புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கவிதையில் யாப்பு - Page 25 Poll_c10கவிதையில் யாப்பு - Page 25 Poll_m10கவிதையில் யாப்பு - Page 25 Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
கவிதையில் யாப்பு - Page 25 Poll_c10கவிதையில் யாப்பு - Page 25 Poll_m10கவிதையில் யாப்பு - Page 25 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
கவிதையில் யாப்பு - Page 25 Poll_c10கவிதையில் யாப்பு - Page 25 Poll_m10கவிதையில் யாப்பு - Page 25 Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
கவிதையில் யாப்பு - Page 25 Poll_c10கவிதையில் யாப்பு - Page 25 Poll_m10கவிதையில் யாப்பு - Page 25 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கவிதையில் யாப்பு - Page 25 Poll_c10கவிதையில் யாப்பு - Page 25 Poll_m10கவிதையில் யாப்பு - Page 25 Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
கவிதையில் யாப்பு - Page 25 Poll_c10கவிதையில் யாப்பு - Page 25 Poll_m10கவிதையில் யாப்பு - Page 25 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
கவிதையில் யாப்பு - Page 25 Poll_c10கவிதையில் யாப்பு - Page 25 Poll_m10கவிதையில் யாப்பு - Page 25 Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
கவிதையில் யாப்பு - Page 25 Poll_c10கவிதையில் யாப்பு - Page 25 Poll_m10கவிதையில் யாப்பு - Page 25 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதையில் யாப்பு


   
   

Page 25 of 29 Previous  1 ... 14 ... 24, 25, 26, 27, 28, 29  Next

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Thu Nov 08, 2012 8:38 am

First topic message reminder :

யாப்பிலக்கணம்: ஒரு கவிதை அறிமுகம்
ரமணி, ஆகஸ்ட்-செப்டம்பர், 2012

இந்தத் தொடர் ஒரு சோதனை முயற்சி.
தொடரின் நோக்கம் கற்றுத் தருவதைவிடப் பகிர்ந்துகொள்வது.
கடந்த சில நாட்களாக நான் யாப்பிலக்கணம் பயில இறங்கி, அது இன்னும் தொடரும்போதே,
என் முயற்சியில் நான் பெற்ற செய்திகளை, மகிழ்வினை, வியப்புகளை, திருப்தியை
வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வது முதல் நோக்கம்.

யாப்பிலக்கணத்தை உரைநடையில் தரும்போது நேரிடும் மித மிஞ்சிய சொற்களின் அளவைக் குறைத்து
எளிதில் படித்து, பார்த்து, நினைக்க உதவும் வகையில்
கவிதை வரிகளில் தருவது தொடரின் இரண்டாவது நோக்கம்.

அப்படித் தரும்போது அது வாசகர்களுக்குப் பயன்தந்து, பிற நூல்களின் மூலம்
யாப்பிலக்கணம் மேலும் நன்கு பயில ஊக்கம் அளிக்கும் என்ற நம்பிக்கை மூன்றாவது நோக்கம்.

யாப்பின் ஒழுங்கில், இன்றைய வழக்கில் கவிதை புனைவது
வேறு விதத்தில் எழுதுவது போன்றே எளிதில் வருவது,
அதைவிட அதிகப் பெருமையும் திருப்தியும் தருவது
என்று இத்தொடரில் காட்டிட முயல்கிறேன்.

தொடரின் நிறை குறை பற்றிக் கவிதை ஆர்வலர்கள் அப்போதைக்கப்போதே பின்னூட்டம் இடலாம்.
வரும் பின்னூட்டங்களின் சீரிய கருத்துக்களை எடுத்தாண்டு, குறைகளைக் கூடியமட்டும் திருத்தி,
இறுதியில் எல்லோருக்கும் பயன்படும் வகையில் ஒரு மின்னூலாக்குவது என் இலக்கு.





ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sat Oct 05, 2013 4:34 pm

6.32. இன்னிசை வெண்பா என்பது

நேரிசை வெண்பா இலக்கணம் இல்லாத
வேறிசை வெண்பாக்கள் எல்லாமே இன்னிசை
பேர்பெறும் வெண்பா என.

இன்னிசை வெண்பா விகற்பத்தில் ஒன்றுபல
வென்றுவரும் ஒன்றுபல வாய்த்தனிச் சொல்வர
அன்றித் தனிச்சொல்லே அற்று.


இன்னிசை வெண்பா விதங்களை நோக்கினால்
ஒன்றும் தனிச்சொல் வராத வகைகளில்
ஒன்றே எதுகை முழுதும் வருவதும்
ஒன்றின் அதிகம் எதுகை வருவதும்
என்று வகைகள் இரண்டு.

தனிச்சொல் வருகிற இன்னிசை வெண்பாத்
தனிச்சொல் அடியிரண்டில் இன்றிவே றெங்கோ
தனிச்சொல்லாய் ஒன்றுபல வென்றோ வரலாம்
தனிச்சொல் அடிதோறும் என்று வரலாம்
தனிச்சொல் அடியிரண்டில் வந்தால் விகற்பம்
இரண்டினும் மிக்கு வரும்.

தனிச்சொல் அடியிரண்டில் வந்து விகற்பத்தில்
ஒன்றோ இரண்டோ வருவதெலாம் நேரிசை
வெண்பா வகைப்படு மே.

இன்னிசை அளவியல் வெண்பாச் சான்றுகள்
ஒருவிகற்பம், தனிச்சொல் இன்றி


நடலை இலராகி நன்றுணரார் ஆய
முடலை முழுமக்கள் மொய்கொள் அவையுள்
உடலா ஒருவற் குறுதி உரைத்தல்
கடலுளால் மாவடித் தற்று.
---முன்றுரையரையனார், பழமொழி நானூறு 25

பலவிகற்பம், தனிச்சொல் இன்றி

கற்றார்முன் கல்வி உரைத்தல் மிகவினிதே
மிக்காரைச் சேர்தல் மிகமாண முன்னினிதே
எள்துணை யானும் இரவாது தானீதல்
எத்துணையும் ஆற்ற இனிது.
---பூதஞ்சேந்தனார், இனியவை நாற்பது 16

பலவிகற்பம், இரண்டாம் அடியில் தனிச்சொல்லுடன்

அங்கண் விசும்பின் அகனிலாப் பாரிக்குந்
திங்களுஞ் சான்றோரும் ஒப்பர்மன் - திங்கள்
மறுவாற்றும், சான்றோரஃ தாற்றார் தெருமந்து
தேய்வர் ஒருமா சுறின்.
---நாலடியார் 151

*****

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Fri Oct 11, 2013 6:43 pm

6.35. சிந்தியல் வெண்பா

யாப்பின் வழக்கினில் சிந்து வெனும்‍அடையில்
பாப்புனைவர் சீரோ அடியோ வரமூன்று.
சிந்துவின் ஓர்பொருள் மூன்று.

சிந்தடி யென்பது சீர்மூன்று வந்ததே
சிந்தியல் என்ப(து) அடிமூன் றியல்வதே
சிந்தடிவெண் பாவடியே மூன்று.

சிந்தியல் வெண்பா அளவடியில் வந்தாலும்
வந்தது மூன்று அடிகளே ஆயினும்
சிந்தடியே இவ்வெண்பா ஈறு.

வெண்பா வனைத்துமே சிந்தடியீற் றென்றாலும்
பண்பினில் மூன்றே அடியிதாகச் சிந்தியல்
வெண்பா பெயர்பெற் றது.


6.36. சிந்தியல் வெண்பா இலக்கணம்

வெண்பா விலக்கணம் பெற்றுவரும் சிந்தியல்
வெண்பா அளவடி ஈரடி ஈற்றடி ... [ஈரடி = இரண்டு அடி]
சிந்தடி யென்று வரும்.

விகற்பம் இரண்டொன்றோ மூன்றோ அமைந்து
வகைகளில் நேரிசை இன்னிசை யென்றிரண்டாய்ச்
சிந்தியல் வெண்பா வரும்.


நேரிசை இன்னிசைச் சிந்தியல் வெண்பாக்கள்
மேற்சொன்ன வாறு இலக்கணம் பெற்று
வகைகள் இரண்டில் வரும்.

6.37. நேரிசைச் சிந்தியல் வெண்பாச் சான்றுகள்

ஒன்றிரண்டு என்று விகற்பம் வரத்தனிச்சொல்
என்றுவரும் நேரிசைச் சிந்தியல் வெண்பாவின்
சான்றுகள் காண்போம் இனி.

அறிந்தானை ஏத்தி அறிவாங் கறிந்து
செறிந்தார்க்குச் செவ்வ னுரைப்பச் -- சிறந்தார்
சிறந்தமை ஆராய்ந்து கொண்டு.
--யா.கா.மே. 26

பாடிப் படித்துப் பயின்று பொருள்தெளிந்து
நாடி யுணர்ந்தொழுகும் நல்லவரைத் -- தேடியே
கூடி வணங்கு முலகு.
--கி.வா.ஜ., கவி பாடலாம், பக்.90

நற்கொற்ற வாயில் நறுங்குவளைத் தார்கொண்டு
சுற்றும்வண் டார்ப்பப் புடைத்தாளே -- பொற்றேரான்
பாலைநல் வாயில் மகள்.
--யா.கா.மே. 26

படைக்கலம் ஏந்தாமற் பாரித்துப் போரை
நடத்தியவன் காந்தியெனும் நல்லான் -- அடற்கெதிரே
ஆரேநின் றாற்றுகிற் பார்.
--கி.வா.ஜ., கவி பாடலாம், பக்.90

6.38. இன்னிசைச் சிந்தியல் வெண்பாச் சான்றுகள்

ஒன்றிரண்டோ மூன்றோ விகற்பம் தனிச்சொல்லே
இன்றிவரும் இன்னிசைச் சிந்தியல் வெண்பாவின்
சான்றுகள் காண்போம் இனி.

திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்
கொங்கலத்தார்ச் சென்னி குளிர்வெண் குடைபோன்றிவ்
வங்கண் உலகளித்த லான்.
--இளங்கோவடிகள், சிலப்பதிகாரம், புகார்க் காண்டம், மங்கல வாழ்த்துப் பாடல்

நறுநீல நெய்தலும் கொட்டியும் தீண்டிப்
பிறநாட்டுப் பெண்டிர் முடிநாறும் பாரி
பறநாட்டுப் பெண்ட்ட்ர் அடி.
--யா.கா.மே. 26

கண்ணன் அடியே கருதி வணங்குபவர்
எண்ணமெலாம் எண்ணியவா றீடேறும் என்பதனைத்
திண்ணமாய் நெஞ்சே அறி.
--கி.வா.ஜ., கவி பாடலாம், பக்.90

சொல்லிற்குள் ளேபொருளில் தோய்ந்துணர்வி லேயூறி
நல்லசுவை கண்டுவகை நாட்டமுடை யோர்பாவின்
இன்பமெலாம் காண்பர் இனிது.
--கி.வா.ஜ., கவி பாடலாம், பக்.90

சுரையாழ அம்மி மிதப்ப வரையனைய
யானைக்கு நீத்து முயற்கு நிலையென்ப
கானக நாடன் சுனை.
--யா.கா.மே. 26

முல்லை முறுவலித்துக் காட்டின மெல்லவே
சேயிதழ்க் காந்தள் துடுப்பீன்ற போயினார்
திண்டேர் வரவுரைக்கும் கார்.
--யா.கா.மே. 26

தெய்வந் தெளிந்தோர் சிறிதும் பிறர்க்கின்னல்
சூழாது நன்மைசெய்யும் தூயோர் அறமொன்றே
ஆற்றுவோர் நல்லோர் அறி.
--கி.வா.ஜ., கவி பாடலாம், பக்.91

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Tue Oct 15, 2013 8:19 am

6.39. சிந்தியல் வெண்பா முயற்சி

நேரிசைச் சிந்தியல் வெண்பா
கணிணியைப் போற்று கணிணியைப் போற்று
பணியது செய்திடும் பாங்கில்- அணியாம்
மணித்துளியில் வேலையாவ தால்.

உதைத்தால் பணிதொடங்கும் உட்சுமைகள் தாங்கும்
சிதைக்காது தோய்த்துத் திரையில் - கதைக்கும்
கழுதைக் கணினி யிது!
[உதைத்தால் = boot செய்தால்]

ஊக்கம் தருகிற ஏக்கம் இதுவென்றால்
தூக்கம் விடுத்துச் செயல்படலாம் - சீக்கிரமே
ஆக்கம் விழையும் மனது.

ராணி குதிரைகள் ஆனைகள் ஒட்டகம்
ஆணியுடன் ராஜாவைக் காத்தாலும் - ராணியின்
ஆற்றலோ ராஜாவின் மிக்கு.
[ஆணி = மேன்மை, ஆசை]

அழுக்குச் சுமைகளைத் தாங்கிநான்கு கால்கள்
பழுக்க நடக்கும் மவுனம் - விழுப்பில்
கழுதை கவிதைக் கனல்.
[விழுப்பு = விழுப்பம் = மேன்மை]

இன்னிசைச் சிந்தியல் வெண்பா
சித்திரம் பேசுதடி சிந்தை மயங்குதடி
முத்துச் சரங்களைப் போலேயுன் மோகனப்
புன்னகை மின்னும் முகம்.

ஆனை குதிரையை வெட்டும் குதிரையோ
சேனையின் வீரனை வீரனோ யாரையும்
மன்னனுக் கில்லையே சாவு.

கழுதையென் றானாள் வரவர மாமி
கழுதையும் தேய்ந்தது கட்டெறும்பு ஆனது
என்றபடி மாமி எறும்பு?

ஆடாத அம்மி அடிமேல் அடிநகர்ந்தே
ஆடியின் காற்றில் பறப்பதால் ஆவாளோ
அம்மி யரைப்பாள் மிடுக்கு?

காக்கைக்குத் தன்குஞ்சு ஆயினும் பொன்குஞ்சு
காக்கைக்கு அஞ்சுகுண மாய்ச்சொல்வ தாதலால்
குஞ்சுக்கும் அஞ்சு குணம்.

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Fri Oct 25, 2013 10:53 am

6.50. அளவியல் வெண்பா

யாப்பின் வழக்கில் அளவின் அடையிலே
பாப்புனை வர்நா லடியிலோ சீரிலோ
நாற்சீர் அளவடி நான்கு வருமே
அளவியல் வெண்பா விலே.

வெண்பா வெனிலே குறிக்கும் அளவியல்
வெண்பா விலக்கணம் பெற்றுவரும் நான்கு
அடிகள் இயலும் அளவியல் வெண்பா
வடிவில் வகைகளி ரண்டு.


அடியிரண் டீற்றில் தனிச்சொல் வரினே
வடிவமாம் நேரிசை அவ்விதம் ஆகா
வடிவமாம் இன்னிசை வெண்பா வெனவே
படித்தது மேல்வந் ததே. ... ... இயல் 6.30

*****

6.51. நேரிசை அளவியல் வெண்பா

அளவடி யாள்வதால் நேரிசை வெண்பா
அளவியல் நேரிசை வெண்பா - உளங்கொள
உற்றவோர் பேருடன் வெண்பா விலக்கணம்
முற்றும் இயன்று வரும்.

நேரிசை வெண்பா அளவடி நான்கிலே
சீரெட் டுவரும் தனிச்சொல்லே -- பூரணமாய்ச்
சொற்பொருள் ஓசையில் அந்தத் தனிச்சொல்லும்
நிற்கச் சிறந்து வரும்.

ஒன்றே எதுகை அடிதோறும் சீரொன்றில்
நின்ற தனிச்சொல் எதுகையும் -- ஒன்றும்பா
ஓர்விகற்ப நேரிசை வெண்பா வெனப்பெறும்
பேராம் எதுகை பொறுத்து.

முதலில் இரண்டடி யுற்ற தனிச்சொல்
எதுகை அதேவர வேறோர் - எதுகை
இரண்டு அடிகளில் பின்வந் தமையும்
இருவிகற்ப நேரிசைவெண் பா.


விகற்பவகை நேரிசை வெண்பாவே மேலும்
வகையிரண் டாகி வருமே - தகவில்
இருகுறள் ஆசிடைப் பேர்பெறும் வெண்பா
இரண்டின் விளக்கம் பிறகு.

*****

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Thu Oct 31, 2013 7:51 pm

6.52. ஒருவிகற்ப நேரிசை அளவியல் வெண்பாச் சான்றுகள்

நல்வழி:
கல்லானே யானாலுங் கைப்பொருளொன் றுண்டாயின்
எல்லாருஞ் சென்றங் கெதிர்கொள்வார் -- இல்லானை
இல்லாளும் வேண்டாள்மற் றீன்டெடுத்த தாய்வேண்டாள்
செல்லா தவன்வாயிற் சொல்.
---ஔவையார், நல்வழி 34


தேமாங்காய் தேமாங்காய் கூவிளங்காய் தேமாங்காய்
தேமாங்காய் தேமா புளிமாங்காய் தேமாங்காய்
தேமாங்காய் தேமாங்காய் கூவிளங்காய் தேமாங்காய்
தேமா புளிமாங்காய் நாள்.

பாடலைச் சந்திகள் நீக்கிப் பொருளினைத்
தேடவெளி தாக்கியே இப்படிப் -- போட
கலித்தளை வந்துபூச் சீர்கள் அமைந்து
ஒலியில் கெடுதலை யுள்ளு.

கல்லானே ஆனாலும் கைப்பொருளொன்று உண்டாயின்
எல்லாரும் சென்றங்கு எதிர்கொள்வார் -- இல்லானை
இல்லாளும் வேண்டாள்மற்று ஈன்றெடுத்த தாய்வேண்டாள்
செல்லாது அவன்வாயிற் சொல்.

[கைப்பொருளொன்று=கூவிளந்தண்பூ; வேண்டாள்மற்று=தேமாந்தண்பூ; இதனால், சொல்=மா;
சென்றங்கு | எதிர்கொள்வார் = கலித்தளை; செல்லாது | அவன்வாயிற் = கலித்தளை]

அலகிடும் போதுநாம் சந்திகள் சேர்த்தே
உலவிடும் சீர்கொள வேண்டும் - கலத்தல்
பிரித்தே அலகிடச் சீர்தளை குன்றி
உரித்த விலக்கணம் போம்.

மூலமாம் செய்யுள் முதலில் எழுதிப்பின்
சாலும் பதபாடம் காட்டினால் - ஏலம்போல்
சொல்லும் பொருளும் சுவைபெற்றே யோங்கிடச்
சொல்வரும் செய்தி யுறும்.

அவ்வையின் நேரிசைவெண் பாவின் சிறப்புகள்
வவ்வத் தனிச்சொல் அடியெதுகை - ஒவ்வுறும்
ஒற்றினம் மோனை பொழிப்புகள் நோக்கியே
கற்றுத் தெளிவீரே நன்கு.

காலம் கடந்துநிற்கும் ஔவையின் நல்வழிச்சொல்
ஞாலம் முழுதுமே மாந்தரின் - கோலத்தைத்
தெள்ளிதின் காட்டுமனக் கண்ணாடி போலிருத்தல்
உள்ளிட வோங்கும் உவப்பு.

அவ்வையின் மற்றொரு பாவில் இதுபோல
வவ்வும் ஒலியும் தனிச்சொல்லும் - எவ்வாறு
செய்தி உவமையிற் செவ்விதின் சொல்வதுகாண்
மெய்ப்பாடு மேவிட வே.

நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கு மாங்கே பொசியுமாம் -- தொல்லுலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை.
---ஔவையார், மூதுரை 12


*****

திருத்தாண்டகம்:
பின்வரும் வெண்பாவில் சீர்கள் வகையுளி
யின்றி வருவதில் காய்ச்சீரும் - பின்வரும்
கூவிளச் சீர்களும் ஒன்றியே பாம்பெனும்சொல்
தாவி வருவது காண்.

இன்னுமந்த பாம்பெனும்சொல் ஈற்றடியில் நேர்பு-காசு
என்றுவந்து வேறடியில் தேமாச்சீர் - என்றுமே
நன்று பயின்று பொருளுடன் சொல்லினைப்
பின்னி வருவதும் பார்.

திருமுடியில் கண்ணியும் மாலையும் பாம்பு
திருமார்பில் ஆரமும் பாம்பு -- பெருமான்
திருவரையில் கட்டிய கச்சையும் பாம்பு
பொருபுயத்தில் கங்கணமும் பாம்பு.
---திருத்தாண்டகம்


*****

ஐந்திணை எழுபது:
என்னைகொ றோழி அவர்கண்ணு நன்கில்லை
யன்னை முகனு மதுவாகும் - பொன்னலர்
புன்னையும் பூங்கானற் சேர்ப்பனைத் தக்கதோ
நின்னல்ல தில்லென் றுரை.
---மூவாதியார், ஐந்திணை எழுபது, 58


பதம் பிரித்து:
என்னைகொல் தோழி அவர்கண்ணும் நன்கில்லை
அன்னை முகனும் அதுவாகும் - பொன்னலர்
புன்னையும் பூங்கானல் சேர்ப்பனைத் தக்கதோ
நின்னல்லது இல்லென்று உரை.

பாட்டில் பயிலும் இடையினம் மெல்லினம்
காட்டும் தலைவியின் சோகமும் - வேட்டபொருள்
ஈட்டிடச் சென்றான் பிரிவும் செவிலியின்
காட்ட நிலையுமே பாட்டு.

*****

கி.வா.ஜ:
முந்தையோர் பாடிவைத்த முத்தமிழ்நூல் தம்மையெல்லாம்
அந்துமுதற் பூச்சி அழிக்காமல் -- வந்தெடுத்துத்
தந்தபெரு வள்ளல் தமிழ்ச்சாமி நாதகுரு
செந்தமிழ்த்தாய் பெற்றமணிச் சேய்.
---கி.வா.ஜ., ’கவி பாடலாம்’


குருவுக்குப் பாமாலை சூட்டும்  கி.வா.ஜ.
உருநீண்ட காய்ச்சீர் விரித்தே - பொருளும்
குருவின் பெயரில் வகையுளியும் ஈற்றில்
தருகிற முத்தாய்ப்பும் பார்.

*****

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Thu Nov 07, 2013 7:38 pm

6.53. இருவிகற்ப நேரிசை அளவியல் வெண்பாச் சான்றுகள்

இருவிகற்பம் பெற்றுவரும் நேரிசைவெண் பாவே
பெரும்பாலும் யாத்தனர் அன்று - பொருளைப்
பதங்களில் நன்கு விளக்க இதுவே
இதமென்று கண்டனர் முன்பு.

மூதுரை, ஔவையார்:
நல்லா ரொருவர்க்குச் செய்த உபகாரம்
கல்மே லெழுத்துப்போற் காணுமே -- அல்லாத
ஈரமிலா நெஞ்சத்தார்க் கீந்த உபகாரம்
நீர்மே லெழுத்திற்கு நேர். ... 8


வருக்க எதுகை அடியிரண்டு ஈற்றில்
வருவதால் இஃது எதுகை - சுருங்கப்
பலவிகற்ப இன்னிசை வெண்பாபோல் தோன்றும்
இருவிகற்ப நேரிசை யே.

இற்றை வழக்கினில் ஔவையார் சொன்னதை
இப்படிச் சொல்லலா மோ?

நல்லார்க்குச் செய்த உதவி அவர்மனதில்
கல்மேல் எழுத்துப்போல் காணுவர் -- அல்லாது
ஈரமில் நெஞ்சினர்க்கு ஈந்தால் மறந்திடுவார்
நீர்மேல் எழுதியது போல்.

நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க
நல்லார்சொற் கேட்பதுவும் நன்றே‌எ -- நல்லார்
குணங்க ளுரைப்பதுவும் நன்றே அவரோ
டிணங்கி யிருப்பதுவும் நன்று.
---ஔவையார், மூதுரை 8


மாசில் இலக்கணம் காணவரும் வெண்பாவின்
வாசகத்தில் ஔவை அறிவுரையை - யோசித்துத்
தேடியே நல்லோரை வேண்டி அவர்களைக்
கூடி இருப்போமே இன்று.

*****

இடர்தீர்த்த லெள்ளாமை கீழினஞ்சே ராமை
படர்தீர்த்தல் யார்க்கும் பழிப்பின் -- நடைதீர்த்தல்
கண்டவர் காமுறுஞ்சொற் காணிற் கலவியின்கண்
விண்டவர்நூல் வேண்டா விடும்.
---கணிமேதையார், ஏலாதி 4


பொருள்
துயர்தீர்ப்போன் கேலிசெய்யான் கீழோரைச் சேரான்
வயிற்றுப் பசிகளைவோன் தீமை -- பயிலான்
பிறரிடம் பேச்சினியான் கண்டால் துறந்தார்
அறநூல்கள் தேவையில்லை யாம்.

*****

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sat Nov 16, 2013 6:08 pm

6.54. இருகுறள் நேரிசை அளவியல் வெண்பாச் சான்றுகள்

நேரிசை வெண்பா இரண்டு வகையிலே
வேறோர் முறையில் பிரிவதும் உண்டு
இருகுறள் ஆசிடை நேரிசை யென்றவ்
விருவகை பேர்பெறு மே.

இருகுறள் நடுவண் தனிச்சொற் பெற்றும்
இரண்டொன் டாசும் அவணிடை யிட்டும்
ஒருவிகற் பாகியும் இருவிகற் பாகியும்
நிகழ்வன நேரிசை வெண்பா ஆகும்.
--யாப்பருங்கலம்


குறளிரண்டு சேர்ந்துவர முன்னுள பாவின்
இறுதிவரும் சீரது ஈரசை யாகத்
தனிச்சொல் இணைத்திட நேரிசை வெண்பா
கனிந்து வருவதும் உண்டு.


சான்றுகள்
இழுக்குடைய பாட்டிற் கிசைநன்று சாலும்
ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று -- வழுக்குடைய
வீரத்தின் நன்று விடாநோய் பழிக்கஞ்சா
தாரத்தின் நன்று தனி. ... [நன்று, தனி]
---ஔவையார், நல்வழி 31

நகைகொள் முகமுடைய நல்லோனாம் காந்தி
பகைவனையும் அன்பிற் பரிந்து -- மிகநலஞ்செய்
பாங்கதனைக் காட்டியிந்தப் பாருலக முள்ளளவும்
ஓங்கிநின்றான் நல்லோர் உளத்து.
---கி.வா.ஜ., ’கவி பாடலாம்’

முன்னே குறட்பா முடிவுறும் சீரினை
ஒன்றிரண்டு சீர்பற்றி ஆசிடை யிட்டும்
தனிச்சொல் இணைந்துவர நேரிசை வெண்பா
கனிந்து வருவதும் உண்டு.
... [இயல் 6.55. கீழே.]

சான்று
நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கு மாங்கே பொசியுமாம் -- தொல்லுலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை.
---ஔவையார், மூதுரை 12
[’பொசி’ என்னும் முதற்குறள் முடிவைப் ’பொசியுமாம்’ என்று நீட்டியது ஆசிடை]

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Fri Nov 22, 2013 9:52 am

6.55. ஆசிடை நேரிசை அளவியல் வெண்பாச் சான்றுகள்

ஒன்றையொன்று சேர்த்தே உலோகம் இரண்டினை
ஒன்றெனப் பற்றவைக்கும் தூள்‍ஆசு என்பது
நேரோ நிரையசையோ சீரேழில் வந்ததை
ஆசிடுதல் ஆசிடைவெண் பா.


சான்று
கணம்கொண்டு சுற்றத்தார் கல்லென் றலறப்
பிணம்கொண்டு காட்டுய்ப்பார்க் கண்டும் -- மணங்கொண்டீண்
டுண்டுண்டுண் டென்னும் உணர்வினாற் சாற்றுமே
டொண்டொண்டொண் டென்னும் பறை.
---நாலடியார் 25


வெண்பா இதிலேழாம் சீர்நோக்கின் வந்திடும்
’கண்டு’ எனும்பதம் காசுவெனும் வாய்பாடாம்
’கண்டும்’ எனும்பதம் ’உம்’சேர்ந்த ஆசுவெனக்
கண்டுகொள் ளப்புரியும் ஆசு.

முதற்குறள் வெண்பா முடிவில் வரும்சொல்
அதனுடன் ஓரசை ஆசிட்டு வந்ததால்
ஓரா சிடையிட்ட நேரிசை வெண்பாவாம்
ஈரா சிடுவதும் உண்டு.

சான்று
கல்லெறிந் தன்ன கயவர்வாய் இன்னாச்சொல்
எல்லாருங் காணப் பொறுத்துய்ப்பர் - ஒல்லை
இடுநீற்றால் பை‍அவிந்த நாகம்போல் தத்தம்
குடிமையான் வாதிக்கப் பட்டு.
---நாலடியார் 66


’பொறுத்து’ எனும்பிறப்பு ஈரசை யாசாய்ப்
’பொறுத்துய்ப்பர்’ என்றுவந்து பூட்டுவதால் இவ்வெண்பா
ஈரா சிடையிட்ட நேரிசை வெண்பாவாம்
சீரேழில் வந்த சிறப்பு.

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sun Nov 24, 2013 1:10 pm

6.56. ஒருவிகற்ப இன்னிசை அளவியல் வெண்பாச் சான்றுகள்

சான்று 1.
வருகிற வெண்பா இயைபுகள் நோக்கு.
அறம்பொருள் இன்பத்தில் வாழ்பவன் சீலன்
அறிந்தவன் ஞானி அமல்செய்வான் மன்னன்
இறைகளன் என்றே பொருள்.

முப்பொருள் உண்மை தெளிவா னருஞ்சீலன்
முப்பொருள் உண்மை யுடையா னருமுனிவன்
முப்பொருள் உண்மை மடுப்பா னிறையாங்கு
முப்பொருள் உண்மைக் கிறை.
---பொய்கையார், இன்னிலை 16


சான்று 2.
அறங்கூறும் சேந்தனார் இன்னிசை வெண்பா:
பிறர்பொருள் நாடாது பாவங்கள் நீக்கி
அறம்வழி நின்றுதீயோர் சேர்க்கை தவிர்க்கும்
திறன்தெரிந்து வாழ்தல் இனிது.

பிறன்கைப் பொருள்வௌவான் வாழ்தல் இனிதே
அறம்புரிந் தல்லவை நீக்கல் இனிதே
மறந்தேயும் மாணா மயரிகள் சேராத்
திறந்தெரிந்து வாழ்தல் இனிது.
---பூதஞ்சேந்தனார், இனியவை நாற்பது 21


சான்று 3. (இரண்டாம் அடியில் தனிச்சொல்)
கற்றவர் மேன்மை உரைக்கும் பழமொழி:
ஆற்றவும் என்றால் மிகுதியாக; கட்டமுது ... (கட்டுச்சோறு)
ஆற்றுணா என்றது; சென்றவிடம் போற்றிடக்
கற்றோர்க்குக் கிட்டும் இவை.

ஆற்றவும் கற்றார் அறிவுடையார் அஃதுடையார்
நாற்றிசையும் செல்லாத நாடில்லை - அந்நாடு
வேற்றுநா டாகா தமவேயாம் ஆயினால்
ஆற்றுணா வேண்டுவ தில்.
---முன்றுரையரையனார், பழமொழி நானூறு 6


*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Wed Nov 27, 2013 7:07 am

6.57. இருவிகற்ப இன்னிசை அளவியல் வெண்பாச் சான்றுகள்

சான்று 1.
அருளினை நெஞ்சத் தடைகொடா தானும்
பொருளினைத் துவ்வான் புதைத்துவைப் பானும்
இறந்தின்னா சொல்லகிற் பானுமிம் மூவர்
பிறந்தும் பிறந்திலா தார்.
---நல்லாதனார், திரிகடுகம் 89


அகத்தில் இரக்கமின்றி வாழ்பவன், செல்வம்
நுகராமல் சேர்ப்பவன், உள்ளா(து) உளம்நோகப்
பேசுபவன், மூவர் பிறந்தது வீணென்று
ஏசுகிறார் நல்லா தனார்.

சான்று 2.
இன்றுகொல் அன்றுகொல் என்றுகொல் என்றாது,
பின்றையே நின்றது கூற்றமென் றெண்ணி,
ஒருவுமின் தீயவை ஒல்லும் வகையான்
மருவுமின் மாண்டார் அறம்.
---நாலடியார் 36


என்றோ வருவான் எமனென்று எண்ணாமல்
பின்னாலே நிற்பதாக எண்ணிச் சடுதியில்
அல்லவை நீக்கிவிட்டு நல்லவை ஆற்றென்று
சொல்வது நாலடியார் பாட்டு.

*****


Sponsored content

PostSponsored content



Page 25 of 29 Previous  1 ... 14 ... 24, 25, 26, 27, 28, 29  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக