புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:22 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரமணியின் கதைகள் - Page 5 Poll_c10ரமணியின் கதைகள் - Page 5 Poll_m10ரமணியின் கதைகள் - Page 5 Poll_c10 
6 Posts - 46%
heezulia
ரமணியின் கதைகள் - Page 5 Poll_c10ரமணியின் கதைகள் - Page 5 Poll_m10ரமணியின் கதைகள் - Page 5 Poll_c10 
3 Posts - 23%
Dr.S.Soundarapandian
ரமணியின் கதைகள் - Page 5 Poll_c10ரமணியின் கதைகள் - Page 5 Poll_m10ரமணியின் கதைகள் - Page 5 Poll_c10 
2 Posts - 15%
Ammu Swarnalatha
ரமணியின் கதைகள் - Page 5 Poll_c10ரமணியின் கதைகள் - Page 5 Poll_m10ரமணியின் கதைகள் - Page 5 Poll_c10 
1 Post - 8%
T.N.Balasubramanian
ரமணியின் கதைகள் - Page 5 Poll_c10ரமணியின் கதைகள் - Page 5 Poll_m10ரமணியின் கதைகள் - Page 5 Poll_c10 
1 Post - 8%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரமணியின் கதைகள் - Page 5 Poll_c10ரமணியின் கதைகள் - Page 5 Poll_m10ரமணியின் கதைகள் - Page 5 Poll_c10 
372 Posts - 49%
heezulia
ரமணியின் கதைகள் - Page 5 Poll_c10ரமணியின் கதைகள் - Page 5 Poll_m10ரமணியின் கதைகள் - Page 5 Poll_c10 
239 Posts - 32%
Dr.S.Soundarapandian
ரமணியின் கதைகள் - Page 5 Poll_c10ரமணியின் கதைகள் - Page 5 Poll_m10ரமணியின் கதைகள் - Page 5 Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
ரமணியின் கதைகள் - Page 5 Poll_c10ரமணியின் கதைகள் - Page 5 Poll_m10ரமணியின் கதைகள் - Page 5 Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
ரமணியின் கதைகள் - Page 5 Poll_c10ரமணியின் கதைகள் - Page 5 Poll_m10ரமணியின் கதைகள் - Page 5 Poll_c10 
25 Posts - 3%
prajai
ரமணியின் கதைகள் - Page 5 Poll_c10ரமணியின் கதைகள் - Page 5 Poll_m10ரமணியின் கதைகள் - Page 5 Poll_c10 
6 Posts - 1%
sugumaran
ரமணியின் கதைகள் - Page 5 Poll_c10ரமணியின் கதைகள் - Page 5 Poll_m10ரமணியின் கதைகள் - Page 5 Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
ரமணியின் கதைகள் - Page 5 Poll_c10ரமணியின் கதைகள் - Page 5 Poll_m10ரமணியின் கதைகள் - Page 5 Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
ரமணியின் கதைகள் - Page 5 Poll_c10ரமணியின் கதைகள் - Page 5 Poll_m10ரமணியின் கதைகள் - Page 5 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
ரமணியின் கதைகள் - Page 5 Poll_c10ரமணியின் கதைகள் - Page 5 Poll_m10ரமணியின் கதைகள் - Page 5 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரமணியின் கதைகள்


   
   

Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Thu Nov 01, 2012 10:04 am

First topic message reminder :

லக்கியத்தைப் பொறுத்தவரை "முயன்றால் முடியாததும் உண்டோ?" என்பது கல்லூரி நாட்களில் என் குறிக்கோளாக இருந்ததால் என்னுடைய இலக்கிய முயற்சிகள் ஆங்கிலக் கவிதைகளில் ஆரம்பித்துத் தமிழ்க் கதைகளில் தலைகாட்டியது. நான் க்ருஹஸ்தனான புதிதில் ஐந்து சிறுகதைகள், ஒரு குறுநாவல், ஒரு முழு நாவல் எழுதினேன். இவற்றில் மூன்று சிறுகதைகள் மட்டும் பிரசுரமாயின: ஒன்று நான் எழுதிய முதல் கதை; இன்னொன்று ஒரு சிறுகதைப் போட்டியில் முதல் பரிசைப் பகிர்ந்துகோண்ட கதை. கவிதைகளைப் படிப்பதுடன் நிறுத்திக்கொண்டேன்!

சுஜாதா, தி.ஜ.ரா போன்ற ஆசிரியர்களை நிறையப் படித்ததாலும், ஆங்கில நாவல்களைப் படித்ததாலும் கதை உத்திகளை அறிந்துகொண்டேன். எனினும் பின்னர் ஏற்பட்ட கணிணித்துறை ஈடுபாடுகளில் கதைகள் எழுதுவது பிரசவ வேதனையாக இருந்ததால் கதைகள் எழுத முனைவதையும், படிப்பதையும் அறவே விட்டுவிட்டேன். வயதில் அரை செஞ்சுரி அடித்ததும், கடந்த பத்து வருடங்களுக்குமேல் மனம் ஆன்மீகத்துறையில் அலைபாய்ந்து தத்தளிக்கவே, லௌகிகப் படிப்பு வகைகளைக் குறைத்துக்கொண்டுவிட்டேன்.

கடந்த சிலநாட்களாக இந்த வலைதளத்தில் படித்த இலக்கிய முயற்சிகளைப்பார்த்து என் பழைய கதைகளை பகிர்ந்துகொண்டால் என்ன என்று தோன்றியது. அதனால்தான் இந்தத்தொடர் (ஜாக்கிரதை)! வாசகர்களும் தங்கள் எண்ணங்களையும் விமரிசனங்களையும் பகிர்ந்துகொள்ளலாம்.

இக்கதைகளின் உரிமை ஆசிரியருக்கே என்றாலும் இவற்றைப் பிரதி எடுத்து மற்றவர்களுடன் பிரத்தியேகமாகப் பகிர்ந்துகொள்வதில் தடையில்லை, கதாசிரியரின் பெயர் பிரதிகளில் குறிப்பிடப்படவேண்டும் என்ற ஒரு நிபந்தனையுடன்.

இந்தக் கதைகள் என் வலைதளத்திலிருந்து எடுக்கப்பட்டவை. தொடர்வது நான் எழுதிப் பிரசுமான முதல் கதை. படிக்க வசதியாக கதைகளைத் தவணை முறையில் தருகிறேன்

*** *** ***.



ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Wed Jan 02, 2013 6:48 am

[11]

"அவங்க மூணுபேரும் ஒருத்தருக்கொருத்தர் பேசி வெச்சிகிட்டாப்பல உண்மையை மறைக்கறாங்க சார். என்னுடைய தியரிப்படி அந்த ஜிக்ஸா பஸில் ஏறக்குறைய பொருந்தறது. ஒரே ஒரு லின்க்தான் வேணும்."

"லெட் மி ஸீ", என்றார் உதவி கமிஷனர்.

ஶ்ரீதர் உற்சாகத்துடன் கைகளைத் தேய்த்தபடி, "ஒரு நிமிஷம் சார்" என்றான். மனதில் எண்ணங்களை துரிதமாக ஓர் ஒழுங்கில் அமைத்துக்கொள்ள முயன்றுகொண்டிருந்தான்.

உதவி கமிஷனர் அந்த மொட்டை மாடியின் கைப்பிடிச் சுவரில் கைகளைப் பின்னால் பதித்தபடி சாய்ந்துகொண்டார், ஶ்ரீதரின் வார்த்தைகளை எதிர்நோக்கியவராய்.

ஜெட் விமானம் ஒன்று மிக உயரத்தில் ஒரு சிலந்திபோல் ஊர்ந்துகொண்டிருக்க, வானில் நீண்ட கோடாக விமானம் இழையிட்ட புகைத்தடம் காற்றில் கலைந்துகொண்டிருந்தது.

தூரத்தில் மரங்களிடையே சூரியன் இறங்கிச் சிவந்துகொண்டிருக்க, குழந்தைகள் தெருவில் ஒரு நாய்க்குட்டியுடன் ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருந்தனர்.

ஊதுவத்திப் புகைபோல மெல்லிய தென்றல் அலையொன்று இலைகளை வருடியபடி வந்து நெற்றியில் குளிர்ந்து கேசங்களைச் சிலிர்த்தது.

ஶ்ரீதர் பேசத் தொடாங்கினான்.

"எல்லாமே அவங்க மூணுபேரைத்தான் பாயின்ட் பண்ணுது சார். வாசுவோட முதல் குழந்தை ரம்யா ஒரு கார் விபத்தில செத்துப் போய்ட்டதுன்னு திருப்பதியில விசாரித்துத் தெரிஞ்சுகிட்டேன். அந்த போஸ்ட் மார்டம் ரிப்போர்ட்டோட புகைப்படப் பிரதி என்கிட்ட இருக்கு. ஆனால், வாசுதேவனோட அப்பாவைத்தான் பார்க்க முடியலை. வீடு பூட்டியிருந்தது. வேணும்னே இருக்காதுன்னு நம்பறேன். அவரோட சகோதரிக்கு சீரியஸ்னு ரெண்டு நாள் முன்னதான் பெங்களூர் கிளம்பிப் போனாங்களாம். அக்கம்பக்கத்தில விசாரிச்சதுல வாசுவோட மனைவி கீதா திருப்பதியில தன்னோட இருந்ததாச் சொன்ன குழந்தை, அவங்க சென்னையிலிருந்த ஒரு அனாதை ஆஸ்ரமத்திலேர்ந்து சுவீகாரம் பண்ணிக்கிட்ட குழந்தைன்னு சொன்னாங்க சார்.

"லட்சுமியோட குழந்தை குழந்தை தற்செயலா அந்த ரம்யா மாதிரி இருக்கவும் அவங்க அவளுக்கு ரெண்டாயிரம் ரூபாய் பணம்கொடுத்து ஏழுமலைக்குத் தெரியாம குழந்தையை விலைக்கு வாங்கிட்டாங்க. இந்த விஷயம் லட்சுமியோட முழு சம்மதத்தோட நடந்திருக்கு. அதனாலதான் அவள் அதை மறைக்கறா. சம்பவம் நடந்த மறுநாள் காலையில அவள் அந்தப் பணத்தை பாங்க்ல கட்டியிருக்கா. தவிர, முதல்நாள் ராத்திரி ஏழுமலை டீ சாப்பிட்ட டம்ளர்ல ஒரு ஸெடேட்டிவ்வோட ட்ரேஸஸ் இருந்திருக்கு சார். அந்தக் காரியத்தை லட்சுமி செஞ்சிருக்க அதிக சாத்தியம் இருக்கறதா எனக்குப் படறது. அநேகமா வாசு அந்தத் தூக்க மருந்தை வாங்கித் தந்திருக்கலாம்."

"என்ன சொல்றா அவ?"

"ஷி டினைஸ் இட் சார். அவள் ஒரு ரெகுலர் விபச்சாரின்னு தெரியறது. பிழைப்புக்காகவும், கணவனோட சிசிச்சைக்குப் பணம் சேர்க்கவும் ரெண்டு வருஷமா அவள் அந்தத் தொழில்ல ஈடுபட்டு இருக்காளாம் சார். அந்த ரெண்டாயிரம் ரூபாயை சமீபத்தில ஒரு சினிமா உதவி டைரக்டர்ட்டேர்ந்து சம்பாதிச்சதா சொல்றா. அவளோட பாங்க் பாஸ்புத்தகப்படி அதிகபட்சம் நூத்தம்பது ரூவாதான் இருந்திருக்கு.

"மற்ற ஃபிஸிகல் எவிடன்ஸ் பொறுத்தவரைக்கும் அந்த காலணித்தடம், தலைமுடி ரெண்டும் வாசுவோடதுன்னு உறுதியாய்ட்டது. வாசு திருப்பதிக்குப் பயணம்பண்ண அந்த பஸ் கண்டக்டர் அவரைப்போல தோற்றமுள்ள ஒரு இளைஞர் கையில் ஒரு தூங்கும் குழந்தையோட அந்த முதல் பஸ்ல பயணம் செஞ்சதா கன்ஃப்ர்ம் பண்ணறார் சார்."

"போறாதுய்யா. You have got personal and a few scientific evidences in this case. And then there is a circumstantial evidence. வாசுவோட குழந்தை ரம்யா இறந்துட்டதாலும், லட்சுமியோட குழந்தை அமுதா அந்த ரம்யா மாதிரி இருந்ததாலும், ஐ ரிபீட், இருந்ததாலும், வாசு அந்தக் குழந்தையை சட்டத்துக்குப் புறம்பான வகையில ஸ்வீகாரம் பண்ணியிருக்கலாம், இல்லையா? அதாவது, வாசுகிட்ட இப்ப இருக்கற குழந்தை ரம்யா இல்லை, அமுதாவா இருக்கலாம். ஆனால் அமுதாதான் அந்தக் குழந்தைன்னு சந்தேகத்துக்கு இடமில்லாம எப்படி நிரூபிக்கப் போறீங்க? குழந்தை பெற்ற தாயை அடையாளம் கண்டுக்கலை. தாயும் தான் பெற்ற குழந்தைதான்னு சொல்லத் தயாரா இல்லை. என்ன செய்யப் போறீங்க?"

"எனக்கு ஒண்ணு தோணறது சார்."

"யெஸ்?"

"அந்த ரெண்டாவது ரம்யா அவங்களுக்குப் பிறந்த குழந்தை இல்லைனு தெரியறதால, அந்தக் குழந்தையோட ஸோர்ஸ் பத்தி வாசு என்ன சொல்றார்னு பார்க்கலாம். திவிர, லட்சுமி குழந்தையை அடையாளம் காட்டத் தயாரா இல்லாட்டாலும் அவள் புருஷன் இருக்காரில்லையா சார்? அன்னைக்கு நான் அந்த ரம்யாவை எடுத்த கலர்ஃபோட்டோ ரெண்டும் என்கிட்ட இருக்கு சார். அதை ஏழுமலைகிட்ட காட்டி விசாரிக்கலாம்."

"எங்கருக்கான் ஏழுமலை?"

"ஆஸ்பத்திரியிலதான் இருந்தார் சார். இன்னமும் தீவிர சிசிச்சையிலதான் இருக்கறதா டாக்டர் சுந்தரவதனம் நான் திருப்பதி கிளம்பறதுக்கு முன்னாடி சொன்னார். எதோ ந்யூரோ சர்ஜரி செஞ்சாத்தான் ஸைஸபிள் ரெகவரி இருக்குமாம்."

"ரைட், கெட் ஹிம் ஆன் த லைன்."

இரண்டு முறை ’எங்கேஜ்ட்’ ஒலி கேட்டு மூன்றாம் முறை உதவி கமிஷனர் முயன்றபோது இணைப்புக் கிடைத்து மறுமுனையில் ஆஸ்பத்திரி பின்னணி ஒலிகளில் டாக்டரின் குரல் தூக்கலாக ஒலித்தது.

"ஸோ சாரி ஜெயராமன்! லாஸ்ட் ஃப்யூ மினிட்ஸ் உங்க நம்பர் எங்கேஜ்டா இருந்தது... அப்படியா, அப்ப நாம ரெண்டுபேரும் ஒரே சமயத்தில ட்ரை பண்ணியிருக்கோம்! எனிவே, இப்பதான் இன்டன்ஸிவ் கேர்லர்ந்து வரேன். Your patient Ezhumalai has lapsed into a coma. We were able to revive him briefly but in vain! Lots of neurological complications! I am doubtful about his recovery."

டாக்டரின் குரல் ஶ்ரீதருக்கும் கேட்க அறையில் சில கணங்கள் ஒரு அமானுஷ்ய அமைதி நிலவியது. பின் உதவி கமிஷனர் குரலை சமனப் படுத்திக்கொண்டு தொடர்ந்தார்.

"கொய்ட் அன்ஃபார்சுனேட் டாக்டர். எனிவே, நாளைக்குக் காலையில உங்ககிட்ட ஒரு குழந்தையை அனுப்பி வைக்கிறேன். Suspected to be the missing link. உங்க மெடிகல் எவிடன்ஸ்தான் தீர்மானிக்கணும். You check up the child for any leprosy infection. குழந்தையோட ப்ளட் க்ரூப் மேட்ச் ஆறதா பார்த்திடுங்க. அப்படியும் கன்ஃபர்ம் ஆகலைனா DNA paternity test-தான் எடுக்கணும்."

*** *** ***


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Thu Jan 03, 2013 6:30 am

[12]

மறுநாள் காலை ஏழுமணிக்கு டாக்டர் சுந்தரவதனத்திடம் இருந்து ஃபோன் வந்தது.

"ஜெயராமன் குட்மார்னிங்! நீங்க சொன்ன குழந்தை நேத்து ராத்திரியிலிருந்து என் கஸ்டடியிலதான் இருக்கு. ரம்யாதானே பெயர்? பெற்றோர் வாசுதேவன்--கீதா. உங்க இன்ஸ்பெக்டர் இங்கதான் இருக்கார். காலையில வாசுதேவனுடைய வீட்டுக்குப் போயிருக்கார். வீடு பூட்டியிருக்கவே அக்கம் பக்கத்தில் விசாரிச்சு இங்க வந்துவிட்டார்."

"என்ன டயக்னோஸ் பண்ணினீங்க?"

"குழந்தைக்கு ஸ்ட்ராங் லெப்ரஸி இன்ஃபெக்*ஷன் இருக்கு. She has a localized, persistent numbness of the skin, which is a possible nerurological indication of leprosy. டைப் கன்ஃபர்ம் மண்ணறதுக்கு முன்னாடி ஏகப்பட்ட டெஸ்ட் எடுக்கணும். Right from urine, stool and blood, through hemoglobin estimation, chest radiograph to skin biopsy. We should rule out any inter-current diseases first. குழந்தையை அட்மிட் பண்ண சொல்லியிருக்கேன். Since it is an early stage, it should be one of the non-contageous type. Dapsone treatment-டில ரெண்டு மூணு வருஷத்தில குணப்படுத்திடலாம்னு நினைக்கிறேன்."

"What about the blood group Doctor?"

"லெட்சுமி, கீதா, வாசு, அன்ட் திஸ் சைல்ட் நாலுபேரோட க்ரூப்பும் ஓ பாஸிடிவ்தான், one of those common varieties observed. DNA test can be conclusive but very complicated. அவ்வளவு தூரம் போகணுமான்னு பார்த்துக்கங்க."

"இன்ஃபெக்*ஷனை வெச்சு ப்ரூவ் பண்ண முடியுமா டாக்டர்?"

"கன்க்ளூசிவ்வா முடியுமான்னு நாட் க்ளியர் ஜெயராமன். வாசு, கீதா குடும்பத்தில இந்த நோய் இல்லைங்கறது ஒரு பக்கம் இருக்கட்டும். குழந்தைக்கு ஏழுமலையோட கான்டாக்ட் இருந்ததாலதான் இன்ஃபெக்ட் ஆகியிருக்குன்னு வெச்சுக்கிட்டாக்கூட, how do you prove it is the same child? By the bye, Jeyaraman, I have some bad news for you."

"அந்த ஏழுமலை?"

"நேத்து ராத்திரி கோமாவிலேயே காலமாய்ட்டார். Several neurological complications as I told you."

*** *** ***


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Fri Jan 04, 2013 10:04 am

[13]

"என்ன மன்னிச்சிடுங்க வாசு சார்! அன்னைக்கு உங்ககிட்ட ’எங் கொய்ந்தய அடகுதான் வெக்கறேன். எங்கூட்டுக்கார்க்கு ஒடம்பு சொகமானதும் எப்டியாச்சும் கஷ்டப்பட்டு உங்க பணத்தக் கொடுத்திட்டு எம்மவள மீட்டுக்குவன்’னு சொன்னேன். இப்ப அவரும் போய்ட்டாரு, என்கிட்டயும் பணமில்லை! தங்கம்னு நம்பித்தாங்க உங்ககிட்ட அடகு வெச்சேன். நீங்க ரெண்டு பேரும் பாசத்தால புடம்போட்டு சொந்த மவளா வளர்த்தீங்க. இன்னிக்கு அது வெறும் பித்தளையாய்ட்டதுன்னு தெரிஞ்சதுக்கப்பறம் நான் திரும்ப வாங்கிக்கிறது தாங்க நியாயம். இருந்தாலும்---"

வாசு ஒரு நெடிய பெருமூச்சுடன் இடம்வலம் தலையாட்டி, கையை உயர்த்தி, அவள் மேலே பேசுவதைத் தடுத்தான்.

அவர்கள் மூவரும் உதவி கமிஷனர் அலுவலகத்தில் அமர்ந்திருந்தனர். கீதா கைகளில் முகத்தை முட்டுக் கொடுத்து கர்ச்சீப்பால் வாய்பொத்தி சப்தமில்லாமல் விசித்துக்கொண்டிருந்தாள். அவளது அழுது சிவந்த கண்கள் லட்சுமியை நோக்கி உயர்ந்தபோது மேலும் பளபளத்தன.

உதவி கமிஷனர் முகத்தை சிலைபோல் வைத்துக்கொண்டு நிலைத்த கண்களால் வாசுவை அளந்துகொண்டிருக்க, அவர் அருகில் ஶ்ரீதர் சலனமின்றி அமர்ந்திருந்தான்.

எல்லோரையும் ஒருமுறை பார்த்துவிட்டு வாசு அமைதியான குரலில் தொடங்கினான்:

"நடந்த எல்லாத்துக்கும் நான் முழுப் பொறுப்பு ஏத்துக்கறேன், உதவி கமிஷனர் சார். I plead guilty of your charges. சட்ட விரோதமான முறையில ஒரு குழந்தையை சுவீகாரம் பண்ணிகிட்டது, அந்த உண்மையை உங்ககிட்ட மறைச்சது. தவிர என்னோட செய்கை மூலமா தெரிஞ்சோ தெரியாமலோ ஒரு பாவமும் அறியாத ஒரு உயிரோட மரணத்துக்குக் காரணமாய்ட்டேன்! ப்ளீஸ், என்னைக் கைது செய்ங்க, மத்தவங்களை விட்டுடுங்க."

"அய்யா வேண்டாங்க! அவரை விட்டுடுங்க. நான்தான் எல்லாத்துக்கும் காரணம். என்னை அரஷ்டு பண்ணுங்க."

"நீங்க செஞ்ச குற்றத்துக்கு உங்க மூணுபேரையும் குறைஞ்சது மூணு வருஷம் உள்ள தள்ளலாம் தெரியுமா?"

லட்சுமி பயந்துபோய், "அய்யா, தப்பு எம்மேலதாங்க. கொளந்தையும் வித்துட்டுப் புகாரையும் கொடுத்தது நான் தானுங்களே? வேற வழியில்லாமத்தான் உண்மையை மறைக்க வேண்டியிருந்ததுங்க. அய்யாதான் எப்டியாச்சும் எங்க மூணு பேரையும் மன்னிச்சு என் புகாரை நான் வாபிஸ் வாங்கிக்க அனுமதிக்கணும்."

உதவி கமிஷனரால் அவள் சொற்களில் ஆச்சரியப் படாமலிருக்க முடியவில்லை. ஶ்ரீதர் தன் வியப்பை வார்த்தைகளில் வெளியிட்டான்:

"உன் வீட்டுக்காரர் தானம்மா புகார் பண்ணது. நீ எப்படி அதை வாபஸ் வாங்கிக்க முடியும்?"

"அவரால கையெளுத்துப் போடமுடியாம நாந்தானுங்களே உங்க காயிதத்தில கையெளுத்துப் போட்டது! நான் தீர ரோசனை பண்ணி மனப்பூர்வமாத்தான் எங்கொளந்தயை அவங்களுக்கு சுவீகாரத்துக்குக் கொடுத்தங்க. எங்கிட்ட இருக்கறதக் காட்டிலும் இவங்ககிட்ட அது இளவரசி மாதிரி இருக்கும் இல்லீங்களா? எங்க பொளப்புத்தான் இப்படி ஆய்ட்டதால, எம்மவ நல்லார்க்கறது தானுங்களே எனக்கு வேணும்? எதோ எம் புருசனுக்கு வைத்தியம் பாக்கப் பணம் தேவைப்பட்டதாலதான் வாசு சார்கிட்ட பணம் வாங்கிக்கிட்டங்க. இதுல தயவுபண்ணி சட்டம்லாம் பாக்காதீங்கய்யா! ஒரு வேளை இப்ப வாசு சார் கொளந்தைக்கு வைத்தியம் பார்க்க இஸ்டப்படலேன்னா எங்கிட்ட திருப்பித் தந்திரட்டுங்க. கஸ்டமோ நஸ்டமோ நானே பாத்துக்கறேன். விதியிருந்தா பொளச்சுக்கிது..."

"என்னைக்கு நாங்க பாசத்தோட உங்கிட்டேர்ந்து வாங்கிட்டமோ அன்னைக்கிலேர்ந்து ரம்யா உன் குழந்தை இல்லேம்மா...", என்றாள் கீதா முதன்முறையாக.

உதவி கமிஷனரின் கண்கள் அவள்மேல் விழுந்து பின் வாசுமேல் நிலைத்தன.

"நான் உங்களை விட்டுவிட முடியாது வாசுதேவன்! நீங்க ஒரு படித்த இளைஞர், பொறுப்பான வேலையில இருக்கீங்க. ஏய்யா சட்டத்தை ’இவேட்’ பண்ண நினைச்சீங்க? நீங்க மூணுபேரும் எங்க டிபார்ட்மென்டுக்கு எவ்வளவு தொல்லை கொடுத்துட்டீங்க!"

வாசு பதில்பேசத் தொடங்கும் முன் அவர் ஶ்ரீதரிடம் "எதுக்கும் எஃப் ஐ ஆர் ரெடி பண்ணிருங்க" என்றார்.

குரலில் கோபம் பொதிந்திருக்க வாசு பேசத் தொடங்கினான்:

"கேரி ஆன், ஜென்டில்மென்! உங்களைப் பொறுத்தவரைக்கும் சட்டம்தானே முக்கியம்? என்னைக் கைது செய்யறதால என்னோட வேலை போய், எதிர்காலம் பாழடைஞ்சு, என் குடும்பம் தெருவில நிக்கப்போகுது. ரம்யாவும் வியாதியில பட்டுப் போய்டப் போறா. உங்களுக்கென்ன நஷ்டம்? இந்தக் கேஸை வெற்றிகரமாக ஸால்வ் பண்ணினதுக்கு இந்த இளம் இன்ஸ்பெக்டருக்குப் ப்ரொமோஷன் கிடைக்கும். ஒரு பெரிய போலீஸ் ஆஃபீஸர் தன் பல்வேறு அலுவல்களுக்கிடையில ஒரு எளிய, நலிவுற்ற குடும்பத்தோட புகாரை சிரமேற்கொண்டு கேஸை வெற்றிகரமா நடத்திக் கொடுத்ததற்காக உங்களுக்குப் பாராட்டும் புகழும் கிடைக்கும்!...

"ஐ யம் சாரி சார், கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுப் பேசிட்டேன்! ப்ளீஸ் சார், நான் என்னுடைய செயலை நியாயப் படுத்தறதா நினக்காதீங்க. நான் செஞ்சது குற்றமில்லை, ஒரு அட்வென்சர்தான்! ஒரு குற்றத்தை வேணும்னா ஒருத்தன் திட்டமிட்டு செய்யலாம். ஆனால் ஒரு துணிகரமான செயலையும் அதன் விளைவுகளையும் சூழ்நிலைகள்தான் தீர்மானிக்கின்றன. சமயத்தில அட்வென்சர் விபத்தாகிவிட வாய்ப்பு இருக்கு, என்னுடைய இந்த அட்வென்சர் மாதிரி!

"என்னோட முதல் குழந்தை ரம்யா ஒரு விபத்தில உயிர் இழந்தாள்னு கண்டுபிடிச்சீங்க இல்லையா? அந்த விபத்துக்கு என்னோட முன்கோபம்தான் காரணமாக இருந்தது இன்ஸ்பெக்டர்! ஒரு நாள் நான் வீட்டு வாசல்ல தெருவில வெச்சு என் ஸ்கூட்டரைத் தொடச்சிக்கிட்டிருந்தபோது ஆசையா பக்கத்தில வந்து தானும் தொடைக்கறேன்னு தொட்ட குழந்தையை, அது ஸ்பார்க் ப்ளக்கில கையை வெச்சிரப்போறதேன்னு பயந்து கோவத்துல ’போ அந்தாண்ட’ன்னு பிடிச்சுத் தள்ளினேன். குழந்தை தெருவில நிலைதடுமாறி விழுந்ததும் அந்தக் கார் அவள்மேல ஏறினதும் ஒரே சமயத்தில நடந்தது!... இதை விதின்னு சொல்லறதா, இல்லை நான் குற்றவாளின்னு சொல்லறதா? ரம்யாவோட மறைவு எங்க மனசையும் குடும்ப வாழ்க்கையையும் ஆழமா பாதிச்சதுல நான் இம்போடன்ட் ஆகிவிட, இன்னொரு குழந்தைகூட பெத்துக்க முடியாத நிலையிலதான் இந்த ரெண்டாவது ரம்யாவைக் கடவுள் தந்த பரிசா நினைச்சு சுவீகாரம் பண்ணிக்கிட்டேன் சார்! It was never my intention to evade the Law. இப்ப நீங்க அனுமதிச்சீங்கன்ன சட்டப்படி இந்தக் குழந்தையை நான் என் மகளா ஏத்துக்க்கறேன். ப்ளீஸ் ஹெல்ப் மீ சார்!"

மூச்சடைக்க நிறுத்தியவன், குரலைக் கொஞ்சம் தாழ்த்திக்கொண்டு சொன்னான்:

"எனக்கு உங்களிடம் ஒரே ஒரு வேண்டுகோள்தான் சார்! இந்தக் கேஸை ஒரு ’ஹ்யூமன் ஆங்கிள்ல’ பாருங்க. நான் லட்சுமியோட குழந்தையை விலை கொடுத்து வாங்கவும் இல்லை, அவள் அதை விற்கவும் இல்லை! அவளுக்கு நான் என் பணத்தால உதவி செஞ்சிருக்கேன், அவ்வளவுதான். ஒரு விதத்தில பார்த்தா நான் குற்றவாளிதான். அதையே இன்னொரு விதத்தில பார்த்தா, நான் இந்தம்மாவோட கணவனுக்கு சிகிச்சை செய்துகொள்ளப் பண உதவி செஞ்சிருக்கேன்; ஏறக்குறைய அநாதையாகத் திருவில திரிஞ்சிக்கிட்டிருந்த ஒரு குழந்தையை எடுத்து வளர்த்துக்கிட்டிருக்கேன்; இப்ப அந்தக் குழந்தைக்கு வந்திருக்கற தொழு நோயையும் குணப்படுத்த என்னோட பணத்தையும் நாட்களையும் செலவிடப்போறேன். நான் சட்டத்தை மீறியிருக்கலாம், என்னோட சொந்த சந்தோஷத்துக்காக. ஆனால் என் நேர்மையை மட்டும் சந்தேகிக்காதீங்க சார்! ஒருவேளை உங்களுக்கு ரம்யா மாதிரி ஒரு குழந்தை இருந்து அது ஒரு நாள் அகாலமா திடீர்னு இறந்துபோயிருந்தா அந்த புத்திர சோகம் உங்களுக்குப் புரியலாம். மற்றபடி, ஏற்கனவே கடவுள் எங்களுக்கு தண்டனை கொடுத்திட்டார். அதுக்குமேல சட்டப்படியும் எங்களை நீங்க தண்டிக்க விரும்பினா, வி ஆர் அட் யுவர் டிஸ்போஸல்."

வாசுவின் ’ஒரு வேளை உங்களுக்கு ரம்யா மாதிரி’ பேச்சில் ஶ்ரீதர் கொஞ்சம் திடுக்கிட்டு அவர் முகத்தை நோக்க, உதவி கமிஷனரிடம் இருந்து ஒரு மெல்லிய, நீண்ட பெருமூச்சு வந்தது. நெற்றியில் சோக ரேகைகள் படர எழுந்துகொண்டவர் வாசுவின் தோள்களில் கை வைத்தார்.

"Alright, young man! We police officers do appreciate human values. லட்சுமி அவள் புகாரை வாபஸ் வாங்கிக்க நான் அனுமதிக்கிறேன். ரம்யாவை நீங்க சட்டப்படி சுவீகாரம் பண்ணி ஒரு கோர்ட் ஆர்டர் வாங்கிக்கங்க. சொந்த விஷயமா சொன்னா நானும் அந்த புத்திர சோகத்தை அனுபவிச்சவன்தான். என்னோட ஒரே பையன் சுரேஷ்--இப்ப இருந்த அவனுக்கு உங்க வயசிருக்கும்--ஏழு வயசில கான்சர் நோயில உயிர் விட்டது உங்களுக்குத் தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை. அதனாலதான் நான் இந்த கேஸ்ல நான் பர்சனலா அக்கறை காட்டினேன். ஶ்ரீதர், இந்தக் கேஸை இப்படி முடிக்கிறது பத்தி உங்க கருத்தைச் சொல்லுங்க."

"எனக்கு சம்மதம்தான் சார். காணாமல் போன குழந்தையை நாம் வெற்றிகரமா ட்ரேஸ் பண்ணிட்டோம். அந்த சுவீகார விஷயத்தைப் பொறுத்தமட்டில குழந்தையோட நலன்தானே முக்கியம்? எனவே, நாம் கேஸை இப்படி முடிச்சிறலாம் சார்."

"ஆனால் ஒரு கண்டிஷன், வாசுதேவன். குழந்தையோட சேர்த்து அதோட முன்னாள் தாயாரையும் நீங்கதான் கவனிச்சுக்கணும்."

"எங்களுக்கு அதில் முழு சம்மதம் சார். லட்சுமி எங்க வீட்டிலேயே தங்கட்டும். சரிதானே லட்சுமி? உன் உடைமைகளை எடுத்திட்டு காலையில வந்திரும்மா", என்றாள் கீதா.

*** *** ***


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Fri Jan 04, 2013 10:04 am

[14]
(இறுதிப் பகுதி)

மறுநாள் காலை வாசு செய்தித்தாளைப் பிரித்தபோது, உள்ளிருந்து ஒரு கவர் விழுந்தது.

கவரைப் பிரித்தபோது சில பத்து ரூபாய் நோட்டுகளும் ஒரு துண்டுக் காகிதமும் இருந்தன.

காகிதத்தில், "என்னை மன்னிச்சிடுங்க. உங்க வாள்க்கைல குறுக்கிட எனக்கு உரிமை இல்லை. தகுதியும் இல்லை. அப்படியே இருந்தாலும் எனக்கு மன நிம்மதி இருக்காது. இன்னைக்கு நான் என் கஷ்டமர் ஒருத்தரோட பம்பாய் போறேன். நெசமாவேதான்! அதிரிஸ்டம் இருந்ச்சினா சினிமாத் திரையில வருவேன். இல்லாங்காட்டி இருக்கவே இருக்கு திரை மறைவில என் தொளில். எப்படியும் சினிமாவில வருவேன்னு நம்பிக்கை இருக்கு. என்னத் தேட வேண்டம். உங்கள் ரம்யாக்கு என் அன்பு.--இப்படிக்கு, லெச்சுமி" என்று எழுதியிருந்தது.

(முற்றும்)

*** *** ***


dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Sat Jan 05, 2013 4:27 pm

சூப்பருங்க

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sat Jan 05, 2013 5:38 pm

நன்றி திலிப்.

dhilipdsp wrote: சூப்பருங்க


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Thu Jan 10, 2013 11:54 pm

யத்கிஞ்ச ப்ராஹ்மணோத்தமம்
குழந்தையும் தெய்வமும்

ரமணி

குடும்பம் சாப்பாட்டு மேஜையில் அமர்ந்திருந்தது. அம்மாவுக்கும், அவளது இரட்டைக் குழந்தைகளான அரவிந்த், பத்மாவுக்கும் மிகவும் மகிழ்ச்சி: அப்பா அன்று சீக்கிரமே வீடு திரும்பி அவர்களுடன் சாப்பாட்டுக்கு உட்கார்ந்து விட்டார். எல்லோரும் அமர்ந்ததும், அம்மா, முதல் தடவைக்கு உணவு வகைகளைப் பரிமாறிவிட்டு---வட்டமான கோதுமை ரொட்டிகள், தால், ஆனியன் பச்சடி---அரவிந்த் அருகில் உட்கார்ந்தாள். பத்மா அப்பாவின் அருகில் அமர்ந்திருந்தாள். அன்று மாலை அவர் மிகவும் ஆசுவாசமாகத் தெரிந்தார்.

அம்மா தன் குழந்தைகளைப் பெருமையுடன் பார்த்தாள்: ’வயஸுக்கு மீறின ஞான விசாரத்துல இவாளுக்கு எப்பவும் இஷ்டம்தான். இன்னிக்கு அப்பாவை என்ன கேக்கப் போறதுகளோ? இவாளுக்கு பதில் சொல்றதுல அப்பாவுக்கு ஏகப் பொறுமை.’

"அப்பா," என்றார்கள் குழந்தைகள் இருவரும் சேர்ந்து. "உன்னை ஒண்ணு கேக்கலாமா?"

"ஷூட் இட்", என்றார் அப்பா.

"ஒரே கொழப்பமா இருக்கு அப்பா", பத்மா ஆரம்பித்தாள். "எங்க க்ளாஸ் டீச்சர் இன்னிக்கு க்ளாஸ் முடியற சமயத்துல, ம்..., நாம ஹிந்துக்களுக்கு உண்மையில் ஒரே ஒரு கடவுள்தான் உண்டு, ப்ரம்மம்-ங்கற பேர்ல, நாம நெனக்கறபடி பல கடவுள் கெடையாதுன்னு சொன்னாப்பா."

"டீச்சர் அதை எக்ஸ்ப்ளைன் பண்ணறதுக்குள்ள, பெல் அடிச்சு க்ளாஸ் முடிஞ்சுபோச்சு!", அரவிந்த் தொடர்ந்தான்.

"அப்பா", பத்மா கேட்டாள்: "நமக்கு ஒரே கடவுள்தான்-ங்கறது உண்மையாப்பா?"

"கெடையாது, நம்ம ஸ்வாமி ரூம்ல பல கடவுள் இருக்கே", அரவிந்த் தர்க்கம் செய்தான். விரல்விட்டு எண்ணியபடி அவன், "கணேஷா, ஷிவா, விஷ்ணு, முருகா, ராமா, க்ருஷ்ணா, துர்கா, லக்ஷ்மீ, ஸரஸ்வதீ, இன்னும் பலபேர் இருக்காளே!" என்றான்.

"அதுவும் கணேஷா நாம ரெண்டுபேர்க்கும் இஷ்ட தெய்வம் வேற", என்றாள் பத்மா, தலையை விரைவாக மேலும் கீழும் ஆட்டியபடி.

"அந்த ப்ரம்மம் யார்னே எனக்குத் தெரியாது!" என்றான் அரவிந்த், தன் கையை விரித்தபடி. "நான் அவரைப் பார்த்ததே இல்லை. அவர் எப்படி இருப்பாருப்பா?"

"எப்படி இருந்தாலும் அந்த ப்ரம்ம்த்துக்காக நான் கணேஷாவை விட முடியாது", என்றாள் பத்மா தீர்மானமாக.

"அல்லது வேற எந்தக் கடவுளுக்காகவும்தான்", என்றான் அரவிந்த்.

"கவலைப்படாதேங்கோ, நான் எல்லாத்தையும் விஸ்தாராம சொல்றேன்", என்றார் அப்பா. "உங்கம்மா என்ன சொன்னா இந்தக் கேள்விக்கு?"

"நான் சொன்னேன், எப்படி நாம நாலு பேரும் சேர்ந்து ஒரே குடும்பமா இருக்கமோ, அதே மாதிரி அந்த ஒரு கடவுளும் பல கடவுளர் சேர்ந்த ஒரு குடும்பமா இருக்கார்."

"ஆல்ரைட். இதை இப்போ நான் சொல்ற மாதிரி நெனச்சுப் பார்க்கலாம். பத்மா, நீ யாரு?"

"நான் ஒரு பொண்ணுப்பா".

"நீ எனக்கு யாரு?"

"நான் உனக்கு மகள்."

"அதாவது, பத்மாக்கு ரெண்டு உருவம்: ஒரு பொண்ணு, ஒரு மகள். அடிப்படையா அவள் ஒரு பொண்ணுதான், ஆனா எனக்கும் அம்மாக்கும் அவள் ஒரு மகள், இல்லையா?"

"அதே மாதிரி நானும் ஒரு பையன், ஒரு மகன்", என்றான் அரவிந்த்.

"நான் என்ன சொல்றேன்னு புரியறதா? பத்மா, உனக்கு வேற ஏதாவது உருவம் இருக்கா?"

பத்மா அந்தக் கருத்தை உடனே க்ரஹித்துக்கொண்டாள். கண்களை உருட்டிக்கொண்டு, தலையை ஆட்டயபடியே அவள் சொன்னாள்: "ஆமாப்பா, பல உருவம் இருக்கே! அரவிந்துக்கு நான் ஸிஸ்டர், க்ளாஸ்ல ஒரு ஸ்டூடண்ட், வளர்மதிக்கு ஒரு ஃப்ரெண்ட், அப்பறம், எங்களோட நா..லு பாட்டி-தாத்தாக்கும் ஒரு பேத்தி!"

"ரொம்ப ஸரி. நீ இந்த எல்லா உருவத்துலயும் ஒண்ணா இருக்கையா, அல்லது வேற வேறயா இருக்கையா?"

"கண்டிப்பா ஒண்ணாதான் இருக்கேன். ஏன்னா, எல்லாமே நான்தானே?"

"இல்ல, அவள் வித்யாஸமா இருக்கா," என்றான் அரவிந்த். "ஸ்கூல் போகும்போது ஸ்மார்ட்டா ட்ரெஸ் பண்ணிண்டிருக்கற பொண்ணா இருக்கா, எனக்கு, அடிக்கடி கொனஷ்டைபண்ற ஸோதரியா இருக்கா, அம்மாவுக்கு ஒரு ஹெல்ப்பிங் டாட்டர், அப்பறம், பாட்டி-தாத்தாக்கு செல்லப் பேத்தி!"

"நீங்க ரெண்டுபேர் சொல்றதும் ஸரி. பத்மா, நீ சொன்னபடி, நீ உன் எல்லா உருவத்துலயும் ஒண்ணாவும் இருக்கே, அதே நேரத்துல ஒவ்வொண்ணாவும் இருக்கே. அதாவது, நீ உன் ஒவ்வொரு உருவத்துலயும் வேற வேறயாத் தெரிஞ்சாலும், எல்லா உருவத்துலயும் இருக்கறது ஸாக்ஷாத் நீதான், இல்லையா?"

ஒரு கவளம் விழுங்கிவிட்டு அப்பா தொடர்ந்தார்: "பத்மா, நீ உண்மைல ஒருத்தியா இருந்தாலும், ஏன் இப்படி பல பேர்க்கு பலவிதமாத் தெரியறே? ஏன்னா, உன்னோட சொந்தம், நட்பு இதைப்பொறுத்து நீ பலவிதமான ரோல்ஸ் ப்ளே பண்ண வேண்டியிருக்கு, அதுக்குத்தகுந்த மாதிரி வேஷம் போட வேண்டியிருக்கு, ஒரு ட்ராமால வர மாதிரி. அதேமாதிரிதான் உனக்கும் அரவிந்த், இல்லையா?"

"அது புரியறதுப்பா, ஆனா பத்மாவும் நானும் வேற வேற தானே? ஏன்னா, அவ ஒரு பொண்ணு, நான் பையன்?"

"யெஸ் அன்ட் நோ. நீ ஒரு பையன் அவள் ஒரு பொண்ணுங்கறது ஸரிதான், ஆனா அதே நேரத்துல, நீங்க ரெண்டு பேரும், நானும், அம்மாவும் மனிதர்கள், இல்லையா? ஆகையினால, நாம எல்லோரும் பொதுவா மனித உருவங்கள், ரைட்?"

"ஆனா அப்பா," அரவிந்த் கேட்டான்: "கடவுளும் ஒரு மனிதரா? ஏன்னா, நாம வணங்கற ஒவ்வொரு கடவுளும் மனித உருவத்தில்தானே இருக்கா?"

"கணேஷாவைத் தவிர," என்றாள் பத்மா. "அவர் ஸ்பெஷல். மனித உருவம், ஆனை முகம்."

"ஆமாம். ஒரு உருவம் எடுக்க நினக்கும்போது கடவுள் பெரும்பாலும் மனித உருவத்திலேயே வருகிறார். ஏன்னா அவர் படைத்த உருவங்கள்லேயே மனித உருவம்தான் சிறந்தது. ’தெய்வம் மானுஷ ரூபேண’ அப்படீன்னு வசனமே இருக்கு."

"ஆனா இந்த மனுஷ ரூபங்கள்லயும் வித்யாஸம் இருக்கில்லப்பா?" என்றான் அரவிந்த். "நீ, அம்மா, பத்மா, நான் எல்லோரும் வித்யாஸப்படற மாதிரி."

"ஆமாம் அரவிந்த். எப்படி நாம வேற வேற ரூபங்கள்ல தெரிஞ்சாலும் அது எல்லாத்துலயும் மனுஷன்-ங்கற அடிப்படையா இருக்கமோ, அதே போல கடவுளோட உருவங்கள் வேறயா இருந்தாலும் அந்த எல்லாத்துலயும் இருக்கறது ஒரே கடவுளாகிய ப்ரம்மம்தான். இப்ப புரிஞ்சுதா?"

"ஆனா அப்பா", பத்மா கேட்டாள்: "கடவுள் ப்ரம்மம்-ங்கற ஒண்ணா இருக்கும்போது நாம ஏன் அவரை விதவிதமான மனுஷ ரூபங்கள்ல கும்பிடறோம்?"

"நம்மளோட இந்த லோகம் இருக்கே, அது ஒரு கலர்ஃபுல் வர்ல்ட். அதுல பலதரப்பட்ட மனுஷா இருக்கா. சில பேருக்கு செல்வம் வேணும், சில பேருக்கு ஆரோக்யம் வேணும், சிலருக்கு ஞானம், இன்னும் சில பேருக்கு கடவுள் என்ன கொடுக்கறாரோ அதைத் தவிர வேற ஒண்ணும் வேண்டியிருக்காது. கடவுள் இந்த லோகத்தைப் படைத்ததால, எல்லாத்தையும் அவர்தான் கண்ட்ரோல் பண்றார். அதனால, செல்வம் வேணுங்கறவாளுக்கு அவர் லக்ஷ்மீயா வரார், ஆரோக்யம் வேணுங்கறவாளுக்கு பிள்ளையாரா வரார், ஞானம் வேணுங்கறவாளுக்கு ஸரஸ்வதீயா, இன்னும் இதுமாதிரி பல வடிவத்துல வரார்."

"ஆனா நம்ம ஸ்வாமி ரூம்ல பல கடவுள் இருக்கே?" என்றான் அரவிந்த். "அப்போ நமக்கு எல்லாம் வேணும்னு அர்த்தமா?"

அப்பா சிரித்தார். "நீ ஸொல்றது ஒருவிதத்துல ஸரிதான். உனக்கும் பத்மாக்கும் கணேஷா இஷ்ட தெய்வம். இதே மாதிரி ஒவ்வொருத்தருக்கும் ஒரு இஷ்ட தெய்வம். நமக்கு எல்லா தெய்வ வடிவங்களும் இஷ்டம், அதனால நாம பல தெய்வங்களைக் கும்பிடறோம்."

"லக்ஷ்மீ செல்வத்தையும் ஸரஸ்வதீ அறிவையும் கொடுக்கறான்னா, ஷிவாவும் விஷ்ணுவும் என்ன தராப்பா?", என்றாள் பத்மா.

"அதைப்பத்தி பேசணும்னா, ஒரு நீளமான வியாக்யானமாப் போகும். இன்னொரு நாள் பார்க்கலாம். இப்ப நீங்க தெரிஞ்சுக்க வேண்டியது ரெண்டு. முதலாவது, கடவுள் என்பது ப்ரம்மம் ஒன்றுதான், அதை ஹிந்துக்கள் பலவிதமா வடிவங்கள்ல வழிபடறா. ரெண்டாவது, நாம கடவுளை பலவிதமான வடிவங்கள்ல வழிபட்டாலும், நமக்கு கடவுள் ஒன்றுதான்னு ரொம்ப நல்லாவே தெரியும். வயல்ல வேல செய்ற ஒரு ஸாதாரண விவசாயிக்குக்கூட இந்த உண்மை தெரியும்."

"இப்ப நல்லாப் புரியறதப்பா", என்றார்கள் குழந்தைகள் இருவரும் சேர்ந்து. அரவிந்த் கேட்டான்: "அப்பா, கடவுள் மனுஷ ரூபத்துல வரார்னா, மனுஷாளான நாம எல்லோரும் கடவுளாப்பா?"

"ஆமாம், அடிப்படையா நாம கடவுள்தான். ஆனால் நமக்கு அது தெரியறதில்ல. வெளி வேஷங்கள்தான் உண்மைன்னு நம்பிண்டு நாம ஒவ்வொருத்தரும் நம்மைத் தனித்தனி மனுஷாளா நெனைச்சுக்கறோம்."

"மனுஷாள்லாம் கூடக் கடவுள்தான்னா அப்பாதான் என்னோட ஃபேவரிட் ஹ்யூமன் காட்", என்றாள் பத்மா.

"அம்மாதான் என்னோட ஃபேவரிட் ஹ்யூமன் காட்", என்றான் அரவிந்த்.

"உங்க டீச்சரையும், வீட்டுக்கு வர கெஸ்ட்டையும் மறந்துவிடாதீங்கோ!" எல்லாவற்றையும் ஆர்வத்துடன் கேட்டு ரஸித்துக்கொண்டிருந்த அம்மா சொன்னாள்.

"யெஸ் மாம்", குழந்தைகள் குதூகலத்துடன் கூறினர். "நீ எங்களுக்கு மின்ன சொல்லிகொடுத்தது, இப்பதான் அர்த்தம் புரியறது. மாத்ரு தே3வோ ப4வ, பித்ரு தேவோ பவ, ஆசார்ய தேவோ பவ, அதிதி தேவோ பவ*".

**தைத்திரீய உபநிஷத் 1.11.3.

*** *** ***


Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Jan 11, 2013 7:41 am

கதை சூப்பருங்க நன்றி




ரமணியின் கதைகள் - Page 5 Mரமணியின் கதைகள் - Page 5 Uரமணியின் கதைகள் - Page 5 Tரமணியின் கதைகள் - Page 5 Hரமணியின் கதைகள் - Page 5 Uரமணியின் கதைகள் - Page 5 Mரமணியின் கதைகள் - Page 5 Oரமணியின் கதைகள் - Page 5 Hரமணியின் கதைகள் - Page 5 Aரமணியின் கதைகள் - Page 5 Mரமணியின் கதைகள் - Page 5 Eரமணியின் கதைகள் - Page 5 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Thu Apr 11, 2013 6:33 pm

கூட்டுக் குடும்பம்
ரமணி, 11/04/2013

இளம் இந்திய ஆடவரும் பெண்டிரும் திரைகடலோடித் திரவியம் தேடி வாழ்வில் எல்லாவித சுதந்திரங்களையும் அனுபவித்துப் பார்க்க முற்படும் தற்காலத்தின் சமூகப் பரிணாம வளர்ச்சியில் இனிவரும் நாட்களில் பெண்ணியமும் ஆணியமும் ஒன்றுடன் ஒன்று மோதிப் போட்டி போட்டுக்கொண்டு வளர்ந்ததில் விளைந்த குட்டிக்கதை இது.

ஆறு வயதுச் சிறுவன் அகிலேஷ்: அக்கா, நீ மட்டும் அப்பாவை ஏன் டாடின்னு கூப்பிடறே? நாமட்டும் ஏன் அப்பான்னு கூப்பிடனும்? அப்பா வேற டாடி வேறயாக்கா? ரெண்டும் ஒரே மீனிங்தான்னு என் ஃப்ரெண்ட் அரவிந்த் சொல்றானே?

எட்டு வயதுச் சிறுமி மதுமிதா: ஆமாம் அகில் கண்ணா! ஒவ்வொரு ஸன்டேயும் என்னை வந்து கூட்டிட்டு போவாரே, ப்ரகாஷ் அங்கிள், அவர்தான் எனக்கு அப்பா. உங்கப்பா சூர்யா வந்து உனக்கு அப்பா, எனக்கு டாடி, ஸிம்பிள்!

அகிலேஷ்: அப்போ உங்கப்பாவை நான் டாடின்னு கூப்பிடலாமா? நம்ம ரெண்டு பேர்க்கும் ஒரே அம்மா, ஆனா அப்பா டாடி வேற வேறயா?

மதுமிதா: எனக்கும் உனக்கும் ஒரே அம்மாதான். ஆனா எனக்கு இன்னொரு மம்மி இருக்கா. அவளுக்கு ஒரு குட்டிப் பாப்பாவும் இருக்கு, தீபக்ங்கற பேர்ல, தெரியுமா? ஸோ, எனக்கு ரெண்டு தம்பிங்க இருக்காங்க.

அகிலேஷ்: ஏன்க்கா எனக்கு மட்டும் மம்மி இல்லை? அம்மா வந்ததும் கேக்கப் போறேன், எனக்கும் ஒரு மம்மி வேணும்.

மதுமிதா: ஷ்..ஷ்! சத்தம் போட்டுப் பேசாதே, பாட்டி எழுந்திடப் போறா! உனக்கு ஒரு ரகசியம் சொல்றேன், ஆனா நீ அதைப் பத்தி யார்ட்டயும், மெய்ன்னா அம்மா டாடிட்ட வாய்தவறிக் கூடக் கேட்டுறக் கூடாது, ப்ராமிஸ்?

அகிலேஷ்: ப்ராமிஸ்க்கா! என்ன ரகசியம் சொல்லேன்.

மதுமிதா: கூடிய சீக்கிரம் உனக்கும் ஒரு மம்மி வரப் போறா!

அகிலேஷ்: ஹை, எப்படிக்கா?

மதுமிதா: அம்மாவும் உங்கப்பாவும் இப்பல்லாம் அடிக்கடி சண்டை போட்டுக்கறா பத்தியா? அதனாலா, டாடி வேற கல்யாணம் பண்ணிக்கப் போறார். ஸோ, உனக்கு ஒரு மம்மி கிடைப்பா. ஆனா, நீ இதுபத்தி மூச்சு விடக்கூடாது.

அகிலேஷ் (கொஞ்சம் யோசித்து): ஏன்க்கா நம்ப அம்மா அப்பா டாடிலாம் அடிக்கடி சண்டை போட்டுக்கறா? நம்ப அம்மாவும் உங்க அப்பாவும் பிரிஞ்சதனாலதானே நீ இங்கேயும் அங்கேயுமா இருக்க வேண்டியிருக்கு. எனக்கும் ஸன்டேஸ்ல போர் அடிக்கிது. அட்லீஸ்ட் நாம சில்ட்ரன்லாம் ஒண்ணா ஒரு இடத்தில இருந்தா எவ்ளோ லவ்லியா இருக்கும்!

மதுமிதா: கவலைப் படாதே அகில் கண்ணா. நான் அதுக்கு ஒரு ப்ளான் வெச்சிருக்கேன். அது சரியா வரலேன்னா Plan-B-யும் யோசிச்சு வெச்சிருக்கேன். கூடிய சீக்கிரம் பாரேன், நான் பெரியவங்க எல்லோரையும் ஃபோர்ஸ் பண்ணி நாம எல்லாரும் சேர்ந்து ஒரு வீக்-என்ட் பிக்னிக் போகப்போறோம். அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா முதல்ல நாம சில்ட்ரென் லெவல்ல ஒண்ணுசேரப் போறோம்.

தொலைபேசி மணி அடிக்க, பாட்டி விழித்துக் கொள்கிறாள். குழந்தைகள் வாயை மூடிக்கொண்டு தங்கள் ஹோம்-வர்க்கைத் தொடர்கின்றனர்.

*****


Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Apr 12, 2013 11:58 am

தொடருங்கள் படிக்க ஆவலாக உள்ளது நன்றி




ரமணியின் கதைகள் - Page 5 Mரமணியின் கதைகள் - Page 5 Uரமணியின் கதைகள் - Page 5 Tரமணியின் கதைகள் - Page 5 Hரமணியின் கதைகள் - Page 5 Uரமணியின் கதைகள் - Page 5 Mரமணியின் கதைகள் - Page 5 Oரமணியின் கதைகள் - Page 5 Hரமணியின் கதைகள் - Page 5 Aரமணியின் கதைகள் - Page 5 Mரமணியின் கதைகள் - Page 5 Eரமணியின் கதைகள் - Page 5 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக