புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதையில் யாப்பு - Page 27 Poll_c10கவிதையில் யாப்பு - Page 27 Poll_m10கவிதையில் யாப்பு - Page 27 Poll_c10 
68 Posts - 41%
heezulia
கவிதையில் யாப்பு - Page 27 Poll_c10கவிதையில் யாப்பு - Page 27 Poll_m10கவிதையில் யாப்பு - Page 27 Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
கவிதையில் யாப்பு - Page 27 Poll_c10கவிதையில் யாப்பு - Page 27 Poll_m10கவிதையில் யாப்பு - Page 27 Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
கவிதையில் யாப்பு - Page 27 Poll_c10கவிதையில் யாப்பு - Page 27 Poll_m10கவிதையில் யாப்பு - Page 27 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
கவிதையில் யாப்பு - Page 27 Poll_c10கவிதையில் யாப்பு - Page 27 Poll_m10கவிதையில் யாப்பு - Page 27 Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
கவிதையில் யாப்பு - Page 27 Poll_c10கவிதையில் யாப்பு - Page 27 Poll_m10கவிதையில் யாப்பு - Page 27 Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
கவிதையில் யாப்பு - Page 27 Poll_c10கவிதையில் யாப்பு - Page 27 Poll_m10கவிதையில் யாப்பு - Page 27 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
கவிதையில் யாப்பு - Page 27 Poll_c10கவிதையில் யாப்பு - Page 27 Poll_m10கவிதையில் யாப்பு - Page 27 Poll_c10 
2 Posts - 1%
manikavi
கவிதையில் யாப்பு - Page 27 Poll_c10கவிதையில் யாப்பு - Page 27 Poll_m10கவிதையில் யாப்பு - Page 27 Poll_c10 
1 Post - 1%
prajai
கவிதையில் யாப்பு - Page 27 Poll_c10கவிதையில் யாப்பு - Page 27 Poll_m10கவிதையில் யாப்பு - Page 27 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதையில் யாப்பு - Page 27 Poll_c10கவிதையில் யாப்பு - Page 27 Poll_m10கவிதையில் யாப்பு - Page 27 Poll_c10 
319 Posts - 50%
heezulia
கவிதையில் யாப்பு - Page 27 Poll_c10கவிதையில் யாப்பு - Page 27 Poll_m10கவிதையில் யாப்பு - Page 27 Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
கவிதையில் யாப்பு - Page 27 Poll_c10கவிதையில் யாப்பு - Page 27 Poll_m10கவிதையில் யாப்பு - Page 27 Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
கவிதையில் யாப்பு - Page 27 Poll_c10கவிதையில் யாப்பு - Page 27 Poll_m10கவிதையில் யாப்பு - Page 27 Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
கவிதையில் யாப்பு - Page 27 Poll_c10கவிதையில் யாப்பு - Page 27 Poll_m10கவிதையில் யாப்பு - Page 27 Poll_c10 
21 Posts - 3%
prajai
கவிதையில் யாப்பு - Page 27 Poll_c10கவிதையில் யாப்பு - Page 27 Poll_m10கவிதையில் யாப்பு - Page 27 Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
கவிதையில் யாப்பு - Page 27 Poll_c10கவிதையில் யாப்பு - Page 27 Poll_m10கவிதையில் யாப்பு - Page 27 Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
கவிதையில் யாப்பு - Page 27 Poll_c10கவிதையில் யாப்பு - Page 27 Poll_m10கவிதையில் யாப்பு - Page 27 Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
கவிதையில் யாப்பு - Page 27 Poll_c10கவிதையில் யாப்பு - Page 27 Poll_m10கவிதையில் யாப்பு - Page 27 Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
கவிதையில் யாப்பு - Page 27 Poll_c10கவிதையில் யாப்பு - Page 27 Poll_m10கவிதையில் யாப்பு - Page 27 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதையில் யாப்பு


   
   

Page 27 of 29 Previous  1 ... 15 ... 26, 27, 28, 29  Next

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Thu Nov 08, 2012 8:38 am

First topic message reminder :

யாப்பிலக்கணம்: ஒரு கவிதை அறிமுகம்
ரமணி, ஆகஸ்ட்-செப்டம்பர், 2012

இந்தத் தொடர் ஒரு சோதனை முயற்சி.
தொடரின் நோக்கம் கற்றுத் தருவதைவிடப் பகிர்ந்துகொள்வது.
கடந்த சில நாட்களாக நான் யாப்பிலக்கணம் பயில இறங்கி, அது இன்னும் தொடரும்போதே,
என் முயற்சியில் நான் பெற்ற செய்திகளை, மகிழ்வினை, வியப்புகளை, திருப்தியை
வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வது முதல் நோக்கம்.

யாப்பிலக்கணத்தை உரைநடையில் தரும்போது நேரிடும் மித மிஞ்சிய சொற்களின் அளவைக் குறைத்து
எளிதில் படித்து, பார்த்து, நினைக்க உதவும் வகையில்
கவிதை வரிகளில் தருவது தொடரின் இரண்டாவது நோக்கம்.

அப்படித் தரும்போது அது வாசகர்களுக்குப் பயன்தந்து, பிற நூல்களின் மூலம்
யாப்பிலக்கணம் மேலும் நன்கு பயில ஊக்கம் அளிக்கும் என்ற நம்பிக்கை மூன்றாவது நோக்கம்.

யாப்பின் ஒழுங்கில், இன்றைய வழக்கில் கவிதை புனைவது
வேறு விதத்தில் எழுதுவது போன்றே எளிதில் வருவது,
அதைவிட அதிகப் பெருமையும் திருப்தியும் தருவது
என்று இத்தொடரில் காட்டிட முயல்கிறேன்.

தொடரின் நிறை குறை பற்றிக் கவிதை ஆர்வலர்கள் அப்போதைக்கப்போதே பின்னூட்டம் இடலாம்.
வரும் பின்னூட்டங்களின் சீரிய கருத்துக்களை எடுத்தாண்டு, குறைகளைக் கூடியமட்டும் திருத்தி,
இறுதியில் எல்லோருக்கும் பயன்படும் வகையில் ஒரு மின்னூலாக்குவது என் இலக்கு.





ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sat Jan 04, 2014 12:58 pm

6.65. கலிவெண்பா

வெண்பா விலக்கணம் ஏற்றே வரும்கலி
வெண்பாக்கீ ழெல்லை யடிபதின் மூன்றாகும்;
வெண்பாமே லெல்லையே பாவலர் உள்ளமாம்;
வெண்பா விதுவருமே இன்னிசை நேரிசை
யென்றே இருவகை; ஈரடிக் கோரெதுகை
ஒன்றிட மோனை பொழிப்பில் வருவதாம்;
நண்ணி எதுகையில் ஒன்றும் இரண்டடிக்
கண்ணி யெனவும் அழைக்கப் படுமே.
தனிச்சொல் பெறுவது நேரிசை யாகும்
தனிச்சொல் பெறாததே இன்னிசை யாகுமே;
தூது உலாமடல் போன்ற பிரபந்தம்
ஓதும் கலிவெண்பா நேரிசை யாகும்;
திருவா சகத்தின் சிவபுராணம் மற்றும்
பெரிய சிறிய திருமடல் நூலில்
விரியுமே இன்னிசை யே.


நேரிசைக் கலிவெண்பாச் சான்று
’தமிழ்விடு தூது’, இயற்றியவர்: மதுரைச் சொக்கநாதர்
(268 கலிவெண்பாக் கண்ணிகளில் முதல் ஏழும் இறுதியும்)


சீர்கொண்ட கூடற் சிவராச தானிபுரந்
தேர்கொண்ட சங்கத் திருந்தோரும் - போர்கொண் 1

டிசையுந் தமிழரசென் றேத்தெடுப்பத் திக்கு
விசையஞ் செலுத்திய மின்னும் - நசையுறவே 2

செய்யசிவ ஞானத் திரளேட்டி லோரேடு
கையி லெடுத்த கணபதியும் - மெய்யருளாற் 3

கூடல் புரந்தொருகாற் கூடற் புலவரெதிர்
பாடலறி வித்த படைவேளும் - வீடகலா 4

மன்னுமூ வாண்டில் வடகலையுந் தென்கலையும்
அன்னைமுலைப் பாலி னறிந்தோறும் - முன்னரே 5

மூன்றுவிழி யார்முன் முதலையுண்ட பிள்ளையைப்பின்
ஈன்றுதரச் சொல்லி னிசைத்தோருந் - தோன்றயன்மால் 6

தேடிமுடி யாவடியைத் தேடாதே நல்லூரிற்
பாடி முடியாப் படைத்தோரும் - நாடிமுடி 7
... ... ...

துறவாதே சேர்ந்து சுகாநந்த நல்க
மறவாதே தூதுசொல்லி வா. 268

***

இன்னிசைக் கலிவெண்பாச் சான்று
’சிறிய திருமடல்’, இயற்றியவர்: திருமங்கை ஆழ்வார்
(77 கலிவெண்பாக் கண்ணிகளில் முதல் ஏழும் இறுதியும்)


காரார்வரை கொங்கை கண்ணர் கடலுடுக்கை
சீரர்சுடர் சுட்டி செண்களுழிப்பெராற்று 1

பெராரமார்பின் பெருமாமழைக்குந்தல்
நீராரவெலி நிலமண்கை யென்னுமிப் 2

பாரூர் சொலப்பட்ட மூன்றன்றெ அம்மூன்றும்
ஆரயில்தானெ அரம்பொருளின்பமென்று 3

ஆராரிவற்றினிடையதனை எய்துவார்
சீரார் இருகலயும் எய்துவர் சிக்கெனமது 4

ஆரானுமுண்டெம்பால் என்பதுதானதுவும்
ஒராமையன்றெ? உலகதார் சொல்லும்சொல் 5

ஒராமையாமாரதுவுரைக்கெங்கெளாமெ
காரார்ப்புரவியெழ் பூந்ததனியாழி 6

தெரார் நிரைகதிரொன் மண்டலதைக்கெண்டு புக்கு
ஆரா வமுதமண் கய்தி அதுனின்றும் 7
... ... ...

ஊரா ரிகழினும் ஊரா தொழியேன்நான்
வாரார்பூம் பெண்ணை மடல். 77

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sat Jan 11, 2014 6:11 pm

6.80. வெண்பா வினங்கள்

(வெண்டுறை)
வெண்பா விலக்கணம் தழுவியோ வழுவியோ
வெண்டளை யியங்கியோ வேற்றளை விரவியோ
அடிகள் சீர்களில் அதுவாய்ப் பலவாய்
இடையில் முடிவில் சீர்குன்றி
ஒன்றும் ஒன்றா ஒலியோடே
குன்றி வரும்வெண் பாவினமே.

வெண்பா வினம்வரும் வெண்டுறை வெண்டா ழிசைவெளி விருத்தமென
வெண்குறட் பாவரும் குறள்வெண் செந்துறை குறட்டா ழிசையெனவே
வெண்டா ழிசையில் ஒலியொத் துவரின் வெள்ளொத் தாழிசையாம்
வெண்டுறை யிலுமே ஓரொலி வேற்றொலி விதமுண்டே
வெளிவிரு தத்தில் தனிச்சொல் அதுவே அடிதோறும்.


துறையெனச் சொன்னால் தத்தம் பாவகை யொழுக்கில் துறைபோல் நிற்பதுவாம்
துறைபோல் தத்தம் பாவியல் பெல்லாம் வந்தும் ஒடுங்கியே நிற்பதுவாம்
தாழம் பட்ட ஓசை யோடு வருதல் தாழிசையாம்
தாழம் என்றால் தாமசம் மந்தம் தாழ்வு எனப்பொருளாம்
விருத்தம் தத்தம் பாவடி அளவின் மிக்கு வருவதுவாம்
விருத்தம் தத்தம் பாவகை யிலக்கணம் பொதுவில் பெறுவதில்லை.

6.81. குறள் வெண்செந்துறை

ஒழுகிய ஓசையின் ஒத்தடி இரண்டாய்
விழுமிய பொருளது வெண்செந் துறையே.
--யாப்பருங்கலம்

எவ்வகைச் சீரும் தளையும் ஈரடி அளவொத்தே
செவ்விதின் முடிவன வெல்லாம் குறள்வெண் செந்துறையே.


எதுவோ முதலடிச் சீர்களின் எண்ணிக்கை
அதுவே அடுத்தடி வருவது அளவொத்தல்.

பொதுவில் நாலசைச் சீர்கள் காண்பதிலை
அதிகம் நாற்சீர் அளவடி யேகாண்போம்.

நேரிய இசையும் சீரிய பொருளும் பெறவரும் குறள்வெண் செந்துறையின்
வேறு பெயர்களாம் வெள்ளைச் செந்துறை அல்லது வெறுமே செந்துறையாம்.

பொருளின் விழுமம் பற்றியே இலக்கணம் குறையச் செந்துறை எனப்பெயராம்
பொருளின் விழுமம் பற்றித் தொடைகள் இலாதது செந்தொடை என்பதுபோல்.

செந்துறைப் பாட்டு செந்துறை வெள்ளை எனவும் பெயர்பெறுமே
இந்த நாளில் எவ்வகைப் பொருளும் தாங்கும் செந்துறையே.

பொதுவில் பொருளது முடியும் ஈரடியில்
அதுவே இன்று நீளும் பலவடியே.

முதலில் வந்த குறள்வெண் செந்துறைப் பாக்களையே
எதுகை மோனை ஓசை நோக்கி எழுதிலையே.

சான்று
ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
ஓதலிற் சிறந்தன் றொழுக்க முடைமை.
--முதுமொழிக் காஞ்சி.


ஆசான் பசுபதி நூலது செந்துறை பின்னாள் வளம்பெறுமே
பேசும் எதுகையும் மோனையும் ஒழுங்கில் வரவே எனக்காட்டும்.
(’கவிதை இயற்றிக் கலக்கு’, பக்.84)

சான்றுகள்
ஆத்தி சூடி யமர்ந்த தேவனை
ஏத்தி யேத்தித் தொழுவோ மியாமே.

கொன்றை வேந்தன் செல்வ னடியினை
என்று மேத்தித் தொழுவோ நாமே.
--ஔவையார்

நன்றி யாங்கள் சொன்னக்கால் நாளு நாளு நல்லுயிர்கள்
கொன்று தின்னும் மாந்தர்கள் குடிலஞ் செய்து கொள்வாரே.
--யாப்பருங்கலம்


எண்ணில் அளவொத்த சீர்கள் பயில
எண்ணில் இரண்டே அடிகள் வந்திடும்
செந்தொடை பின்னாள் பலவடி நீள
வந்து நிற்கும் சான்றுகள் கீழே
இவ்வகைப் பாக்களில் பொதுவில் எதுகை
செவ்விதின் அமையும் ஈரடிக் கொன்றென.

இரண்டடியின் மிக்க செந்துறைச் சான்றுகள்
1. அடியெதுகையின்றிப் பொழிப்பு மோனை பயின்றது


தேன்பெருகுஞ் சோலை தென்னன் வளநாடு
வாழை வடக்கீனும் வான்கமுகு தெற்கீனும்
கட்டுக் கலங்காணும் கதிருழக்கு நெற்காணும்
பஞ்சங் கிடையாது பாண்டி வளநாட்டில்.
--அல்லியரசாணிமாலை


2. அடியெதுகையும் பொழிப்பு மோனையும் பயின்றது

பார்புகழ் நோபல் பரிசுவென்று பாரதத்தில்
பேர்பெற்ற ராமனது பேச்சில் நகையிழையும்
விருந்துக்குச் சென்றிருந்தார் விஞ்ஞானி ஓர்நாள்
அருந்தவோர் அரியமது அளித்தனர் யாவர்க்கும்
மதுக்கிண்ணம் பார்த்ததுமே மறுத்துவிட்டார் ராமன்
இதற்கென்ன காரணம் என்றவர்க்(கு) உரைத்தார்
ராமன்விளை வைஸோம ரசத்தில் ஆயலாம்
ஸொமரசம் செய்விளைவை ராமனிடம் அன்று!

--பசுபதி

*****

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Thu Jan 23, 2014 9:13 am

6.82. குறள் வெண்செந்துறை வளர்ச்சி

அளவொத்த அடிகள் இரண்டில் அமையும் குறள்வெண் செந்துறை
அளவின் வசதியால் அழகாய் வளரும் சாதனை செய்ததே.

ஆசான் பசுபதி நூலது செந்துறையின் பின்னாள் வளர்ச்சியில்
பேசும் எதுகையும் மோனையும் ஓசையும் ஒருங்கே வந்ததை விரித்திடுமே.
(’கவிதை இயற்றிக் கலக்கு’, பக்.84)

தோற்றம்
தோன்றிய போது அளவடி யிரண்டில்
எதுகை மோனை யின்றிய மைந்ததே.

சான்று:
ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
ஓதலிற் சிறந்தன் றொழுக்க முடைமை.
--முதுமொழிக் காஞ்சி.

எதுகை மோனையுடன்
அடியெது கையுடன் பொழிப்பில் மோனையும்
திடம்பட அமைந்தன பின்னெழு பாக்களிலே.

சான்றுகள்
ஆத்தி சூடி யமர்ந்த தேவனை
ஏத்தி யேத்தித் தொழுவோ மியாமே.

கொன்றை வேந்தன் செல்வ னடியினை
என்று மேத்தித் தொழுவோ நாமே.
--ஔவையார்

பொழிப்பு மோனையுடன்
எதுகை அடியில் ஏதும் இன்றி
பொழிப்பில் மோனையிற் போனதும் உண்டே.

சான்றுகள்
எழுத்தறி வித்தவன் இறைவ னாகும்
கல்விக் கழகு கசடற மொழிதல்
செல்வர்க் கழகு செழுங்கிளை தாங்குதல்
மந்திரிக் கழகு வரும்பொருள் உரைத்தல்
--அதிவீரராம பாண்டியர், வெற்றிவேட்கை

தேன்பெருகுஞ் சோலை தென்னன் வளநாடு
வாழை வடக்கீனும் வான்கமுகு தெற்கீனும்
கட்டுக் கலங்காணும் கதிருழக்கு நெற்காணும்
பஞ்சங் கிடையாது பாண்டி வளநாட்டில்.
--அல்லியரசாணிமாலை

பொழிப்பு எதுகையுடன்
எதுகை அடியில் எதுவும் இன்றி
பொழிப்பில் எதுகையின் வழக்கும் உண்டே.

சான்றுகள்
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
ஆலயம் தொழுவது சாலவும் நன்று
இல்லறம் அல்லது நல்லறம் அன்று
ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்.
--ஔவையார், கொன்றை வேந்தன்

ஆனைகட்டுந் தூராகும் வானமுட்டும் போராகும்
எட்டுத் திசைகளையும் கட்டியர சாள்வானாம்

சிந்தடி, குறளடிக் குறள்வெண் செந்துறைகள்
அளவொத்தே அடிகள் பயில்வதால்
அளவடிக் கீழும் அமையுமே.

அறம்பொரு ளின்பம் பெறும்பயனாம்
ஆன்றோர் உரையே அறமாகும்
இன்சொல் அன்புக் கிருப்பிடமாம்
ஈருளங் கலந்த தில்லறமாம்
உண்மையே ஒழுக்கத் துரைகல்லாம்
ஊரவர் வாழ்வுக் குறுதுணைசெய்.
--புலவர் குழந்தை

அறஞ்செய விரும்பு
ஆறுவது சினம்
இயல்வது கரவேல்
ஈவது விலக்கேல்
--ஔவையார், ஆத்திசூடி

கண்ணிகள் போல்
(வெண்டுறை)
ஈரடி யளவொத்தே சீர்கள் ஓசையில்
நாரினில் இருமலராய் நின்றே - சீரிய
தனிச்சொல் அமைந்தோ அமையாமலோ ஈற்றடி
குனிந்தோ அளவொத்தோ வரும்செய்யுற் கண்ணிகள்
குறள்வெண் செந்துறை உருவினை யொட்டியே
பிறந்தன என்பர் இன்று.

சான்றுகள்
நன்றி யாங்கள் சொன்னக்கால் நாளு நாளு நல்லுயிர்கள்
கொன்று தின்னும் மாந்தர்கள் குடிலஞ் செய்து கொள்வாரே.
--யாப்பருங்கலம்

பேராப் பெரும்பகை தீரப் பிறவேந்தர்
ஊராக் குலிச விடையூர்ந்தான் - சோராத்

துயில்காத்து அரமமகளிர் சோர்குழை காத்தும்பர்
எயில்காத்த நேமி இறையோன்
--மூவருலா: குலோத்துங்க சோழனுலா, கண்ணிகள் 3-4

ஆங்கார முள்ளடங்கி யைம்புலனைச் சுட்டறுத்துத்
தூங்காமல் தூங்கிச் சுகம்பெறுவ தெக்காலம்? .. 2
--பத்ரகிரியாரின் மெய்ஞ்ஞானப் புலம்பல்

கட்டளை அடிகள்
அடிகளில் ஒற்றுகள் கணக்கிடாத எழுத்துகள் எண்ணிக்கை யொன்றி
அடிச்சீர் நிரலோர் வாய்பாடில் அமைவது கட்டளை யடிகளாம்.

கட்டளை யடிகளாய் மாலை மாற்றாய்ச் சம்பந்தர் அருளிய
எட்டும் மூன்றும் பாவரும் பதிகம் குறள்வெண் செந்துறையே.

யாமா மாநீ யாமாமா யாழீ காமா காணாகா
காணா காமா காழீயா மாமா யாநீ மாமாயா ... 1
--சம்பந்தர், மாலைமாற்றுப் பதிகம்

சுப்ரமண்ய பாரதியார்
பாரதியின் பாக்கள் பலவற்றில் பயிலுமே
ஆரமாய் ஈரடிக் குறள்வெண் செந்துறையே.

வானில் பறக்கின்ற புள்ளெலாம்நான்;
மண்ணில் திரியும் விலங்கெலாம்நான்;
கானில் வளரும் மரமெலாம்நான்,
காற்றும் புனலும் கடலுமேநான்.
--இரட்டைக் குறள்வெண் செந்துறை

கூலிமிகக் கேட்பார் கொடுத்ததெலாம் தாம்மறப்பார்
வேலைமிக வைத்திருந்தால் வீட்டிலே தங்கிடுவார்
ஏனடாநீ நேற்றைக் கிங்குவர வில்லையென்றால்
பானையிலே தேளிருந்து பல்லால் கடித்ததென்பார்;
--கண்ணன் என் சேவகன்

பாரதியின் பாக்களில் வெண்டளை பயின்று
சாரத்தில் வெண்பாவாய் அமைவது காண்க.

குயில்பாட்டில் பாஞ்சாலி சபதத்தின் பகுதிகளில்
பயில்வது செந்துறையே என்பார் குழந்தையார்.
[புலவர் குழந்தையின் ’தொடையதிகாரம்’, பக்.65]

பொருள மைதியோ டெளிதில் பாடுதற் கேற்ற செய்யுளுருக்
குறள்வெண் செந்துறையே அம்மானைப் பாக்களில் என்பார் குழந்தையார்.

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Wed Jan 29, 2014 11:04 am

6.84. குறட்டாழிசை

குறள்வெண் பாவினம் இரண்டாம் குறள்வெண் செந்துறை தாழிசையே
குறட்டா ழிசையே மூவகை வருமே.

வகை 1. முதலடி பலசீர் ஈற்றடி குறைசீர்

அடியிரண் டாகி நாற்சீ ரின்மிகு பலசீர் கொண்டே முதலடியும்
அடியிரண் டில்சீர் குறைவரும் வகைக்குறட் டாழிசையே. ... 1.

சான்று:
நண்ணு வார்வினை நைய நாடொறும் நற்ற வர்க்கர சாய ஞானநற்
கண்ணி னானடி யேயடி வார்கள் கற்றவரே.
--யாப்பருங்கலம்

பரசு பாணியர் பாடல் வீணையர் பட்டி னத்துறை பல்லவ னீச்சரத்
தரசு பேணிநின் றாரிவர் தன்மை யறிவாரார்.
--சம்பந்தர் தேவாரம், 3.112.1.

வகை 2. சிதைந்த குறள்வெண்பா

குறள்வெண் பாவில் வேற்றுத் தளைமிகக்
குறட்டா ழிசைவகையா கும். ... 2.

சான்று (யாப்பருங்கலம்):
வண்டார்பூங் கோதை வரிவளைக்கைத் திருநுதலாள்
பண்டைய லல்லள் படி.
(முதலடி ஈற்றில் கலித்தளை வந்தது)

தண்ணந் தூநீர் ஆடச் செய்த
வண்ண ஓதி கண்.
(அனைத்தும் ஆசிரியத்தளை)

வகை 3. சிதைந்த குறள் வெண்செந்துறை

விழுமிய பொருளும் ஒழுகிய ஓசையும் இல்லாக் குறள்வெண் செந்துறையில்
விழுப்பமில் திண்ணிய பொருளுடன் சிதைந்தே வரும்வகை குறட்டா ழிசையே. ... 3.

விழுமிய திண்ணிய பொருள்வகை யெல்லை மாறிய விந்நாளில்
பழுதுள குறள்வெண் செந்துறை தாழிசை வேற்றுமை அரிதே.

சான்று (யாப்பருங்கலம்):
அறுவர்க் கறுவரைப் பெற்றுங் கவுந்தி
மறுவறு பத்தினி போவையி னீரே.

என்னே செல்லுதி வாழி நங்காய்
பொன்னே சொல்லுவன் போகு நங்காய்

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Fri Feb 07, 2014 10:05 am

6.86. வெண்டுறை

அளவடி நாற்சீர் கொண்டோ அதனின் மிக்கோ
அளவில் மூன்றடி முதலே ஏழின் மிகாதே
முன்னடி களினும் பின்னடி களின்சீர் முறையாய்
ஒன்றோ மேலோ குன்றி வருவதே
வெண்டுறை யிலக்கண மென்ப தறிக.

முன்னடி களினும் பின்னடிச் சீர்கள், இடையிடை
அன்று, முறையாய்க் குறைந்தே வெண்டுறை வருமே
அடிகளில் ஓரொலி வந்தால் ஓரொலி வெண்டுறை
அடிச்சீர் குன்றும் பின்னடி களிலே
வேறொலி வந்தால் வேற்றொலி வெண்டுறை.


சான்றுகள்: ஓரொலி வெண்டுறை
(மூன்றடி)
தாளாள ரல்லாதார் தாம்பலராயக்கா லென்னா மென்னாம்
யாளியைக் கண்டஞ்சி யானைதன் கோடிரண்டும்
பீலிபோற் சாய்த்துவிடும் பிளிற்றி யாங்கே.
--யா.கா.

(நான்கடி)
குழலிசைய வண்டினங்கள் கோழிலைய செங்காந்தட் குலை மேற்பாய
அழலெரியின் மூழ்கினவா லந்தோ வளியவென் றயல்வாழ் மந்தி
கலுழ்வனபோ னெஞ்சழிந்து கல்லருவி தூஉம்
நிழல்வரை நன்னாட னீப்பானோ வல்லன்.
--யா.கா.

(ஐந்தடி)
வெறியுறு கமழ்கண்ணி வேந்தர்கட் காயினும்
உறவுற வரும்வழி யுரைப்பன வுரைப்பன்மற்
செறிவுறு தகையினர் சிறந்தன ரிவர்நமக்
கறிவுறு தொழிலரென் றல்லவை சொல்லன்மின்
பிறபிற நிகழ்வன பின்.
--யா.கா.

சான்றுகள்: வேற்றொலி வெண்டுறை
(நான்கடி)
அருணையதிரும் கழலாறணுசெஞ் சடையாளர் அரிவை பாகர்
கருணைநெடுங் கடலான்பெரு மானார்தா டொழுதார் நதியை நாடின்
மரணமிலா இமையவர்தம் வானுலகம் அன்றே
பொருணிரையும் நான்மறையோர் புகலுமத்தாட் பூவே.
--பசுபதி, க.இ.க.

(ஐந்தடி)
கல்லாதார் நல்லவையுட் கல்லேபோற் சென்றிருந்தாற் கருமம் யாதாம்
இல்லாதார் செல்வரைக்கண் டிணங்கியே ஏமுற்றால் இயைவ தென்னாம்
பொல்லாதார் நன்கலன்கள் மெய்புடையப் பூண்டாலும் பொலிவ தென்னாம்
புல்லாதார் பொய்க்கேண்மை புனைந்துரைத்தால் ஆவதென்னே
அல்லாதார் பொய்யாவ தறிபவேல் அமையாதோ?
--யா.கலம்.

(ஆறடி)
முழங்கு களியானை மூரிக் கடற்படை முறித்தார் மன்னர்
வழங்கும் இடமெல்லாம் தன்புகழே போக்கிய வைவேல் விண்ணன்
செழுந்தண்பூம் பழைசையுட் சிறந்துநா ளுஞ்செய
எழுந்தசே திகத்துள் இருந்தவண் ணல்லடி
விழுந்தண்பூ மலர்களால் வியந்துநா ளுந்தொழத்
தொடர்ந்துநின் றவ்வினை துறந்துபோ மாலரோ.
--யா.கலம்.

(ஏழடி)
முழங்குதிரைக் கொற்கை வேந்தன் முழுதுலகும் ஏவல்செய முறைசெய்கோமான்
வழங்குதிறல் வாள்மாறன் மாச்செழியன் றாக்கரிய வைவேல் பாடிக்
கலங்கிநின் றாரெலாம் கருதலா காவணம்
இலங்குவாள் இரண்டினால் இருகைவீ சிப்பெயர்ந்
தலங்கல்மா லையவிழ்ந் தாடவா டும்மிவள்
புலங்கொள்பூந் தடங்கட்கே புரிந்துநின் றாரெலாம்
விலங்கியுள் ளந்தப விளிந்துவே றாபவே.
--யா.கலம்.

*****


சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Fri Feb 07, 2014 10:09 am

பயனுள்ள தகவலுடைய இந்தப் பதிவை தொடர்வதற்கு மிக்க நன்றி..

அனைத்தையும் ஒரு pdf புத்தக வடிவில் நம் ஈகரை நூலகத்தில் வைத்தால் அனைவருக்கும் பயன்படும்...



சதாசிவம்
கவிதையில் யாப்பு - Page 27 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Thu Feb 13, 2014 9:29 am

6.88. வெண்டாழிசை

சிந்தியல் வெண்பாவில் வெண்டளை பிறழ்ந்தே
வந்தமூன் றடியில் வெண்பாபோல் ஈற்றடி
வந்துமுடி வதுவெண்டா ழிசை.

ஒருபொருள்மேல் வெண்டாழிசை யடுக்கி மூன்றோ
இரண்டோ ஒன்றோவரும்; சிந்தியல்வெண் பாமூன்று
வரினது வெள்ளொத் தாழிசை.


சான்றுகள்: வெண்டாழிசை
(வெண்டளை பிறழ்ந்தது)
போதார் நறும்பிண்டிப் பொன்னார் மணியணையான்
தாதார் மலரடியைத் தணவாது வணங்குவார்
தீதார் வினைகெடுப்பார் சிறந்து.
--யா.கலம்.

(ஆசிரியத்தளை)
நன்பி தென்று தீய சொல்லார்
முன்பு நின்று முனிவ செய்யார்
அன்பு வேண்டு பவர்.
--யா.கலம்.

(கலித்தளை)
சீர்கொண்ட கருங்கடலிற் றிரைமுகந்து வலனேந்திக்
கார்வந்த ததனோடும் கமழ்குழலாய் நிற்பிரிந்தார்
தேர்வந்த திதுகாணாய் சிறந்து.
--யா.கலம்.

(வஞ்சித்தளை)
முழங்குகடல் முகந்த மூரிக் கொண்மூத்
தழங்குகுரல் முரசிற் றலைசிறந் ததிர்ந்து
வழங்கின‍இவை காணாய் வந்து.
--யா.கலம்.

(ஒரு பொருள்மேல் மூன்றடுக்கி வந்த சிந்தியல் வெண்பாக்கள்)
அன்னாய் அறங்கொல் நலங்கிளர் சேட்சென்னி
ஒன்னார் உடைபுறம் போல நலம்கவர்ந்து
துன்னான் துறந்து விடல்.

ஏடி அறங்கொல் நலங்கிளர் சேட்சென்னி
கூடார் உடைபுறம் போல நலங்கவர்ந்து
நேடான் துறந்து விடல்.

பாவாய் அறங்கொல் நலங்கிளர் சேட்சென்னி
மேவார் உடைபுறம் போல நலங்கவர்ந்து,
காவான் துறந்து விடல்’
--யா.கலம்.

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Thu Feb 20, 2014 9:36 am

6.90. வெள்ளொத்தாழிசை

சிந்தியல் வெண்பா ஒருபொருள்மேல் மூன்றடுக்கி
வந்ததுவெள் ளொத்தா ழிசையென வாகும்

ஒருபொருள்மேல் மூவெண்பாக் கூட்டு.

வெண்பாவை யொத்துவந்த தாழிசை யென்பதால்
வெண்பாமூன் றும்வெள்ளொத் தாழிசை யாகும்
பொதுவிலிவை இன்னிசைவெண் பா.

மூன்றுமேவெண் பாவெனில் தாழிசைப் பேரேனோ?
பஃறொடைபோ லின்றி இடையிடை சிந்தடியாய்
ஓசையது தாழ்வதாலிப் பேர்.

சான்றுகள்:
அன்னாய் அறங்கொல் நலங்கிளர் சேட்சென்னி
ஒன்னார் உடைபுறம் போல நலம்கவர்ந்து
துன்னான் துறந்து விடல்.

ஏடி அறங்கொல் நலங்கிளர் சேட்சென்னி
கூடார் உடைபுறம் போல நலங்கவர்ந்து
நேடான் துறந்து விடல்.

பாவாய் அறங்கொல் நலங்கிளர் சேட்சென்னி
மேவார் உடைபுறம் போல நலங்கவர்ந்து,
காவான் துறந்து விடல்’
--யா.கலம்.

அம்பேருண் கண்ணார்க் கழிந்த மடநெஞ்சே !
கொம்பே றுடையான் கழலிறைஞ்சா தென்கொலியாம்
வம்பே இறந்து விடல்.

வாணேருண் கண்ணார்க் கழிந்த மடநெஞ்சே !
நீணாகம் பூண்டான் கழலிறைஞ்சா தென்கொலியாம்
வீணே இறந்து விடல்.

கோளாருண் கண்ணார்க் கழிந்த மடநெஞ்சே !
ஆளாக ஆண்டான் கழலிறைஞ்சா தென்கொலியாம்
வாளா இறந்து விடல்.

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Tue Feb 25, 2014 9:35 am

6.92. வெளிவிருத்தம்

சீரைந் தாகி நெடிலடி பயிலும் - வெளிவிருத்தம்
சீரைந்தில் ஒரேதனிச்சொல் அடிதோறும் பயிலும் - வெளிவிருத்தம்
ஓரெதுகை மூன்றடியோ நாலடியோ பயின்றுவரும் - வெளிவிருத்தம்.

இருவகையாம் பொருள்முடிந்தால் அடிமறி மண்டில வெளிவிருத்தம்
பொருளதுவே அடிதோறும் தொடர்ந்தா லதுநிலை - வெளிவிருத்தம்
இருவகையும் இன்று இல்லையே வழக்கில் - வெளிவிருத்தம்!


சான்றுகள்: அடிமறி மண்டில வெளிவிருத்தம்
(அடிமாறினும் பொருள் மாறாத வகை)

மூன்றடி
உற்ற படையினார் பெற்ற பகையினார் - புறாவே
பெற்றம் உடையார் பெருஞ்சிறப் பாண்டகை - புறாவே
மற்றை யவர்கள் மனையிற் களிப்பதோ - புறாவே!
--யா.கலம்.

ஆடு கழைகிழிக்கும் அந்தண் புயலிற்றே - எந்தைகுன்றம்
நீடு கழைமேல் நிலாமதியம் நிற்குமே - எந்தைகுன்றம்
கூடு மழைதவழும் கோடுயர் சந்தமே - எந்தைகுன்றம்.
--யா.கலம்.

நான்கடி
சொல்லல் சொல்லல் தீயவை சொல்லல் - எஞ்ஞான்றும்
புல்லல் புல்லல் தீநெறி புல்லல் - எஞ்ஞான்றும்
கொல்லல் கொல்லல் செய்நலம் கொல்லல் - எஞ்ஞான்றும்
நில்லல் நில்லல் நீசரைச் சார்ந்தங் - கெஞ்ஞான்றும்.
--யா.கலம்.

ஆவா என்றே அஞ்சினர் ஆழா௧ - ஒருசாரார்
கூகூ என்றே கூவிளி கொண்டார் - ஒருசாரார்
மாமா என்றே மாய்ந்தனர் நீந்தார் - ஒருசாரார்
ஏகிர் நாய்கீர் என்செய்தும்த் என்றார் - ஒருசாரார்.
--யா.கலம்.

சேயரி நாட்டமும் செவ்வாயும் அல்குலுமோ - அம்மானாய்
ஆய்மலரும் தொண்டையும் ஆழியந் திண்டேரும் - அம்மானாய்
மாயிருந் தானை மயிடன் றலையின்மேல் - அம்மானாய்
பாயின சீறடிப் பாவை பகவதிக்கே - அம்மானாய்!
--யா.கலம்.

சான்றுகள்: நிலை வெளிவிருத்தம்
(பொருள் மாறுவதால் அடி மாறா வகை)

மூன்றடி
ஏதங்கள் நீங்க எழிலிளம் பிண்டிக்கீழ் - புறாவே
வேதங்கள் நான்கும் விரித்தான் விரைமலர்மேற் - புறாவே
பாதம் பணிந்து பரவுதும் பல்காலும் - புறாவே!

நான்கடி
வெஞ்சமன் அஞ்ச வேலொடு எதிர்ந்தால் - நமரங்காள்
அஞ்சல் எனுஞ்சொல் ஆர்சொல வல்லார்? - நமரங்காள்
மஞ்சிவர் இஞ்சி மன்றம் இறைஞ்சீர் - நமரங்காள்
நஞ்சம் அயின்றவர் நல்குவர் மாதோ நமரங்காள்.

*****
வெண்பா வெண்பாவின இயல் முற்றியது.


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Tue Mar 18, 2014 7:38 am

7.00. ஆசிரியப்பா
(ஆசிரியத் தாழிசை, ஆசிரியப்பா)

ஆசிரியம் ஆசிரியப்பா அகவற்பா என்று
மூவகைப் பெயர்பெறும் முதற்பா வகைக்கு
அப்பெயர் அமைந்திடக் காரணம் என்ன?

பாக்களில் மிகவும் பழமை யானது
ஆக்குதற் கெளிய ஆசிரியப் பாவினில்
அகவல் ஓசை ஒலிக்க அகவற்பா.

அகம்புற நானூறு குறுந்தொகை நற்றிணை
அகமே துறந்து அமுதம் சுரந்த
மணிமே கலைபோல் சங்கப் பனுவலில்
அணிமிகு ஆசிரியம் அகவிக் கேட்குமே.

ஆசிரியன் என்பவர் ஆசான் ஆவதால்
ஆசிரிய நோக்கினில் ஆக்கும் பாவாகி
ஆசிரியம் ஆனதோ அகவற் பாவே?

அகம்புற நானூறு குறுந்தொகை நூல்களில்
அகம்புறம் பொருளில் ஆசான் நோக்கினில்
புரவலன் புகழைப் புலவோர் பலரும்
பரவிப் பாடி யாசீர் வதிக்க
அகவற் பாவும் ஆசிரியம் ஆனதே.

ஆசு என்பது பூசுதல் ஆயினும்
மாசு எனவும் மற்றுமோர் பொருளுண்டு.
ஆசினை இரித்தல் என்றே சொன்னால்
மாசினை நீக்குதல் என்றே பொருள்படும்.
ஆசிரியம் இப்படி ஆசிரித்த பாவாம்.

இலக்கணம் வருமுன் இலக்கியம் இருந்ததால்
இலக்கியம் இருந்த காலத்தில் எழுதிய
இலக்கண ஆசுடைப் பாக்களி லிருந்து
ஆசினை இரித்தொரு பாவடி வாக்க
ஆசிரி யப்பா பிறந்தது என்று
பேசுவார் ஒருவர் யோசனை செய்தே.
[http://venbaaeluthalaamvaanga.blogspot.in/2009/08/blog-post_25.html]

ஆசு என்பது சிறிது நுண்ணிது
ஆசிரியப் பாவில் சீரில் பொருளில்
ஓசையில் நுட்பம் ஓர்த்து வந்து ... [ஓர்த்து=எண்ணி, ஆராய்ந்து]
ஆசிரியன் போல அறிவிப்ப தாலே
ஆசிரியம் எனும்பெயர் காரணக் குறியென
யாப்பருங் கலநூல் விளக்கம் கூறும்.

*****

Sponsored content

PostSponsored content



Page 27 of 29 Previous  1 ... 15 ... 26, 27, 28, 29  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக