புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரமணியின் கவிதைகள்
Page 30 of 36 •
Page 30 of 36 • 1 ... 16 ... 29, 30, 31 ... 36
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
First topic message reminder :
கணினி போற்றுதும்!?
ரமணி, 18/08/2012
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!
பணியெது வாகிலும் பாங்குறச் செய்திடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!
பலவகை வடிவினில் உலகில் உறைந்திடும்
பலவகை மனிதரும் பலவாறு உகந்திடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!
இன்றைய உலகின் எலிகள் போட்டியில்
பகலும் இரவும் மனிதர் வாழ்வினை
நிலைபெறச் செய்திடும் கணினி போற்றுதும்!
குழந்தை மனம்முதல் கிழவர் மனம்வரை
கலைகள் போற்றித் திறன்கள் வளர்த்து
கனவுகள் தந்திடும் கணிணி போற்றுதும்!
குடும்பம் முழுவதும் கணினி வகைகள்!
மேசைக் கணினியும் மடிமேல் கணினியும்
அலுவ லகத்திலும் வீட்டிலும் அமர்ந்து
ஆசான் தோழன் மருத்துவன் செயலர்
கணக்கன் தூதுவன் கேளிக்கை யாளன்
அனைவர் ’ரோல்’களில் ஆடிடும் பாடிடும்!
கைத்தொலை பேசியில் வன்பொருள் மென்பொருள்
இணைபொரு ளாக உறையும் கணினி
நின்ற விடத்தில் தொடர்பு கொண்டு
உறவினை தொழிலினை வம்பினை வளர்த்திட
ஏழை எளியோர் செல்வம் படைத்தோர்
யாவரும் முனைந்திட வழிவகை செய்திடும்.
உட்பகை வெளிப்பகை வானிலை பொருளியல்
விதிமுறை செயல்வகை என்றிவ் வாறு
அனைத்தும் அறிந்திட அரசுக் குதவி
அரசுகள் அமைக்கும், அரசுகள் கவிழ்க்கும்!
இறைவ னுக்குக் கரங்கள் பலவாம்
கணினி களுக்கும் கரங்கள் பலவே!
விரல்கள் சொடுக்கிட மின்னெலி ஒருகரம்
விரல்கள் தட்டிட விசைமணை ஒருகரம்
கண்கள் பார்த்திட ஒளிர்ந்திடும் திரைமுகம்
பிரதிகள் அச்சிட அச்சுப் பொறிக்கரம்
அச்சின் தாள்களை அலகிட்டு மின்பதியும்.
இணைய தளங்களை எட்டிட ஒருகரம்
மோடம் டெலிஃபோன் இணைப்புகள் தாங்கி
’யாதும் ஊரே யாவரும் கேளிர்’
என்ற முதுமொழி நனவில் காட்டிடும்.
இத்தனை செயல்களால் வாழ்வில் வளம்தரும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்?
தட்டெழுதித் தட்டெழுதிக்
கையெழுத்தை மறக்கச் செய்யும்
மின்னெலியில் விரல்வலிக்கச் சொடுக்கச் செய்யும்
பொழுதுகள் மறந்து அறநெறிகள் துறந்து
உடல்நலம் பேணுவது அசட்டை செய்து
பெரியவர் மனங்களில் வறியவர் ஆகவும்
சிறுவர் சிறுமியர் மடிமையர் ஆகவும்
இளையோர் நெறிகளில் இளைத்தோர் ஆகவும்
தீயோர் செயல்கள் கலியில் பெருகிட
மூவா மருந்தாய் விளங்கிப் பல்கிடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்?
கரணம் என்பது உபகரணம் ஆகி
மனிதன் அவற்றை ஆளும் வரையில்
காரணம் ஆகா மனிதன் அழிவுக்கு.
பொறிகளின் பொறிகள் மனிதன் மனதில்
அல்லதைச் சமைத்து நல்லதை அழித்தால்
பொறிகளின் நெருப்பு ஊழித் தீயாகி
உலகினை அழிக்க உபாயம் ஆகிவிடும்!
*****
கணினி போற்றுதும்!?
ரமணி, 18/08/2012
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!
பணியெது வாகிலும் பாங்குறச் செய்திடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!
பலவகை வடிவினில் உலகில் உறைந்திடும்
பலவகை மனிதரும் பலவாறு உகந்திடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!
இன்றைய உலகின் எலிகள் போட்டியில்
பகலும் இரவும் மனிதர் வாழ்வினை
நிலைபெறச் செய்திடும் கணினி போற்றுதும்!
குழந்தை மனம்முதல் கிழவர் மனம்வரை
கலைகள் போற்றித் திறன்கள் வளர்த்து
கனவுகள் தந்திடும் கணிணி போற்றுதும்!
குடும்பம் முழுவதும் கணினி வகைகள்!
மேசைக் கணினியும் மடிமேல் கணினியும்
அலுவ லகத்திலும் வீட்டிலும் அமர்ந்து
ஆசான் தோழன் மருத்துவன் செயலர்
கணக்கன் தூதுவன் கேளிக்கை யாளன்
அனைவர் ’ரோல்’களில் ஆடிடும் பாடிடும்!
கைத்தொலை பேசியில் வன்பொருள் மென்பொருள்
இணைபொரு ளாக உறையும் கணினி
நின்ற விடத்தில் தொடர்பு கொண்டு
உறவினை தொழிலினை வம்பினை வளர்த்திட
ஏழை எளியோர் செல்வம் படைத்தோர்
யாவரும் முனைந்திட வழிவகை செய்திடும்.
உட்பகை வெளிப்பகை வானிலை பொருளியல்
விதிமுறை செயல்வகை என்றிவ் வாறு
அனைத்தும் அறிந்திட அரசுக் குதவி
அரசுகள் அமைக்கும், அரசுகள் கவிழ்க்கும்!
இறைவ னுக்குக் கரங்கள் பலவாம்
கணினி களுக்கும் கரங்கள் பலவே!
விரல்கள் சொடுக்கிட மின்னெலி ஒருகரம்
விரல்கள் தட்டிட விசைமணை ஒருகரம்
கண்கள் பார்த்திட ஒளிர்ந்திடும் திரைமுகம்
பிரதிகள் அச்சிட அச்சுப் பொறிக்கரம்
அச்சின் தாள்களை அலகிட்டு மின்பதியும்.
இணைய தளங்களை எட்டிட ஒருகரம்
மோடம் டெலிஃபோன் இணைப்புகள் தாங்கி
’யாதும் ஊரே யாவரும் கேளிர்’
என்ற முதுமொழி நனவில் காட்டிடும்.
இத்தனை செயல்களால் வாழ்வில் வளம்தரும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்?
தட்டெழுதித் தட்டெழுதிக்
கையெழுத்தை மறக்கச் செய்யும்
மின்னெலியில் விரல்வலிக்கச் சொடுக்கச் செய்யும்
பொழுதுகள் மறந்து அறநெறிகள் துறந்து
உடல்நலம் பேணுவது அசட்டை செய்து
பெரியவர் மனங்களில் வறியவர் ஆகவும்
சிறுவர் சிறுமியர் மடிமையர் ஆகவும்
இளையோர் நெறிகளில் இளைத்தோர் ஆகவும்
தீயோர் செயல்கள் கலியில் பெருகிட
மூவா மருந்தாய் விளங்கிப் பல்கிடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்?
கரணம் என்பது உபகரணம் ஆகி
மனிதன் அவற்றை ஆளும் வரையில்
காரணம் ஆகா மனிதன் அழிவுக்கு.
பொறிகளின் பொறிகள் மனிதன் மனதில்
அல்லதைச் சமைத்து நல்லதை அழித்தால்
பொறிகளின் நெருப்பு ஊழித் தீயாகி
உலகினை அழிக்க உபாயம் ஆகிவிடும்!
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
தனிநிற்பேன் வடுவெனவே!
(அளவியல் ஆங்கில சானட்: தரவு கொச்சகக் கலிப்பா + குறள் வெண்செந்துறை:
இயைபு: அஆஅஆ, இஈஇஈ, எஎ)
எத்தனையோ புள்ளினங்கள் எல்லாமே கண்ணினிமை
அத்தனையும் வந்துபார்க்கும் அன்றாடம் உறவாடும்
எத்தனையோ புள்ளிசையாம் எல்லாமே பண்ணினிமை
கத்துவதும் கொஞ்சுவதும் காலைமுதல் சிறகாடும்!
அன்னமென எதையெதையோ ஆர்ப்பரித்தே தேடியுண்ணும்
மின்னலெனக் கண்பட்டு மின்னலெனப் பறந்துவிடும்
அன்னமதை நெய்பருப்பை அக்கணமே நாடியுண்ணும்
இன்னலெதும் செய்யாதாம் இன்னிசையும் மறந்துவிடும்!
இத்தனைக்கும் சுற்றிடத்தில் எங்கணுமே சோலையிலை
வித்தெவணோ அத்தனையும் வேலிகாத்தான் முள்மரமே
புத்துகளாய் எருக்கமுடன் புதர்முட்கள் சாலைவரை
ஒத்துவரும் கான்கொடிகள் ஓங்கியெழுந் துள்வருமே!
வானளாவும் அடுக்ககங்கள் வகைமனிதர் நடுவினிலே
தானளாவும் நான்மட்டும் தனிநிற்பேன் வடுவெனவே!
--ரமணி, 03/04/2015
*****
(அளவியல் ஆங்கில சானட்: தரவு கொச்சகக் கலிப்பா + குறள் வெண்செந்துறை:
இயைபு: அஆஅஆ, இஈஇஈ, எஎ)
எத்தனையோ புள்ளினங்கள் எல்லாமே கண்ணினிமை
அத்தனையும் வந்துபார்க்கும் அன்றாடம் உறவாடும்
எத்தனையோ புள்ளிசையாம் எல்லாமே பண்ணினிமை
கத்துவதும் கொஞ்சுவதும் காலைமுதல் சிறகாடும்!
அன்னமென எதையெதையோ ஆர்ப்பரித்தே தேடியுண்ணும்
மின்னலெனக் கண்பட்டு மின்னலெனப் பறந்துவிடும்
அன்னமதை நெய்பருப்பை அக்கணமே நாடியுண்ணும்
இன்னலெதும் செய்யாதாம் இன்னிசையும் மறந்துவிடும்!
இத்தனைக்கும் சுற்றிடத்தில் எங்கணுமே சோலையிலை
வித்தெவணோ அத்தனையும் வேலிகாத்தான் முள்மரமே
புத்துகளாய் எருக்கமுடன் புதர்முட்கள் சாலைவரை
ஒத்துவரும் கான்கொடிகள் ஓங்கியெழுந் துள்வருமே!
வானளாவும் அடுக்ககங்கள் வகைமனிதர் நடுவினிலே
தானளாவும் நான்மட்டும் தனிநிற்பேன் வடுவெனவே!
--ரமணி, 03/04/2015
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
கரிவலம்வந்தநல்லூர் (சங்கரன்கோவில் அருகில்)
(எழுசீர் விருத்தம்: விளம் மா விளம் மா விளம் விளம் மா)
(சம்பந்தர் தேவாரம்: 3.120.1: மங்கையர்க் கரசி வானவர்கோன் பாவை)
கோவில்
http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=4508
http://naavaapalanigotrust.com/index.php?option=com_sobipro&pid=285&sid=1387:karivalamsivan&Itemid=0
http://ammandharsanam.com/magazine/December2011unicode/page021.php
காப்பு
கரிமுகன் ஐங்கரன் கண்ணருளால் வேந்தன் ... [வேந்தன் = இந்திரன்]
கரிவலம் வந்தநல்லூர் காணும் இறைவனாம்
பால்வண்ண நாதர் பரிந்தருள் செய்திடும்
கால்வண்ணம் கூறுவேன் கண்டு.
பதிகம்
இந்திரன் ஜெயந்தன் பெற்றதால் சாபம்
. இருவரும் வேடுவர் குலத்தில்
வந்தனர் பிறந்து பூமியில் ஓர்நாள்
. வாளிவில் கொண்டவர் அலைந்தே
வந்ததில் காள வனந்தனில் வேட்டை
. யாடிடக் கண்டவி லிங்கம்
கந்தலாய்ப் புலியின் தோலணி யீசன்
. கரிவலம் வந்தநல் லூரே. ... 1
[ஜெயந்தன் = இந்திரன் மகன்; வாளிவில் = அம்பும் வில்லும்;
காளவனம் = கரிவலம்வந்தநல்லூரின் ஒரு பெயர்]
வான்பசு வருணன் விஞ்சையர் சித்தர்
. மரகதன் வாயுவும் இந்தக்
கான்தரு நிலத்தில் விலங்கெனத் தோன்றிக்
. கருத்தனை வழிபட ஈசன்
ஆன்றவர் துதியில் அகமகிழ் வுறவே
. அனைவரின் சாபமும் தீரக்
காந்தனாம் தேவன் இந்திரன் ஏறும்
. கரிவலம் வந்தநல் லூரே. ... 2
[வான்பசு = காமதேனு; விஞ்ஞையர் = வித்தியாதரர்; மரகதன் = குபேரன்;
ஆன்றவர் = தேவர்; காந்தன் = தலைவன்]
(எழுசீர் விருத்தம்: விளம் மா விளம் மா விளம் விளம் மா)
(சம்பந்தர் தேவாரம்: 3.120.1: மங்கையர்க் கரசி வானவர்கோன் பாவை)
கோவில்
http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=4508
http://naavaapalanigotrust.com/index.php?option=com_sobipro&pid=285&sid=1387:karivalamsivan&Itemid=0
http://ammandharsanam.com/magazine/December2011unicode/page021.php
காப்பு
கரிமுகன் ஐங்கரன் கண்ணருளால் வேந்தன் ... [வேந்தன் = இந்திரன்]
கரிவலம் வந்தநல்லூர் காணும் இறைவனாம்
பால்வண்ண நாதர் பரிந்தருள் செய்திடும்
கால்வண்ணம் கூறுவேன் கண்டு.
பதிகம்
இந்திரன் ஜெயந்தன் பெற்றதால் சாபம்
. இருவரும் வேடுவர் குலத்தில்
வந்தனர் பிறந்து பூமியில் ஓர்நாள்
. வாளிவில் கொண்டவர் அலைந்தே
வந்ததில் காள வனந்தனில் வேட்டை
. யாடிடக் கண்டவி லிங்கம்
கந்தலாய்ப் புலியின் தோலணி யீசன்
. கரிவலம் வந்தநல் லூரே. ... 1
[ஜெயந்தன் = இந்திரன் மகன்; வாளிவில் = அம்பும் வில்லும்;
காளவனம் = கரிவலம்வந்தநல்லூரின் ஒரு பெயர்]
வான்பசு வருணன் விஞ்சையர் சித்தர்
. மரகதன் வாயுவும் இந்தக்
கான்தரு நிலத்தில் விலங்கெனத் தோன்றிக்
. கருத்தனை வழிபட ஈசன்
ஆன்றவர் துதியில் அகமகிழ் வுறவே
. அனைவரின் சாபமும் தீரக்
காந்தனாம் தேவன் இந்திரன் ஏறும்
. கரிவலம் வந்தநல் லூரே. ... 2
[வான்பசு = காமதேனு; விஞ்ஞையர் = வித்தியாதரர்; மரகதன் = குபேரன்;
ஆன்றவர் = தேவர்; காந்தன் = தலைவன்]
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
இறைவனின் பேராம் பால்வண நாதர்
. இலக்குவன் வழிபட நின்றார்
இறைவியின் பேராம் ஒப்பனை யம்மை
. இறைவனை மேவிய மர்ந்தாள்
கறைதனைக் கொண்டே அமுதினை தேவர்க்
. களித்தனர் கறைமிடற் றண்ணல்
கறுவியே வாவி சுக்கிரர் செய்தார்
. கரிவலம் வந்தநல் லூரே. ... 3
சுக்கிரர் வாவி பாலமு தாகச்
. செய்திறை யருளினை வேண்ட
முக்கணர் சோதி வாவியெ ழுந்தே
. முன்னுரு லிங்கமுட் சேர
அக்கணம் வாவி நீருள தாக
. அங்கணர் பால்வண ரானார்
கக்கசம் இன்றிப் புரமழித் தாரின் ... ... [கக்கசம் = பிரயாசை, முயற்சி]
. கரிவலம் வந்தநல் லூரே. ... 4
. இலக்குவன் வழிபட நின்றார்
இறைவியின் பேராம் ஒப்பனை யம்மை
. இறைவனை மேவிய மர்ந்தாள்
கறைதனைக் கொண்டே அமுதினை தேவர்க்
. களித்தனர் கறைமிடற் றண்ணல்
கறுவியே வாவி சுக்கிரர் செய்தார்
. கரிவலம் வந்தநல் லூரே. ... 3
சுக்கிரர் வாவி பாலமு தாகச்
. செய்திறை யருளினை வேண்ட
முக்கணர் சோதி வாவியெ ழுந்தே
. முன்னுரு லிங்கமுட் சேர
அக்கணம் வாவி நீருள தாக
. அங்கணர் பால்வண ரானார்
கக்கசம் இன்றிப் புரமழித் தாரின் ... ... [கக்கசம் = பிரயாசை, முயற்சி]
. கரிவலம் வந்தநல் லூரே. ... 4
-
கரிவலம்வந்தநல்லூர்.
-
பாற்கடலில் கிடைத்த அமிர்தத்தை தேவர்கள்
உண்டுவிட்டதால், அமிர்தம் கிடைக்காமல் வருந்திய
அசுரர்கள் தங்கள் குருவான சுக்ராச்சாரியாரிடம்
சென்று முறையிட்டனர்.
உடனே சுக்ராச்சாரியார் இத்தலம் வந்து இறைவனை
வழிபட்டு ஒரு பால் தடாகத்தை உருவாக்கினார்.
ஈசன் அசுரர் களின் இன்னலைப் போக்குவதற்காக
அந்தப் பால் தடாகத்திலிருந்து ஜோதி வடிவமாய்
வெளிப்பட்டு சிவலிங்கத்தில் கலந்தார். சிவலிங்கம்
பால் வண்ணமாகியது;
பால் தடாகம் நீர் வண்ணமாகியது. இதன் காரணமாகவே
இத்தல ஈசன் பால்வண்ண நாதர் என்றும்; இங்குள்ள
தடாகம் சுக்கிர தீர்த்தம் எனவும் அழைக்கப்படுகிறது.
-
-
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
கரிவலம் வரவே கரிபுரம் பேராம்
. காளவ னம்சுடு காடாம்
கருத்தனம் பரனாம் அம்பர புரமாம்
. அமுதுறும் அசலமென் றோர்பேர்
ஒருபெயர் சிவசக் திபுரமாம் இன்னும்
. ஓர்சிவன் முக்திபு ரமெனக்
கருவனின் தலப்பேர் இங்ஙனம் பலவாம்
. கரிவலம் வந்தநல் லூரே. ... 5
[கருத்தனம் பரனாம் = கருத்தன் (சிவன்) அம்பரனாம்; கருவன் = சங்காரமூர்த்தி சிவன்]
கருவையின் மீதோர் நூறெனும் பாடல்
. கனியுமந் தாதிவெண் பாவும்
உருவினில் பதிற்றுப் பத்தெனும் வகையில்
. ஒருசதம் பாக்களும் செய்த
திருவுடை அதிவீ ரராமனின் ஊரே
. திருக்கரு வையெனச் சொல்லும்
கருமிடற் றண்ணல் மேவிய தலமாம்
. கரிவலம் வந்தநல் லூரே. ... 6
. காளவ னம்சுடு காடாம்
கருத்தனம் பரனாம் அம்பர புரமாம்
. அமுதுறும் அசலமென் றோர்பேர்
ஒருபெயர் சிவசக் திபுரமாம் இன்னும்
. ஓர்சிவன் முக்திபு ரமெனக்
கருவனின் தலப்பேர் இங்ஙனம் பலவாம்
. கரிவலம் வந்தநல் லூரே. ... 5
[கருத்தனம் பரனாம் = கருத்தன் (சிவன்) அம்பரனாம்; கருவன் = சங்காரமூர்த்தி சிவன்]
கருவையின் மீதோர் நூறெனும் பாடல்
. கனியுமந் தாதிவெண் பாவும்
உருவினில் பதிற்றுப் பத்தெனும் வகையில்
. ஒருசதம் பாக்களும் செய்த
திருவுடை அதிவீ ரராமனின் ஊரே
. திருக்கரு வையெனச் சொல்லும்
கருமிடற் றண்ணல் மேவிய தலமாம்
. கரிவலம் வந்தநல் லூரே. ... 6
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
கருவைமன் வரதுங் கன்னொரு பிள்ளைக்
. கனியினைப் பெற்றவ னில்லை
கருவையூர் முழுதும் சிவனுருக் கண்டே
. காலடி வைத்திலேன் என்றான்
மரணமும் வந்து சூழவே கொள்ளி
. மருவிலி வைத்தன ரென்றே
கருவுறும் கதைகள் புகழ்ந்திடும் ஊராய்க்
. கரிவலம் வந்தநல் லூரே. ... 7
[கருவைமன் = கருவையின் மன்னன்; மருவிலி = அனாதியாகவே எல்லாம் பொருந்தி
எதுவும் புதிதாக வேண்டாத சிவன்--திருமந்திரம் 9.25]
மலைகொள முயன்ற இலங்கையின் வேந்தை
. மறுகணம் கால்விரற் கீழே
தலைபடத் பத்துத் தோள்பட நசுக்கித்
. தனியருள் செய்துபின் காத்தார்
சிலைநிகர் சக்தி இடமுறும் மேனி
. சிவனெனச் சிந்தையில் வாழும்
கலைமதி மத்தம் தலைநதி கொள்வார்
. கரிவலம் வந்தநல் லூரே. ... 8
. கனியினைப் பெற்றவ னில்லை
கருவையூர் முழுதும் சிவனுருக் கண்டே
. காலடி வைத்திலேன் என்றான்
மரணமும் வந்து சூழவே கொள்ளி
. மருவிலி வைத்தன ரென்றே
கருவுறும் கதைகள் புகழ்ந்திடும் ஊராய்க்
. கரிவலம் வந்தநல் லூரே. ... 7
[கருவைமன் = கருவையின் மன்னன்; மருவிலி = அனாதியாகவே எல்லாம் பொருந்தி
எதுவும் புதிதாக வேண்டாத சிவன்--திருமந்திரம் 9.25]
மலைகொள முயன்ற இலங்கையின் வேந்தை
. மறுகணம் கால்விரற் கீழே
தலைபடத் பத்துத் தோள்பட நசுக்கித்
. தனியருள் செய்துபின் காத்தார்
சிலைநிகர் சக்தி இடமுறும் மேனி
. சிவனெனச் சிந்தையில் வாழும்
கலைமதி மத்தம் தலைநதி கொள்வார்
. கரிவலம் வந்தநல் லூரே. ... 8
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
(இறுதிப் பகுதி)
அலையுறும் சயனர் மலருறும் பிரமன்
. அழற்றலை தாள்தனைத் தேடி
மலைவுடன் நின்ற பொழுதிவர் அருளி
. மாண்பினைக் காட்டியே நின்றார்
தொலைவினில் அருகில் மனதினில் கண்முன்
. தோழனாய் நின்றருள் சிவனார்
கலைமறி கரத்தர் வினையழி வரத்தர்
. கரிவலம் வந்தநல் லூரே. ... 9
ஆரணம் ஒப்பாப் பன்னெறி இன்னாள்
. அவனியில் மாந்தரை யிழுக்கக்
காரணன் நெறியே உய்நெறி யென்றே
. காரியம் ஆற்றிடும் அடியார்
பூரண நலனும் வேரெனும் அறிவும்
. புண்ணியன் அருளினால் பெறவே
காரிகை மேனி யிடமுற வந்தான்
. கரிவலம் வந்தநல் லூரே. ... 10
வனந்தனில் வாழும் பேயுடன் ஆடும்
. வழித்துணை நாதனைப் போற்றி
மனதினில் ஊறும் தினவினைக் கொண்டே
. மாசறச் செய்தலை வேண்டி
நனவினில் நேரும் நிகழ்வுகள் யாவும்
. நஞ்சுணி உளமெனக் கொண்டால்
கனவிலும் காவலன் கண்திறந் தருளக்
. கரிவலம் வந்தநல் லூரே. ... 11
--ரமணி, 08-11/04/2015
*****
அலையுறும் சயனர் மலருறும் பிரமன்
. அழற்றலை தாள்தனைத் தேடி
மலைவுடன் நின்ற பொழுதிவர் அருளி
. மாண்பினைக் காட்டியே நின்றார்
தொலைவினில் அருகில் மனதினில் கண்முன்
. தோழனாய் நின்றருள் சிவனார்
கலைமறி கரத்தர் வினையழி வரத்தர்
. கரிவலம் வந்தநல் லூரே. ... 9
ஆரணம் ஒப்பாப் பன்னெறி இன்னாள்
. அவனியில் மாந்தரை யிழுக்கக்
காரணன் நெறியே உய்நெறி யென்றே
. காரியம் ஆற்றிடும் அடியார்
பூரண நலனும் வேரெனும் அறிவும்
. புண்ணியன் அருளினால் பெறவே
காரிகை மேனி யிடமுற வந்தான்
. கரிவலம் வந்தநல் லூரே. ... 10
வனந்தனில் வாழும் பேயுடன் ஆடும்
. வழித்துணை நாதனைப் போற்றி
மனதினில் ஊறும் தினவினைக் கொண்டே
. மாசறச் செய்தலை வேண்டி
நனவினில் நேரும் நிகழ்வுகள் யாவும்
. நஞ்சுணி உளமெனக் கொண்டால்
கனவிலும் காவலன் கண்திறந் தருளக்
. கரிவலம் வந்தநல் லூரே. ... 11
--ரமணி, 08-11/04/2015
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
பிரதோஷத் துதி
என்குணத்தான் தாளின்னும் உள்ளம் கொள்ளேன்
(இருபத்து நான்கு சீர் ஆசிரிய விருத்தம்:
கூவிளங்காய் காய் மா மா | காய் காய் மா தேமா x 5)
துள்ளிவிழும் வெள்ளலையில் திரளாய் ஓங்கித்
. துவளவைத்த வாசுகியின் விடத்தால் தேவர்
. . துடிதுடித்தே மரணபயம் மனதில் சூழத்
. . . துரத்துகின்ற வேளையிலே விரைந்தே ஓடித்
. . . . துடிகொண்டார் தூமலர்த்தாள் இணையைப் பற்றித்
. . . . . துயர்நீக்கி உயிர்காக்கத் துதித்தே வேண்ட
வள்ளலவர் விழிநுதலார் அபயம் தந்தே
. . வருநஞ்சால் மாதவனின் நிறமும் மாற
. . . மலரவனும் கவலையுற்றே உள்ளம் வாட
. . . . வன்றொண்டர் சுந்தரரை அனுப்பி யந்த
. . . . . வாசுகியின் காளமவர் மணியாய்ச் செய்தே
. . . . . . வளர்மதியர் வரக்கரத்தில் வைத்தே நிற்க
விள்ளலின்றி விடையவரும் அதனை யேற்றே
. . மிடறுவழி விழுங்கிடவே வாயில் கொள்ள
. . . விமலையவள் பதைபதைத்தே கழுத்தைப் பற்ற
. . . . விடமதுவும் நின்றதனால் நீல கண்டர்
. . . . . விண்ணவரின் வேண்டுதலால் பதிமூன் றாம்நாள்
. . . . . . விடையேறிக் கொம்பிடையே நடனம் செய்வார்
எள்ளளவே சுகமெனினும் அதையும் நாடி
. எனதெனவே கொண்டுதினம் மகிழும் நாளில்
. . . எண்ணத்தில் கறையேற வினைகள் ஏறி
. . . . இகவாழ்வை இழிவாழ்வாய்ச் செய்தல் கண்டும்
. . . . . என்குணத்தான் தாளின்னும் உள்ளம் கொள்ளேன்
. . . . . . எந்தையவர் எனக்கெந்நாள் அருள்செய் வாரோ?
--ரமணி, 16-18/04/2015, கலி.03/01/5116
*****
என்குணத்தான் தாளின்னும் உள்ளம் கொள்ளேன்
(இருபத்து நான்கு சீர் ஆசிரிய விருத்தம்:
கூவிளங்காய் காய் மா மா | காய் காய் மா தேமா x 5)
துள்ளிவிழும் வெள்ளலையில் திரளாய் ஓங்கித்
. துவளவைத்த வாசுகியின் விடத்தால் தேவர்
. . துடிதுடித்தே மரணபயம் மனதில் சூழத்
. . . துரத்துகின்ற வேளையிலே விரைந்தே ஓடித்
. . . . துடிகொண்டார் தூமலர்த்தாள் இணையைப் பற்றித்
. . . . . துயர்நீக்கி உயிர்காக்கத் துதித்தே வேண்ட
வள்ளலவர் விழிநுதலார் அபயம் தந்தே
. . வருநஞ்சால் மாதவனின் நிறமும் மாற
. . . மலரவனும் கவலையுற்றே உள்ளம் வாட
. . . . வன்றொண்டர் சுந்தரரை அனுப்பி யந்த
. . . . . வாசுகியின் காளமவர் மணியாய்ச் செய்தே
. . . . . . வளர்மதியர் வரக்கரத்தில் வைத்தே நிற்க
விள்ளலின்றி விடையவரும் அதனை யேற்றே
. . மிடறுவழி விழுங்கிடவே வாயில் கொள்ள
. . . விமலையவள் பதைபதைத்தே கழுத்தைப் பற்ற
. . . . விடமதுவும் நின்றதனால் நீல கண்டர்
. . . . . விண்ணவரின் வேண்டுதலால் பதிமூன் றாம்நாள்
. . . . . . விடையேறிக் கொம்பிடையே நடனம் செய்வார்
எள்ளளவே சுகமெனினும் அதையும் நாடி
. எனதெனவே கொண்டுதினம் மகிழும் நாளில்
. . . எண்ணத்தில் கறையேற வினைகள் ஏறி
. . . . இகவாழ்வை இழிவாழ்வாய்ச் செய்தல் கண்டும்
. . . . . என்குணத்தான் தாளின்னும் உள்ளம் கொள்ளேன்
. . . . . . எந்தையவர் எனக்கெந்நாள் அருள்செய் வாரோ?
--ரமணி, 16-18/04/2015, கலி.03/01/5116
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
அட்சய திருதியைத் துதி: பொன்மாரி யாகப் பொழி!
(அளவியல் நேரிசை வெண்பா)
விக்னம் விளைத்தே வினைகள் அகற்றியே
லக்னம் திருத்தும் லலிதைமக! - அக்னியாய் ... ... [லக்னம் = காலநேரம்]
என்றன் உளமுறும் ஈனம்கொள் ஞானத்தைப்
பொன்மாரி யாகப் பொழி. ... 1
வேதம் நிலைபெற்றே வேள்விகள் ஓங்கியே
தீதெலாம் நீக்கும் திறமைசேர் - மாதுரியர் ... ... [மாதுரியர் = விவேகியர்]
வன்முறை நீக்கி வளஞ்சேர்க்க வேதனே
பொன்மாரி யாகப் பொழி. ... 2
மூன்றளந்தா னேயினி மூவுலகும் இன்பமுறத்
தான்நீங்கி ஞானம் தழைக்கவே - வான்நிற்கும்
அன்னையின் அன்பே அகமுறவே மாந்தர்க்குப்
பொன்மாரி யாகப் பொழி. ... 3
கண்ணுத லேநின் கழலிணை யாடலில்
மண்ணில் அறந்தழைக்க மானுடர் - எண்ணத்தில்
நன்மையே தங்கி நலம்விளைக்க வுன்னருள்
பொன்மாரி யாகப் பொழி. ... 4
உமையே அமைதியுடன் ஓர்மை அமையக் ... ... [ஓர்மை = ஒற்றுமை]
குமையும் மனிதர் குலாவ - எமைக்காத்தே
இன்னருள் செய்தே இனிவரும் நாளெல்லாம்
பொன்மாரி யாகப் பொழி. ... 5
பொன்மகளே பொன்னுடன் பூமனமும் பூவுலகில்
நன்னெறியாய் நின்றினி நாளெல்லாம் - இன்மையின்
இன்னல் மறைந்து இனிமை நிலவிடப்
பொன்மாரி யாகப் பொழி. ... 6
கலைமக ளேநீ கடைக்கண்ணால் பார்த்தே
உலையும் உலகிது உய்ய - நிலைத்திடும்
நன்மையென ஞானமே நாடிட வுன்னருள்
பொன்மாரி யாகப் பொழி. ... 7
வள்ளிம ணாளநீ வந்தருள் செய்திங்கே
கள்ள மனிதரைக் காய்ந்தழித்தே - உள்ளமெலாம்
உன்கழல் நாளும் உவந்தே உயர்வெய்தப்
பொன்மாரி யாகப் பொழி. ... 8
சிந்தையில் சீர்தருவாய் ஶ்ரீராம உன்னைதினம்
வந்தித்தே வாழ்வில் வளம்பெற்றே - இந்தியப்
பொன்னாடு முன்னிற்கப் பூவுலகில் நன்மைகள்
பொன்மாரி யாகப் பொழி. ... 9
பாரதப் போரினில் பார்த்தனின் சாரதியே
பார்-அதம் ஆவதைப் பார்த்திலையேன்? - வேருடன் ... ... [அதம் = அழிவு, பள்ளம், தாழ்வு]
வின்னம் அறுத்தே விழுமம் எழுந்தோங்கிப்
பொன்மாரி யாகப் பொழி. ... 10
இறையுரு பத்தியில் ஈடுபட்டும் உள்ளே
உறைவதை உள்ளியே ஒன்றும் - நிறைமாந்தர்
பொன்னாய்ப் உருக்கிப் புறந்தரும் சொற்கேட்டால்
பொன்மாரி கொள்ளும் புவி. ... 11
--ரமணி, 21/04/2015, கலி.08/01/5116
*****
(அளவியல் நேரிசை வெண்பா)
விக்னம் விளைத்தே வினைகள் அகற்றியே
லக்னம் திருத்தும் லலிதைமக! - அக்னியாய் ... ... [லக்னம் = காலநேரம்]
என்றன் உளமுறும் ஈனம்கொள் ஞானத்தைப்
பொன்மாரி யாகப் பொழி. ... 1
வேதம் நிலைபெற்றே வேள்விகள் ஓங்கியே
தீதெலாம் நீக்கும் திறமைசேர் - மாதுரியர் ... ... [மாதுரியர் = விவேகியர்]
வன்முறை நீக்கி வளஞ்சேர்க்க வேதனே
பொன்மாரி யாகப் பொழி. ... 2
மூன்றளந்தா னேயினி மூவுலகும் இன்பமுறத்
தான்நீங்கி ஞானம் தழைக்கவே - வான்நிற்கும்
அன்னையின் அன்பே அகமுறவே மாந்தர்க்குப்
பொன்மாரி யாகப் பொழி. ... 3
கண்ணுத லேநின் கழலிணை யாடலில்
மண்ணில் அறந்தழைக்க மானுடர் - எண்ணத்தில்
நன்மையே தங்கி நலம்விளைக்க வுன்னருள்
பொன்மாரி யாகப் பொழி. ... 4
உமையே அமைதியுடன் ஓர்மை அமையக் ... ... [ஓர்மை = ஒற்றுமை]
குமையும் மனிதர் குலாவ - எமைக்காத்தே
இன்னருள் செய்தே இனிவரும் நாளெல்லாம்
பொன்மாரி யாகப் பொழி. ... 5
பொன்மகளே பொன்னுடன் பூமனமும் பூவுலகில்
நன்னெறியாய் நின்றினி நாளெல்லாம் - இன்மையின்
இன்னல் மறைந்து இனிமை நிலவிடப்
பொன்மாரி யாகப் பொழி. ... 6
கலைமக ளேநீ கடைக்கண்ணால் பார்த்தே
உலையும் உலகிது உய்ய - நிலைத்திடும்
நன்மையென ஞானமே நாடிட வுன்னருள்
பொன்மாரி யாகப் பொழி. ... 7
வள்ளிம ணாளநீ வந்தருள் செய்திங்கே
கள்ள மனிதரைக் காய்ந்தழித்தே - உள்ளமெலாம்
உன்கழல் நாளும் உவந்தே உயர்வெய்தப்
பொன்மாரி யாகப் பொழி. ... 8
சிந்தையில் சீர்தருவாய் ஶ்ரீராம உன்னைதினம்
வந்தித்தே வாழ்வில் வளம்பெற்றே - இந்தியப்
பொன்னாடு முன்னிற்கப் பூவுலகில் நன்மைகள்
பொன்மாரி யாகப் பொழி. ... 9
பாரதப் போரினில் பார்த்தனின் சாரதியே
பார்-அதம் ஆவதைப் பார்த்திலையேன்? - வேருடன் ... ... [அதம் = அழிவு, பள்ளம், தாழ்வு]
வின்னம் அறுத்தே விழுமம் எழுந்தோங்கிப்
பொன்மாரி யாகப் பொழி. ... 10
இறையுரு பத்தியில் ஈடுபட்டும் உள்ளே
உறைவதை உள்ளியே ஒன்றும் - நிறைமாந்தர்
பொன்னாய்ப் உருக்கிப் புறந்தரும் சொற்கேட்டால்
பொன்மாரி கொள்ளும் புவி. ... 11
--ரமணி, 21/04/2015, கலி.08/01/5116
*****
- Sponsored content
Page 30 of 36 • 1 ... 16 ... 29, 30, 31 ... 36
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 30 of 36
|
|