புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ரமணியின் கவிதைகள் - Page 30 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 30 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 30 Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
ரமணியின் கவிதைகள் - Page 30 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 30 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 30 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
ரமணியின் கவிதைகள் - Page 30 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 30 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 30 Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
ரமணியின் கவிதைகள் - Page 30 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 30 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 30 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ரமணியின் கவிதைகள் - Page 30 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 30 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 30 Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
ரமணியின் கவிதைகள் - Page 30 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 30 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 30 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
ரமணியின் கவிதைகள் - Page 30 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 30 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 30 Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
ரமணியின் கவிதைகள் - Page 30 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 30 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 30 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரமணியின் கவிதைகள்


   
   

Page 30 of 36 Previous  1 ... 16 ... 29, 30, 31 ... 36  Next

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Wed Oct 31, 2012 1:22 pm

First topic message reminder :

கணினி போற்றுதும்!?
ரமணி, 18/08/2012

கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!
பணியெது வாகிலும் பாங்குறச் செய்திடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!

பலவகை வடிவினில் உலகில் உறைந்திடும்
பலவகை மனிதரும் பலவாறு உகந்திடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!

இன்றைய உலகின் எலிகள் போட்டியில்
பகலும் இரவும் மனிதர் வாழ்வினை
நிலைபெறச் செய்திடும் கணினி போற்றுதும்!

குழந்தை மனம்முதல் கிழவர் மனம்வரை
கலைகள் போற்றித் திறன்கள் வளர்த்து
கனவுகள் தந்திடும் கணிணி போற்றுதும்!

குடும்பம் முழுவதும் கணினி வகைகள்!
மேசைக் கணினியும் மடிமேல் கணினியும்
அலுவ லகத்திலும் வீட்டிலும் அமர்ந்து
ஆசான் தோழன் மருத்துவன் செயலர்
கணக்கன் தூதுவன் கேளிக்கை யாளன்
அனைவர் ’ரோல்’களில் ஆடிடும் பாடிடும்!

கைத்தொலை பேசியில் வன்பொருள் மென்பொருள்
இணைபொரு ளாக உறையும் கணினி
நின்ற விடத்தில் தொடர்பு கொண்டு
உறவினை தொழிலினை வம்பினை வளர்த்திட
ஏழை எளியோர் செல்வம் படைத்தோர்
யாவரும் முனைந்திட வழிவகை செய்திடும்.

உட்பகை வெளிப்பகை வானிலை பொருளியல்
விதிமுறை செயல்வகை என்றிவ் வாறு
அனைத்தும் அறிந்திட அரசுக் குதவி
அரசுகள் அமைக்கும், அரசுகள் கவிழ்க்கும்!

இறைவ னுக்குக் கரங்கள் பலவாம்
கணினி களுக்கும் கரங்கள் பலவே!

விரல்கள் சொடுக்கிட மின்னெலி ஒருகரம்
விரல்கள் தட்டிட விசைமணை ஒருகரம்
கண்கள் பார்த்திட ஒளிர்ந்திடும் திரைமுகம்
பிரதிகள் அச்சிட அச்சுப் பொறிக்கரம்
அச்சின் தாள்களை அலகிட்டு மின்பதியும்.

இணைய தளங்களை எட்டிட ஒருகரம்
மோடம் டெலிஃபோன் இணைப்புகள் தாங்கி
’யாதும் ஊரே யாவரும் கேளிர்’
என்ற முதுமொழி நனவில் காட்டிடும்.

இத்தனை செயல்களால் வாழ்வில் வளம்தரும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்?

தட்டெழுதித் தட்டெழுதிக்
கையெழுத்தை மறக்கச் செய்யும்
மின்னெலியில் விரல்வலிக்கச் சொடுக்கச் செய்யும்

பொழுதுகள் மறந்து அறநெறிகள் துறந்து
உடல்நலம் பேணுவது அசட்டை செய்து

பெரியவர் மனங்களில் வறியவர் ஆகவும்
சிறுவர் சிறுமியர் மடிமையர் ஆகவும்
இளையோர் நெறிகளில் இளைத்தோர் ஆகவும்

தீயோர் செயல்கள் கலியில் பெருகிட
மூவா மருந்தாய் விளங்கிப் பல்கிடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்?

கரணம் என்பது உபகரணம் ஆகி
மனிதன் அவற்றை ஆளும் வரையில்
காரணம் ஆகா மனிதன் அழிவுக்கு.

பொறிகளின் பொறிகள் மனிதன் மனதில்
அல்லதைச் சமைத்து நல்லதை அழித்தால்
பொறிகளின் நெருப்பு ஊழித் தீயாகி
உலகினை அழிக்க உபாயம் ஆகிவிடும்!

*****



ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Fri Apr 10, 2015 8:07 am

தனிநிற்பேன் வடுவெனவே!
(அளவியல் ஆங்கில சானட்: தரவு கொச்சகக் கலிப்பா + குறள் வெண்செந்துறை:
இயைபு: அஆஅஆ, இஈஇஈ, எஎ)


எத்தனையோ புள்ளினங்கள் எல்லாமே கண்ணினிமை
அத்தனையும் வந்துபார்க்கும் அன்றாடம் உறவாடும்
எத்தனையோ புள்ளிசையாம் எல்லாமே பண்ணினிமை
கத்துவதும் கொஞ்சுவதும் காலைமுதல் சிறகாடும்!

அன்னமென எதையெதையோ ஆர்ப்பரித்தே தேடியுண்ணும்
மின்னலெனக் கண்பட்டு மின்னலெனப் பறந்துவிடும்
அன்னமதை நெய்பருப்பை அக்கணமே நாடியுண்ணும்
இன்னலெதும் செய்யாதாம் இன்னிசையும் மறந்துவிடும்!

இத்தனைக்கும் சுற்றிடத்தில் எங்கணுமே சோலையிலை
வித்தெவணோ அத்தனையும் வேலிகாத்தான் முள்மரமே
புத்துகளாய் எருக்கமுடன் புதர்முட்கள் சாலைவரை
ஒத்துவரும் கான்கொடிகள் ஓங்கியெழுந் துள்வருமே!

வானளாவும் அடுக்ககங்கள் வகைமனிதர் நடுவினிலே
தானளாவும் நான்மட்டும் தனிநிற்பேன் வடுவெனவே!

--ரமணி, 03/04/2015

*****

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Apr 10, 2015 8:11 am

ரமணியின் கவிதைகள் - Page 30 2n7nqjl
-
ரமணியின் கவிதைகள் - Page 30 3838410834

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sat Apr 11, 2015 7:57 am

கரிவலம்வந்தநல்லூர் (சங்கரன்கோவில் அருகில்)
(எழுசீர் விருத்தம்: விளம் மா விளம் மா விளம் விளம் மா)
(சம்பந்தர் தேவாரம்: 3.120.1: மங்கையர்க் கரசி வானவர்கோன் பாவை)

கோவில்
http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=4508
http://naavaapalanigotrust.com/index.php?option=com_sobipro&pid=285&sid=1387:karivalamsivan&Itemid=0
http://ammandharsanam.com/magazine/December2011unicode/page021.php

காப்பு
கரிமுகன் ஐங்கரன் கண்ணருளால் வேந்தன் ... [வேந்தன் = இந்திரன்]
கரிவலம் வந்தநல்லூர் காணும் இறைவனாம்
பால்வண்ண நாதர் பரிந்தருள் செய்திடும்
கால்வண்ணம் கூறுவேன் கண்டு.

பதிகம்
இந்திரன் ஜெயந்தன் பெற்றதால் சாபம்
. இருவரும் வேடுவர் குலத்தில்
வந்தனர் பிறந்து பூமியில் ஓர்நாள்
. வாளிவில் கொண்டவர் அலைந்தே
வந்ததில் காள வனந்தனில் வேட்டை
. யாடிடக் கண்டவி லிங்கம்
கந்தலாய்ப் புலியின் தோலணி யீசன்
. கரிவலம் வந்தநல் லூரே. ... 1

[ஜெயந்தன் = இந்திரன் மகன்; வாளிவில் = அம்பும் வில்லும்;
காளவனம் = கரிவலம்வந்தநல்லூரின் ஒரு பெயர்]

வான்பசு வருணன் விஞ்சையர் சித்தர்
. மரகதன் வாயுவும் இந்தக்
கான்தரு நிலத்தில் விலங்கெனத் தோன்றிக்
. கருத்தனை வழிபட ஈசன்
ஆன்றவர் துதியில் அகமகிழ் வுறவே
. அனைவரின் சாபமும் தீரக்
காந்தனாம் தேவன் இந்திரன் ஏறும்
. கரிவலம் வந்தநல் லூரே. ... 2

[வான்பசு = காமதேனு; விஞ்ஞையர் = வித்தியாதரர்; மரகதன் = குபேரன்;
ஆன்றவர் = தேவர்; காந்தன் = தலைவன்]



ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Mon Apr 13, 2015 7:52 am

இறைவனின் பேராம் பால்வண நாதர்
. இலக்குவன் வழிபட நின்றார்
இறைவியின் பேராம் ஒப்பனை யம்மை
. இறைவனை மேவிய மர்ந்தாள்
கறைதனைக் கொண்டே அமுதினை தேவர்க்
. களித்தனர் கறைமிடற் றண்ணல்
கறுவியே வாவி சுக்கிரர் செய்தார்
. கரிவலம் வந்தநல் லூரே. ... 3

சுக்கிரர் வாவி பாலமு தாகச்
. செய்திறை யருளினை வேண்ட
முக்கணர் சோதி வாவியெ ழுந்தே
. முன்னுரு லிங்கமுட் சேர
அக்கணம் வாவி நீருள தாக
. அங்கணர் பால்வண ரானார்
கக்கசம் இன்றிப் புரமழித் தாரின் ... ... [கக்கசம் = பிரயாசை, முயற்சி]
. கரிவலம் வந்தநல் லூரே. ... 4


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 13, 2015 8:25 am

ரமணியின் கவிதைகள் - Page 30 103459460 ரமணியின் கவிதைகள் - Page 30 3838410834
-


கரிவலம்வந்தநல்லூர்.
-
பாற்கடலில் கிடைத்த அமிர்தத்தை தேவர்கள்
உண்டுவிட்டதால், அமிர்தம் கிடைக்காமல் வருந்திய
அசுரர்கள் தங்கள் குருவான சுக்ராச்சாரியாரிடம்
சென்று முறையிட்டனர்.

உடனே சுக்ராச்சாரியார் இத்தலம் வந்து இறைவனை
வழிபட்டு ஒரு பால் தடாகத்தை உருவாக்கினார்.
ஈசன் அசுரர் களின் இன்னலைப் போக்குவதற்காக
அந்தப் பால் தடாகத்திலிருந்து ஜோதி வடிவமாய்
வெளிப்பட்டு சிவலிங்கத்தில் கலந்தார். சிவலிங்கம்
பால் வண்ணமாகியது;

பால் தடாகம் நீர் வண்ணமாகியது. இதன் காரணமாகவே
இத்தல ஈசன் பால்வண்ண நாதர் என்றும்; இங்குள்ள
தடாகம் சுக்கிர தீர்த்தம் எனவும் அழைக்கப்படுகிறது.
-
-

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Tue Apr 14, 2015 8:10 am

கரிவலம் வரவே கரிபுரம் பேராம்
. காளவ னம்சுடு காடாம்
கருத்தனம் பரனாம் அம்பர புரமாம்
. அமுதுறும் அசலமென் றோர்பேர்
ஒருபெயர் சிவசக் திபுரமாம் இன்னும்
. ஓர்சிவன் முக்திபு ரமெனக்
கருவனின் தலப்பேர் இங்ஙனம் பலவாம்
. கரிவலம் வந்தநல் லூரே. ... 5

[கருத்தனம் பரனாம் = கருத்தன் (சிவன்) அம்பரனாம்; கருவன் = சங்காரமூர்த்தி சிவன்]

கருவையின் மீதோர் நூறெனும் பாடல்
. கனியுமந் தாதிவெண் பாவும்
உருவினில் பதிற்றுப் பத்தெனும் வகையில்
. ஒருசதம் பாக்களும் செய்த
திருவுடை அதிவீ ரராமனின் ஊரே
. திருக்கரு வையெனச் சொல்லும்
கருமிடற் றண்ணல் மேவிய தலமாம்
. கரிவலம் வந்தநல் லூரே. ... 6


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Wed Apr 15, 2015 8:00 am

கருவைமன் வரதுங் கன்னொரு பிள்ளைக்
. கனியினைப் பெற்றவ னில்லை
கருவையூர் முழுதும் சிவனுருக் கண்டே
. காலடி வைத்திலேன் என்றான்
மரணமும் வந்து சூழவே கொள்ளி
. மருவிலி வைத்தன ரென்றே
கருவுறும் கதைகள் புகழ்ந்திடும் ஊராய்க்
. கரிவலம் வந்தநல் லூரே. ... 7

[கருவைமன் = கருவையின் மன்னன்; மருவிலி = அனாதியாகவே எல்லாம் பொருந்தி
எதுவும் புதிதாக வேண்டாத சிவன்--திருமந்திரம் 9.25]

மலைகொள முயன்ற இலங்கையின் வேந்தை
. மறுகணம் கால்விரற் கீழே
தலைபடத் பத்துத் தோள்பட நசுக்கித்
. தனியருள் செய்துபின் காத்தார்
சிலைநிகர் சக்தி இடமுறும் மேனி
. சிவனெனச் சிந்தையில் வாழும்
கலைமதி மத்தம் தலைநதி கொள்வார்
. கரிவலம் வந்தநல் லூரே. ... 8



ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Fri Apr 17, 2015 9:47 am

(இறுதிப் பகுதி)

அலையுறும் சயனர் மலருறும் பிரமன்
. அழற்றலை தாள்தனைத் தேடி
மலைவுடன் நின்ற பொழுதிவர் அருளி
. மாண்பினைக் காட்டியே நின்றார்
தொலைவினில் அருகில் மனதினில் கண்முன்
. தோழனாய் நின்றருள் சிவனார்
கலைமறி கரத்தர் வினையழி வரத்தர்
. கரிவலம் வந்தநல் லூரே. ... 9

ஆரணம் ஒப்பாப் பன்னெறி இன்னாள்
. அவனியில் மாந்தரை யிழுக்கக்
காரணன் நெறியே உய்நெறி யென்றே
. காரியம் ஆற்றிடும் அடியார்
பூரண நலனும் வேரெனும் அறிவும்
. புண்ணியன் அருளினால் பெறவே
காரிகை மேனி யிடமுற வந்தான்
. கரிவலம் வந்தநல் லூரே. ... 10

வனந்தனில் வாழும் பேயுடன் ஆடும்
. வழித்துணை நாதனைப் போற்றி
மனதினில் ஊறும் தினவினைக் கொண்டே
. மாசறச் செய்தலை வேண்டி
நனவினில் நேரும் நிகழ்வுகள் யாவும்
. நஞ்சுணி உளமெனக் கொண்டால்
கனவிலும் காவலன் கண்திறந் தருளக்
. கரிவலம் வந்தநல் லூரே. ... 11

--ரமணி, 08-11/04/2015

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Mon Apr 20, 2015 7:48 am

பிரதோஷத் துதி
என்குணத்தான் தாளின்னும் உள்ளம் கொள்ளேன்

(இருபத்து நான்கு சீர் ஆசிரிய விருத்தம்:
கூவிளங்காய் காய் மா மா | காய் காய் மா தேமா x 5)


துள்ளிவிழும் வெள்ளலையில் திரளாய் ஓங்கித்
. துவளவைத்த வாசுகியின் விடத்தால் தேவர்
. . துடிதுடித்தே மரணபயம் மனதில் சூழத்
. . . துரத்துகின்ற வேளையிலே விரைந்தே ஓடித்
. . . . துடிகொண்டார் தூமலர்த்தாள் இணையைப் பற்றித்
. . . . . துயர்நீக்கி உயிர்காக்கத் துதித்தே வேண்ட
வள்ளலவர் விழிநுதலார் அபயம் தந்தே
. . வருநஞ்சால் மாதவனின் நிறமும் மாற
. . . மலரவனும் கவலையுற்றே உள்ளம் வாட
. . . . வன்றொண்டர் சுந்தரரை அனுப்பி யந்த
. . . . . வாசுகியின் காளமவர் மணியாய்ச் செய்தே
. . . . . . வளர்மதியர் வரக்கரத்தில் வைத்தே நிற்க
விள்ளலின்றி விடையவரும் அதனை யேற்றே
. . மிடறுவழி விழுங்கிடவே வாயில் கொள்ள
. . . விமலையவள் பதைபதைத்தே கழுத்தைப் பற்ற
. . . . விடமதுவும் நின்றதனால் நீல கண்டர்
. . . . . விண்ணவரின் வேண்டுதலால் பதிமூன் றாம்நாள்
. . . . . . விடையேறிக் கொம்பிடையே நடனம் செய்வார்
எள்ளளவே சுகமெனினும் அதையும் நாடி
. எனதெனவே கொண்டுதினம் மகிழும் நாளில்
. . . எண்ணத்தில் கறையேற வினைகள் ஏறி
. . . . இகவாழ்வை இழிவாழ்வாய்ச் செய்தல் கண்டும்
. . . . . என்குணத்தான் தாளின்னும் உள்ளம் கொள்ளேன்
. . . . . . எந்தையவர் எனக்கெந்நாள் அருள்செய் வாரோ?

--ரமணி, 16-18/04/2015, கலி.03/01/5116

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Tue Apr 21, 2015 7:05 pm

அட்சய திருதியைத் துதி: பொன்மாரி யாகப் பொழி!
(அளவியல் நேரிசை வெண்பா)

விக்னம் விளைத்தே வினைகள் அகற்றியே
லக்னம் திருத்தும் லலிதைமக! - அக்னியாய் ... ... [லக்னம் = காலநேரம்]
என்றன் உளமுறும் ஈனம்கொள் ஞானத்தைப்
பொன்மாரி யாகப் பொழி. ... 1

வேதம் நிலைபெற்றே வேள்விகள் ஓங்கியே
தீதெலாம் நீக்கும் திறமைசேர் - மாதுரியர் ... ... [மாதுரியர் = விவேகியர்]
வன்முறை நீக்கி வளஞ்சேர்க்க வேதனே
பொன்மாரி யாகப் பொழி. ... 2

மூன்றளந்தா னேயினி மூவுலகும் இன்பமுறத்
தான்நீங்கி ஞானம் தழைக்கவே - வான்நிற்கும்
அன்னையின் அன்பே அகமுறவே மாந்தர்க்குப்
பொன்மாரி யாகப் பொழி. ... 3

கண்ணுத லேநின் கழலிணை யாடலில்
மண்ணில் அறந்தழைக்க மானுடர் - எண்ணத்தில்
நன்மையே தங்கி நலம்விளைக்க வுன்னருள்
பொன்மாரி யாகப் பொழி. ... 4

உமையே அமைதியுடன் ஓர்மை அமையக் ... ... [ஓர்மை = ஒற்றுமை]
குமையும் மனிதர் குலாவ - எமைக்காத்தே
இன்னருள் செய்தே இனிவரும் நாளெல்லாம்
பொன்மாரி யாகப் பொழி. ... 5

பொன்மகளே பொன்னுடன் பூமனமும் பூவுலகில்
நன்னெறியாய் நின்றினி நாளெல்லாம் - இன்மையின்
இன்னல் மறைந்து இனிமை நிலவிடப்
பொன்மாரி யாகப் பொழி. ... 6

கலைமக ளேநீ கடைக்கண்ணால் பார்த்தே
உலையும் உலகிது உய்ய - நிலைத்திடும்
நன்மையென ஞானமே நாடிட வுன்னருள்
பொன்மாரி யாகப் பொழி. ... 7

வள்ளிம ணாளநீ வந்தருள் செய்திங்கே
கள்ள மனிதரைக் காய்ந்தழித்தே - உள்ளமெலாம்
உன்கழல் நாளும் உவந்தே உயர்வெய்தப்
பொன்மாரி யாகப் பொழி. ... 8

சிந்தையில் சீர்தருவாய் ஶ்ரீராம உன்னைதினம்
வந்தித்தே வாழ்வில் வளம்பெற்றே - இந்தியப்
பொன்னாடு முன்னிற்கப் பூவுலகில் நன்மைகள்
பொன்மாரி யாகப் பொழி. ... 9

பாரதப் போரினில் பார்த்தனின் சாரதியே
பார்-அதம் ஆவதைப் பார்த்திலையேன்? - வேருடன் ... ... [அதம் = அழிவு, பள்ளம், தாழ்வு]
வின்னம் அறுத்தே விழுமம் எழுந்தோங்கிப்
பொன்மாரி யாகப் பொழி. ... 10

இறையுரு பத்தியில் ஈடுபட்டும் உள்ளே
உறைவதை உள்ளியே ஒன்றும் - நிறைமாந்தர்
பொன்னாய்ப் உருக்கிப் புறந்தரும் சொற்கேட்டால்
பொன்மாரி கொள்ளும் புவி. ... 11

--ரமணி, 21/04/2015, கலி.08/01/5116

*****


Sponsored content

PostSponsored content



Page 30 of 36 Previous  1 ... 16 ... 29, 30, 31 ... 36  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக