புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரமணியின் கவிதைகள் - Page 28 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 28 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 28 Poll_c10 
91 Posts - 63%
heezulia
ரமணியின் கவிதைகள் - Page 28 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 28 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 28 Poll_c10 
34 Posts - 24%
வேல்முருகன் காசி
ரமணியின் கவிதைகள் - Page 28 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 28 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 28 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
ரமணியின் கவிதைகள் - Page 28 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 28 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 28 Poll_c10 
6 Posts - 4%
eraeravi
ரமணியின் கவிதைகள் - Page 28 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 28 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 28 Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
ரமணியின் கவிதைகள் - Page 28 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 28 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 28 Poll_c10 
1 Post - 1%
viyasan
ரமணியின் கவிதைகள் - Page 28 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 28 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 28 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரமணியின் கவிதைகள் - Page 28 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 28 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 28 Poll_c10 
283 Posts - 45%
heezulia
ரமணியின் கவிதைகள் - Page 28 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 28 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 28 Poll_c10 
231 Posts - 37%
mohamed nizamudeen
ரமணியின் கவிதைகள் - Page 28 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 28 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 28 Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
ரமணியின் கவிதைகள் - Page 28 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 28 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 28 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ரமணியின் கவிதைகள் - Page 28 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 28 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 28 Poll_c10 
19 Posts - 3%
prajai
ரமணியின் கவிதைகள் - Page 28 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 28 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 28 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ரமணியின் கவிதைகள் - Page 28 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 28 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 28 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ரமணியின் கவிதைகள் - Page 28 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 28 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 28 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ரமணியின் கவிதைகள் - Page 28 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 28 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 28 Poll_c10 
7 Posts - 1%
mruthun
ரமணியின் கவிதைகள் - Page 28 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 28 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 28 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரமணியின் கவிதைகள்


   
   

Page 28 of 36 Previous  1 ... 15 ... 27, 28, 29 ... 32 ... 36  Next

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Wed Oct 31, 2012 1:22 pm

First topic message reminder :

கணினி போற்றுதும்!?
ரமணி, 18/08/2012

கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!
பணியெது வாகிலும் பாங்குறச் செய்திடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!

பலவகை வடிவினில் உலகில் உறைந்திடும்
பலவகை மனிதரும் பலவாறு உகந்திடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!

இன்றைய உலகின் எலிகள் போட்டியில்
பகலும் இரவும் மனிதர் வாழ்வினை
நிலைபெறச் செய்திடும் கணினி போற்றுதும்!

குழந்தை மனம்முதல் கிழவர் மனம்வரை
கலைகள் போற்றித் திறன்கள் வளர்த்து
கனவுகள் தந்திடும் கணிணி போற்றுதும்!

குடும்பம் முழுவதும் கணினி வகைகள்!
மேசைக் கணினியும் மடிமேல் கணினியும்
அலுவ லகத்திலும் வீட்டிலும் அமர்ந்து
ஆசான் தோழன் மருத்துவன் செயலர்
கணக்கன் தூதுவன் கேளிக்கை யாளன்
அனைவர் ’ரோல்’களில் ஆடிடும் பாடிடும்!

கைத்தொலை பேசியில் வன்பொருள் மென்பொருள்
இணைபொரு ளாக உறையும் கணினி
நின்ற விடத்தில் தொடர்பு கொண்டு
உறவினை தொழிலினை வம்பினை வளர்த்திட
ஏழை எளியோர் செல்வம் படைத்தோர்
யாவரும் முனைந்திட வழிவகை செய்திடும்.

உட்பகை வெளிப்பகை வானிலை பொருளியல்
விதிமுறை செயல்வகை என்றிவ் வாறு
அனைத்தும் அறிந்திட அரசுக் குதவி
அரசுகள் அமைக்கும், அரசுகள் கவிழ்க்கும்!

இறைவ னுக்குக் கரங்கள் பலவாம்
கணினி களுக்கும் கரங்கள் பலவே!

விரல்கள் சொடுக்கிட மின்னெலி ஒருகரம்
விரல்கள் தட்டிட விசைமணை ஒருகரம்
கண்கள் பார்த்திட ஒளிர்ந்திடும் திரைமுகம்
பிரதிகள் அச்சிட அச்சுப் பொறிக்கரம்
அச்சின் தாள்களை அலகிட்டு மின்பதியும்.

இணைய தளங்களை எட்டிட ஒருகரம்
மோடம் டெலிஃபோன் இணைப்புகள் தாங்கி
’யாதும் ஊரே யாவரும் கேளிர்’
என்ற முதுமொழி நனவில் காட்டிடும்.

இத்தனை செயல்களால் வாழ்வில் வளம்தரும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்?

தட்டெழுதித் தட்டெழுதிக்
கையெழுத்தை மறக்கச் செய்யும்
மின்னெலியில் விரல்வலிக்கச் சொடுக்கச் செய்யும்

பொழுதுகள் மறந்து அறநெறிகள் துறந்து
உடல்நலம் பேணுவது அசட்டை செய்து

பெரியவர் மனங்களில் வறியவர் ஆகவும்
சிறுவர் சிறுமியர் மடிமையர் ஆகவும்
இளையோர் நெறிகளில் இளைத்தோர் ஆகவும்

தீயோர் செயல்கள் கலியில் பெருகிட
மூவா மருந்தாய் விளங்கிப் பல்கிடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்?

கரணம் என்பது உபகரணம் ஆகி
மனிதன் அவற்றை ஆளும் வரையில்
காரணம் ஆகா மனிதன் அழிவுக்கு.

பொறிகளின் பொறிகள் மனிதன் மனதில்
அல்லதைச் சமைத்து நல்லதை அழித்தால்
பொறிகளின் நெருப்பு ஊழித் தீயாகி
உலகினை அழிக்க உபாயம் ஆகிவிடும்!

*****



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Dec 27, 2014 5:24 pm

நன்றாக இருக்கிறது .
தனி நடை , தளிர் நடை .
வெளிப்படை உரை நடை .
நன்றி , ரமணி அவர்களே .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Wed Dec 31, 2014 7:54 am

ஒட்டியும் வெட்டியும்: காதல்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

ஒட்டி

கண்ணும் கண்ணும் கலந்தே பேசும்
வண்ணத் துள்ளல் வளரும் காதல்!
எண்ணத் தியைபில் இன்சொற் கேட்டே
பண்ணாய் ஆர்க்கப் பரவச மாமே! ... 1

காத்திருப் பதுவோர் காலச் சுமையே
பார்த்துவிட் டாலோ பரபரப் பாகும்!
வேர்க்கும் கையில் விதிர்க்கும் மெய்யில்
ஆர்க்கும் இதயம் காதில் ஒலித்தே! ... 2

தென்றல் சுகமாய் தெய்வம் எதிராய்
அன்றில் வண்ணம் அகத்தில் விரிய ... ... [அன்றில் = மயில் போன்ற பறவை, இங்கு மயில்]
மன்றில் ஆடும் மாந்தர் மனங்கள்
இன்றென நேற்றென என்றும் கூடும்! ... 3

காலம் நிற்கக் காலம் விரைய
ஏலும் உள்ளத் தினிமைப் பகிர்வில்
கையும் மெய்யும் கட்டுணும் போதில்
வையம் மறந்தே வானம் வருமே! ... 4

சின்னச் சின்னச் செப்பிய மாகப் ... ... [செப்பியம் = திரும்பத் திரும்ப உச்சரித்தல்]
பொன்னின் சொற்கள் பொருளைத் தேடா
இன்னும் இன்னும் இன்னும் என்றே
வன்னம் கூட்டும் வாயுறை தேடும்! ... 5 ... [வாயுறை = உறுதிமொழி; வாயின் உறையாகிய இதழ்கள்]

இன்பக் கனவில் இருவர் மனதும்
என்றும் வேண்டும் இதுபோல் எனினும்
அன்னை தந்தை ஆசியைக் கொள்ளும்
தன்னம் பிக்கை தாங்கும் தவிப்பே! ... 6

வெட்டி

காதலிப் பதுவும் கள்குடிப் பதுவும்
போதையில் ஒன்றெனில் பொய்யிலை யென்பேன்
கண்ணும் கண்ணும் கலப்ப தெல்லாம்
பண்படும் மாயையின் பாதை யென்பேன். ... 1

காத்திருப் பதுவோர் கால விரயம்
பார்த்தலில் கொள்ளும் பரபரப் புடனே
இருவர் ஈர்ப்பில் இயைவதன் பின்னே
மருவுடல் சுரக்கும் வேதியல் திரவமே. ... 2

தென்றல் சுகமும் தெய்வம் எதிரும்
அன்றில் வணமும் அகத்தின் மோகமே
மன்றில் ஆடும் மனத்தின் காதலில்
என்றும் நிலைக்கும் ஈடென் றில்லை. ... 3

ஆண்பெண் நேசம் அகமுறும் காமம்
வேண்டும் இயற்கை விளையாட் டாகும்
இருவர் மனமும் இயைவதன் சிறப்பு
திருமணம் பின்னே தெருவினில் அல்ல! ... 4

காஞ்சன மொழிகள் காக்கைப் பொன்னே
ஆஞ்சொலல் எல்லாம் ஆறுத லாகா
இன்னும் இன்னும் என்றே வேண்டில்
பின்புலம் யாவும் பெற்றிமை யென்றே. ... 5 ... [பெற்றிமை = பெருமை, செய்யவேண்டும் முறை]

இன்பக் கனவெலாம் இல்லறம் பின்னே
துன்பம் வாழ்வில் துளிவந் தாலும்
அன்னை தந்தை ஆசியா லோசனை
என்றும் வாழ்வில் இன்புறச் செயுமே. ... 6

--ரமணி, 30/12/2014, கலி.15/09/5115

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Thu Jan 01, 2015 11:57 am

வைகுண்ட ஏகாதசித் துதி
(காவடிச் சிந்து)

பாம்பணையில் துஞ்சுமது சூதன் - அவன்
. பாதவிணை பற்றுவோர்க்கே ஏதும் - ஒரு
. . வினையால்வரும் துயர்நீங்கிடும்
. . இனிமேல்வரும் பிறப்பென்றிலை
பாதம் - அதைப் - பாரும். ... 1

மார்கழியாம் மாதமுறும் நாளாம் - அது
. வைகுண்டம் கண்ணிலுறும் நாளாம் - அன்று
. . பெருமாளவர் ரத்னாங்கியில்
. . அரங்கத்தினில் கொலுவீற்றிடப்
பாரும் - அருள் - சேரும். ... 2

ஞானபுலன் கர்மபுலன் பத்தும் - அதை
. நாடிநலி வாகுமனச் சொத்தும் - தந்தே
. . பகற்பத்தினில் ராப்பத்தினில்
. . பரந்தாமனின் புகழ்பாடிட
ஞானம் - உறும் - மோனம். ... 3

நாரணனின் நாமஜபம் நாளும் - கொள்ள
. நன்மையதே வந்துநம்மை யாளும் - அவன்
. . திருமார்புறை யலைமாமகள்
. . உடன்சேர்ந்தருள் நலம்சேரவே
நாடும் - அருள் - கூடும். ... 4

பாற்கடலில் பள்ளிகொள்ளும் மாயன் - அவன்
. பாமரரைக் காத்தருளும் ஆயன் - அவன்
. . புகழ்பாடவே புவிமீதினில்
. . மகிழ்வாகிடும் வருநாளெனப்
பார்ப்போம் - வினை - தீர்ப்போம். ... 5

--ரமணி, 01/01/2015, கலி.17/09/5115

*****


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 01, 2015 12:54 pm

ரமணியின் கவிதைகள் - Page 28 3838410834
-
ரமணியின் கவிதைகள் - Page 28 QLkkMuhlT2aGke36u5YQ+narayana

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Thu Jan 01, 2015 2:08 pm

நல்ல பதிவு...
நன்றி...




கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

ரமணியின் கவிதைகள் - Page 28 W5td1pX3QFi1kBRhH0I3+Affection
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Fri Jan 02, 2015 6:22 pm

பிரதோஷ நாயகன் துதி
(காவடிச் சிந்து)

மந்தரக்கோ மத்தெனவே நாட்டி - அதில் ... ... [கோ = மலை]
. வாசுகியை நாணெனவே பூட்டி - பாற்
. . கடலைக்கடை அமுதம்வர
. . அமரர்குலம் அசுரர்குலம்
ஆலம் - எழ - ஓலம்! ... 1

கண்ணுதலான் பாதவிணை தேடி - தேவர்
. கண்ணிருள அச்சமுடன் ஓடி - அவர்
. . நலம்காத்திட நஞ்சைக்கொள
. . மலைமாதவள் விதிர்ப்போடவர்
கழுத்தைக் - கரம் - அழுத்த ... 2

நீலமணி யாயெழுந்த காளம் - அந்த
. நீள்சடையான் கண்டசிறு கோளம் - அவர்
. . உமையாளிடம் கொளும்தேவராய்
. . மழுமான்தனைக் கரமேந்தவே
நீளும் - வினை - மாளும்! ... 3

நந்திதலைக் கோடுமிசை நாதர் - அவர்
. அந்தியிலே ஆடுகின்ற வேதர் - அவர்
. . பதமாடலில் மனமோய்ந்திட
. . பவநீக்கமும் கதிமுக்தியும்
நாடும் - உள்ளம் - கூடும்! ... 4

வாணியவள் வீணையினை மீட்ட - வெள்ளை
. வாரணனும் வேய்குழலைக் கூட்ட - அங்கே
. . மலரோனவன் கரச்சீர்தர ... ... [சீர் = தாளம்]
. . மதுசூதனன் முழவார்ந்திட
வாட்டம் - தீர்க்கும் ஆட்டம். ... 5

வீரணரின் லிங்கவுரு மீது - ஆறாய்
. வீழுகின்ற நீர்பொழியும் போது - அதை
. . விழிநாடிட வினையோடிட
. . வருநாளெலாம் இனிதாகிடும்
வண்ணம் - வரும் - திண்ணம். ... 6

--ரமணி, 02/01/2015, கலி.17/09/5115

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Mon Jan 05, 2015 6:09 am

ஆதிரைத் திருநாள் துதி
(காவடிச் சிந்து)

தாருகவ னந்தனிலே சாது - வெல்லாம்
. தற்பெருமை கொண்டிருந்த போது - ஈசன்
. . இரந்தேயுணி யுருவங்கொள
. . அரிமோகினி அரிவையெனத்
தானே - முன்னின் - றானே. ... 1

சாதுவெலாம் மோகினையை நாட - அவர்
. தாரமெலாம் சுந்தரனோ டாட - துறவோர்
. . முனிவாலெழும் எரியால்வரும்
. . வனயானையும் பிறசெல்வமும்
செய்தார் - சொல்லால் - எய்தார். ... 2

ஆனையுரி ஆடையெனக் கொண்டார் - ஈசன்
. மானுடுக்கை அக்கினியைக் கண்டார் - அவை
. . கரமேல்வர வலிபூதமும்
. . பரமேஸ்வரன் பதம்கீழுற
நடனம் - ஆகும் - படனம். ... 3

தாருவனம் ருத்திரனாய் ஆடும் - ஈசன்
. தாண்டவமா னந்தமனம் ஓடும் - தில்லை
. . நடராசனை சிவகாமியை
. . திருவாதிரை தினம்காணவே
தருவாம் - அருள் - உருவாம். ... 4 ... [தருவாகும் அருள் உருவாகும்]

சேந்தனாரின் பக்திமனம் கொண்டே - நாமும்
. சேர்ந்துகளித் தேகளியை உண்டே - ஈசன்
. . கழல்நாடியே கதிதேடியே
. . மழுவாயுதம் வினைகொள்ளவே
செய்வோம் - வாழ்வில் - உய்வோம். ... 5

--ரமணி, 02-05/01/2015, கலி.20/09/5115

*****


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 05, 2015 6:16 am

ரமணியின் கவிதைகள் - Page 28 JyxdVqCXTjaCMMjnzUvA+06-natrajar4-300
-
ரமணியின் கவிதைகள் - Page 28 103459460

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sun Jan 18, 2015 6:49 pm

பிரதோஷத் துதி: கேட்பேன் உன்னை!
(இயைபுக் குறள் வெண்செந்துறை)

நந்திதலைக் கொம்பிடையே நர்த்தபதம் ஆடுவதைக் காணும் மாலை
வந்தபோதும் மனமதிலே வாழாதே வேறெதையோ தேடும் வேலை!

வானமெலாம் வண்ணத்தின் ஆனந்தம் சூழுவதைக் காணும் வேளை
நானெதையோ எண்ணத்தில் நாடியதில் ஆழுவதில் வீழும் ஏழை!

ஆரணத்தில் மந்திரமும் ஆலகண்டன் பண்ணொலியும் ஆர்க்கும் போதில்
காரணத்தை நாடுமனம் கட்டுண்ணும் எண்ணவொலி ஆரும் காதில்!

கண்ணெதிரே நீராடும் கனகலிங்கம் கார்மனதில் கல்லாய்த் தெரியும்
எண்ணமெலாம் ஏதேதோ இன்பமென ஐம்புலனும் கனலாய் எரியும்!

சுற்றினிலே காளைமீது சோதியனாய் ஊர்காணும் அம்மை யப்பன்
பற்றுதனில் ஆழ்மனதில் பாமரனாய் வாழ்ந்துவரும் நானோர் மப்பன்!

கார்க்கடலாம் என்னுள்ளம் கடைவதிலே எழுவதெலாம் காக்கைப் பொன்னே
பாற்கடலின் நஞ்சுண்ட பாசுபதன் பாதவிணை பற்றேன் என்னே!

கண்டதுவும் கொண்டதுவும் காட்சியெனக் கோலமென வாழும் என்னை
மிண்டிநீயும் ஆட்கொண்டு மித்திரனாய்க் காத்தருளக் கேட்பேன் உன்னை!

[மிண்டி = நெருங்கி, நெம்பி, முன்தள்ளி]

--ரமணி, 17/01/2015, கலி.03/10/5115

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sun Feb 01, 2015 3:56 pm

பிரதோஷத் துதி
நின்றுனைப் பாடும் நிலை
(அகவற் பின்னல்: எதுகை மோனை இயைபுடன்)

மூலச் சொற்கள்
கூடும் ஆடும் ஓடும் தேடும் பாடும் நாடும்

1. சந்தி

சந்தியில் செம்மை சாயமாய்க் கூடும்
வந்துறும் பாதம் மகிழ்வுடன் ஆடும்
சிந்தையில் உள்ளமும் செவ்வையில் ஓடும்
பந்தமென் றொன்றே பக்கலில் தேடும்
வந்தனை கூறிடும் வாயது பாடும்
எந்தை ஈசனின் இன்னருள் நாடும்! ... 123456

2. ஆலயம்

ஆலமர் செல்வனின் ஆலயம் நாடும்
காலது நின்றிடக் காட்சியும் கூடும்
மேலவன் தெய்வத மேனியைப் பாடும்
மேலுறும் நீரிலுன் மேனியும் ஆடும்
வாலறி வன்புகழ் வண்ணம் தேடும்
கோலம் உள்ளம் குமிழ்த்தே ஓடும்! ... 615243

3. திருவுலா

காரணன் மஞ்சனக் காலமும் ஓடும்
வேரது உலவியே வெளியினை நாடும்
ஆரணன் உருவினை ஆரணம் தேடும் ... ... [ஆரணம் = வேதம்]
ஆரமும் பண்ணிசை யாய்-உடன் கூடும் ... ... [ஆரம் = தேவாரம்]
தோரணப் பூக்களும் தொங்கலில் ஆடும்
நாரி யிடத்தனை நாதமும் பாடும்! ... 364125 ... [நாதம் = நாதஸ்வரம்]

4. உறவு

அன்பே சிவமென் றகமும் பாடும்
துன்பம் யாவும் துகளென் றோடும்
இன்பம் ஒன்றே இனியென் றாடும்
உன்னதம் உவகையை உள்ளமும் நாடும்
ஒன்றே உளதெனும் உண்மையும் கூடும்
நன்றே என்றதை ஞாலம் தேடும்! ... 532614

5. தியானம்

அடங்கும் உள்ளம் அமைதியைத் தேடும்
உடம்பால் மனதால் உயிர்படும் பாடும்
திடம்பட விளங்கத் திண்மையும் கூடும்
விடமென் றறியா வினைகளும் ஓடும்
விடங்கொளும் சிவத்தின் விழுமம் நாடும்
உடனெழும் உவகையில் உள்ளம் ஆடும்! ... 451362

6. யதார்த்தம்

ஆலயச் சூழலில் அகமகிழ்ந் தாடும்
வேலை முடிந்ததும் வீட்டினைத் தேடும்!
காலுறும் தரையே கனியென நாடும்
ஞாலமும் இதுவே நன்றெனப் பாடும்!
காலம் எதையும் கருதா தோடும்
காலன் கொள்ளும் காலமும் கூடும்! ... 246531

7. நான்
இன்றென் கூடும் இழிவினில் ஆடும்! ... ... [கூடும் = உடலும்]
கன்றாய் ஓடும் மனமும் தேடும்!
நின்றுனைப் பாடும் நிலையெவண் நாடுமே!

--ரமணி, 31/01/2015, கலி.17/10/5115

*****

Sponsored content

PostSponsored content



Page 28 of 36 Previous  1 ... 15 ... 27, 28, 29 ... 32 ... 36  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக