புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
mruthun | ||||
Saravananj | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கவிதையில் யாப்பு
Page 22 of 29 •
Page 22 of 29 • 1 ... 12 ... 21, 22, 23 ... 25 ... 29
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
First topic message reminder :
யாப்பிலக்கணம்: ஒரு கவிதை அறிமுகம்
ரமணி, ஆகஸ்ட்-செப்டம்பர், 2012
இந்தத் தொடர் ஒரு சோதனை முயற்சி.
தொடரின் நோக்கம் கற்றுத் தருவதைவிடப் பகிர்ந்துகொள்வது.
கடந்த சில நாட்களாக நான் யாப்பிலக்கணம் பயில இறங்கி, அது இன்னும் தொடரும்போதே,
என் முயற்சியில் நான் பெற்ற செய்திகளை, மகிழ்வினை, வியப்புகளை, திருப்தியை
வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வது முதல் நோக்கம்.
யாப்பிலக்கணத்தை உரைநடையில் தரும்போது நேரிடும் மித மிஞ்சிய சொற்களின் அளவைக் குறைத்து
எளிதில் படித்து, பார்த்து, நினைக்க உதவும் வகையில்
கவிதை வரிகளில் தருவது தொடரின் இரண்டாவது நோக்கம்.
அப்படித் தரும்போது அது வாசகர்களுக்குப் பயன்தந்து, பிற நூல்களின் மூலம்
யாப்பிலக்கணம் மேலும் நன்கு பயில ஊக்கம் அளிக்கும் என்ற நம்பிக்கை மூன்றாவது நோக்கம்.
யாப்பின் ஒழுங்கில், இன்றைய வழக்கில் கவிதை புனைவது
வேறு விதத்தில் எழுதுவது போன்றே எளிதில் வருவது,
அதைவிட அதிகப் பெருமையும் திருப்தியும் தருவது
என்று இத்தொடரில் காட்டிட முயல்கிறேன்.
தொடரின் நிறை குறை பற்றிக் கவிதை ஆர்வலர்கள் அப்போதைக்கப்போதே பின்னூட்டம் இடலாம்.
வரும் பின்னூட்டங்களின் சீரிய கருத்துக்களை எடுத்தாண்டு, குறைகளைக் கூடியமட்டும் திருத்தி,
இறுதியில் எல்லோருக்கும் பயன்படும் வகையில் ஒரு மின்னூலாக்குவது என் இலக்கு.
யாப்பிலக்கணம்: ஒரு கவிதை அறிமுகம்
ரமணி, ஆகஸ்ட்-செப்டம்பர், 2012
இந்தத் தொடர் ஒரு சோதனை முயற்சி.
தொடரின் நோக்கம் கற்றுத் தருவதைவிடப் பகிர்ந்துகொள்வது.
கடந்த சில நாட்களாக நான் யாப்பிலக்கணம் பயில இறங்கி, அது இன்னும் தொடரும்போதே,
என் முயற்சியில் நான் பெற்ற செய்திகளை, மகிழ்வினை, வியப்புகளை, திருப்தியை
வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வது முதல் நோக்கம்.
யாப்பிலக்கணத்தை உரைநடையில் தரும்போது நேரிடும் மித மிஞ்சிய சொற்களின் அளவைக் குறைத்து
எளிதில் படித்து, பார்த்து, நினைக்க உதவும் வகையில்
கவிதை வரிகளில் தருவது தொடரின் இரண்டாவது நோக்கம்.
அப்படித் தரும்போது அது வாசகர்களுக்குப் பயன்தந்து, பிற நூல்களின் மூலம்
யாப்பிலக்கணம் மேலும் நன்கு பயில ஊக்கம் அளிக்கும் என்ற நம்பிக்கை மூன்றாவது நோக்கம்.
யாப்பின் ஒழுங்கில், இன்றைய வழக்கில் கவிதை புனைவது
வேறு விதத்தில் எழுதுவது போன்றே எளிதில் வருவது,
அதைவிட அதிகப் பெருமையும் திருப்தியும் தருவது
என்று இத்தொடரில் காட்டிட முயல்கிறேன்.
தொடரின் நிறை குறை பற்றிக் கவிதை ஆர்வலர்கள் அப்போதைக்கப்போதே பின்னூட்டம் இடலாம்.
வரும் பின்னூட்டங்களின் சீரிய கருத்துக்களை எடுத்தாண்டு, குறைகளைக் கூடியமட்டும் திருத்தி,
இறுதியில் எல்லோருக்கும் பயன்படும் வகையில் ஒரு மின்னூலாக்குவது என் இலக்கு.
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
6.13. வெண்பாவின் வகைகள்
வெண்பா வடிகளின் மேலெல்லை யெண்வைத்தே
வெண்பா வகைகள் பெயரிடப் பட்டன.
வெண்பா வகைகளாம் ஐந்து.
குறள்வெண்பா சிந்தியல் மற்றும் அளவியல்
பஃறொடை மற்றும் கலிவெண்பா என்று
உறழும் வகைகளாம் ஐந்து.
அடிகள் இரண்டில் குறட்பா வருமே
அடிமூன்று வந்திடின் சிந்தியல் வெண்பாவாம்
நாலடி வெண்பா அளவியல் பேர்பெறும்
ஐந்துமுதல் பன்னிரண்டு பஃறொடை வெண்பா
பதிமூன்றும் மேலும் கலிவெண்பா வென்று
கதித்திடும் ஐவகைவெண் பா.
அடியாற் பெயராம் குறள்வெண்பா சிந்தியல்
ஓசையால் நேரிசை இன்னிசை வெண்பா
தொடையாலே பஃறொடை யே.
வெண்பா எனும்சொல் பொதுவில் குறிப்பது
வெண்பா வகையாம் அளவியல் ஆகும்
குறள்வெண்பா நீக்கி இதர வகைகள்
இரண்டு விதத்தில் இயற்றப் படுவன
நேரிசை இன்னிசை யென்று.
நேரிசை இன்னிசை யில்லாக் குறளொன்று
நேரிசை இன்னிசை நால்வகை பெற்றதால்
நேரிசை இன்னிசைச் யென்றிரு சிந்தியல்
நேரிசை இன்னிசை யென்று அளவியல்
நேரிசை இன்னிசை யென்றிரு பஃறொடை
நேரிசை இன்னிசை யென்று கலிவெண்பா
ஆகவெண் பாவொன் பது.
*****
வெண்பா வடிகளின் மேலெல்லை யெண்வைத்தே
வெண்பா வகைகள் பெயரிடப் பட்டன.
வெண்பா வகைகளாம் ஐந்து.
குறள்வெண்பா சிந்தியல் மற்றும் அளவியல்
பஃறொடை மற்றும் கலிவெண்பா என்று
உறழும் வகைகளாம் ஐந்து.
அடிகள் இரண்டில் குறட்பா வருமே
அடிமூன்று வந்திடின் சிந்தியல் வெண்பாவாம்
நாலடி வெண்பா அளவியல் பேர்பெறும்
ஐந்துமுதல் பன்னிரண்டு பஃறொடை வெண்பா
பதிமூன்றும் மேலும் கலிவெண்பா வென்று
கதித்திடும் ஐவகைவெண் பா.
அடியாற் பெயராம் குறள்வெண்பா சிந்தியல்
ஓசையால் நேரிசை இன்னிசை வெண்பா
தொடையாலே பஃறொடை யே.
வெண்பா எனும்சொல் பொதுவில் குறிப்பது
வெண்பா வகையாம் அளவியல் ஆகும்
குறள்வெண்பா நீக்கி இதர வகைகள்
இரண்டு விதத்தில் இயற்றப் படுவன
நேரிசை இன்னிசை யென்று.
நேரிசை இன்னிசை யில்லாக் குறளொன்று
நேரிசை இன்னிசை நால்வகை பெற்றதால்
நேரிசை இன்னிசைச் யென்றிரு சிந்தியல்
நேரிசை இன்னிசை யென்று அளவியல்
நேரிசை இன்னிசை யென்றிரு பஃறொடை
நேரிசை இன்னிசை யென்று கலிவெண்பா
ஆகவெண் பாவொன் பது.
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
6.14. பழந்தமிழ் வெண்பா நூல்கள்
முற்றிலும் வெண்பாவா லான பழந்தமிழ்
மற்றும் இடைக்காலப் பிற்கால நூல்வகை
சிற்சில காண்போம் இனி.
அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டும்
பனுவல் திருக்குறள் முற்றும் குறள்வெண்பா
தெய்வப் புலவர் படைப்பு.
களவழி நாற்பது ஆசாரக் கோவை
அளவியல் வெண்பா அறநெறி நூல்களில்
சிற்சில பாக்களில் சிந்தியல் வெண்பாவும்
பஃறொடைவெண் பாவும் வரும்.
ஔவையின் மூதுரை நல்வழி நாலடியார்
செவ்விதின் நீதிநெறி செப்பும் பனுவல்கள்
இன்னா இனியவை கார்கள நாற்பது
இன்னிலை கைந்நிலை நன்னெறி ஏலாதி
கப்பும் கிளையாய் இதுபோல் பலவகை
செப்பலில் சொல்லும் அறம்.
நளவெண்பா நாலா யிரதிவ்ய வெண்பா
அருட்பா சிவநேச வெண்பா சிலேடைகள்
அந்தாதி ஆன்மீகம் தண்டி யலங்காரம்
இந்தவிதம் வெண்பா விரிப்பு.
புலவர் குழந்தைத் தொடையதி காரம்
பலவகை நூல்கள் தரும்.
*****
முற்றிலும் வெண்பாவா லான பழந்தமிழ்
மற்றும் இடைக்காலப் பிற்கால நூல்வகை
சிற்சில காண்போம் இனி.
அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டும்
பனுவல் திருக்குறள் முற்றும் குறள்வெண்பா
தெய்வப் புலவர் படைப்பு.
களவழி நாற்பது ஆசாரக் கோவை
அளவியல் வெண்பா அறநெறி நூல்களில்
சிற்சில பாக்களில் சிந்தியல் வெண்பாவும்
பஃறொடைவெண் பாவும் வரும்.
ஔவையின் மூதுரை நல்வழி நாலடியார்
செவ்விதின் நீதிநெறி செப்பும் பனுவல்கள்
இன்னா இனியவை கார்கள நாற்பது
இன்னிலை கைந்நிலை நன்னெறி ஏலாதி
கப்பும் கிளையாய் இதுபோல் பலவகை
செப்பலில் சொல்லும் அறம்.
நளவெண்பா நாலா யிரதிவ்ய வெண்பா
அருட்பா சிவநேச வெண்பா சிலேடைகள்
அந்தாதி ஆன்மீகம் தண்டி யலங்காரம்
இந்தவிதம் வெண்பா விரிப்பு.
புலவர் குழந்தைத் தொடையதி காரம்
பலவகை நூல்கள் தரும்.
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
6.15. குறள் வெண்பா
பொதுவிலக்கணம்
வெண்பா இலக்கணம் பெற்றுக் குறள்வெண்பா
விண்டிடும் ஈரடி யில்.
ஒருவிகற்பத் தாலோ இருவிகற்பத் தாலோ
குறள்வெண்பா ஆகிடு மே.
ஒருவிகற்பம் வந்தால் இனக்குறள் வெண்பா
இரண்டில் விகற்பக் குறள்.
மோனை யெதுகை முரண்போல ஐந்தொடையால்
ஆன(து) இனக்குறட் பா.
பொருளின் செறிவால் அடிகள் இரண்டால்
தொடைகள் அமைவ தரிது.
விகற்பம் இரண்டாகச் செந்தொடை பெற்று
விகற்பக் குறட்பா வரும்.
விகற்பம் எனும்சொல் அடியெதுகை யெண்காட்டும்
செந்தொடையில் எத்தொடையும் இல்.
சிறப்பிலக்கணம்
புலவர் குழந்தை* குறிக்கும் சிறப்பு
பலவே குறட்பா விலே.
[*அவரது ’யாப்பதிகாரம்’ மற்றும் ’தொடையதிகாரம்’ நூல்கள்]
ஒருவிகற்பம் மோனை பொழிப்பில் அடிகள்
அரிதாய் ஒரூஉமிக மாண்பு.
[ஒருவிகற்பம்=ஒரே அடியெதுகை; பொழிப்பு மோனை=சீர்கள் 1-3-இல் மோனை;
ஒரூமோனை=சீர்கள் 1-4-இல் மோனை.]
எதுகைச் சிறப்பு அடிகளில் காணுக
மோனையில் சீர்கள் சிறப்பு.
அடியெதுகை யில்லாத போது ஒரூஉ
வெதுகை யமைதல் சிறப்பு.
தொடைகள் பலவகை வந்தால் அவற்றில்
பொழிப்புமோனை யாகும் சிறப்பு.
மோனை பொழிப்பிலா வேறு தொடையில்
ஒரூஉ வெதுகை சிறப்பு.
செந்தொடை வந்தாலோ செப்பலோசை தப்பாது
வந்திட வேண்டும் குறள்.
மோனை எதுகை வலிந்துகொளல் இல்லாது
ஆனதே செந்தொடை யாம்.
விகற்பக் குறளிலும் மோனை வருதல்
சிறப்பெனக் கொள்ளுதல் நன்று.
எழுசீர் சிறுமையிலும் இத்தனை பாங்கில்
எழுதுதல் வேண்டுமே இன்று.
இனிவரும் அத்தியா யத்திலே காண்போம்
நனிமிகு பாக்குறள் சான்று.
*****
பொதுவிலக்கணம்
வெண்பா இலக்கணம் பெற்றுக் குறள்வெண்பா
விண்டிடும் ஈரடி யில்.
ஒருவிகற்பத் தாலோ இருவிகற்பத் தாலோ
குறள்வெண்பா ஆகிடு மே.
ஒருவிகற்பம் வந்தால் இனக்குறள் வெண்பா
இரண்டில் விகற்பக் குறள்.
மோனை யெதுகை முரண்போல ஐந்தொடையால்
ஆன(து) இனக்குறட் பா.
பொருளின் செறிவால் அடிகள் இரண்டால்
தொடைகள் அமைவ தரிது.
விகற்பம் இரண்டாகச் செந்தொடை பெற்று
விகற்பக் குறட்பா வரும்.
விகற்பம் எனும்சொல் அடியெதுகை யெண்காட்டும்
செந்தொடையில் எத்தொடையும் இல்.
சிறப்பிலக்கணம்
புலவர் குழந்தை* குறிக்கும் சிறப்பு
பலவே குறட்பா விலே.
[*அவரது ’யாப்பதிகாரம்’ மற்றும் ’தொடையதிகாரம்’ நூல்கள்]
ஒருவிகற்பம் மோனை பொழிப்பில் அடிகள்
அரிதாய் ஒரூஉமிக மாண்பு.
[ஒருவிகற்பம்=ஒரே அடியெதுகை; பொழிப்பு மோனை=சீர்கள் 1-3-இல் மோனை;
ஒரூமோனை=சீர்கள் 1-4-இல் மோனை.]
எதுகைச் சிறப்பு அடிகளில் காணுக
மோனையில் சீர்கள் சிறப்பு.
அடியெதுகை யில்லாத போது ஒரூஉ
வெதுகை யமைதல் சிறப்பு.
தொடைகள் பலவகை வந்தால் அவற்றில்
பொழிப்புமோனை யாகும் சிறப்பு.
மோனை பொழிப்பிலா வேறு தொடையில்
ஒரூஉ வெதுகை சிறப்பு.
செந்தொடை வந்தாலோ செப்பலோசை தப்பாது
வந்திட வேண்டும் குறள்.
மோனை எதுகை வலிந்துகொளல் இல்லாது
ஆனதே செந்தொடை யாம்.
விகற்பக் குறளிலும் மோனை வருதல்
சிறப்பெனக் கொள்ளுதல் நன்று.
எழுசீர் சிறுமையிலும் இத்தனை பாங்கில்
எழுதுதல் வேண்டுமே இன்று.
இனிவரும் அத்தியா யத்திலே காண்போம்
நனிமிகு பாக்குறள் சான்று.
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
6.16. யாப்பமைதிக்கோர் அளவுகோல்
புலவர் குழந்தையின் நூல்கள் இரண்டு
பலவிதக் கூறு தரும்.
ஒவ்வோர் அடியிலும் மோனை பொழிப்பிலே
செவ்விதின் வேண்டும் வர.
குறள்சிந்து வெண்பா அடியெதுகை ஒன்றாய்
வரவேண்டும் ஓர்விகற்ப மாய்.
ஒன்றோ இரண்டோ விகற்பம் அளவியலில்
நன்றாய் அமைதல் நலன்.
நேரிசை வெண்பா ஒரூஉ எதுகையும்
சீருடன் வேண்டும் வர.
பொழிப்பினில் மோனை இயலாத போது
பொழிப்பில் எதுகை நலம்.
சிறுபான்மை மோனை எதுகை ஒரூஉ
வருதலே பாவில் தகும்.
வேறு தொடைகள் அமையினும் கூடவே
மேலுள்ள வையே சிறப்பு.
யாப்பமைதிக் கூறுகள் காணவே புள்ளிதந்தால்
பாக்கள் அளத்தல் எளிது.
ஓர்விகற்பம் மோனை பொழிப்பு அதேஎழுத்து
நூறு சதவிகித மாம்.
கீழ்வரும் அட்டவணை சொல்லும் பிறவகைக்
கூறுகளின் புள்ளி களை.
*****
புலவர் குழந்தையின் நூல்கள் இரண்டு
பலவிதக் கூறு தரும்.
ஒவ்வோர் அடியிலும் மோனை பொழிப்பிலே
செவ்விதின் வேண்டும் வர.
குறள்சிந்து வெண்பா அடியெதுகை ஒன்றாய்
வரவேண்டும் ஓர்விகற்ப மாய்.
ஒன்றோ இரண்டோ விகற்பம் அளவியலில்
நன்றாய் அமைதல் நலன்.
நேரிசை வெண்பா ஒரூஉ எதுகையும்
சீருடன் வேண்டும் வர.
பொழிப்பினில் மோனை இயலாத போது
பொழிப்பில் எதுகை நலம்.
சிறுபான்மை மோனை எதுகை ஒரூஉ
வருதலே பாவில் தகும்.
வேறு தொடைகள் அமையினும் கூடவே
மேலுள்ள வையே சிறப்பு.
யாப்பமைதிக் கூறுகள் காணவே புள்ளிதந்தால்
பாக்கள் அளத்தல் எளிது.
ஓர்விகற்பம் மோனை பொழிப்பு அதேஎழுத்து
நூறு சதவிகித மாம்.
கீழ்வரும் அட்டவணை சொல்லும் பிறவகைக்
கூறுகளின் புள்ளி களை.
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
6.17. இனக்குறள் சான்றுகள்
வள்ளுவர் யாப்பிற்(கு) அளவுகோல் ஏதுமில்லை
உள்ளுவது சொல்லும் உளி.
யாப்பின் இலக்கணக் கூறுகள் யாவுமே
பாக்களில் காணும் குறள்.
மோனை எதுகை இனக்குறட் பாக்களில்
ஆனது அர்த்தம் பொறுத்து.
எதுகையும் மோனையும் இல்லாக் குறளும்
பொதுவில் பதியும் உளம்.
அன்றுமுதல் இன்றுவரை வெண்பாவே உள்ளத்தை
நன்றாக ஈர்த்திடும் பா.
வெண்பா வகையினில் செய்யுள் முனையவே
நண்பனாம் யாப்பமைதிக் கோல்.
பல்வகைச் சோதனை அன்றைய யாப்பிலே
வல்லதைக் கொள்ளவேண்டும் நாம்.
தமிழில் மரபு தழைத்திட இன்று
உமிநீக்கிக் கொள்வோம் மணி.
மணியின் ஒலியில் பொருளின் செறிவை
அணிசெய்த லேவெண்பா யாப்பு.
சான்றுகள்
குறள் 1.
அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்
திறனறிந் தாங்கே திரு.
--திருக்குறள் 018:09
[ஒருவிகற்பம் அதே எழுத்து; அளவடி: பொழிப்பு மோனை அதே எழுத்து;
சிந்தடி: பொழிப்பு மோனை அதே எழுத்து.]
இதேபோல் சில குறட்பாக்களை அளவிட்டதில் கிடைத்தவை கீழே:
குறள் 2.
இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.
--திருக்குறள் 010:10
[ஒருவிகற்பம் அதே; அளவடி: பொழிப்பு மோனை அதே;
சிந்தடி: பொழிப்பு மோனை கிளையெழுத்து.]
குறள் 3.
சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.
--திருக்குறள் 020:10
[ஒருவிகற்பம் அதே; அளவடி: ஒரூஉ மோனை;
சிந்தடி: பொழிப்பு மோனை அதே.]
குறள் 4.
மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்.
--திருக்குறள் 006:02
[ஒருவிகற்பம் அதே; அளவடி: ஒரூஉ மோனை;
சிந்தடி: பொழிப்பு மோனை கிளை.]
குறள் 5.
அற்றாரைத் தேறுத லோம்புக மற்றவர்
பற்றிலர் நாணார் பழி.
--திருக்குறள் 051:06
[ஒருவிகற்பம் அதே; அளவடி: ஒரூஉ எதுகை;
சிந்தடி: பொழிப்பு மோனை அதே.]
குறள் 6.
ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு.
--திருக்குறள் 022:05
[ஒருவிகற்பம் கிளையெழுத்து; அளவடி: ஒரூஉ மோனை;
சிந்தடி: பொழிப்பு மோனை கிளை.]
குறள் 7.
ஒறுத்தாரை யொன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து.
--திருக்குறள் 015:05
[ஒருவிகற்பம் அதே; சிந்தடி: பொழிப்பு மோனை அதே.]
குறள் 8.
பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து
அறம்பொருள் கண்டார்கண் இல்.
--திருக்குறள் 015:01
[ஒருவிகற்பம் அதே; அளவடி: பொழிப்பு மோனை கிளை.]
குறள் 9.
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.
--திருக்குறள் 016:01
[ஒருவிகற்பம் அதே; அளவடி: ஒரூஉ மோனை.]
குறள் 10.
பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க
நோதக்க நட்டார் செயின்.
--திருக்குறள் 081:05
[ஒருவிகற்பம் கிளை; அளவடி: பொழிப்பு மோனை கிளை;]
குறள் 11.
வித்தும் இடல்வேண்டுங் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம்.
--திருக்குறள் 009:05
[ஒருவிகற்பம் கிளை; அளவடி: ஒரூஉ மோனை.]
குறள் 12.
அகலா தணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்.
--திருக்குறள் 070:01
[ஒருவிகற்பம் அதே.]
*****
வள்ளுவர் யாப்பிற்(கு) அளவுகோல் ஏதுமில்லை
உள்ளுவது சொல்லும் உளி.
யாப்பின் இலக்கணக் கூறுகள் யாவுமே
பாக்களில் காணும் குறள்.
மோனை எதுகை இனக்குறட் பாக்களில்
ஆனது அர்த்தம் பொறுத்து.
எதுகையும் மோனையும் இல்லாக் குறளும்
பொதுவில் பதியும் உளம்.
அன்றுமுதல் இன்றுவரை வெண்பாவே உள்ளத்தை
நன்றாக ஈர்த்திடும் பா.
வெண்பா வகையினில் செய்யுள் முனையவே
நண்பனாம் யாப்பமைதிக் கோல்.
பல்வகைச் சோதனை அன்றைய யாப்பிலே
வல்லதைக் கொள்ளவேண்டும் நாம்.
தமிழில் மரபு தழைத்திட இன்று
உமிநீக்கிக் கொள்வோம் மணி.
மணியின் ஒலியில் பொருளின் செறிவை
அணிசெய்த லேவெண்பா யாப்பு.
சான்றுகள்
குறள் 1.
அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்
திறனறிந் தாங்கே திரு.
--திருக்குறள் 018:09
[ஒருவிகற்பம் அதே எழுத்து; அளவடி: பொழிப்பு மோனை அதே எழுத்து;
சிந்தடி: பொழிப்பு மோனை அதே எழுத்து.]
இதேபோல் சில குறட்பாக்களை அளவிட்டதில் கிடைத்தவை கீழே:
குறள் 2.
இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.
--திருக்குறள் 010:10
[ஒருவிகற்பம் அதே; அளவடி: பொழிப்பு மோனை அதே;
சிந்தடி: பொழிப்பு மோனை கிளையெழுத்து.]
குறள் 3.
சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.
--திருக்குறள் 020:10
[ஒருவிகற்பம் அதே; அளவடி: ஒரூஉ மோனை;
சிந்தடி: பொழிப்பு மோனை அதே.]
குறள் 4.
மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்.
--திருக்குறள் 006:02
[ஒருவிகற்பம் அதே; அளவடி: ஒரூஉ மோனை;
சிந்தடி: பொழிப்பு மோனை கிளை.]
குறள் 5.
அற்றாரைத் தேறுத லோம்புக மற்றவர்
பற்றிலர் நாணார் பழி.
--திருக்குறள் 051:06
[ஒருவிகற்பம் அதே; அளவடி: ஒரூஉ எதுகை;
சிந்தடி: பொழிப்பு மோனை அதே.]
குறள் 6.
ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு.
--திருக்குறள் 022:05
[ஒருவிகற்பம் கிளையெழுத்து; அளவடி: ஒரூஉ மோனை;
சிந்தடி: பொழிப்பு மோனை கிளை.]
குறள் 7.
ஒறுத்தாரை யொன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து.
--திருக்குறள் 015:05
[ஒருவிகற்பம் அதே; சிந்தடி: பொழிப்பு மோனை அதே.]
குறள் 8.
பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து
அறம்பொருள் கண்டார்கண் இல்.
--திருக்குறள் 015:01
[ஒருவிகற்பம் அதே; அளவடி: பொழிப்பு மோனை கிளை.]
குறள் 9.
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.
--திருக்குறள் 016:01
[ஒருவிகற்பம் அதே; அளவடி: ஒரூஉ மோனை.]
குறள் 10.
பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க
நோதக்க நட்டார் செயின்.
--திருக்குறள் 081:05
[ஒருவிகற்பம் கிளை; அளவடி: பொழிப்பு மோனை கிளை;]
குறள் 11.
வித்தும் இடல்வேண்டுங் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம்.
--திருக்குறள் 009:05
[ஒருவிகற்பம் கிளை; அளவடி: ஒரூஉ மோனை.]
குறள் 12.
அகலா தணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்.
--திருக்குறள் 070:01
[ஒருவிகற்பம் அதே.]
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
6.18. விகற்பக்குறள் சான்றுகள்
இனக்குறள் ஓரெதுகை யென்றால் விகற்பக்
குறளின் எதுகை யிரண்டு.
விகற்பக் குறளில் பொதுவாய் ஒரூஉ
எதுகை அமையுமே வந்து.
நேரிசை வெண்பா ஒரூஉ எதுகைக்
குறள்வழி வந்ததென் பர்.
சான்றுகள் (ஒரூஉ எதுகை)
மனத்துக்கண் மாசிலன் னாதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற.
---திருக்குறள் 004:04
ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.
---திருக்குறள் 014:01
உருவுகண் டெள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்
கச்சாணி யன்னார் உடைத்து.
---திருக்குறள் 067:07
அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலுமென் நெஞ்சு.
---திருக்குறள் 109:01
சான்றுகள் (செந்தொடை)
அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்.
---திருக்குறள் 007:04
யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையும் கல்லாத வாறு.
---திருக்குறள் 040:07
அறிஞர் இயம்பிய உள்ளத்தும் வைக்குமே
நன்னுதல் நோக்கோர் வளம்.
--யாப்பருங்கலச் சான்று
*****
இனக்குறள் ஓரெதுகை யென்றால் விகற்பக்
குறளின் எதுகை யிரண்டு.
விகற்பக் குறளில் பொதுவாய் ஒரூஉ
எதுகை அமையுமே வந்து.
நேரிசை வெண்பா ஒரூஉ எதுகைக்
குறள்வழி வந்ததென் பர்.
சான்றுகள் (ஒரூஉ எதுகை)
மனத்துக்கண் மாசிலன் னாதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற.
---திருக்குறள் 004:04
ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.
---திருக்குறள் 014:01
உருவுகண் டெள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்
கச்சாணி யன்னார் உடைத்து.
---திருக்குறள் 067:07
அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலுமென் நெஞ்சு.
---திருக்குறள் 109:01
சான்றுகள் (செந்தொடை)
அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்.
---திருக்குறள் 007:04
யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையும் கல்லாத வாறு.
---திருக்குறள் 040:07
அறிஞர் இயம்பிய உள்ளத்தும் வைக்குமே
நன்னுதல் நோக்கோர் வளம்.
--யாப்பருங்கலச் சான்று
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
6.19. திருக்குறளில் பொருள்சிறக்க வரும் முரண்தொடை
முரண்படச் சொல்லோ பொருளோ தொடுத்தால்
முரண்தொடை வந்திடும் காண்.
அறத்தினைக் கற்பிக்கும் நூல்கள் அதோடு
மறத்தையும் சொல்வது உண்டு.
அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை.
---திருக்குறள் 008:06
நல்லது சொல்கிற செய்யுளில் கூடவே
அல்லதும் சொன்னால் அழகு.
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்.
---திருக்குறள் 010:06
நல்லதும் அல்லதும் பக்கத்தில் நின்றிட
நல்லதின் தன்மை மிகும்.
முரண்படும் செய்திகள் சொல்கிற போது
முரண்படும் சொற்கள் வரும்.
அறநூல் களிலே இதுபோல மிக்க
முரண்தொடை வந்திடு மே.
முரண்தொடை சீர்த்து வருகிற ஓர்நூல்
திருக்குறள் என்றிட லாம்.
முரண்தொடை யால்பொருள் சீர்த்து விளங்கிடும்
வள்ளுவர் பாக்கள் சில.
பொருளை விளக்க வருவது சொல்முரண்:
செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு.
---திருக்குறள் 009:06 ... [செல்விருந்து வருவிருந்து]
மகன்தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்லெனும் சொல்.
---திருக்குறள் 007:10 ... [மகன் தந்தை]
தந்தை மகன்மற்றும் செல்-வரு என்றது
சொல்லினில் மட்டும் முரண்.
சொல்லில் பொருளில் முரண்வரும் பாக்கள்:
இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.
---திருக்குறள் 010:10 ... [இனிய இன்னாத, கனி காய்]
இனிய பதத்தின் பொருள்முரண் இன்னாத
காய்-கனி சொல்முர ணாம்.
தக்கார் தகவிலர் என்ப தவரவர்
எச்சத்தாற் காணப் படும்.
---திருக்குறள் 012:04 ... [தக்கார் தகவிலர்]
தக்கார் தகவிலர் என்று பொருளொடு
சொல்லும் முரணுத லாம்.
*****
முரண்படச் சொல்லோ பொருளோ தொடுத்தால்
முரண்தொடை வந்திடும் காண்.
அறத்தினைக் கற்பிக்கும் நூல்கள் அதோடு
மறத்தையும் சொல்வது உண்டு.
அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை.
---திருக்குறள் 008:06
நல்லது சொல்கிற செய்யுளில் கூடவே
அல்லதும் சொன்னால் அழகு.
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்.
---திருக்குறள் 010:06
நல்லதும் அல்லதும் பக்கத்தில் நின்றிட
நல்லதின் தன்மை மிகும்.
முரண்படும் செய்திகள் சொல்கிற போது
முரண்படும் சொற்கள் வரும்.
அறநூல் களிலே இதுபோல மிக்க
முரண்தொடை வந்திடு மே.
முரண்தொடை சீர்த்து வருகிற ஓர்நூல்
திருக்குறள் என்றிட லாம்.
முரண்தொடை யால்பொருள் சீர்த்து விளங்கிடும்
வள்ளுவர் பாக்கள் சில.
பொருளை விளக்க வருவது சொல்முரண்:
செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு.
---திருக்குறள் 009:06 ... [செல்விருந்து வருவிருந்து]
மகன்தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்லெனும் சொல்.
---திருக்குறள் 007:10 ... [மகன் தந்தை]
தந்தை மகன்மற்றும் செல்-வரு என்றது
சொல்லினில் மட்டும் முரண்.
சொல்லில் பொருளில் முரண்வரும் பாக்கள்:
இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.
---திருக்குறள் 010:10 ... [இனிய இன்னாத, கனி காய்]
இனிய பதத்தின் பொருள்முரண் இன்னாத
காய்-கனி சொல்முர ணாம்.
தக்கார் தகவிலர் என்ப தவரவர்
எச்சத்தாற் காணப் படும்.
---திருக்குறள் 012:04 ... [தக்கார் தகவிலர்]
தக்கார் தகவிலர் என்று பொருளொடு
சொல்லும் முரணுத லாம்.
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
6.20. திருக்குறளில் நிரோட்ட/இதழகல் குறட்பாக்கள்
ஓஷ்டம் எனும்சொல் உதட்டுக்கு சம்ஸ்க்ருதத்தில்.
ஓட்டம் இதன்தமிழ்ச் சொல்.
உதடுகள் ஒட்டினால் ஓஷ்டம் நிரோஷ்டம்
உதடுகள் ஒட்டாத து.
நிரோஷ்டம் தமிழினில் ஆகும் நிரோட்டம்
இதழகல் இன்னோர் பெயர்.
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.
---திருக்குறள் 035:01
இதழகல் என்ற நிரோட்டப்பா உத்திக்கு
இக்குறள் சீர்மிகு சான்று.
இளங்கோவன் மின்வலையில் வேறுபல காண்க
அவற்றி லிருந்து சில.
அவர்தரும் முற்றும் இதழகல் பாக்கள்
இனிவரும் மூன்று குறள்.
இறந்தார் இறந்தா ரனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை.
---திருக்குறள் 031:10
எய்தற் கரிய தியைந்தகாண் அந்னிலையே
செய்தற் கரிய செயல்.
---திருக்குறள் 049:09
நோக்கினாள் நோக்கெதிர் நோக்குநல் தாக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து.
---திருக்குறள் 109:02
முற்றும் இதழகலா வேறுசில பாக்களில்
சிற்சில காண்போம் இனி.
கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது
தூக்கங் கடிந்து செயல்.
---திருக்குறள் 067:08
தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயா தடியுறைத் தற்று.
---திருக்குறள் 021:08
நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே
ஒட்டாரை ஒட்டிக் கொளல்.
---திருக்குறள் 068:09
நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய
வாயின ராத லரிது.
---திருக்குறள் 042:09
மீதமுள்ள பாக்குறள்கள் அன்னாரின் கீழுள்ள
மின்தளத்தில் உள்ளன வே.
http://muelangovan.blogspot.in/2012/03/blog-post_26.html
நிரோட்டம் இதழகலுக் காகா எழுத்துகள்
கீழ்வரு மாறு கணக்கு.
உ,ஊ,ஒ,ஓ,ஔ உயிர்களுடன்,
ப், ம், வ் மெய்களும் சேர்ந்து 8
ப்,ம்,வ் ௧௨ உயிர்கள் உறழ்ந்து 36
உ,ஊ,ஒ,ஓ,ஔ x15மெய்யுடன்
உறழ்ந்து,(ப்,ம்,வ் நீங்கலாக) 75
ஆக 119.
பார்க்க:
http://muelangovan.blogspot.in/2012/03/blog-post_26.html
*****
ஓஷ்டம் எனும்சொல் உதட்டுக்கு சம்ஸ்க்ருதத்தில்.
ஓட்டம் இதன்தமிழ்ச் சொல்.
உதடுகள் ஒட்டினால் ஓஷ்டம் நிரோஷ்டம்
உதடுகள் ஒட்டாத து.
நிரோஷ்டம் தமிழினில் ஆகும் நிரோட்டம்
இதழகல் இன்னோர் பெயர்.
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.
---திருக்குறள் 035:01
இதழகல் என்ற நிரோட்டப்பா உத்திக்கு
இக்குறள் சீர்மிகு சான்று.
இளங்கோவன் மின்வலையில் வேறுபல காண்க
அவற்றி லிருந்து சில.
அவர்தரும் முற்றும் இதழகல் பாக்கள்
இனிவரும் மூன்று குறள்.
இறந்தார் இறந்தா ரனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை.
---திருக்குறள் 031:10
எய்தற் கரிய தியைந்தகாண் அந்னிலையே
செய்தற் கரிய செயல்.
---திருக்குறள் 049:09
நோக்கினாள் நோக்கெதிர் நோக்குநல் தாக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து.
---திருக்குறள் 109:02
முற்றும் இதழகலா வேறுசில பாக்களில்
சிற்சில காண்போம் இனி.
கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது
தூக்கங் கடிந்து செயல்.
---திருக்குறள் 067:08
தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயா தடியுறைத் தற்று.
---திருக்குறள் 021:08
நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே
ஒட்டாரை ஒட்டிக் கொளல்.
---திருக்குறள் 068:09
நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய
வாயின ராத லரிது.
---திருக்குறள் 042:09
மீதமுள்ள பாக்குறள்கள் அன்னாரின் கீழுள்ள
மின்தளத்தில் உள்ளன வே.
http://muelangovan.blogspot.in/2012/03/blog-post_26.html
நிரோட்டம் இதழகலுக் காகா எழுத்துகள்
கீழ்வரு மாறு கணக்கு.
உ,ஊ,ஒ,ஓ,ஔ உயிர்களுடன்,
ப், ம், வ் மெய்களும் சேர்ந்து 8
ப்,ம்,வ் ௧௨ உயிர்கள் உறழ்ந்து 36
உ,ஊ,ஒ,ஓ,ஔ x15மெய்யுடன்
உறழ்ந்து,(ப்,ம்,வ் நீங்கலாக) 75
ஆக 119.
பார்க்க:
http://muelangovan.blogspot.in/2012/03/blog-post_26.html
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
6.21. திருக்குறளில் ஓட்டம்/இதழுறல் குறட்பாக்கள்
நிரோட்டம் இதழகல் ஒட்டாமை ஒட்டுவது
ஓட்டம் இதழுற லால்.
ஓட்டம் இதழுறல் காணும் குறட்பாக்கள்
பின்வரும் சான்றுகள் போல்.
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.
---திருக்குறள் 035:10
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.
---திருக்குறள் 002:02
6.22. ஔவையின் குறள்மூலம்
ஔவை அருளிய ஞானக் குறளாம்
குறள்மூலம் பாக்கள் சில.
மாசற்றக் கொள்கை மனத்தி லடைந்தக்கால்
ஈசனைக் காட்டு முடம்பு. 016
எழுபத் தீராய நாடி யவற்றுள்
முழுபத்து நாடி முதல். 031
முன்னைப் பிறப்பின் முயன்ற தவத்தினால்
பின்னைப் பெறுமுணர்வு தான். 084
பத்துத் திசையும் பரந்த கடலுலகும்
ஒத்தெங்கும் நிற்குஞ் சிவம். 191
பற்றிலா தொன்றினைப் பற்றினா லல்லது
கற்றதனா லென்ன பயன். 214
சாகா திருந்த தலமே மவுனமது
ஏகாந்த மாக விரு. 272
6.23. குறள்வெண்பாவில் ஹைக்கூ
அசைகள் பதினேழில் ஜப்பானின் ஹைக்கூவாம்.
மூன்று வரியில் மனது.
இரண்டு வரிகளில் ஈரசை மூவசைச்
சீர்களேழு வந்து இறுதிச்சீர் ஓரசையாய்
முற்றும் குறள்வெண்பா ஏற்ற வடிவம்
தமிழ்மொழியில் ஹைக்கூ எழ.
கீழெல்லை ஈரசை மொத்தம் பதிமூன்று
மேலெல்லை மூவசை பத்துடன் ஒன்பது
காய்ச்சீர் இயற்சீர் இணைப்பில் இடையெல்லை
போதாதா ஹைக்கூ எழ?
தமிழ்மொழியில் ஹைக்கூ குறளில் எழும்போது
ஐக்குறள் என்போம் அதை.
அணுக்குறள் என்றும் துளிக்குறள் என்றும்
அழக்கலாம் என்போம் இதை.
*****
இயற்கை முரண்காட்டி வெட்டும் பதமொன்றில்
சேருமே ஹைக்கூவில் காண்.
பனித்துளி ஆவியாகும்; வையம் பனித்துளி.
ஓர்நொடியில் போகும் புதிது.
புகழ்பெற்ற ஜப்பான்ய ஹைக்கூ கவிஞராம்
இஸ்ஸாவின் ஹைக்கூ இது.
வேறுசில ஜப்பான்ய ஹைக்கூ வரும்கீழே
ஐக்குறள் ரூபத்தில் நம்.
சேற்றிலே நாற்றுநடும் பெண்கள் அழகில்லை.
பாடிடும் தொல்பாட் டழகு. ... [ரைஃஜான்]
வளிக்காலம். கூட்டில் பசிமிக வீணாக
வாய்திறக்கும் இஸ்ஸாவோ தத்து. ... [இஸ்ஸா]
அழகான கிண்ணத்தில் பூக்கள் அமைப்போமா?
உண்பதற்கு இல்லை உணவு. ... [பாஷோ]
கீழ்விழுந்த பூவா கிளைக்குத் திரும்புவது?
வெண்பட்டுப் பூச்சியே ஓ! ... [மோரிடாகே]
*****
முதல்வரியில் காட்சி. இரண்டினில் காரணம்.
ஐக்குறள் தட்டெழுதும் போது.
இப்படியோ அல்லது வேறு அமைப்பிலோ
ஐக்குறள் ஆக்குவோம் நாம்.
குறள்வடிவு மட்டும். எதுகைமோனை கட்டில்லை.
தானே அமைந்தால் அழகு.
*****
அம்மா எனும்பசு அய்யோஓ என்கிறது.
வாயில் நெகிழிப்பை யோடு! ... [நெகிழி=plastic]
புல்லிருந்த பூமியை நக்கித் துடைத்திடும்.
நாயாய் அலையும் பசு.
எறும்புக்கு இட்ட அரிசிமாவுக் கோலம்.
கரந்துண்ணும் காக்கை அணில்.
சுட்டெரிக்கும் வெய்யில். சுவரோரம் வண்டி.
எருதுகள் வாயில் நுரை.
முன்னே ஒளிவெள்ளம். சாலை விருட்சம்.
சுவரில் எறிந்துசெல்லும் கார்.
*****
நிரோட்டம் இதழகல் ஒட்டாமை ஒட்டுவது
ஓட்டம் இதழுற லால்.
ஓட்டம் இதழுறல் காணும் குறட்பாக்கள்
பின்வரும் சான்றுகள் போல்.
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.
---திருக்குறள் 035:10
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.
---திருக்குறள் 002:02
6.22. ஔவையின் குறள்மூலம்
ஔவை அருளிய ஞானக் குறளாம்
குறள்மூலம் பாக்கள் சில.
மாசற்றக் கொள்கை மனத்தி லடைந்தக்கால்
ஈசனைக் காட்டு முடம்பு. 016
எழுபத் தீராய நாடி யவற்றுள்
முழுபத்து நாடி முதல். 031
முன்னைப் பிறப்பின் முயன்ற தவத்தினால்
பின்னைப் பெறுமுணர்வு தான். 084
பத்துத் திசையும் பரந்த கடலுலகும்
ஒத்தெங்கும் நிற்குஞ் சிவம். 191
பற்றிலா தொன்றினைப் பற்றினா லல்லது
கற்றதனா லென்ன பயன். 214
சாகா திருந்த தலமே மவுனமது
ஏகாந்த மாக விரு. 272
6.23. குறள்வெண்பாவில் ஹைக்கூ
அசைகள் பதினேழில் ஜப்பானின் ஹைக்கூவாம்.
மூன்று வரியில் மனது.
இரண்டு வரிகளில் ஈரசை மூவசைச்
சீர்களேழு வந்து இறுதிச்சீர் ஓரசையாய்
முற்றும் குறள்வெண்பா ஏற்ற வடிவம்
தமிழ்மொழியில் ஹைக்கூ எழ.
கீழெல்லை ஈரசை மொத்தம் பதிமூன்று
மேலெல்லை மூவசை பத்துடன் ஒன்பது
காய்ச்சீர் இயற்சீர் இணைப்பில் இடையெல்லை
போதாதா ஹைக்கூ எழ?
தமிழ்மொழியில் ஹைக்கூ குறளில் எழும்போது
ஐக்குறள் என்போம் அதை.
அணுக்குறள் என்றும் துளிக்குறள் என்றும்
அழக்கலாம் என்போம் இதை.
*****
இயற்கை முரண்காட்டி வெட்டும் பதமொன்றில்
சேருமே ஹைக்கூவில் காண்.
பனித்துளி ஆவியாகும்; வையம் பனித்துளி.
ஓர்நொடியில் போகும் புதிது.
புகழ்பெற்ற ஜப்பான்ய ஹைக்கூ கவிஞராம்
இஸ்ஸாவின் ஹைக்கூ இது.
வேறுசில ஜப்பான்ய ஹைக்கூ வரும்கீழே
ஐக்குறள் ரூபத்தில் நம்.
சேற்றிலே நாற்றுநடும் பெண்கள் அழகில்லை.
பாடிடும் தொல்பாட் டழகு. ... [ரைஃஜான்]
வளிக்காலம். கூட்டில் பசிமிக வீணாக
வாய்திறக்கும் இஸ்ஸாவோ தத்து. ... [இஸ்ஸா]
அழகான கிண்ணத்தில் பூக்கள் அமைப்போமா?
உண்பதற்கு இல்லை உணவு. ... [பாஷோ]
கீழ்விழுந்த பூவா கிளைக்குத் திரும்புவது?
வெண்பட்டுப் பூச்சியே ஓ! ... [மோரிடாகே]
*****
முதல்வரியில் காட்சி. இரண்டினில் காரணம்.
ஐக்குறள் தட்டெழுதும் போது.
இப்படியோ அல்லது வேறு அமைப்பிலோ
ஐக்குறள் ஆக்குவோம் நாம்.
குறள்வடிவு மட்டும். எதுகைமோனை கட்டில்லை.
தானே அமைந்தால் அழகு.
*****
அம்மா எனும்பசு அய்யோஓ என்கிறது.
வாயில் நெகிழிப்பை யோடு! ... [நெகிழி=plastic]
புல்லிருந்த பூமியை நக்கித் துடைத்திடும்.
நாயாய் அலையும் பசு.
எறும்புக்கு இட்ட அரிசிமாவுக் கோலம்.
கரந்துண்ணும் காக்கை அணில்.
சுட்டெரிக்கும் வெய்யில். சுவரோரம் வண்டி.
எருதுகள் வாயில் நுரை.
முன்னே ஒளிவெள்ளம். சாலை விருட்சம்.
சுவரில் எறிந்துசெல்லும் கார்.
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
6.24. குறள்வெண்பாப் பயிற்சி
பயிற்சி 1. குறட்பா நேர்வரச் செய்தல்
http://kavithaiyilyappu-payirchchi.blogspot.in/2013/09/624-1.எச்டிஎம்எல்
கலைந்த குறட்பாக்கள் கட்டில் அமைக்க
விளைந்திடும் பாக்குறள் மூன்று.
விளைந்திடும் மூன்று குறட்பா முதற்சீர்
இயற்-உல தள்ளா வென.
கல்லா ரறிவிலா தார்.
வகுத்தலும் வல்ல தரசு.
தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
உலகத்தோ ரொட்ட ஒழுகல் பலகற்றுங்
செல்வருஞ் சேர்வது நாடு.
இயற்றலும் ஈட்டலும் காத்தலுங் காத்த
*****
பயிற்சி 1. குறட்பா நேர்வரச் செய்தல்
http://kavithaiyilyappu-payirchchi.blogspot.in/2013/09/624-1.எச்டிஎம்எல்
கலைந்த குறட்பாக்கள் கட்டில் அமைக்க
விளைந்திடும் பாக்குறள் மூன்று.
விளைந்திடும் மூன்று குறட்பா முதற்சீர்
இயற்-உல தள்ளா வென.
கல்லா ரறிவிலா தார்.
வகுத்தலும் வல்ல தரசு.
தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
உலகத்தோ ரொட்ட ஒழுகல் பலகற்றுங்
செல்வருஞ் சேர்வது நாடு.
இயற்றலும் ஈட்டலும் காத்தலுங் காத்த
*****
- Sponsored content
Page 22 of 29 • 1 ... 12 ... 21, 22, 23 ... 25 ... 29
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 22 of 29
|
|