினை நோக்க
மாதவி மகளாம் மணிமே கலைக்கதைக்
காப்பியம் முழுதும் அகவலில் அமைந்ததே.
இயலிசை நாடகம் மூன்றுமே இயலும்
நயமிகு சிலப்பதி காரப் பனுவலில்
பயிலும் அகவல் இடையிடைத் தொடர்ந்தே.
இன்றைய இலக்கிய நூல்கள் நோக்கிட
கந்த சஷ்டிக் கவசப் பாக்களும்
பாரதி பாக்கள் பலவிலும் அகவல்
மரபின் வழியில் முயலும் பாவலர்
பெரிதும் யாப்பது அகவற் பாவே.
7.17. நேரிசை ஆசிரியப்பா
அகவலின் இலக்கணம் அமைந்தே ஈற்றயல்
முச்சீர் சிந்தடி வருவது
நேரிசை ஆசிரி யப்பா ஆகுமே
நேரிய இசையினில் நேரிய சொல்லினில்
நுண்ணிதின் பொருளை உரைக்கும்
நேரிசை யகவல் சீரிய வகையே.
ஈற்றசை பலவித மாக முடியும்
நேரிசை யகவல் சான்றுகள்
பழந்தமிழ் இலக்கிய மரபில் கீழே.
ஏகார முடிவு:
யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி யறிதும்
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சந் தாங்கலந் தனவே
---செம்புலப் பெயனீரார், குறுந்தொகை 40
ஓகார முடிவு:
பிண்ட நெல்லின் அள்ளூர் அன்னவள்
ஒண்டொடி நெகிழினும் நெகிழ்க
சென்றீ பெருமநிற் றகைக்குநர் யாரோ
---அள்ளூர் நன்முல்லையார், அகநானூறு 46
ஈகார முடிவு:
குவளை உண்கண் இவள்வயிற் பிரிந்து
பெருந்தோள் கதுப்பொடு விரும்பினை நீவி
இரங்குமென் றழுங்கல் வேண்டா
செழுந்தேர் ஓட்டிய வென்றியொடு சென்றீ
---அகநானூறு
ஆய் என்ற முடிவு:
முள்ளி நீடிய முதுநீர் அடைகரைப்
புள்ளிக் கள்வன் ஆம்பல் அறுக்கும்
தண்டுறை ஊரன் தெளிப்பவும்
உண்கண் பசப்ப தெவன்கொல் அன்னாய்
---அகநானூறு
ஐகார முடிவு:
நின்றன நின்று தன்றுணை ஒருசிறைப்
பூந்தண் சிலம்பன் தேந்தழை இவையெனக்
காட்டவும் காண்டல் செல்லாள் கோட்டிப்
பூண்முலை நோக்கி இறைஞ்சி
வாண்முக எருத்தம் கோட்டினள் மடந்தை
இகார முடிவு:
அங்குச பாசமுங் கொம்புந் தரித்தாய்
எங்குல தேவா போற்றி
சங்கரன் மகனே தாளிணை போற்றி!
---பாரதியார், விநாயகர் நான்மணி மாலை 28
*****
தமிழ்சங்க காலச் தீந்தமிழ் நூல்களில்
பத்துப் பாட்டின் நூல்கள் அனைத்தும்
எட்டுத் தொகையில் பரிபாடல் கலித்தொகை
விட்டு மற்றவை அகவலமை நூல்களே.
காப்பிய நூல்களின் யாப்பினை நோக்க
மாதவி மகளாம் மணிமே கலைக்கதைக்
காப்பியம் முழுதும் அகவலில் அமைந்ததே.
இயலிசை நாடகம் மூன்றுமே இயலும்
நயமிகு சிலப்பதி காரப் பனுவலில்
பயிலும் அகவல் இடையிடைத் தொடர்ந்தே.
இன்றைய இலக்கிய நூல்கள் நோக்கிட
கந்த சஷ்டிக் கவசப் பாக்களும்
பாரதி பாக்கள் பலவிலும் அகவல்
மரபின் வழியில் முயலும் பாவலர்
பெரிதும் யாப்பது அகவற் பாவே.
7.17. நேரிசை ஆசிரியப்பா
அகவலின் இலக்கணம் அமைந்தே ஈற்றயல்
முச்சீர் சிந்தடி வருவது
நேரிசை ஆசிரி யப்பா ஆகுமே
நேரிய இசையினில் நேரிய சொல்லினில்
நுண்ணிதின் பொருளை உரைக்கும்
நேரிசை யகவல் சீரிய வகையே.
ஈற்றசை பலவித மாக முடியும்
நேரிசை யகவல் சான்றுகள்
பழந்தமிழ் இலக்கிய மரபில் கீழே.
ஏகார முடிவு:
யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி யறிதும்
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சந் தாங்கலந் தனவே
---செம்புலப் பெயனீரார், குறுந்தொகை 40
ஓகார முடிவு:
பிண்ட நெல்லின் அள்ளூர் அன்னவள்
ஒண்டொடி நெகிழினும் நெகிழ்க
சென்றீ பெருமநிற் றகைக்குநர் யாரோ
---அள்ளூர் நன்முல்லையார், அகநானூறு 46
ஈகார முடிவு:
குவளை உண்கண் இவள்வயிற் பிரிந்து
பெருந்தோள் கதுப்பொடு விரும்பினை நீவி
இரங்குமென் றழுங்கல் வேண்டா
செழுந்தேர் ஓட்டிய வென்றியொடு சென்றீ
---அகநானூறு
ஆய் என்ற முடிவு:
முள்ளி நீடிய முதுநீர் அடைகரைப்
புள்ளிக் கள்வன் ஆம்பல் அறுக்கும்
தண்டுறை ஊரன் தெளிப்பவும்
உண்கண் பசப்ப தெவன்கொல் அன்னாய்
---அகநானூறு
ஐகார முடிவு:
நின்றன நின்று தன்றுணை ஒருசிறைப்
பூந்தண் சிலம்பன் தேந்தழை இவையெனக்
காட்டவும் காண்டல் செல்லாள் கோட்டிப்
பூண்முலை நோக்கி இறைஞ்சி
வாண்முக எருத்தம் கோட்டினள் மடந்தை
இகார முடிவு:
அங்குச பாசமுங் கொம்புந் தரித்தாய்
எங்குல தேவா போற்றி
சங்கரன் மகனே தாளிணை போற்றி!
---பாரதியார், விநாயகர் நான்மணி மாலை 28
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
7.18. நேரிசை ஆசிரியப்பா முயற்சி
அகவலின் இலக்கணம் அமைந்தே ஈற்றயல்
முச்சீர் சிந்தடி பயிலும்
நேரிசை அகவல் நாமும் செய்வமே.
காதலில் காமம் களியைத் தரினும்
காதலின் நெடுமையில் பரஸ்பர மதிப்பே
காதலில் சாதனை அன்பே
காதலின் வெற்றி பெற்றோர் உடன்பாடே.
நேரிசை அகவலில் ஈற்றயல் அமையும்
மூவசை அடியின் ஓசை நிறுத்தம்
மேல்வந்த சான்றினைப் போல
நேரிசை அகவலில் நிறைவாய் ஒலிக்குமே.
காலையில் எழுந்தால் கண்சுடும் கதிரோன்
சாலையின் சுழலில் ஊர்ந்தே
வேலைமேற் சென்றால் வீடுவர நள்ளிரவே.
நீதிசார நூல்தரும் கீழ்வரும் வெண்பா
நேரிசை அகவல் ஆக்குவோம்
சீரிய பொருளது மாறி விடாமலே.
பெற்றதாய் மட்டுமல்ல கற்பித்தார் இல்லாளும்
கொற்றவன் நாயகியும் மூத்தோன் மனைவியும்
தன்னில்லாள் தாயுமென் றைந்துவகை நங்கையரை
உன்னுவரே தாய்க்கு நிகர்.
---நீதிசாரம் 22
பெற்றன்னை கற்பித்தார் எனினும் இல்லாள்
கொற்றவன் மனைவி மூத்தவன் மனைவி
உற்ற இல்லாளின் அன்னையெனச்
சுற்றம் ஐவரும் தாயார் ஆவரே.
*****
அகவலின் இலக்கணம் அமைந்தே ஈற்றயல்
முச்சீர் சிந்தடி பயிலும்
நேரிசை அகவல் நாமும் செய்வமே.
காதலில் காமம் களியைத் தரினும்
காதலின் நெடுமையில் பரஸ்பர மதிப்பே
காதலில் சாதனை அன்பே
காதலின் வெற்றி பெற்றோர் உடன்பாடே.
நேரிசை அகவலில் ஈற்றயல் அமையும்
மூவசை அடியின் ஓசை நிறுத்தம்
மேல்வந்த சான்றினைப் போல
நேரிசை அகவலில் நிறைவாய் ஒலிக்குமே.
காலையில் எழுந்தால் கண்சுடும் கதிரோன்
சாலையின் சுழலில் ஊர்ந்தே
வேலைமேற் சென்றால் வீடுவர நள்ளிரவே.
நீதிசார நூல்தரும் கீழ்வரும் வெண்பா
நேரிசை அகவல் ஆக்குவோம்
சீரிய பொருளது மாறி விடாமலே.
பெற்றதாய் மட்டுமல்ல கற்பித்தார் இல்லாளும்
கொற்றவன் நாயகியும் மூத்தோன் மனைவியும்
தன்னில்லாள் தாயுமென் றைந்துவகை நங்கையரை
உன்னுவரே தாய்க்கு நிகர்.
---நீதிசாரம் 22
பெற்றன்னை கற்பித்தார் எனினும் இல்லாள்
கொற்றவன் மனைவி மூத்தவன் மனைவி
உற்ற இல்லாளின் அன்னையெனச்
சுற்றம் ஐவரும் தாயார் ஆவரே.
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
7.20. இணைக்குறள் ஆசிரியப்பா
அகவலின் இலக்கணம் தகவுற அமைந்தே
அந்தமும் ஆதியும் அளவடி யாகியே
இடையிடைச் சீர்கள் அடிகளிற் குறைந்தே
குறளடி யாகவோ
அன்றிச் சிந்தடி யாகவோ
இணைந்து வரும்-இணைக் குறளா சிரியமே.
சிந்தடி முச்சீர் குறளடி யிருசீர்
வந்திடும் அடிகள் என்று
தம்முள் பேதம் உடையன ஆயினும்
அளவடி நோக்க
அளவில் இரண்டுமே குறளெனப் பெயர்பெறுமே.
தொல்காப் பியர்தம் இலக்கண நூலில்
குறள்வெண் பாவும்
சிந்தியல் வெண்பா வகையும்
ஒருங்கு சேர்த்துக் குறுவெண் பாட்டெனக்
கூறுதல் இங்கு நோக்கற் பாலதே.
முதலிலும் ஈற்றிலும் அளவடி வரினும்
’இடைபல குன்றின் இணைக்குறள்’ என்பதில்
இடைபல என்று
காரிகை நூற்பா கூறுவ தாலே
இடைவரும் சிற்றடி யோடு
அளவடி இடைவரல் விலக்கல என்று
உளத்தில் இருத்தல் நன்று
உளதே சான்று மேலுள அடிகளிலே.
பசுபதி யவர்கள் பேசுதல் போல*
இணைக்குறள் அகவற் பாவின் வடிவே
இன்றைய புதுக்க விதையாம்.
நன்றே புனைவோம் நாமொரு புதுக்கவிதை
இணைக்குறள் அகவல் வடிவந் தனிலே.
[*’கவிதை இயற்றிக் கலக்கு’, பேராசிரியர் பசுபதி, பக்.93]
என்னதான் உனக்குப் பிடிக்கும் என்றேன்.
கோபித்துக் கொண்டாள்.
என்னத்தான் உனக்குப் பிடிக்கும்
என்று சொன்னேன் என்றேன்.
’ஸ்மார்ட்’ என்று நினைப்போ?
எனக்கும் என்னத்தான் பிடிக்கும் என்றாள்.
என்முகம் இப்போது
சுருங்குதல் கண்டு
எனக்கும் என்னத்தானைப் பிடிக்கும் என்றேன்
என்றாளே பார்க்கலாம் என்முகம் மலரவே!
*****
அகவலின் இலக்கணம் தகவுற அமைந்தே
அந்தமும் ஆதியும் அளவடி யாகியே
இடையிடைச் சீர்கள் அடிகளிற் குறைந்தே
குறளடி யாகவோ
அன்றிச் சிந்தடி யாகவோ
இணைந்து வரும்-இணைக் குறளா சிரியமே.
சிந்தடி முச்சீர் குறளடி யிருசீர்
வந்திடும் அடிகள் என்று
தம்முள் பேதம் உடையன ஆயினும்
அளவடி நோக்க
அளவில் இரண்டுமே குறளெனப் பெயர்பெறுமே.
தொல்காப் பியர்தம் இலக்கண நூலில்
குறள்வெண் பாவும்
சிந்தியல் வெண்பா வகையும்
ஒருங்கு சேர்த்துக் குறுவெண் பாட்டெனக்
கூறுதல் இங்கு நோக்கற் பாலதே.
முதலிலும் ஈற்றிலும் அளவடி வரினும்
’இடைபல குன்றின் இணைக்குறள்’ என்பதில்
இடைபல என்று
காரிகை நூற்பா கூறுவ தாலே
இடைவரும் சிற்றடி யோடு
அளவடி இடைவரல் விலக்கல என்று
உளத்தில் இருத்தல் நன்று
உளதே சான்று மேலுள அடிகளிலே.
பசுபதி யவர்கள் பேசுதல் போல*
இணைக்குறள் அகவற் பாவின் வடிவே
இன்றைய புதுக்க விதையாம்.
நன்றே புனைவோம் நாமொரு புதுக்கவிதை
இணைக்குறள் அகவல் வடிவந் தனிலே.
[*’கவிதை இயற்றிக் கலக்கு’, பேராசிரியர் பசுபதி, பக்.93]
என்னதான் உனக்குப் பிடிக்கும் என்றேன்.
கோபித்துக் கொண்டாள்.
என்னத்தான் உனக்குப் பிடிக்கும்
என்று சொன்னேன் என்றேன்.
’ஸ்மார்ட்’ என்று நினைப்போ?
எனக்கும் என்னத்தான் பிடிக்கும் என்றாள்.
என்முகம் இப்போது
சுருங்குதல் கண்டு
எனக்கும் என்னத்தானைப் பிடிக்கும் என்றேன்
என்றாளே பார்க்கலாம் என்முகம் மலரவே!
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
7.21. இணைக்குறள் ஆசிரியப்பா சான்றுகள்
புகழ்மிகு சான்றென இணைக்குறள் அகவலில்
தகவுற ஒலிக்கும் கீழ்வரும் பாடல்
காரிகை தருகிற சான்றாய் வருவது.
சான்று 1.
நீரின் தண்மையும் தீயின் வெம்மையும்
சாரச் சார்ந்து
தீரத் தீரும்
சாரல் நாடன் கேண்மை,
சாரச் சாரச் சார்ந்து,
தீரத் தீரத் தீர்ப்பொல் லாதே.
சிறப்புடை நேரொன் றாசிரி யத்தளை
பெரிதும் பயின்று
ஈற்றய லடிகள் குறளடி சிந்தடி
என்று வந்த சான்றிணைக் குறளிதே.
தலைவனின் பிரிவில் தலைவியின் சொற்களில்
அலையுறும் நெஞ்சின் ஆர்ப்பைக் காட்டும்
இந்தப் பாடலைக் கொஞ்சம் அலசுவோம்.
தொட்டால் சில்லிடும் நீரின் தண்மை
விட்டால் தீர்ந்தே மறையும்
கிட்டவரச் சூடேறும் தீயின் வெம்மை
எட்டியே விலகக் குறைந்தே மறையும்
மலைச்சாரல் நாடன் தலைவனின் நட்போ
தலைப்பட்டால் பொல்லாதது!
ஒன்ற ஒன்ற நன்றாய் வளர்ந்து
ஒன்றியபின் பிரிந்தாலோ
தீர்வதே யில்லாமல்
நீரின் தண்மையாய்த்
தீயின் வெம்மையாய்
நெஞ்சினில் சுட்டும் குளிர்ந்தும் நோகுமே!
சான்று 2.
இவனினும் இவனினும் இவள்வருந் தினளே
இவளினும் வருந்தினன் இவனே
இவளைக் கொடுத்தோன் ஒருவனும் உளனே
தொடிக்கை பிடித்தோன் ஒருவனும் உளனே
நன்மலை நாடனும் உளனே
புன்னையங் கானற் சேர்ப்பனும் உளனே.
சிறப்புடை நிரையொன் றாசிரி யத்தளை
பயின்று இடையில் சிந்தடி
இரண்டு வந்த சான்றிணைக் குறளிதே.
சான்று 3.
மங்கை மாதவி அரங்கேற்று காதையும் (65)
அந்தி மாலைச் சிறப்புசெய் காதையும்
இந்திர விழவூர் எடுத்த காதையும்
கடலாடு காதையும்
மடலவிழ் கானல்வரியும் வேனில்வந் திறுத்தென
மாதவி இரங்கிய காதையும் தீதுடைக்
...
காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல்
வாழ்த்து வரந்தரு காதையொடு (85)
இவ்வா றைந்தும்
உரையிடை இட்ட பாட்டுடைச் செய்யுள்
உரைசால் அடிகள் அருள மதுரைக்
கூல வாணிகன் சாத்தன் கேட்டனன்
இதுபால்வகை தெரிந்த பதிகத்தின் மரபென்.
---சிலப்பதிகாரம், புகார்க் காண்டம்
சிலம்பின் ஆசிரியப் பாவடிகள் முடிவது
’என்’எனும் ஈற்றசை கொண்ட சீர்களிலே
மேல்வந்த வரிகளிலே
இடையிடைச் சீர்குறைய
இணைக்குறள் ஆசிரியப் பாவென ஆயிற்றே.
4. இணைக்குறள் அகவல் இன்று
பொதுவில் இன்று இணைக்குறள் முயல்வோர்
புதுக்கவிதை போலதை எழுதி
மரபின் தகைமை சேர்த்திட முயல்வரே.
உமா:
http://enathutamilkavithaigal.blogspot.in/
செல்வம் நிலையாமை
இன்றுளது நாளை இல்லா தாகும்
வண்டிச் சக்கரமாய்
வாழ்க்கைச் சுழலும்
வீழ்ச்சியும் எழுச்சியும் என்றும் தொடரும்
மாறும் யாவும்
மனிதர் வாழ்வினில்
வறியர் செல்வர், செல்வர்
வறியர் ஆவர்
அறிவாய் செல்வம் நிற்காது நிலைத்தே!
விழி திறந்து காட்டுவழி
கண்ணை மூடிக் கொண்டது ஏனோ?
கண்ணேயுன் கண்ணின் வெளிச்சமும்
மண்ணின் இருளில்
மறைந்திடா திருக்கவோ?
சொந்த மண்விட்டுன்
செல்லப் பெயர்மறந்(து)
அடையாளங் காட்டி
அழைக்கப் படுதலின் அவலமோ? நீயுன்
அல்லிவிழி மூடிக் கொண்டது?
பதுங்குக் குழியின் இருட்டை சற்றே
மறந்துவிடு கண்ணே!
திறந்துவிடு உன்கண்ணை
பரவவிடு வெளிச்சம்
விழிகளைத் திறந்தே
வழிதனைக் காண்! ஈழத் தமிழர்
இழிநிலை மாற
விலக்குன் கைகளை இலக்கினை எட்டவே!
*****
புகழ்மிகு சான்றென இணைக்குறள் அகவலில்
தகவுற ஒலிக்கும் கீழ்வரும் பாடல்
காரிகை தருகிற சான்றாய் வருவது.
சான்று 1.
நீரின் தண்மையும் தீயின் வெம்மையும்
சாரச் சார்ந்து
தீரத் தீரும்
சாரல் நாடன் கேண்மை,
சாரச் சாரச் சார்ந்து,
தீரத் தீரத் தீர்ப்பொல் லாதே.
சிறப்புடை நேரொன் றாசிரி யத்தளை
பெரிதும் பயின்று
ஈற்றய லடிகள் குறளடி சிந்தடி
என்று வந்த சான்றிணைக் குறளிதே.
தலைவனின் பிரிவில் தலைவியின் சொற்களில்
அலையுறும் நெஞ்சின் ஆர்ப்பைக் காட்டும்
இந்தப் பாடலைக் கொஞ்சம் அலசுவோம்.
தொட்டால் சில்லிடும் நீரின் தண்மை
விட்டால் தீர்ந்தே மறையும்
கிட்டவரச் சூடேறும் தீயின் வெம்மை
எட்டியே விலகக் குறைந்தே மறையும்
மலைச்சாரல் நாடன் தலைவனின் நட்போ
தலைப்பட்டால் பொல்லாதது!
ஒன்ற ஒன்ற நன்றாய் வளர்ந்து
ஒன்றியபின் பிரிந்தாலோ
தீர்வதே யில்லாமல்
நீரின் தண்மையாய்த்
தீயின் வெம்மையாய்
நெஞ்சினில் சுட்டும் குளிர்ந்தும் நோகுமே!
சான்று 2.
இவனினும் இவனினும் இவள்வருந் தினளே
இவளினும் வருந்தினன் இவனே
இவளைக் கொடுத்தோன் ஒருவனும் உளனே
தொடிக்கை பிடித்தோன் ஒருவனும் உளனே
நன்மலை நாடனும் உளனே
புன்னையங் கானற் சேர்ப்பனும் உளனே.
சிறப்புடை நிரையொன் றாசிரி யத்தளை
பயின்று இடையில் சிந்தடி
இரண்டு வந்த சான்றிணைக் குறளிதே.
சான்று 3.
மங்கை மாதவி அரங்கேற்று காதையும் (65)
அந்தி மாலைச் சிறப்புசெய் காதையும்
இந்திர விழவூர் எடுத்த காதையும்
கடலாடு காதையும்
மடலவிழ் கானல்வரியும் வேனில்வந் திறுத்தென
மாதவி இரங்கிய காதையும் தீதுடைக்
...
காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல்
வாழ்த்து வரந்தரு காதையொடு (85)
இவ்வா றைந்தும்
உரையிடை இட்ட பாட்டுடைச் செய்யுள்
உரைசால் அடிகள் அருள மதுரைக்
கூல வாணிகன் சாத்தன் கேட்டனன்
இதுபால்வகை தெரிந்த பதிகத்தின் மரபென்.
---சிலப்பதிகாரம், புகார்க் காண்டம்
சிலம்பின் ஆசிரியப் பாவடிகள் முடிவது
’என்’எனும் ஈற்றசை கொண்ட சீர்களிலே
மேல்வந்த வரிகளிலே
இடையிடைச் சீர்குறைய
இணைக்குறள் ஆசிரியப் பாவென ஆயிற்றே.
4. இணைக்குறள் அகவல் இன்று
பொதுவில் இன்று இணைக்குறள் முயல்வோர்
புதுக்கவிதை போலதை எழுதி
மரபின் தகைமை சேர்த்திட முயல்வரே.
உமா:
http://enathutamilkavithaigal.blogspot.in/
செல்வம் நிலையாமை
இன்றுளது நாளை இல்லா தாகும்
வண்டிச் சக்கரமாய்
வாழ்க்கைச் சுழலும்
வீழ்ச்சியும் எழுச்சியும் என்றும் தொடரும்
மாறும் யாவும்
மனிதர் வாழ்வினில்
வறியர் செல்வர், செல்வர்
வறியர் ஆவர்
அறிவாய் செல்வம் நிற்காது நிலைத்தே!
விழி திறந்து காட்டுவழி
கண்ணை மூடிக் கொண்டது ஏனோ?
கண்ணேயுன் கண்ணின் வெளிச்சமும்
மண்ணின் இருளில்
மறைந்திடா திருக்கவோ?
சொந்த மண்விட்டுன்
செல்லப் பெயர்மறந்(து)
அடையாளங் காட்டி
அழைக்கப் படுதலின் அவலமோ? நீயுன்
அல்லிவிழி மூடிக் கொண்டது?
பதுங்குக் குழியின் இருட்டை சற்றே
மறந்துவிடு கண்ணே!
திறந்துவிடு உன்கண்ணை
பரவவிடு வெளிச்சம்
விழிகளைத் திறந்தே
வழிதனைக் காண்! ஈழத் தமிழர்
இழிநிலை மாற
விலக்குன் கைகளை இலக்கினை எட்டவே!
*****
- Sponsored content
Page 28 of 29 • 1 ... 15 ... 27, 28, 29
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 28 of 29
|
|