புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரமணியின் கவிதைகள் - Page 21 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 21 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 21 Poll_c10 
40 Posts - 63%
heezulia
ரமணியின் கவிதைகள் - Page 21 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 21 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 21 Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
ரமணியின் கவிதைகள் - Page 21 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 21 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 21 Poll_c10 
2 Posts - 3%
வேல்முருகன் காசி
ரமணியின் கவிதைகள் - Page 21 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 21 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 21 Poll_c10 
2 Posts - 3%
viyasan
ரமணியின் கவிதைகள் - Page 21 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 21 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 21 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரமணியின் கவிதைகள் - Page 21 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 21 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 21 Poll_c10 
232 Posts - 42%
heezulia
ரமணியின் கவிதைகள் - Page 21 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 21 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 21 Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
ரமணியின் கவிதைகள் - Page 21 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 21 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 21 Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
ரமணியின் கவிதைகள் - Page 21 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 21 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 21 Poll_c10 
21 Posts - 4%
prajai
ரமணியின் கவிதைகள் - Page 21 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 21 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 21 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
ரமணியின் கவிதைகள் - Page 21 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 21 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 21 Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
ரமணியின் கவிதைகள் - Page 21 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 21 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 21 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ரமணியின் கவிதைகள் - Page 21 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 21 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 21 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ரமணியின் கவிதைகள் - Page 21 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 21 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 21 Poll_c10 
7 Posts - 1%
mruthun
ரமணியின் கவிதைகள் - Page 21 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 21 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 21 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரமணியின் கவிதைகள்


   
   

Page 21 of 36 Previous  1 ... 12 ... 20, 21, 22 ... 28 ... 36  Next

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Wed Oct 31, 2012 1:22 pm

First topic message reminder :

கணினி போற்றுதும்!?
ரமணி, 18/08/2012

கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!
பணியெது வாகிலும் பாங்குறச் செய்திடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!

பலவகை வடிவினில் உலகில் உறைந்திடும்
பலவகை மனிதரும் பலவாறு உகந்திடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!

இன்றைய உலகின் எலிகள் போட்டியில்
பகலும் இரவும் மனிதர் வாழ்வினை
நிலைபெறச் செய்திடும் கணினி போற்றுதும்!

குழந்தை மனம்முதல் கிழவர் மனம்வரை
கலைகள் போற்றித் திறன்கள் வளர்த்து
கனவுகள் தந்திடும் கணிணி போற்றுதும்!

குடும்பம் முழுவதும் கணினி வகைகள்!
மேசைக் கணினியும் மடிமேல் கணினியும்
அலுவ லகத்திலும் வீட்டிலும் அமர்ந்து
ஆசான் தோழன் மருத்துவன் செயலர்
கணக்கன் தூதுவன் கேளிக்கை யாளன்
அனைவர் ’ரோல்’களில் ஆடிடும் பாடிடும்!

கைத்தொலை பேசியில் வன்பொருள் மென்பொருள்
இணைபொரு ளாக உறையும் கணினி
நின்ற விடத்தில் தொடர்பு கொண்டு
உறவினை தொழிலினை வம்பினை வளர்த்திட
ஏழை எளியோர் செல்வம் படைத்தோர்
யாவரும் முனைந்திட வழிவகை செய்திடும்.

உட்பகை வெளிப்பகை வானிலை பொருளியல்
விதிமுறை செயல்வகை என்றிவ் வாறு
அனைத்தும் அறிந்திட அரசுக் குதவி
அரசுகள் அமைக்கும், அரசுகள் கவிழ்க்கும்!

இறைவ னுக்குக் கரங்கள் பலவாம்
கணினி களுக்கும் கரங்கள் பலவே!

விரல்கள் சொடுக்கிட மின்னெலி ஒருகரம்
விரல்கள் தட்டிட விசைமணை ஒருகரம்
கண்கள் பார்த்திட ஒளிர்ந்திடும் திரைமுகம்
பிரதிகள் அச்சிட அச்சுப் பொறிக்கரம்
அச்சின் தாள்களை அலகிட்டு மின்பதியும்.

இணைய தளங்களை எட்டிட ஒருகரம்
மோடம் டெலிஃபோன் இணைப்புகள் தாங்கி
’யாதும் ஊரே யாவரும் கேளிர்’
என்ற முதுமொழி நனவில் காட்டிடும்.

இத்தனை செயல்களால் வாழ்வில் வளம்தரும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்?

தட்டெழுதித் தட்டெழுதிக்
கையெழுத்தை மறக்கச் செய்யும்
மின்னெலியில் விரல்வலிக்கச் சொடுக்கச் செய்யும்

பொழுதுகள் மறந்து அறநெறிகள் துறந்து
உடல்நலம் பேணுவது அசட்டை செய்து

பெரியவர் மனங்களில் வறியவர் ஆகவும்
சிறுவர் சிறுமியர் மடிமையர் ஆகவும்
இளையோர் நெறிகளில் இளைத்தோர் ஆகவும்

தீயோர் செயல்கள் கலியில் பெருகிட
மூவா மருந்தாய் விளங்கிப் பல்கிடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்?

கரணம் என்பது உபகரணம் ஆகி
மனிதன் அவற்றை ஆளும் வரையில்
காரணம் ஆகா மனிதன் அழிவுக்கு.

பொறிகளின் பொறிகள் மனிதன் மனதில்
அல்லதைச் சமைத்து நல்லதை அழித்தால்
பொறிகளின் நெருப்பு ஊழித் தீயாகி
உலகினை அழிக்க உபாயம் ஆகிவிடும்!

*****



ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Mon Jun 02, 2014 7:28 pm

ஆன்மீகச் செய்திக் கவிதை 23.
வைகாசி 19

திருவாதவூர் ஶ்ரீ திருமறைநாதர் உற்சவாரம்பம்

கோவில் விவரம்:
http://temple.dinamalar.com/New.php?id=701

தீனனுக் கருள்வாய் திருவாத வூர!
(பதினாறு சீர் விருத்தம்: காய் மா--காலடி)

அகங்கார வாதம் அகம்பிரம வாதம்
. அசற்கார்ய வாதம் அனுவேது வாதம்
. . அனேகாந்த வாதம் அனேகான்ம வாதம்
. . . அஸ்திநாஸ்தி வாதம் ஆரம்ப வாதம்
இகம்கார ணமென இதுபோன்ற வாதம்
. இகல்கொண்டு வாழ்வில் எதிரெதிர் மோதிச்
. . சிகைபற்றி யாடும் சதிராட்ட வேடம்
. . . இடமாகும் உள்ளம் எதும்வேண் டிலேனே
உகந்தேனுன் தாள்தான் திகட்டாத தேனாய்
. உருத்தேற நானும் சிறுத்தேனென் ஊனில்
. . உளமொன்று மட்டும் களமென்று பட்டே
. . . ஒறுத்தேதான் வாழும் விழைந்தேதான் வீழும்
திகம்பரனாம் நீயே சிதம்பரமாம் வெளியாய்த்
. திக்கற்ற என்னுள் திருப்பாதம் காட்டித்
. . திறமெல்லாம் போக்கித் திருஞானம் ஊட்டித்
. . . தீனனெனக் கருள்வாய் திருவாத வூர!

குறிப்பு:
பல்வேறு தர்க்க வாதங்கள்:
அகங்கார: தான் எனும் உணர்வே பிரம்மம் என்பது;
அகம்பிரம்ம: நானே பிரம்மம் என்பது;
அசற்கார்ய: உற்பத்திக்கு முன் இல்லாமலே காரியம் தோன்றும் என்பது;
அனுவேது: பரமாணுக்களே பிரபஞ்ச காரணம் என்பது;
அனேகாந்த: ஏழுவகை நியாயம் என்னும் சமணவாதம்;
அனேகான்ம: ஆன்மாக்கள் பல உண்டு என்பது;
அஸ்திநாஸ்தி: உண்டு இல்லை என்பது;
ஆரம்ப: முதற்காரணம் இல்லாமலே காரியம் தோன்றும் என்பது.

--ரமணி, 02/06/2014, கலி.19/02/5115

*****

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Tue Jun 03, 2014 6:41 pm

ஆன்மீகச் செய்திக் கவிதை 23.
வைகாசி 20

திருமோகூர் ஶ்ரீகாளமேகப் பெருமாள் உற்சவ ஆரம்பம்
ஆழ்வார் திருநகரி ஶ்ரீநம்மாழ்வார் புஷ்ப பல்லக்கில் பவனி

பெருமாள் பெருமான் உற்சவம்
(அறுசீர் விருத்தம்: மா மா காய் அரையடி)

மோகூர் கோவில் ஆப்தனென
. மோக னவல்லி யுடனுறைய
ஏகாந் தத்தில் சயனிக்கும்
. தேவன் கோவில் உற்சவமாம்
வைகா சிமாதம் கோதையுடன்
. வைரச் சிறுதேர்க் கரிமேவி
சாகா வரமாய் அமுதேந்தி
. தாகம் தீர்க்க ஊர்வலமாம். ... 1

கள்ளத் துயில்கொள் கோலத்தன்
. காள மேகப் பெருமாளென்
உள்ளம் துயிலாக் கள்ளத்தின்
. உரத்தை அழித்தே என்னுள்ளே
மெள்ளத் துளிர்க்கும் தவவேட்கை
. மேவச் செய்தே ஆனந்தம்
பள்ளம் பாயும் நீரெனவெ
. கொள்ளச் செய்ய வேண்டுவனே. ... 2

காதுக் கினிய கவியாழ்வார்
. ஆசான் சாச னம்பெற்றே
ஆதி நாதன் குருகூரில்
. நம்மாழ் வாராம் சடகோபர்
பாதம் தாங்கும் பூச்சிவிகை
. யார்ந்தே வீதி வருநாளில்
நாதன் நம்முள் மேவிடவே
. நம்மாழ் வாரை வேண்டுவமே. ... 3

--ரமணி, 03/06/2014, கலி.20/02/5115

மேல்விவரம்:
http://temple.dinamalar.com/New.php?id=86
http://enthamizh.blogspot.in/2012/10/blog-post.html
http://temple.dinamalar.com/New.php?id=683

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Mon Jun 16, 2014 11:05 am

தந்தை-தாய்-மகன் தகவு

அப்பா பெயருடையார் அப்பா வெனச்சொல்லி
எப்பொழுதும் ஒய்ந்த திலை. ... 1

விந்தால் வமிசம் விளைவிக்கும் விந்தையே
தந்தையென் பாரின் தகவு. ... 2

வாக்கினால் கண்டிப்ப ராயினும் தந்தையே
காக்கும் கடவுளென் றாம். ... 3

மகனுமோர் நாள்தந்தை ஆவனே வாழ்வில்
அகத்தில் இருத்தல் நலம். ... 4

தந்தை பிறந்தான் தனயனாய் தோன்றலுக்கும்
பிந்தை அதுபோல் பிறப்பு. ... 5

தோளுக்கு மிஞ்சினால் தோழனெனின் தந்தையின்
தாளுக்குக் குன்றாத் தகவு. ... 6

பாத்திரன் செல்வந்தன் பண்டிதனென் றாலுமகன்
மூத்தவன் ஆவனோ கொல்? ... 7

உருவொன் றெனினும் உளம்மாறும் பிள்ளை
இருவர் வினையின் பிறப்பு. ... 8

தந்தை தனயனைத் தந்தாலும் தந்தையைத்
தந்தவ ளன்றோவோர் தாய்? ... 9

தந்தை சிவமென்றும் தாயவள் சக்தியென்றும்
சிந்தையுறக் கிட்டும் சிறப்பு. ... 10

--ரமணி, 16/06/2014

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Wed Jun 18, 2014 8:52 pm

ஆன்மீகச் செய்திக் கவிதை 24.
ஆனி 4

திருப்பதி ஶ்ரீஏழுமலையப்பன் சகஸ்ரகலசாபிஷேகம்

மாயவன் கழல்கள்
(ஈரசைச் சீர்க் குறும்பா)

ஆயிரம் கலசம் ஆடும்
மாயவன் கழல்கள் தேடும்
. மனிதர் ஆவி
. புனிதம் மேவி
பாயிரப் பான்மை நாடும்.

நாரண னாயிர நாமம்
வேரென விளையும் சேமம்
. திருவுரு தரிசனம்
. வருமொழி கரிசனம்
பாரினில் உண்டே ஏமம்.

காலம் காலன் கையில்
ஏலும் வினையே மெய்யில்
. மாதவன் தரிசனம்
. வேதனை எரிவனம்
மேலுல கம்வரச் செய்யும்.

--ரமணி, 18/06/2014, கலி.04/03/5115

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Thu Jun 19, 2014 6:45 am

ஆன்மீகச் செய்திக் கவிதை 25.
ஆனி 5

சுவாமிமலை ஶ்ரீமுருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்

முருகன் வேல் கவசம்
(ஈரசைச் சீர்க் குறும்பா)

தங்கக் கவச மேனி
துங்கத் தவசி ஞானி
. வயிரவேல் முருகன்
. பயில்வினைக் கருவன்
சிங்கன் நீக்குவன் ஆனி. ... 1

[துங்கம் = உயர்வு, பெருமை, தூய்மை; கருவன் = சங்காரமூர்த்தி;
சிங்கன் = குறவன்; ஆனி = ஹானி = கேடு.]

ஆதி மந்திரக் குருவெனப்
பாதை காட்டும் உருவினில்
. வரும்வேல் முருகனால்
. திருமால் மருகனால்
வாதை பொடியும் துருவென! ... 2

நுதற்கண் குமரன் உதித்தான்
முதற்கண் வேழன் துதித்தான்
. வள்ளிக் குறமகள்
. பள்ளித் தலமுறப்
பதற்றம் நீங்கப் பிடித்தான். ... 3

அமரர் தளபதி குமரன்
சமரை வெல்வதில் சதுரன்
. சேவற் கொடியான்
. பாவலற் கடியான்
நமரெனில் அருளும் அமரன்! ... 4

முத்துக் குமரனைப் போற்றுவோம்
சித்தத் தமர்வினில் ஆற்றுவோம்
. ஆறெழுத் துமந்திரம்
. வேறறுக் குமெந்திரம்
முத்திக் குருவெனச் சாற்றுவோம். ... 5

[வேறறுக்கும் = வேற்றுமையை அழிக்கும்]

--ரமணி, 19/06/2014, கலி.05/03/5115

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Fri Jun 20, 2014 6:52 am

ஆன்மீகச் செய்திக் கவிதை 26.
ஆனி 6

இராமேஸ்வரம் ஶ்ரீபர்வதவர்த்தினியம்மன் தங்கப் பல்லக்கில் புறப்பாடு
திருத்தணி ஶ்ரீமுருகப்பெருமான் கிளி வாகன சேவை

செய்தி விவரம்:
http://www.dinamani.com/religion/2014/02/28/ராமேசுவரத்தில்-சுவாமி-அம்ப/article2082076.ece

பூழியில் திருமண் வேதம்!
(ஈரசைச் சீர்க் குறும்பா)

மலைவளர் காதலி வீதியில்
சிலையுரு ஊர்வலச் சேதியில்
. ஆடகச் சிவிகையாம்
. ஊடகத் துவகையாம்
கலைவளர் இராம நாதியன். ... 1

[மலைவளர் காதலி = பர்வதவர்த்தினி, இராமேஸ்வரம் கோவிலில் அம்பாள் பெயர்;
ஆடகம் = பொன்; ஊடகம் = ஊடும் அகம்; நாதியன் = தலைவன்]

ஆழியில் ஆறுகள் பாதம்
பாழியில் இராம நாதம்
. லிங்கத் துருவால்
. அங்கண் அரியால்
பூழியில் திருமண் வேதம்! ... 2

[ஆழி = கடல்; பாழி = கோவில்; பூழி = விபூதி]

கண்ணும் கண்ணும் கலந்தன
பண்ணும் இசையும் உவந்தன
. தசரதத் தோன்றலே
. இசைவுறும் ஏந்தலாம்
மண்ணில் வானின் விருந்தென! ... 3

*****

திருத்தணிக் குழகன்
(ஈரசைச் சீர்க் குறும்பா)

இருகிளி கொண்டவன் குழகன்
திருத்தணிக் கிளியூர் அழகன்
. காவடி யாடுவன்
. பாவையர் வேடனின்
திருத்தாள் பணிந்தே விழுவன். ... 1

[குழகன் = அழகன் முருகன்; கிளியூர் = கிளி வாகனத்தில் ஊர்ந்து வரும்]

தினைப்புன வாழ்வாம் உலகம்
தினவுறும் ஆசைச் சலகம்
. சரவணன் மந்திரம்
. சிரவணம் இந்திரம்
முனிவரின் முத்தித் திலகம். ... 2

[சலகம் = ஸ்நானம்; சிரவணம் இந்திரம் = காதுக்கு மேன்மையானது]

கருத்தணி யுளந்தணி யுருத்தணி
செருத்தணி ஞானம் உரித்தணி
. திருத்தவ வேந்தன்
. திருத்தணிச் சேந்தன்
திருத்தணி யாப்புகழ் திருத்தணி! ... 3

விளக்கம்:
கருத்தினை அணியும் உள்ளம் தணிய, உருவம் தணிய,
பகைமை தணிய, ஞானத்தை உரித்தே அணியும்
. சிறந்த தவவேந்தனே
. திருத்தணி சேந்தனாம்; அவனது
அழகு/தெய்வத்தன்மை தணியாத புகழ் கொண்டது அவன் தலமாகிய தணிகை மலை.

--ரமணி, 20/06/2014, கலி.06/03/5115

*****


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84086
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jun 20, 2014 8:05 am


உங்கள் ஆன்மிக எழுத்துக்கள் (பாமாலை)
வலைப்பூக்களில் தொடுக்கப்படும் துளசிமாலை
-
ரமணியின் கவிதைகள் - Page 21 U0FTkw8JSgatqlqZx27h+43
-


bparthasarathi
bparthasarathi
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 26/11/2010

Postbparthasarathi Fri Jun 20, 2014 4:51 pm

அருமை...அருமை...

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sat Jun 21, 2014 9:10 am

ரமணியின் கவியரங்கக் கவிதைகள்
எனக்குப் பிடித்த...


சந்தவசந்தக் கவியரங்கம் 40.
தலைப்பு: ’எனக்குப் பிடித்த...’
தலைவர்: திருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி
பங்கேற்பு: ரமணி
(https://groups.google.com/forum/
#!topic/santhavasantham/SHouXdA6RN8%5B176-200-false%5D)

மேற்கோள்
கணந்தோறும் வியப்புகள் புதிய தோன்றும்;
கணந்தோறும் வெவ்வேறு கனவு தோன்றும்;
கணந்தோறும் நவநவமாங் களிப்புத் தோன்றும்;
கருதிடவும் சொல்லிடவும் எளிதோ?...
--மஹாகவி பாரதியார், பாஞ்சாலி சபதம் 27 மாலை வர்ணனை 149

கடவுள் வாழ்த்து
ஆனை வதனமும் அங்குசமும் மோதகமும்
பானை யுதரமும் ஐங்கரமும் - மோனம்
குவியநின்று சொற்கள் குதிரவைத்(து) ஆர்ந்தே
கவிதையெழ வேண்டு வனே.

அரங்கத் தலைவர்
கல்லணையின் மடைதிறந்த காவிரியின் வெள்ளம்போல்
சொல்லாறு பாயமனச் சோலையெலாம் குயில்கூவக்
கல்லாரும் கற்றாரும் கவியாற்றில் ஆடச்செயும்
சொல்லாளர் இராமமூர்த்தி தொன்றமிழின் செல்வரன்றோ?

இலக்கியமும் உலகியலும் தெய்வதமும் சரிசமமாய்ப்
புலமையுடன் விதந்தோதிப் புகழ்சேர்க்கும் சொல்லாற்றல்
கலன்கலனாய் உரைததும்பக் கவிமலரச் சொற்பொழியும்
தலைவருக்கென் சிரம்தாழ்வேன் தழைக்கட்டும் தமிழோசை!

அவையடக்கம்
பாடறிவேன் படிப்பறியேன் பழம்பனுவல் கற்றறியேன்
ஏடுகளில் கவிதைகளை எழுதுமார்வம் ஒன்றுடையேன்
பாடுமுதற் கவியரங்கப் படைப்பிலெதும் நலிவுகளின்
கோடுகளைக் களைந்திடவே உதவிசெய்ய வேண்டுவனே.

எனக்குப் பிடித்த...
(நாலடி, எட்டடித் தரவு கொச்சகக் கலிப்பா)

எனக்குமிகப் பிடித்ததுவாய் எதுவென்றே அலசியதில்
மனிதனுடன் இயற்கையுடன் மனமுறையும் இறைவனுடன்
தினந்தோறும் உறவாடித் திளைத்துவரும் பொழுதுகளில்
மனதினிலே பதிவாகி மகிழ்வூட்டும் ஓர்கணமே. ... 1

இயற்கையோடு மனிதனோடு இறைவனுமே கணமொன்றே
இயல்பினாலோ உருவினாலோ செயலினாலோ மனம்நிறைவர்
வயலூறும் சகதியென வளமிடையே குறையுறவே
அயலாகிப் போவதன்றோ அனைத்துருவும் பலகணத்தே! ... 2

கணமொன்றில் அறிஞராவர் கணமொன்றில் வறிஞராவர்
கணமொன்றில் நட்பாகும் கணமொன்றில் அயலாகும்
கணமொன்றில் உறவாகும் கணமொன்றில் பிரிவாகும்
குணமூன்றின் ஆளுகையிற் குன்றுகளும் குறையுறுமே! ... 3

கணமொன்றே இயற்கையதன் அழகெல்லாம் மனதினிலே
கணமொன்றே இறையதுமே அமர்வதெலாம் மனதினிலே
கணமொன்றே நிலைத்ததுவாய்க் கைப்பற்றும் மனதினிலே
கணமொன்றே காரணமாம் கருக்கொளவே சிதைவுறவே. ... 4

கணத்தையேநான் நேசித்தேன் காதலித்தேன் சேகரித்தேன்
அணத்திடுமே அதுவொன்றே அகமகிழ்வின் முன்னிலையாய்
கணம்சென்றால் எதும்மாறும் அகம்புறத்தின் வாழ்வினிலே
கணங்களைநான் நேசித்தே மனக்கோட்டம் எதிர்கொள்வேன். ... 5

[அணத்தல்=மேலோங்குதல்]

மாலைநேரம். பானல்வீழும் ஆனைக்கா சாலையோரம்.
சாலியேனல் தலைவருடித் தாலாட்டும் மலயக்கால்.
சோலைப்புள் காதிழியும். சோதிக்கோக் கண்வழியும்.
கோலங்கள் காவிரியில் குடதிசையின் வானத்தே.
சாலச்சேர் வண்ணங்கள் சந்தியிலே வான்கலக்கும்
காலடியில் பாலம்கீழ்க் காவிரியும் எதிரொளிக்கும்.
காலவீழ்வில் கண்ணிரண்டும் கலைவண்ணம் படம்பிடிக்கும்.
ஓலமனம் உள்வீழ உறைகணமாய் நிலைபெறுமே. ... 6

[ஏனல்=கதிர்; மலயக்கால்=தென்றல்; சோதிக்கோ=சூரியனின் கிரணம்]

இளங்கல்வி பயில்நாட்கள். இணைநின்றார் தோழியரே!
விளையாட்டில் கற்றறிந்த வித்தைகளில் வீட்டினிலே!
களைபொங்கும் முகங்களுடன் காதலித்த கன்றுகளாய்!
தெளிநீரார் ஓடைமேவும் சிற்றலையாய்க் கூடலூடல்!
வளிவெளியில் சுருள்புகையாய் மணம்பரப்பும் ஊதுவத்தி
உளங்களிலே எளிதார்ந்தே உறவாடி உரிமைகொள்ளும்!
வளர்மேனி பூரித்தே வளமாரத் தோழமையும்
தளர்ந்தேகி மனத்துள்ளே தளைப்படுமே சித்திரமாய்! ... 7

அஞ்சுரூபாய்த் தாள்மடித்தே வால்மேலாய்த் தெருவினிலே!
துஞ்சுமதைக் கொள்வரெவர்? தூண்மேல்தன் முதுகிட்டுச்
சஞ்சலனாய்த் திண்ணையிலே அமர்தோழன் உயர்பள்ளி!
வஞ்சமிலா வேடிக்கை வாயயரா மென்பேச்சு!
கஞ்சுகத்தில் நூதனமாம் கார்க்கேசம் ’க்ரூகட்’டாம்!
பிஞ்சுமுகம் கருவிழியும் பின்னாளில் மாறிடினும்
நெஞ்சினிலே என்னாளும் நிற்பதுவாய் அக்கணமே! ... 8

[வால்=வெண்மை: ரூபாய் நோட்டின் வெண்பகுதி]

மற்றபல நண்பருமே வற்றாத கணத்துளிகள்!
பொற்றமிழில் சுந்தரமாய்ப் போட்டிகளில் எனைவென்று
கற்பனையில் நான்படைத்த கதைத்திருத்தம் செய்தவனும்
உற்றதேர்வைப் பராமுகமாய் ஓர்தாளில் முடித்தவனும்
கற்றறிந்தே ரமணீயக் கதையெழுதும் வதிலையனும்
கற்றதெலாம் தாசனாகக் கருத்துடனே பயின்றவனும்
தற்செயலாய்த் தொலைபேசித் தக்கவைத்த தோழமையில்
இற்றைநாள் அக்கணங்கள் மீளவுளம் இனித்திடுமே. ... 9

[வதிலையன் = வதிலையூரில் வசித்தவன்]

கல்லூரி நாள்முதலா அலுவலகத் தோய்வுவரை
நல்லுளமாய் இன்முகமாய் நற்செயலாய்ச் சிந்தனையாய்
மல்குபல கணப்புதையல் மனதினிலே எனக்கெனவே!
எல்லாமே பொன்மணியாய் மேவியுளம் களித்திடினும்
வல்லோரின் விமர்சனமும் வாழ்த்துரையும் என்னெழுத்தைச்
சொல்லசைவில் பொருளிசைவில் சேர்வளங்கள் கொளச்செய்த
தல்லிசந்த வசந்தப்பாத் தளமிதிலே சேர்ந்தநாளே ... [தல்லி=தாய்]
கல்விகேள்வித் தருகண்ட கணமெனவே மிகவிரும்பும்! ... 10

இக்கணத்தை விஞ்சுவதாய் இன்னுமொரு கணமுண்டே!
விக்கிமனம் நெகிழ்ந்திடவே விழிக்கடையில் நீர்சோரும்
அக்கணத்தின் தரிசனத்தில் கவிதையுண்டு கதைகளுண்டு
பக்கமுறும் மனிதருண்டு பார்கலையாய்க் காட்சியுண்டு
நெக்குருகும் சிலிர்ப்பினிலே இறையுருவின் ஆட்சியுண்டு
சொக்குமிசைப் பாடலுண்டு சுந்தரமாய் எதுவுமுண்டு
சிக்கனமாய் மனக்குகையின் திறவுகோலாய் வழிகாட்டும்
அக்கணமே மிகப்பிடித்த கணமென்றே சொல்வேனே! ... 11

என்னைநானும் அறிவதற்கே இவையெல்லாம் முன்னுரையோ?
பொன்மனத்தில் பூரணத்தின் பொலிவினைநான் விழைவதிலே
கொன்னக்கோல் போடுதற்குக் கூழ்நாவும் குழைவதுபோல்
என்னையேநான் நேசித்தல் எல்லாமும் ஆவதுவோ? ... 12

--ரமணி, 04-14/04/2014, கலி.01/01/5115
--இறுதித் திருத்தம்: 09/05/2014

*****

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sun Jun 22, 2014 10:19 am

ஆன்மீகச் செய்திக் கவிதை
கலி-ஜய வருடம் ஆனி 08 - 22/06/2014, கலி.08/03/5115


ஶ்ரீ வைகுண்டம் ஶ்ரீ வைகுண்டபதி புறப்பாடு
கீழைத் திருப்பதி ஶ்ரீகோவிந்தராஜப் பெருமாள் ஸன்னதி எதிரில்
ஶ்ரீஹனுமாருக்குத் திருமஞ்சன ஸேவை.

பெரிய திருவடி, சிறிய திருவடி
(கலிவிருத்தம்: கூவிளம் புளிமா காய் தேமா)

சோரனுக் கருளிச் சோரநாத ரான
நாரணன் நலஞ்சேர் நாமமதே தேனாய்
ஆர்மனத் துறையும் ஆனந்த ஞானம்
கார்வினை யகலக் கனிந்திடுமே நேயம்.

வல்வினை யகற்றும் வைகுந்தன் சீரைச்
சொல்வினை யடியார் சொல்லுருவி லோர
நல்வினை பெருக நாரணன்பூந் தாளால்
தொல்வினை நலியத் தொந்தமிலா வாழ்வே.

கீழ்த்திருப் பதிவாழ் கோவிந்தன் முன்னே
வீழுநீர்த் திளைக்கும் வீராஞ்ச நேயன்
ஏழ்பிறப் பறுத்தே எழுவினைகள் மாய்க்கத்
தாள்தனைப் பணியத் தானற்ற ஓய்வே.

--ரமணி, 22/06/2014, கலி.08/03/5115

*****


Sponsored content

PostSponsored content



Page 21 of 36 Previous  1 ... 12 ... 20, 21, 22 ... 28 ... 36  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக