புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Today at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ரமணியின் கதைகள் - Page 6 Poll_c10ரமணியின் கதைகள் - Page 6 Poll_m10ரமணியின் கதைகள் - Page 6 Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
ரமணியின் கதைகள் - Page 6 Poll_c10ரமணியின் கதைகள் - Page 6 Poll_m10ரமணியின் கதைகள் - Page 6 Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
ரமணியின் கதைகள் - Page 6 Poll_c10ரமணியின் கதைகள் - Page 6 Poll_m10ரமணியின் கதைகள் - Page 6 Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
ரமணியின் கதைகள் - Page 6 Poll_c10ரமணியின் கதைகள் - Page 6 Poll_m10ரமணியின் கதைகள் - Page 6 Poll_c10 
4 Posts - 3%
bala_t
ரமணியின் கதைகள் - Page 6 Poll_c10ரமணியின் கதைகள் - Page 6 Poll_m10ரமணியின் கதைகள் - Page 6 Poll_c10 
1 Post - 1%
prajai
ரமணியின் கதைகள் - Page 6 Poll_c10ரமணியின் கதைகள் - Page 6 Poll_m10ரமணியின் கதைகள் - Page 6 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ரமணியின் கதைகள் - Page 6 Poll_c10ரமணியின் கதைகள் - Page 6 Poll_m10ரமணியின் கதைகள் - Page 6 Poll_c10 
1 Post - 1%
Kavithas
ரமணியின் கதைகள் - Page 6 Poll_c10ரமணியின் கதைகள் - Page 6 Poll_m10ரமணியின் கதைகள் - Page 6 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரமணியின் கதைகள் - Page 6 Poll_c10ரமணியின் கதைகள் - Page 6 Poll_m10ரமணியின் கதைகள் - Page 6 Poll_c10 
293 Posts - 42%
heezulia
ரமணியின் கதைகள் - Page 6 Poll_c10ரமணியின் கதைகள் - Page 6 Poll_m10ரமணியின் கதைகள் - Page 6 Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
ரமணியின் கதைகள் - Page 6 Poll_c10ரமணியின் கதைகள் - Page 6 Poll_m10ரமணியின் கதைகள் - Page 6 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
ரமணியின் கதைகள் - Page 6 Poll_c10ரமணியின் கதைகள் - Page 6 Poll_m10ரமணியின் கதைகள் - Page 6 Poll_c10 
26 Posts - 4%
sugumaran
ரமணியின் கதைகள் - Page 6 Poll_c10ரமணியின் கதைகள் - Page 6 Poll_m10ரமணியின் கதைகள் - Page 6 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ரமணியின் கதைகள் - Page 6 Poll_c10ரமணியின் கதைகள் - Page 6 Poll_m10ரமணியின் கதைகள் - Page 6 Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
ரமணியின் கதைகள் - Page 6 Poll_c10ரமணியின் கதைகள் - Page 6 Poll_m10ரமணியின் கதைகள் - Page 6 Poll_c10 
6 Posts - 1%
prajai
ரமணியின் கதைகள் - Page 6 Poll_c10ரமணியின் கதைகள் - Page 6 Poll_m10ரமணியின் கதைகள் - Page 6 Poll_c10 
5 Posts - 1%
manikavi
ரமணியின் கதைகள் - Page 6 Poll_c10ரமணியின் கதைகள் - Page 6 Poll_m10ரமணியின் கதைகள் - Page 6 Poll_c10 
4 Posts - 1%
Kavithas
ரமணியின் கதைகள் - Page 6 Poll_c10ரமணியின் கதைகள் - Page 6 Poll_m10ரமணியின் கதைகள் - Page 6 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரமணியின் கதைகள்


   
   

Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Thu Nov 01, 2012 10:04 am

First topic message reminder :

லக்கியத்தைப் பொறுத்தவரை "முயன்றால் முடியாததும் உண்டோ?" என்பது கல்லூரி நாட்களில் என் குறிக்கோளாக இருந்ததால் என்னுடைய இலக்கிய முயற்சிகள் ஆங்கிலக் கவிதைகளில் ஆரம்பித்துத் தமிழ்க் கதைகளில் தலைகாட்டியது. நான் க்ருஹஸ்தனான புதிதில் ஐந்து சிறுகதைகள், ஒரு குறுநாவல், ஒரு முழு நாவல் எழுதினேன். இவற்றில் மூன்று சிறுகதைகள் மட்டும் பிரசுரமாயின: ஒன்று நான் எழுதிய முதல் கதை; இன்னொன்று ஒரு சிறுகதைப் போட்டியில் முதல் பரிசைப் பகிர்ந்துகோண்ட கதை. கவிதைகளைப் படிப்பதுடன் நிறுத்திக்கொண்டேன்!

சுஜாதா, தி.ஜ.ரா போன்ற ஆசிரியர்களை நிறையப் படித்ததாலும், ஆங்கில நாவல்களைப் படித்ததாலும் கதை உத்திகளை அறிந்துகொண்டேன். எனினும் பின்னர் ஏற்பட்ட கணிணித்துறை ஈடுபாடுகளில் கதைகள் எழுதுவது பிரசவ வேதனையாக இருந்ததால் கதைகள் எழுத முனைவதையும், படிப்பதையும் அறவே விட்டுவிட்டேன். வயதில் அரை செஞ்சுரி அடித்ததும், கடந்த பத்து வருடங்களுக்குமேல் மனம் ஆன்மீகத்துறையில் அலைபாய்ந்து தத்தளிக்கவே, லௌகிகப் படிப்பு வகைகளைக் குறைத்துக்கொண்டுவிட்டேன்.

கடந்த சிலநாட்களாக இந்த வலைதளத்தில் படித்த இலக்கிய முயற்சிகளைப்பார்த்து என் பழைய கதைகளை பகிர்ந்துகொண்டால் என்ன என்று தோன்றியது. அதனால்தான் இந்தத்தொடர் (ஜாக்கிரதை)! வாசகர்களும் தங்கள் எண்ணங்களையும் விமரிசனங்களையும் பகிர்ந்துகொள்ளலாம்.

இக்கதைகளின் உரிமை ஆசிரியருக்கே என்றாலும் இவற்றைப் பிரதி எடுத்து மற்றவர்களுடன் பிரத்தியேகமாகப் பகிர்ந்துகொள்வதில் தடையில்லை, கதாசிரியரின் பெயர் பிரதிகளில் குறிப்பிடப்படவேண்டும் என்ற ஒரு நிபந்தனையுடன்.

இந்தக் கதைகள் என் வலைதளத்திலிருந்து எடுக்கப்பட்டவை. தொடர்வது நான் எழுதிப் பிரசுமான முதல் கதை. படிக்க வசதியாக கதைகளைத் தவணை முறையில் தருகிறேன்

*** *** ***.



ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Fri Apr 12, 2013 6:01 pm

இந்தக் காலத்தில் முற்போக்கான ஆணும் பெண்ணும் ஒரே வகையான உறவுகளைத் திரும்பத் திரும்பத் தொடர முனையும்போது ஏற்படும் விளைவுகளையும் குழப்பங்களையும் சுட்டிக் காட்டுவதுதான் இந்த குட்டிக்கதையின் நோக்கம். ஆவல் உள்ள வாசகர்கள் இதைத் தம் மனதில் தொடர்கதையாக மனப்போக்கிற் கேற்றவாறு விரித்துக்கொள்ளலாம்.

Muthumohamed wrote:தொடருங்கள் படிக்க ஆவலாக உள்ளது நன்றி


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Fri Apr 12, 2013 6:33 pm

மேலுள்ள குட்டிக்கதையானது மேற்கத்திய கலாசாரத்தில் எப்படி பூதாகாரமாகப் பரிமாணம் எடுக்கக்கூடும் என்று கோடிட்டுக் காட்டி ஆங்கிலத்தில் வந்த ஒரு நகைச்சுவையின் தமிழாக்கம்:

ஏற்பட்ட திருமணமும் காதல் திருமணமும்:
ஒரு கலாசார அதிர்ச்சி

இரண்டு மனிதர்கள், ஒருவர் இந்தியர், மற்றொருவர் அமெரிக்கர் ஒரு பாரில் பக்கத்தில் அமர்ந்து குடித்துக்கொண்டிருந்தார்கள்.

இந்தியர் அமெரிக்கரிடம் சொன்னார்: "என் பெற்றோர்கள் என்னைக் கல்யாணம் செய்துகொள்ளும்படி கட்டாயப் படுத்துகிறார்கள். குடும்பப் பாங்கான ஒரு கிராமப் பெண்ணாம். நான் அவளை ஒரு முறை கூடப் பார்த்ததில்லை!

"நாங்கள் இதை ’அரேஞ்ட் மேரேஜ்’ என்று சொல்வோம். நான் காதலிக்காத ஒரு பெண்ணை மணந்துகொள்ள எனக்கு விருப்பம் இல்லை. இதை நான் அவர்களிடம் வெளிப்படியாகச் சொல்லிவிட்டதால் குடும்பத்தில் ஏகப்பட்ட குழப்பம்..."

அமெரிக்கர் சொன்னார்: "’லவ் மேரேஜ்’ பற்றியா நீங்கள் பேசுகிறீர்கள்? என் கதையைக் கேளுங்கள்...

"மூன்று வருடங்கள் டேட்டிங் பண்ணி நான் ஒரு விதவையைக் கல்யாணம் செய்துகொண்டேன். அவளுக்குக் கல்யாண வயதில் ஒரு மகள் இருந்தாள்... இரண்டு வருடம் கழித்து என் அப்பா என் வளர்ப்பு மகளான அவளைக் காதலித்துக் கல்யாணம் செய்துகொண்டார். இதனால் என் தந்தை எனக்கு மருமகன் ஆகிவிட, நான் என் தந்தையின் மாமனார் ஆனேன்! என் மகள் இப்போது என் அன்னையாகி, என் மனைவியே எனக்குப் பாட்டியானாள்!

"எனக்கு ஒரு மகன் பிறந்தபோது உறவின் குழப்பங்கள் விசுவரூபம் எடுத்தன. என் மகன் என் தந்தையின் சகோதரன், எனவே எனக்கு அவன் அங்க்கிள் ஆனான்! என் தந்தைக்கும் ஒரு மகன் பிறந்தபோது இன்னும் மோசமானது. இப்போது என் தந்தையின் மகன், அதாவது என் சகோதரன் எனக்குப் பேரன்! இப்படியெல்லாம் எங்கள் குடும்பத்தில் இருக்கும்போது நீ உன் குடும்பத்தில் குழப்பம் என்று சொல்வது வேடிக்கை!"

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sun May 19, 2013 11:55 am

சார்பு எழுத்துகள்
சிறுகதை
ரமணி, 19/05/2013


மணிவண்ணன் சொல்வது:

ம்பத்தைந்து வயதைக் கடந்த ஒரு பேரிளம் பெண்ணும் மேலும் இரண்டு வயது தாண்டிய ஒரு மூத்தோனும் ஒருவரிடம் ஒருவர் மனம் பற்றுவதற்கு என்ன காரணம் என்று பலமுறை நாங்கள் இருவரும் யோசித்துப் பார்த்திருக்கிறோம். திருமணம் செய்துகொண்டு சேர்ந்து வாழ நினைக்கும் இந்த மனப்பற்று காதலாலோ காமத்தாலோ அல்ல என்பது மட்டும் எங்கள் இருவருக்கும் நன்கு புரிந்தது. பின் எதனால் இந்தப் பற்று? சொல்கிறேன்.

திருச்சி பெரிய கடைத்தெருவில் அரசுடமையாக்கப்பட்ட ஒரு வங்கியின் கிளை இருந்தது. ஒருநாள் அங்கு நான் என் பெயரில் புதியதொரு சேமிப்புக் கணக்கு தொடங்குவதற்காகச் சென்றேன். அப்போது ஹேமாவைக் கவுன்டரில் பார்த்தபோது அவள் நெற்றியில் இருந்த ’ஸ்டிக்கர்’ பொட்டின் நிறம் கருப்பு என்பதைக் கவனிக்கவில்லை. பத்தே நிமிடங்களில் என் தனிநபர் விவரங்களை விசாரித்துப் படிவங்களைக் கணினியில் பூர்த்திசெய்து கையெழுத்துகள் பெற்றுக் கொண்டு நான் கொடுத்த ஐந்தாயிரம் ரூபாயை முதலாகக் கொண்டு கணக்கைத் துவக்கி செக் புத்தகத்துடன் பாஸ் புத்தகத்தை என் கையில் கொடுத்தாள்.

அவள் தன் பணியில் ஈடுபட்டிருந்த போது கவனிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. பேரிளம்பருவ வயது அவள் முகத்தில் கண்களில் காதோரத் தலைநரைப்பில் தெரிந்தாலும் அந்த விகற்பங்களை மீறி ஒரு கம்பீரமான, புகை படிந்த அழகு அவளிடம் இருந்தது. பணியின் புன்னகை முகத்துக்கு அணிசெய்த போதிலும் கண்களில் ஓர் இனம் புரியாத சோகம். அதற்கு அவள்தன் கணவனை இழந்த வருத்தமோ அல்லது கைம்பெண் வாழ்க்கையின் தனிமையோ சுமையோ காரணமாக இருக்கலாம் என்று நினைத்துக்கொண்டேன்.

ஒவ்வொரு முறையும் நான் வங்கிக்குச் சென்ற போது அவள் எனக்கு முன்னுரிமை தந்து உதவியது என்னை யோசிக்க வைத்தது. நானும் வாழ்க்கையில் துணையை இழந்தவன் என்பதால் ஏற்பட்ட பரிவு இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று நினைத்துக்கொண்டேன். நான் குடியிருந்த அதே கீழாண்டார் வீதியில் அவளது சொந்த வீடு இருந்ததுவும் ஒரு காரணமாக இருக்கக்கூடும்.

ஒரு நாள் அவளைக் கேட்டேவிட்டேன்: "ஐந்தாறு பேர் காத்திருக்கும் போது எனக்கு முன்னுரிமை தருவது சரியா?"

நான் தாழ்ந்த குரலில் பேசியும் கேட்டுவிடக் காத்திருந்தவர்களில் இருவர் ஒரே குரலில் முன்மொழிந்தார்கள்: "நீங்க ஒங்க வேலையை முடிச்சுக்கங்க ஐயா. கல்லூரிக்கு நேரமாய்டுமில்ல?"

"நீங்கள் கல்லூரியில் தமிழ்த்துறைப் பேராசிரியர்களின் தலைவர் என்பதால் உங்களைப் பல பேருக்குத் தெரியும். யாராயிருந்தாலும் ஓர் ஆசிரியருக்கு முன்னுரிமை தந்து சேவை செய்வதை ஆட்சேபிக்க மாட்டார்கள் என்று கண்டீர்கள் அல்லவா?"

புன்னகையுடன் நான் அவள் பதிலை ஏற்ற போதிலும் அதுமட்டும் காரணமல்ல என்று என் உள்மனம் கூறியது. அல்லது இது என் கற்பனைதானோ என்றும் ஓர் எண்ணம் உதித்தது.

ருநாள் மாலை தன்னிகழ்வாக நாங்கள் இருவரும் வீடு செல்லும் வழியில் கீழாண்டார் வீதியில் சேர்ந்து நடந்தோம். அப்போது ஹேமாவைப் பற்றி மேல்விவரங்கள் தெரிந்துகொண்டேன். அதே வங்கியின் மண்டல அலுவலகத்தின் கணிணிப் பிரிவில் அதிகாரியாகப் பணியாற்றிய அவள் கணவன் நான்கு வருடங்கள் முன்பு எந்த உடல்நலக் குறைவுமில்லாமல் இயற்கையாக ஒரு நாள் உயிர்நீத்தபோது அவள் ஒரே மகன் கார்த்திக் ’கம்ப்யூட்டர் எஞ்சினீர்ங் கோர்ஸ்’ கடைசி வருடம் படித்துக் கொண்டிருந்தானாம். இப்போது அவன் சென்னையில் கடந்த மூன்று வருடங்களாக ஒரு பிரபல ’ஐ.டி. கம்பெனி’யில் ’ஸாஃப்ட்வேர் எஞ்சினியர்’-ஆக இருக்கிறானாம். இன்னும் ஒரு வருடத்தில் அவன் ஒரு மூன்று வருட ஒப்பந்தத்தின் பேரில் அமெரிக்காவில் வேலைசெய்ய வேண்டியிருக்குமாம்.

"படிப்பு முடிஞ்சு காம்பஸ் ப்ளேஸ்மென்ட்லயே அவனுக்கு வேலை கிடச்சது. சென்னைல போஸ்டிங். ரெண்டு மாசம்கூட வீட்ல இருக்க முடியல. வேலைல சேர்ந்து ஒரே வருஷத்ல ஒரு வாட்டி நாலு மாசம் சிங்கப்பூர் போய்ட்டு வந்தான்..."

ஹேமாவின் பெற்றோர்களும் அவள் கணவனின் பெற்றோர்களும் காலப்போக்கில் இயற்கை எய்தியதால் கணவன் இறந்து ஒரே மகனும் சென்னைக்குச் சென்றுவிடத் தனிமையும் துக்கமும் அவளை வாட்டியது. அவள்கூடப் பிறந்த அக்கா அமெரிக்காவில் குடியேறிவிட்டாள். கணவனோ ஒரே மகனாக இருந்ததால் அவளுக்கு நெருங்கிய உறவினர்களே இல்லாமல் போனது.

"என் வேலைதான் எனக்கோர் ஆறுதலா இருந்தது. பாங்க்ல பலபேர் ஒரு குடும்பம் போலப் பழகியது இன்னொரு ஆறுதல். எனக்கோ சென்னைக்கு டிரான்ஸ்ஃபர் கிடைக்காது. கிளார்க்காவே முப்பது வருஷம் சர்வீஸ் போட்டாச்சு. இன்னும் மூணு வருஷம் தள்ளினா அடுத்த சம்பள உயர்வு செட்டில்மென்ட்ல பென்ஷன் கணிசமா ஏறும். அதுக்கப்பறம் தேவைப்பட்டா அம்பத்தெட்டு வயசில VRS (விருப்ப ஓய்வு) வாங்கிக்கலாம். இதெல்லாம் கார்த்திக் மனசுக்கு சமாதானமாகலை. மாடியும் கீழுமா இருக்கற இந்தப் பெரிய வீட்ல யார் துணையும் இல்லாம அம்மா தனியே வாழறது அவனுக்கு ரொம்பக் கவலையா இருந்தது."

சிங்கப்பூர் போய்வந்ததும் கார்த்திக் தன் அம்மாவின் மனதைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்ற முயன்று அவளை மறுமணம் செய்துகொள்ளத் தூண்டினானாம். அநேகமாக அவன் அடுத்த வருட நடுவில் அமெரிக்கா சென்று குறைந்தது மூன்று வருடம் வேலை பார்க்க வேண்டியிருக்குமாம். அதற்குப் பின்தான் அவன் திருமணம் செய்துகொள்ள முடியுமாம். வேலை காரணமாக அம்மா அவனுடன் வந்து இருக்க முடியவில்லையென்றால் மறுமணம் தான் தீர்வு என்று அவன் வாதாடினான். மனைவியை இழந்த ஒரு நல்ல மனிதராகப் பார்த்துத் துணையாக ஏற்றுக்கொண்டால் எந்தப் பிரச்சனையும் வர வாய்ப்பில்லை என்று அவன் கருதினான்.

"மனைவியோ கணவனோ யாராவது ஒருவர் மறைவில் முந்துவது எல்லோர்க்கும் நிகழ்வதுதானே? மீந்திருப்பவர் எல்லோரும் மறுமணம் செய்துகொள்ளவா விழைகிறார்கள்?" என்று லேசாகக் கிண்டினேன், அவள் மனதில் உள்ளது அறியும் வண்ணம்.

"இதேபோல்தான் நானும் அவன்ட்ட வாதாடினேன். இந்தக் காலத்துக் குழந்தைகள் நம்மைவிட புத்திசாலிகள் மட்டுமல்ல, வாழ்க்கையப் பிராக்டிகலா அணுகுபவர்கள். அதுக்கு அவன் என்ன சொன்னான் தெரியுமா?"

என் மனதில் நம்பிக்கை எழ முகத்தில் வியப்பைத் தேக்கிக் கேட்டேன்: "என்ன சொன்னான்?"

"குழந்தைகள் நலனில் அக்கறையுள்ள பெற்றோர்கள் இம்மாதிரி சமயங்களில் விதிவிலக்காக இருப்பது ஒன்றும் தப்பில்லையே? என்றான்."

"அதற்கு நீங்கள் என்ன சொன்னீர்கள்?"

"நான் தனியா வாழ்வதால் உன் நலனுக்கு என்ன கொறச்சல் கண்ணா?" என்றேன்.

"அதுக்கு என்ன சொன்னான்?"

"’நான் பேச்சிலரா அமெரிக்காவுல குறஞ்சது மூணு வருஷம்--அது எக்ஸ்டென்ட் ஆக வாய்ப்பிருக்கு--என் பர்சனல் லைஃப்ல காலம் தள்ள எவ்வளவு கஷ்டப்படுவேன்னு உனக்கு நல்லாத் தெரியும். எனக்கு பேசிக் குக்கிங் கூட இன்னும் சரியாப் பிடிபடல. நான் அமெரிக்கால இருந்துகிட்டு ஒவ்வொரு நாளும் என் கழுத்தளவு வேலைகளுக் கிடையில நீ ஒண்ணும் ஹெல்த் ப்ராப்ளம் இல்லாம இருக்கயா, ஸேஃபா இருக்கயா, உன் தேவைகளை எதும் விடாது கவனிச்சுக்கறயா, வேளா வேளைக்கு ஒழுங்கா சாப்பிடறயான்னுலாம் கவலைப்படறது என் நலனுக்குக் கொறச்சல் இல்லையாம்மா?’ அப்படீன்னு கேட்டான்.

"’உண்மைதான் கண்ணா. அப்போ ஒண்ணு செய். என்னைக் கல்யாணம் பண்ணிக்கச் சொல்லறதவிட நீ ஒரு கல்யாணம் பண்ணிகிட்டு வெளிநாடு போ. அப்போ உனக்கும் எனக்கும் எந்த ப்ராப்ளமும் இருக்காது’ன்னு நான் சொன்னேன்.

"’இருவத்தஞ்சு வயசுல எனக்கென்னம்மா கல்யாணத்துக்கு அவசரம்? அப்படியே கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் அவள் அங்கே தனியா நாள் முழுதும் வீட்ல அடஞ்சு கிடக்கணும். அப்புறம் நான் உங்க ரெண்டு பேரைப் பத்தியும் கவலைப்படணும், இன்னும் நாங்க ரெண்டு பேரும் உன்னைப்பத்திக் கவலைப் படணும். இதெல்லாம் இப்போ தேவையாம்மா?’"

அவளால் அவன் கேள்விகளுக்கு அவனை சமாதானப் படுத்தும் வகையில் பதில் சொல்லி மாளவில்லை. கடைசியாக அவள், "சரி கண்ணா! நீ நினைக்கற மாதிரி, இந்த ஊர்ல, எனக்கோ ஒனக்கோ தெரியவந்து, நமக்குத் தகுந்தவரா, ஒரு துணையிழந்த மனிதர், எனக்குத் துணையா இருக்க முடியும்னு, உனக்கும் எனக்கும் உறுதியாத் தெரிஞ்சா, நீ சொல்ற யோசனையைப் பரிசீலிப்போம்" என்று கூறி விடுப்பில் வந்திருந்த அவனைச் சென்னைக்கு அனுப்பிவைத்தாள்.

"கழுவற மீன்ல நழுவற மீனாச்சே நீ! ரெண்டு வருஷம் ரீஜினல் ஆஃபீஸ் லா டிபார்ட்மென்ட்ல வேலை பார்த்ததனால நல்லா நெளிவுசுளிவோட பேசக் கத்துக்கிட்டே. அப்புறம் உன் இஷ்டம். உனக்கு அதுமாதிரி யாராவது அகப்பட்டா எனக்கும் சம்மதம், அவர் எனக்குத் தெரிஞ்சவரா இருக்கணுங்கற அவசியம் இல்லைன்னு நான் இப்பவே உன்கிட்ட சொல்லிடறேன்" என்று அவன் ஆயாசத்துடன் கூறிவிட்டுச் சென்றானாம்.

மறுமணத்தில் ஹேமாவுக்கு விருப்பம் இல்லாமல் இல்லை என்று கோடிகாட்டிவிட்டாள். இப்போது அவளுக்குத் தகுந்த ’துணையிழந்த துணை’யாக என்னைத் தயார்படுத்திக் கொள்வது என் பொறுப்பாகியது. நாங்கள் இருவரும் ஒரே சமூகத்தைச் சார்ந்தவர்களாக இருந்ததும், இருவருமே இந்த வயதில் சகஜமாக வரும் சர்க்கரை வியாதியோ ரத்த அழுத்த நோயோ வேறு எந்த உபாதையோ இல்லாமல் நல்ல உடல்நிலையில் இருந்ததும் பெரிய ’ப்ளஸ் பாயின்ட்’களாக இருந்தது.

*****
(தொடரும்)


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sun May 19, 2013 5:53 pm

(சார்பு எழுத்துகள்: சிறுகதைத் தொடர்ச்சி)
ஹேமா சொல்வது:

புயலடித்து ஓய்ந்து அமைதியாக ஓடிக்கொண்டிருந்த என் வாழ்க்கை ஓடம் இப்போது மறுபடியும் அலைகளில் தத்தளிக்கிறதோ என்று தோன்றியது. அல்லது இந்தப் புது அலைதான் அதைக் கரைசேர்க்குமோ என்றும் ஒரு நம்பிக்கை எழுந்தது.

தமிழ்ப் பேராசிரியர் மணிவண்ணன் போன்று மனதில் எந்த விகல்பமும் இல்லாது பழகும் நல்ல மனிதரைப் பார்ப்பது அரிது. அதுவும் அவரது அறிமுகமும் சமீபகாலப் பழக்கமும் எனக்கு ஒரு கொடுப்பினை என்றே தோன்றுகிறது. துணையிழந்த இவர் துணையிழந்த எனக்கு என் வாழ்வின் இறுதிக்கட்டத்தில் கார்த்திக் சொன்ன தகுந்த பாதுகாப்பாக இருக்கமுடியும் என்ற எண்ணம் நாளுக்கு நாள் வலுப்பட்டு வருகிறது

இவர் எங்கள் குடும்பத்தில் இணைந்தால் ஏற்படக்கூடிய மாறுதல்கள் பற்றிச் சிந்தித்தேன். என் மகன் கார்த்திக்கும், இப்போது சென்னையில் கடைசி வருடக் கம்ப்யூட்டர் இஞ்சினீரிங் கோர்ஸ் பண்ணும் அவர் மகள் வள்ளிநாயகியும் அண்ணன்-தங்கைகளாவார்கள். எனக்கோர் அம்மா ஸ்தானமும் அவருக்கு அப்பா ஸ்தானமும் கிடைக்கும். அவரோ நானோ எந்த வேற்றுமையும் பாராட்டாது இரண்டு குழந்தைகளையும் நன்கு பார்த்துக்கொள்வோம் என்பது நிச்சயம். நாங்கள் இருவருமே நல்ல உடல்நிலையில் இருந்ததால் அடுத்த ஐந்தாறு வருடத்தில் குழந்தைகள் இருவருக்கும் நல்ல வரனாகப் பார்த்து மணமுடித்து வைக்க முடியும் என்றும் உறுதியான நம்பிக்கை இருந்தது.

இதெல்லாம் இருக்கட்டும். முதலில் எங்கள் இருவரது ஈடுபாடுகளும் வாழ்க்கை பற்றிய கண்ணொட்டமும் எனக்கு அதன்பின் பொதிந்துள்ள ஆன்மீகத் தேடலும் எவ்வளவு தூரம் ஒத்துப் போகும் என்று சிந்திக்கவேண்டும். காதலும் காமமும் இல்லாது மனதால் நெருங்கி சமூகம் அங்கீகரித்த தம்பதியராக, தின வாழ்வில் அன்பில் பிணைந்த நண்பர்களாக இருவரும் வாழப் போகும் வாழ்க்கையில் இவைதானே முக்கியம்?

அவருடன் பழகிய இந்த நாலைந்து மாதப் பழக்கத்தில் இது ஒன்றும் பிரச்சினையாக இருக்காது என்று தோன்றியது. மலைக்கோட்டைப் பிள்ளையார் கோவில் உச்சியில் பரந்திருக்கும் பாறையில் காற்றாட நாங்கள் உட்கார்ந்து பேசியபோதும், மாலை வேளைகளில் காவேரிப் பாலத்தில் நின்றுகொண்டு காற்று வாங்கிக் கதிரவன் மறையும் கோலங்களை வியந்து ரசித்து அந்த இயற்கையின் அழகில் திளைத்தபோதும் அவரைப் பற்றி நிறையத் தெரிந்துகொண்டேன்.

என் கணவர் போலவும் கார்த்திக் போலவும் நெற்றியில் திருநீறு ஒரு கீற்றாகவேனும் அணியாவிட்டாலும் அவருக்குக் கடவுள் நம்பிக்கை உண்டு, முருகன் பேரில் உள்ள பற்றால்தான் மகளுக்கு வள்ளிநாயகி என்று பெயரிட்டதாகவும் சொல்லியிருக்கிறார். நாங்கள் கார்த்திக்கை வளர்த்தது போல் அவரும் தன் மகளை சமயம் சார்ந்த இல்லற, நல்லற வழியில் வளர்த்ததால் இன்றைய அவசர, நவீன, கட்டுபாடற்ற வாழ்வின் அலைகள் அவர்களை அதிகம் மாற்ற வாய்ப்பில்லை.

தோளில் தொங்கும் ஜோல்னாப் பையில் புத்தகங்கள், பேனா பென்சில் மற்றும் ஒரு நோட்டுப் புத்தகம். வெள்ளை வேட்டி. வெள்ளை அல்லது சந்தனக் கலர் முழுக்கை--சமயத்தில் அரைக்கை--ஜிப்பா. கோபமே காணாத முகம். திருப்தியும் மகிழ்ச்சியும் குமிழியிடும் கண்ணாடி அணியாத விழிகள். நெற்றியின் அகலமும் இலேசான காலைப் பனிமூட்டம் போல் ஆங்காங்கே நரைத்த தலைமுடியும். நெற்றியில் இல்லாத திருநீறு அவர் மேலுதட்டில் ஒட்டிக்கொண்டது போல இருபுறமும் சரியும் வெள்ளைநரை மீசை. இதை நான் அவரிடம் சொன்னபோது ஒலியுடன் சிரித்து, "உங்கள் கற்பனையின் விற்பனத்தைக் காணும்போது கவிதையும் எழுதவரும் போலிருக்கே?" என்றார்.

"எனக்கு மரபுக் கவிதைகள் படிப்பது பிடிக்கும். பாரதியார் மிகவும் பிடித்த கவிஞர். ரொம்பக் கொஞ்சமா தேவாரமும் திருவாசகமும் கம்பனும் படிச்சிருக்கேன். நீங்கள் கற்றுக்கொடுத்தால் நான் யாப்பிலக்கணம் கற்க ரெடி."

"வேறென்ன உலகியல் சுவைகள் உங்களுக்கு?"

"தொலைக்காட்சியில் பழைய தமிழ் சினிமாக்கள், பாட்டுகளின் ஒளிபரப்பு, விவாதங்கள், ஆன்மீகத் தொகுப்புகள் பார்ப்பேன். தினமும் இரவு பத்துமணி வரை இன்டர்நெட்டில் பெண்களுக்கான மன்றங்களில் இடும் அஞ்சல்களை மேய்வேன். சமயத்தில் நானும் கருத்துகளைப் பகிர்ந்துகொள்வேன். இணையத்தில் உள்ள தமிழ்ச் சிறுகதைகளும் நாவல்களும் நிறையப் படிப்பேன். கார்த்திக் நெறைய ஆங்கில, தமிழ்க் கதைகள், சமயத்தில் தமிழ்க் கவிதைகள் படிப்பான். தினமும் என் மாலை வழிபாட்டில் என் தோழி கல்பனா சொல்லித்தந்த சின்னச் சின்ன சமஸ்கிருத ஸ்லோகங்களும், தமிழ் வழிபாட்டுச் செய்யுள்களும் முணுமுணுப்பேன். காலையில் அன்றைய கிழமையும் நாளும் சொல்லும் வண்ணம் தமிழ், சமஸ்கிருத ஸ்தோத்திரப் பாடல்கள் கேட்பேன். அபிராமி அந்தாதியும் கந்த சஷ்டிக் கவசமும் எனக்கு மிகவும் பிடித்த ஸ்தோத்திரப் பாடல்கள்... என்ன, ரொம்ப பயமுறுத்தி விட்டேனா?"

"இதுமாதிரிச் சுவைகள் எனக்கும் உண்டு தாயே! ஆனால் எந்தச் சுவையும் சுமையாகும் அளவுக்கு நான் வைத்துக்கொள்வதில்லை. தமிழ்க் கவிதைகளைப் படிக்கவும், எழுதவும், என் தமிழ் அறிவை விருத்திசெய்வதற்கும், தமிழ் பற்றி ஆராய்வதற்குமே எனக்கு நேரம் போதவில்லை! என் மகளும் நிறைய ஆங்கிலத் தமிழ்க் கதைகள் படிப்பாள். மரபிலும் புதுக்கவிதை பாணியிலும் கொஞ்சம் கவிதையும் எழுதவரும் அவளுக்கு."

"கம்பன் வீட்டுக் கட்டுத்தறியே கவி பாடும்போது மகள் என்றால் கேக்கணுமா?"

"கம்பனுக்கும் எனக்கும் வெகுதூரம் அம்மா. எனக்குப் புதுக்கவிதை பிடிக்காது. ஏதோ மூன்று மரபுக்கவிதைத் தொகுப்புகளையும், சங்ககால நிகழ்ச்சிகளை வைத்து ஒரு சின்னக் கதைப் பாட்டும் பதிப்பித்திருக்கிறேன், அவ்வளவுதான். கவிஞர் என்பதை விடப் புலவர் என்றழைக்கப் படுவதே எனக்கு விருப்பம்."

"புலவர் என்றால் புரவலர் யாரோ?"

"வேறு யார், எங்கள் கல்லூரித் தாய்தான். தனிவாழ்வில் ஒரு புரவலரைத் தேடிக்கொண்டிருக்கிறேன் என்று சொல்லலாம்."

ணிவண்ணன் சாரின் மனைவி தன் ஐம்பதாம் வயதில் இரண்டு வருடங்களுக்கு முன்பு காலமான போது அவர் மகளும் சென்னையில் கல்லூரிப் படிப்பை மேற்கொண்டதால் தொடர்ந்து மூன்று வேளையும் ஓட்டலில் சாப்பிடும் நிலைமை ஏற்பட்டு சில மாதங்களிலேயே அவர் மஞ்சள் காமாலை கண்டும் பின் வயிற்றுப் போக்காலும் மிகவும் அவதிப் பட்டாராம். அந்த சமயத்தில்தான் மகள் மிகவும் கவலைக்குள்ளாகி அவரை மறுமணம் செய்துகொள்ளுமாறு கட்டாயப் படுத்தினாளாம். எங்களைப் போலவே அவர் குடும்பமும் ’புலால் மறுத்தல்’ மேற்கொண்ட குடும்பம் என்று தெரிந்துகொண்டேன். பின்னர் அவர் கொஞ்சம் கொஞ்சமாக ஓரளவுக்கு சமையல் செய்யக் கற்றுக்கொண்டாலும், மகள் ’இந்தக் கஷ்டமெல்லாம் உனக்கெதுக்குப்பா, உனக்குத் தமிழ் ஆராய்ச்சிக்கே நேரம் போதவில்லை, அதனால நான் சொல்றபடி பேசாமல் மறுமணம் செய்துகொள்’ என்று தொடர்ந்து வற்புறுத்தி வருகிறாளாம்.

"ஏனம்மா, ஒரு தாயற்ற குழந்தை பெரும்பாலும் தனக்கு ஒரு சித்தி வருவது குறித்து அமைதியற்றே இருக்கும். நாளை சித்திக்கொரு குழந்தை பிறந்தால் தன் கதி என்னாகுமோ என்ற கவலை வரும் அல்லவா? நீ எப்படி விதிவிலக்காக இருக்கிறாய்?"

"ஆசையைப் பாரு! எனக்கு வர்ற சித்தி அம்பது வயசத் தாண்டின ஒரு பேரிளம் பெண்ணாக இருக்கணும்னுல நான் நெனைக்கறேன்! அப்பதானே இந்த மாதிரிப் பிரச்சினைகள் இருக்காது?" என்று அவர் மகள் அவரைக் கேலிசெய்தாளாம்.

"நான் மறுமணம் செய்துகொண்டால் நிச்சயமாக அந்த மாதிரியொரு பேரிளம் பெண், அதுவும் கணவணை இழந்து வாழ்பவளைத்தான் ஆலோசிப்பேன் மகளே."

"பின்னே என்ன தயக்கம்?"

"பார்க்கலாம். முருகன் சித்தம் அதுவானால் நடக்கட்டும். நானாக எதுவும் முனையப் போவதில்லை. ஏதேனும் குதிர்ந்தால் அப்போது பார்த்துக்கொள்ளலாம்."

முருகன் சித்தம் அதுவாகி அவன் அன்னை அபிராமியின் சித்தமும் அதுவானால் நடக்கட்டும் என்று நினைத்துக்கொண்டேன்.

*****
(தொடரும்)


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Mon May 20, 2013 7:20 am

(சார்பு எழுத்துகள்: சிறுகதைத் தொடர்ச்சி)
மணிவண்ணன் ஹேமா சொல்வது:

னங்கள் ஒன்றியபின் இன்னும் ஏன் இந்தக் கண்ணாமூச்சி விளையாட்டு? எனவே, இருவரும் ஒரே மாதிரியான வாசகங்கள் அமைந்த கடிதம் தயாரித்து எங்கள் கைப்பட எழுதி கார்த்திக் வள்ளிநாயகி குழந்தைகளுக்குத் தபாலில் அனுப்புவது என்று தீர்மானித்துக்கொண்டு இப்படியொரு கடிதம் எழுதினோம்:

அன்புள்ள கார்த்திக்/வள்ளி,

இந்தக் கடிதத்தை ஆற அமரப் படித்து மனதில் ஆராய்ந்து பார்த்து முடிவுசெய்து பின் உன் கருத்தைத் தெரிவிக்கவும்.

அபிராமி/முருகன் அருளால் நீ வற்புறுத்தி வருவது போல் நான் மறுமணம் செய்துகொள்ளத் தகுந்த துணையிழந்த ஒருவராக எனக்குத் தோன்றி அவரைப் பற்றிக் கடந்த ஐந்தாறு மாதங்களாக மேல்விவரங்கள் அறிந்துகொண்டதில் உங்கள் எண்ணம் ஈடேறலாம் என்று தெரிகிறது.

அவர் பெயர் மணிவண்ணன். இந்த ஊர்க் கல்லூரியில் தமிழ்த்துறைப் பேராசிரியர்களின் தலைவர். கொஞ்சம் கூட விகல்பமே இல்லாமல் பழகும் நல்ல, அரிய மனிதர். இரண்டு வருடங்களுக்கு முன் மனைவியை இழந்தவர். ஒரே மகள் வள்ளிநாயகி சென்னையில் கம்ப்யூட்டர் எஞ்சினீரிங் கடைசி வருடம் படிக்கிறாள். அவரது அண்ணா, ஆறு வயது மூத்தவர், கனடாவில் தன் மகனுடன் வசிக்கிறார். நம்மை மாதிரியே அவருக்கும் வேறு சொந்தங்கள் இல்லையென்று தெரிகிறது. நீ விழையும் பாதுகாப்புத் துணையாக எனக்கு இவர் அமையலாம் என்று எனக்குத் தோன்றுகிறது. நீ இப்போது கல்யாணம் செய்துகொளவதற்கில்லை என்று சொன்னதால்தான் நான் இந்த ஏற்பாட்டுக்கு உடன்படுகிறேன். உன் கருத்தை அறிந்து மேலே போகலாம்.

(அல்லது)

அவர் பெயர் ஹேமா. பெரிய கடைத்தெருவில் அரசு நிறுவன வங்கியொன்றில் மூத்த எழுத்தராக வேலை பார்க்கிறார். அவருடன் அதே வங்கியின் மண்டல அலுவலகத்தில் கணினி அதிகாரியாக வேலை பார்த்துவந்த அவர் கணவன் நான்கு வருடங்கள் முன்பு இயற்கை மரணம் அடைந்தாராம். ஒரே மகன் கார்த்திக் சென்னையில் மூன்று வருடங்களாக மென்பொருள் இயந்திரப் புலவராக வேலை செய்கிறான். அவர் கூடப் பிறந்த அக்கா அமெரிக்காவில் குடியேறிவிட்டாராம். ஹேமா ஓர் அமைதியான, கடவுள் பக்தியுள்ள பேரிளம் பெண். அவர் உனக்குத் தகுந்த சித்தியாக அமையலாம் என்று எனக்குத் தோன்றுகிறது. இருபத்தொரு வயது முடிந்தும் உன் திருமணத்திற்கு இப்போது அவசரம் இல்லை என்று நீ சொன்னதால்தான் நான் இந்த ஏற்பாட்டுக்கு உடன்படுகிறேன். உன் கருத்தை அறிந்து மேலே போகலாம்.

இப்படிக்கு
உன்னிடம் மிகவும் பிரியமுள்ள அம்மா/அப்பா

கடித்தை எழுதிவிட்டோமே தவிர அதை உடனே தபாலில் அனுப்புவது வேண்டாம் என்று இருவருக்கும் தோன்றியது. இரண்டு வாரங்கள் போனபின் மீண்டும் ஒருமுறை அதைப் படித்து இறுதி முடிவென உறுதியுடன் தீர்மானித்துப் பின் அனுப்பலாம் என்று தோன்றியது.

*****

வள்ளிநாயகி சொல்வது:

ண்டதும் காதல்’ என்பதெல்லாம் பிதற்றல் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். கார்த்திக்கை சந்திக்கும் வரை!

என் இறுதி செமஸ்டர் தேர்வுக்கான ப்ராஜக்ட் அவர் வேலை பார்க்கும் கம்பெனியில் அதே கிளையில் அவர் வழிகாட்டுதலின் கீழ் எனக்கும் என் அறைத் தோழி வளர்மதிக்கும் கிடைத்தபோது கார்த்திக்கை முதன்முதலில் சந்தித்தேன். எந்தப் ’பந்தாவும்’ இல்லாமல் எளிதாகத் தன்னை அறிமுகம் செய்துகொண்டார். தான் அந்தக் கம்பெனியில் மூன்று வருட அனுபவம் உள்ளவர் என்றும் இன்னும் ஒரு வருடத்தில் அமெரிக்கா போக வாய்ப்புண்டு என்றும் சொன்னார். நாங்கள் கடினமாக உழைத்தால் தனக்குத் தெரிந்த ஸாஃட்வேர் எக்ஸ்பர்டீஸ் எல்லாமும் எங்களுக்கு K.T. (knowledge transfer) செய்யத் தயார் என்று கூறினார். இந்தப் ப்ராஜக்ட் நன்றாகச் செய்தால் அவர் கம்பெனியிலே வேலை வாய்ப்பு இருக்கலாம் என்று நம்பிக்கையளித்தார்.

கார்த்திக்கைப் பார்ப்பவர்களுக்கு அவர் உயரம்தான் முதலில் கண்ணில் படும். நானே சராசரிப் பெண்களை விட உயரம் என்றால் அவர் என்னைவிட மூன்றங்குலம் உயரமாக அஞ்சு எட்டு இருப்பார் என்று பட்டது. வழவழவென்று சந்தன நிறத்தோல் (மறைந்த அவர் தந்தை உபயமாம்). அறிவும் ஆர்வமும் இதுபோலச் சுடர்விடும் முகத்தை இப்போதுதான் காண்கிறேன். சுருள்முடியில் ஒரு சுருள் வலதுபக்கம் சரிந்திருப்பது பார்க்க வசீகரம். பட்டுக் கத்தரிப்பது போலப் பேச்சு. அதே சமயம் பாசாங்கு இல்லாத நேரடியான பேச்சு. வேலையில் குறைகளை அன்புடனும் அக்கறையுடனும் எடுத்துச் சொல்லும் பாங்கு.

வளர்மதிக்குச் சென்னையில் ஒரு தோழியர் பட்டாளமே இருந்ததாலும் அவர்களில் சிலர் எங்கள் கம்பெனி இருந்த வளாகத்தில் வேறு கம்பெனிகளில் வேலை பார்த்ததாலும் அவள் பெரும்பாலும் லஞ்ச் அவர்களுடன்தான் எடுத்துக்கொள்வாள். சமயத்தில் என்னுடன் இந்தக் கம்பெனி கேன்டீனில் சாப்பிடுவாள். இப்படி வளர்மதி இல்லாத ஒரு லஞ்ச் அவரில் அவருடன் சேர்ந்து சாப்பிட்டபோது தன்னைப் பற்றிய பர்சனல் விவரங்களைச் சொல்லி என்னைப் பற்றி விசாரித்தார். இருவரும் ஒரு பெற்றோரை இழந்த ஒற்றுமையும், இருவரும் மீதமிருக்கும் தன் பெற்றோரிடம் உயிருக்குயிராய் அன்பு செலுத்துவதும், அந்தப் பெற்றோர்கள் இருக்கும் நிலையில் அவர்களை மறுமணம் செய்துகொள்ளத் தூண்டி வருவதும் எங்கள் வாழ்வில் பொதுவாக இருப்பதைத் தெரிந்துகொண்டோம்.

கம்ப்யூட்டர் ஸாஃப்ட்வேர் அறிவை வளர்த்துக்கொள்வதிலும், வேலையில் கிடுகிடென்று முன்னுக்கு வரவேண்டும் என்ற உத்வேகத்திலும், மற்ற பொழுதுபோக்கு அம்சங்களான ஆங்கிலத் தமிழ் ஃபிக்ஶன், மூவீஸ், மியூசிக், கிரிக்கெட், நல்ல ஹோட்டல்களில் திருப்தியாக டின்னர் சாப்பிடுவது, ஊர் சுற்றுவது, ஷாப்பிங் என்று எல்லா விஷயங்களிலும் எங்கள் சுவைகள் ஒத்திருந்தன.

பேசுவது பழகுவதில் தொடர்ந்தபோது, வீக்-என்ட் நாட்களில் ஹோட்டல்களில் மதியம் சாப்பிடுவதிலும், சினிமாக்கள் செல்வதிலும் இருவரும் சேர்ந்தோம். நாங்கள் இருவரும் சேர்ந்து முதலில் பார்த்த மூவி மயிலை ஐனாக்ஸ் தியேட்டரில் ஜேம்ஸ் பான்டின் ’ஸ்கை ஃபால்’. கையில் பாப்கார்ன், கோலா சகிதம் சில்லிடும் தியேட்டர் ஹாலின் அமைதியில் உட்கார்ந்து பார்த்தபோது, பரபரப்பான அந்த மூவியின் பிரம்மாண்டம் எங்களை அசத்தியது. தியேட்டர்களிலோ கடற்கரையிலோ அல்லது பூங்காக்களிலோ சில்மிஷம் செய்வது என்னைப் போலவே அவருக்கும் பிடிக்காத விஷயம். ’டிஃப்ரெண்டா இருக்கீங்களே!’ என்று அவரைச் சீண்டியபோது ’காதல் என்பது உன்னதமான சமூகம் அமைக்க இயற்கை அளித்துள்ள வரப்பிரசாதம். கிணற்றுத் தண்ணீரை வெள்ளமா கொண்டு போய்விடும்?’ என்றெல்லாம் வசனம் பேசினார். கேரியரில் செட்டில் ஆகும்வரை பர்சனல் லைஃபில் திட்டமிட்டு ’அடக்கி வாசிக்கவேண்டும்’ என்ற அவரது கருத்து எனக்கும் உடன்பாடாக இருந்தது.

பிறகென்ன? இருவரும் கல்யாணம் செய்துகொள்ள நினைப்பதைப் பெற்றோர்க்குத் தெரியப்படுத்த முடிவுசெய்தோம். இஞ்சினியர்ங் கோர்ஸிலும் இந்த ப்ராஜக்டிலும் என் பெர்ஃபாமன்ஸ் பொறுத்து அவர் பரிந்துரைத்து எனக்கு அவர் கம்பனியிலேயே தகுந்த வேலை வாங்கித் தந்து என்னையும் தன்னுடன் அமெரிக்கா அழைத்துச் செல்லமுடியும் என்ற நம்பிக்கையும் திட்டமும் அவர்வசம் இருந்தது.

*****
(தொடரும்)


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Mon May 20, 2013 9:21 am

கார்த்திக் சொல்வது:

ள்ளியை முதலில் சந்தித்தபோதே ஐ ஃபெல் இன் லவ் வித் ஹர்! எனக்கேற்ற உயரமும், மாநிறமும், குழந்தை முகமும் அகன்ற விழிகளும் கூர்மையான அறிவும் கொண்டு வளையவந்தாள். வள்ளிநாயகி என்ற பெயர் கொஞ்சம் கர்னாடகமாகத் தோன்றினாலும், கார்த்திக்-வள்ளி என்ற பெயர்ப் பொருத்தத்தை வியந்தேன். ஒத்துப்போன எங்கள் உலகியல் ஈடுபாடுகள் எங்களை மேலும் இணைத்திட, அலுவலக நண்பர்களாக ஆரம்பித்த எங்கள் நட்பில் காதல் மலர்ந்து, கடந்த மூன்று மாதத்தில் நாங்கள் ஒருவரையொருவர் நன்கு புரிந்துகொண்டு வாழ்க்கையில் இணைய முற்பட்டு பெற்றோர் சம்மதம் பெற விழைந்தோம்.

"வள்ளி, ஒண்ணு கவனிச்சயா? நீயும் நானும் தனித்தனியா நம்ப பெற்றோரை மறுமணம் செஞ்சிக்க வறுபுறுத்தினோம். இப்போ நீயும் நானும் வாழ்க்கைல இணைஞ்சா, உங்கப்பா எங்கள் வீட்டு மாடில குடிவந்து நம்ம பெற்றோர் இருவரும் சம்பந்தி முறையில ஒருத்தருக்கொருத்தர் இன்னமும் உதவியாகவும் பாதுகாப்பாவும் இருக்கலாம் இல்லையா?"

"ஸோ, நமக்கு பெற்றோர் சம்மதம் தர்றது பிரச்சனையா இருக்காதுன்னு சொல்றீங்க."

"நிச்சயம் இருக்காது. இதைவிட பெட்டர் ஸொல்யூஷன் அவங்களுக்கு வேறென்ன இருக்கமுடியும்? அந்த வகையில பாக்கறப்ப, உனக்கு ஒருவேளை எங்க கம்பெனில வேலை கிடைக்காட்டாலும் நாம கல்யாணம் செஞ்சிகிட்டு நான் உன்னை அமெரிக்காவுக்கு கூட்டிப் போகலாம். அல்லது உனக்கு சென்னைல நல்ல வேலை கிடைச்சு நீ கொஞ்ச நாள் வேலை பாக்க நெனச்சா, நீ இதே மாதிரி ரூம்ல தங்கிகிட்டு மாசம் ஒரு தடவை பெற்றோரைப் போய்ப் பார்த்து வரலாம் இல்லையா?"

"யு ஆர் ரைட். எல்லாம் நல்லா திட்டம் போட்டுச் செய்யறீங்க. உங்ககிட்ட எனக்குப் பிடிச்ச விஶயங்கள்ல இதுவொண்ணு."

"இதைக் கொஞ்சம் டிராமாடிக்கா செய்வோம். என்ன தெரியுமா? நாம ரெண்டு பேரும் சேர்ந்து நம் பெற்றோருக்குக் கைப்பட ஒரு லெட்டர் எழுதுவோம். என்ன சொல்றே?"

"நல்ல ஐடியா! நம்ப எண்ணத்தை இதைவிட ரத்தினச் சுருக்கமாச் சொல்ல முடியாது! நம்ப ரெண்டு பேர் வீடும் ஒரே தெருவில இருக்கறதால, கூரியர் ஆஃபீஸ்ல சொல்லி ஒரே நாள்ல உங்கம்மா எங்கப்பா ரெண்டு பேர்க்கும் லெட்டர் டெலிவரி செய்யச் சொல்வோம்."

*****

மணிவண்ணன் ஹேமா சொல்வது:

ருவழியாக உறுதியான், இறுதியான முடிவுடன் நாங்கள் எங்கள் கடிதத்தை ஒரு திங்கட்கிழமை யன்று கூரியர் மூலம் அனுப்பத் தீர்மானித்த போது, முந்தைய சனிக்கிழமை ரத்தினச் சுருக்கமான அந்தக் கடிதம் எங்களுக்குக் கிடைத்தது.

அன்புள்ள அம்மா/அத்தை,
மற்றும்
அன்புள்ள அப்பா/மாமா,

இந்தக் கடிதம் உங்களுக்கு மிகவும் அதிகப் பிரசங்கித்தனமாகத் தோன்றுவது இயற்கை. பெற்றோரைக் கேட்காமலேயே உங்கள் குழந்தைகள் வாழ்க்கையில் இணைய முற்படுவதுபோல் தோன்றி ’என்ன அர்ரகன்ஸ், போக்கிரித்தனம்’ என்றெல்லாம் மனதைக் குழப்பிக்கொண்டு கோபமோ கவலையோ படாதீர்கள். இந்தக் கடிதத்தை நாங்கள் சேர்ந்து எழுத முடிவு செய்தது உங்களுக்காகவே! உங்கள் நலன் பற்றிய எங்கள் கவலைக்கொரு தீர்வு கிடைத்த மகிழ்ச்சியை இருவரும் சேர்ந்து உங்களுடன் பகிர்ந்துகொள்வதற்காகவே!

நான் என் கடைசி செமஸ்டர் ப்ராஜக்ட் செய்வது கார்த்திக் மென்பொருள் இஞ்சினியராக வேலை பார்க்கும் கம்பெனியில், அதுவும் அவர் வழிகாட்டுதலில் என்ற தற்செயலான நிகழ்வு மூன்று மாதத்துக்கு முன்பு எங்களை ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்தியது. அந்த அறிமுகம் நட்பாக வளர்ந்து காதலாக மலர்ந்து நாங்கள் வாழ்க்கையில் இணைய நினைத்து உங்கள் சம்மதத்தைப் பெறவே இந்தக் கடிதத்தை எழுகிறோம். இப்போது பார்க்கும்போது வாழ்க்கையில் எதுவுமே ’ஜஸ்ட் கோயின்சிடன்ஸ்’ இல்லை, நிகழ்வது எல்லாமே ஒரு காரணத்தை முன்னிட்டே என்று படுகிறது.

அம்மா, அப்பா!
இந்த அட்வான்ஸ்ட் வயதில் மறுமணம் செய்துகொள்வது என்பது சுற்றியுள்ளோர்க்கு எவ்வளவு அபத்தமாகப் படும் என்ற மெயின் காரணத்தாலும், ஏற்கனவே இத்தனை வருடங்கள் மணவாழ்வில் ஈடுபட்டுக் குடும்பம் நடத்தி மகிழ்ச்சியாகக் கழித்துவிட்டு, இயற்கையாக நேர்ந்த ஒரு பிரிவினால் தம் குழந்தையை முன்னிட்டு மீண்டும் மறுமணம் செய்துகொள்வதற்கு உங்களைத் தயார்ப்படுத்திக் கொள்வது எத்தனை சிரமமான, சாத்தியம் இல்லாத அல்லது சாத்தியம் மிகக் குறைந்த விஷயம் என்பதை உணராமலும் நான் உங்களை அதற்குக் கட்டாயப் படுத்தியதை இப்போது நினைக்கும் போது மிகவும் வருத்தமாக இருக்கிறது. இந்த விஷயத்தில் எங்கள் பக்கம் உள்ள தவறைப் பொறுத்தருளி எங்களை மன்னிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். ஆறு மாதங்களுக்கு முன்பு எங்களுக்கு ஒருவரையொருவர் தெரிய நேர்ந்திருந்தால் உங்களுக்கு எந்தவித மன சஞ்சலமும் இல்லாமல் போயிருக்கும். இப்போதாவது நேர்ந்த இந்தக் கொடுப்பினை மூலம் உங்களை எங்களுக்கு உதவச் சொல்வதற்கு பதிலாக நாங்கள் உங்களுக்கு உதவ ஒரு வாய்ப்பினை அபிராமி முருகன் அருளியது எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது.

அம்மா, மாமா!
வள்ளியின் தந்தை நாமிருக்கும் கீழாண்டார் தெருவிலேயே குடியிருப்பதாகச் சொன்னாள். நாங்கள் வாழ்வில் இணைவதற்கு நீங்கள் சம்மதித்தால், வள்ளியின் தந்தை நம் வீட்டிலேயே மாடியில் குடிவந்து சம்பந்தி முறையில் நீங்கள் இருவரும் ஒருவருக் கொருவர் உதவியாகவும் பாதுகாப்பாகவும் இருக்கலாம், அது மிகவும் இயல்பாகவும் இருக்கும் அல்லவா? நாங்கள் எதிர்காலத்தில் உங்களுடன் இருக்கமுடியும் காலம் வரை இந்த ஏற்பாடு நீடிப்பது இருவருக்கும் சம்மதம்தானே?

அப்பா, அத்தை!
இருவத்தொரு வயது முடிந்து சில மாதங்களே ஆகியிருக்க, தான் உங்களுக்காகத் தான் சீக்கிரம் மணம் செய்துகொள்ள சம்மதிக்கிறேன் என்று நினைக்கவேண்டாம். கார்த்திக்கை உங்களுத் தெரிந்திருந்தால் நான் அவரிடம் என் மனதைப் பறிகொடுத்தது நியாயமே என்று உங்களுக்குப் படும். அதேபோல, கார்த்திக் அம்மாவின் உயிருக்குயிரான மகன் என்பதும் எனக்கு நன்கு தெரியும். ஆகவே நான் உங்கள் பெயரைக் காப்பாற்றி அத்தைக்கு உகந்த மருமகளாக நடந்துகொள்வேன்.

கடைசியாக, எங்கள் காதல் சங்ககாலத் தலவன்-தலைவி போன்ற களவொழுக்கத்தில் பிறந்ததோ, அல்லது இந்நாளைய மேம்போக்கான டேட்டிங் ஈடுபாடுகளில் வளர்ந்ததோ அல்ல. மூன்று மாதப் பழக்கத்தில் நாங்கள் எவ்விதத்திலும் வரம்பு மீறாமல் ஒருவரை யொருவர் புரிந்துகொண்டோம். உங்கள் முழு சம்மதத்துடன்தான் நாங்கள் மணம்செய்து கொள்வோம். நம் குடும்ப மரபில் இதுவும் ஒரு பெற்றோர் ஏற்பாட்டுக் கல்யாணமாகவே நீங்கள் கருதலாம். என்ன, மாப்பிள்ளை பெண்ணைப் பெற்றோர் அறிமுகப்படுத்தும் படலம் மட்டும் இல்லை, அவ்வளவுதான்!

அம்மா, மாமா!

உங்கள் இருவருக்கும் ஒருவரை யொருவர் தெரியாதிருக்க வாய்ப்பிருக்கிறது. அல்லது ஒரே தெருவில் வசிப்பதால் பார்வையளவில் தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது. தவிர, அவர்கள் முன்பு பாலக்கரையில் குடியிருந்தபோது நம் வங்கியில்தான் பற்று-வரவு செய்துவந்ததால், இப்போது ஒரு கஸ்டமர் என்ற முறையில் இருவருக்கும் அறிமுகம் இருக்கலாம். எப்படியிருந்தாலும், அம்மாவும் அப்பாவும் இந்தக் கடிதம் மூலம் ஒருவரை யொருவர் சந்தித்து, எல்லாவற்றையும் நன்றாக டிஸ்கஸ் செய்து, எங்கள் விஷயத்திலும் தம் விஷயத்திலும் சேர்ந்து ஒரு நல்ல முடிவெடுத்து எங்களுக்கு பதில் போடுமாறு வணங்கிக் கேட்டுக்கொள்கிறோம். அந்த முடிவு சம்மதமாகவே இருக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு.

இப்படிக்கு,
உங்கள் பிரியமுள்ள,
கார்த்திக், வள்ளி

*****
(தொடரும்)


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Mon May 20, 2013 9:33 am

மணிவண்ணன் ஹேமா சொல்வது:

குழந்தைகள் கேட்டுக்கொண்டபடி நான் கடிதத்தை எடுத்துக்கொண்டு ஹேமாவின் வீட்டுக்குச் சென்றேன். கடந்த இரண்டு வாரங்களாக நான் அவருக்கு யாப்பிலக்கணம் பயிற்றுவிப்பதால் சனிக்கிழமையான இன்று வகுப்பு நாள் என்பது வசதியாக அமைந்தது. தானும் கடிதத்தைக் கையில் வைத்துக்கொண்டு கதவைத் திறந்துவிட்ட ஹேமா நான் உள்ளே நுழைந்து அமர்ந்ததும் என் எதிரில் அமர்ந்துகொண்டு விக்கி விக்கி அழுதார்!

"என்ன தவறு செய்தோம் மணிவண்ணன் சார்! எப்படி நாம் இதுபோல் ஒரு சாத்தியம் இருப்பதை நினைத்துக்கூடப் பார்க்கவில்லை?" என்றார் கண்ணீர் பெருக்கி.

"நாம் நம் கடிதத்தை அனுப்பியிருந்தால் அது அவர்களுக்கு எவ்வளவு பெரிய இடியாக இருந்திருக்கும் என்று எண்ணிப் பார்க்கவே அச்சமாகவும் கலக்கமாகவும் இருக்கிறது. நான் எழுதிய கடிதம் இதோ. நீங்கள் எழுதியதையும் எடுத்து வாருங்கள். முதல் வேலையாக அவற்றைத் தீயிட்டுக் கொளுத்துவோம். அந்தக் கனலில் நம் மனச் சஞ்சலங்களும், நமக்கே தெரியாமால் ஏதேனும் சபலம் உள்ளுக்குள் இருந்திருந்தால் அதுவும் எரிந்து சாம்பலாகட்டும்! இன்னொரு விஷயம். நாம் இருவரும் மறுமணம் என்ற பெயரில் இணைய நினத்தோம் என்பது எக்காரணம் கொண்டும் நம் குழந்தைகளுக்குத் தெரிந்துவிடக் கூடாது. நமக்குள் எழுந்த அந்த நினைவும் சாம்பலாக வேண்டும்."

"நிச்சயமாக சார். இதோ அந்தக் கடிதம், என் கைப்பையிலேயே வைத்திருக்கிறேன். நீங்கள் எங்கள் குடும்பத்தில் இணைந்தால் ஏற்படக்கூடிய மாறுதல்கள் பற்றிச் சிந்தித்தேன் சார். கார்த்தி வள்ளிநாயகி அண்ணன் தங்கையாவார்கள் என்ற எண்ணம்தான் எனக்கு முதலில் தோன்றியது. அப்போது கூட எனக்கு அவர்களை வாழ்வில் இணைத்தால் என்ன என்று தோன்றவில்லை, பாவி நான்!"

"எனக்கும் அந்த எண்ணம் மனதில் படவே இல்லையே அம்மா! இத்தனை வயதில் எனக்குள் அப்படியென்ன சபலம் என்று இப்போது குழம்புகிறேன். போகட்டும். நடந்ததும் நடக்க இருந்ததும் பக்க விளைவுகள் இல்லாமல் முடிந்தது முருகன், அபிராமி அருளால்தான் என்று மனதைத் தேற்றிக்கொள்வோம். நாம் சம்பந்திகளாக இணைவது உலகம் ஒப்புவதாகவும், மிகவும் இயல்பாகவும் இருக்கும். அதை எவ்வளவு அழகாகச் சொல்லிவிட்டான் கார்த்திக்!"

"சிறியவர்கள் விருப்பப்பட்ட பெரியவர்களின் ஏற்பாட்டுக் கல்யாணம்! வள்ளியும் மிக அழகாகச் சொல்லிவிட்டாள்!"

"அப்படியானால் பெண்ணின் தந்தை என்ற முறையில் முதலில் நான் உங்களிடம் கேட்கிறேன்: என் மகள் திருவளர்ச் செல்வி வள்ளிநாயகியை உங்கள் மகன் திருவளர்ச் செல்வன் கார்த்திக் அவர்கள் மணம் செய்துகொள்ள உங்களுக்கு சம்மதம்தானே?"

"அதைவிட வேறென்ன பேறு எங்களுக்கு வேண்டும் மணிவண்ணன் சார்! வள்ளி எனக்கு ஏற்ற மருமகளாக அமைவாள் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. கார்த்திக் பரிந்துரைப்பது போல நீங்கள் இருவரும் எங்கள் வீட்டு மாடியிலேயே குடிவந்து விடுங்கள்."

"மாப்பிள்ளை சொல்லை மனைவியில்லாத மாமனார் தட்ட முடியுமா? முருகன் திருவுளப்படி நடக்கட்டும்."

"சரியாக ஆராயாமல் நாம் ஏன் மறுமணம் என்ற இனிஷியேடிவ் எடுக்கத் துணிந்தோம் சார்? அதற்குக் குழந்தைகள் நலன் மட்டும்தான் காரணமா அல்லது அதைவிட நம் சுயநலம் காரணமா என்ற குற்ற உணர்வு மட்டும் என்னை அரித்துக்கொண்டே யிருக்கும் சார். அது அவ்வளவு சீக்கிரம் மறையாது."

"நம் சுயநலம் ஒரு காரணமாக இருக்கலாம் அம்மா! அது போன்ற சஞ்சலங்களையும் சபலங்களையும்தான் நாம் இப்போது எரியிட்டு விட்டோமே! வாழ்வில் நம் உண்மையான நிலையை இப்போதாவது நாம் தெளிவாகப் புரிந்துகொள்வேம்."

"அந்த உண்மையான நிலைமை என்பது என்ன சார்?"

"எப்போது குழந்தைகள் பிறந்தார்களோ அப்போதிருந்தே நாம் குறுகி ஒலிக்கும் சார்பு எழுத்துகள்தான் அம்மா. அவர்கள்தான் உயிரும் மெய்யுமாகிய முதல் எழுத்துகள். குழந்தைகளுக்கு மணப்பருவம் வந்து கல்யாணமானவுடன் அவர்கள் கணவனும் மனைவியுமாகி ஒருவரை யொருவர் சார்ந்து ஒலிக்கும் உயிர்மெய் எழுத்துகளாகிறார்கள். அப்போது அதுவரை கணவன்-மனைவி மற்றும் அப்பா-அம்மா என்ற அதிகாரத்துடன் உயிர்மெய் எழுத்துகளாக முழு மாத்திரையுடன் ஒலித்த பெற்றோர்கள் மாத்திரை குறைந்து குற்றியலுகரமாக, இசையும் பொருளும் நிறைக்கும் அளபெடைகளாக, ஐகார, ஔகாரக் குறுக்கங்களாக ஆகிவிடுவதைப் புரிந்துகொண்டால் கூட்டு வாழ்க்கையில் பிரச்சினைகள் இருக்காது. அப்படியே இருந்தாலும அவை குறைவாக, எளிதில் மறைவதாக இருக்கும்."

"உண்மைதான் சார். இப்போது எனக்கு வாழ்வெனும் யாப்பின் இலக்கணம் புரியத் தொடங்கியிருக்கிறது. வாருங்கள் நம் சம்மதத்தை மறுதபாலில் குழந்தைகளுக்குத் தெரியப்படுத்துவோம். நான் வள்ளி மருமகளுக்கும் நீங்கள் கார்த்திக் மருமகனுக்கும் ஒரே மாதிரியான கடிதம் தயாரித்து எழுவோம். அதுதான் நாம் மேற்கொள்ள நினைத்த அசட்டுத்தனமான முயற்சிக்குப் பிராயச்சித்தம்", என்றார் ஹேமா, வழியும் கண்ணீரைத் துடத்தவண்ணம்.

*** *** ***
(முற்றியது)


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Tue May 21, 2013 8:30 pm

நாடியது கேட்கின்...
சிறுகதை
ரமணி, 21/05/2013


[இணையத்தில் ஆங்காங்கே மேய்ந்து கிடைத்த விவரங்களுக்குக் கண்-காது-மூக்கு வைத்து எழுதிய கதை இது.--ரமணி]

நான் முத்துவேல். என் நண்பன் மனோகரன். இருவரும் நெருங்கிய நண்பர்கள், அதுதான் ஆச்சரியம்!

ஏனெனில் நான் (மனோகரன் மூடநம்பிக்கைகள் என்று மறுக்கும்) அனைத்து ஆன்மிக விஷயங்களையும் நம்புபவன்: எனக்குக் கோவில் ஸ்தல புராணங்கள், சாயி பாபா போன்ற மகான்கள் நிகழ்த்தும் அதிசயங்கள், பேய்-பிசாசுகள் பிடிப்பது அவற்றை ஓட்டுவது, மந்திரித்து வைத்தியம் செய்வது, மறுபிறவி--இன்னும் எது வேண்டுமானாலும் சேர்த்துக்கொள்ளுங்கள்--போன்ற அனைத்து விஷயங்களும் உண்மை.

மனோகரனுக்கோ ஒரு நியூட்டன், ஒரு ஐன்ஸ்டின், ஒரு ஸ்டீஃபன் ஹாகிங்--இன்னும் யாரை வேண்டுமானாலும் சேர்த்துக்கொள்ளுங்கள்--போன்று யாரவது உறுதிப்படுத்தி யிருந்தால்தான் அது உண்மை, அறிவியல், நிச்சயம் நம்பலாம். எல்லாத் துறைகளிலும் பற்பல விஞ்ஞானிகள் ஒருவருக்கொருவர் முரண்பட்டுக் கருத்துக்களைச் சொல்கிறார்களே மனோ, இவற்றில் எதுதான் உண்மை என்று கேட்டால் ஜகா வாங்கிவிடுவான்! காலம் காலமாக நிறுவப்பட்டதாகக் கருதப் பட்ட விஞ்ஞான் உண்மைகள் ஒரு நாள் தூக்கியெறியப் படுவதே விஞ்ஞானத்தின் வளர்ச்சி என்பது அவன் கட்சி.

சரி, விஷயத்துக்கு வருகிறேன். நாங்கள் இருவரும் சேர்ந்து வைத்தீஸ்வரன் கோவிலில் நாடி ஜோதிடம் பார்க்க முடிவுசெய்தோம்! பொதுக்காண்டமும் முற்பிறவி பற்றிப் பேசும் சாந்திக்காண்டமும் பார்ப்பதாக முடிவுசெய்துகொண்டோம். எனக்குண்டான பலன்களை அறிந்துகொள்வதில் எனக்கு ஆர்வம் இருந்தது. அவனுக்குச் சொல்லப்படும் பலன்கள் எப்படியாவது பொய், புனைகதை என்று நிரூபிக்கவேண்டும் என்பதில் அவனுக்கு ஆர்வம் இருந்தது. இதற்காக அவன் திரும்பவும் வை.கோவிலுக்கு வரவும் தயாராக இருந்தான்.

ஜோதிடர் எங்கள் கைரேகைகளைப் பதிந்துகொண்டு ஓலைதேடச் சென்றபோது நாங்கள் அதே தெருவில் உள்ள ஒரு சின்ன விடுதியில் இட்டிலி-வடை, தோசை, காப்பி சாப்பிட்டோம். தோசைக்காகக் காத்திருந்தபோது, "முத்து, எப்படிடா கைரேகையை வைத்து ஓலையைத் தேடமுடியும்? அதுவே ஃப்ராட்" என்றான். அங்கு சாப்பிட்டுக்கொண்டிருந்தவர்களில் பலர் ஏடு பார்க்க வந்தவர்கள் என்பது வெளிப்படையாகத் தெரிந்ததால் நான் அவனை அடக்கிவிட்டுக் கிசுகிசுத்தேன்: "மனிதர்களின் கைரேகைகளை உன் அறிவியல் முறைப்படி பெர்ம்யுடேஷன்-காம்பினேஷன் போட்டால் வரும் எண் 28531 கோடி, தெரியுமா உனக்கு? இந்த நம்பரை வெச்சு நெட்ல நாடி ஜோதிடம் பக்கங்கள்ல தேடிப்பார்." அவன் ஒன்றும் பதில் சொல்லாவிட்டாலும் அவன் ஆர்வத்தைக் கிளறிவிட்டது தெரிந்தது.

இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்ற உறவில் எங்களுக்குச் சொல்லப்படும் பலன்களை இருவருமே சேர்ந்து கேட்டோம். பழந்தமிழ்ச் செய்யுட்கள் மூலம் எங்கள் பெர்சனல் விவரங்கள் தெரிந்தது "டூ மச், அந்தாள் கில்லாடிதான்" என்றான், அவர் தன் யஜமானர் அழைத்ததாக ஐந்து நிமிடங்கள் அறையை விட்டு வெளியில் சென்றிருந்தபோது. ஒரு ஓலையை எடுத்துப் பார்த்துவிட்டு அதில் இன்றைய தமிழ் எழுத்துகளில் இருக்கும் கிறுக்கல்கள் புரியாமல், "இந்த ஓலை கௌசிகர் எழுதி தமிழ்ல ட்ரான்ஸ்லேட் பண்ணினதுன்னு எப்படி நம்ப முடியும்? ரொம்பப் போனா இது முன்னூறு-நானூறு வருஷம் பழமையா இருக்க சான்ஸ் இருக்கு. கார்பன் டேட்டிங்க்கு கொடுத்தாங்கன்னா இவங்க வண்டவாளம் எல்லாம் வெளில வந்திடும்."

பொதுக்காண்டம் முடிந்தது. எங்களைப் பற்றிய பொது விவரங்கள் பெரும்பாலும் சரியாக இருந்தன. ஆனால் எதிர்காலம் பற்றிய நம்பிக்கைகள் அதிகம் இல்லை. பலன்கள் சொல்லும் போது மனோவிடம் ஜோதிடர் திடீரென்று, "நீங்கள் ஒரு நாத்திகரா?" என்று கேட்டு அவனை அசரவைத்தார். "டேய், மைண்ட் ரீடிங்கூட பண்ற கில்லாடிடா ஜோசியர்!" என்றான் பின்னர். "நாங்கூட இதெல்லாம் கத்துக்கிட்டா நல்லா காசு பாக்கலாம் போலிருக்கே!"

சாந்திக் காண்டத்தில் என் முற்பிறவி பற்றி ஜோதிடர் அலசியபோது நல்ல வேளையாக மனோவுக்கு வயிற்றுக்குடைச்சல் ஏற்பட்டுக் கொஞ்ச நேரம் வெளியே சென்றான். முற்பிறவியில் என் பெயர் முத்தண்ணனாம். நான் தஞ்சை சரபோஜி மன்னர் அரண்மனையில் அவருக்கு நெருங்கிய பணியாளனாக வேலை பார்த்தேனாம். பேராசையில் ஒரு நாள் அரண்மனைக் கருவூலத்திலிருந்து ஒரு விலையுயர்ந்த முத்துமாலையைத் திருடி அகப்பட்டுக்கொண்டு சிரச்சேதத்துக்குத் தப்பி நாடு கடத்தப்பட்டுப் பிச்சையெடுத்து வாழ்ந்து நாய்பாடு பட்டேனாம். இன்னும் சில பிறவிகளுக்கு எனக்கு முத்து என்று ஆரம்பிக்கும் பெயர்தான் இருக்குமாம், அந்த முத்துவேல் முருகன் என்னை ஆட்கொள்ளும் வரை. முத்துவேல் என்று பெயர்கொண்ட இந்தப் பிறவியிலும் நான் என் நெருங்கிய நண்பனிடம் இருந்து ஒரு பெரிய கடன்தொகையை வாங்கியிருப்பேனாம். அதனை என்னால் திருப்பித் தரவே முடியாதாம்.

வியர்த்து வெலவெலத்துவிட்டேன். மனோவிடம் நான் ஒரு லட்ச ரூபாய் கடன் வாங்கியிருந்தேன். அத்துடன் என் சொந்தப் பணத்தையும் போட்டு இரண்டு ஐம்பது கிராம் 24 காரட் தங்கச் சிறுகட்டிகள் வாங்கியிருந்தேன், இப்போது ப்ளஸ்-டூ பண்ணும் என் மகளுக்கு அவள் திருமண சமயம் வரும் போது நகைகள் செய்ய. முதல் வேலையாக மனைவியிடம் சொல்லி ஒரு ஐம்பது கிராம் கட்டியில் நகைகள் செய்து, இன்னொரு கட்டியை விற்று (எங்கள் குடும்ப நகைக் கடையில் பாதி பணமாகவும் பாதி நகையாகவும் தருவதற்கு ஒப்புவார்கள்) மனோவின் கடனை அடைத்துவிட வேண்டும் என்று தீர்மானித்துக்கொண்டேன். ஜோதிடர் இந்த விஷயத்தில் சொன்னது பொய் என்று நிரூபிக்க வேண்டும்.

மனோவின் முற்பிறவி பற்றிச் சொல்லும் போது ஜோதிடர் அப்போது சுதாகர் என்ற பெயரில் காஞ்சி தேசத்தில் வாழ்ந்த அவன் மிகப் பணக்காரனாக இருந்தான் என்றும், சுற்றமும் நட்பும் அடுத்துக் கெடுத்த சதிகளால் பணமெல்லாம் இழந்து கடைசி காலம் வரை சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டு வாழ்ந்ததாகவும், இது அவனை இந்தப் பிறவியில் நாத்திகனாக்கியிருக்கலாம் என்றும் பலன் சொன்னார்.

மனோவின் முற்பிறவிக் காண்டம் பாதியில் நின்றது. ஜோதிடர் தம் செல்ஃபோனில் விவரம் தெரிவிக்க அவரது யஜமானரே அறைக்கு வந்துவிட்டார். "ரொம்ப சாரிங்க. இந்த ஓலைச் சுவடிகள் எங்கள் பரம்பரைச் சொத்தாக இருந்துவந்து தலைமுறை தலைமுறையாகக் குடும்பத்தில் மூத்த பிள்ளை இந்தப் புனிதத் தொழிலை மேற்கொண்டு வந்தோம். இந்தத் தலைமுறையில் என் தம்பிக்கும் இந்தத் தொழிலில் ஆர்வம் தோன்றிவிடவே, நாங்கள் கைவசம் இருந்த சுவடிகளை ஆளுக்குப் பாதியாகப் பங்கிட்டுக் கொண்டோம். அவர் இப்போது சாளுக்கிய தேசத்தில், அதாவது இன்றைய பங்களூரு அருகில், ஏடு பார்த்துப் பலன் சொல்லி வருகிறார். நீங்கள் அங்கே போக முடியுமானால் இதுவரை பார்த்த உங்கள் சுவடிகள் பற்றிய விவரங்களைத் தருகிறேன். மீதமுள்ள முற்பிறவி பற்றிய சாந்திக் காண்டத்தையும் இன்னும் ஏதேனும் காண்டங்கள் பார்க்க விரும்பினால் அவற்றையும் நீங்கள் என் தம்பியிடம் பார்த்துக்கொள்ளலாம். மீதமுள்ள சாந்திக்காண்டத்துக்கு நீங்கள் ஏதும் தனியாக பணம் கட்ட வேண்டியதில்லை."

யஜமானர் தந்த விவரங்களை எடுத்துக்கொண்டு ஊர்போய்ச் சேர்ந்தோம். மனோவுக்கு இருப்புக் கொள்ளவில்லை. தனக்குச் சொல்லப்பட்ட பலன்களை நம்புவதா வேண்டாமா என்ற குழப்பத்தில் அவன் மீதமுள்ள சாந்திக்காண்டத்தை சாளுக்கிய தேசத்தில் பார்த்துவிடத் தீர்மானித்து, அடுத்த மாதமே இருவரும் இன்டர்-ஸ்டேட் சொகுசுப் பேருந்தில் கிளம்பினோம்.

என்ன சொல்வது? பாதி வழியில் ஒரு லாரி மோதி விபத்தில் எங்கள் பேருந்து சிக்கிக்கொள்ள, என் அருமை நண்பன் மனோ உட்பட இருபது பேர் மாண்டனர். வண்டியிலேயே என் அருகில் உயிர்விட்ட மனோ உரக்கக் கத்திய கடைசி வார்த்தை, "முத்துவேலா!!" என்பதுதான். அவன் அருகில் அமர்ந்திருந்த நான் காயங்களுடன் தப்பினேன்.

மனோவின் கடைசி ஆசையைப் பூர்த்தி செய்யும் எண்ணத்தில் நான் விவரங்களை எடுத்துக்கொண்டு அந்த தம்பி ஜோதிடரிடம் சென்றேன். வெகுநேரம் தேடிவிட்டு அவர் ஒரே ஒரு ஓலையைக் காட்டினார். அதில் இப்படி எழுதியிருந்தது:

சாளுக்கிய தேசச் செலவின் போது
மாளுதல் நிகழும் மனமும் மாறும்.


*** *** ***


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sat Jun 01, 2013 9:35 am

நாடி ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லாதவர்களுக்காக இந்தக் கதையின் முடிவைச் சற்று மாற்றுவோம்:

னோவின் முற்பிறவிக் காண்டம் பாதியில் நின்றது. ஜோதிடர் தம் செல்ஃபோனில் விவரம் தெரிவிக்க அவரது யஜமானரே அறைக்கு வந்துவிட்டார். "ரொம்ப சாரிங்க. இந்த ஓலைச் சுவடிகள் எங்கள் பரம்பரைச் சொத்தாக இருந்துவந்து தலைமுறை தலைமுறையாகக் குடும்பத்தில் மூத்த பிள்ளை இந்தப் புனிதத் தொழிலை மேற்கொண்டு வந்தோம். இந்தத் தலைமுறையில் என் தம்பிக்கும் இந்தத் தொழிலில் ஆர்வம் தோன்றிவிடவே, நாங்கள் கைவசம் இருந்த சுவடிகளை ஆளுக்குப் பாதியாகப் பங்கிட்டுக் கொண்டோம். அவர் இப்போது சாளுக்கிய தேசத்தில், அதாவது இன்றைய பங்களூரு அருகில், ஏடு பார்த்துப் பலன் சொல்லி வருகிறார். நீங்கள் அங்கே போக முடியுமானால் இதுவரை பார்த்த உங்கள் சுவடிகள் பற்றிய விவரங்களைத் தருகிறேன். மீதமுள்ள முற்பிறவி பற்றிய சாந்திக் காண்டத்தையும் இன்னும் ஏதேனும் காண்டங்கள் பார்க்க விரும்பினால் அவற்றையும் நீங்கள் என் தம்பியிடம் பார்த்துக்கொள்ளலாம். மீதமுள்ள சாந்திக்காண்டத்துக்கு நீங்கள் ஏதும் தனியாக பணம் கட்ட வேண்டியதில்லை."

"எனக்கு அந்த மீதிக்காண்டம் நிச்சயமா பாக்கணும். நாங்க அடுத்த வாரமே கிளம்பலாம்னு நினைக்கறோம். அதான் நெறைய இன்டர்-ஸ்டேட் செகுசுப் பேருந்துகள் இருக்கே?"

"அப்ப ஒண்ணு செய்யுங்க. நான் தம்பிட்ட இன்னைக்கே பேசிடறேன். நீங்க ஊருக்குப் போய், டிக்கட் புக் பண்ணிட்டு, எனக்கு உங்க பயணம் பற்றிய தகவல் சொல்லுங்க. தம்பியே ஒரு ஆளை பஸ் ஸ்டாண்டுக்கு அனுப்பி உங்களை ரிசீவ் பண்ணுவார், நீங்க தேடி அலைய வேண்டியதில்லை. இது என் கார்ட். என் செல் நம்பரும், இந்த விலாசமும் இருக்கு."

"ரொம்ப நன்றிங்க. அப்ப நாங்க கிளம்பறோம்" என்று நண்பர்கள் விடைபெற்றுச் சென்றனர்.

அதன்பின், யஜமானர் தன் தம்பியிடம் பலமுறை பேசினார். தம்பியிடம் மனோகரனின் முற்பிறவிக் காண்டம் பற்றிய மீதி ஏடுகள் எதுவும் இல்லையென்று தெரிந்தது. "ரெண்டு நாளா எல்லாத்தையும் தலைகீழாப் புரட்டிப் பாத்துட்டேன் அண்ணே, எதுவும் கிடைக்கலை."

"சான்ஸே இல்லையா! என்கிட்ட எல்லா ஏடுகளும் இருந்தபோது ஒண்ணு கூட இப்படி அரைகுறையா இருக்கலைன்னு எனக்கு நிச்சயமாத் தெரியும். வேற கட்டு எதுலயாவது மாறி இருக்குமா? அல்லது நீ அங்கே ரெண்டு தரம் வீடு மாத்தினியே அப்ப மிஸ் ஆகியிருக்கலாம் இல்ல? அவங்க ரெண்டு பேரும் வர்ற புதன் கிழமை சென்னையிலிருந்து கிளம்பி வராங்கய்யா. இன்னைக்கு சனிக்கிழமை. என்ன செய்யப் போறே?"

"கவலைப் படாதீங்கண்ணே. நான் பாத்துக்கறேன்."

"எது செஞ்சாலும் என்கிட்ட சொல்லிட்டு செய். எதும் வில்லங்கம் வந்து நம்ம குடும்பப் பேருக்குக் களங்கம் வந்துறக் கூடாது."

ந்த புதன் கிழமை பாதி வழியில் ஒரு லாரி மோதி விபத்தில் அவர்கள் பேருந்து சிக்கிக்கொள்ள, மனோகரன் உட்பட இருபது பேர் மாண்டனர். வண்டியிலேயே நண்பன் அருகில் உயிர்விட்ட மனோ உரக்கக் கத்திய கடைசி வார்த்தை, "மூத்துவேலா!" என்பதுதான். அவன் அருகில் அமர்ந்திருந்த முத்துவேல் காயங்களுடன் தப்பினான்.

நண்பர்கள் வந்து சேரவில்லை என்றதும் தம்பி ஜோதிடர் பேருந்து கம்பெனிக்கு அலைபேசி, விபத்து பற்றியும் அதில் மனோகரன் இறந்தது பற்றியும் அவன் நண்பன் முத்துவேல் அருகில் ஓர் அரசு மருத்துவ மனையில் சிசிச்சை பெறுவது பற்றியும் தெரிந்துகொண்டார். முத்துவேலிடம் அலைபேசி துக்கம் விசாரித்து, அவன் அடுத்த பத்து நாட்களில் நண்பனின் கடைசி விருப்பத்தை நிறைவேற்ற அவரைச் சந்திக்க வரப்போவது பற்றித் தெரிந்துகொண்டார்.

"வாங்க தம்பி, என்கிட்ட அந்த மீதி ஏடு இருக்கு, காட்டறேன்."

"அதில என்னங்க எழுதியிருக்கு?"

"அதைப் பத்தி ஃபோன்ல பேசக் கூடாதுங்க. நீங்க நேர்ல வாங்க."

அண்ணனிடம் ஆலோசித்த போது ஒரு ஜாதகரின் மரணம் பற்றி அறிவிக்கும் ஒற்றைச் சுவடிகள் இரண்டு பல வருஷங்கள் முன்பு தாம் பலன் சொல்லிய கட்டில் இருந்ததாகத் தெரிந்தது. "இந்தக் கேஸ்லயும் நிச்சயமா இருக்கணும்யா. நீதான் அதை எங்கயோ மிஸ் பண்ணிட்டே. இப்ப வேற வழியில்லை, பாத்து செய். நம்ம குலதெய்வம் முனீஸ்வரர் நம்மைக் காப்பாத்துவார்."

தம்பி ஜோதிடர் ஒரு பழைய, எதுவும் எழுதப் படாத ஓலை நறுக்கை எடுத்தார். அதில் பின்வருமாறு எழுதினார்:

சாளுக்கிய தேசச் செலவின் போது
மாளுதல் நிகழும் மனமும் மாறும்.


*** *** ***


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Tue Jun 18, 2013 7:37 pm

’ஷோகேஸ்’
சிறுகதை
ரமணி, 18/06/2013


[collage, அதாவது படத்திரட்டு என்னும் உத்தியைப் பயன்படுத்தி எழுதிய சிறுகதை.]

து வந்து... எங்க வீட்டு ஷோகேஸ் படம்... படத்த நல்லா, விவரமாப் பாருங்க!... இதவெச்சு ஒரு கதை சொல்லப் போறேன். என்னோட கதை...

ரமணியின் கதைகள் - Page 6 2793d1371562704-2990-3015-2994-3009-2990-3021-2970-3007-2994-2965-2980-3016-2965-2995-3021-img-showcase

’மதுமிதா’ அப்படீன்னா அர்த்தம் தெரியுமா உங்களுக்கு? அதான் என்னோட பேர். அதுக்கு அர்த்தம்... ம்? எனக்கு எங்க தாத்தா சொல்லிக் குடுத்தாங்க...

ஐய, மதுன்னா நீங்க நெனைக்கற மாதிரி ஒயின் கிடையாது. மதுன்னா தேன்! சுரா-ங்கற வார்த்தைக்குதான் ஒயின்னு அர்த்தம். மிதான்னா filled with, நெறஞ்சு இருக்கறது. ஸோ, மதுமிதான்னா தேன் அல்லது இனிமை நெறஞ்சவள்னு அர்த்தம். "தேன் கலர்ல நீ இருந்ததாலயும், உங்க அம்மா-அப்பா விரும்பினபடி பொறந்த முதல் ஸ்வீட் கர்ள்-ங்கறதாலயும், அவங்க உனக்கு மதுமிதான்னு பேர் வெச்சாங்க", அப்படீன்னு தாத்தா எனக்கு எக்ஸ்ப்ளெய்ன் பண்ணாங்க. எனக்கு ஏதாவது சந்தேகம் வந்தா... நான் எங்க தாத்தாவைத்தான் கேப்பேன். தாத்தாட்ட எதைப் பத்திக் கேள்வி கேட்டாலும் அவங்க பொறுமையா எனக்குப் புரியற மாதிரி விளக்கிச் சொல்லுவாங்க.

எனக்கு ஏழு வயசு. ஒரே பொண்ணு. மூணாங் கிளாஸ். ஃபர்ஸ்ட் ரேங்க். ரேணு ஸெகண்ட், என்னைவிடப் பத்து மார்க் கம்மி! ஆனால் அவள் என்னைவிட உயரம்! நாங்க ரெண்டு பேருமே நிறமா அழகா ஸ்மார்ட்டா இருக்கறதா எங்க அப்பாம்மாக்கு நினைப்பு. ’காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சு தானே! கழுதை கூட குட்டியா இருக்கும்போது அழகாத் தானே இருக்கும்!’ அப்படீன்னு நானும் ரேணுவும் எங்களுக்குள்ள பேசிப்போம். ஏன்னா, எங்க கிளாஸ்லயே விமலாதான் ரொம்ப அழகு, நிறம், உயரம் எல்லாம். சுண்டினா ரத்தம் வரும்னு சொல்லுவாங்களே, அந்த நிறம். ஆனா அவள் படிப்புல சுமார்தான். கொஞ்சம் கர்வம்கூட. எங்ககூடல்லாம் அவ்வளவாப் பேசமாட்டா. எங்க கிளாஸை விட, மேல் கிளாஸ் கர்ள்ஸ்-தான் அவளுக்கு ஃப்ரெண்ட்ஸ்.

கல்லா-மண்ணா, கண்ணா மூச்சி, கிளித்தட்டு, பாண்டி, ரிங் டென்னிஸ், கேரம், செஸ், அஞ்சு கல்லாட்டம், சோழியாட்டம், பரமபத சோபான பட விளையாட்டுல ஏணியில ஏறி பாம்புல இறங்கறது, இது மாதிரி விளையாட்டெல்லாம் எனக்கும் ரேணுவுக்கும் ரொம்பப் பிடிக்கும். எங்க தெருவுல இருக்கற மத்த பொண்களோட சேர்ந்து இதெல்லாம் தினம் சாயங்காலம் விளையாடுவோம். ஓடி விளையாட எங்க தெரு அகலமான, பெரிய தெரு. ஒக்காந்து விளையாட எங்க வீட்டுத் திண்ணை பெரிய திண்ணை. அப்புறம் என்ன, ஜாலிதான்!

சாயங்காலம் விளையாடி முடிச்சதும் கோவிலுக்குப் போய்ட்டு வந்து வீட்ல ஸ்வாமி கும்பிட்டு ஸ்லோகம்லாம் சொல்லறது பிடிக்கும். இந்த ஊர் சிவன் கோவில்ல... ம்? விஸ்வநாதர், விசாலாட்சி, கணபதி, முருகன், கருப்பணசாமி, நவக்கிரகம் எல்லாம் ரொம்ப அழஹா இருக்கும். நானும் ரேணுவும் சேர்ந்து பிரகாரம், நவக்கிரகம் சுத்துவோம். பிரகாரம் ஒரு சுத்து, நவக்கிரகம் ஒம்பது.

வீட்ல சாமி வழிபாட்டுக்கு அப்புறம், படிப்பு சாப்பாடெல்லாம் எட்டரை மணிக்குள்ள முடிஞ்சிடும். ஒம்பது மணிக்குத் தாத்தாவோ பாட்டியோ என் பாய்ல உக்காந்து நான் தூங்கற வரைக்கும் கதை சொல்லுவாங்க. காலைல ஆறு மணிக்கெல்லாம் எழுந்திருவேன்.

ராத்திரி சாப்ட்டு முடிஞ்சதும் தாத்தா வர்ற வரைக்கும் டெய்லி சேர் மேல ஏறி நின்னுண்டு... இந்த ஷோகேஸ்ல இருக்கற பொம்மைகள், பொருட்கள் இதெல்லாம் ஒண்ணுவிடாம ஆழ்ந்து பார்ப்பேன். ஒவ்வொண்ணும் எனக்கு ஒரு கதை சொல்லும்! அதை நான் இப்ப உங்களுக்குச் சொல்லப் போறேன். இப்பவும் நான் ஷோகேஸைத்தான் உத்துப் பாத்திண்டிருக்கேன், ஆனால் சேர் மேல நின்னுண்டு இல்லை...

மேலே இடது பக்கத்திலேர்ந்து ஒவ்வொரு ஷெல்ஃபா வருவோம்.

அந்தப் பேய்வீடு கடிகாரம் இருக்கில்ல? அது ஸ்கூல் ஆண்டுவிழாவின் போது ’English poem reciting competition for junior classes’ போட்டில நான் ஃபர்ஸ்ட் வந்ததுக்குத் தந்தாங்க. என்ன போயம் தெரியுமா? வால்டர் டி ல மேரோட 'Silver'... 'Slowly, silently, now the moon'-னு ஆரம்பிக்குமே அந்தப் பாட்டு. அதுல ஒரு முழுநிலா பொழியற இரவுல... மரத்தில இருக்கற பழங்கள்... கென்னல்ல தூங்கற நாய்... புறா... எலி... மீன் ... எல்லாம் எப்படி ஸில்வர் கோட்டிங் பூசிண்ட மாதிரி தெரியறதுன்னு நான் விதவிதமா மாஸ்க் அணிந்து நல்லா நடிச்சுக்காட்டி அந்த போயம் ஒப்பிச்சதால ஃபர்ஸ்ட் ப்ரைஸ்-ஸாம்.

பேய்கள்லாம் இருக்கா தாத்தான்னு கேட்டதுக்கு, பேய், பிசாசு எல்லாம் உண்மைதான்னு தாத்தா சொன்னாங்க. மனசில பெரிய நிறைவேறாத ஆசைகளோ, வெறியோ இருந்து அந்த நினைப்புலயே உயிர் போச்சுன்னா...ம்? அந்த உயிர் பேயா அலையுமாம்! தூக்குத் தண்டனைல சாகறவங்க, தற்கொலை பண்ணிக்கறவங்க, விபத்துல செத்துப் போறவங்க, இவங்கள்லாம் ஆவியா அலைய வாய்ப்பு அதிகமாம். அதனாலதான் ஓவரா, வெறித்தனமா எதுக்கும் ஆசைப்படக் கூடாதுன்னு தாத்தா சொல்லிக் கொடுத்தாங்க.

போன சம்மர் லீவுல, நான் தாத்தாட்ட நெறைய ஆன்மிக விஷயம் கேட்டுத் தெரிஞ்சிண்டேன். என்னாச்சு தெரியுமா... ம்? பக்கத்து ஊர்ல எங்க பெரியம்மா, அதாவது அம்மாவோட அக்கா இருக்கா. அவங்களுக்கு கோமதின்னு ஒரு பொண்ணு இருந்தா. என்னைவிட ரெண்டு வயசு பெரியவ. எனக்கு ரொம்ப ஃப்ரெண்ட் அவள். ஒவ்வொரு சனிக்கிழமை காலையும் தவறாம அவள் அப்பா அவளை எங்களோட விட்டுட்டுப் போயிட்டு, ஞாயிறு சாயங்காலம் பிக்-அப் பண்ணிப்பார். ஆறு மாசத்துக்கு முன்னாடி... ஒரு நாள் அவள் திடீர்னு செத்துப் போயிட்டா! அப்ப நான் ரெண்டு நாளைக்கு விடாம அழுதேன். போன வருஷம் ரேணுவோட தாத்தா தவறிப் போனப்ப நான் போய்ப் பார்த்தேன். அந்தத் தாத்தாவை மட்டும் மூங்கில் ஸ்ட்ரெச்சர்ல க்ரிமேட் பண்ண தூக்கிட்டு போனாங்க, ஆனால் கோமதியை ஒரு மூங்கில் கம்புல தூளி மாதிரி கட்டி அதுல வெச்சுதான் கொண்டு போனாங்க... இது ஏன் தாத்தான்னு கேட்டேன். தாத்தா சொன்னாங்க, குழந்தைகள் போயிடுத்துனா அப்படித்தான் தூக்கிண்டு போவான்னு. குழந்தைகள் பிறக்கற போதும் தூளி, போகற போதும் தூளியான்னு ஜோக் அடிச்சேன்!

செத்ததுக்கப்புறம் என்னாகும் கூடத் தாத்தாட்ட கேட்டிருக்கேன் நான். தாத்தா சொன்னாங்க, நமக்கு முன்னாடி போன நம்ம பெற்றோர்கள், மற்ற உறவினர்கள், நண்பர்கள் இவர்கள்ள ஒருத்தரோ சில பேரோ வந்து வழிகாட்டி போன உயிரை பித்ருலோகத்துக்கு அழைச்சிட்டுப் போவாங்களாம். அங்க கொஞ்ச நாள் இருந்திட்டு, நாம பண்ணின புண்ணிய பலன்களை சொர்க்கத்திலயும், பாவ பலன்களை நாமே உருவாக்கிக்கற நரகத்திலயும் அனுபவிக்கணுமாம். அப்புறம் அந்த பலன்களைப் பொறுத்து நம்ம அடுத்த பிறவி அமையுமாம்.

ரி, இப்ப ஷோகேஸைப் பார்ப்போம். அந்தப் பேய்வீடு கடிகாரம் பக்கத்தில என்ன இருக்குன்னு சரியாத் தெரியலை இல்ல? இதோ ஃஜூம் பண்ணிக் காட்டறேன்.

ரமணியின் கதைகள் - Page 6 2794d1371562743-2990-3015-2994-3009-2990-3021-2970-3007-2994-2965-2980-3016-2965-2995-3021-img-showcase-kitten

பஞ்சினால பண்ணி, சம்கிலாம் வெச்சு, ஜரிகை மீசை வெச்சு உருவாக்கி... ஒரு மரச் சட்டத்தில உக்காந்திருக்கற ரெண்டு பூனைக் குட்டிகள் தெரியுதா? ரேணு போனமாசம் என் பர்த்டேயின் போது தந்த பரிசு அது. அதுல என்ன எழுதியிருக்கு தெரியுமா? Friend, a simple word, but what a priceless treasure!? ரேணுன்னா ரேணுதான்!

பூனை பக்கத்தில ஒரு ஃபோட்டோ ஸ்டாண்ட். ஆனா அதுல இருக்கற குடும்பம் நாங்க இல்ல. அடுத்து, கீழ்த்தட்டுல இடது ஓரத்தில சாக்லேட் கலர்ல நெறைய செட்டியார் பொம்மைகள் இருக்கில்ல?... அதெல்லாம் நாங்க கொடைக்கானல் போனப்ப வாங்கினது. செட்டியார் பொம்மை வெச்சிண்டா அதிர்ஷ்டம்னு சொல்லுவாங்க. பக்கத்தில சிப்பி, கிளிஞ்சல்னால செஞ்ச குட்டிப்பெண்கள், மயில், எட்ஸட்ரா. இதெல்லாமும் கொடைக்கானல்ல வாங்கினோம்.

லைட் எரிய மாதிரி ஒரு குளோப் தெரியுதா? அது ஆக்சுவலி கண்ணாடில செஞ்ச, சுத்திவிட்டா சுத்தற பூமி. அப்புறம் அந்தக் கண்ணாடி மீன்-கடிகாரம், லேடி-கடிகாரம், கீழே கையாட்டும் தங்கப் பூனை, அந்த ஸ்டஃப் பண்ண கங்காரு இதெல்லாம் எங்க வீட்டு கிரகப் பிரவேச கிஃப்ட்ஸ். யார் தந்தாங்கன்னு ஞாபகம் இல்லை.

ந்த சுத்தற பூமிக்குக் கீழே கண்ணாடிப் பெட்டிக்குள்ள மேகங்களுக்கு நடுவுல ஒரு பெரிய பிங்க் கலர் கோலிக்குண்டு தொங்கறது தெரியுதா? அது எப்படி

ரமணியின் கதைகள் - Page 6 2795d1371562776-2990-3015-2994-3009-2990-3021-2970-3007-2994-2965-2980-3016-2965-2995-3021-img-showcase-hundi

எந்த சப்போர்ட்டும் இல்லாம அந்தரத்தில் தொங்கிண்டிருக்கு கவனிங்க! அது ஆக்சுவலி ஒரு காசு போடற உண்டியல். எங்க சித்தப்பா என் போன வருஷ பிறந்த நாளைக்கு வாங்கித் தந்தது. அந்த பிங்க் கோலி அந்தரத்தில் தொங்கற இல்யூஷன் எப்படீன்னு நான் கொஞ்சம் கஷ்டப்பட்டுக் கண்டுபிடிச்சேன். ரெண்டு மூணு கண்ணாடித் துண்டுகளை ஆங்கிள்ல வெச்சு உருவாக்கினது அது. சித்தப்பா என்னைப் பாராட்டி ஐஸ்கிரீம் வாங்கித் தந்தாங்க...

சொல்ல விட்டுட்டேனே... அந்த லேடி-கடிகாரம் பக்கத்தில ஆணில தொங்கற டெக்ஸ்ட்-ஐக் கவனிங்க. இந்த ஷோகேஸை பாப்புலேட் பண்ணின போது அப்பா வாங்கினாங்களாம். அதுல என்ன எழுதியிருக்கு தெரியுமா?

Although you'll find our house a mess,
come in, sit down, converse.
It doesn't always look like this...
Some days it's even worse.

ங்க வீட்ல நவராத்திரியின் போது கொலு வெக்கற வழக்கம் இல்லை. ஆனால் ஒம்பது நாளும் சாயங்காலம் சுண்டல் பண்ணுவாங்க. எனக்கு எல்லா சுண்டலும் பிடிக்கும். ரேணு வீட்ல கொலு வெச்சு, டெய்லி சுண்டல் நைவேத்தியம் பண்ணி, அக்கம் பக்கத்தையெல்லாம் கூப்பிட்டு, வர்ற பொண்களைப் பாடச்சொல்லிக் கொண்டாடுவாங்க. நான் கூட பாடியிருக்கேன். ’காட்சி தந்து என்னை ஆட்சி செய்வாய் அம்மா!’ பாட்டு. எதுக்கு சொல்ல வரேன்னா, அந்த பெரிய சரஸ்வதி பொம்மையை எங்க வீட்டு கொலுவில வெக்கலாம்னு பாட்டியோட ஃப்ரெண்ட் மாமி ப்ரசன்ட் பண்ணினாங்களாம். இப்போ அது எங்க ஷோகேஸ்ல.

சரஸ்வதி மடியில, வீணைக்குக் கீழே ஒரு பொருள் இருக்கில்ல? அது வந்து...ம்? எங்க தாத்தா பரம்பரை பரம்பரையா வெச்சிண்டு இருக்கற தமிழ் ஓலைச் சுவடி... அப்படீன்னு நான் சொன்னா நீங்க நம்பிடுவீங்க இல்ல? ஆனால் நான் எதுக்கு பொய் சொல்லணும்? அது ஒரு ஓலை விசிறி! ஏதோ ஒரு கல்யாணத்தில முகூர்த்தம் போது எல்லார்க்கும் தந்தாங்க. அதை ஓலைச்சுவடி மாதிரி செட்டப் பண்ணினது நான்தான். நல்லா இருக்கில்ல?

அந்தக் கையாட்டற பூனை பக்கத்தில ஒரு சின்ன டூ-இன்-ஒன் கேசட் ரெகார்டர் இருக்கில்ல, அது நாங்க திண்டுக்கல்ல வாங்கினது. வாலு போச்சு கத்தி வந்ததுங்கற கதை மாதிரி... கேசட் போயி, சீடி வந்தது... சீடி போயி, டீவீடி வந்தது... இப்ப அதுவும் போயி, பென்-ட்ரைவ்-ங்கற மெமரி ஸ்ட்க் வந்ததால... எங்க அப்பாம்மா ஆ..சையா வாங்கிச் சேர்த்த கேசட்லாம் இப்ப யா..ரும் கேக்கறதில்ல. என்னைத் தவிர! நான் மட்டும் சனி-ஞாயிறுல காலைலயும் சாயங்காலமும் ஒரு மணி நேரம் கேப்பேன். எனக்கு சாய்-பஜன்ஸ் பிடிக்கும், பாரதியார் பாட்டு பிடிக்கும், எம்.எஸ்., பாம்பே சிஸ்டர்ஸ், நித்யஶ்ரீ, சுதா ரகுநாதன், இவங்கள்லாம் பாடின பக்திப் பாட்டெல்லாம் அல்மோஸ்ட் நெட்டுரு. வர்ற சம்மர் லீவில என்னைப் பாட்டு கிளாஸ்ல சேர்த்துவிடறேன்னு பாட்டி சொல்லியிருக்காங்க.

கேசட் ஷெல்ஃப்ல விதவிதமா கேசட் ப்ளேயர்ஸ் பாக்கறீங்கல்ல? அதெல்லாம் இப்ப எது-வும் வொர்க் பண்ணாது. ஆனால் அதுல இருக்கற ரேடியோ வொர்க் பண்ணும். போன வருஷம் தமிழ் நாட்டை நீலம் புயல் தாக்கினபோது, ராத்திரி எட்டு மணிநேரம் கரண்ட் இல்லை. பயங்கரக் காத்து! அப்ப புயல் பத்தி லேட்டஸ்ட் நியூஸ் கேக்க அந்த ரேடியோலாம்தான் உபயயோகமா இருந்தது.

ரி, இப்ப டாப்-ரைட் ஷெல்ஃபுக்கு வருவோம். பெரிசா, கருப்பா, தலைக்கு மேல ஆர்ச்செல்லாம் வெச்சு ஒரு சிலை தெரியுதா? அது சக்தி தேவியோட சிலை. கற்சிலை மாதிரியே இருக்கில்ல! பேப்பர் மாஷ்னால செஞ்சது, லைட் வெயிட். எங்க ஷோகேஸ்லயே எனக்கு ரொம்பவும் பிடிச்சது இந்த சக்தி தேவி சிலைதான். அதோட ஹிஸ்டரி என்ன தெரியுமா? எங்க தாத்தாஆ-பாட்டி கல்யாணம் போது...ம்? தாத்தாவோட அம்மாவோட ஃப்ரெண்டு, ஒரு புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர் பெண்மணி... மௌன்ட் ரோடு பூம்புகார் ஷோரூம்-லேர்ந்து வாங்கி, கல்யாணப் பரிசாக் கொடுத்ததுன்னு தாத்தா சொன்னாங்க. தாத்தா அவங்களை ஆன்டின்னுதான் கூப்பிடுவாங்களாம்! அந்த எழுத்தாளர் இப்ப உயிரோடு இல்லை.

ரமணியின் கதைகள் - Page 6 2796d1371562812-2990-3015-2994-3009-2990-3021-2970-3007-2994-2965-2980-3016-2965-2995-3021-img-showcase-shakti

இந்த சக்தி தேவி சிலையை நல்லா பாருங்க. உச்சீலேர்ந்து ஆரம்பிச்சு சிலை முழுக்க எத்தனை அலங்கார வேலப்பாடு! அவள் முகத்துல எவ்ளோ தேஜஸ், சாந்தி! அவளோட ஷார்ப் நோஸ் எவ்ளோ அழகு! எல்லாத்தையும் விட அவள் புன்னகையாச் சிரிக்கறா பாருங்க, அது அப்படியே மனசை இழுத்துப் பிடிக்கிது இல்ல? ராத்திரி ஒம்பதரை மணிக்கு நான் படுக்க போறதுக்கு முன்னாடி...ம்? தாத்தா கூடத்தில எல்லா லைட்டும் அணைச்சிட்டு... தேவிக்கு முன்னால இருக்கற எல்-யி.டி. டார்ச் விளக்கை என்னைவிட்டுப் போடச் சொல்லுவாங்க. ஜாக்கிரதையா ஷோகேஸ் கண்ணாடியை விலக்கி லைட்டைப் போடுவேன். அந்த ஒளியோட ஃபோகஸ்ல தேவீ அவ்வளவு அற்புதமா, கொள்ளை அழகோட இருப்பா, நீங்க மேல படத்தில பார்க்கற மாதிரி!

நான் ராத்திரி கூடத்தில பாட்டி பக்கத்தில இந்த ஷோகேஸ் கீழதான் தூங்குவேன். தூங்கறதுக்கு முன்னாடி பாட்டி சொல்லிக்கொடுத்த ’ஸர்வ மங்கள மாங்கல்யே’ ஸ்லோகம் மூணுதரம் சொல்லிட்டுதான் தூங்குவேன். சமயத்தில நடு ராத்திரி முழிப்பு வந்ததுன்னா... எதிர் சுவத்தில இருக்கற ஹால் நைட்-லாம்ப் வெளிச்சத்தில சக்திதேவி இன்னும் அழகாத் தெரிவா. காலைல ஆறு மணிக்கு எழுந்ததும் முதல்ல சக்தி தேவியைத்தான் பார்ப்பேன். அப்புறம் பல் தேய்ச்சு ஹார்லிக்ஸ் குடிச்சிட்டு வந்து அவள் முன்னாடி நின்னு பாட்டி சொல்லிக்கொடுத்த அபிராமி அந்தாதி செய்யுள் சொல்வேன்: ’தனம்தரும் கல்விதரும்’னு வருமே, அந்த செய்யுள்.

டுத்து மேல வலதுபக்க ஷெல்ஃப்ல இருக்கற கடவுள் உருவங்கள் பத்திச் சொல்றேன். ஆணில தொங்கற அந்த சூரியன் ஒயிட் மெட்டல்ல பண்ணினது. சிப்பி, கிளிஞ்சல் வேலைப்பாட்டோட ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி கவனிச்சீங்களா? எவ்ளோ அழகு!

ரமணியின் கதைகள் - Page 6 2797d1371562839-2990-3015-2994-3009-2990-3021-2970-3007-2994-2965-2980-3016-2965-2995-3021-img-showcase-gods

சிவப்பு, பச்சை முக்கோணக் கண்ணாடிச் சில்லுகள் பதிச்ச சட்டத்துக்குள்ள ஒரு வெங்கடாசலபதி இருக்கா? அப்புறம் அந்த பிளாஸ்டிக் பேழைக்குள்ள இன்னொரு வெங்கடாசலபதி இருக்கா? அப்புறம் அந்த குங்குமச் சிமிழ்த் தட்டு... இதெல்லாமும் கிரகப் பிரவேசப் பரிசுகளா வந்தது. அப்புறம் பெரிசும் சிறிசுமா, கலர் கலரா, தங்க நிற வேலைப்பாடுகள் செஞ்ச ஸ்டாண்ட்ல நிக்கற மாதிரி ஐயப்பன், லக்ஷ்மி, பிள்ளையார், முருகன், பெருமாள் படங்கள் இருக்கில்ல? இதெல்லாம் கிரகப் பிரவேசம் போது அப்பாம்மா மத்தவங்களுக்குக் கொடுத்த பரிசுகள்.

ன்னும் ஒண்ணே ஒண்ணு மீதி இருக்கு. கீழ இடதுபக்கம் இருக்கற பிள்ளையார் உருவங்கள்... சட்டத்துக்குள்ள இருக்கற பிள்ளையார்லாம் கிரகப் பிரவேசம் போது பரிசா வந்தது. ஆணியில தொங்கற பிள்ளையார் ஒயிட் மெட்டல்ல செஞ்சது. அந்த குடைக்கீழ் உக்காந்திருக்கறவர், தலையாட்டும்

ரமணியின் கதைகள் - Page 6 2798d1371562861-2990-3015-2994-3009-2990-3021-2970-3007-2994-2965-2980-3016-2965-2995-3021-img-showcase-pillaiyar

மரப் பிள்ளையார், வெள்ளை மார்பிள் பிள்ளையார், அப்புறம் அந்தக் குட்டிக்குட்டிப் பிளாஸ்டிக் பிள்ளையார் பிரதிமைகள்--சிவப்பு, பச்சை, வெள்ளை, நாவல்பழ நிறங்கள்ல இருக்கில்ல, ம்?--இதெல்லாம் போன வருஷம் நாங்க திருச்சி மலைக்கோட்டைப் பிள்ளையார் கோவில் வாசல்ல இருக்கற கடைகள்ல தரிசனம் முடிச்சிட்டு வாங்கினோம். சாயங்காலம் நாலறை மணிக்குக் கீழே இருக்கற மாணிக்க விநாயகரை தரிசனம் பண்ணிட்டு, மலை மேல ஏறினோம். நானூத்துச் சொச்சம் படிகளையும் நான் அப்பாம்மா சொன்னதைக் கேக்காம, ஓடியாடி, மூச்சு வாங்க ஏறினது இன்னும் ஞாபகம் இருக்கு. மேலே போய் அந்த அழகான பிள்ளையாரை தரிசனம் பண்ணி, கற்பூரம் ஒத்தி, விபூதி இட்டுண்டு சுத்தி வர்ற போது, அப்பா என்னைத் தூக்கி வெச்சிண்டு, அந்த ஜன்னல்கள் வழியாத் திருச்சி நகர வீடுகள் குட்டிகுட்டியா தெரியறதைக் காட்டினாங்க. அப்பா, என்ன சுகமான காத்து! அப்புறம் வெளில வந்து கீழ்ப்படிகள் கிட்ட பாறைல உக்காந்து கூல்டிரிங்க் குடிச்சபடியே, இருட்டற வரைக்கும் ரொம்ப நேரம் கதை பேசினோம்...

பிள்ளையார் உருவங்கள் சேர்த்தா ஐஷ்வர்யமாம், அதனால அப்பாவும் அம்மாவும் வீடு வாங்கின புதுசில நெறைய பிள்ளையார் பிரதிமைகள் வாங்கிச் சேர்த்தாங்களாம். இப்ப எல்லாம் ஷோகேஸ்ல தூங்கறது!

தூங்கறதுன்னில்ல, நான் தினம் ஸ்கூலுக்குப் போறதுக்கு முன்ன, ஸ்வாமி அறையில கும்பிட்டப்பறம் ஷோகேஸ்ல இருக்கற எல்லா கடவுள் உருவங்களையும் ஒருதரம் பார்த்துக் கும்பிடுவேன். பிள்ளையார் குட்டிகளுக்கு ஸ்பெஷலா பத்து தோப்புக் கரணம் போடுவேன். அப்புறம் மூச்சு வாங்க ஸ்கூலுக்குக் கிளம்புவேன்! சாயங்காலமும் பத்துத் தோப்புக் கரணம் போடுவேன். நம்ம தோப்புக் கரணம்தான் இப்ப அமெரிக்கால ஸூப்பர் ப்ரெய்ன் யோகாங்கற பேர்ல ப்ராக்டீஸ் பண்றாங்களாம், தாத்தா சொன்னாங்க.

வ்வளவு கதையும் எதுக்கு உங்களுக்குச் சொன்னேன்னு தோணுதா? முதல்லயே ஒரு க்ளூ கொடுத்தேன், கவனிச்சீங்களா தெரியலை: இப்பவும் நான் ஷோகேஸைத்தான் உத்துப் பாத்திண்டிருக்கேன், ஆனால் சேர் மேல நின்னுண்டு இல்லை...

புரியுதா? இப்ப நான் உயிரோட இல்லை. ஹாரி பாட்டர் முதல் சினிமால பசங்கள்லாம் டின்னர் சாப்பிடும்போது ஹவுஸ் கோஸ்ட்-கள் எல்லாம் காத்தில மிதந்துண்டு பறக்குமே, அது மாதிரி நான் இப்ப காத்தில மிதக்கறேன்! காலைல நாலு மணிக்குத் தூக்கத்திலேயே உயிர் போய்ட்டது. ஆறு மணிக்கு நான், தானே வழக்கம்போல எழுந்திருக்காம இருக்கறதை அம்மா அல்லது பாட்டி நோட்டீஸ் பண்ணும்போதுதான் நியூஸ் தெரியும்!

நான் எப்படி என் உடல்லேர்ந்து வெளில வந்தேன், என்னாச்சுங்கறதெல்லாம் எனக்குத் தெரியல. ஏதோ வைரல் ஃபீவர்னு ஒரு வாரம் வீட்ல படுக்கைல இருந்தேன். டாக்டர் தினம் வந்து பரிசோதித்து மாத்திரை கொடுத்து, இதுவரை ரெண்டு ஊசி போட்டார். ஃபீவர் அடுத்த வாரமும் தொடர்ந்தா ஆஸ்பத்திரியில சேர்த்திடலாம்னு அவர் சொன்னபோது பயம்மா இருந்து. எனக்கு ஆஸ்பத்திரியே பிடிக்காது. ஆனால் நேத்து சாயங்காலத்திலேர்ந்து திடீர்னு ஜுரம் குறைஞ்சு நார்மல் மாதிரி இருந்தது. கஞ்சிக்கு பதிலா ரசம் சாதம் சாப்பிட்டேன். அப்புறம் படுக்கைல ஒக்காந்தபடியே ஷோகேஸை நான் ஒருதரம் பார்த்திட்டுச் சீக்கிரமே தூங்கிட்டேன். நடு ராத்திரிக்கு மேல தூக்கத்தில என்ன ஆச்சு தெரியல! ஆனால் இப்ப எனக்கு பயமோ துக்கமோ தெரியல. ஒரு வேளை எல்லாரும் காலைல எழுந்து ஒப்பாரி வெக்கும்போது தெரியுமோ என்னவோ?

தாத்தா சொன்னது ஞாபகம் வரது. போன உயிரை அழைச்சிட்டுப் போக, முன்னாடி போன உற்றார் உறவினர் நண்பர் யாராவது வருவாங்கன்னு தாத்தா சொன்னாங்க. ஆனால் எனக்கு அப்படி யாருமே இல்லையே?... என் அம்மா வழித் தாத்தா-பாட்டி, அப்பா வழித் தாத்தா-பாட்டி, இவங்க நாலு பேரும் எழுபது எண்பது வயசில இன்னமும் விச்சா இருக்கா. அப்பா-அம்மா, மத்த சொந்தக் காரங்க, அப்புறம் ரேணு... இவங்களுக்கெல்லாம் இன்னும் நெறைய டைம் இருக்கு. போன வருஷம் போன ரேணுவோட தாத்தாவுக்கு என்னை அவ்வளவா தெரியாது.

என்னடாது டைலமான்னு ஒரு நிமிஷம் கலங்கிப் போய்ட்டேன். எப்படியும் நான் வணங்கற சக்திதேவீ வழிகாட்டுவான்னு நம்பிக்கை எழுந்தது. கூடவே கோமதி ஞாபகம் வந்ததோ இல்லையோ இதோ அவளே வந்துட்டா என்னைக் கூட்டிட்டு போக! ’கோமதி உன்னை மாதிரி நாளைக்கு என்னையும் தூளில தூக்கிண்டு போவா இல்ல?’ன்னு கேட்டு சிரிக்கறேன். அவள் புரியாம என்னைப் பார்க்க, சுருக்கமா அவள்ட்ட நான் விவரம் சொல்ல, அவளும் என்னோட சேர்ந்து சிரிக்கறா...

அவளோட போறதுக்கு முன்னாடி ஒரு அட்டெம்ப்ட், என் உடலுக்குள்ள நுழையப் பார்க்கறேன். முடியல, ஆனால் எனக்கு ஒண்ணும் வருத்தம் இல்லை. என்னோட கடவுள் ஷோகேஸைப் பிரிஞ்சு போகணுமேன்னு நினைப்பு வந்த உடனேயே புரிஞ்சுண்டு கோமதி சொல்றா: ’மது, கவலைப் படாதே. இந்த ஷோகேஸ்ல இருக்கற ஒவ்வொரு பொருளும் உருவமும் உனக்கு அத்துப்படி இல்லையா? எங்க இருந்தாலும் அதையெல்லாம் நீ எளிதா மனசில பார்க்கலாமே! என்டயர் ஷோகேஸை நீ எளிதா மனசில கிரியேட் பண்ணிக்கலாம்...’ தலையாட்டிவிட்டு, மீண்டும் என் உடலை ஒருமுறை பார்க்கறேன்.

’யெஸ், உடல்தான் பெரும்பாலானான உயிர்களுக்குப் பிரிய முடியாத ஷோகேஸ்,’ என்கிறாள் கோமதி. நான்ங்கற உணர்வைத் தருவது அந்த உடல்தானே? ஒவ்வொரு உயிரும் நான்ங்கற உணர்வை அதோட உடலோடதானே இனம் கண்டுகொள்கிறது? ஆனால் ஜீவன் இல்லாவிட்டால் அந்த ஷோகேஸ்-க்கு மதிப்பு இல்லைதானே?’ தொடர்ந்து, ’நான் என் உடலைப் பிரிந்த போது இப்படித்தான் அவதிப்பட்டேன். உனக்கும் அப்படி இருக்கறது இயற்கைதானே?’ என்கிறாள்.

’இல்லை கோமதி’, என்கிறேன். ’உள்ள இருந்த போதும் சரி, இப்ப வெளில இருக்கும் போதும் சரி, எனக்கென்னவோ இந்த கடவுள் ஷோகேஸை விட உடல் ஷோகேஸ் ஒண்ணும் பெரிசாத் தெரியலை’, என்று சொல்லிவிட்டு அவளுடன் மிதந்து செல்கிறேன்.

*** *** ***

Sponsored content

PostSponsored content



Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக