புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரமணியின் கவிதைகள்
Page 29 of 36 •
Page 29 of 36 • 1 ... 16 ... 28, 29, 30 ... 32 ... 36
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
First topic message reminder :
கணினி போற்றுதும்!?
ரமணி, 18/08/2012
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!
பணியெது வாகிலும் பாங்குறச் செய்திடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!
பலவகை வடிவினில் உலகில் உறைந்திடும்
பலவகை மனிதரும் பலவாறு உகந்திடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!
இன்றைய உலகின் எலிகள் போட்டியில்
பகலும் இரவும் மனிதர் வாழ்வினை
நிலைபெறச் செய்திடும் கணினி போற்றுதும்!
குழந்தை மனம்முதல் கிழவர் மனம்வரை
கலைகள் போற்றித் திறன்கள் வளர்த்து
கனவுகள் தந்திடும் கணிணி போற்றுதும்!
குடும்பம் முழுவதும் கணினி வகைகள்!
மேசைக் கணினியும் மடிமேல் கணினியும்
அலுவ லகத்திலும் வீட்டிலும் அமர்ந்து
ஆசான் தோழன் மருத்துவன் செயலர்
கணக்கன் தூதுவன் கேளிக்கை யாளன்
அனைவர் ’ரோல்’களில் ஆடிடும் பாடிடும்!
கைத்தொலை பேசியில் வன்பொருள் மென்பொருள்
இணைபொரு ளாக உறையும் கணினி
நின்ற விடத்தில் தொடர்பு கொண்டு
உறவினை தொழிலினை வம்பினை வளர்த்திட
ஏழை எளியோர் செல்வம் படைத்தோர்
யாவரும் முனைந்திட வழிவகை செய்திடும்.
உட்பகை வெளிப்பகை வானிலை பொருளியல்
விதிமுறை செயல்வகை என்றிவ் வாறு
அனைத்தும் அறிந்திட அரசுக் குதவி
அரசுகள் அமைக்கும், அரசுகள் கவிழ்க்கும்!
இறைவ னுக்குக் கரங்கள் பலவாம்
கணினி களுக்கும் கரங்கள் பலவே!
விரல்கள் சொடுக்கிட மின்னெலி ஒருகரம்
விரல்கள் தட்டிட விசைமணை ஒருகரம்
கண்கள் பார்த்திட ஒளிர்ந்திடும் திரைமுகம்
பிரதிகள் அச்சிட அச்சுப் பொறிக்கரம்
அச்சின் தாள்களை அலகிட்டு மின்பதியும்.
இணைய தளங்களை எட்டிட ஒருகரம்
மோடம் டெலிஃபோன் இணைப்புகள் தாங்கி
’யாதும் ஊரே யாவரும் கேளிர்’
என்ற முதுமொழி நனவில் காட்டிடும்.
இத்தனை செயல்களால் வாழ்வில் வளம்தரும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்?
தட்டெழுதித் தட்டெழுதிக்
கையெழுத்தை மறக்கச் செய்யும்
மின்னெலியில் விரல்வலிக்கச் சொடுக்கச் செய்யும்
பொழுதுகள் மறந்து அறநெறிகள் துறந்து
உடல்நலம் பேணுவது அசட்டை செய்து
பெரியவர் மனங்களில் வறியவர் ஆகவும்
சிறுவர் சிறுமியர் மடிமையர் ஆகவும்
இளையோர் நெறிகளில் இளைத்தோர் ஆகவும்
தீயோர் செயல்கள் கலியில் பெருகிட
மூவா மருந்தாய் விளங்கிப் பல்கிடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்?
கரணம் என்பது உபகரணம் ஆகி
மனிதன் அவற்றை ஆளும் வரையில்
காரணம் ஆகா மனிதன் அழிவுக்கு.
பொறிகளின் பொறிகள் மனிதன் மனதில்
அல்லதைச் சமைத்து நல்லதை அழித்தால்
பொறிகளின் நெருப்பு ஊழித் தீயாகி
உலகினை அழிக்க உபாயம் ஆகிவிடும்!
*****
கணினி போற்றுதும்!?
ரமணி, 18/08/2012
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!
பணியெது வாகிலும் பாங்குறச் செய்திடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!
பலவகை வடிவினில் உலகில் உறைந்திடும்
பலவகை மனிதரும் பலவாறு உகந்திடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!
இன்றைய உலகின் எலிகள் போட்டியில்
பகலும் இரவும் மனிதர் வாழ்வினை
நிலைபெறச் செய்திடும் கணினி போற்றுதும்!
குழந்தை மனம்முதல் கிழவர் மனம்வரை
கலைகள் போற்றித் திறன்கள் வளர்த்து
கனவுகள் தந்திடும் கணிணி போற்றுதும்!
குடும்பம் முழுவதும் கணினி வகைகள்!
மேசைக் கணினியும் மடிமேல் கணினியும்
அலுவ லகத்திலும் வீட்டிலும் அமர்ந்து
ஆசான் தோழன் மருத்துவன் செயலர்
கணக்கன் தூதுவன் கேளிக்கை யாளன்
அனைவர் ’ரோல்’களில் ஆடிடும் பாடிடும்!
கைத்தொலை பேசியில் வன்பொருள் மென்பொருள்
இணைபொரு ளாக உறையும் கணினி
நின்ற விடத்தில் தொடர்பு கொண்டு
உறவினை தொழிலினை வம்பினை வளர்த்திட
ஏழை எளியோர் செல்வம் படைத்தோர்
யாவரும் முனைந்திட வழிவகை செய்திடும்.
உட்பகை வெளிப்பகை வானிலை பொருளியல்
விதிமுறை செயல்வகை என்றிவ் வாறு
அனைத்தும் அறிந்திட அரசுக் குதவி
அரசுகள் அமைக்கும், அரசுகள் கவிழ்க்கும்!
இறைவ னுக்குக் கரங்கள் பலவாம்
கணினி களுக்கும் கரங்கள் பலவே!
விரல்கள் சொடுக்கிட மின்னெலி ஒருகரம்
விரல்கள் தட்டிட விசைமணை ஒருகரம்
கண்கள் பார்த்திட ஒளிர்ந்திடும் திரைமுகம்
பிரதிகள் அச்சிட அச்சுப் பொறிக்கரம்
அச்சின் தாள்களை அலகிட்டு மின்பதியும்.
இணைய தளங்களை எட்டிட ஒருகரம்
மோடம் டெலிஃபோன் இணைப்புகள் தாங்கி
’யாதும் ஊரே யாவரும் கேளிர்’
என்ற முதுமொழி நனவில் காட்டிடும்.
இத்தனை செயல்களால் வாழ்வில் வளம்தரும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்?
தட்டெழுதித் தட்டெழுதிக்
கையெழுத்தை மறக்கச் செய்யும்
மின்னெலியில் விரல்வலிக்கச் சொடுக்கச் செய்யும்
பொழுதுகள் மறந்து அறநெறிகள் துறந்து
உடல்நலம் பேணுவது அசட்டை செய்து
பெரியவர் மனங்களில் வறியவர் ஆகவும்
சிறுவர் சிறுமியர் மடிமையர் ஆகவும்
இளையோர் நெறிகளில் இளைத்தோர் ஆகவும்
தீயோர் செயல்கள் கலியில் பெருகிட
மூவா மருந்தாய் விளங்கிப் பல்கிடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்?
கரணம் என்பது உபகரணம் ஆகி
மனிதன் அவற்றை ஆளும் வரையில்
காரணம் ஆகா மனிதன் அழிவுக்கு.
பொறிகளின் பொறிகள் மனிதன் மனதில்
அல்லதைச் சமைத்து நல்லதை அழித்தால்
பொறிகளின் நெருப்பு ஊழித் தீயாகி
உலகினை அழிக்க உபாயம் ஆகிவிடும்!
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
காலைப் போதில்...
(ஒன்பதுசீர் ஆசிரிய விருத்தம்: தேமா தேமா கூவிளம் கருவிளம் கருவிளங்காய்
. தேமா மா மா மா)
காலைப் போதில் காவிரி மணலடி குறுகுறுக்கக்
. காலை எட்டிப் போட்டே செல்வேன்
சோலைத் தென்றல் துல்லிய மலர்மணம் சுமந்தபடி
. துள்ளித் துள்ளித் தோளை அணைக்கும்
நீல வானம் நிர்மல முனிவரின் மனமெனவே
. நீள நெடுகப் பரந்தே விரியும்
காலைச் சோதி கண்விரி யிளங்கனல் பரபரக்கக்
. காணும் நெஞ்சில் கவலை போமே!
--ரமணி, 06/02/2015
*****
(ஒன்பதுசீர் ஆசிரிய விருத்தம்: தேமா தேமா கூவிளம் கருவிளம் கருவிளங்காய்
. தேமா மா மா மா)
காலைப் போதில் காவிரி மணலடி குறுகுறுக்கக்
. காலை எட்டிப் போட்டே செல்வேன்
சோலைத் தென்றல் துல்லிய மலர்மணம் சுமந்தபடி
. துள்ளித் துள்ளித் தோளை அணைக்கும்
நீல வானம் நிர்மல முனிவரின் மனமெனவே
. நீள நெடுகப் பரந்தே விரியும்
காலைச் சோதி கண்விரி யிளங்கனல் பரபரக்கக்
. காணும் நெஞ்சில் கவலை போமே!
--ரமணி, 06/02/2015
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
பிரதோஷத் துதி
அருகிலுள போது...
(வண்ணப் பாடல்)
(திருப்புகழ் பாடல் 5-இன் சந்தம்
’விடமடைசு வேலை அமரர்படை சூலம்
. விசயன்விடு பாண ... மெனவேதான்’)
தனதனன தான தனதனன தான
. தனதனன தான ... தனதான
அருகிலுள போது குருடனென நானும்
. அறியமனம் ஆழ்தல் ... தெரியாதே
உருவுதனை வேண்டும் நறுமலர்கள் தூவும்
. உறவுதனை நாடும் ... வழியொன்றே
வருவினைகள் போக உளவினைகள் மாள
. மரணைவரு நேரம் ... நலமாக
எருதிவரும் ஈசன் விரலிலுறும் சேவை
. எனமனதில் நானும் ... நிறைவேனே! ... 1
மலரிணையில் தூவும் மலர்களெடு போதில்
. மனவளையில் ஏதோ ... நினைவேறும்
கலவமென நாடி எனதெனவே சேரும்
. கழிவுகளில் ஆர ... மகிழ்வேனே
நிலைதவறும் ஈன மனதிலுறும் மாயை
. நினைவுகளை நீதான் ... கொளவேணும்
பலவினைகள் சேரும் பருவமிது போதும்
. பரமனெனை ஆண்டு ... அருளாயோ?. ... 2
[கலவம் = மயில்தோகை]
--ரமணி, 16/02/2015
*****
அருகிலுள போது...
(வண்ணப் பாடல்)
(திருப்புகழ் பாடல் 5-இன் சந்தம்
’விடமடைசு வேலை அமரர்படை சூலம்
. விசயன்விடு பாண ... மெனவேதான்’)
தனதனன தான தனதனன தான
. தனதனன தான ... தனதான
அருகிலுள போது குருடனென நானும்
. அறியமனம் ஆழ்தல் ... தெரியாதே
உருவுதனை வேண்டும் நறுமலர்கள் தூவும்
. உறவுதனை நாடும் ... வழியொன்றே
வருவினைகள் போக உளவினைகள் மாள
. மரணைவரு நேரம் ... நலமாக
எருதிவரும் ஈசன் விரலிலுறும் சேவை
. எனமனதில் நானும் ... நிறைவேனே! ... 1
மலரிணையில் தூவும் மலர்களெடு போதில்
. மனவளையில் ஏதோ ... நினைவேறும்
கலவமென நாடி எனதெனவே சேரும்
. கழிவுகளில் ஆர ... மகிழ்வேனே
நிலைதவறும் ஈன மனதிலுறும் மாயை
. நினைவுகளை நீதான் ... கொளவேணும்
பலவினைகள் சேரும் பருவமிது போதும்
. பரமனெனை ஆண்டு ... அருளாயோ?. ... 2
[கலவம் = மயில்தோகை]
--ரமணி, 16/02/2015
*****
நன்றி ரமணி அவர்களே !
அண்ணாமலை ரெட்டியார் கவடிச் சிந்தைத் தங்களின் காவடிச் சிந்து நினைப்பூட்டியது !
அண்ணாமலை ரெட்டியார் கவடிச் சிந்தைத் தங்களின் காவடிச் சிந்து நினைப்பூட்டியது !
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
ஆம், அது அண்ணாமலை ரெட்டியார் பாணியில் எழுதியதே.
உங்களைப் போன்ற அறிஞர்களின் பாராட்டு எனக்கு மேலும் ஊக்கம் அளிக்கும்.
ரமணி
உங்களைப் போன்ற அறிஞர்களின் பாராட்டு எனக்கு மேலும் ஊக்கம் அளிக்கும்.
ரமணி
மேற்கோள் செய்த பதிவு: 1120923Dr.S.Soundarapandian wrote:நன்றி ரமணி அவர்களே !
அண்ணாமலை ரெட்டியார் கவடிச் சிந்தைத் தங்களின் காவடிச் சிந்து நினைப்பூட்டியது !
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
சிவராத்திரித் துதி: பேசவெண் நாமம்
(கந்த பத்யம் பாணியில் நான்மாத்திரை ஈரசைச்சீராய்ச்
சிந்தடி அளவடி மாறிவரும் அமைப்பு)
பேசும் எண்நா மங்கள்
மாசை நீக்கும் மாயை போக்கும்
வாசம லர்பல தூவி
நேசன் சிவனை நினையென் மனமே. ... 1
பவாய நமவென் றாலே
அவாவும் பிறவிய னைத்தும் நீங்கும்
கவாலி எங்குமி ருப்போன்
சர்வா யநமக்ஷ சாற்றும் நாமம். ... 2
வருந்த வேண்டுவ தில்லை
உருத்தி ரநமஹ உள்ளம் ஏறின்
வருமும் மலமும் போக
நரனேத் தும்மோர் நாமம் பசுபதி. ... 3
உக்கிர நமவென வுரைக்க
பக்குவ மனமுற பயமும் நீங்கும்
எக்கண மேனும் சொலவே
மக்களைக் காக்கும் மாதே வன்பேர். ... 4
பேருரு நாமம் பீமன் என்றால்
யாரும் சொல்ல யாங்கணு மமைதி
பாரின் திசைகள் காக்க
ஏருரு நாமம் ஈசா னன்பேர். ... 5
சிவராத் திரிநாள் சொலவே
கவனம் கொள்வோம் கண்டனி னெண்பேர்
தவறா மல்நாம் இந்நாள்
சிவனின் நாமம் சிந்தை கொள்வோம். ... 6
--ரமணி, 17/02/2014
*****
(கந்த பத்யம் பாணியில் நான்மாத்திரை ஈரசைச்சீராய்ச்
சிந்தடி அளவடி மாறிவரும் அமைப்பு)
பேசும் எண்நா மங்கள்
மாசை நீக்கும் மாயை போக்கும்
வாசம லர்பல தூவி
நேசன் சிவனை நினையென் மனமே. ... 1
பவாய நமவென் றாலே
அவாவும் பிறவிய னைத்தும் நீங்கும்
கவாலி எங்குமி ருப்போன்
சர்வா யநமக்ஷ சாற்றும் நாமம். ... 2
வருந்த வேண்டுவ தில்லை
உருத்தி ரநமஹ உள்ளம் ஏறின்
வருமும் மலமும் போக
நரனேத் தும்மோர் நாமம் பசுபதி. ... 3
உக்கிர நமவென வுரைக்க
பக்குவ மனமுற பயமும் நீங்கும்
எக்கண மேனும் சொலவே
மக்களைக் காக்கும் மாதே வன்பேர். ... 4
பேருரு நாமம் பீமன் என்றால்
யாரும் சொல்ல யாங்கணு மமைதி
பாரின் திசைகள் காக்க
ஏருரு நாமம் ஈசா னன்பேர். ... 5
சிவராத் திரிநாள் சொலவே
கவனம் கொள்வோம் கண்டனி னெண்பேர்
தவறா மல்நாம் இந்நாள்
சிவனின் நாமம் சிந்தை கொள்வோம். ... 6
--ரமணி, 17/02/2014
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
பிரதோஷத் துதி
வானப் பிரத்த வேசம்
(எண்சீர் விருத்தம்: தேமா புளிமா விளம் மா அரையடி)
வானப் பிரத்த வயதெனும் போதும்
. வாழும் வகையில் மாறுதல் இல்லை
மோனம் சிறிதும் பயிலுதல் யின்றி
. மூடன் எனவே அலைவதில் இவன்றன்
ஊனின் பெருக்கில் உயிரொளி சுருங்க
. உள்ளம் முழுதும் அல்லவை சேர்த்தான்!
ஞானத் திரளாய்ப் பொலிவுறும் பெம்மான்
. நலியும் இவனை உயர்த்துவ தென்றோ? ... 1
பண்ணும் இசையும் செவியுறும் போது
. பம்மும் இருளைச் சிலகணம் கரைத்தான்
கண்ணும் கரமும் குவிந்திடும் போது
. கட்டுண் டுளத்தைச் சிலகணம் நிறைத்தான்
விண்ணில் நிறங்கள் கலந்திடும் நேரம்
. விஞ்சும் இறைமை விழிகளில் இறைத்தான்
எண்ணம் உடனே இருமையைத் தேட
. எல்லாம் சிதறி இறையுணர் வறுமே! ... 2
கண்ணும் கருத்தும் உலகியல் இனிமை
. காணும் வழியில் சென்றிடும் போதும்
வெண்ணீ றணிதல் பூசனை செய்தல்
. வேசம் எனநீ அறிந்திடும் போதும்
தண்ணென் றுனது திருவருட் தெளிவை
. சற்றே யிவனுக் களித்திவன் வாணாள்
பண்ணும் வினையால் தீமையென் றெதுவும்
. பற்றா திருக்க அருள்புரி வாயே! ... 3
--ரமணி, 02/03/2015, கலி.18/11/5115
*****
வானப் பிரத்த வேசம்
(எண்சீர் விருத்தம்: தேமா புளிமா விளம் மா அரையடி)
வானப் பிரத்த வயதெனும் போதும்
. வாழும் வகையில் மாறுதல் இல்லை
மோனம் சிறிதும் பயிலுதல் யின்றி
. மூடன் எனவே அலைவதில் இவன்றன்
ஊனின் பெருக்கில் உயிரொளி சுருங்க
. உள்ளம் முழுதும் அல்லவை சேர்த்தான்!
ஞானத் திரளாய்ப் பொலிவுறும் பெம்மான்
. நலியும் இவனை உயர்த்துவ தென்றோ? ... 1
பண்ணும் இசையும் செவியுறும் போது
. பம்மும் இருளைச் சிலகணம் கரைத்தான்
கண்ணும் கரமும் குவிந்திடும் போது
. கட்டுண் டுளத்தைச் சிலகணம் நிறைத்தான்
விண்ணில் நிறங்கள் கலந்திடும் நேரம்
. விஞ்சும் இறைமை விழிகளில் இறைத்தான்
எண்ணம் உடனே இருமையைத் தேட
. எல்லாம் சிதறி இறையுணர் வறுமே! ... 2
கண்ணும் கருத்தும் உலகியல் இனிமை
. காணும் வழியில் சென்றிடும் போதும்
வெண்ணீ றணிதல் பூசனை செய்தல்
. வேசம் எனநீ அறிந்திடும் போதும்
தண்ணென் றுனது திருவருட் தெளிவை
. சற்றே யிவனுக் களித்திவன் வாணாள்
பண்ணும் வினையால் தீமையென் றெதுவும்
. பற்றா திருக்க அருள்புரி வாயே! ... 3
--ரமணி, 02/03/2015, கலி.18/11/5115
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
பிரதோஷத் துதி: புகலாகும் உம்தாள்!
(எழுசீர் சந்த விருத்தம்: தனதான தான தனதான தான தனதான தான தனனா)*
கருநீல கண்டர் விடைமீது நின்று களியாடும் நேரம் இதுவே
கருவண்டு சூழும் அலர்சூடும் அன்னை கனிவோடு கண்டு மகிழ்வாள்
இருளாகு முன்னர் நிறைவண்ண வானம் இறைசூழும் இன்பம் எனவே
திருவால யத்தில் திருமேனி கண்டு திருநீற ணிந்து பணிவேன். ... 1
சுழல்போன்ற வாழ்வில் சுயமாக எண்ணி சுகமென்று கொள்ளும் எதுவும்
விழலென்று கண்டு வினைசெய்தல் விட்டு விகசித்து வாழ்தல் வருமோ
குழகன்தாள் பற்றி வருநாளில் நின்று குறியேது மின்றி உயர
மழுவேந்தி யென்றன் உளமேவி நின்று மருள்நீக்க வேண்டும் அரனே. ... 2
அகலாத இன்பம் உளையாத உள்ளம் அழியாத கல்வி தருவீர்
இகவாழ்வில் என்னுள் இறையெண்ணம் மேவி இதம்செய்து வாழ அருள்வீர்
சிகைதன்னில் திங்கள் இடமேவு மங்கை திரையாறு மென்று வருவீர்
புகலாகும் உம்தாள் நிலையாகி நன்மை பொழுதேறு முன்னர் புரிவீர்! ... 3
--ரமணி, 18/03/2015, கலி.04/12/5115
குறிப்பு:
எழுசீர் சந்த விருத்தம்: தனதான தான தனதான தான தனதான தான தனனா
இந்தச் சந்த விருத்த யாப்பில் திருஞானசம்பந்தர் தென்திருமுல்லைவாயில் கோவிலுறை
சிவனைப் போற்றும் தம் பதிகத்தில் பயன்படுத்தியுள்ளார் என்று இதை அறிமுகப்படுத்திய
சந்தவசந்தம் குழுமம் சிவத்திரு. வி.சுப்பிரமணியன் அவர்களுக்கு நன்றி.
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=2&Song_idField=20880
இந்த சந்த அமைப்பை ஆறவது சீரில் மட்டும் தனதான/தானான என்று மாற்றி,
’குமுதம்’ திரைப்படத்தில் வரும் ’என்னைவிட்டு ஓடிப்போக முடியுமா?’ பாடலில்
கீழ்வரும் வரிகளில் பாடலாசிரியர் மருதகாசி பயன்படுத்தியுள்ளார்:
மணமாலை சூட்டி பலபேரும் வாழ்த்த வளையாடும் என்கையின் விரலில்
கணையாழி பூட்டிப் புதுப்பாதை காட்டி உறவாடும் திருநாளின் இரவில்
இளந்தென்றல் காற்றும் வளர்காதல் பாட்டும் விளையாடும் அழகான அறையில்
சுவையூறும் பாலும் கனிச்சாறும் கொண்டு தனியேநீ வருகின்ற நிலையில்
மேலே நான் எழுதியுள்ள சந்தப் பாடலும் இந்த வரிகளில் ராகத்தில் அமைந்துள்ளது.
--ரமணி
*****
(எழுசீர் சந்த விருத்தம்: தனதான தான தனதான தான தனதான தான தனனா)*
கருநீல கண்டர் விடைமீது நின்று களியாடும் நேரம் இதுவே
கருவண்டு சூழும் அலர்சூடும் அன்னை கனிவோடு கண்டு மகிழ்வாள்
இருளாகு முன்னர் நிறைவண்ண வானம் இறைசூழும் இன்பம் எனவே
திருவால யத்தில் திருமேனி கண்டு திருநீற ணிந்து பணிவேன். ... 1
சுழல்போன்ற வாழ்வில் சுயமாக எண்ணி சுகமென்று கொள்ளும் எதுவும்
விழலென்று கண்டு வினைசெய்தல் விட்டு விகசித்து வாழ்தல் வருமோ
குழகன்தாள் பற்றி வருநாளில் நின்று குறியேது மின்றி உயர
மழுவேந்தி யென்றன் உளமேவி நின்று மருள்நீக்க வேண்டும் அரனே. ... 2
அகலாத இன்பம் உளையாத உள்ளம் அழியாத கல்வி தருவீர்
இகவாழ்வில் என்னுள் இறையெண்ணம் மேவி இதம்செய்து வாழ அருள்வீர்
சிகைதன்னில் திங்கள் இடமேவு மங்கை திரையாறு மென்று வருவீர்
புகலாகும் உம்தாள் நிலையாகி நன்மை பொழுதேறு முன்னர் புரிவீர்! ... 3
--ரமணி, 18/03/2015, கலி.04/12/5115
குறிப்பு:
எழுசீர் சந்த விருத்தம்: தனதான தான தனதான தான தனதான தான தனனா
இந்தச் சந்த விருத்த யாப்பில் திருஞானசம்பந்தர் தென்திருமுல்லைவாயில் கோவிலுறை
சிவனைப் போற்றும் தம் பதிகத்தில் பயன்படுத்தியுள்ளார் என்று இதை அறிமுகப்படுத்திய
சந்தவசந்தம் குழுமம் சிவத்திரு. வி.சுப்பிரமணியன் அவர்களுக்கு நன்றி.
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=2&Song_idField=20880
இந்த சந்த அமைப்பை ஆறவது சீரில் மட்டும் தனதான/தானான என்று மாற்றி,
’குமுதம்’ திரைப்படத்தில் வரும் ’என்னைவிட்டு ஓடிப்போக முடியுமா?’ பாடலில்
கீழ்வரும் வரிகளில் பாடலாசிரியர் மருதகாசி பயன்படுத்தியுள்ளார்:
மணமாலை சூட்டி பலபேரும் வாழ்த்த வளையாடும் என்கையின் விரலில்
கணையாழி பூட்டிப் புதுப்பாதை காட்டி உறவாடும் திருநாளின் இரவில்
இளந்தென்றல் காற்றும் வளர்காதல் பாட்டும் விளையாடும் அழகான அறையில்
சுவையூறும் பாலும் கனிச்சாறும் கொண்டு தனியேநீ வருகின்ற நிலையில்
மேலே நான் எழுதியுள்ள சந்தப் பாடலும் இந்த வரிகளில் ராகத்தில் அமைந்துள்ளது.
--ரமணி
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
வண்ணச் சிதறல் விஞ்ஞானம்
(அறுசீர் விருத்தம்: தேமா/புளிமா மா காய் .. மா மா காய்)
ஹோலித் திருநாள் விளையாட்டாய்
. உறங்கும் வானில் வெகுதூரம்
கோலப் பொடியை இறைத்ததுயார்?
. குழலில் பீய்ச்சி அடித்ததுயார்?
சாலச் சிறந்தே ஓர்வண்ணம்
. சாற்றும் சேதி எதுவாகும்?
தூலப் புகையாய் விரிந்தேதான்
. சூக்கம் பெருமை காட்டுவதோ? ... 1 ... ;சூக்கம் = சூக்குமம்’
சூரி யவொளி வெப்பத்தில்
. சூறைக் காற்று வீசிடுமே
நேரும் காற்றின் நுண்துகளில்
. நிகழும் மின்னேற் றம்பாய
பாரின் துருவ வான்வெளியின்
. பகுதி உறையும் காற்றணுக்கள்
சாரம் குறைய மோதுவதில்
. சகட்டு மேனிக் கோலங்கள்! ... 2
பசுமை வண்ணம் விளைப்பதுவே
. பக்கல் உள்ள உயிர்வளியாம் ... [உயிர்வளி = ஆக்ஸிஜன்]
விசும்பில் முழுதும் செம்மையென
. விளைதல் தூர உயிர்வளியாம்
திசைகள் முழுதும் நீலமெனத்
. திகழும் வாயு ருசரகமாம் ... [ருசரகம் = நைட்ரஜன்]
இசையும் வண்ணம் ஏழின்பின்
. இலங்கும் வாயுத் துகளெனவே. ... 3
இயற்கைக் காட்சிப் பின்னணியாய்
. இறையின் சக்தி உளதென்றே
செயலில் கொண்டு ஆய்வோர்க்கே
. திண்ணம் உண்மை புலனாகும்
இயற்கை பின்னே சூனியமே
. என்றே கொளுவோர் வாணாளில்
இயக்கம் இயக்கன் இயங்குபொருள்
. இனிமை எதுவென் றறியாரே. ... 4
--ரமணி, 22/03/2015
உதவி:
http://www.northernlightscentre.ca/northernlights.html
*****
(அறுசீர் விருத்தம்: தேமா/புளிமா மா காய் .. மா மா காய்)
ஹோலித் திருநாள் விளையாட்டாய்
. உறங்கும் வானில் வெகுதூரம்
கோலப் பொடியை இறைத்ததுயார்?
. குழலில் பீய்ச்சி அடித்ததுயார்?
சாலச் சிறந்தே ஓர்வண்ணம்
. சாற்றும் சேதி எதுவாகும்?
தூலப் புகையாய் விரிந்தேதான்
. சூக்கம் பெருமை காட்டுவதோ? ... 1 ... ;சூக்கம் = சூக்குமம்’
சூரி யவொளி வெப்பத்தில்
. சூறைக் காற்று வீசிடுமே
நேரும் காற்றின் நுண்துகளில்
. நிகழும் மின்னேற் றம்பாய
பாரின் துருவ வான்வெளியின்
. பகுதி உறையும் காற்றணுக்கள்
சாரம் குறைய மோதுவதில்
. சகட்டு மேனிக் கோலங்கள்! ... 2
பசுமை வண்ணம் விளைப்பதுவே
. பக்கல் உள்ள உயிர்வளியாம் ... [உயிர்வளி = ஆக்ஸிஜன்]
விசும்பில் முழுதும் செம்மையென
. விளைதல் தூர உயிர்வளியாம்
திசைகள் முழுதும் நீலமெனத்
. திகழும் வாயு ருசரகமாம் ... [ருசரகம் = நைட்ரஜன்]
இசையும் வண்ணம் ஏழின்பின்
. இலங்கும் வாயுத் துகளெனவே. ... 3
இயற்கைக் காட்சிப் பின்னணியாய்
. இறையின் சக்தி உளதென்றே
செயலில் கொண்டு ஆய்வோர்க்கே
. திண்ணம் உண்மை புலனாகும்
இயற்கை பின்னே சூனியமே
. என்றே கொளுவோர் வாணாளில்
இயக்கம் இயக்கன் இயங்குபொருள்
. இனிமை எதுவென் றறியாரே. ... 4
--ரமணி, 22/03/2015
உதவி:
http://www.northernlightscentre.ca/northernlights.html
*****
- Sponsored content
Page 29 of 36 • 1 ... 16 ... 28, 29, 30 ... 32 ... 36
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 29 of 36
|
|