புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கவிதையில் யாப்பு - Page 11 Poll_c10கவிதையில் யாப்பு - Page 11 Poll_m10கவிதையில் யாப்பு - Page 11 Poll_c10 
94 Posts - 45%
ayyasamy ram
கவிதையில் யாப்பு - Page 11 Poll_c10கவிதையில் யாப்பு - Page 11 Poll_m10கவிதையில் யாப்பு - Page 11 Poll_c10 
77 Posts - 37%
T.N.Balasubramanian
கவிதையில் யாப்பு - Page 11 Poll_c10கவிதையில் யாப்பு - Page 11 Poll_m10கவிதையில் யாப்பு - Page 11 Poll_c10 
12 Posts - 6%
Dr.S.Soundarapandian
கவிதையில் யாப்பு - Page 11 Poll_c10கவிதையில் யாப்பு - Page 11 Poll_m10கவிதையில் யாப்பு - Page 11 Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
கவிதையில் யாப்பு - Page 11 Poll_c10கவிதையில் யாப்பு - Page 11 Poll_m10கவிதையில் யாப்பு - Page 11 Poll_c10 
5 Posts - 2%
i6appar
கவிதையில் யாப்பு - Page 11 Poll_c10கவிதையில் யாப்பு - Page 11 Poll_m10கவிதையில் யாப்பு - Page 11 Poll_c10 
4 Posts - 2%
Srinivasan23
கவிதையில் யாப்பு - Page 11 Poll_c10கவிதையில் யாப்பு - Page 11 Poll_m10கவிதையில் யாப்பு - Page 11 Poll_c10 
3 Posts - 1%
Manimegala
கவிதையில் யாப்பு - Page 11 Poll_c10கவிதையில் யாப்பு - Page 11 Poll_m10கவிதையில் யாப்பு - Page 11 Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
கவிதையில் யாப்பு - Page 11 Poll_c10கவிதையில் யாப்பு - Page 11 Poll_m10கவிதையில் யாப்பு - Page 11 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
கவிதையில் யாப்பு - Page 11 Poll_c10கவிதையில் யாப்பு - Page 11 Poll_m10கவிதையில் யாப்பு - Page 11 Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதையில் யாப்பு - Page 11 Poll_c10கவிதையில் யாப்பு - Page 11 Poll_m10கவிதையில் யாப்பு - Page 11 Poll_c10 
443 Posts - 47%
heezulia
கவிதையில் யாப்பு - Page 11 Poll_c10கவிதையில் யாப்பு - Page 11 Poll_m10கவிதையில் யாப்பு - Page 11 Poll_c10 
330 Posts - 35%
Dr.S.Soundarapandian
கவிதையில் யாப்பு - Page 11 Poll_c10கவிதையில் யாப்பு - Page 11 Poll_m10கவிதையில் யாப்பு - Page 11 Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
கவிதையில் யாப்பு - Page 11 Poll_c10கவிதையில் யாப்பு - Page 11 Poll_m10கவிதையில் யாப்பு - Page 11 Poll_c10 
41 Posts - 4%
mohamed nizamudeen
கவிதையில் யாப்பு - Page 11 Poll_c10கவிதையில் யாப்பு - Page 11 Poll_m10கவிதையில் யாப்பு - Page 11 Poll_c10 
30 Posts - 3%
prajai
கவிதையில் யாப்பு - Page 11 Poll_c10கவிதையில் யாப்பு - Page 11 Poll_m10கவிதையில் யாப்பு - Page 11 Poll_c10 
8 Posts - 1%
Srinivasan23
கவிதையில் யாப்பு - Page 11 Poll_c10கவிதையில் யாப்பு - Page 11 Poll_m10கவிதையில் யாப்பு - Page 11 Poll_c10 
6 Posts - 1%
Karthikakulanthaivel
கவிதையில் யாப்பு - Page 11 Poll_c10கவிதையில் யாப்பு - Page 11 Poll_m10கவிதையில் யாப்பு - Page 11 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
கவிதையில் யாப்பு - Page 11 Poll_c10கவிதையில் யாப்பு - Page 11 Poll_m10கவிதையில் யாப்பு - Page 11 Poll_c10 
5 Posts - 1%
i6appar
கவிதையில் யாப்பு - Page 11 Poll_c10கவிதையில் யாப்பு - Page 11 Poll_m10கவிதையில் யாப்பு - Page 11 Poll_c10 
4 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதையில் யாப்பு


   
   

Page 11 of 29 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 20 ... 29  Next

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Thu Nov 08, 2012 8:38 am

First topic message reminder :

யாப்பிலக்கணம்: ஒரு கவிதை அறிமுகம்
ரமணி, ஆகஸ்ட்-செப்டம்பர், 2012

இந்தத் தொடர் ஒரு சோதனை முயற்சி.
தொடரின் நோக்கம் கற்றுத் தருவதைவிடப் பகிர்ந்துகொள்வது.
கடந்த சில நாட்களாக நான் யாப்பிலக்கணம் பயில இறங்கி, அது இன்னும் தொடரும்போதே,
என் முயற்சியில் நான் பெற்ற செய்திகளை, மகிழ்வினை, வியப்புகளை, திருப்தியை
வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வது முதல் நோக்கம்.

யாப்பிலக்கணத்தை உரைநடையில் தரும்போது நேரிடும் மித மிஞ்சிய சொற்களின் அளவைக் குறைத்து
எளிதில் படித்து, பார்த்து, நினைக்க உதவும் வகையில்
கவிதை வரிகளில் தருவது தொடரின் இரண்டாவது நோக்கம்.

அப்படித் தரும்போது அது வாசகர்களுக்குப் பயன்தந்து, பிற நூல்களின் மூலம்
யாப்பிலக்கணம் மேலும் நன்கு பயில ஊக்கம் அளிக்கும் என்ற நம்பிக்கை மூன்றாவது நோக்கம்.

யாப்பின் ஒழுங்கில், இன்றைய வழக்கில் கவிதை புனைவது
வேறு விதத்தில் எழுதுவது போன்றே எளிதில் வருவது,
அதைவிட அதிகப் பெருமையும் திருப்தியும் தருவது
என்று இத்தொடரில் காட்டிட முயல்கிறேன்.

தொடரின் நிறை குறை பற்றிக் கவிதை ஆர்வலர்கள் அப்போதைக்கப்போதே பின்னூட்டம் இடலாம்.
வரும் பின்னூட்டங்களின் சீரிய கருத்துக்களை எடுத்தாண்டு, குறைகளைக் கூடியமட்டும் திருத்தி,
இறுதியில் எல்லோருக்கும் பயன்படும் வகையில் ஒரு மின்னூலாக்குவது என் இலக்கு.





ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Fri Jan 11, 2013 9:28 pm

4.63. குறளடிப் பயிற்சி: விடைகள்
பயிற்சி 1. கட்டளைக் குறளடி யமைத்தல்: விடை


மாலைப் பொழுதினில்
சாலை வழியினில்
வாலைக் குமரியால்
பாலை வனமெலாம்
சோலைக ளானதே!

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sat Jan 12, 2013 5:47 am

பயிற்சி 2. சீர்வகைக் குறளடி
http://kavithaiyilyappu.blogspot.in/p/body-line-height-1_5100.html

குழந்தைக் கவிஞர் வள்ளியப் பாவின்
குழந்தைப் பாட்டிது குறளடி பத்தில்
கலைந்த சீர்களை ஒழுங்கில் அமைத்து
தொலைந்த பாடலைக் கண்டறிந் தெழுதுக.

தித்திக்கும் அழகான
மல்கோவா இங்கேஓடி
சேலத்து வேண்டுமா
பங்குபோட்டுத் மாம்பழம்!
மாம்பழம் தங்கநிற
மாம்பழம் மாம்பழம்
மாம்பழம் அல்வாபோன்ற
மாம்பழம் மாம்பழமாம்
உங்களுக்கு மாம்பழம்
தின்னலாம்! வாருங்கள்


*****


சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sat Jan 12, 2013 4:20 pm

பயனுள்ள பதிவை , தொடர்ந்து தருவதற்கு மிக்க நன்றி...




சதாசிவம்
கவிதையில் யாப்பு - Page 11 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sat Jan 12, 2013 4:30 pm

மகிழ்ச்சி சதாசிவம் அவர்களே! யாரேனும் என் வலைப்பூவில் உள்ள பயிற்சிகள் முயன்றார்களா என்று அறிய ஆவல்.

அன்புடன்,
ரமணி


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sat Jan 12, 2013 4:46 pm

பயிற்சி 2. சீர்வகைக் குறளடி: விடை

மாம்பழமாம் மாம்பழம்
மல்கோவா மாம்பழம்!
சேலத்து மாம்பழம்
தித்திக்கும் மாம்பழம்
அழகான மாம்பழம்
அல்வாபோன்ற மாம்பழம்
தங்கநிற மாம்பழம்
உங்களுக்கு வேண்டுமா
இங்கேஓடி வாருங்கள்
பங்குபோட்டுத் தின்னலாம்!


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Mon Jan 14, 2013 6:48 pm

4.64. சிந்தடி

(நிலைமண்டில ஆசிரியப்பா)
இருதளை யடுத்தே இயலும் சிந்தடி
சீர்வகை யாயின் முச்சீர் அமையும்
எழுத்தடி யாயின் ஏழெட் டொன்பதே.


வஞ்சிப் பாவிற் குரித்தென அமையினும்
வெண்பா ஈற்றடி சிந்தடி யாய்வரும்
நேரிசை யகவலின் ஈற்றய லடியிலும்
இணைக்குற ளகவலின் இடையிலும் வருமே.

தொல்காப்பியம் தரும் அடிகளின் பெயர்கள்
எழுத்துகள் கொண்டு இயல்வன ஆயினும்
சங்க காலம் தொட்டே பாக்கள்
சீர்வகை அடிகளில் யாக்கப் பட்டன
இதனால்
சீர்களை எண்ணியே அடிகளின் பெயர்களைச்
காரிகை போன்ற நூல்களும் குறித்தன
எழுத்துகள் எண்ணும் கட்டளை அடிகள்
வழக்கில் வந்தது பிற்கா லத்தே.

கட்டளைச் சிந்தடிச் சான்று:
அடிகள் தோறும் எழுத்துகள் ஒன்பதில்
முடிவுறும் சிந்தடிச் சான்று கீழே.
இவ்வகை அடிகள் வருவன அரிதே.

இருது வேற்றுமை யின்மையாற்
சுருதி மேற்றுறக் கத்தினோ
டரிது வேற்றுமை யாகவே
கருது வேற்றடங் கையினாய்
---தோலாமொழித் தேவர், சூளாமணி, 736

சீர்வகைச் சிந்தடிச் சான்று:
வாளா வார்கழல் வீக்கிய
தாளார் தாமுடைந் தோடினார்
நாளை நாணுடை மங்கைமார்
தோளை நாணிலர் தோயவே.
---தோலாமொழித் தேவர், சூளாமணி, 1355

நீறணி மேனியன் நீள்மதியோ
டாறணி சடையினன் அணியிழையோர்
கூறணிந் தினிதுறை குளிர்நகரம்
சேறணி வளவயற் சிரபுரமே
---சம்பந்தர் தேவாரம், 1177

பூவார் சோலை மயிலாலப்
புரிந்து குயில்கள் இசைபாடக்
காமர் மாலை அருகசைய
நடந்தாய் வாழி காவேரி.
---இளங்கோ அடிகள், சிலப்பதிகாரம், புகார்க் காண்டம், கானல் வரி, 26

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Tue Jan 15, 2013 8:57 pm

வள்ளியப்பா பாப்பாப் பாட்டில் நெஞ்சை
அள்ளும் எளிய சொற்கள் வேய்ந்த
சிந்தடி சீராய்ச் சிரிப்பது காண்பீர்.

பத்துக் காசு விலையிலே
பலூன் ஒண்ணு வாங்கினேன்
பையப் பைய ஊதினேன்
பந்து போல ஆனது
பலமாய் நானும் ஊதினேன்
பானை போல ஆனது
பானை போல ஆனதை
பார்க்க ஓடி வாருங்கள்
விரைவில் வந்தாள் பார்க்கலாம்--அல்லது
வெடிக்கும் சத்தம் கேட்கலாம்!
---குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா


வெண்பா ஈற்றடிச் சான்றுகள்:
வெண்ணிறப் பாவெனிலும் வண்ணங்கள் இறைக்கும்
வெண்பாவின் ஈற்றடியில் பலவகை ரசங்களில்
கண்ணையும் கருத்தையும் கவரும் சான்றுகள்
திண்ணைப் பேச்செனப் பறிமாறிக் கொள்வோமே.

திருக்குறள்:
என்புதோல் போர்த்த உடம்பு.
இம்மையும் இன்பம் தரும்.
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.
ஞாலத்தின் மாணப் பெரிது.
அன்றே மறப்பது நன்று. 5
எச்சத்தாற் காணப் படும்.
பிறவும் தமபோல் செயின்.
ஆரிருள் உயித்து விடும்.
மலையிணும் மாணப் பெரிது.
நாவினாற் சுட்ட வடு. 10
என்றும் இடும்பை தரும்.
இகழ்வாரைப் பொறுத்தல் தலை.
அழுக்காறு இல்லாத இயல்பு.
தீவினை என்னும் செருக்கு.
தீயினும் அஞ்சப் படும். 15
ஊதியம் இல்லை உயிர்க்கு.
உயிர்செகுத் துண்ணாமை நன்று.
எல்லா உயிருந் தொழும்.
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று.
மூக்கிற் கரியார் உடைத்து. 20

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Wed Jan 16, 2013 8:55 am

ஔவையார்:
சங்கத் தமிழ்மூன்றும் தா.
நீர்மேல் எழுத்துக்கு நேர்.
குலத்தளவே ஆகுமாம் குணம்.
எல்லார்க்கும் பெய்யும் மழை.
தீதொழிய நன்மை செயல். 5
பழுதுண்டு வேறோர் பணிக்கு.
பாவிகாள் அந்தப் பணம்.
எனையாளும் ஈசன் செயல்.
கல்லாதான் கற்ற கவி.
முற்பவத்தில் செய்த வினை. 10

ஈற்றடிப் பழமொழிகள்: முன்றுறை அரையனார்:
கற்றலிற் கேட்டலே நன்று.
பாம்பறியும் பாம்பின் கால்.
நிறைகுடம் நீர்தளும்பல் இல்.
அணியெல்லாம் ஆடையின் பின்.
திருவினும் திட்பம் பெறும். 5
கல்தேயும் தேயாது சொல்.
நாவிற்கு நல்குரவு இல்.
குன்றின்மேல் இட்ட விளக்கு.
உரைத்தாலும் தோன்றா(து) உணர்வு.
தங்களை நாய்குரைத் தற்று. 10
நுணலும்தன் வாயால் கெடும்.
இருதலைக் கொள்ளியென் பார்.
மகனறிவு தந்தை அறிவு.
தமக்கு மருதுவர் தாம்.
தட்டாமல் செல்லாது உளி. 15
கண்டதூஉம் எண்ணிச் சொல்.
புலித்தலையை நாய்மோத்தல் இல்.
முறைமைக்கு மூப்பிளமை இல்.
ஆயிரம் காக்கைக்கோர் கல்.
அஞ்சுவார்க் கில்லை அரண். 20
தனிமரம் காடாதல் இல்.
வித்தின்றிச் சம்பிரதம் இல்.
ஒன்றுக் குதவாத ஒன்று.
தாய்மிதித்(து) ஆகா முடம்.
இறைத்தோறும் ஊறும் கிணறு. 25

தனிப்பாடல் ஈற்றடிகள்:
ஔவையார்:

கொடையும் பிறவிக் குணம்.
கீச்சுக்கீச் சென்னுங் கிளி.
கூறாமல் சந்நியாசங் கொள்.
எறும்புந்தன் கையாலெண் சாண்.
புலவர்க்கும் வெண்பா புலி.
துறவோர்க்கு வேந்தன் துரும்பு.

திருவள்ளுவ நாயனார்:
வருவது தானே வரும்.
குழைநக்கும் பிஞ்ஞகன்றன் கூத்து.
அப்பாலும் பாழென் றரி.

காளமேகப் புலவர்:
பாம்பாகும் வாழைப் பழம்.
ஆடுபரி காவிரியா மே.
துப்பாக்கி யோலைச் சுருள்.
பூசணிக்காய் ஈசனெனப் போற்று.
குடத்திலே கங்கையடங் கும். 5
போட்டாளே வேலயற்றுப் போய்.
அன்னமிறங் காமலலை வாள்.
எலியிழுத்துப் போகிற தென்.
கண்டதுண்டு கேட்டதில்லை காண்.
குதிரை விற்றவனைக் கொண்டு. 10

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Thu Jan 17, 2013 4:31 pm

4.64. சிந்தடி முயற்சி: கட்டளைக் சிந்தடி

(இணைக்குறள் ஆசிரியப்பா)
நாமும் சிந்தடி முயன்றிடு வோமா?
ஏழுமுதல் ஒன்பதுவரை
எழுத்துகள் வருகிற
கட்டளைக் சிந்தடி புனைவோம் முதலிலே.

காலம் ஞாலம் பாலம் கோலம்
என்னும் சொல்வகை அடியெது கைவர
மாறுதல் அமைத்தல் வரைதல் நீங்குதல்
என்னும் சொல்வகை அயற்சீர் அமைய
பாலங்கள் அமைத்துப்
பாவங்கள் நீக்கி
ஞாலம் நலம்பெறும் ஞானம் அறிவோமே.

ஏழு எழுத்துக் குறளடி (2 + 3 + 2): (வஞ்சி விருத்தம்)
காலம் மாறிடும் உண்மை
ஞாலம் மாறுதல் உண்டோ?
பாலம் அமைக்கும் உள்ளம்
கோலம் வரைந்து பார்க்கும்.

எட்டு எழுத்துக் குறளடி (3 + 3 + 2): (வஞ்சி விருத்தம்)
காலங்கள் மாறினால் கொண்ட
கோலங்கள் மாறலாம் அன்றோ?
பாலங்கள் அமைத்தல் நன்றே
பாவங்கள் நீங்குதல் என்றோ?

ஒன்பது எழுத்துக் குறளடி (3 + 3 + 3): (வஞ்சி விருத்தம்)
காலங்கள் மாறினால் கொண்டுள்ள
கோலங்கள் மாறலாம் அல்லவோ?
பாலங்கள் அமைத்தல் நன்றாகும்
பாவங்கள் நீங்குதல் எப்போதோ?

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Fri Jan 18, 2013 5:37 pm

4.64. சிந்தடி முயற்சி: சீர்வகைக் சிந்தடி

பழமொழிகள் இணைத்து:
நல்குரவு இல்லாத நாக்கினை
வல்லிதின் அடக்க விழைவோம்
கல்தேயினும் தேயாது சொல்லென்பதால்
நல்லதே உரைக்கப் பழகுவோம்.

வஞ்சி விருத்தக் குறட்பாக்கள்:
விசும்பின் துளிவீழின் அல்லால்
பசும்புல் தலைகாண்பு அரிது.
தானம் தவமிரண்டும் தங்கா
வானம் வழங்கா தெனின்.

நாளெல்லாம் நடையாய் நடந்ததில்
தாளெல்லாம் ஆயின திண்ணென;
அற்புதம் ஏதேனும் நிகழ்ந்தாலே
விற்பனை யுண்டு மனமே!

வேளாண்மைக் குறைவால் பயிர்கள்
தாளாகிப் போகத் தாளாத
வேளாளன் தற்கொலை துணிய
வாளா விருந்தது அரசு.

*****


Sponsored content

PostSponsored content



Page 11 of 29 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 20 ... 29  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக