புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதையில் யாப்பு


   
   

Page 24 of 29 Previous  1 ... 13 ... 23, 24, 25 ... 29  Next

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Thu Nov 08, 2012 8:38 am

First topic message reminder :

யாப்பிலக்கணம்: ஒரு கவிதை அறிமுகம்
ரமணி, ஆகஸ்ட்-செப்டம்பர், 2012

இந்தத் தொடர் ஒரு சோதனை முயற்சி.
தொடரின் நோக்கம் கற்றுத் தருவதைவிடப் பகிர்ந்துகொள்வது.
கடந்த சில நாட்களாக நான் யாப்பிலக்கணம் பயில இறங்கி, அது இன்னும் தொடரும்போதே,
என் முயற்சியில் நான் பெற்ற செய்திகளை, மகிழ்வினை, வியப்புகளை, திருப்தியை
வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வது முதல் நோக்கம்.

யாப்பிலக்கணத்தை உரைநடையில் தரும்போது நேரிடும் மித மிஞ்சிய சொற்களின் அளவைக் குறைத்து
எளிதில் படித்து, பார்த்து, நினைக்க உதவும் வகையில்
கவிதை வரிகளில் தருவது தொடரின் இரண்டாவது நோக்கம்.

அப்படித் தரும்போது அது வாசகர்களுக்குப் பயன்தந்து, பிற நூல்களின் மூலம்
யாப்பிலக்கணம் மேலும் நன்கு பயில ஊக்கம் அளிக்கும் என்ற நம்பிக்கை மூன்றாவது நோக்கம்.

யாப்பின் ஒழுங்கில், இன்றைய வழக்கில் கவிதை புனைவது
வேறு விதத்தில் எழுதுவது போன்றே எளிதில் வருவது,
அதைவிட அதிகப் பெருமையும் திருப்தியும் தருவது
என்று இத்தொடரில் காட்டிட முயல்கிறேன்.

தொடரின் நிறை குறை பற்றிக் கவிதை ஆர்வலர்கள் அப்போதைக்கப்போதே பின்னூட்டம் இடலாம்.
வரும் பின்னூட்டங்களின் சீரிய கருத்துக்களை எடுத்தாண்டு, குறைகளைக் கூடியமட்டும் திருத்தி,
இறுதியில் எல்லோருக்கும் பயன்படும் வகையில் ஒரு மின்னூலாக்குவது என் இலக்கு.





ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Wed Sep 18, 2013 9:04 am

பயிற்சி 4. குறட்பாவில் நிரல்வரும் சீர்கள்

கீழ்வரும் சீர்நிரல் தன்னில் அமையக்
குறட்பா எழுதிப் பழகு.

ஓரெது கையும் பொழிப்பினில் மோனையும்
நேர்வர வேண்டுமிங் கே.

தேமா புளிமா கருவிளம் கூவிளம்
தேமா புளிமா மலர்/பிறப்பு

சான்று
தீதும் நலனும் பிறர்தர வாகுமோ
ஏதும் செயல்ந மதே.

முன்னோர் மொழிகள் மனம்பட வாழ்ந்திடத்
தன்னால் பெருகும் தகவு.

***

புளிமா கருவிளம் கூவிளம் தேமா
புளிமா கருவிளம் நாள்/காசு

சான்று
விழிமுன் தெரிவதே வேண்டுவன் என்றால்
வழியில் துயரமே தான்.

இலையின் பனித்துளி செஞ்சுடர் பட்டு
கலைகள் விழிப்படும் காடு.

***

கருவிளம் கூவிளம் தேமா புளிமா
கருவிளம் கூவிளம் நாள்/காசு

சான்று
கதவுகள் மூடிடும் காலம் பொறுத்தால்
உதவிகள் தேடிவ ரும்.

அலர்மக ரந்தமே கால்கள் பிடிக்க
மலர்வலம் வந்திடும் வண்டு.

***

கூவிளம் தேமா புளிமா கருவிளம்
கூவிளம் தேமா மலர்/பிறப்பு

சான்று
காடுதான் மீண்டும் எனவந் திடும்சுழல்!
வீடுதான் கூடு மெவண்?

கார்முகில் வானம் கனிந்தே பொழிந்திட
ஊர்தனில் உள்ளக் களிப்பு.

***

உதவி:
தமிழில் தட்டெழுத
http://kandupidi.com/editor/

பாவகை ஆய்ந்து சரிபார்க்க
http://www.virtualvinodh.com/avalokitam-download

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sat Sep 21, 2013 10:53 am

பயிற்சி 5. குறட்பாவில் நிரல்வரும் காய்ச்சீர்கள்

ஓரெது கையும் பொழிப்பினில் மோனையும்
சீர்வரும் காய்ச்சீர் இனி.

இவ்வகைச் சீர்கள் இனிதே அமைந்திடச்
செவ்வியப் பாக்கள் எழுது.

தேமாங்காய் தேமாங்காய் தேமாங்காய் தேமாங்காய்
தேமாங்காய் தேமாங்காய் நாள்/காசு

சான்று
தென்காற்றில் காற்றாலை மென்சுற்றும் கம்பீரம்
முன்செலுமே தார்ச்சாலைப் பாம்பு.


வானத்தில் வெண்மேகம் ஐராவ தம்போல
மௌனத்தில் வீசும்தென் றல்.


***

கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய்
கூவிளங்காய் கூவிளங்காய் நாள்/காசு

சான்று
வான்வழியே தேனமுதாய்க் காலிறங்கும் மென்துளிகள்
யானுமொரு நீர்த்துளியே தான்.


வான்வழியே தேனமுதாய்க் காலிறங்கும் மென்துளிகள்
கானமிசைக் கும்கூரை மீது.


***

ஓரெது கைவரும் போது உயிர்மெய்யும்
ஒற்றும் எதுகையா காது.

ஒற்றுடன் ஒற்றதே சேரும் உயிர்மெய்
வருக்கக் குறில்நெடி லாய்.

கீழ்வரும் பாக்குறள் ஓரெது கையல
ஒற்றோ டுயிர்மெய் வர.

மாட்டின் மடியினில் பால்மிகக் கோனாரும்
பாடியே பால்கறப் பார்.


இதனால் இனிவரும் காய்ச்சீர் நிரல்கள்
எதுகையில் ஒன்றாய் வராது.

கருவிளங்காய் தேமாங்காய் தேமாங்காய் தேமாங்காய்
தேமாங்காய் தேமாங்காய் நாள்/காசு.

கருவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய்
கூவிளங்காய் கூவிளங்காய்  நாள்/காசு.

புளிமாங்காய் தேமாங்காய் தேமாங்காய் தேமாங்காய்
தேமாங்காய் தேமாங்காய் நாள்/காசு.

புளிமாங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய்
கூவிளங்காய் கூவிளங்காய் நாள்/காசு.

***

இயற்சீரும் காய்ச்சீரும் சேரும் வகைகள்
பயில்வது பற்பல வாய்.

இயற்சீர் தமக்குள் வகைகள் பலவாய்
இயன்று வருவ தியல்பு.

திருக்குறள் யாப்பைத் திருத்தமாய்க் நோக்க
வரும்வகைக் கண்படும் நன்கு.

*****

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Sat Sep 21, 2013 11:28 am

நல்ல பகிர்வு நண்பரே

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Tue Sep 24, 2013 11:51 am

6.25. குறள்வெண்பா வித்தகங்கள்

வித்தகம் பற்பலவாய் விந்தைக் குறள்வெண்பா
உத்தி பலவா றுள.

ஒருவிகற் பத்தில் பொழிப்பினில் மோனை
இரட்டைச் சிறப்பெனத் தேறு.

உத்தி 1. முதற்சீர் இரண்டெழுத்து முடிவில் வருதல்

ரமணி:
தாத்தா தடியெடுத்தால் தண்டல ராவாரோ?
ஆத்தா தடியெடுத் தா. ... 1

வாசிவாசி யென்று மனதில் முணுமுணுத்தால்
பேசுமொழி யாகும் சிவா. ... 2.

சுவாசப் பயிற்சிகளில் தேர்ந்து மனதை
சுவாசத்தால் கட்டினான் வாசு. ... 3

சுகாதாரம் சிங்கார வஸ்துகள் அல்ல
விகாரம் விளைப்பதே காசு. ... 4

வாசிக்கப் பேப்பரைக் கேட்டதுதான் தாமதம்
ஓசியா என்றான் சிவா. ... 5

புன்னகை இன்முகம் போதாது வேண்டுவது
தன்னல மில்லாத அன்பு. ... 6

திரமுள்ள பக்தியில் தீராது நின்றால்
உறவாவார் பார்த்’சா ரதி. ... 7

புரிந்து செயலாற்றின் போய்விடும் அச்சம்
அறியுமோ வாழ்வில் இரிபு? ... 8
[இரிபு=தோல்வி, வெறுப்பு]

குலவும் கலியில் கலித்துக் களித்துப்
பலவிதமாய் வாழும் உலகு. ... 9

விரல்களில் மோதிரம் மின்னிடத் தொக்கா
நிரல்களைச் செய்தார் ரவி. ... 10
[தொக்கா=தொலைக்காட்சி என்பதன் சுருக்கம்.]

மேலும் பாக்களுக்கு:
https://groups.google.com/forum/#!searchin/santhavasantham/முடிபிறழ்$௨0அடி/santhavasantham/EZ0mnRh32rE/tdgMtULMJjUJ
https://groups.google.com/forum/#!searchin/santhavasantham/முடிபிறழ்$௨0அடி/santhavasantham/9dmhNUiaULw/NywyN0xsYkAJ

பயிற்சி
இந்த வகைவரும் விந்தைக் குறட்பாக்கள்
சிந்தனை செய்தே எழுது.

*****

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Fri Sep 27, 2013 12:39 pm

உத்தி 2. முதல் ஒலிபிறழ மாறும் முடிவு

முதற்சீர் எழுத்து இரண்டிலோ மேலோ
அதனொலி மாறிவரும் ஈற்று.

எழுத்திடம் மாறுவதால் மாறும் ஒலியே
எழுத்தின் வகையைப் பொறுத்து.

ராம்-எனும் சொல்மாற மார்-என ஆகுமே
கூத்து திரும்பினால் தூக்கு.

மேலும் சில காட்டுகள்
சாவி-வாசி, குருவி-உருகி, கப்பல்-பக்கல்,
வேதம்-தேவம், காதம்-தாகம், வேதனை-தேவனை

ராம்ராம் வடநாட்டில் ராமா தமிழிலே
ராமாஞ்ச நேயரனு மார். ... 1

ரோம்நாட்டில் அன்று குடிமக்கள் சாப்பாட்டில்
யாம்கண்ட தில்லையே மோர். ... 2

ரவைதரும் உப்புமா சட்னியுடன் ஆகா!
சுவைப்போமே உள்ள வரை! ... 3

வார்த்திகம் எய்தியதில் ஆளே உருமாற
யாரெனும் கேள்வியில் ராவ். ... 4

குச்சுவீட்டில் ஏதுவழி காப்பிக்கு? காலையில்
பச்சரிசிக் கஞ்சியில் சுக்கு. ... 5

தலாரூபாய் நூறுதர முந்நூறு தந்தாள்
கலாவின் மகளாம் லதா. ... 6

சாவுபல தீவிபத்தில் மாண்டோர் கணக்கிலே
பாவம்நம் தீயணையர் வாசு. ... 7

காத்துப் பயனில்லை மாற்றானின் பாசறையை
ராத்திரியில் சூழ்ந்துநின்று தாக்கு. ... 8

தூக்கிக் கழிநுனியில் ஊசலாட வைப்பானே
ஊக்கில் எழும்கழைக் கூத்து. ... 9

தோப்புவழிச் சென்றபோது தோன்றித் தலையுயர்த்த
கூப்பிட்ட தேவோர்செம் போத்து. ... 10

பயிற்சி
இந்த வகையிலே சொந்தக் குறட்பாக்கள்
சிந்தனை செய்தே எழுது.

*****

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Sep 27, 2013 1:06 pm

[mention]முதற்சீர் எழுத்து இரண்டிலோ மேலோ அதனொலி மாறிவரும் ஈற்று. எழுத்திடம் மாறுவதால் மாறும் ஒலியே எழுத்தின் வகையைப் பொறுத்து.

ராம்-எனும் சொல்மாற மார்-என ஆகுமே கூத்து திரும்பினால் தூக்கு. மேலும் சில காட்டுகள் சாவி-வாசி, குருவி-உருகி, கப்பல்-பக்கல், வேதம்-தேவம், காதம்-தாகம், வேதனை-தேவனை[/mention] wrote:
கவிதையில் யாப்பு - Page 24 3838410834 கவிதையில் யாப்பு - Page 24 103459460 கவிதையில் யாப்பு - Page 24 1571444738 



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Fri Sep 27, 2013 4:04 pm

கவிதையில் யாப்பு - Page 24 3838410834 

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Mon Sep 30, 2013 6:23 am

உத்தி 3. முதற்சீரில் வரும் சொல் முடிவில் வேறு பொருளில் வருதல்

நூற்கண்டு தேர்ந்ததில் நூல்கிழியத் தேடினேனே
நூற்றைக்க ஊசிநூற் கண்டு.

கற்கண்டு சிற்பி கலைவடிக்கத் தோன்றிய
பற்பல பெண்ணுருகற் கண்டு.

உண்டும் உறங்கியும் போதைக் கழிப்பதில்
குண்டனைப் போலெவர் உண்டு?

குடியுயரக் கோனுயரும் சொல்மாறி யின்று
குடிமக்கள் கேடு குடி.

படிதாண்டாப் பத்தினி மாறினாள் இன்று
படித்துமுன் னேறும் படி.

தேர்தலின் கூட்டத்தை விஞ்சிப் பொதுமக்கள்
பார்க்க நகர்ந்தது தேர்.

அக்கரைக்கு இக்கரை பச்சை குடியிருப்பு
இக்கரையேன் பின்னக் கறை?

தலைப்பு அறிவிக்கப் பாட எழுந்த
கலைக்கையில் சேலைத் தலைப்பு.
[கலை என்பது ஒரு பெண்ணின் பெயர்]

கதையால் துரியோத னைவீமன் தாக்கி
வதைசெய முற்றும் கதை.

அரிச்சுவடி மேற்படிப்பு எல்லாம் சரிதான்
அரிசி அரிச்சு வடி.

உத்தி 3. முதற்சீரில் வரும் சொல் முடிவில் வேறு பொருளில் வருதல்

நூற்கண்டு தேர்ந்ததில் நூல்கிழியத் தேடினேனே
நூற்றைக்க ஊசிநூற் கண்டு.

கற்கண்டு சிற்பி கலைவடிக்கத் தோன்றிய
பற்பல பெண்ணுருகற் கண்டு.

உண்டும் உறங்கியும் போதைக் கழிப்பதில்
குண்டனைப் போலெவர் உண்டு?

குடியுயரக் கோனுயரும் சொல்மாறி யின்று
குடிமக்கள் கேடு குடி.

படிதாண்டாப் பத்தினி மாறினாள் இன்று
படித்துமுன் னேறும் படி.

தேர்தலின் கூட்டத்தை விஞ்சிப் பொதுமக்கள்
பார்க்க நகர்ந்தது தேர்.

அக்கரைக்கு இக்கரை பச்சை குடியிருப்பு
இக்கரையேன் பின்னக் கறை?

தலைப்பு அறிவிக்கப் பாட எழுந்த
கலைக்கையில் சேலைத் தலைப்பு.
[கலை என்பது ஒரு பெண்ணின் பெயர்]

கதையால் துரியோத னைவீமன் தாக்கி
வதைசெய முற்றும் கதை.

அரிச்சுவடி மேற்படிப்பு எல்லாம் சரிதான்
அரிசி அரிச்சு வடி.

பயிற்சி
இந்த வகையிலே சொந்தக் குறட்பாக்கள்
சிந்தனை செய்தே எழுது.

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Wed Oct 02, 2013 3:57 pm

6.30. நேரிசை இன்னிசை வெண்பாக்கள்

குறள்வெண்பா நீக்கி இதர வகைகள்
இரண்டு விதத்தில் இயற்றப் படுவன
நேரிசை இன்னிசை யென்று.

நேரிசை இன்னிசை வெண்பா வகையென
பேரும் இலக்கணம் பெற்று வருதல்
அளவியல் வெண்பா கருதியே என்று
உளத்தில் இருத்தவேண் டும்.

சீரது நான்கில் இரண்டாம் அடிவரும்
நேரிசை வெண்பாச் சிறப்பாம் தனிச்சொல்லே
நேரிசை வெண்பாக் குறி.


6.31. நேரிசை வெண்பா என்பது

வெண்பா விலக்கணம் பெற்று அடியிரண்டின்
ஈற்றில் தனிச்சொல் ஒரூஉ எதுகையாக
நேரிசை வெண்பா வரும்.

அடியிரண்டின் ஒன்றாம்சீர் நான்காம்சீர் மற்றும்
அடியொன்றின் ஒன்றாம்சீர் ஓரெதுகை யென்பது
நேரிசை வெண்பா மரபு.

அதாவது சீரொன்றும் சீரைந்தும் எட்டும்
பொதுவில் எதுகைகள் ஒன்றாய் அமைவது
நேரிசை வெண்பா மரபு.


அளவியல் நேரிசை வெண்பா வருமே
அளவடி நான்கிலும் ஓர்விகற்ப மல்லது
முன்னீ ரடிகள் விகற்பம் ஒருவகை
பின்னீர் ரடிகள் விகற்பம் ஒருவகை
என்று எதுகையி ரண்டு.

ஒருவிகற்ப நேரிசை அளவியல் வெண்பா சான்று

நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கு மாங்கே பொசியுமாம் -- தொல்லுலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை.
---ஔவையார், மூதுரை 12

இருவிகற்ப நேரிசை அளவியல் வெண்பா சான்று

உரைமுடிவு காணான் இளமையோன் என்ற
நரைமுது மக்கள் உவப்ப -- நரைமுடித்துச்
சொல்லால் முறைசெய்தான் சோழன் குலவிச்சை
கல்லாமல் பாகம் படும்.
---முன்றுரையரையனார், பழமொழி நானூறு 6

*****

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Oct 02, 2013 4:20 pm

தமிழ் ஆர்வலர்களுக்கு இது ஒரு சிறப்பான திரி ...



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



Page 24 of 29 Previous  1 ... 13 ... 23, 24, 25 ... 29  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக