புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சங்கத் தமிழ் விரிப்பு Poll_c10சங்கத் தமிழ் விரிப்பு Poll_m10சங்கத் தமிழ் விரிப்பு Poll_c10 
51 Posts - 43%
heezulia
சங்கத் தமிழ் விரிப்பு Poll_c10சங்கத் தமிழ் விரிப்பு Poll_m10சங்கத் தமிழ் விரிப்பு Poll_c10 
50 Posts - 42%
mohamed nizamudeen
சங்கத் தமிழ் விரிப்பு Poll_c10சங்கத் தமிழ் விரிப்பு Poll_m10சங்கத் தமிழ் விரிப்பு Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
சங்கத் தமிழ் விரிப்பு Poll_c10சங்கத் தமிழ் விரிப்பு Poll_m10சங்கத் தமிழ் விரிப்பு Poll_c10 
3 Posts - 3%
prajai
சங்கத் தமிழ் விரிப்பு Poll_c10சங்கத் தமிழ் விரிப்பு Poll_m10சங்கத் தமிழ் விரிப்பு Poll_c10 
2 Posts - 2%
Manimegala
சங்கத் தமிழ் விரிப்பு Poll_c10சங்கத் தமிழ் விரிப்பு Poll_m10சங்கத் தமிழ் விரிப்பு Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
சங்கத் தமிழ் விரிப்பு Poll_c10சங்கத் தமிழ் விரிப்பு Poll_m10சங்கத் தமிழ் விரிப்பு Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
சங்கத் தமிழ் விரிப்பு Poll_c10சங்கத் தமிழ் விரிப்பு Poll_m10சங்கத் தமிழ் விரிப்பு Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
சங்கத் தமிழ் விரிப்பு Poll_c10சங்கத் தமிழ் விரிப்பு Poll_m10சங்கத் தமிழ் விரிப்பு Poll_c10 
2 Posts - 2%
Saravananj
சங்கத் தமிழ் விரிப்பு Poll_c10சங்கத் தமிழ் விரிப்பு Poll_m10சங்கத் தமிழ் விரிப்பு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சங்கத் தமிழ் விரிப்பு Poll_c10சங்கத் தமிழ் விரிப்பு Poll_m10சங்கத் தமிழ் விரிப்பு Poll_c10 
417 Posts - 49%
heezulia
சங்கத் தமிழ் விரிப்பு Poll_c10சங்கத் தமிழ் விரிப்பு Poll_m10சங்கத் தமிழ் விரிப்பு Poll_c10 
286 Posts - 33%
Dr.S.Soundarapandian
சங்கத் தமிழ் விரிப்பு Poll_c10சங்கத் தமிழ் விரிப்பு Poll_m10சங்கத் தமிழ் விரிப்பு Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
சங்கத் தமிழ் விரிப்பு Poll_c10சங்கத் தமிழ் விரிப்பு Poll_m10சங்கத் தமிழ் விரிப்பு Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
சங்கத் தமிழ் விரிப்பு Poll_c10சங்கத் தமிழ் விரிப்பு Poll_m10சங்கத் தமிழ் விரிப்பு Poll_c10 
28 Posts - 3%
prajai
சங்கத் தமிழ் விரிப்பு Poll_c10சங்கத் தமிழ் விரிப்பு Poll_m10சங்கத் தமிழ் விரிப்பு Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
சங்கத் தமிழ் விரிப்பு Poll_c10சங்கத் தமிழ் விரிப்பு Poll_m10சங்கத் தமிழ் விரிப்பு Poll_c10 
5 Posts - 1%
sugumaran
சங்கத் தமிழ் விரிப்பு Poll_c10சங்கத் தமிழ் விரிப்பு Poll_m10சங்கத் தமிழ் விரிப்பு Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
சங்கத் தமிழ் விரிப்பு Poll_c10சங்கத் தமிழ் விரிப்பு Poll_m10சங்கத் தமிழ் விரிப்பு Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
சங்கத் தமிழ் விரிப்பு Poll_c10சங்கத் தமிழ் விரிப்பு Poll_m10சங்கத் தமிழ் விரிப்பு Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சங்கத் தமிழ் விரிப்பு


   
   
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Fri Jan 11, 2013 6:39 am

சங்கத் தமிழ் விரிப்பு

யாப்பருங்கலம், காரிகை இவற்றில் யாப்பிலக்கணச் சான்றுகளாக வரும் செய்யுட்கள் மற்ற பிற செய்யுட்களின் சங்கத் தமிழ் வரிகளை முழுவதும் புரிந்துகொள்ள உரைகளை நாடுகிறோம். சங்கப் பாடல் உரைகள் அநேகமாக ஒரு set forumula-வுக்குள் செய்யுள்-பதவுரை-பொழிப்புரை-விரிப்புரை-மேற்கோள் என்று சங்கத் தமிழ் மொழியிலேயே விளக்க முயல்கின்றன.

ஒரு மாறுதலாக, மனதைக் கவரும் செய்யுட்களின் அழகையும் பொருளையும் இன்றைய வழக்கில், அரும்பொருள் உரைத்துக் கூடியவரையில் பொருள் நீர்த்துப் போகாமல் அதேவகை மரபு வடிவில் கவிதையாக எழுத முயன்றால் என்ன என்று தோன்றிக் கொஞ்ச நாளாக முயல்வதன் விளைவே இந்தத் திரி/நூல். குழுமத்தின் அனுபவக் கவிஞர்கள்களும் இந்த முயற்சியில் தங்கள் கைவரிசையைக் காட்டினால் என் முயற்சியில் இருக்கும் கைவிரிசல்கள் சரிசெய்யப்பட்டுச் சங்கத் தமிழை எல்லோரும் எளிதில் புரிந்துகொள்ள முடியும்.

செய்யுள் 1. நீரின் தண்மையும்
முதலில் காரிகை தரும் அந்தப் புகழ்பெற்ற இணைக்குறள் ஆசிரியப்பா:

(இணைக்குறள் ஆசிரியப்பா)
நீரின் தண்மையும் தீயின் வெம்மையும்
சாரச் சார்ந்து
தீரத் தீரும்
சாரல் நாடன் கேண்மை,
சாரச் சாரச் சார்ந்து,
தீரத் தீரத் தீர்ப்பொல் லாதே.

(நிலைமண்டில ஆசிரியப்பா)
தலைவனின் பிரிவில் தலைவியின் சொற்களில்
அலையுறும் நெஞ்சின் ஆர்ப்பைக் காட்டும்
இந்தப் பாடலைக் கொஞ்சம் அலசுவோமே.

(இணைக்குறள் ஆசிரியப்பா)
தொட்டால் சில்லிடும் நீரின் தண்மை
விட்டால் தீர்ந்து மறையும்
அண்மையில் சூடேறும் தீயின் வெம்மை
சேய்மையில் குறைந்து மறையும்
மலைச்சாரல் நாடன் தலைவனின் நட்போ
தலைப்பட்டால் பொல்லாதது!
ஒன்ற ஒன்ற நன்றாய் வளர்ந்து
வந்தபின் பிரிந்தாலோ
தீர்வதே யில்லாமல்
தீயின் வெம்மையால்
நீரின் தண்மையாய்
நெஞ்சினில் சுட்டும் குளிர்ந்தும் நோகுமே!

தொடரும், தொடர்வார்களாக!

*****


Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Jan 11, 2013 7:44 am

சூப்பருங்க தொடருங்கள் அரும் சேவை




[You must be
registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sat Jan 12, 2013 9:19 am

செய்யுள் 2. வேரல் வேலி

(நிலைமண்டில ஆசிரியப்பா)
வேரல் வேலி வேர்க்கோட் பலவின்
சார னாட செவ்வியை யாகுமதி
யாரஃ தறிந்திசி னோரே சாரற்
சிறுகோட்டுப் பெரும்பழந் தூங்கி யாங்கிவள்
உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே.
---கபிலர், குறுந்தொகை 18


(கலிவிருத்தம்)
தலைவனின் களவில் தலைவியின் காதல்
அலைபோ லெழுந்து உயிரை வதைக்கத்
தலைவனிடம் தோழி தலைவியை மணம்கொளத்
தலைப்படு மாறு தெளிவுரை கூறினாளே.

(நிலைமண்டில ஆசிரியப்பா)
வேரல் என்பது மலைவிளை மூங்கில்
சாரல் என்பது மலையினைக் குறிக்கும்
அறிந்திசி னோரே: யாரறி வாரே.

வேரல் மரமே வேர்ப்பலா வேலியாகும்
சாரல் நாட! செவ்விய மதியுடன்
வரைக தலைவியை மணத்தில்! ஏனெனில்
வேர்ப்பலா காம்பென அவளுயிர் சிறிது
வேர்ப்பலா போன்றவள் காதல் பெரிது
பழமது மிகவும் பழுத்து விழுந்தால்
உழன்றிடும் உயிரே நீங்கிடும் அன்றோ?


*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Mon Jan 14, 2013 7:49 pm

செய்யுள் 3. நிலத்தினும் பெரிதே

(நேரிசை ஆசிரியப்பா)
நிலத்தினும் பெரிதே வானினு முயர்ந்தன்று
நீரினு மாரள வின்றே சாரற்
கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தே னிழைக்கு நாடனொடு நட்பே.
---தேவகுலத்தார், குறுந்தொகை 3.


அன்று என்பது எதிர்மறைப் பொருளல்ல
அன்று என்பது பொருளில் அசைச்சொல்
உயர்ந்தன்று என்பது எனவே
உயர்ந்தது என்ற பொருளைத் தருமே.

ஆர என்பதோர் உவமைச் சொல்லாம்
ஆர என்றல் மிக்க எனப்பொருள்
சாரல் என்பது மலையாம்
கோலெனச் சொன்னது மரத்தின் கொம்பே.

இழைக்கும் என்னும் இன்சொல் நோக்குக.
இழைத்தல் என்றால் இரைத்தல் செய்தல்
குழைத்தல் பூசுதல் இழையாக்கல்;
இழைக்கத் தேனை உழைக்கும் வண்டுகளே.

கருங்கிளை தாங்கும் குறிஞ்சி மரத்தின்
அரும்பெரும் பூக்களில் சுரும்புகள் தேனிழைக்கும் ... ... ... [சுரும்பு=வண்டு]
மலைநிலத் தலைமகன் மீ(து)அவள் நட்பே
உலகினும் பெரியது உயர்ந்தது வானினும்
உலவிடும் கடலின் நீரினும் ஆழமே
என்பதை உணர்ந்து மணங்கொளத் தலைப்படு
என்றாள் தோழி வேலியின்
பின்புறம் நிற்கும் தலவனை நோக்கியே.

மலையினில் மலரும் குறிஞ்சி மலர்களில்
பலவகை வண்ணம் உண்டே
மலையே சிரிக்கும் மலர்கள் கீழே.
[You must be registered and logged in to see this link.]

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Wed Jan 16, 2013 12:12 pm

செய்யுள் 4. எறும்பி யளையிற்
(நேரிசை ஆசிரியப்பா)

முன்னுரை:
வதுவைப் பொருளீட்டத் தலைவன் தலைவியைப்
பொதுவில் பிரிந்து சென்ற போது
அதுகண்டு ஆற்றாது அவன்சென்ற வழியின்
துன்பங்கள் குறித்துத் தோழியிடம் அஞ்சும்
தன்னெஞ் சுரைத்துத் தலைவி
ஊரின் அலட்சியம் கூறிப் புலம்பியது.

செய்யுள்:
எறும்பி யளையிற் குறும்பல் சுனைய
உலைக்க லன்ன பாறை யேறிக்
கொடுவி லெயினர் பகழி மாய்க்கும்
கவலைத் தென்பவவர் சென்ற வாறே
அதுமற் றவலங் கொள்ளாது
நொதுமற் கழறுமிவ் வழுங்க லூரே.
---ஓதலாந்தையார், குறுந்தொகை 12.


விளக்கம்:
எறும்பியளை என்றது எறும்பின் வளையே
குறும்பல் சுனையாம் குறுகிய பலசுனை
எறும்புப் புற்றுபோல் பலவாகும்
குறுகிய சுனைகள் உவமை காண்க.

எயினர் என்போர் வில்லேந்திய வேடுவர்கள்
பகழி மாய்த்தல் அம்பினைக் கூர்தீட்டல்
கவலைத் தென்பது கிளைபிரி வழிகளே
அலையும் ஆதவன் அனலில் சூடேறி
உலைக்களக் கல்போல் கொதிக்கும் பாறையில்
எயினர்தம் வில்லின் அம்புகள் கூர்தீட்டும்
வழிபல கடக்க வேண்டும்
தலைவன் பிரிந்து சென்ற பாதையிலே.

நொதுமல் என்பது அக்கம் பக்கம்
கழறுதல் என்றால் இடித்துக் கூறுதல்
அழுங்கல் என்பது இங்கு ஆரவாரம்
கவலைக் குரிய கிளைத்த வழிகளின்
அவலம் நோக்காது ஆர்ப்பரிக்கும் இவ்வூர்
தலைவன் பிரிந்தது மட்டும் கொண்டு
என்நெஞ்சு அறியாது இடித்துப் பேசுதல்
உன்நெஞ்சு அறியாதோ தோழி
என்றாள் தலைவி தன்னுயிர்த் தோழியிடம்.

*****


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக