புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரமணியின் கவிதைகள் - Page 3 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 3 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 3 Poll_c10 
52 Posts - 61%
heezulia
ரமணியின் கவிதைகள் - Page 3 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 3 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 3 Poll_c10 
24 Posts - 28%
வேல்முருகன் காசி
ரமணியின் கவிதைகள் - Page 3 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 3 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 3 Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
ரமணியின் கவிதைகள் - Page 3 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 3 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 3 Poll_c10 
3 Posts - 4%
sureshyeskay
ரமணியின் கவிதைகள் - Page 3 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 3 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 3 Poll_c10 
1 Post - 1%
viyasan
ரமணியின் கவிதைகள் - Page 3 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 3 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரமணியின் கவிதைகள் - Page 3 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 3 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 3 Poll_c10 
244 Posts - 43%
heezulia
ரமணியின் கவிதைகள் - Page 3 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 3 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 3 Poll_c10 
221 Posts - 39%
mohamed nizamudeen
ரமணியின் கவிதைகள் - Page 3 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 3 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 3 Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
ரமணியின் கவிதைகள் - Page 3 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 3 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 3 Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
ரமணியின் கவிதைகள் - Page 3 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 3 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 3 Poll_c10 
13 Posts - 2%
prajai
ரமணியின் கவிதைகள் - Page 3 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 3 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 3 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ரமணியின் கவிதைகள் - Page 3 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 3 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 3 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ரமணியின் கவிதைகள் - Page 3 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 3 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 3 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ரமணியின் கவிதைகள் - Page 3 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 3 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 3 Poll_c10 
7 Posts - 1%
mruthun
ரமணியின் கவிதைகள் - Page 3 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 3 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 3 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரமணியின் கவிதைகள்


   
   

Page 3 of 36 Previous  1, 2, 3, 4 ... 19 ... 36  Next

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Wed Oct 31, 2012 1:22 pm

First topic message reminder :

கணினி போற்றுதும்!?
ரமணி, 18/08/2012

கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!
பணியெது வாகிலும் பாங்குறச் செய்திடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!

பலவகை வடிவினில் உலகில் உறைந்திடும்
பலவகை மனிதரும் பலவாறு உகந்திடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!

இன்றைய உலகின் எலிகள் போட்டியில்
பகலும் இரவும் மனிதர் வாழ்வினை
நிலைபெறச் செய்திடும் கணினி போற்றுதும்!

குழந்தை மனம்முதல் கிழவர் மனம்வரை
கலைகள் போற்றித் திறன்கள் வளர்த்து
கனவுகள் தந்திடும் கணிணி போற்றுதும்!

குடும்பம் முழுவதும் கணினி வகைகள்!
மேசைக் கணினியும் மடிமேல் கணினியும்
அலுவ லகத்திலும் வீட்டிலும் அமர்ந்து
ஆசான் தோழன் மருத்துவன் செயலர்
கணக்கன் தூதுவன் கேளிக்கை யாளன்
அனைவர் ’ரோல்’களில் ஆடிடும் பாடிடும்!

கைத்தொலை பேசியில் வன்பொருள் மென்பொருள்
இணைபொரு ளாக உறையும் கணினி
நின்ற விடத்தில் தொடர்பு கொண்டு
உறவினை தொழிலினை வம்பினை வளர்த்திட
ஏழை எளியோர் செல்வம் படைத்தோர்
யாவரும் முனைந்திட வழிவகை செய்திடும்.

உட்பகை வெளிப்பகை வானிலை பொருளியல்
விதிமுறை செயல்வகை என்றிவ் வாறு
அனைத்தும் அறிந்திட அரசுக் குதவி
அரசுகள் அமைக்கும், அரசுகள் கவிழ்க்கும்!

இறைவ னுக்குக் கரங்கள் பலவாம்
கணினி களுக்கும் கரங்கள் பலவே!

விரல்கள் சொடுக்கிட மின்னெலி ஒருகரம்
விரல்கள் தட்டிட விசைமணை ஒருகரம்
கண்கள் பார்த்திட ஒளிர்ந்திடும் திரைமுகம்
பிரதிகள் அச்சிட அச்சுப் பொறிக்கரம்
அச்சின் தாள்களை அலகிட்டு மின்பதியும்.

இணைய தளங்களை எட்டிட ஒருகரம்
மோடம் டெலிஃபோன் இணைப்புகள் தாங்கி
’யாதும் ஊரே யாவரும் கேளிர்’
என்ற முதுமொழி நனவில் காட்டிடும்.

இத்தனை செயல்களால் வாழ்வில் வளம்தரும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்?

தட்டெழுதித் தட்டெழுதிக்
கையெழுத்தை மறக்கச் செய்யும்
மின்னெலியில் விரல்வலிக்கச் சொடுக்கச் செய்யும்

பொழுதுகள் மறந்து அறநெறிகள் துறந்து
உடல்நலம் பேணுவது அசட்டை செய்து

பெரியவர் மனங்களில் வறியவர் ஆகவும்
சிறுவர் சிறுமியர் மடிமையர் ஆகவும்
இளையோர் நெறிகளில் இளைத்தோர் ஆகவும்

தீயோர் செயல்கள் கலியில் பெருகிட
மூவா மருந்தாய் விளங்கிப் பல்கிடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்?

கரணம் என்பது உபகரணம் ஆகி
மனிதன் அவற்றை ஆளும் வரையில்
காரணம் ஆகா மனிதன் அழிவுக்கு.

பொறிகளின் பொறிகள் மனிதன் மனதில்
அல்லதைச் சமைத்து நல்லதை அழித்தால்
பொறிகளின் நெருப்பு ஊழித் தீயாகி
உலகினை அழிக்க உபாயம் ஆகிவிடும்!

*****



ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Tue Nov 20, 2012 8:43 pm

கவிதையை/கழுதையைக் கட்டிப் போடு!
ரமணி 20/11/2012

(நிலைமண்டில ஆசிரியப்பா)
புதுக்கவிதை யென்றுநான் புனைந்திட முனைந்தது
புதுக்கழுதை யாகியே புறங்கால் உதைவிட்டுத்
தலைதெறித்(து) ஓடியும் திரிந்தும் கணிணியின்
வலைமின் தாள்களை விழுங்குவது கண்டதை
அசைச்சீர் தளைத்தொடை ஓசை கொண்டுவந்(து)
இசைவலி யுறுத்திக் கட்டிப் போட்டேனே.

உதைத்தது கடித்துக் குதறிவிட் டாலோ
பதைத்தது விடுத்தெனை ஓடிவிட் டாலோ
நியதி இல்லா சுதந்திர உரிமையில்
அவதி யுறுவது அடியேன் அன்றோ!



கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Wed Nov 21, 2012 8:22 am

வலியோரை வாழ்த்தி எளியோரத் தாழ்த்தும்
கலிசூழ்ந்த தீய உலகு. ... 8


.............சிறப்பு . குறள் தன்மையுடன் இருக்கிறது.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Wed Nov 28, 2012 5:36 pm

நகைச்சுவை வெண்பாக்கள்
யார் உங்கள் ருக்கு?
ரமணி, 28/11/2012

நாருக்குப் பூமணம்போல் நீருக்குத் தீஞ்சுவைபோல்
ஊருக்குக் கோவில்போல் சீருக்கு ஓசைபோல்
காருக்குப் பெட்ரோல்போல் யாருக்கும் தீங்கெண்ணா
வேருக்கு நீராவாள் ருக்கு.

எருக்கு முளைபோல் கிறுக்குப் பிடிபோல்
முருக்குப் புளிபோல் நறுக்குத் தெறிபோல்
கருக்குதல் காய்க்கத் தருக்கு நிறைந்தே
செருக்குடன் வாழ்ந்திடும் ருக்கு.

[முருக்கு=எலுமிச்சை கருக்குதல்=திட்டுதல்
தருக்கு=வலிமை, தைரியம் செருக்கு=கர்வம்]

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Fri Nov 30, 2012 7:51 pm

5. நகைச்சுவை வெண்பாக்கள்
ரமணி, 30/11/2012


பெருங்காயம் வெங்காயம் ஓர்விகுதி யாயின்
பெருங்காயம் ஆகுமோ வெங்காயம் -- முன்னது
உண்ணும் உணவில் மணம்பெருக்கும் -- பின்னதோ
கண்ணீர் பெருக்கி விடும்.
[விகுதி=சொல்லின் இறுதிப் பகுதி]

மாவிளம் பிஞ்சுதான் மாவடு ஆயினும்
மாவடு என்றால் பெருங்காயம் என்றுபொருள்
மாவடுவி லேது பெருங்காய(ம்) ஏனெனில்
மாவடுவின் காயம் சிறிது.
[காயம்=உடல்]

மாவடு தன்னுருவில் ஓங்கி வளர்ந்திட
மாங்காய் பெயரில் பெருங்காயம் பெற்றந்த
மாங்காயே கல்லடி வாங்கிப்பின் காயத்தில்
மாவடு வோடு விழும்.
[காயம்=உடல், அடிபட்ட காயம் வடு=தழும்பு]

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Mon Dec 24, 2012 9:12 pm

8. மரபு வழியில் புதுக்கவிதை: கடவுளிடம்...
ரமணி, 24/12/2012
(இணைக்குறள் ஆசிரியப்பா)


கடவுளிடம் வேண்டிக் கேட்பது தவறா?
என்றான் சிஷ்யன்.
கடவுளிடம் வேண்டிக் கேட்பதினும்
கடவுள் கொடுப்பதைக் கொள்வது மேலாகும்
என்றார் அவன்குரு.
ஏனிப்படி குருவே என்றான் சிஷ்யனே.

குழந்தை தின்பண்டம் விழைந்து எடுத்தால்
குறையளவே கொள்ளுமன்றோ?
குழந்தை இருகைகள் குவித்து அள்ளினாலும்
குறையளவே ஆகுமன்றோ?
அம்மா கொடுத்தால் அதிகம் ஆகாதோ?
என்றார் அவன்குரு:
யோசித்துப்பார் சிஷ்யா யாசிக்கும் போதினிலே!

[குறிப்பு: பேரா. பசுபதி தமது ’கவிதை இயற்றிக் கலக்கு’ புத்தகத்தில் இணைக்குறள் ஆசிரியப்பாவைப் பற்றி, "இது, வடிவில், தற்காலப் புதுக்கவிதை மாதிரி இருக்கும்" என்கிறார் (பக்.93) இந்த உத்தியை முயன்று பார்க்க எழுதிய கவிதையிது. கதை பழைய குமுதம் பக்தி இதழில் இருந்து.]

*****


ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Tue Dec 25, 2012 3:45 am

பெற்றோரைப் பேணிடார் சுற்றத்தை நாடிடார்
கற்றும் உதவாக் கரை. ... 9

இக்காலத்துக்கு வேண்டிய கு(ரல்)றள்.

அனைத்தும் அருமை தொடர்க.



ரமணியின் கவிதைகள் - Page 3 425716_444270338969161_1637635055_n
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Tue Dec 25, 2012 6:32 pm

9. திரமும் திறமும்
ரமணி, 25/12/2012

தன்திறம் என்பது தந்திரம் இல்லை.
தன்திறம் உணர்த்தும் தன்னியல் பெதுவென.
தந்திரம் உரைப்பதோ தானெனும் அகந்தையே.

என்திறம் என்பது எந்திரம் இல்லை.
எந்திரப் புலவனே தன்திறம் காட்டுவன்
என்றே நிகழும் இன்றைய நிலையிலும்
என்திறம் என்பது எந்திரம் இல்லை.
எந்திரம் தாண்டிய இன்திறக் கலைகள்
தாங்கிடும் உள்ளப் பாங்கெனக் குளதே.

மன்திறம் என்பது மந்திரம் இல்லை.
மன்னெனில் காவலன் மன்னன் கணவன்.
மந்திரத் தாலே மாங்காய் காய்க்குமோ?
மன்னன் கணவன் அவரவர் ஆவது
மன்னன் திறமன்றி மந்திரம் ஆகுமோ?

கேள்திறம் என்பது கேந்திரம் இல்லை.
கேந்திரம் என்பது குறுவட்ட மையம்
கேந்திர மையம் குறிப்பது தன்னை.
கேளென் பதுவோ சுற்றமும் நட்பும்.
கேளிர் திறன்தம் குடும்ப மையமெனில்
கேளிர் ஆகார் இவர்கள் எனக்கே.

சுயம்திறம் எல்லாம் சுதந்திரம் இல்லை.
சுயம்திறம் என்பது சகலர்க்(கு) உண்டு.
சுதந்திரம் என்பதும் சகலர்க்(கு) உண்டு.
நீயென் பின்னால் நிழலெனத் தொடர
நானென் குடைவீசி நடக்கும் போது
என்குடை உன்நாசி தொடாத வரைதான்
என்சுதந் திரத்தின் வரையென யாகும்.
சுயத்தில் ஆளும் திறமை யெல்லாம்
சுதந்திரம் என்னும் பெயரில் மற்றோர்
சுயம்திறம் அடக்கிச் சூளும் போது
சுயம்திறம் யாவும் சுதந்திரம் ஆகுமோ?

முகத்திற னுக்கு முகாந்திரம் இல்லை.
முகத்திற னாலே முகஸ்துதி பெறினும்
முகத்திறன் அகத்தை முன்வைப்ப தாமோ?
முகத்தில் உள்ளது அகத்தில் இலையென
முகத்தைப் பூசியே மழுப்பக் கற்றோர்
முகத்திறம் என்பது அகத்திறன் ஆகுமோ?

இன்திறம் இருந்தால் இந்திரம் வருமா?
இன்திறம் என்பது இனிய திறமைகள்
இந்திரம் என்பது இந்திர பதவி.
இறைவன் கருணை இல்லா விட்டால்
இனியதே எண்ணிச் செய்யும் திறமை
இருந்தால் கூட இந்திரம் வருமோ?

ஆள்திறம் என்பது ஆத்திரம் இல்லை.
ஆள்திறன் குணத்தா லாவது ஆனால்
ஆள்திறன் நலம்தர ஆத்திரம் நீங்கும்.
ஆள்திறன் பணத்தால் ஆவது ஆனால்
ஆள்திறன் பலம்தர ஆத்திரம் ஓங்கும்.
ஆள்திறன் ஆத்திரம் சூழ்ந்திடும் கலியே.

நம்திறன் நோக்கி நயம்பட வாழ்ந்து
இன்திறன் வளர்த்து இனிமை சேர்த்தால்
இறைத்திறம் ஓங்கிச் சரித்திரம் படைப்போம்.

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Tue Jan 01, 2013 4:43 pm

11. பெருமையும் புகழும்
(ஆசிரியத் தாழிசை)

எத்தகு மனிதன் வாழ்வில்
பெருமையும் புகழும் பெறுவான்?
குருவிடம் சிஷ்யன் கேட்டான்.

கேள்வியே தவறு சிஷ்யா!
எத்தகு வாழ்வில் மனிதன்
பெருமையும் புகழும் பெறுவான்?

நாடகம் ஒன்று நடப்பதாக
நினைவிற் கொள்வோம் சிஷ்யா
நவின்றார் அவனது ஆசான்.

அரசன் வேடத்தில் ஒருவன்
அறிஞன் வேடத்தில் ஒருவன்
வறியவன் வேடத்தில் ஒருவன்.

பெருமை யாருக்கு இவர்களில்?
நடிப்பில் சிறப்பவ னுக்கே!
நன்றாய்ச் சொன்னாய் சிஷ்யா!

வாழ்க்கை நாடக வழிதான்
வாழும் மனிதனோர் நடிகன்
வேடம் முக்கியம் அல்ல.

அறம்தரும் நெறிகளைக் கொண்டு
அகிம்சை வழியே நடந்து
ஆணவம் எல்லாம் துறந்து

தானொரு நடிகன் ஆயினும்
தானும் அவனும் வேறெனும்
தத்துவம் அறிந்து கொண்டு

ஒருவன் வாழ்வில் நடித்தால்
பெருமையும் புகழும் அவனுக்கே!
அருமையாய் முடித்தார் ஆசான்.

--ரமணி, 01-01-2013
[கதை: பழைய குமுதம் பக்தி இதழில் இருந்து.]

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Wed Jan 09, 2013 12:05 pm

24. தமிழ் ஹைக்கூவின் புதுவடிவம்: ஐக்குறள்
ரமணி, 19/10/2012


அசைகள் பதினேழில் ஜப்பானின் ஹைக்கூவாம்.
மூன்று வரியில் மனது.

இரண்டு வரிகளில் ஈரசை மூவசைச்
சீர்களேழு வந்து இறுதிச்சீர் ஓரசையாய்
முற்றும் குறள்வெண்பா ஏற்ற வடிவம்
தமிழ்மொழியில் ஹைக்கூ எழ.

கீழெல்லை ஈரசை மொத்தம் பதிமூன்று
மேலெல்லை மூவசை பத்துடன் ஒன்பது
காய்ச்சீர் இயற்சீர் இணைப்பில் இடையெல்லை
போதாதா ஹைக்கூ எழ?

தமிழ்மொழியில் ஹைக்கூ குறளில் எழும்போது
ஐக்குறள் என்போம் அதை.

அணுக்குறள் என்றும் துளிக்குறள் என்றும்
அழக்கலாம் என்போம் இதை.

*****

இயற்கை முரண்காட்டி வெட்டும் பதமொன்றில்
சேருமே ஹைக்கூவில் காண்.

பனித்துளி ஆவியாகும்; வையம் பனித்துளி.
ஓர்நொடியில் போகும் புதிது.


புகழ்பெற்ற ஜப்பான்ய ஹைக்கூ கவிஞராம்
இஸ்ஸாவின் ஹைக்கூ இது.

வேறுசில ஜப்பான்ய ஹைக்கூ வரும்கீழே
ஐக்குறள் ரூபத்தில் நம்.

சேற்றிலே நாற்றுநடும் பெண்கள் அழகில்லை.
பாடிடும் தொல்பாட் டழகு. ... [ரைஃஜான்]

வளிக்காலம். கூட்டில் பசிமிக வீணாக
வாய்திறக்கும் இஸ்ஸாவோ தத்து. ... [இஸ்ஸா]

அழகான கிண்ணத்தில் பூக்கள் அமைப்போமா?
உண்பதற்கு இல்லை உணவு. ... [பாஷோ]

கீழ்விழுந்த பூவா கிளைக்குத் திரும்புவது?
வெண்பட்டுப் பூச்சியே ஓ! ... [மோரிடாகே]

கீழ்விழுந்த சுள்ளி கிளைக்குப் திரும்புதுபார்.
வண்ணத்துப் பூச்சி. வியப்பு. ... [மோரிடாகே]


*****

முதல்வரியில் காட்சி. இரண்டினில் காரணம்.
ஐக்குறள் தட்டெழுதும் போது.

இப்படியோ அல்லது வேறு அமைப்பிலோ
ஐக்குறள் ஆக்குவோம் நாம்.

குறள்வடிவு மட்டும். எதுகைமோனை கட்டில்லை.
தானே அமைந்தால் அழகு.

*****

24. தமிழ் ஹைக்கூவின் புதுவடிவம்: ஐக்குறள்
ரமணி, 19/10/2012

அம்மா எனும்பசு அய்யோஓ என்கிறது.
வாயில் நெகிழிப்பை யோடு! ... 1
[நெகிழி=plastic]

புல்லிருந்த பூமியை நக்கித் துடைத்திடும்.
நாயாய் அலையும் பசு. ... 2

எறும்புக்கு இட்ட அரிசிமாவுக் கோலம்.
கரந்துண்ணும் காக்கை அணில். ... 3

சுட்டெரிக்கும் வெய்யில். சுவரோரம் வண்டி.
எருதுகள் வாயில் நுரை. ... 4

முன்னே ஒளிவெள்ளம். சாலை விருட்சம்.
சுவரில் எறிந்துசெல்லும் கார். ... 5

ரமணி, 14/11/2012
கற்சிலை வாழ்வின் வழிகாட்டி? ஹஹ்ஹஹ்ஹா!
ஐகானே எங்கள் வழி. ... 6

மழைத்துளிகள் ஒன்றாகும். அத்வைதம். கம்பி.
பழையது வேலைக்கா ரிக்கு. ... 7

நீயேநான் நானேநீ என்றதோழா! பில்பணம்.
பர்ஸினை விட்டேன் மறந்து. ... 8

தங்கும் கடன்கள். கழுதை பறிமுதல்.
வங்கியின் லெட்ஜர் பணால். ... 9

வரும்நாள் விதியினால் இன்றுநேற்(று) ஆகும்.
வெறும்கனவில் வாழ்க்கை நடப்பு. ... 10

ரமணி, 16/11/2012
நானுறங்கத் தானெழுந்து என்பணி மும்முரத்தில்
தான்மறைந்து போகுமென் பானு. ... 11

தும்பிபோல் சாகசங்கள் செய்யும் ஹெலிகாப்டர்.
பூவில் அருந்துமோ தேன்? ... 12

ரமணி, 22/11/2012
தொட்டால் நசித்திடும் வாசனைப் பன்னகம்.
ஊதுவத்திச் சாம்பல் புகை. ... 13
[பன்னகம் = பாம்பு]

பொன்னிற நெற்றிவானில் அந்திவண்ணச் சூரியன்.
சின்ன விபூதி முகில். ... 14

கற்பூரம் சாம்பிராணி ஊதுவத்தி யென்றுநாளும்
உற்சவம் வேண்டும் -- கொசு. ... 15

ரமணி, 09/01/2013
தங்கச் சிறுகூண்டு. மங்காத ஆசைபல.
பங்கப் படுமே கிளி. ... 16

கிளைத்த மரமொன்றைக் கிள்ளைகள் கொஞ்சும்.
கிளியோ மரமோ நிஜம்? ... 17

*****


avatar
Guest
Guest

PostGuest Wed Jan 09, 2013 12:06 pm

சூப்பருங்க அருமை ஹைக்கூகள் ..

தொடருங்கள் மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



Page 3 of 36 Previous  1, 2, 3, 4 ... 19 ... 36  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக