புதிய பதிவுகள்
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 0:58

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 23:55

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 23:54

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 23:53

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 23:52

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 19:54

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரமணியின் கவிதைகள் - Page 25 I_vote_lcapரமணியின் கவிதைகள் - Page 25 I_voting_barரமணியின் கவிதைகள் - Page 25 I_vote_rcap 
35 Posts - 83%
வேல்முருகன் காசி
ரமணியின் கவிதைகள் - Page 25 I_vote_lcapரமணியின் கவிதைகள் - Page 25 I_voting_barரமணியின் கவிதைகள் - Page 25 I_vote_rcap 
3 Posts - 7%
heezulia
ரமணியின் கவிதைகள் - Page 25 I_vote_lcapரமணியின் கவிதைகள் - Page 25 I_voting_barரமணியின் கவிதைகள் - Page 25 I_vote_rcap 
2 Posts - 5%
dhilipdsp
ரமணியின் கவிதைகள் - Page 25 I_vote_lcapரமணியின் கவிதைகள் - Page 25 I_voting_barரமணியின் கவிதைகள் - Page 25 I_vote_rcap 
1 Post - 2%
mohamed nizamudeen
ரமணியின் கவிதைகள் - Page 25 I_vote_lcapரமணியின் கவிதைகள் - Page 25 I_voting_barரமணியின் கவிதைகள் - Page 25 I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ரமணியின் கவிதைகள்


   
   

Page 25 of 36 Previous  1 ... 14 ... 24, 25, 26 ... 30 ... 36  Next

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Wed 31 Oct 2012 - 14:52

First topic message reminder :

கணினி போற்றுதும்!?
ரமணி, 18/08/2012

கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!
பணியெது வாகிலும் பாங்குறச் செய்திடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!

பலவகை வடிவினில் உலகில் உறைந்திடும்
பலவகை மனிதரும் பலவாறு உகந்திடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!

இன்றைய உலகின் எலிகள் போட்டியில்
பகலும் இரவும் மனிதர் வாழ்வினை
நிலைபெறச் செய்திடும் கணினி போற்றுதும்!

குழந்தை மனம்முதல் கிழவர் மனம்வரை
கலைகள் போற்றித் திறன்கள் வளர்த்து
கனவுகள் தந்திடும் கணிணி போற்றுதும்!

குடும்பம் முழுவதும் கணினி வகைகள்!
மேசைக் கணினியும் மடிமேல் கணினியும்
அலுவ லகத்திலும் வீட்டிலும் அமர்ந்து
ஆசான் தோழன் மருத்துவன் செயலர்
கணக்கன் தூதுவன் கேளிக்கை யாளன்
அனைவர் ’ரோல்’களில் ஆடிடும் பாடிடும்!

கைத்தொலை பேசியில் வன்பொருள் மென்பொருள்
இணைபொரு ளாக உறையும் கணினி
நின்ற விடத்தில் தொடர்பு கொண்டு
உறவினை தொழிலினை வம்பினை வளர்த்திட
ஏழை எளியோர் செல்வம் படைத்தோர்
யாவரும் முனைந்திட வழிவகை செய்திடும்.

உட்பகை வெளிப்பகை வானிலை பொருளியல்
விதிமுறை செயல்வகை என்றிவ் வாறு
அனைத்தும் அறிந்திட அரசுக் குதவி
அரசுகள் அமைக்கும், அரசுகள் கவிழ்க்கும்!

இறைவ னுக்குக் கரங்கள் பலவாம்
கணினி களுக்கும் கரங்கள் பலவே!

விரல்கள் சொடுக்கிட மின்னெலி ஒருகரம்
விரல்கள் தட்டிட விசைமணை ஒருகரம்
கண்கள் பார்த்திட ஒளிர்ந்திடும் திரைமுகம்
பிரதிகள் அச்சிட அச்சுப் பொறிக்கரம்
அச்சின் தாள்களை அலகிட்டு மின்பதியும்.

இணைய தளங்களை எட்டிட ஒருகரம்
மோடம் டெலிஃபோன் இணைப்புகள் தாங்கி
’யாதும் ஊரே யாவரும் கேளிர்’
என்ற முதுமொழி நனவில் காட்டிடும்.

இத்தனை செயல்களால் வாழ்வில் வளம்தரும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்?

தட்டெழுதித் தட்டெழுதிக்
கையெழுத்தை மறக்கச் செய்யும்
மின்னெலியில் விரல்வலிக்கச் சொடுக்கச் செய்யும்

பொழுதுகள் மறந்து அறநெறிகள் துறந்து
உடல்நலம் பேணுவது அசட்டை செய்து

பெரியவர் மனங்களில் வறியவர் ஆகவும்
சிறுவர் சிறுமியர் மடிமையர் ஆகவும்
இளையோர் நெறிகளில் இளைத்தோர் ஆகவும்

தீயோர் செயல்கள் கலியில் பெருகிட
மூவா மருந்தாய் விளங்கிப் பல்கிடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்?

கரணம் என்பது உபகரணம் ஆகி
மனிதன் அவற்றை ஆளும் வரையில்
காரணம் ஆகா மனிதன் அழிவுக்கு.

பொறிகளின் பொறிகள் மனிதன் மனதில்
அல்லதைச் சமைத்து நல்லதை அழித்தால்
பொறிகளின் நெருப்பு ஊழித் தீயாகி
உலகினை அழிக்க உபாயம் ஆகிவிடும்!

*****



M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Mon 6 Oct 2014 - 11:22

ரமணியின் கவிதைகள் - Page 25 3838410834 ரமணியின் கவிதைகள் - Page 25 3838410834



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

ரமணியின் கவிதைகள் - Page 25 W5td1pX3QFi1kBRhH0I3+Affection
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sat 11 Oct 2014 - 11:31

’பாகற்றேன்’ மடக்கு
(கலிவிருத்தம்)

பாகற்றேன் என்றேன் பரிகசித்தார் பாவலர்
பாகற்றேன் உள்ளதும் பாடல் எனக்கேட்டார்
பாகற்றேன் சர்க்கரைப் பையுளுக் கென்றேன்நான்
பாகற்றேன் எல்லாம் பரமனுரு என்றாரே.

முதலடி: பாகற்றேன் = பாகல் + தேன்; பா + கற்றேன்
இரண்டாமடி: பாகற்றேன் = பாகு + அற்று + ஏன்
மூன்றாமடி: பாகற்றேன் = பாகல் + தேன்; பையுள் = நோய்
நான்காமடி: பாகற்றேன் = பா + கல் + தேன் = பாம்பு, கல், பெண்வண்டு

--ரமணி, 11/10/2014

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Mon 10 Nov 2014 - 11:59

பால விநாயகர் கோவில், வடபழனி
http://temple.dinamalar.com/New.php?id=1934
(குறும்பா)

காப்பு
அரச மரத்தில் ஐங்கரவுன் ரூபம்
இருபதின் ஒன்றென இன்று வளர்ந்தே
வலம்வரும் கோவில் வடப ழனியின்
நலம்பாடக் கேட்டேன் அருள்.

பதிகம்
வடபழனி அருகினிலோர் அரசமரம்
குடையெனவே நிழல்தந்தே பரிசுதரும்!
. ஆனைமுகன் அடிமரத்தில்
. மோனமுக வடிவுறுத்தே
விடையருள வீற்றிருக்கும் தரிசனமே! ... 1

அரசமரம் அதிகாலை வலம்வரவே!
உருவமதே கணபதியாய் நலம்தரவே
. சூழ்வினைகள் அற்றிடவே
. நாள்முழுதும் சுற்றுவரே
கரிமுகனை வேண்டுவரே நலம்வரவே! ... 2

ஆதிவாரம் ராகுகால நாழிகையில் ... [ஆதிவாரம் = ஞாயிற்றுக் கிழமை]
வேதனைகள் இல்லாதே வாழவென
. இருமூன்று எலுமிச்சை
. இருகையில் தருவித்தே
சாதனையாய்ச் சுற்றுவரே வேழவனை. ... 3

கருவறையில் பாலனுரு நாயகராம்
அரசுருவில் இருபத்தொன் றாயவராம்
. இருபுறமும் கண்ணாடி
. முருகனுரு முன்னாலே
அறுமுகமும் ஒருநூறாய் ஆவதுவாம்! ... 4

முப்பதாண்டு முன்னாலே காவலென
இப்பகுதி மக்களிடைக் கோவிலென
. குடியரசு நாளினிலே
. வடிவுறுத்தார் தாளுறவே
எப்பொழுதும் அருள்சுரக்கும் வாவியென. ... 5

அரசமரம் குடையாக ஆனைமுகம்
அருள்செய்ய மேவியதோர் மோனமுகம்
. ஆலயத்தை விரிவாக்கிக்
. கோலமெலாம் உருவாக்க
மரம்வெட்ட எண்ணியதே தீனமனம்! ... 6

சிலைசெய்யச் சிரமங்கள் வந்ததுவே
கலையாளும் சிற்பியரும் நொந்தனரே!
. மரமேனும் வெட்டிடவே
. மரமனதில் பட்டிடவே
நிலைமரமும் இறையுருவைத் தந்ததுவே! ... 7

கோடரியைப் பிடித்தகரம் கும்பிடவே
ஆடலெனப் பலவுருவ ரும்பியதே
. பதினாறாய் வளர்ந்ததுவே
. அதியைந்தும் கிளர்ந்ததுவே ... [அதியைந்து = மேலும் ஐந்து]
ஈடிலாத அற்புதமாய் நம்பிடவே! ... 8

சேண்பாக்கம் ஆலயத்தில் காஞ்சிமுனி
காண்முகமாய்ப் பதினாறாய் வாஞ்சையுற
. அருமுனியின் திருவுருவும்
. பெருமையென நிறுவினரே
ஈண்டுறையும் இறைமகனின் ஆஞ்ஞையென. ... 9

பிள்ளையாரின் பிள்ளையென வாழ்வுறவே
கொள்ளுமனத் துன்பமெலாம் பாழ்படுமே
. வேழமுகன் தரிசனத்தில்
. தோழமையின் கரிசனமே
தள்ளுவது எளிதாகும் ஊழ்வினையே! ... 10

--ரமணி, 10/11/2014, கலி.24/07/5115
(சங்கடஹர சதுர்த்தி தினம்)

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Thu 13 Nov 2014 - 21:37

சந்தவசந்தக் கவியரங்கம் 41.
தலைப்பு: ’நான் எங்கேபோய்க்கொண்டிருக்கிறேன்’
தலைவர்: கவியோகி வேதம்
பங்கேற்பு: ரமணி
https://groups.google.com/forum/#!topic/santhavasantham/kPqhhnn7w60%5B276-300-false%5D

கடவுள் வாழ்த்து

தொந்திக் கணபதிக்கென் தோப்புக் கரணங்கள்!
சிந்தையில் வந்தெனக்குச் சீர்தந்தே - சந்தவ
சந்தக் கவியரங்கம் தந்த பொருளுக்குச்
சிந்துவகைப் பாட்டெழுதச் செய்.

தலைவர் வாழ்த்து

அத்தாழ நல்லூரின் அட்வகேட் என்றொரு
வித்தகர் பட்டம்! விருது பலபெற்றும்
சத்தமில் லாதொரு சாதனை மேற்கொண்டு
நித்தமும் தன்னை நிமலனின் சேவைக்கென்
றர்ப்பணித்தே மற்றவரின் ஆன்மாவை மேம்படுத்தும்
கற்பகத் தாரு கவியோகிப் பன்முகத்தீர்!
தற்சிரம் தாழ்வேன் தழைந்து.

அவைப் பெருமை

சந்தவசந் தம்மென்னும் குழுவிது - செய்த
. சாதனைக்கோர் ஈடிணையா யேதுள?
வந்தகவி மரபினிலே விழுமியர் - இவர்
. வைத்தகவி யாவையுமே மாதுளை!

அவையடக்கம்

கவிதாவைக் காதலிக்கும் யோகிநீர் - இங்குக்
. காவலராய்க் கோலோச்சும் மேடையில்
சவிதாமுன் சிறுமீனா யாகுமென் - பாடல்
. சவலையெனில் முழுமையெனக் கொள்ளுவீர்!

’நான் எங்கேபோய்க்கொண்டிருக்கிறேன்’
(முச்சீர் சமநிலைச் சிந்து)

காலைமுதல் நாள்முழுதும் கணினியே - என்றன்
. காதலியாய் மீட்டிவிரல் வாழ்வனே
வேலையெனப் போகையிலே காரிலே - மடி
. மீதமரும் காரிகையாய்ச் சூழ்வளே! ... 1

மின்சாரக் காற்றுதரும் மென்குளிர் - என்றன்
. மேனியிலே நாளெல்லாம் மேவுமே
என்னோயும் தாக்காமல் மென்றளிர் - என்று
. என்மேனி பேணுவதில் சேமமே. ... 2

வாதுமையல் வாவினைநான் நாடியே - நாவில்
. வண்டலுறும் தீஞ்சுவையைப் பேணுவேன்
மாதுமையாள் பாகனிங்ஙன் நாடிலேன் - என்று
. மனதினிலே மூலையொன்றில் நாணுவேன்! ... 3

காய்பொதிப ரோட்டாச்சன் னாவினை - வாங்கிக்
. காரசாரம் வாயூற உண்ணுவேன்!
வாய்புதையப் பிட்சாவென் நாவிலே - தலை
. வானோக்க லிம்காவைப் பருகுவேன்! ... 4

வகைவகையாய் அன்னமெனும் சித்திரம் - என்றன்
. வட்டிலிலே அறுசுவையில் நித்தியம்!
இகபரத்தைப் பற்றியிலை சித்தமே - இதை
. இடித்துமன மூலையொன்று குத்துமே! ... 5

கண்ணெதிரே மானுடத்தின் வண்ணமே - செய்திக்
. காட்சிகளின் விறுவிறுப்பே பாசுரம்!
எண்ணமெலாம் ஐம்புலனை எண்ணுமே - இதை
. ஏசிமன மூலையொன்று பேசுமே! ... 6

தெரிவதெலாம் தெய்வநெறிப் புத்தகம் - ஆயின்
. தேடுவதோ தொக்காவின் நீள்படம்!
எரிகதிரின் காலையின்னும் எத்தனை? - எண்ணிலேன்
. ஏனென்றே மூலையொன்று காழ்ப்புறும்! ... 7

[தொக்கா = தொலைக்காட்சி என்ற சொல்லின் சுருக்கம்]

கோவிலிலே கோலவிழி மாதரும் - எழில்
. கூட்டிவரும் காட்சிவிழி முன்படும்!
ஏவுமனம் கடைக்கண்ணால் நாதரும் - காண்பதை
. எள்ளுதலும் செய்துமிகப் புண்படும்! ... 8

வாழ்வினிலே பொருள்தன்னை நாடினேன் - வந்த
. வளந்தன்னில் வசதியெலாம் கூட்டினேன்
வாழ்வதனின் பொருளென்ன நாடிலேன் - இன்னும்
. வங்கமெலாம் வெள்ளியென வேட்பனே! ... 9

[வங்கம் = தகரம், ஈயம்]

செந்தமிழில் சந்தமெலாம் எண்ணியே - வந்த
. சீரசையச் சிந்தையுறும் வேள்வியே!
வெந்ததென்ன வாழ்ந்ததென்ன எண்ணிலேன் - இங்கு
. வேரெனவே நிற்குமொரு கேள்வியே! ... 10

விழியசைவில் கொள்ளுமுகம் ஒன்றுதான் - பிறர்
. விழிகளிலே காணுமுகம் ஒன்றுதான்
விழிதூங்கக் கொள்ளுவதோ பன்முகம் - இதில்
. இலவுகாத்த கிளியென்றே என்முகம்! ... 11

ஆற்றொருகால் சேற்றொருகால் வாழ்விது - ஆயின்
. அன்பொன்றே பின்னுறுமேல் தாழ்வெது?
நேற்றின்று நாளையெனும் வெள்ளமே - அதில்
. நீந்துவதே சாதனையாய்க் கொள்ளுவேன். ... 12

எங்கேபோய்க் கொண்டிருக்கி றேன்நான் - என்று
. தொங்கலாக உள்ளதும்-ஓர் இன்பமே!
சங்கமெலாம் சத்சங்க மேதான் - ஈற்றில்
. தங்குவது பற்றியச்சம் இல்லையே! ... 13

--ரமணி, 01/11/2014, கலி.15/07/5115

*****

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Wed 19 Nov 2014 - 19:27

பிரதோஷ நாயகன் கும்மி

வானவர் தானவர் பாற்கடல் ஆர்த்தெழு
. வாசுகி நஞ்சினால் அச்சமுறக்
கானகம் ஆடிடும் கண்ணுத லற்புதன்
. கண்ட மிருத்தியே காத்தருள
வானகம் எங்கணும் சூரியப் பட்டொளி
. வானவில் வண்ணம்நி றைபொழுதில்
தேனனின் ஆடலைச் சேமிசைக் காணுவோர் ... [சேமிசை = எருதின் மீது]
. திண்ணிய ராகவே கும்மியடி! ... 1

அஞ்செழுத் தோதையும் ஆரணத் தோதையும் ... [ஓதை = பேரொலி, ஆரவாரம்]
. அம்பல வாணணின் பண்ணொலியும்
விஞ்சியே விண்ணுற மஞ்சனம் ஆடிடும்
. வேடனின் லிங்கத்தில் நீர்ப்பொழிவே!
நெஞ்சழக் கண்களில் நீர்வரும் போதினில்
. நித்திய வேதனை நீக்கிடும்தாள்
தஞ்ச மடைந்தவர் காத்திட வேகரத்
. தாளமும் ஆர்த்திடக் கும்மியடி! ... 2

எங்கணும் இன்பமே எங்கணும் சாந்தியே
. ஏனோ எனதுளம் ஏங்கிடுதே
கங்காளன் தாளிணைக் காப்பினை நானொரு
. கண்ணிலன் போலவே பற்றிவிட்டேன்
பங்கயம் பூப்பது சேறெனி னும்மனம்
. பாழுறும் சேற்றினில் பூத்திடுமோ?
தங்கிடும் நாளினில் தாண்டவன் என்னுளம்
. தங்கியே ஆட்கொளக் கும்மியடி! ... 3

--ரமணி, 19/11/2014, கலி.03/08/5115

*****


mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Wed 19 Nov 2014 - 19:52

ரமணியின் கவிதைகள் - Page 25 3838410834

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84174
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed 19 Nov 2014 - 21:14


ஆற்றொருகால் சேற்றொருகால் வாழ்விது - ஆயின்
. அன்பொன்றே பின்னுறுமேல் தாழ்வெது?

-
ரமணியின் கவிதைகள் - Page 25 3838410834

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sun 23 Nov 2014 - 11:21

அகிலாண்டேஸ்வரி பஞ்சகம்

(சமஸ்கிருதம்: ஸ்ரக்விணீ வாய்பாடு: குரு-லகு-குரு x 4
ஆதி சங்கரர்: அச்யுதம் கேசவம் ராமநா ராயணம்
தமிழ் வாய்பாடு: ஐந்து மாத்திரைக் கூவிளம் நான்கு கொண்ட அடிகள்)

ஆற்றுநீர் லிங்கமா யாக்கியே நாதனைப்
போற்றியே சேர்ந்தனை பின்னுமேன் உக்கிரம்?
காற்றினை யுண்டுநீ காதலே மேவிவெண்
ணீற்றனை நோக்கியே நீள்தவம் செய்தனை! ... 1

நேற்றவர் சங்கரர் நின்செவித் தோடுகள்
ஏற்றியுன் உக்கிரம் எஞ்சிடச் செய்தனர் ... ... [எஞ்சிட = குறைய]
ஊற்றெனும் இன்பமாய் உன்னருள் கொள்ளவே
சாற்றினர் ஐங்கரன் சன்னிதி உன்முனே. ... 2

முன்னொரு பிள்ளையாய் மும்மதன் சன்னிதி
பின்னொரு பாவகி பிள்ளையாம் சன்னிதி ... ... [பாவகி = அக்கினியில் உதித்தோன்: முருகக் கடவுள்]
இன்னொரு பிள்ளைநான் இன்னலே துய்ப்பதை
இன்னும்நீ காண்கிலை என்னநான் செய்வதோ? ... 3

வின்னமே மேவினேன் வீண்செயல் மேவினேன்
புன்மையே மேவினேன் பொய்யுரு மேவினேன்
இன்னலே பின்னுறும் இன்பமே தேடினேன்
அன்னைநீ வந்தெனை யாட்கொளும் நாளெதோ? ... 4

அன்னைநீ அப்பனாய் ஆரணன் காத்தனை ... ... [ஆரணன் = பிரம்மன்]
உன்னருள் மேகமே உத்தமப் பாவலன் ... ... [கவி காளமேகம்]
அன்னையாய் அர்ச்சகர் அத்தனைப் போற்றுவர் ... ... [திருவானைக்கா உச்சிக்கால பூசனை]
உன்னைநான் வேண்டினேன் உன்னதம் சேரவே. ... 5

--ரமணி, 22/11/2014, கலி.06/08/5115

குறிப்பு:
அகிலாண்டேஸ்வரி பற்றி இணையத்தில்:
http://temple.dinamalar.com/New.php?id=314
http://jaghamani.blogspot.com/2012/08/blog-post_3.html
http://bhakthiplanet.com/2011/08/history-of-temple-4/

சிவசிவாவின் பதிகம்:
https://groups.google.com/forum/#!topic/santhavasantham/d4d3fHtwMPE%5B1-25-false%5D

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sat 29 Nov 2014 - 11:24

நகர்ப்புற தோட்டக்கலை
(ஏந்திசைத் தூங்கலோசை வஞ்சிப்பா)

இணைய முகவரி
https://tnhorticulture.tn.gov.in/horti/do-it-yourself-kit

தோட்டக்கலை பயில்வதற்கென
நாட்டத்துடன் விலாசத்தைக்
கேட்டறிந்துநான் அரசுபண்ணை
வீட்டுக்கென வெளிச்சூழலில்
வெயில்படுகிற திறந்தவெளி
வியன்கூரையாம் சிகரமாடி
வைப்பதெற்கெனத் தொகுதிகளாய்
கைப்பைகளில் பலவிதத்தில்
உரவகைகள் விதைவகைகள்
தரமெனவே விலக்குவாங்கி
தென்னையில்விளை துகள்நாரே
மண்ணெனவரும் நெகிழிப்பை
இருபதெனவே விலைகொடுத்தேன்
உரமிட்டவை தயார்செய்தோம்
அந்தோ!
அன்றே வந்த அடைமழையால்
இன்னும் கனவாய் எங்கள் தோட்டமே!

--ரமணி, 29/11/2014

*****


M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Sat 29 Nov 2014 - 18:35

அருமை அருமை....



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

ரமணியின் கவிதைகள் - Page 25 W5td1pX3QFi1kBRhH0I3+Affection
Sponsored content

PostSponsored content



Page 25 of 36 Previous  1 ... 14 ... 24, 25, 26 ... 30 ... 36  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக