புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்னம் ஊட்டாத தேகம் எப்படி வளரும்?  Poll_c10அன்னம் ஊட்டாத தேகம் எப்படி வளரும்?  Poll_m10அன்னம் ஊட்டாத தேகம் எப்படி வளரும்?  Poll_c10 
63 Posts - 40%
heezulia
அன்னம் ஊட்டாத தேகம் எப்படி வளரும்?  Poll_c10அன்னம் ஊட்டாத தேகம் எப்படி வளரும்?  Poll_m10அன்னம் ஊட்டாத தேகம் எப்படி வளரும்?  Poll_c10 
48 Posts - 31%
Dr.S.Soundarapandian
அன்னம் ஊட்டாத தேகம் எப்படி வளரும்?  Poll_c10அன்னம் ஊட்டாத தேகம் எப்படி வளரும்?  Poll_m10அன்னம் ஊட்டாத தேகம் எப்படி வளரும்?  Poll_c10 
31 Posts - 20%
T.N.Balasubramanian
அன்னம் ஊட்டாத தேகம் எப்படி வளரும்?  Poll_c10அன்னம் ஊட்டாத தேகம் எப்படி வளரும்?  Poll_m10அன்னம் ஊட்டாத தேகம் எப்படி வளரும்?  Poll_c10 
6 Posts - 4%
ayyamperumal
அன்னம் ஊட்டாத தேகம் எப்படி வளரும்?  Poll_c10அன்னம் ஊட்டாத தேகம் எப்படி வளரும்?  Poll_m10அன்னம் ஊட்டாத தேகம் எப்படி வளரும்?  Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
அன்னம் ஊட்டாத தேகம் எப்படி வளரும்?  Poll_c10அன்னம் ஊட்டாத தேகம் எப்படி வளரும்?  Poll_m10அன்னம் ஊட்டாத தேகம் எப்படி வளரும்?  Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
அன்னம் ஊட்டாத தேகம் எப்படி வளரும்?  Poll_c10அன்னம் ஊட்டாத தேகம் எப்படி வளரும்?  Poll_m10அன்னம் ஊட்டாத தேகம் எப்படி வளரும்?  Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்னம் ஊட்டாத தேகம் எப்படி வளரும்?  Poll_c10அன்னம் ஊட்டாத தேகம் எப்படி வளரும்?  Poll_m10அன்னம் ஊட்டாத தேகம் எப்படி வளரும்?  Poll_c10 
314 Posts - 50%
heezulia
அன்னம் ஊட்டாத தேகம் எப்படி வளரும்?  Poll_c10அன்னம் ஊட்டாத தேகம் எப்படி வளரும்?  Poll_m10அன்னம் ஊட்டாத தேகம் எப்படி வளரும்?  Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
அன்னம் ஊட்டாத தேகம் எப்படி வளரும்?  Poll_c10அன்னம் ஊட்டாத தேகம் எப்படி வளரும்?  Poll_m10அன்னம் ஊட்டாத தேகம் எப்படி வளரும்?  Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
அன்னம் ஊட்டாத தேகம் எப்படி வளரும்?  Poll_c10அன்னம் ஊட்டாத தேகம் எப்படி வளரும்?  Poll_m10அன்னம் ஊட்டாத தேகம் எப்படி வளரும்?  Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
அன்னம் ஊட்டாத தேகம் எப்படி வளரும்?  Poll_c10அன்னம் ஊட்டாத தேகம் எப்படி வளரும்?  Poll_m10அன்னம் ஊட்டாத தேகம் எப்படி வளரும்?  Poll_c10 
21 Posts - 3%
prajai
அன்னம் ஊட்டாத தேகம் எப்படி வளரும்?  Poll_c10அன்னம் ஊட்டாத தேகம் எப்படி வளரும்?  Poll_m10அன்னம் ஊட்டாத தேகம் எப்படி வளரும்?  Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
அன்னம் ஊட்டாத தேகம் எப்படி வளரும்?  Poll_c10அன்னம் ஊட்டாத தேகம் எப்படி வளரும்?  Poll_m10அன்னம் ஊட்டாத தேகம் எப்படி வளரும்?  Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
அன்னம் ஊட்டாத தேகம் எப்படி வளரும்?  Poll_c10அன்னம் ஊட்டாத தேகம் எப்படி வளரும்?  Poll_m10அன்னம் ஊட்டாத தேகம் எப்படி வளரும்?  Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
அன்னம் ஊட்டாத தேகம் எப்படி வளரும்?  Poll_c10அன்னம் ஊட்டாத தேகம் எப்படி வளரும்?  Poll_m10அன்னம் ஊட்டாத தேகம் எப்படி வளரும்?  Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
அன்னம் ஊட்டாத தேகம் எப்படி வளரும்?  Poll_c10அன்னம் ஊட்டாத தேகம் எப்படி வளரும்?  Poll_m10அன்னம் ஊட்டாத தேகம் எப்படி வளரும்?  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்னம் ஊட்டாத தேகம் எப்படி வளரும்?


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Nov 05, 2012 3:23 pm

கடந்த வாரம் "தேவை ஒரு பார்பரா வால்ராப்' என்று தமிழில் புதிய சொற்களைத் தேடும் முயற்சிக்கு ஆரம்பம் குறித்திருந்தார் நீதியரசர் வி. இராமசுப்பிரமணியன். அந்தக் கட்டுரையைப் படித்தவுடன் முல்லைப் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் "ராஜாஜி உவமைகள்' புத்தகத்தில் எண்பது ஆண்டுகளுக்கு முன்னால் மூதறிஞர் ராஜாஜி இதுபற்றிக் குறிப்பிட்டிருந்தது நினைவுக்கு வந்தது.

÷""பல்வேறு விஷயங்களை அறிந்தும் ஆராய்ந்தும் வரும் தமிழர்கள், தாங்கள் சாதாரணமாகப் பேசும்போது முழுதும் தமிழில் பேசினால்தானே தமிழுக்கு வளர்ச்சி ஏற்படும். விஷயங்களைப் பேசும்போது தமிழ்மொழி தெரியாத இடத்திலும், மறந்து போன இடத்திலும், புதுத் துறைகளில் ஆராய்ச்சி செய்யும்போதும், வாதப் பிரதிவாதம் செய்யும்போதும், அறிவையும் நினைவையும் செலவழித்துத் தமிழில் வார்த்தைகளைத் தேடி உபயோகிப்பதற்கு பதிலாக, எளிதில் கிடைக்கக் கூடிய ஆங்கில மொழி வார்த்தைகளை - அதாவது, பிரதேசத்தார் கஷ்டப்பட்டுத் தங்களுக்கென்று உண்டாக்கியிருக்கும் வார்த்தைகளை எந்தவிதக் கூச்சமுமின்றி இடையிடையே கலந்து பேச்சை நடத்திவிட்டுத் தமிழுக்குச் சோறு போடாமல் கொல்கிறோம். சோம்பேறிகளைப் பெற்ற தாயைப் போலத் தமிழ் அவதிப்பட்டு வருகிறது.

÷அன்னம் ஊட்டாத தேகம் எப்படி வளரும்? நுட்பமான பொருள் பேதங்களும் அவைகளுக்குத் தகுந்த மொழிகளும் (வார்த்தைகளும்) நடையும் ஒரு பாஷையில் எவ்வாறு தோன்றும்? தோன்றியவை எவ்வாறு உயிருடன் நிற்கும்? பொருளைப் புகுத்திப் பேசிப் பழகி வந்தால் தானே பாஷை வளம் பெறும்?

÷கிடைத்த புல்லையும் தவிட்டையும் ஆங்கில மாட்டுக்கே போட்டு வந்தால், நம்முடைய பசு எவ்வாறு பால் கொடுக்கும்? கொஞ்சம் தடை தோன்றிய இடங்களில் எல்லாம் ஆங்கிலத்தைப் போட்டு நிரவிப் பேச்சை ஓட்டிக் கொண்டு போனால், தமிழ் எங்ஙனம் வளரும்? அறிஞர்களெல்லாம் தமிழைக் கொல்லுவதற்காகச் சதியாலோசனை செய்தால்கூட இதைவிட வேறு யுக்தி கண்டுபிடிக்க முடியாது!'' என்பதுதான் மூதறிஞர் ராஜாஜி வெளியிட்டிருந்த கருத்து.

÷ராஜாஜியின் கருத்தில் பாஷை, தேசம் போன்ற சம்ஸ்கிருத வார்த்தைகள் கலந்திருக்கின்றனவே என்று கேட்கலாம். அன்றைய பேச்சு வழக்கு அப்படி இருந்தது. இன்று அந்த வார்த்தைகளுக்கான தமிழ் வார்த்தைகள் கையாளப்படுகின்றன என்பதும் நல்ல மாற்றம்தானே? அதே நேரத்தில், ராஜாஜி பேசும்போது முடிந்தவரை அதில் ஆங்கில வார்த்தைக் கலப்பு தவிர்க்கப்படுவதை நாம் காண முடிகிறது.

÷தமிழில் ஆங்கிலம் கலந்து பேசுகிறோம் என்று சொன்னால் அதற்கு இரண்டு காரணங்கள். மாறிவிட்ட வாழ்க்கைச் சூழ்நிலையில் உருவாகி இருக்கும் சந்தர்ப்பங்களுக்கு ஏற்ற தமிழ்ச் சொற்கள் கண்டறியப்படாதது ஒரு காரணம். இன்னொரு காரணம், மொழிமாற்றம் என்கிற பெயரில் வலியப் புகுத்தப்படும் தூய தமிழ்ச் சொற்கள் மக்களால் பரவலாக ஏற்றுக் கொள்ளப்படாதது இன்னொரு காரணம்.

÷தனித் தமிழில் பேசினால் அதை ஏதோ விசித்திரமாகப் பார்க்கும் அவலம் காணப்படுவதற்குக் காரணம், அது இயல்பாக இல்லாமல் இருப்பதுதான். வலிந்து பேசப்படுவதாகத் தோற்றமளிப்பதுதான் காரணம். இயல்பாக உள்ள வார்த்தைகளை, மாறிவிட்ட சூழலால் உருவாகி இருக்கும் புதிய நிகழ்வுகளுக்கும், உணர்வுகளுக்கும் ஏற்ற வார்த்தைகளைப் பல்கலைக் கழக வளாகங்களில், அறிஞர்களின் அவையில் உருவாக்க முயன்றால், அது பெருவாரியான சராசரி மக்களைப் போய்ச் சேராது. அப்படியே சேர்ந்தாலும் அவர்களால் ஏற்றுக் கொள்ளப்படாது.

÷தமிழ்ச் சொற்களை உருவாக்க முற்படும்போது, பெருவாரியான புதுச் சொற்கள் ஆங்கிலச் சொற்களின் நேரடி மொழிமாற்றமாக இருப்பது வேதனையளிக்கிறது. தமிழிலேயே "அருவி' என்கிற அருமையான சொல் இருக்கும்போது, ஆங்கிலத்தில் காணப்படும் "வாட்டர் பால்ஸ்' என்பதை "நீர்வீழ்ச்சி' என்று மொழிமாற்றம் செய்வானேன்?

÷சமீபத்தில் கோவை சென்றிருந்தபோது, அங்கே "அப்சர்வேஷன் ஹவுஸ்' என்பதற்குப் பெயர்ப் பலகையில் "கூர்நோக்கு இல்லம்' என்று தமிழ் மொழிபெயர்ப்பு காணப்பட்டது. அப்சர்வேஷனுக்குக் "கூர்நோக்கு' சரி. "அப்சர்வேஷன் ஹவுஸ்' என்பதற்குக் "கண்காணிப்பு இல்லம்' என்பதல்லவா சரியானதாக இருக்கும்?

÷அதேபோல, சென்னையில் "ஆபீஸ் சொல்யூஷன்ஸ்' என்றொரு நிறுவனம். அந்த நிறுவனத்தின் பெயர் "அலுவலகத் தீர்ப்பகம்' என்று மொழிமாற்றம் செய்யப்பட்டிருந்தது. அது சரியாகப் படவில்லை. நேரடி மொழிமாற்றங்களுக்கு பதில் புதிய வார்த்தைகள் ஏற்படுவதுதானே மொழியின் வளர்ச்சியாக இருக்கும்?

÷இதுபற்றியும் மூதறிஞர் ராஜாஜி கருத்துத் தெரிவித்திருப்பதுதான் வியப்பாக இருக்கிறது.

÷""ஆங்கிலத்தின் நரம்புக்கட்டும், லாவகமும், பொருட்செறிவும் தமிழில் கிடையாது என்று தமிழை மறந்த தமிழர் எண்ணுகிறார்கள். பழைய சொற்களையும், புராதனக் கலைகளையும் மறந்துவிட்டதே இவ்வாறான எண்ணங்களுக்குக் காரணம். வீட்டிலுள்ள பழைய பெரிய பெட்டியில் இருக்கும் பட்டாடைகளை மறந்து, கடைக்குப் போய்க் கடனுக்குச் சேலை வாங்குவது போன்றது இந்த மொழிப் பிச்சைக் கொள்கை'' என்று கருத்து தெரிவித்திருக்கிறார் அவர்.

÷நீதியரசர் வி. இராமசுப்பிரமணியனின் பார்பரா வால்ராப் பற்றிய கட்டுரையைப் படித்த பிறகு, எந்த ஆங்கில வார்த்தையைப் பார்த்தாலும், எந்த சந்தர்ப்பம் வாய்த்தாலும் இதற்குச் சரியான தமிழ் வார்த்தை என்னவாக இருக்கும் என்று யோசிக்கத் தோன்றுகிறது. ஐடியா, வக்கலாத்து, முன்சீப், கேப்சூல் போன்ற வார்த்தைகளுக்குச் சரியான, பொருத்தமான தமிழ் வார்த்தைகளைத் தேடிப் பிடிக்கத் தோன்றியது.

(நன்றி தினமணி )

Kuzhali
Kuzhali
பண்பாளர்

பதிவுகள் : 87
இணைந்தது : 31/10/2012

PostKuzhali Sat Nov 10, 2012 11:30 am

சாமி wrote: சோம்பேறிகளைப் பெற்ற தாயைப் போலத் தமிழ் அவதிப்பட்டு வருகிறது.


என்ன வார்த்தை! ஒரு வரியே ஆனாலும் மிகச் சரியான வரி.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக