புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரமணியின் கவிதைகள்


   
   

Page 24 of 36 Previous  1 ... 13 ... 23, 24, 25 ... 30 ... 36  Next

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Wed Oct 31, 2012 1:22 pm

First topic message reminder :

கணினி போற்றுதும்!?
ரமணி, 18/08/2012

கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!
பணியெது வாகிலும் பாங்குறச் செய்திடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!

பலவகை வடிவினில் உலகில் உறைந்திடும்
பலவகை மனிதரும் பலவாறு உகந்திடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!

இன்றைய உலகின் எலிகள் போட்டியில்
பகலும் இரவும் மனிதர் வாழ்வினை
நிலைபெறச் செய்திடும் கணினி போற்றுதும்!

குழந்தை மனம்முதல் கிழவர் மனம்வரை
கலைகள் போற்றித் திறன்கள் வளர்த்து
கனவுகள் தந்திடும் கணிணி போற்றுதும்!

குடும்பம் முழுவதும் கணினி வகைகள்!
மேசைக் கணினியும் மடிமேல் கணினியும்
அலுவ லகத்திலும் வீட்டிலும் அமர்ந்து
ஆசான் தோழன் மருத்துவன் செயலர்
கணக்கன் தூதுவன் கேளிக்கை யாளன்
அனைவர் ’ரோல்’களில் ஆடிடும் பாடிடும்!

கைத்தொலை பேசியில் வன்பொருள் மென்பொருள்
இணைபொரு ளாக உறையும் கணினி
நின்ற விடத்தில் தொடர்பு கொண்டு
உறவினை தொழிலினை வம்பினை வளர்த்திட
ஏழை எளியோர் செல்வம் படைத்தோர்
யாவரும் முனைந்திட வழிவகை செய்திடும்.

உட்பகை வெளிப்பகை வானிலை பொருளியல்
விதிமுறை செயல்வகை என்றிவ் வாறு
அனைத்தும் அறிந்திட அரசுக் குதவி
அரசுகள் அமைக்கும், அரசுகள் கவிழ்க்கும்!

இறைவ னுக்குக் கரங்கள் பலவாம்
கணினி களுக்கும் கரங்கள் பலவே!

விரல்கள் சொடுக்கிட மின்னெலி ஒருகரம்
விரல்கள் தட்டிட விசைமணை ஒருகரம்
கண்கள் பார்த்திட ஒளிர்ந்திடும் திரைமுகம்
பிரதிகள் அச்சிட அச்சுப் பொறிக்கரம்
அச்சின் தாள்களை அலகிட்டு மின்பதியும்.

இணைய தளங்களை எட்டிட ஒருகரம்
மோடம் டெலிஃபோன் இணைப்புகள் தாங்கி
’யாதும் ஊரே யாவரும் கேளிர்’
என்ற முதுமொழி நனவில் காட்டிடும்.

இத்தனை செயல்களால் வாழ்வில் வளம்தரும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்?

தட்டெழுதித் தட்டெழுதிக்
கையெழுத்தை மறக்கச் செய்யும்
மின்னெலியில் விரல்வலிக்கச் சொடுக்கச் செய்யும்

பொழுதுகள் மறந்து அறநெறிகள் துறந்து
உடல்நலம் பேணுவது அசட்டை செய்து

பெரியவர் மனங்களில் வறியவர் ஆகவும்
சிறுவர் சிறுமியர் மடிமையர் ஆகவும்
இளையோர் நெறிகளில் இளைத்தோர் ஆகவும்

தீயோர் செயல்கள் கலியில் பெருகிட
மூவா மருந்தாய் விளங்கிப் பல்கிடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்?

கரணம் என்பது உபகரணம் ஆகி
மனிதன் அவற்றை ஆளும் வரையில்
காரணம் ஆகா மனிதன் அழிவுக்கு.

பொறிகளின் பொறிகள் மனிதன் மனதில்
அல்லதைச் சமைத்து நல்லதை அழித்தால்
பொறிகளின் நெருப்பு ஊழித் தீயாகி
உலகினை அழிக்க உபாயம் ஆகிவிடும்!

*****



ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Fri Aug 22, 2014 10:02 am

பிரதோஷத் துதி
கயிலையில் மேவிடும் பரமே!

(எழுசீர் விருத்தம்: கருவிளம் மா விளம் மா கருவிளம் விளம் மா)

ஒளிநிழற் புணர்வில் உலகுறும் உருவம்
. உருவினிற் புகுந்ததை மீட்டும்
வளியதன் ஒலியே வாக்குறும் மனமாம்
. மனமதன் இயக்கமென் றுயிரில்
ஒளிசிவம் உயிரின் இயல்பெனும் இருப்பாம்
. இருப்பிது அறிவினிற் கலந்தே
உளம்பர வியுமே உணர்வினில் அறியா
. துளைவிதே அகல்வதென் னாளோ?

இடபமி வர்ந்தே இடப்பதம் உயர்த்தி
. இகபரம் அகலவே முத்தித்
தடமதிற் செல்லும் தகவினைக் கொள்ளத்
. தகுந்ததோர் வழியினைக் கூட்டும்
நடமதன் பண்ணோ டொலியுட னிசையும்
. நலமது மனதினில் வந்தே
கடையனாம் எனக்கும் அருள்செய வேண்டும்
. கயிலையில் மேவிடும் பரமே.

--ரமணி, 22/08/2014, கலி.06/05/5115

*****


Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Aug 22, 2014 10:19 am

ரமணியின் கவிதைகள் - Page 24 3838410834 ரமணியின் கவிதைகள் - Page 24 1571444738 அன்பு மலர் மீண்டும் சந்திப்போம் 



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Fri Aug 22, 2014 11:25 am

மரபுக் கவிதைகள்... பாராட்டுகள்...



http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Tue Aug 26, 2014 9:14 am

கவி காளமேகத்தை ஒருமுறை புலவர்கள் ’செருப்பில் தொடங்கி விளக்குமாற்றில்’ முடியும்படியோர்
வெண்பா பாடக் கேட்டபோது காளமேகம் ஆசுகவியாகப் பாடிய பாடல்:

(http://www.dinamani.com/weekly_supplements/tamil_mani/article650955.ece)

செருப்புக்கு வீரரைச் சென்றுழக்கும் வேலன்
பொருப்புக்கு நாயகனைப் புல்ல - மருப்புக்கு
தண்ட்ட்ன் பொழிந்ததிருத்ஜ் தாமரைமேல் வீற்றிருக்கும்
வணே விளக்குமா றே!

காலணிக்குப் பழந்தமிழ் இலக்கியத்தில் கீழ்க்கண்ட சொற்கள் பயன்படுத்தப்பட்டன:
செருப்பு, அடியுறை, அடையல், அரணம், தொடுதோல், வடிம்பு.

இவற்றை முதலில் அமைத்து விளக்குமாற்றில் முடியும்படி அடியேன் சிவன் மீது இயற்றிய
ஓர் வெண்பாப் பதிகம் கீழே.

பாதரட்சை விளக்குமாற்றுப் பதிகம்

செருப்புடைத்து நின்றாளும் சிந்தை யகல
நெருப்புடன் நீருடன் நின்றே - பொருப்புறை
வானைப் பணிநெறியே மாயையில் மாயுமுளத்
தானை விளக்குமா று. ... 5

அடியுறை உள்ளத் தழுக்கெலாம் நீங்கி
அடியுறைத் தூளென வாழும் - அடியவர்
அத்தனைப் போற்றும் அறவழி யாகுமே
முத்தி விளக்குமா று. ... 6

அடையல் உரிவை அரையில் அணிந்தே
படையல் புரத்தல் பறித்தல் - நடனத்
தலையில் அனைத்தும் அழியத்தான் நிற்கும்
நிலையம் விளக்குமா றோ? ... 7

[அடையல் = செருப்பு; நிலையம் = இலக்கு, கூத்து நிலைகொள்ளுமிடம்]

அரணம் அடிபுதைத்தே ஆடிட அண்டம்
மரணத் தடிபட்டே மாறப் - பரமன்
நெறியே உலகின் நிலையாமை பற்றி
அறியும் விளக்குமா றாம். ... 8

[அரணம், அரண் = செருப்பு]

தொடுதோல் உரிவை உடுக்கையாம் மேனி
அடியார்க் கமுதுறும் காட்சி - விடையோன்
கழலணை வில்வரும் காப்பதே உய்வின்
வழியை விளக்குமா று. ... 9

[தொடுதோல் = செருப்பு, சிவன் அடித்துக் கொன்ற யானை]

வடிம்புறும் தோலென வாழ்ந்தே பணிசெய்
அடியாரைச் சோதிக்கும் அத்தன் - கடுமையின்
பின்னுள நன்மையின் பெற்றியை எவ்வுளந்தான்
என்னென் றுவிளக்கு மாறு. ... 10

--ரமணி, 21/08/2014

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Fri Aug 29, 2014 10:32 am

பிள்ளையார் சதுர்த்தித் துதி

ஒருகோட் டிருசெவியர் முக்கணர் நால்வாய்
இருள்நீக்கும் ஐங்கரற் கிந்நாள் அறுசுவை
அன்னமிட்டேன் ஏழ்பிறப்பின் அல்லல் அகலவே!
இன்சுவை மோதகம் எண்வகைச் சீர்தந்தே
ஒன்பதின் ஆட்சியில் உள்ளுறை நன்மையாகிப்
பத்துத் திசையின் பருமை தகர்ந்துவரும்
முத்தி அருள்வதெந்நா ளோ?

--ரமணி, 29/08/2014

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Fri Sep 12, 2014 11:52 am

இன்று சங்கடஹர சதுர்த்தி நாள்.

ஈச்சனாரி கணேச்வரன் துதி
(குறும்பா)

கோயில்:
http://temple.dinamalar.com/New.php?id=688

காப்பு
ஈச்சனாரிக் கோவிலில் இன்முகம் காட்டியே
வீச்சருள் செய்யும் விநாயக! என்பாட்டில்
ஓச்ச மகன்றே ஒளியுடன் நான்பாடும் ... [ஓச்சம் = குற்றம் குறை]
தேர்ச்சியைத் தந்தருள்வா யே.

துதி
ஈச்சனாரி கோவிலிலுறை இறைமகனே
வாச்சியமாய் இத்தலமுன் உறையகமேன்? ... (வாச்சியம் = வெளிப்படையானது)
. கட்டிவைத்தே கூட்டிவர
. பட்டீச்வரம் வேட்டலின்றி
ஈச்சம்பழம் வேட்டாயுன் நிறையெனவோ!? ... 1

நாள்மீனாய் இருபத்தேழ் நள்ளுதலில்
கோளெனவே அலங்காரம் கொள்முதலோ?
. நெடுவினிலே ஐந்தடியாய்
. இடையினிலே மூன்றடியாய்
ஆளெனவே ஆளுகின்ற அள்ளமுதே! ... 2

சிதறுதேங்காய் கொழுக்கட்டைச் சுண்டலுடன்
உதவிநாடி வழிபட்டோம் கண்டவுடன்
. சந்தனமும் பன்னீரும்
. வந்தனையில் முன்னீடாம்
இதமளிப்பாய் வினையெல்லாம் விண்டிடவே! ... 3

கல்விகேள்வி தொழில்மேன்மை தருவாயே
நல்லதெல்லாம் தங்கிடவே அருள்வாயே
. பாதவிணை பற்றிடவே
. வேதனைகள் அற்றிடுமே
வல்லமையெம் சாதனையில் உருவாமே! ... 4

அனுதினமும் ஆடகத்தேர் தரிசனமே
கனவெல்லாம் நனவறுமுன் கரிசனமே
. ஆனைமுகன் துதியுறவே
. ஞானம்வரும் கதியுறவே
இனியெமக் கெல்லாமே சரிசமமே! ... 5

--ரமணி, 12/09/2014, கலி.27/05/5115

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sun Sep 21, 2014 11:13 am

பிரதோஷத் துதி: ஒரு துளி இன்பமே!
(ஆசிரியத் தாழிசை)

அந்தியில் எண்ணம் அறுந்தே நின்னுருமேல்
வந்துறும் அபிடேக வண்ணம் கண்டபின்
சிந்தனை மீண்டும் சிறுமையைத் தேடுதே! ... 1

பாலவர் உன்புகழ் பாடக் கேட்டும்
நாவலந் தன்னில் நானதைப் பாடியும்
பாவமே மீண்டும் படியுதே ஏனோ? ... 2

என்மனம் கட்டிநான் ஏத்தியோர் பாடல்
உன்மேல் புனைந்தும் உண்மை யிதுவென்(று)
இன்னும் உணர்வினில் இறங்கிலை யீசனே! ... 3

செக்கினைச் சுற்றும் எருதென நானும்
மக்கிடும் உலகின் மாயையைச் சுற்றுவதில்
பக்குவம் என்றுறும் பரமனே என்வாழ்வில்? ... 4

பரமன் கழலிணை பற்றிநான் கேட்பதெல்லாம்
வருநாள் வறிதாகும் வாழ்விலுன் இறைமையின்
ஒருமை யுணர்வின் ஒருதுளி இன்பமே! ... 5

--ரமணி, 21/09/2014, கலி.05/06/5115

*****


அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Sep 21, 2014 1:41 pm

மீண்டும் மீண்டும் தவறிழைக்க செல்வதால் மனிதன் தெய்வ நிலையை அடையாமல் இருக்கிறான்.

அருமையான பாடல் ரமணி

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sun Sep 21, 2014 5:56 pm

உண்மைதான், அசுரன் அவர்களே!
உங்கள் பாராட்டுக்கு நன்றி.
ரமணி

அசுரன் wrote:மீண்டும் மீண்டும் தவறிழைக்க செல்வதால் மனிதன் தெய்வ நிலையை அடையாமல் இருக்கிறான்.

அருமையான பாடல் ரமணி
மேற்கோள் செய்த பதிவு: 1089466

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Mon Oct 06, 2014 9:36 am

பிரதோஷத் துதி: ஆவியிலே நிணர்ந்தருளே!
(குறும்பா)

மூங்கிலன்ன தோளுடைய அன்னையவள்
பாங்குடனே பக்கமுறும் முன்னவனே
. பாற்கடலின் நஞ்சழுத்தும்
. நாற்கரத்தான் அஞ்செழுத்தும்
வாங்கிடுமே வாணாளின் வின்னமதே. ,,, 1

[வாங்குதல் = தீர்த்தல், அழித்தல்; வின்னம் = சிதைவு, வேறுபாடு]

மானாடும் மழுவாடும் மங்கையாடும்
வானாடும் மதியாடும் கங்கையாடும்
. மேனியிலே தோலாட
. ஞானமதே மேலாடக்
கானாடும் காலாடச் சங்கையோடும்! ,,, 2

[சங்கை = ஐயம், அச்சம், பகை]

சுந்தரனாம் அந்தரனாம் அந்தமிலி
சொந்தமென வந்துறுவான் சொந்தமிலி
. அந்தியிலே விந்தையுற
. அந்தணரின் சந்தமுற
எந்தையென வந்தருள்வான் சிந்தையிலே. ,,, 3

நாலடியார் போற்றுகின்ற நாதனவன்
ஆலமர்ந்தே ஞானம்தரும் வேதனவன்
. அண்ணலவன் பண்ணதிர
. எண்ணமெலாம் மண்ணுதிரும்
காலடியில் தீர்ந்துவிடும் வேதனையே. ,,, 4

இத்தனையும் உளமுற்றும் உணர்ந்திலனே
சித்தமுறும் இன்பமெலாம் உலர்ந்தனவே
. துன்பமெலாம் துச்சமாக
. அன்பொன்றே மிச்சமாக
நத்தியென்றன் ஆவியிலே நிணர்ந்தருளே. ,,, 5

[நிணர்தல் = செறிதல்; ’எங்கணு நிணர்ந்த பூங்குளிர் நிழல் (திருவானைக். நாட்.109)
http://agarathi.com/word/நிணர்-தல்).
இம்மை வாழ்வின் அறுசுவைகளிலும் நவரசங்களிலும் மனம் மொழி மெய்யினால் திளைத்துத்
தன்னியல்பை மறந்து தாபத்தில் தவிக்கும் என் ஆன்மாவிலே மரநிழல் போல் நிணர்ந்து
கலந்து அருள்செய்க.]

--ரமணி, 06/10/2014, கலி.20/06/5115

*****


Sponsored content

PostSponsored content



Page 24 of 36 Previous  1 ... 13 ... 23, 24, 25 ... 30 ... 36  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக