புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரமணியின் கவிதைகள் - Page 23 I_vote_lcapரமணியின் கவிதைகள் - Page 23 I_voting_barரமணியின் கவிதைகள் - Page 23 I_vote_rcap 
37 Posts - 76%
dhilipdsp
ரமணியின் கவிதைகள் - Page 23 I_vote_lcapரமணியின் கவிதைகள் - Page 23 I_voting_barரமணியின் கவிதைகள் - Page 23 I_vote_rcap 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
ரமணியின் கவிதைகள் - Page 23 I_vote_lcapரமணியின் கவிதைகள் - Page 23 I_voting_barரமணியின் கவிதைகள் - Page 23 I_vote_rcap 
3 Posts - 6%
mohamed nizamudeen
ரமணியின் கவிதைகள் - Page 23 I_vote_lcapரமணியின் கவிதைகள் - Page 23 I_voting_barரமணியின் கவிதைகள் - Page 23 I_vote_rcap 
2 Posts - 4%
heezulia
ரமணியின் கவிதைகள் - Page 23 I_vote_lcapரமணியின் கவிதைகள் - Page 23 I_voting_barரமணியின் கவிதைகள் - Page 23 I_vote_rcap 
2 Posts - 4%
kavithasankar
ரமணியின் கவிதைகள் - Page 23 I_vote_lcapரமணியின் கவிதைகள் - Page 23 I_voting_barரமணியின் கவிதைகள் - Page 23 I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரமணியின் கவிதைகள் - Page 23 I_vote_lcapரமணியின் கவிதைகள் - Page 23 I_voting_barரமணியின் கவிதைகள் - Page 23 I_vote_rcap 
32 Posts - 78%
dhilipdsp
ரமணியின் கவிதைகள் - Page 23 I_vote_lcapரமணியின் கவிதைகள் - Page 23 I_voting_barரமணியின் கவிதைகள் - Page 23 I_vote_rcap 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
ரமணியின் கவிதைகள் - Page 23 I_vote_lcapரமணியின் கவிதைகள் - Page 23 I_voting_barரமணியின் கவிதைகள் - Page 23 I_vote_rcap 
2 Posts - 5%
mohamed nizamudeen
ரமணியின் கவிதைகள் - Page 23 I_vote_lcapரமணியின் கவிதைகள் - Page 23 I_voting_barரமணியின் கவிதைகள் - Page 23 I_vote_rcap 
2 Posts - 5%
kavithasankar
ரமணியின் கவிதைகள் - Page 23 I_vote_lcapரமணியின் கவிதைகள் - Page 23 I_voting_barரமணியின் கவிதைகள் - Page 23 I_vote_rcap 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரமணியின் கவிதைகள்


   
   

Page 23 of 36 Previous  1 ... 13 ... 22, 23, 24 ... 29 ... 36  Next

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Wed Oct 31, 2012 1:22 pm

First topic message reminder :

கணினி போற்றுதும்!?
ரமணி, 18/08/2012

கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!
பணியெது வாகிலும் பாங்குறச் செய்திடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!

பலவகை வடிவினில் உலகில் உறைந்திடும்
பலவகை மனிதரும் பலவாறு உகந்திடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!

இன்றைய உலகின் எலிகள் போட்டியில்
பகலும் இரவும் மனிதர் வாழ்வினை
நிலைபெறச் செய்திடும் கணினி போற்றுதும்!

குழந்தை மனம்முதல் கிழவர் மனம்வரை
கலைகள் போற்றித் திறன்கள் வளர்த்து
கனவுகள் தந்திடும் கணிணி போற்றுதும்!

குடும்பம் முழுவதும் கணினி வகைகள்!
மேசைக் கணினியும் மடிமேல் கணினியும்
அலுவ லகத்திலும் வீட்டிலும் அமர்ந்து
ஆசான் தோழன் மருத்துவன் செயலர்
கணக்கன் தூதுவன் கேளிக்கை யாளன்
அனைவர் ’ரோல்’களில் ஆடிடும் பாடிடும்!

கைத்தொலை பேசியில் வன்பொருள் மென்பொருள்
இணைபொரு ளாக உறையும் கணினி
நின்ற விடத்தில் தொடர்பு கொண்டு
உறவினை தொழிலினை வம்பினை வளர்த்திட
ஏழை எளியோர் செல்வம் படைத்தோர்
யாவரும் முனைந்திட வழிவகை செய்திடும்.

உட்பகை வெளிப்பகை வானிலை பொருளியல்
விதிமுறை செயல்வகை என்றிவ் வாறு
அனைத்தும் அறிந்திட அரசுக் குதவி
அரசுகள் அமைக்கும், அரசுகள் கவிழ்க்கும்!

இறைவ னுக்குக் கரங்கள் பலவாம்
கணினி களுக்கும் கரங்கள் பலவே!

விரல்கள் சொடுக்கிட மின்னெலி ஒருகரம்
விரல்கள் தட்டிட விசைமணை ஒருகரம்
கண்கள் பார்த்திட ஒளிர்ந்திடும் திரைமுகம்
பிரதிகள் அச்சிட அச்சுப் பொறிக்கரம்
அச்சின் தாள்களை அலகிட்டு மின்பதியும்.

இணைய தளங்களை எட்டிட ஒருகரம்
மோடம் டெலிஃபோன் இணைப்புகள் தாங்கி
’யாதும் ஊரே யாவரும் கேளிர்’
என்ற முதுமொழி நனவில் காட்டிடும்.

இத்தனை செயல்களால் வாழ்வில் வளம்தரும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்?

தட்டெழுதித் தட்டெழுதிக்
கையெழுத்தை மறக்கச் செய்யும்
மின்னெலியில் விரல்வலிக்கச் சொடுக்கச் செய்யும்

பொழுதுகள் மறந்து அறநெறிகள் துறந்து
உடல்நலம் பேணுவது அசட்டை செய்து

பெரியவர் மனங்களில் வறியவர் ஆகவும்
சிறுவர் சிறுமியர் மடிமையர் ஆகவும்
இளையோர் நெறிகளில் இளைத்தோர் ஆகவும்

தீயோர் செயல்கள் கலியில் பெருகிட
மூவா மருந்தாய் விளங்கிப் பல்கிடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்?

கரணம் என்பது உபகரணம் ஆகி
மனிதன் அவற்றை ஆளும் வரையில்
காரணம் ஆகா மனிதன் அழிவுக்கு.

பொறிகளின் பொறிகள் மனிதன் மனதில்
அல்லதைச் சமைத்து நல்லதை அழித்தால்
பொறிகளின் நெருப்பு ஊழித் தீயாகி
உலகினை அழிக்க உபாயம் ஆகிவிடும்!

*****



ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Thu Jul 03, 2014 5:45 pm

ஆன்மீகச் செய்திக் கவிதை
கலி-ஜய வருடம் ஆனி 19 - 03/07/2014, கலி.19/03/5115


செய்தி:
சிதம்பரம் ஶ்ரீசிவபெருமான் ரதம்.
http://natarajadeekshidhar.blogspot.in/2010/06/blog-post.html

தேரோடக் காரோடும்!
(குறும்பா)

ஆனித்திரு மஞ்சனத்தின் ஒன்பதாம்நாள்
மேனிநீறன் தேர்வலத்தில் மன்பதையாய்த்
. தில்லையதே திரண்டுநிற்கத்
. தொல்லையெலாம் மருண்டுநிற்கக்
கானத்துடன் வழிபடுவர் மன்பதமே. ... 1

[மன்பதை = மக்கட்பரப்பு; மன்பதம் = நிலைபெற்ற பாதம்]

நடராசர் திருத்தேர்நாள் விடியலிலே
மடவனமாய்ச் சிவகாமி நடைபயில
. அலங்காரத் திருக்கோலம்
. அகங்காரம் செறுக்கோலம்
முடிவில்லான் தேர்வலமோர் படையலென. ... 2

[மடவனம் = இளமையான அன்னம்]

அணித்தேரின் அமைப்பினிலே சிற்பக்கலை
கணிப்பேதும் தவறாத நுட்பவலை
. தேர்ப்பரப்பும் தேர்ச்சுற்றும்
. தேர்க்கூம்பும் தேர்ச்சிற்பமும்
மணிகண்டன் தேர்மிக்கோர் பொற்புமிலை! ... 3

[பொற்பு = பொலிவு, அழகு]

தேர்நடுவே நடராசர் ஊசலிலே
ஊர்முழுதும் நோக்கும்தேர் வாசலையே
. ஆராதனை தேரினிலே
. பாராதவர் சேறினிலே
வார்சடையன் தரிசனத்தில் காசினியே. ... 4

[ஊசல் = ஊஞ்சல்; வார்சடை = நீண்ட சடை; காசினி = பூமி]

அருமறையின் ஏற்றிறக்கம் தண்ணொலிக்கும்
திருமுறையும் ஒருசேர்ந்தே பண்ணொலிக்கும்
. சேந்தனாரின் பல்லாண்டு
. ஏந்திவரும் சொல்லாண்டு
இருநாகச் சுரமொலியோ விண்ணொலிக்கும்! ... 5

வலுமேவும் தவிலொலியும் வந்துறவே
உலுக்குமரம் தேர்தன்னை உந்திடுமே
. உற்சாகம் தேரோடும்
. தற்சிவமே வேரோடும்
எலும்பணியர் எழிலொன்றே முந்துறுமே! ... 6

[உலுக்குமரம் = நெம்புகட்டை; தற்சிவம் = முதற்கடவுள்]

நடராசர் திருவாடல் நாளமெனக்
கொடிஞ்சியிலே மணிகளெல்லாம் தாளமிடும்
. மின்னலிடும் முன்னழகே
. பின்னிவரும் பின்னழகே
உடையானின் ஊர்வலமே நீளுறுமே. ... 7

[நாளம் = உள்துளை; கொடிஞ்சி = தேர்;
உடையான் = உரிமைக்காரன், கடவுள்]

கருநிறத்தேர் இரண்டினிலே அம்மையப்பன்
இருயானை போலசையும் இம்மையப்பன்
. நண்பகலில் மீனவரின்
. மண்டகப்படி ஆனவுடன்
திரும்பும்தேர் நிலையுறுத்தும் செம்மையப்பா! ... 8

தில்லைத்தேர் நேர்நோக்கத் தொலைநோக்கத்
தொல்லையெலாம் சிவனருளால் தொலைவேக
. அம்மையப்பன் தரிசனமே
. நன்மையுறும் பரிசனமே
அல்லலற வாழ்வமைதி நிலையாமே. ... 9

[தொலைநோக்க = தொலைக்காட்சி, இணையம் முதலிய சாதனங்கள்
மூலம் தரிசித்தல்; பரிசனம் = தொடுதல், உறவு]

--ரமணி, 03/07/2014, கலி.19/03/5115

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sat Jul 05, 2014 9:14 am

ஆன்மீகச் செய்திக் கவிதை
கலி-ஜய வருடம் ஆனி 20 - 04/07/2014, கலி.20/03/5115


செய்தி:
ஆனி உத்திர தரிசன விழா
http://natarajar.blogspot.in/2009/06/blog-post.html

அம்பலத்தரசன் ஆனித் தரிசனம்
(குறும்பா)

ஆனிமாத உத்திரைமீன் வருநாளே
ஆனந்தத் தாண்டவனின் திருநாளே
. அதிகாலைத் திருமஞ்சனம்
. பொதுமன்றத் துறுதரிசனம்
ஞானமுடன் ஆனந்தமும் தருநாளே. ... 1

நடராச தரிசனத்திற் களனாகும்
கடலாழ உண்மைகளே புலனாகில்
. ஞானவழித் திணையேக
. மோனமொழிப் புணையாக
கடைத்தேற வரமென்றே பலனாகும். ... 2

[திணை - அகம்-புற ஒழுக்கம்; புணை = தெப்பம்]

திருவடியே ஐந்தெழுத்து மந்திரமாம்
திருப்பாதம் நகரமாக உந்தியதாம்
. மகரமாகத் தோளதுவாம்
. சிகரமாகத் தாழ்முகமாம்
திருமுடியாம் வகரயகர ரந்திரமாம். ... 3

[ரந்திரம் = ரகசியம், வெளி]

சிகரமாகும் உடுக்கையதே வலதுகரம்
வகரமாகித் தாள்சுட்டும் அபயகரம்
. யகரமாகும் அனலிகரம்
. நகரமாகும் முயலகனே
மகரமாகி மும்மலம்கொள் சரணவரம். ... 4

[அனலி = நெருப்பு]

தோற்றுவித்தல் துடியாலுறும் தொழிலெனவாம்
ஆற்றுவித்தல் அபயகரத் தொழிலெனவாம்
. தோன்றுமக்னி அழிதொழிலாம்
. ஊன்றுபதம் மறைதொழிலாம்
தேற்றியருள் தூக்குந்தாள் தொழிலெனவே. ... 5

திருவாசி பிரணவமாம் ஓங்காரம்
திருமுடியே ஞானத்தின் ரீங்காரம்
. மருள்நீக்கும் வீசுகரம்
. அருட்களியாய்த் தூக்குபதம்
திருவடியை ஊன்றப்போம் ஆங்காரம். ... 6

[ரீங்காரம் = வண்டொலி, இங்கு ஓங்கார அதிர்வொலி]

ஆகாயம் பொலிவுறுமே முகத்தினிலே
தீக்காயும் நெற்றிக்கண் அகத்தினிலே
. விரிசடையே நீரெனவாம்
. விரிமூக்கே மாருதமாம்
மேற்காயும் நிலமதுவாம் முகமெனவே. ... 7

கண்ணிடமே சந்திரனிச் சாசக்தி
கண்வலமே சூரியனாம் ஞானசக்தி
. செவிக்குழையே சக்தியம்சம்
. செவித்தோடே சிவனம்சம்
கண்ணுதலே கழுமுனையாம் க்ரியாசக்தி. ... 8

காற்சிலம்பின் கேளாவொலி அருமறையாம்
காற்றாங்கும் கமலநெஞ்சத் திருமலராம்
. காற்கழலே நமன்கேடு
. கார்க்கண்டம் சமன்பாடு
தோற்றமெனும் உலகமெலாம் உருவிலரே. ... 9

[நமன்கேடு = நமனுறாவண்ணம் பிறப்பறுத்தல்;
சமன்பாடு = அமரத்துவம்]

இருகண்ணும் தரிசனத்தில் உருநோக்கும்
ஒருமனமோ தரிசனத்தின் கருநோக்கும்
. சிவசக்தி தரிசனமே
. பவரோகத் தெரிவனமே
திருவருளால் மும்மலத்தின் மருணீக்கம்! ... 10

--ரமணி, 05/07/2014, கலி.21/03/5115

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sun Jul 06, 2014 6:28 pm

ஆன்மீகச் செய்திக் கவிதை
கலி-ஜய வருடம் ஆனி 22 - 06/07/2014, கலி.22/03/5115


செய்தி:
திருத்தங்கல் ஶ்ரீநின்ற நாராயணப் பெருமாள் உற்சவாரம்பம்.
http://temple.dinamalar.com/New.php?id=687

திருக்கோளக்குடி ஶ்ரீகோளபுரீஸ்வரர் ரிஷப வாகனத்தில் பவனி.
http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=517

நீலவண்ணன் தரிசனம்
(எண்சீர் விருத்தம்: அனைத்தும் காய்ச்சீர்கள்)

ஆலமரம் தவம்செய்தே தங்கால மலையாக
. அலைமகளும் தவம்செய்தே அவள்பெருமை நிலையாக
நீலவண்ணன் இருதவமும் உவந்தருளித் திருத்தங்கல்
. நின்றவிடம் ஆழ்வாரின் பாவண்ணம் பரவிடவே
கோலம்கொள் பெருமாளின் கருவறையில் பதினொருபேர்
. கொலுவிருக்கும் சிறப்புடனே கோவிந்தன் அருள்செய்ய
ஞாலவாழ்வில் நன்மைகளால் நலிவுறுதல் நீங்கிடவே
. நாரணனின் தாள்பற்ற நலமோங்கும் வாழ்வுறுமே.

நீலகண்டன் தரிசனம்
(முதற்சீர் கனிச்சீர், பிற காய்ச்சீர்)

கோலக்குடி குடவரையாம் கோவிலிலே
. கோளநாதர் ஆனிவிழா காணவரும்
கோலாகலம் பத்துநாள் மலையடியில்!
. கொடியேற்றம் அபிஷேகம் ஆரத்தி
சாலைத்தெரு வழியேகும் பரிவாரத்
. தரிசனமாம் கல்யாணம் தேரோட்டம்
ஆலந்தரு அடியமர்ந்து அருள்செய்யும்
. அம்மையப்பன் தாள்பணியத் துயரிலையே.

--ரமணி, 06/07/2014, கலி.22/03/5115

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Mon Jul 07, 2014 9:49 am

ஆன்மீகச் செய்திக் கவிதை
கலி-ஜய வருடம் ஆனி 23 - 07/07/2014, கலி.23/03/5115


செய்தி:
சொக்கலிங்கப்புதூர் நகர சிவாலய வருஷாபிஷேகம்.
http://www.dinamani.com/edition_madurai/article626732.ece

நகரத்தார் கோவிலிலே...
(ஆசிரியத்துறை)

நகரத்தார் வடிவமைத்த நஞ்சுண்டான் கோவிலிதே
தகனமுறும் வனமாடும் தாழ்சடையன்
சிகைவீழ்ந்தே தாள்வழியும் திருப்பொழிவின் தரிசனத்தில்
பகையாவும் நேசமாகிப் பற்றறில்லா வாழ்வுறுமே.

சொக்கலிங்கப் புதூர்மேவும் சுந்தரரின் கோவிலிலே
சக்திமீ னாட்சியவள் தாள்பற்றும்
தக்கார்க்குத் தகவுறுமே தகவிலர்க்குத் தீதுறுமே
எக்கணமும் சிந்தையுற எல்லையிலா இன்புறுமே.

--ரமணி, 07/07/2014, கலி.23/03/5115

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Tue Jul 08, 2014 8:20 am

ஆன்மீகச் செய்திக் கவிதை
கலி-ஜய வருடம் ஆனி 24 - 08/07/2014, கலி.24/03/5115


செய்தி:
கானாடுகாத்தான் ஶ்ரீசிவபெருமான் திருக்கல்யாணம்.
http://veludharan.blogspot.in/2014/05/chettinad-kanadukathan-shiva-and.html

கானாடி காப்பான்!
(அறுசீர் விருத்தம்)

கயிலாய நாதருக்குக் கல்யாணம்
. கானாடு காத்தானூர்க் கோவிலிலே
கயல்விழியாள் சவுந்தரிய நாயகியைக்
. கைப்பிடித்தே குடும்பத்தன் ஆனாராம்!
அயராத உழைப்பொன்றே மூலதன
. மாய்க்கொண்ட நகரத்தார் கோவிலிதே
துயரெல்லாம் நீங்கிடுமே அருட்செயலால்
. துடியேந்தி தாள்தன்னைப் பற்றிடவே.

மூன்றடுக்கில் ஒங்குராச கோபுரமாம்
. உமையன்னை சிவனாரின் சன்னிதிமுன்
சான்றெனசிற் பக்கலையின் மாட்சிமைக்கே
. ஆங்காங்கே தூணெல்லாம் எழிலுருவம்
தான்தோன்றி மூலவராம் கருவறையில்
. சப்பரத்தில் தெய்வங்கள் ஊர்வலமாம்
ஈன்றானை இத்தலத்தில் தரிசித்தே
. இகவாழ்வில் ஏற்றங்கள் பெறுவோமே.

--ரமணி, 08/07/2014, கலி.24/03/5115

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Wed Jul 09, 2014 6:08 pm

ஆன்மீகச் செய்திக் கவிதை
கலி-ஜய வருடம் ஆனி 25 - 09/07/2014, கலி.25/03/5115


செய்தி:
மதுரை மீனாட்சி ஊஞ்சலில் காட்சியருளல்.

அங்கயற்கண்ணி அருள்வாயே!
(தரவு கொச்சகக் கலிப்பா)

துரகதம் நரியாக்கித் துலக்கமுறச் செய்பவனாய்
உரகதம் மேனியுற உய்விக்கும் வெண்ணீறன் ... ... ... ... [உரகதம் = பாம்பு]
தருகதிகொள் சக்திதரும் தாயவளாய்த் தாங்குவதே
மரகதப் பாவையவள் மதுரையங் கயற்கண்ணே.

உடலுடனே உயிர்சேரந்தே உளமூஞ்சல் ஆடுதற்போல்
இடப்பக்கல் மடுத்தேநீ சிவசக்தி என்றாகிக்
கடம்பவனக் கோவிலிலே கன்னூஞ்சல் ஆடுவையோ?
குடமுடைந்து உயிர்செலுமுன் ஊசலெனக் கில்லாமோ?

இடவலமாய் மேற்கீழாய் இகவாழ்வே ஊசலாடும்
மடமையெலாம் மாண்பென்னும் மாயையிலே தேசலாகும்
சடங்கெல்லாம் உய்வென்னும் சாதனையே வேசமாகும்
கடம்பவன நாயகியே காத்தருள்வாய்க் காசினியே.

--ரமணி, 09/07/2014, கலி.25/03/5115

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Thu Jul 24, 2014 6:11 pm

பிரதோஷப் பாடல்
கடலி லெழுவிடம் நத்தியே...


(திருப்புகழ்ப் பாடல் ’நினது திருவடி சத்திம யிற்கொடி’ சந்தம்)

தனன தனதன தத்தன தத்தன
தனன தனதன தத்தன தத்தன
தனன தனதன தத்தன தத்தன ... தனதான

கடலி லெழுவிடம் நத்தியெ டுத்தவர்
. கருதி யமுதென வுட்கொளு மக்கணம்
. கதறி விமலைக ரத்தைய ழுத்திட ... இழியாதே
விடமும் சம்புக ழுத்திலி றுத்திட
. விமலை யுளமதி லச்சம யக்கமும்
. விலக அமரரும் விக்கிவ ழுத்திட ... வினையேகி
விடப மிசைவரு மத்தன கத்தினி
. லிளகி யிமையவர் தற்பரை மற்றிரு
. இறையின் விநயம னத்துந ளிப்புற ... விடையேறி
விடப நவிரம ருப்பிடை நுட்பத
. விகசி தவிததி விக்னம றுக்கும்
. விககம் வதிசடை நர்த்தகன் பொற்பதம் ... மருந்தாமே.

மனதி லெழுவிடம் நத்தியெ டுத்திவன்
. மயலி லமுதென வுட்கொளு மக்கணம்
. மலையி னரவுக ழுத்திலி றுக்குத ... லறியாதே
கனவு நனவென வியத்திலு ளத்தினில்
. கரமி துபரவி முற்றிய பற்றினில்
. கரண விகதன நித்திய வித்தக ... னெனவானான்
மனதி லுருவரும் வருணனை விற்பனம்
. மரண முறுகணம் வெற்றென வுற்றது
. வருபி றவிதனி லுற்றிடு வற்கட ... மெனவாகும்
சனன மரணமு ழற்சியில் வற்றுதல்
. அகல அனல்விழி விச்சைவி தைத்தருள்
. சடையன் திருமணி நித்திய நர்த்தக ... நடராசா!

பதம் பிரித்து:

கடலில் எழுவிடம் நத்தி எடுத்து-அவர்
. கருதி அமுதென உட்கொளும் அக்கணம்
. கதறி விமலை கரத்தை அழுத்திட ... இழியாதே
விடமும் சம்பு கழுத்தில் இறுத்திட
. விமலை உளமதில் அச்ச மயக்கமும்
. விலக அமரரும் விக்கி வழுத்திட ... வினை-ஏகி
விடப மிசைவரும் அத்தன் அகத்தினில்
. இளகி இமையவர் தற்பரை மற்றிரு
. இறையின் விநய மனத்து நளிப்புற ... விடையேறி
விடப நவிர மருப்பிடை நுட்பத
. விகசித விததி விக்னம் அறுக்கும்
. விககம் வதிசடை நர்த்தகன் பொற்பதம் ... மருந்தாமே.

[நத்தி = விரும்பி; இழியாதே = இறங்காதே; இறுத்திட = தங்கிட;
தற்பரை = உமை; மற்றிரு இறை = அரியும் அயனும்;
விநயமனம் = பணியும் மனம்; நளிப்பு = செறிவு = தன்னடக்கம்;
நவிரம் = தலை, உச்சி; மருப்பு = கொம்பு;
விகசித விததி = மலர்ச்சியின் விரிவு; விககம் = சந்திரன்]

மனதில் எழுவிடம் நத்தி எடுத்து-இவன்
. மயலில் அமுதென உட்கொளும் அக்கணம்
. மலையின் அரவு கழுத்தில் இறுக்குதல் ... அறியாதே
கனவு நனவென வியத்தில் உளத்தினில்
. கரமிது பரவி முற்றிய பற்றினில்
. கரண விகதன நித்திய வித்தகன் ... என-ஆனான்
மனதில் உருவரும் வருணனை விற்பனம்
. மரணம் உறுகணம் வெற்றென உற்று-அது
. வரு பிறவிதனில் உற்றிடு வற்கடம் ... என-ஆகும்
சனன மரணம் உழற்சியில் வற்றுதல்
. அகல அனல்விழி விச்சை விதைத்தருள்
. சடையன் திருமணி நித்திய நர்த்தக ... நடராசா!

[மயலில் = மயக்கத்தில்; வியத்தில் = உடலில்; கரம் = விடம்;
கரண விகதன நித்திய வித்தகன் = இந்திரியத்தால் உறும்
அறிவைப் புகுழந்து அதுவே பெருமை என்பவன்; வருணனை = கற்பனை;
வற்கடம் = வறுமை; உழற்சி = அலைக்கழிப்பு, சுழற்சி;
விச்சை = வித்தை = விதையை]

--ரமணி, 23/07/2014, கலி.07/04/5115

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Fri Jul 25, 2014 7:55 pm

பாரதியின் பாப்பா!

இந்தச் சின்னஞ் சிறு கிளியின் பாட்டைக் கேளுங்கள்!
http://tamilmani.wordpress.com/2009/12/07/சின்னஞ்சிறு-கிளியே-கண்ண/

ரமணி


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Fri Aug 08, 2014 9:46 am

பிரதோஷப் பாடல்
வையம் உய்ய அருள்வானே!


(திருப்புகழ்ப் பாடல்கள் 660. ’கள்ள முள்ள வல்ல வல்லி’
661. ’தொய்யில் செய்யில் நொய்யர் கையர்’ இவற்றின் சந்தம்)

தய்ய தய்ய தய்ய தய்ய
தய்ய தய்ய ... தனதான

தைய லையன் மெய்யி லுய்யச்
. சையங் கொள்ளு ... மருளாள
னையங் கொள்ள வில்ல முள்ளி
. யல்லல் கொள்ளு ... மடலேறின்
மெய்யில் வெள்ளி யுவ்வி வெள்ளம்
. வெய்ய னல்லற் களைவோனாய்
மையற் றள்ளி ஐயந் தெள்ளி
. வைய முய்ய வருள்வானே!

வெள்க டல்மி சைதி ரள்மை
. வெய்து யிர்விண் ணவர்காத்தே
வெள்வி டைமி சைநி லையம்
. மெய்யன் பர்தம் முயிரார்வர்
உள்ளங் கொள்ளுங் கள்ளந் தள்ள
. உய்வ னல்லன் எனவேயிக்
குள்ள னுய்வை யுள்ளி வெய்த
. உள்ளன் வள்ள லருள்வாயே!

பதம் பிரித்து:

தையல் ஐயன் மெய்யில் உய்யச்
. சையம் கொள்ளும் ... அருளாளன்
ஐயம் கொள்ள இல்லம் உள்ளி
. அல்லல் கொள்ளும் ... அடலேறின்
மெய்யில் வெள்ளி யுவ்வி வெள்ளம்
. வெய்யன் அல்லல் களைவோனாய்
மையல் தள்ளி ஐயம் தெள்ளி
. வையம் உய்ய அருள்வானே!

[சையம் = மலை; ஐயம் = பிச்சை;
மெய்யில் வெள்ளி = மேனியில் வெண்ணீறு;
உவ்வி வெள்ளம் = தலையில் (கங்கை) வெள்ளம்;
வெய்யன் = விருப்பமுள்ளோன், தீக்கடவுள், சூரியன்]

வெள்கடல் மிசை திரள் மை
. வெய்துயிர் விண்ணவர் காத்தே
வெள்விடை மிசை நிலையம்
. மெய்யன்பர் தம் உயிர்-ஆர்வர்
உள்ளம் கொள்ளும் கள்ளம் தள்ள
. உய்வன் அல்லன் எனவே-இக்
குள்ளன் உய்வை உள்ளி எய்த
. உள்ளன் வள்ளல் அருள்வாயே!

[வெள்-கடல் = வெள்ளிய கடல், இங்கு பாற்கடல்;
மை = இருள், களங்கம், இங்கு ஆலகால விடம்;
வெய்துயிர்த்தல் = வெம்மையால், துன்பத்தால் மூச்சுவிட்டு உயிர்த்தல்;
வெள்-விடை = வெண்ணிற எருது; நிலையம் = கூத்து, ஆடல்;
உள்ளன் = உள்ளிருப்பவன், உற்றவன்]

--ரமணி, 06-08/08/2014, கலி.23/04/5115

*****


Ponmudi Manohar
Ponmudi Manohar
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 26
இணைந்தது : 23/07/2014

PostPonmudi Manohar Sat Aug 09, 2014 9:47 am

கவிதையில் செழுமையும் ,கருத்தினில் செறிவும் மிகுந்திருக்கின்றன .

Sponsored content

PostSponsored content



Page 23 of 36 Previous  1 ... 13 ... 22, 23, 24 ... 29 ... 36  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக