புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ரமணியின் கவிதைகள் - Page 35 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 35 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 35 Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
ரமணியின் கவிதைகள் - Page 35 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 35 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 35 Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
ரமணியின் கவிதைகள் - Page 35 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 35 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 35 Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
ரமணியின் கவிதைகள் - Page 35 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 35 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 35 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
ரமணியின் கவிதைகள் - Page 35 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 35 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 35 Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
ரமணியின் கவிதைகள் - Page 35 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 35 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 35 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
ரமணியின் கவிதைகள் - Page 35 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 35 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 35 Poll_c10 
2 Posts - 1%
prajai
ரமணியின் கவிதைகள் - Page 35 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 35 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 35 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
ரமணியின் கவிதைகள் - Page 35 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 35 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 35 Poll_c10 
2 Posts - 1%
சிவா
ரமணியின் கவிதைகள் - Page 35 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 35 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 35 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரமணியின் கவிதைகள் - Page 35 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 35 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 35 Poll_c10 
435 Posts - 47%
heezulia
ரமணியின் கவிதைகள் - Page 35 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 35 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 35 Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
ரமணியின் கவிதைகள் - Page 35 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 35 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 35 Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
ரமணியின் கவிதைகள் - Page 35 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 35 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 35 Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
ரமணியின் கவிதைகள் - Page 35 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 35 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 35 Poll_c10 
30 Posts - 3%
prajai
ரமணியின் கவிதைகள் - Page 35 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 35 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 35 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
ரமணியின் கவிதைகள் - Page 35 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 35 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 35 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
ரமணியின் கவிதைகள் - Page 35 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 35 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 35 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
ரமணியின் கவிதைகள் - Page 35 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 35 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 35 Poll_c10 
4 Posts - 0%
ayyamperumal
ரமணியின் கவிதைகள் - Page 35 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 35 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 35 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரமணியின் கவிதைகள்


   
   

Page 35 of 36 Previous  1 ... 19 ... 34, 35, 36  Next

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Wed Oct 31, 2012 1:22 pm

First topic message reminder :

கணினி போற்றுதும்!?
ரமணி, 18/08/2012

கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!
பணியெது வாகிலும் பாங்குறச் செய்திடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!

பலவகை வடிவினில் உலகில் உறைந்திடும்
பலவகை மனிதரும் பலவாறு உகந்திடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!

இன்றைய உலகின் எலிகள் போட்டியில்
பகலும் இரவும் மனிதர் வாழ்வினை
நிலைபெறச் செய்திடும் கணினி போற்றுதும்!

குழந்தை மனம்முதல் கிழவர் மனம்வரை
கலைகள் போற்றித் திறன்கள் வளர்த்து
கனவுகள் தந்திடும் கணிணி போற்றுதும்!

குடும்பம் முழுவதும் கணினி வகைகள்!
மேசைக் கணினியும் மடிமேல் கணினியும்
அலுவ லகத்திலும் வீட்டிலும் அமர்ந்து
ஆசான் தோழன் மருத்துவன் செயலர்
கணக்கன் தூதுவன் கேளிக்கை யாளன்
அனைவர் ’ரோல்’களில் ஆடிடும் பாடிடும்!

கைத்தொலை பேசியில் வன்பொருள் மென்பொருள்
இணைபொரு ளாக உறையும் கணினி
நின்ற விடத்தில் தொடர்பு கொண்டு
உறவினை தொழிலினை வம்பினை வளர்த்திட
ஏழை எளியோர் செல்வம் படைத்தோர்
யாவரும் முனைந்திட வழிவகை செய்திடும்.

உட்பகை வெளிப்பகை வானிலை பொருளியல்
விதிமுறை செயல்வகை என்றிவ் வாறு
அனைத்தும் அறிந்திட அரசுக் குதவி
அரசுகள் அமைக்கும், அரசுகள் கவிழ்க்கும்!

இறைவ னுக்குக் கரங்கள் பலவாம்
கணினி களுக்கும் கரங்கள் பலவே!

விரல்கள் சொடுக்கிட மின்னெலி ஒருகரம்
விரல்கள் தட்டிட விசைமணை ஒருகரம்
கண்கள் பார்த்திட ஒளிர்ந்திடும் திரைமுகம்
பிரதிகள் அச்சிட அச்சுப் பொறிக்கரம்
அச்சின் தாள்களை அலகிட்டு மின்பதியும்.

இணைய தளங்களை எட்டிட ஒருகரம்
மோடம் டெலிஃபோன் இணைப்புகள் தாங்கி
’யாதும் ஊரே யாவரும் கேளிர்’
என்ற முதுமொழி நனவில் காட்டிடும்.

இத்தனை செயல்களால் வாழ்வில் வளம்தரும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்?

தட்டெழுதித் தட்டெழுதிக்
கையெழுத்தை மறக்கச் செய்யும்
மின்னெலியில் விரல்வலிக்கச் சொடுக்கச் செய்யும்

பொழுதுகள் மறந்து அறநெறிகள் துறந்து
உடல்நலம் பேணுவது அசட்டை செய்து

பெரியவர் மனங்களில் வறியவர் ஆகவும்
சிறுவர் சிறுமியர் மடிமையர் ஆகவும்
இளையோர் நெறிகளில் இளைத்தோர் ஆகவும்

தீயோர் செயல்கள் கலியில் பெருகிட
மூவா மருந்தாய் விளங்கிப் பல்கிடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்?

கரணம் என்பது உபகரணம் ஆகி
மனிதன் அவற்றை ஆளும் வரையில்
காரணம் ஆகா மனிதன் அழிவுக்கு.

பொறிகளின் பொறிகள் மனிதன் மனதில்
அல்லதைச் சமைத்து நல்லதை அழித்தால்
பொறிகளின் நெருப்பு ஊழித் தீயாகி
உலகினை அழிக்க உபாயம் ஆகிவிடும்!

*****



ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sat Feb 06, 2016 7:38 pm

பிரதோஷத் துதி: வெள்ளம் தலைக்கேறும் வீழல் தீர்ப்பீர்!
(நேரிசை வெண்பா அந்தாதிப் பஞ்சக மாலை)

வெள்ளம் தலையேற்றி வெள்விடை யேறியென்
உள்ளத் தமர்வீர் உமைகோனே - வெள்ளம்
தலைக்கேறி வீட்டிய தாக்கத்தில் என்னுள்
மலைபோல் அழுத்தும் மயல். ... 1

மயலின் முயக்கில் மனமெங்கும் முட்கள்
தயக்கமே என்னைத் தழுவும் - துயரில்
செயலற்றே கற்பனை செவ்விதம் இல்லா(து)
அயலாகிப் போமென் அகம். ... 2

அகமிதே ஆவுடை யாராய்க் கருதி
உகந்தவோர் லிங்கமாய் உள்ளம் - அகழ்வீர்
பொழிகங்கை நீரால் புனிதம் அரும்ப
விழல்தீர்த் தருள்வீர் விழிப்பு. ... 3

விழித்தே உமைநான் விதவிதமாய்ப் போற்ற
வழித்துணை யாக வருவீர் - கழிபொழுதில்
என்சொல்லில் என்செயலில் எந்தை உமையெண்ணும்
தன்மை தருவீரே சம்பு. ... 4

சம்புவின் சம்பந்தம் சாதனை யில்சேர்க்க
சம்புவை அம்பாள் சகிதமாய் - நம்பிநான்
காரிருள் நீங்கிக் களிக்கும்நாள் என்னுளத்து
ளாரும் பரசிவவெள் ளம். ... 5

--ரமணி, 06/02/2016, கலி.23/10/5116
(சனி மஹா பிரதோஷ நன்னாள்)

*****


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Feb 06, 2016 8:47 pm


சனி பிரதோஷ பா
இனி வருமோ
இது போலொருப்பா
ரமணியமப்பா
ரமணியின் பா ,
சரியாப்பா அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Mon Feb 15, 2016 7:22 pm

சரக்கொன்றை...
(மடக்கணி அமைந்த அளவியல் நேரிசை வெண்பா)

சரக்கொன்றைக் கைப்பற்றிச் சட்டென் றமர்ந்தார்
சரக்கொன்றைப் பூமரம் கீழே - ஒருவர்
சரக்குந்து ஓட்டுனர் மற்றவர் செல்வர்
சரக்குந்து போதை சமம்.

--ரம்ணி, 13/12/2015

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Tue Mar 15, 2016 9:01 pm

மீட்டிடப் போதுமான: மடக்கணி
(நேரிசை வெண்பா)

மீட்டிட வந்தனள் வீணையை! என்னைநீ
மீட்டிட வந்தாயோ வேலவா! - மீட்டிடப்
போதுமான காசில்லாப் பொன்னணி போலவென்
போதுமான தேமூழ்கிப் போய்!

விளக்கம்
மீட்டிட என்ற சொல்லின் பொருள் முறையே:
இசைத்திட, காப்பாற்ற, அடகு வைத்ததைத் திருப்ப.

போதுமான என்ற சொல்லின் பொருள் முறையே:
தேவையான அளவு; பொழுதும் ஆனதே!

குறிப்பு:
போதுமான என்ற சீர் விளாங்காய்ச் சீராகி ஓசை குறைப்பினும்,
மடக்குப் பொருளாக வருவதால் அதை அங்ஙனம் அமைத்தேன்.

--ரமணி, 29/01/2016

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sat Mar 26, 2016 7:55 pm

மடக்கணி வெண்பா: ஆமையா?!
(இன்னிசை வெண்பா)

ஆமையா? என்றாரென் ஆசான் கடற்கரையில்
ஆமையா! என்றேன் அவர்சட்டைப் பைநோக்கி
ஆ?மையா? என்றார் அவரதனைக் கைப்பற்றி
ஆமையா உச்சியும் மை!

ஆமையாவின் பொருள் முறையே:
ஆமை-யா, ஆம்-ஐயா, ஆ-மையா, ஆம்-ஐயா

--ரமணி, 03/02/2016

*****


avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Sat Mar 26, 2016 7:59 pm

மிக அருமை ஐயா




அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Thu Apr 28, 2016 7:32 pm

மடக்கணி வெண்பா: முடங்கல்
(இன்னிசை வெண்பா)

முடங்கல் பிணியில் முனகிடும் மன்னன்
முடங்கல் குழலில் முதியவர் வாழ்த்து
முடங்கல் சுருள்தனைத் தூதுவன் தந்தான்
முடங்கல் கொளும்மன் முகம்.

(முடங்கல் பொருள் முறையே:
முடக்குவாதம், மூங்கில், சுருளோலைக் கடிதம், மடங்குகை;
மன் = அரசன்)

--ரமணி, 04/02/2016

*****
சொற்பின்வரு நிலையணி வெண்பா: அலங்கல்
(பஃறொடை வெண்பா)

அலங்கல் அகம்மோத அல்லலுற் றேனுன்
அலங்கல் தலைமேல் அகற்றியது வாழ்வில்
அலங்கல்; கழுத்தினில் ஆடும் அலங்கல்
அகத்தினில் பக்தி அலங்கல் எழுப்பும்
இகத்தில் அலங்கல் அமைதியை ஈசா
உகந்தேன் அருள்வாய் உவந்து.

[அலங்கல் பொருள் முறையே:
அலம்+கல் (மடக்கு) = துன்பமாகிய கல்; மனக்கலக்கம்;
தலையில் அணியும் மாலை; கழுத்தில் அணியும் மாலை;
துளிர்; ஒழுங்குமுறை, ஒளி]

--ரமணி, 04/02/2016

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Wed May 18, 2016 10:13 am

அங்கணனின் மங்கை யெங்கே?
(முற்று முடுகு நேரிசை வெண்பா: தந்ததன)

இங்குமுள வங்குமுள வெங்குமுள வங்கணனி
னங்கமதி லெங்குமுள வங்கதம டங்கிவர
மங்கையிட மிங்குசிவ மங்கலமி லங்குமவ
ளிங்குமன வங்குவினி லெங்கு?

பதம் பிரித்து:
இங்குமுள அங்குமுள எங்குமுள அங்கணனின்
அங்கமதில் எங்குமுள அங்கதம் அடங்கிவர
மங்கையிடம் இங்குசிவ மங்கலம் இலங்குமவள்
இங்குமன வங்குவினில் எங்கு?

[குறிப்பு: வெண்பாவின் முடுகியலில் ஙகர ஒற்று மட்டும் பயில்வது காண்க.]

--ரமணி, 05/02/2016

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Thu Jun 02, 2016 9:25 am

பிரதோஷத் துதி: தாண்டவன் தாண்டகம் தங்கவே...
(இன்னிசை வெண்பா)

பாற்கடல் தோன்றிப் பரவிய நஞ்சினை
ஏற்றருள் செய்தார் இமையவர் மானிடர்
போற்றியே வாழ்ந்திடப் பொன்னம் பலத்தவர்!
கூற்றினை வென்றிடக் கூடு. ... 1

உருவும் நிழலும் ஒருமித் ததுபோல்
இரவும் பகலும் இணையும் பொழுது
விரிசடை வேதன் விடைமேல் நடனம்!
தெரிசனம் உள்வரத் தேடு. ... 2

கோவிற் கருவறை கொள்ளும் பொழிவினில்
மேவும் திரவியம் மேனி வழிந்திட
நாவைந் தெழுத்தினில் நர்த்தன மாடிடும்!
பாவம் தொலையவே பாடு. ... 3

வேதமும் பண்ணொடு மேற்படு மோசையில்
நாத சுரத்தின் நலம்செவி யாடவே
அம்மையும் அப்பனும் ஆலயச் சுற்றினில்!
இம்மையில் வேறென வீடு? ... 4

தாண்டவன் தாண்முளை தாண்டினைத் தாண்டிடத்
தாண்டவன் தாண்முதல் தாண்டகம் தங்கவே
தாண்டா வுமையவள் தன்னிடம் கொண்டாடும்
தாண்டவன் தண்ணெறி தாங்கு. ... 5

பொருள்
தாண்டவனாம் நடராசனின் மக்களாகிய (தாண்முளை) நாம்
. அகங்கரிப்பைத் (தாண்டினைத்) தாண்டிச் செல்லத்
தாண்டவனின் பாதமூலமே (தாண்முதல்) நம் செருக்குடைய
. அகத்தில் (தாண்டகம்) தங்கவே
தலைப்பின்னலில் மலர்மாலை (தாண்டா) அணிந்த உமையாளைத்
. தன் இடப்பக்கம் கொண்டு ஆடும்
தாண்டவனின் குளிர்நெறியைத் தாங்கு.

--ரமணி, 02/06/2016, கலி.20/02/5117

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sat Jul 02, 2016 11:10 am

#ரமணி_பிரதோஷம்
பிரதோஷத் துதி: தாண்டவனே ஆண்டருளே!
(எழுசீர் விருத்தம்: கூவிளங்காய் மா காய் மா காய் மா காய்)

ஆலெழுந்த வாரி அச்சமுற்ற தேவர்
. அன்றுன்னை நாட அருள்செய்யச்
சேலெழுந்த கண்ணாள் நஞ்சிறங்கும் கண்டம்
. திகிலெழுந்து பற்றக் கொண்டாயே
காலெழுந்து வீட்டும் கருமேக வெள்ளம்
. காலத்தை நிறுத்தும் நாள்வரையில்
காலெழுந்த நடனம் நிற்காதே ஆடும்
. கண்ணுதலே நல்லோர் காத்தருள்வாய். ... 1

ஆவிழிந்த ஐந்தும் ஆலயத்தில் ஆடி
. அடியார்க்கு நன்மை அருள்வோனே
நாவிழிந்த பாட்டாய் நாலுவகைப் பண்ணின்
. நாதமுனைச் சூழும் காட்சியுடன்
காவிழிந்த மலர்கள் காட்டுமலங் காரம்
. கண்ணிழியச் சுற்றில் வரும்போது
நோவிழிந்த வாழ்வின் நுண்மையைநா டாதே
. நுகர்வோரைத் திருத்தும் அருளாளா. ... 2

[ஆவிழிந்த ஐந்து = பஞ்சகவ்யம்;
நாலுவகைப் பண் = வேத, தேவார, நாதஸ்வர, மேளப் பாட்டு;
இவற்றில் மேளம் விரல்களால் எழுந்தாலும் தாளம் முதலில் மனத்தின்
நாவிலேயே எழுகிறது;
காவிழிந்த = சோலையில் இருந்து இறங்கிய]

தேனறியாக் காட்டு மலரானேன் ஆன்மத்
. தினவறியா வெற்று மனம்கொண்டேன்
வானறியாப் பயிராய் வலுவிழ்ந்தே இன்று
. வாடுகிறேன் ஒன்றும் அறிந்திலனாய்
நானறிந்த உலகில் துன்பமிலா இன்பம்
. நாடுகிறேன் இன்னும் தேடுகிறேன்
தானெரிந்த காட்டில் கூளியுடன் ஆடும்
. தாண்டவனே என்னை ஆண்டருளே. ... 3

[தானெரிந்த = தான் என்னும் உடல் நிமித்த அகந்தை]

--ரமணி, 02/07/2016, கலி.18/03/5117

*****


Sponsored content

PostSponsored content



Page 35 of 36 Previous  1 ... 19 ... 34, 35, 36  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக