புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரமணியின் கவிதைகள் - Page 4 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 4 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 4 Poll_c10 
96 Posts - 49%
heezulia
ரமணியின் கவிதைகள் - Page 4 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 4 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 4 Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
ரமணியின் கவிதைகள் - Page 4 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 4 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 4 Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
ரமணியின் கவிதைகள் - Page 4 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 4 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 4 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
ரமணியின் கவிதைகள் - Page 4 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 4 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 4 Poll_c10 
7 Posts - 4%
prajai
ரமணியின் கவிதைகள் - Page 4 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 4 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 4 Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
ரமணியின் கவிதைகள் - Page 4 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 4 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 4 Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
ரமணியின் கவிதைகள் - Page 4 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 4 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Barushree
ரமணியின் கவிதைகள் - Page 4 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 4 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 4 Poll_c10 
2 Posts - 1%
cordiac
ரமணியின் கவிதைகள் - Page 4 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 4 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரமணியின் கவிதைகள் - Page 4 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 4 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 4 Poll_c10 
223 Posts - 52%
heezulia
ரமணியின் கவிதைகள் - Page 4 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 4 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 4 Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
ரமணியின் கவிதைகள் - Page 4 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 4 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 4 Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
ரமணியின் கவிதைகள் - Page 4 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 4 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 4 Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
ரமணியின் கவிதைகள் - Page 4 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 4 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 4 Poll_c10 
16 Posts - 4%
prajai
ரமணியின் கவிதைகள் - Page 4 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 4 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 4 Poll_c10 
5 Posts - 1%
Barushree
ரமணியின் கவிதைகள் - Page 4 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 4 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 4 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
ரமணியின் கவிதைகள் - Page 4 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 4 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 4 Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
ரமணியின் கவிதைகள் - Page 4 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 4 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 4 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
ரமணியின் கவிதைகள் - Page 4 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 4 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 4 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரமணியின் கவிதைகள்


   
   

Page 4 of 36 Previous  1, 2, 3, 4, 5 ... 20 ... 36  Next

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Wed Oct 31, 2012 1:22 pm

First topic message reminder :

கணினி போற்றுதும்!?
ரமணி, 18/08/2012

கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!
பணியெது வாகிலும் பாங்குறச் செய்திடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!

பலவகை வடிவினில் உலகில் உறைந்திடும்
பலவகை மனிதரும் பலவாறு உகந்திடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!

இன்றைய உலகின் எலிகள் போட்டியில்
பகலும் இரவும் மனிதர் வாழ்வினை
நிலைபெறச் செய்திடும் கணினி போற்றுதும்!

குழந்தை மனம்முதல் கிழவர் மனம்வரை
கலைகள் போற்றித் திறன்கள் வளர்த்து
கனவுகள் தந்திடும் கணிணி போற்றுதும்!

குடும்பம் முழுவதும் கணினி வகைகள்!
மேசைக் கணினியும் மடிமேல் கணினியும்
அலுவ லகத்திலும் வீட்டிலும் அமர்ந்து
ஆசான் தோழன் மருத்துவன் செயலர்
கணக்கன் தூதுவன் கேளிக்கை யாளன்
அனைவர் ’ரோல்’களில் ஆடிடும் பாடிடும்!

கைத்தொலை பேசியில் வன்பொருள் மென்பொருள்
இணைபொரு ளாக உறையும் கணினி
நின்ற விடத்தில் தொடர்பு கொண்டு
உறவினை தொழிலினை வம்பினை வளர்த்திட
ஏழை எளியோர் செல்வம் படைத்தோர்
யாவரும் முனைந்திட வழிவகை செய்திடும்.

உட்பகை வெளிப்பகை வானிலை பொருளியல்
விதிமுறை செயல்வகை என்றிவ் வாறு
அனைத்தும் அறிந்திட அரசுக் குதவி
அரசுகள் அமைக்கும், அரசுகள் கவிழ்க்கும்!

இறைவ னுக்குக் கரங்கள் பலவாம்
கணினி களுக்கும் கரங்கள் பலவே!

விரல்கள் சொடுக்கிட மின்னெலி ஒருகரம்
விரல்கள் தட்டிட விசைமணை ஒருகரம்
கண்கள் பார்த்திட ஒளிர்ந்திடும் திரைமுகம்
பிரதிகள் அச்சிட அச்சுப் பொறிக்கரம்
அச்சின் தாள்களை அலகிட்டு மின்பதியும்.

இணைய தளங்களை எட்டிட ஒருகரம்
மோடம் டெலிஃபோன் இணைப்புகள் தாங்கி
’யாதும் ஊரே யாவரும் கேளிர்’
என்ற முதுமொழி நனவில் காட்டிடும்.

இத்தனை செயல்களால் வாழ்வில் வளம்தரும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்?

தட்டெழுதித் தட்டெழுதிக்
கையெழுத்தை மறக்கச் செய்யும்
மின்னெலியில் விரல்வலிக்கச் சொடுக்கச் செய்யும்

பொழுதுகள் மறந்து அறநெறிகள் துறந்து
உடல்நலம் பேணுவது அசட்டை செய்து

பெரியவர் மனங்களில் வறியவர் ஆகவும்
சிறுவர் சிறுமியர் மடிமையர் ஆகவும்
இளையோர் நெறிகளில் இளைத்தோர் ஆகவும்

தீயோர் செயல்கள் கலியில் பெருகிட
மூவா மருந்தாய் விளங்கிப் பல்கிடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்?

கரணம் என்பது உபகரணம் ஆகி
மனிதன் அவற்றை ஆளும் வரையில்
காரணம் ஆகா மனிதன் அழிவுக்கு.

பொறிகளின் பொறிகள் மனிதன் மனதில்
அல்லதைச் சமைத்து நல்லதை அழித்தால்
பொறிகளின் நெருப்பு ஊழித் தீயாகி
உலகினை அழிக்க உபாயம் ஆகிவிடும்!

*****



ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Thu Jan 10, 2013 6:39 am

துறவியின் தர்மசங்கடம்
(குறளடி வஞ்சிப்பா)

பலபலவென விடிந்தபோது
சலசலக்கும் நதியினிலே
கலகலத்திட நீராடி
சளசளவெனக் குருவிகத்தப்
பளபளத்திடும் நீறணிந்து
மளமளவென்று ஜபம்செய்யக்
கரையேறினால்
தலையில் காக்கை எச்சம் இட்டிட
நிலைதடு மாறி நின்றார் துறவி!

நேற்றுவரையில் இத்துறவி
ஆற்றோரம் இருந்தநிலையின்
மாற்றத்தினைச் சாற்றினாலே
பாடல்
இப்படி யோர்நல்ல முடிவினைப் பெற்றுச்
செப்படி வித்தையாய் ஜொலிக்கக் காண்பீர்.

ஆதவத் துறவி!
(குறளடி வஞ்சிப்பா)

பலபலவென விடிந்தபோது
சலசலக்கும் நதியினிலே
கலகலத்திட நீராடி
சளசளவெனக் குருவிகத்தப்
பளபளத்திடும் நீறணிந்து
மளமளவென்று ஜபம்செய்யக்
கரையேறினால்
ஆதவன் ஆற்றின் அக்கரை யுதிக்க
மாதவத் துறவி ஆதவ னாவார்!

ஒரு பாட்டில் இரு முடிவு:

பலபலவென விடிந்தபோது
சலசலக்கும் நதியினிலே
கலகலத்திட நீராடி
சளசளவெனக் குருவிகத்தப்
பளபளத்திடும் நீறணிந்து
மளமளவென்று ஜபம்செய்யக்
கரையேறினால்
ஆதவன் ஆற்றின் அக்கரை யுதிக்க
மாதவத் துறவி ஆதவ னாவார்!
இன்றோ?
தலையில் காக்கை எச்சம் இட்டிட
நிலைதடு மாறி நின்றார் துறவி!

--ரமணி, 09/01/2013

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Fri Jan 11, 2013 1:47 pm

16. அனுமன் ஜெயந்தி
(வெண்பா)

விஞ்சிடும் ஞானமும் வீரமும் தாங்கிடும்
அஞ்சனை மைந்தன் அனுமனை எப்போதும்
தஞ்சம் அடைந்தால் தடைகள் விலகிட
அஞ்சுவது அஞ்சும் நமக்கு.

மார்கழி மாதத்தின் மூலவிண் மீன்குழுவில்
பார்புகழ் ராமதூதன் சீர்மிகத் தோன்றியது
கௌதமர்பெண் அஞ்சனை கேசரி மன்னனின்
மௌனத் தவத்தின் விளைவு.

விந்தைக் குழந்தையாய் விண்மணியை நாடிட
இந்திரன் ஆயுதமுன் தாடையினைத் தாக்கிவீழ்ந்து
எத்தனை ஆசிபெற்றாய் வித்தக மைந்தனே
பித்தன் உருவாய்ப் பிறந்து!

பிரம்மனின் ஆசி சிரஞ்சீவிப் பட்டம்
விரும்பும் உருவும் விரைந்திடும் ஆற்றலும்
ஆதவன் ஆசி அணுவுரு வெற்புரு
மாதொரு பாகன் அறிவு.

அரியொன்றும் ஈந்திலையோ ஆசியெனக் கேட்டால்
அரியேதான் ராமனாக ஆட்கொள்ள வந்தார்!
பிறதேவர் ஆசிதர ராமன் பலமாய்
உருவாகி நின்ற கவி!

ஹனுமன் பெயரிலேயே அர்த்தம் இரண்டு!
ஹனுவெனில் தாடையாம் மன்னே பெரிதாம்!
ஹனுவென்றால் கொல்வது மன்னென்றால் மானம்!
ஹனுமன் பெருமை இரண்டு!

எத்தனையோ சொல்லலாம் எவ்வளவோ பாடலாம்
வித்தகன் நித்தியன் வாயுவின் புத்திரன்
சத்திய மித்திரன் நாளைய நான்முகனாம்
அத்தனின் ஞான வித்து.

புத்தி பலமும் புகழும் துணிகரம்
சத்திய ஞானம் உடல்நலம் சொல்வன்மை
அத்தனையும் கைகூடும் அச்சமற்ற வாழ்க்கை
அனுமனை எண்ண வரும்.

--ரமணி, 11/01/2013

[விண்மணி=சூரியன்; அணுவுரு=அணிமா சித்தி; வெற்புரு=மலைபோல் உருவம், மஹிமா சித்தி;
மானம்=தற்பெருமை; நித்தியன்=என்றும் நிலைத்திருக்கும் கடவுள்; நாளைய நான்முகன்=அனுமனே அடுத்த பிரம்மா என்பர்.]

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sun Jan 13, 2013 7:51 pm

17. பிரிவினை மனிதர்கள்!
(அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)

நாற்றுகள் நின்ற நிலத்தைக் கூறிட்டார் நாகரிகம் விளைக்க!
ஆற்றினைக் கூறிட்டு ஆணைமீறி அணைகளில் தேக்கினார் -- நல்லவேளை
காற்றினைக் கூறிடக் கருதவில்லை கருதினும் கருவி யில்லை!
ஆற்றலின் மூலம் ஆதவன் ஒளியைக் கூறிட முடிந்திலை!

உடலைக் கூறிட்டார் உயரமும் வண்ணமும் வளர்ச்சியும் கொண்டு!
சுடலையும் கூறிட்டார் சுடவோ புதைக்கவோ இறந்து போனதை!
அடலைத் தலைப்பட்டார் நடலையர் வார்த்தைகள் தடித்த போது!
முடலை மைந்தர் விடவில்லை எதுவும் எல்லாமும் கூறுகளே!

[அடலை=போர்(க்களம்), துன்பம்; நடலை=வஞ்சனை, பொய்;
முடலை=உருண்டை (இங்கு globe--உலகம்]

மண்ணைத் தோண்டினார் எண்ணெய் விளைத்து இன்பமாய் வாழ!
விண்ணைத் தோண்டினார் விளைவுகள் அறிந்து வலிமை சேர்க்க!
திண்ணைப் பேச்சுகளில் தீமை விளைக்கத் தவறாது தலைப்படுவார்!
தன்னைத் தோண்டி மெய்ஞ்ஞானம் தழைக்கச் செய்வது வெகுசிலரே!

[திண்ணைப் பேச்சு=lobbying]

கலிகாலம் கலிகாலம் கொண்டதே கோலம் காண்பதே கோலாகலம்!
வலிமை விளைக்கும் வலிகளில் மெலியோர் நலிவுறுங் காலம்!
புலமைகள் பொழுது போக்கிட புன்மைகள் பூமி யாண்டிட
தலைமை தாங்கி தர்மம் தழைக்கச் செய்வோர் எங்குளரோ?

இறையே வந்தாலும் கறைபட்ட உலகின் குறைகள் தீருமோ?
முறைகள் பிறழும் போது இறையும் முனியும் என்செயும்?
உறைகளே உண்மையென உவந்திடும் மாந்தர் உரைப்பது கேட்பாரோ?
இறையது உறைவது எழுவது தன்னுள்ளென உணர்ந்தால்தான் விடிவு!

--ரமணி, 13/01/2013

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Fri Jan 18, 2013 7:29 am

18. ஆ வெல்லாம் உம் ஆனால்...
(நிலைமண்டில ஆசிரியப்பா)

அறம்வழிப் பட்டால் நிறமது வெளுக்குமா?
பொருளினைத் கொடுத்தால் அருளது கிடைக்குமா?
இன்பம் குறைத்தால் துன்பம் விலகுமா?
வீடுதனை விரும்பினால் காடுகள் மறையுமா?

பற்றினை விட்டால் இற்றுப் போகுமா?
பட்டுப் போனால் விட்டுப் போகுமா?
பக்தி செய்தால் சக்தி வளருமா?
பலன்களை விட்டால் மலங்கள் அகலுமா?

மோனம் காத்தால் ஞானம் கூடுமா?
இரண்டினை நீக்கினால் திரண்டு வருமா?
இறையென நினைத்தால் திரையது விலகுமா?
நற்கதி கிட்டிட சற்குரு சொல்வீர்!

ஆவெனக் கேட்டால் கேள்விகள் தங்கும்.
ஆலென நினைத்தால் ஐயங்கள் வளரும்.
ஆவினை நீக்கி உம்மினைச் சேர்த்தால்
கேள்விகள் மறைந்து நம்பிக்கை பிறக்கும்.

நம்பிக்கை எல்லாம் செயல்வழிப் பட்டிட
ஆலென்பது நீங்கி அதுவென்பது பொருந்திட
உம்மெனும் எதிர்காலம் அதுவென நிகழ
ஞானம் கூடி விடுதலை கிடைக்கும்.

சற்குரு சொற்களில் சிஷ்யன் மகிழ்ந்து
ஆவும் ஆலும் குறையச் செய்து
அதுவினை மனதில் செயலில் வளர்த்து
ஞானம் கூடும் வழிவகை அறிந்தான்.

--ரமணி, 04/09/2012

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sun Jan 27, 2013 11:44 am

19. செவ்வேள் சேவடிக்கோர் செய்யுட் காவடி!

தைப்பூச நன்னாள் திருக்குமரன் நாமங்கள்
கைக்கூச்ச மின்றிக் கவனித் தெழுதுவோம்
மெய்யில் அலகிட்டு மேவினை தீர்த்தார்போல்
செய்யுள் அலகிட்டுச் செய்து. ... 1

விடியலைக் கொண்டாடி வெண்ணீ றணிந்து
அடிமேல் அடிவைத்(து) அணிகள் அணிசெய்யக்
காவடி தூக்கியாடும் கண்ணும் கருத்துடன்
பாவடிவில் நாவிசைத்துப் பாட்டு. ... 2

அம்மையப்பன் சேர்ந்துநடம் ஆடிய நன்னாளில்
இம்மைக்குத் தீர்வாய் இடைநின் றிலங்கிய
உம்மையே வேண்டிட உம்புகழ் ஓங்கியே
எம்மையும் காத்தபழம் நீ. ... 3

சிவநுதற் கண்ணுற்ற தீப்பொறிகள் சேர்ந்து
சிவஞான பண்டித னாகி - சிவனுக்கே
மூலப் பொருளுரைத்த சாலச் சிறந்தவனாம்
வேலவன் அக்கினிக் குஞ்சு. ... 4

அழியா இளமை அழகு இனிமை
வழியும் முருகுநீ மூவகை சக்திகளில்
உள்ளம் தழைத்து உவகை நிறைந்திடக்
கள்ளம் அறுப்பதுன் வேல். ... 5

சூர பதுமன் மரமான போதுனது
வீரசக்தி வேலால் பிளக்க மயிலெனச்
சேவலெனத் தோன்றியவன் தாக்க அருள்கூர்ந்துன்
சேவடியால் நீசெய்தாய் காப்பு. ... 6

உமையீசன் பிள்ளைக்கு எத்தனை நாமம்!
அமரேசன் அன்பழகன் கார்த்திகேயன் கந்தன்
குமரேசன் வேலன் சிவபாலன் செவ்வேள்
உமைபாலன் இன்னும் பல. ... 7

எத்தனையோ நாமங்கள் வித்தகன் வேலனுக்கு!
அத்தனையும் வித்தெனச் சித்தம் விழுதிட்டால்
அத்தனின் பிள்ளையவன் ஆறுமுகன் ஆசிபெற்று
நித்தமும் வாழலாம் நாம். ... 8

--ரமணி, 27/01/2013 (தைப்பூச நாள்)

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Tue Jan 29, 2013 5:54 pm

20. இறைவன் அருள்!
(நிலைமண்டில ஆசிரியப்பா)

அனைத்தும் இறைவன் அருளே என்று
அரசனின் ஏவலன் ஒருவனெப் போதும்
பணிகள் யாவும் புரிந்திடும் போது
முணுமுணுத் தவாறே வணங்கிச் செய்தான். ... 1

எரிச்சல் அடைந்த அரசன் அவனை
நெரித்த புருவம் காட்டிக் கடிந்தும்
முணுக்கும் வாயை மூடுதல் இன்றிப்
பணித்தது புரிந்து வந்தான் பணியாள். ... 2

ஒருநாள் ஏவலன் ஓய்வில் தன்னூர்
விரும்பிச் சென்று திரும்பிய போது
அரண்மனைத் தோப்பில் பறித்த திராட்சைகள்
புரவலன் முன்பு பணிவுடன் வைத்தான். ... 3

பழங்களைப் புரவலன் புசிக்கா(து) அவன்மேல்
விழுமா றொவ்வொன் றாக எறிந்து
விளையாடப் போக ஏவலன் தன்மேல்
விழுந்த அடிகளை விருப்புடன் ஏற்றான். ... 4

அரசன் கடைசிப் பழத்தை ஏறிந்து
சிரித்துக் கொண்டே சொன்னான் அவனிடம்
அடிகள் வாங்கிய இந்தச் சமயம்
கடவுள் அருள்தான் காணாமற் போனதோ? ... 5

ஏவலன் சொன்னான் ஏற்ற பதிலாய்:
காவல! கடவுள் அருளால் அன்றோ
நன்மை யாக முடிந்ததிப் போது!
மன்னவன் முகத்தில் புரியா வியப்பு! ... 6

விழும! உங்கள் தோப்பில் கண்ட
பழுத்த விளாமரப் பழங்களை நானும்
கொண்டு வந்து கொடுத்திருந் தாலெனக்கு
உண்டு இல்லையன ஆயிருக்கு மன்றோ? ... 7

ஏவலன் புத்தியும் பக்தியும் மெச்சிக்
காவலன் தக்க பரிசுகள் தந்தனுப்பித்
தன்னுள் புதிதாய் மன்னிய வித்தினை
உன்னிப் பார்த்து வியப்பில் ஆழ்ந்தான். ... 8

--ரமணி, 29/01/2013
[கதை: பழைய குமுதம் பக்தி இதழில் இருந்து.]

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Thu Feb 07, 2013 9:01 am

22. வெண்பாவில் கடிஜோக்ஸ்!

கருப்பையா: ஜிம்மி குறைப்பதில் சிக்கல்!
மிருக மருத்துவர்: ஐநூறு ஆகுமே?
ஏன்டாக்டர் கொஞ்சம் குறைக்கலாமே கட்டணம்?
நான்குறைத்தால் நாய்குரைக் காது! ... 1

தமிழா சிரியர் தடியடிஏன் பட்டார்?
தமிழா சிரியர் எவரெனக் கேட்க
அடியேன் எனச்சொன்ன தால்! ... 2

புத்தகம் அஞ்சல் கடிதம் இரண்டுக்கும்
வித்தியாசம் என்ன தெரியுமா தோழா?
படித்துக் கிழிப்பாயே புத்தகம் ஒன்றை!
கடிதம் கிழித்துப் படி. ... 3

ஒருசிறுவன் இன்னோர் சிறுவனிடம் சொன்னான்:
திருமுருகா, எங்கப்பா ரொம்ப பயங்கொள்ளி!
இன்னைக்கு சாலையை க்ராஸ்செய்தார் பாருடா
என்கையை நல்லாப் பிடிச்சு! ... 4

--ரமணி, 07/02/2013

*****


Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Thu Feb 07, 2013 9:20 am

அனைத்தும் அருமை .......... சிரி



ரமணியின் கவிதைகள் - Page 4 Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Fri Feb 08, 2013 6:48 am

22. வெண்பாவில் கடிஜோக்ஸ்!

கண்ணிரண்டும் பேசினால் காதல் உருவாகும்
கண்ணீரே பேசினால் நட்பாகும் -- பண்ணும்
பணமது பேசினால் யார்யாரோ சொந்தம்
அனைவரும் பேசினால் இவ்வுலகம் -- நீயே
தனியாகப் பேசினால்நீ லூசு! ... 5

பாட்டீநான் பள்ளியில் ஓட்டப்பந்த் யத்திலே
ஸ்மார்ட்டாக வின்பண்ண உன்னாசி வேணுமே!
பையவே ஓடுகண்ணா வேகமாக ஓடினா
கைகால் ஒடிஞ்சிடு மே! ... 6

வகுப்பறையில் மாணாக்கன்: போடாநீ முட்டாள்!
வகுப்பிலேயே நீதான் வடிகட்ன முட்டாள்!
வரலாற்று வாத்தியார்: என்னசத்தம்? நாஅன்
ஒருத்தன் இருக்கேனில் ல? ... 7

என்னதான் சார்நீங்க சென்டிமென்ட் பாத்தாலும்
முன்னால் எலுமிச்சை வைக்க முடியாது
கப்பல் கிளம்பிடும் நேரம் வரும்போது
தப்பாமல் ஊதுவது சங்கு! ... 8

’தன்கட்சி ஆட்சி தலைவருக்கே சந்தேகம்!’
’என்னையா சொல்லவறே? கன்னையா கீர்த்தி
தெரியாதா?’ ’தான்ஜெயித்தால் ஊழலற்ற ஆட்சி
தருவோம்னு சொல்றார் அவர்!’ ... 9

என்கணவர் எப்போதும் டாக்டரின் அட்வைஸை
நன்றாகக் கேட்டு நடப்பார் நளினி!
அடேடே மருத்துவர் அட்வைஸா, காலால்
நடப்பதற்குக் கூட அவர்! ... 10

--ரமணி, 07/02/2013


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Mon Feb 11, 2013 6:53 am

22. வெண்பாவில் கடிஜோக்ஸ்!

குறுநாவல் ஒண்ணு கிறுக்கி யிருக்கேன்
அருமையான எங்க தமிழ்வாத்யார் பத்தி!
குருநாவல் அப்படீன்னு சொல்லு! ... 11

பெரிய மனிதர்கள் யாரேனும் ஊரில்
பிறந்திருக் கார்களா தம்பீ? அதுபோல
ஒன்றும் நடக்கலையே ஐயா, பிறந்ததெல்லாம்
சின்னக் குழந்தைகள் தான்! ... 12

போஸ்ட்மேன் நடக்கறப்ப ஸ்லிப்பாய் விழுந்தார்னா?
வேஸ்ட்டா அவர்விழுந்து போஸ்ட்டெல்லாம் கொட்டிடும்!
எப்’டி விழுவார்னு கேட்டேன்! தெரியலையே?
இப்’டி விழுவார் தபால்னு! ... 13

’வாகனங்கள் போகும் வழியில்லை இத்தடம்!’
நாகசாமி கான்ஸ்டபிள் நாக்கிலே பீடியுடன்.
’நானிந்த சாலைவழிப் போலாமா காவலரே?’
கான்ஸ்டபிளைக் கேட்டார் ஒருமனிதர். ’வாகனங்கள்
தானே நுழைய முடியாது, நீங்கபோலாம்.’
’நான்மயில் வாகனன் சார்!’ ... 14

நம்பமக்கு கேட்டான்பார், நா’ஆடிப் போய்ட்டேன்யா!
சும்பனாச்சே? அப்படி என்னதான் கேட்டான்?
எசமான்நான் எல்லாபாங்க் ஏடீஎம் பாத்தேன்
ரிசர்வ்பாங்க்கின் ஏடீஎம் மாத்திரம் ஏங்க்ட்ட
வசமா அகப்படலை யே! ... 15

சொல்லுங்க, பையன் படிப்புல சாதனை
நல்லாநீர் ஊக்குவித்த தால்தானே கன்னையா?
இல்லைநான் வித்தது பாக்கு. ... 16
--ரமணி, 08/02/2013

சாரங்கன் பாடம் முடித்தபின் கூறினார்:
யாரேனும் ஏதேனும் சந்தேகம் உள்ளதென்றால்
தாராள மாய்க்கேள் தயக்கம் எதுவுமின்றி.
சார்-உங்கள் பெண்பெயர் யாது? ... 17

நேர்முகத் தேர்வு நடந்த சமயத்தில்
தேர்வாளர் கேட்டது: மேசைமேல் மொய்த்தஈ
மொத்தமாய் ஐந்து. அடித்தேன்நான் ஒன்றினை.
எத்தனை இன்னும் இருக்குமென்று சொல்லுங்கள்?
வந்தவர்: ஒன்றுமட்டும். தேர்வாளர்: எப்படி?
கொன்றது மிஞ்சுமே அங்கு? ... 18

சினிமாக்கு டிக்கட் எடுத்திருக்கேன் சாரூ!
இனிமேலா, என்னங்க இல்லையே நேரம்?
உடுத்துக் கிளம்பனுமே? மெல்லச்செய், டிக்கட்
எடுத்தது நாளைக்குத் தான்! ... 19

தாயார்: மருந்தெல்லாம் பாட்டிதான் எப்பவுமுன்
வாயில் விடணும்னு சொல்றியே ஏண்டா?
சிறுமகன்: பாட்டிக்குக் கைநடுங்கி பாதி
மருந்துபோய்டும் கீழே அதான்! ... 20
--ரமணி, 10/02/2013

*****


Sponsored content

PostSponsored content



Page 4 of 36 Previous  1, 2, 3, 4, 5 ... 20 ... 36  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக