புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/06/2024
by mohamed nizamudeen Today at 8:36 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரமணியின் கவிதைகள் - Page 9 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 9 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 9 Poll_c10 
33 Posts - 42%
heezulia
ரமணியின் கவிதைகள் - Page 9 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 9 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 9 Poll_c10 
32 Posts - 41%
Balaurushya
ரமணியின் கவிதைகள் - Page 9 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 9 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 9 Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
ரமணியின் கவிதைகள் - Page 9 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 9 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 9 Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
ரமணியின் கவிதைகள் - Page 9 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 9 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 9 Poll_c10 
2 Posts - 3%
prajai
ரமணியின் கவிதைகள் - Page 9 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 9 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 9 Poll_c10 
2 Posts - 3%
Manimegala
ரமணியின் கவிதைகள் - Page 9 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 9 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 9 Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
ரமணியின் கவிதைகள் - Page 9 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 9 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 9 Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
ரமணியின் கவிதைகள் - Page 9 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 9 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 9 Poll_c10 
1 Post - 1%
Saravananj
ரமணியின் கவிதைகள் - Page 9 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 9 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 9 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரமணியின் கவிதைகள் - Page 9 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 9 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 9 Poll_c10 
399 Posts - 49%
heezulia
ரமணியின் கவிதைகள் - Page 9 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 9 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 9 Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
ரமணியின் கவிதைகள் - Page 9 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 9 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 9 Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
ரமணியின் கவிதைகள் - Page 9 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 9 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 9 Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
ரமணியின் கவிதைகள் - Page 9 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 9 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 9 Poll_c10 
27 Posts - 3%
prajai
ரமணியின் கவிதைகள் - Page 9 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 9 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 9 Poll_c10 
8 Posts - 1%
sugumaran
ரமணியின் கவிதைகள் - Page 9 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 9 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 9 Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
ரமணியின் கவிதைகள் - Page 9 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 9 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 9 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
ரமணியின் கவிதைகள் - Page 9 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 9 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 9 Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
ரமணியின் கவிதைகள் - Page 9 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 9 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 9 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரமணியின் கவிதைகள்


   
   

Page 9 of 36 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 22 ... 36  Next

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Wed Oct 31, 2012 1:22 pm

First topic message reminder :

கணினி போற்றுதும்!?
ரமணி, 18/08/2012

கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!
பணியெது வாகிலும் பாங்குறச் செய்திடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!

பலவகை வடிவினில் உலகில் உறைந்திடும்
பலவகை மனிதரும் பலவாறு உகந்திடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!

இன்றைய உலகின் எலிகள் போட்டியில்
பகலும் இரவும் மனிதர் வாழ்வினை
நிலைபெறச் செய்திடும் கணினி போற்றுதும்!

குழந்தை மனம்முதல் கிழவர் மனம்வரை
கலைகள் போற்றித் திறன்கள் வளர்த்து
கனவுகள் தந்திடும் கணிணி போற்றுதும்!

குடும்பம் முழுவதும் கணினி வகைகள்!
மேசைக் கணினியும் மடிமேல் கணினியும்
அலுவ லகத்திலும் வீட்டிலும் அமர்ந்து
ஆசான் தோழன் மருத்துவன் செயலர்
கணக்கன் தூதுவன் கேளிக்கை யாளன்
அனைவர் ’ரோல்’களில் ஆடிடும் பாடிடும்!

கைத்தொலை பேசியில் வன்பொருள் மென்பொருள்
இணைபொரு ளாக உறையும் கணினி
நின்ற விடத்தில் தொடர்பு கொண்டு
உறவினை தொழிலினை வம்பினை வளர்த்திட
ஏழை எளியோர் செல்வம் படைத்தோர்
யாவரும் முனைந்திட வழிவகை செய்திடும்.

உட்பகை வெளிப்பகை வானிலை பொருளியல்
விதிமுறை செயல்வகை என்றிவ் வாறு
அனைத்தும் அறிந்திட அரசுக் குதவி
அரசுகள் அமைக்கும், அரசுகள் கவிழ்க்கும்!

இறைவ னுக்குக் கரங்கள் பலவாம்
கணினி களுக்கும் கரங்கள் பலவே!

விரல்கள் சொடுக்கிட மின்னெலி ஒருகரம்
விரல்கள் தட்டிட விசைமணை ஒருகரம்
கண்கள் பார்த்திட ஒளிர்ந்திடும் திரைமுகம்
பிரதிகள் அச்சிட அச்சுப் பொறிக்கரம்
அச்சின் தாள்களை அலகிட்டு மின்பதியும்.

இணைய தளங்களை எட்டிட ஒருகரம்
மோடம் டெலிஃபோன் இணைப்புகள் தாங்கி
’யாதும் ஊரே யாவரும் கேளிர்’
என்ற முதுமொழி நனவில் காட்டிடும்.

இத்தனை செயல்களால் வாழ்வில் வளம்தரும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்?

தட்டெழுதித் தட்டெழுதிக்
கையெழுத்தை மறக்கச் செய்யும்
மின்னெலியில் விரல்வலிக்கச் சொடுக்கச் செய்யும்

பொழுதுகள் மறந்து அறநெறிகள் துறந்து
உடல்நலம் பேணுவது அசட்டை செய்து

பெரியவர் மனங்களில் வறியவர் ஆகவும்
சிறுவர் சிறுமியர் மடிமையர் ஆகவும்
இளையோர் நெறிகளில் இளைத்தோர் ஆகவும்

தீயோர் செயல்கள் கலியில் பெருகிட
மூவா மருந்தாய் விளங்கிப் பல்கிடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்?

கரணம் என்பது உபகரணம் ஆகி
மனிதன் அவற்றை ஆளும் வரையில்
காரணம் ஆகா மனிதன் அழிவுக்கு.

பொறிகளின் பொறிகள் மனிதன் மனதில்
அல்லதைச் சமைத்து நல்லதை அழித்தால்
பொறிகளின் நெருப்பு ஊழித் தீயாகி
உலகினை அழிக்க உபாயம் ஆகிவிடும்!

*****



mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon Sep 16, 2013 11:55 am

கன்னங் கருவுரு ஆனை வழிபடில்
கன்னம் கருவுரு வாகும். ...
பகடு முகந்தனைப் பற்ற வருமே
பகடும் உகந்த தனைத்து(ம்).

இந்த வரிகள் தான் புரியவில்லை


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Mon Sep 16, 2013 12:10 pm

வணக்கம். இந்தக் குறளில் இன்னும் கொஞ்சம் விவரம் சேர்க்கப் பொருள் தெளிவாகும்.

கன்னங் கருவுரு ஆனை வழிபடில்
கன்னம் கருவுரு வாகும். ... 4
[கன்னம் = பெருமை; கரு=பொன்]

முதலடி கரிமுகன் கணபதியை வழிபடுவது பற்றி என்பது தெளிவு.
இரன்டாவது வரியின் பொருள்:
(கணபதியை வழிபட்டால் நமக்குப்) பெருமை பொன்னாய்த் துலங்கி வரும்.
அல்லது கரு உருவாவது போல விரைவில் வளர்ந்து பெருகும்.

பகடு முகந்தனைப் பற்ற வருமே
பகடும் உகந்தது அனைத்து(ம்). ... 8
[பகடு = ஆண் யானை; பெருமை, வலிமை]

முதலடியில் பகடு என்பது ஆண் யானை, இங்கு கணபதியைக் குறிக்கும்.
இரண்டாவது அடியில் பகடு எனும் சொல் பெருமை, வலிமை என்னும் பெருளாக,
இத்தகைய பகடும், மற்றும் நாம் உகந்தது மகிழ்வுபெற விரும்புவது
அனைத்தும் வருமே (கணபதியை வழிபட்டால்).

இப்போது விளங்கும் என்று நினைக்கிறேன். இவ்வாறு எழுதும் குறட்பாக்களில் முதலடியில் வரும் முதலிரண்டு சீர்கள்
அடுத்த அடியில் அதேவாக ஆனால் வேறு பொருளுடன் வருவது காணலாம்.

அன்புடன்,
ரமணி

mbalasaravanan wrote:கன்னங் கருவுரு ஆனை வழிபடில்
கன்னம் கருவுரு வாகும். ...
பகடு முகந்தனைப் பற்ற வருமே
பகடும் உகந்த தனைத்து(ம்).

இந்த வரிகள் தான் புரியவில்லை


mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon Sep 16, 2013 4:59 pm

ரமணி wrote:வணக்கம். இந்தக் குறளில் இன்னும் கொஞ்சம் விவரம் சேர்க்கப் பொருள் தெளிவாகும்.

கன்னங் கருவுரு ஆனை வழிபடில்
கன்னம் கருவுரு வாகும். ... 4
[கன்னம் = பெருமை; கரு=பொன்]

முதலடி கரிமுகன் கணபதியை வழிபடுவது பற்றி என்பது தெளிவு.
இரன்டாவது வரியின் பொருள்:
(கணபதியை வழிபட்டால் நமக்குப்) பெருமை பொன்னாய்த் துலங்கி வரும்.
அல்லது கரு உருவாவது போல விரைவில் வளர்ந்து பெருகும்.

பகடு முகந்தனைப் பற்ற வருமே
பகடும் உகந்தது அனைத்து(ம்). ... 8
[பகடு = ஆண் யானை; பெருமை, வலிமை]

முதலடியில் பகடு என்பது ஆண் யானை, இங்கு கணபதியைக் குறிக்கும்.
இரண்டாவது அடியில் பகடு எனும் சொல் பெருமை, வலிமை என்னும் பெருளாக,
இத்தகைய பகடும், மற்றும் நாம் உகந்தது மகிழ்வுபெற விரும்புவது
அனைத்தும் வருமே (கணபதியை வழிபட்டால்).

இப்போது விளங்கும் என்று நினைக்கிறேன். இவ்வாறு எழுதும் குறட்பாக்களில் முதலடியில் வரும் முதலிரண்டு சீர்கள்
அடுத்த அடியில் அதேவாக ஆனால் வேறு பொருளுடன் வருவது காணலாம்.

அன்புடன்,
ரமணி

mbalasaravanan wrote:கன்னங் கருவுரு ஆனை வழிபடில்
கன்னம் கருவுரு வாகும். ...
பகடு முகந்தனைப் பற்ற வருமே
பகடும் உகந்த தனைத்து(ம்).

இந்த வரிகள் தான் புரியவில்லை
மிக்க நன்றி கவிஞர் அவர்களே

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Tue Sep 17, 2013 9:10 am

64. ராமதர்மம்
(அறுசீர் விருத்தம்: காய் விளம் காய் காய் விளம் காய்)

நாரணனின் மந்திர ரகரமுடன் .. நாயகனின் மந்திர மகரமதே*
சேரவரும் ராமநின் திருநாமம் .. வேருடனே வினையெலாம் அழித்திடுமே
நாரணனாம் ராமநின் வேரென்றால் .. ஆஞ்சனேயன் அத்தனின் அம்சமாவான்
காரிருளை நீக்கிடும் ராமநாமம் .. தாரகமந் திரமெனக் கொள்வோமே.

ஒருவனுக்கு ஒருத்தியாம் தருமத்தை .. உறுதியுடன் வாழ்ந்துநீ காட்டினாயே
குருமுதலாம் தந்தைசொல் மந்திரமாய் .. உறும்துயர்நீ தெரிந்துமே கொண்டாயே
பரிவுடனே தமையனாய் வழிகாட்டி .. தருமங்கள் உலகினில் நிறுவினாயே
சரணமென ஒருவனுன் தாள்பற்ற .. கனிவுடனே அவனைநீ காப்பாயே.

ராமநாமம் மனம்வர எச்செயலும் .. ரம்மியமாய் முடிவதைக் காண்போமே
ராமஜயம் எழுதுதல் கூடினாலே .. பாவமெலாம் குறைந்திடக் காண்போமே
ராமகதை படிப்பதும் கேட்பதுமே .. ஆன்மீக மலர்ச்சியைத் தந்திடுமே
ராமராம மந்திரம் சொன்னாலே .. மராமரமாய்ப் பிறவிகள் சாய்ந்திடுமே.

--ரமணி, 15/09/2013, கலி.30/05/5114

முதலடி விளக்கம்:
’ஓம் நமோ நாராயணா’ என்னும் விஷ்ணு மந்திரத்தில் இருக்கும் ரா-வெனும் எழுத்தும்
’ஓம் நமச்சிவாய’ என்னும் சிவ மந்திரத்தில் இருக்கும் ம-வெனும் எழுத்தும்
சேர்ந்து சிவாவிஷ்ணு அபேதத்தை உணர்த்தவே ராம நாமாயிற்று என்பது ஆன்றோர் வாக்கு.

*****


avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue Sep 17, 2013 9:47 am

ராம நாமம் பற்றிய விளக்கமும் இராமனின் பெருமை சொல்லும் அறுசீர் விருத்தம் அருமை.

விரும்பினேன் புன்னகைபுன்னகை

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Tue Sep 17, 2013 10:46 am

விளக்கம் அருமை நன்றி

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Tue Oct 01, 2013 9:19 am

முதியோர் தினம்

சொலலெளி தாகிச் செயலரி தாகிட
செல்லும் அனுதின வீழலில் - வல்லவன்
இல்லையென் றாகிட இல்லத்தில் நல்லனெனச்
சொல்லிடப் போமோ பொழுது?

--ரமணி, 01/10/2013

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Fri Oct 11, 2013 5:48 pm

65. உச்சிப் பிள்ளையார்
(கட்டளைக் கலிவிருத்தம்)

(தனனன தன்னன தனனன தான)

குணபர பல்லவன் உசுப்பிய கோட்டை
கணபதி உள்ளுறை மலையினில் தேட்டை
மணமிகு சந்தனம் மலர்களின் கூட்டை
வணங்கியே தந்திடக் களிவரும் பாட்டை.

திருவரங் கன்சிலை இறையுடன் தம்பி
திருநதிப் பக்கலில் சிறுவனாய் நம்பி
திருவுரு தந்திட இபமுக வம்பி
திருவுளங் கொள்ளவே இறங்கிய நம்பி.

(தனனன தானன தனனன தான)

மலைமிசை வீடணன் கரவிரற் குட்டும்
தலைமிசைத் தாங்கிய வடுவெனக் கிட்டும்
அலைமனம் ஓய்ந்திட அருளுவார் எட்டும்
தலைவனின் தாள்களில் தலைபட ஒட்டும்.

(தனனன தனனன தனனன தான)

அடிமலை யரிமகன் தரிசன வூட்டம்
இடிபடி யிவரவே திருவருள் கூட்டும்
இடையினில் செவந்தியின்* திருமுகம் காட்டும்
முடிமலை தரிசனம் உயர்வினை யூட்டும்.

(தன்னன தனனன தன்னனா தானா)

உச்சியில் தளர்வுலர் விக்குமே காற்றே
குச்சிபோல் தெரியும்தி ருச்சிவாழ் வூற்றே
அச்சமும் தருவது கல்வரை யீற்றே
உச்சிமேல் கரம்தொழ முற்படாக் கூற்றே.

--ரமணி, 23/09/2013, கலி.07/06/5114

குறிப்பு:
*செவந்தியின் திருமுகம்:
திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் கோவிலில் உறையும் பிள்ளையார்
செவ்வந்தி விநாயகர் என்னும் திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.

மேல்விவரம்:
http://temple.dinamalar.com/New.php?id=313
http://temple.dinamalar.com/New.php?id=24

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Tue Oct 15, 2013 8:28 am

கலைமகள் காப்பு
(எண்சீர் விருத்தம்: கூவிளம் கூவிளம் கூவிளம் கூவிளங்காய் - அரையடி)

வித்தகர் சித்தமுள் நித்தமும் நர்த்தகியே!
. விற்பனர் கற்பனைப் பெற்றியி னற்புதமே!
சத்தமும் சிந்தையு மர்த்தமும் தந்தருள்வாய்!
. பற்றுளம் வந்துறை பங்கய மென்னடையே!
முத்தமிழ் கற்றவர் முற்படும் சிற்றிடையாள்
. பொற்பதக் கற்பகம் கற்பவ ருள்வருமே!
நித்தமும் உன்னருள் வேண்டுவன் என்னுளமும்
. நின்றுநீ தங்கியே கற்றிடும் சொல்லுரைப்பாய்!

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Mon Oct 21, 2013 6:55 am

73. கணத்து நாயகன் துதி
(வண்ண வஞ்சித் துறை: தனத்த தானன)

களிற்று வாயினன்
களத்து நாயகன்
வளத்து வாரமும் ... [வாரம்=திரள்]
அளிப்ப னாயிரம். ... 1

குருத்த கோசிகன் ... [குருத்தம்=வெள்ளை; கோசிகம்=பட்டாடை]
பெருத்த மேனியும்
சிரத்து வேழமும்
உருக்கு மேமனம். ... 2

அருக்கு மாலைகள்
விருப்பன் மேனியில்
தருக்க ளைவகை
விருப்ப மீபவன். ... 3

மனத்து ளேறிடும்
சினத்த லேகவும்
கனப்பு மாளவும்
வனப்பு நாடுவம். ... 4

இகத்தி லேமமும்
அகத்தில் ஞானமும்
உகப்பி லேறிட
விகற்ப மேகிடும். ... 5

--ரமணி, 18/10/2013, கலி.01/07/5114

[பசுபதி புத்தகக் காட்டு: தனத்த தானன
செனித்த சீவருள்
மனத்தில் மாவொளி
மினுக்கும் வேலவ
எனக்கு மீயொளி.
--பாம்பன் சுவாமிகள்]

*****


Sponsored content

PostSponsored content



Page 9 of 36 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 22 ... 36  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக