புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ரமணியின் கவிதைகள் - Page 18 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 18 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 18 Poll_c10 
54 Posts - 47%
ayyasamy ram
ரமணியின் கவிதைகள் - Page 18 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 18 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 18 Poll_c10 
46 Posts - 40%
prajai
ரமணியின் கவிதைகள் - Page 18 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 18 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 18 Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
ரமணியின் கவிதைகள் - Page 18 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 18 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 18 Poll_c10 
4 Posts - 3%
Jenila
ரமணியின் கவிதைகள் - Page 18 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 18 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 18 Poll_c10 
2 Posts - 2%
kargan86
ரமணியின் கவிதைகள் - Page 18 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 18 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 18 Poll_c10 
1 Post - 1%
jairam
ரமணியின் கவிதைகள் - Page 18 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 18 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 18 Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
ரமணியின் கவிதைகள் - Page 18 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 18 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 18 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ரமணியின் கவிதைகள் - Page 18 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 18 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 18 Poll_c10 
1 Post - 1%
M. Priya
ரமணியின் கவிதைகள் - Page 18 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 18 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 18 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ரமணியின் கவிதைகள் - Page 18 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 18 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 18 Poll_c10 
97 Posts - 57%
ayyasamy ram
ரமணியின் கவிதைகள் - Page 18 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 18 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 18 Poll_c10 
46 Posts - 27%
mohamed nizamudeen
ரமணியின் கவிதைகள் - Page 18 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 18 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 18 Poll_c10 
8 Posts - 5%
prajai
ரமணியின் கவிதைகள் - Page 18 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 18 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 18 Poll_c10 
6 Posts - 4%
Jenila
ரமணியின் கவிதைகள் - Page 18 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 18 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 18 Poll_c10 
4 Posts - 2%
Rutu
ரமணியின் கவிதைகள் - Page 18 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 18 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 18 Poll_c10 
3 Posts - 2%
Baarushree
ரமணியின் கவிதைகள் - Page 18 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 18 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 18 Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
ரமணியின் கவிதைகள் - Page 18 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 18 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 18 Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
ரமணியின் கவிதைகள் - Page 18 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 18 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 18 Poll_c10 
1 Post - 1%
jairam
ரமணியின் கவிதைகள் - Page 18 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 18 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 18 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரமணியின் கவிதைகள்


   
   

Page 18 of 36 Previous  1 ... 10 ... 17, 18, 19 ... 27 ... 36  Next

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Wed Oct 31, 2012 1:22 pm

First topic message reminder :

கணினி போற்றுதும்!?
ரமணி, 18/08/2012

கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!
பணியெது வாகிலும் பாங்குறச் செய்திடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!

பலவகை வடிவினில் உலகில் உறைந்திடும்
பலவகை மனிதரும் பலவாறு உகந்திடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!

இன்றைய உலகின் எலிகள் போட்டியில்
பகலும் இரவும் மனிதர் வாழ்வினை
நிலைபெறச் செய்திடும் கணினி போற்றுதும்!

குழந்தை மனம்முதல் கிழவர் மனம்வரை
கலைகள் போற்றித் திறன்கள் வளர்த்து
கனவுகள் தந்திடும் கணிணி போற்றுதும்!

குடும்பம் முழுவதும் கணினி வகைகள்!
மேசைக் கணினியும் மடிமேல் கணினியும்
அலுவ லகத்திலும் வீட்டிலும் அமர்ந்து
ஆசான் தோழன் மருத்துவன் செயலர்
கணக்கன் தூதுவன் கேளிக்கை யாளன்
அனைவர் ’ரோல்’களில் ஆடிடும் பாடிடும்!

கைத்தொலை பேசியில் வன்பொருள் மென்பொருள்
இணைபொரு ளாக உறையும் கணினி
நின்ற விடத்தில் தொடர்பு கொண்டு
உறவினை தொழிலினை வம்பினை வளர்த்திட
ஏழை எளியோர் செல்வம் படைத்தோர்
யாவரும் முனைந்திட வழிவகை செய்திடும்.

உட்பகை வெளிப்பகை வானிலை பொருளியல்
விதிமுறை செயல்வகை என்றிவ் வாறு
அனைத்தும் அறிந்திட அரசுக் குதவி
அரசுகள் அமைக்கும், அரசுகள் கவிழ்க்கும்!

இறைவ னுக்குக் கரங்கள் பலவாம்
கணினி களுக்கும் கரங்கள் பலவே!

விரல்கள் சொடுக்கிட மின்னெலி ஒருகரம்
விரல்கள் தட்டிட விசைமணை ஒருகரம்
கண்கள் பார்த்திட ஒளிர்ந்திடும் திரைமுகம்
பிரதிகள் அச்சிட அச்சுப் பொறிக்கரம்
அச்சின் தாள்களை அலகிட்டு மின்பதியும்.

இணைய தளங்களை எட்டிட ஒருகரம்
மோடம் டெலிஃபோன் இணைப்புகள் தாங்கி
’யாதும் ஊரே யாவரும் கேளிர்’
என்ற முதுமொழி நனவில் காட்டிடும்.

இத்தனை செயல்களால் வாழ்வில் வளம்தரும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்?

தட்டெழுதித் தட்டெழுதிக்
கையெழுத்தை மறக்கச் செய்யும்
மின்னெலியில் விரல்வலிக்கச் சொடுக்கச் செய்யும்

பொழுதுகள் மறந்து அறநெறிகள் துறந்து
உடல்நலம் பேணுவது அசட்டை செய்து

பெரியவர் மனங்களில் வறியவர் ஆகவும்
சிறுவர் சிறுமியர் மடிமையர் ஆகவும்
இளையோர் நெறிகளில் இளைத்தோர் ஆகவும்

தீயோர் செயல்கள் கலியில் பெருகிட
மூவா மருந்தாய் விளங்கிப் பல்கிடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்?

கரணம் என்பது உபகரணம் ஆகி
மனிதன் அவற்றை ஆளும் வரையில்
காரணம் ஆகா மனிதன் அழிவுக்கு.

பொறிகளின் பொறிகள் மனிதன் மனதில்
அல்லதைச் சமைத்து நல்லதை அழித்தால்
பொறிகளின் நெருப்பு ஊழித் தீயாகி
உலகினை அழிக்க உபாயம் ஆகிவிடும்!

*****



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 03, 2014 1:15 pm

ரமணி wrote:[link="/t90814p165-topic#1060126"]பிரதோஷத் துதி: கேடுதனைக் களைவாயே!
(அலங்காரபஞ்சகம்: வெண்பா, கலித்துறை, அகவல், விருத்தம்,
சந்தவிருத்தம் என ஐந்து பாவின நிரலில் அமைந்தது)


(வெண்பா)

எருதேறிக் கொம்பிடையே நின்றாடும் ஈச!
இருபுருவ மத்தியிலே தீயாய்க் கனன்றென்
வினையெரிய நன்மை விளைவித்தே ஆன்மத்
தனகினையே தந்தருள் வாய். ... 1
[தனகு = தன்+நகு = உள்ளக்களிப்பு]

(கலித்துறை: மா கூவிளம் விளம் விளம் மா)

திரண்ட நஞ்சினைத் தீங்கனி யாய்க்கொளும் சிவனே!
இருண்ட நெஞ்சகத் தீமையைக் கொள்வதும் என்றோ?
வரண்ட பாலையின் மாயையே வளமெனும் வாழ்வில்
விருப்பம் குன்றிட விழுமமே தந்தருள் விமல! ... 2

(அகவல்)

உமையோர் பாகமா யுகந்தே காக்கும்
நமச்சி வாயமென் நலிவைப் போக்கும்!
கணத்தை யாளும் காடுறை யீசன்
நணுகிட என்னுள் அவிழும் வேசம்!
செஞ்சடை மீதிழித் தீம்புன லாட
நெஞ்சகத் தீயதாம் நினைவுக ளோடும்!
மனத்தெழு நினைவின் மாயையில் ஊனம்
அனைத்தையும் கொண்டே ஆனேன் ஏனம்!
வனத்துறை யீசனென் வாழ்வினி லோங்கும்
அனத்தம் போக்கியே ஆட்கொள வேண்டும்! ... 3

(அறுசீர் விருத்தம்: விளம் மா தேமா விளம் மா தேமா)

சந்தியில் ஆடல் கண்டே
. சஞ்சலம் என்னுள் தீர்ந்தே
வெஞ்சினம் அகத்தில் வீழ்ந்தே
. எஞ்சுவ தன்பே யாகத்
தஞ்சமாய் ஈசன் தாளைத்
. தழுவியே என்னுள் ஓங்கும்
அஞ்சனம் அகல நானும்
. அரன்ருள் பெறுவ தென்றோ? ... 4

(வண்ண விருத்தம்:தந்ததனத் தானதனத் தனதான)

பந்தமுறக் காமமுறக் கடையேனாய்
. அந்தகமுற் றாமையெனச் செலும்வாழ்வில்
சிந்தையறத் தீமையுறத் தனியாகி
. எந்தையிணைத் தாளணையாப் பதரானேன்
நந்திதலைக் கோடுமிசைப் பதமேவி
. அஞ்சலெனச் சூலமெடுத் தழலாடும்
சந்திரனைச் சூடுதலைச் சடையோனே
. அந்தநிலைக் கேடுதனைக் களைவாயே. ... 5

--ரமணி, 26/04/2014, கலி.13/01/5115
(சனிப் பிரதோஷ நாள்)

*****

பிரதோஷ துதிபாடி மகிழ்ந்தேன்.

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Thu May 08, 2014 5:51 pm

ஆன்மீகச் செய்திக் கவிதை
1. சித்திரை 25
ஆறுமுகமங்கலம் ஆயிரத்தெண் விநாயகர் சித்திரை பிரம்மோற்சவத்தில்
இன்று உருகு சட்டச் சேவை

ரமணியின் கவிதைகள் - Page 18 3526d1399551375t-2958-2985-3021-2965-2997-3007-2980-3016-2990-3009-2991-2993-3021-2970-3007-2965-2995-3021-date-20140508

கோயில் விவரம்: http://temple.dinamalar.com/New.php?id=132

ஆறுமுக மங்கல ஆயிரத்தெண் விநாயகர்
(எண்சீர் விருத்தம்: தேமா விளம் தேமா விளம் அரையடி)

ஆதி சங்கரர் ஐந்து கரத்தனை
. அஞ்சு பாடலில் ஏத்தும் தலத்தினில்
பாதி மேனியர் பாவை யுருத்திரன்
. பார்க்க அறுமுக மங்க லந்தனில்
வேதம் ஓதவே வந்த அந்தணன்
. வேழ முகத்தனாய்க் கோயில் கொள்பவன்
வீதி வலத்துடன் உற்ச வங்கொள
. வீழு மனந்தனில் காண இன்பமே.

--ரமணி, 08/05/2014

*****

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Fri May 09, 2014 10:40 am

ஆன்மீகச் செய்திக் கவிதை 2.
சித்திரை 26

வீரபாண்டி ஶ்ரீகௌமாரியம்மன் ஸன்னதித் தெருவில் ரதோத்ஸவம்.

ரமணியின் கவிதைகள் - Page 18 3527d1399611667t-2958-2985-3021-2965-2997-3007-2980-3016-2990-3009-2991-2993-3021-2970-3007-2965-2995-3021-date-20140509
கோயில் விவரம்: http://temple.dinamalar.com/New.php?id=489

வீரபாண்டி கௌமாரியம்மன்
(எண்சீர் விருத்தம்: மா தேமா விளம் மா . விளம் தேமா விளம் தேமா)

அருகம் புல்லால் வைகையின் கரையில்
. அசுரனைக் கொன்ற அன்னைகௌ மாரி
அரசன் வீர பாண்டியன் விழியின்
. பார்வையை மீட்டுத் தந்தகௌ மாரி
மருந்தாய் மஞ்சள் வேப்பிலை தந்தே
. மக்களின் நோயைத் தீர்த்தகௌ மாரி
திருநாள் கொண்டே சித்திரை மாதம்
. தேரினில் வீதி வலம்வரு வாளே.... 1

உருவாய்த் தானே லிங்கமாய்த் தோன்றி
. உடல்வரும் நோயை நீக்குகௌ மாரி
மருத்து வச்சி யென்றொரு பேரால்
. மன்பதை யேத்தும் அன்னைகௌ மாரி
நெருக்கும் துன்பம் தீர்ந்தபின் பலவாய்
. நேர்கடன் கொள்ளும் அன்னைகௌ மாரி
அரவும் ஆத பத்திரம் அமைக்க ... [ஆதபத்திரம் = குடை]
. வருபவள் தாங்கும் பெண்டிரின் தோளே.... 2

உருத்தி ரன்போல் பிறையுடன் கண்ணும்
. உடுக்கையும் தோலும் ஆண்டொரு நாளின்
இரவிற் கொண்டே ஈசனும் தானும்
. இரண்டல வென்றே தோன்றுகௌ மாரி
உருவில் தாயாய்க் கனிவுடன் மக்கள்
. புரந்திடும் வீர பாண்டிகௌ மாரி
தருவாள் அன்பும் இன்பமும் என்றும்
. அவள்கழல் தஞ்சம் போக்கிடும் தீதே.... 3

--ரமணி, 09/05/2014

*****

ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Fri May 09, 2014 4:48 pm

எண்சீர்விருத்தம் படித்து இன்புற்றேன். கௌமாரி எனக்கும் கொஞசம் அருள் புரியட்டும் சார்...

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Fri May 09, 2014 6:08 pm

நன்றி. அவளை நினைத்தாலே மாரியாய் அருள் பொழிவாளே!
துறைவன், உங்கள் கவிதை எண்ணங்களை மரபில் முயன்று பாருங்களேன்.
ரமணி


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sat May 10, 2014 6:39 pm

ஆன்மீகச் செய்திக் கவிதை 3.
சித்திரை 27

சோழசிம்மபுரம் ஶ்ரீலட்சுமிநரசிம்மப் பெருமாள் கோவிலில் சித்திரை ரதோத்ஸவம்

ரமணியின் கவிதைகள் - Page 18 3530d1399727106t-2958-2985-3021-2965-2997-3007-2980-3016-2990-3009-2991-2993-3021-2970-3007-2965-2995-3021-date-20140510
(கோவில்: http://temple.dinamalar.com/New.php?id=542
தலபுராணம்: http://www.archive.org/download/solingarthalavar015340mbp/solingarthalavar015340mbp.pdf)

அரிமாவரித் துதி
(அலங்காரப் பஞ்சகம்: வெண்பா, கலித்துறை, அகவல், விருத்தம், வண்ணம்
என்னும் ஐந்து பாவின நிரலில் அமைந்த அந்தாதி மாலை.)

(வெண்பா)

அண்டனும் உண்டெனக் கண்டகன் கண்டிட
விண்டதோர் கந்தெழு விண்டல முண்டவன்
மிண்டனின் பிண்டமும் இண்டுகி ழித்துருக்
கண்டீ ரவங்கொள் களம்.

[அண்டன் = கடவுள்; கண்டகன் = அசுரன் (இரண்யகசிபு); கந்து = தூண்;
மிண்டன் = அறிவில்லாதவன்; பிண்டம் = உடல்; இண்டு = ஈண்டு; கண்டீரவம் = சிங்கம்;
விண்டலம் = ஆகாயம்; விண்டலம் உண்டவன் = ஆகாயம் முழும் வியாபித்திருக்கும் விஷ்ணு]

(கலித்துறை: புளிமா காய் கூவிளங்காய் விளம் கூவிளங்காய் )

களந்தென் னகோபிலமே கண்டகன்கொல் லுக்கிர மாவுருவே
இளையாள் விழிநோக்கப் பூவரசாய்க் காண்முனி சிம்மவுரு
வளமார் பிறதலத்தில் பல்வகையில் மேவிடும் ஆளியுரு
உளங்கொள் வரம்தரும் உக்ரசாந்த இருமையில் உறுமுமுரு.

[களந்தென் னகோபிலம் = தென் தலமாகிய அகோபிலம்; கண்டகன் = அசுரன்;
இளையாள் = இலக்குமி; பூவரசு = பூவரசம் குப்பம் தலத்துறையோன்; ஆளி = சிங்கம். ]

(அகவல்)

உருநர சிம்மமாய் யோகத் தமர்ந்தே
திருக்கடி கைமலைச் சேத்திரம் மேவி
வருவினை வல்வினை மனக்குறை தீரத்
திருவருள் புரியும் தீங்கனி நாதன்
இரத மிவர்ந்து வீதி வலம்வரத்
திருநாள் கொள்ளும் சித்திரை யின்னாள்
பெரிய மலையுறைப் பெருமாள் தாயார்
சிறிய மலையுறைச் சிறிய திருவடி ... [சிறிய திருவடி = அனுமன்]
தரிசனம் செய்யத் தகைமை பெற்றே
கரிசனம் ஓங்கும் களிப்பினில் வாழ்வே.

(அறுசீர் விருத்தம்: விளம் மா தேமா விளம் மா தேமா)

வாழ்வினில் பெருமாள் நாமம்
. ஆயிரம் அனைத்தும் ஓத
தாழ்வெலாம் நலிந்தே மாயும்
. தன்னலம் விட்டுச் செல்லும்
பாழ்வினை குறைந்தே மாளும்
. பற்றிலா அன்பு கொள்ளும்
வாழ்வளம் பெருகி யோங்க
. மாயையும் தெளியும் நேரே.

(வண்ணம்: தானன தானன தான தன்னன)

நேர்மையில் வாழவும் ஞேயம் தங்கவும் ... [ஞேயம் = நேயம், அறியப்படும் பொருள்]
பார்வையில் மாயையின் பாதை மங்கவும்
சோர்வறு நேர்கடன் ஓர்மை வந்திடும் ... [நேர்கடன் = முயற்சி; ஓர்மை = துணிவு, நினைவு]
ஈர்மையை நான்பெற வேண்டும் அண்டனே. ... [ஈர்மை = நுண்மை, இனிமை, பெருமை.]

--ரமணி, 10/05/2014, கலி.27/01/5115

*****

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Mon May 12, 2014 5:54 pm

பிரதோஷத் துதி: கண்வண்ணம் காட்டி யருள்!
(அலங்காரப் பஞ்சகம்: வெண்பா, கலித்துறை, அகவல், விருத்தம், வண்ணம்
என்னும் ஐந்து பாவின நிரலில் அமைந்த அந்தாதி மாலை.)


வெண்பா
பால்வண்ண மேனியிலே ஆள்வெண்ணீ றாயவனும்
நால்வண்ண வேதமிழைக் கால்வண்ணம் ஆடையிலே
பெண்வண்ணம் வாமமுறப் பேய்வண்ணம் தட்சிணமாய்க்
கண்வண்ணம் காட்டியருள் வான்.

(கவித்துறை: காய் காய் மா மா காய்)
வான்கலந்த விடையவனே அந்தி வண்ண அமைதியிலே
தேன்கலந்த பண்ணதிலே தேவன் வண்ணம் தீந்தமிழே
ஊன்கனந்த உயிரினிலே உளமாம் துளிரில் ஒளிதங்கி
நான்கலந்த இம்மையிலே இன்னல் தீர நாடுவனே.

(அகவல்)
நாடுவன் எங்ஙனம் நண்ணுவன் எங்ஙனம்
காடென வினையெலாம் கவிழும் மனதிலே!
கூடென வாழும் உடலிதே பீடெனில்
ஏடெவண் வந்துறும் பீடையே வருமே!
காடுறும் சாம்பலைக் காமுறும் மேலவன்
வீடெதும் இலையெனில் வினைகளைக் கொல்லும்
வேடனாய் வரவே வேண்டுவன் உளத்திலே!
ஆடலின் நாயகன் அமைவுறும் சந்தியின்
பாடலில் தீருமே பாடெலாம்
நாடுவேன் உமையவள் நாயகன் செவ்வணமே.

(எழுசீர் விருத்தம்: அனைத்தும் காய்ச்சீர்கள்)
செவ்வண்ணம் வானுறுமே சிந்தையெலாம் தேனுறுமே
. செம்மேனி யபிடேகச் சீருறுமே
செவ்வண்டுக் கூட்டினுள்ளே புழுவாக நிற்குமுயிர்ச்
. சிந்தையிலுன் மந்திரமே அதிர்வுறுமே*
இவ்வண்ணம் தங்காதே ஈனத்தில் உளமுறுமே
. இருமையெனும் மாயையதன் மயலுறுமே
எவ்வண்ணம் இருந்தாலும் என்னுள்ளம் வந்தருள்வாய்
. எப்பொழுதும் உன்னாமம் நினைவுறவே.

[*செவ்வண்டின் இனப்பெருக்கம் பற்றிய குறிப்பு:
http://sithharwaves.blogspot.in/2011_01_01_archive.html]

(வண்ணக் கலிவிருத்தம்: தனனன தனனன தனனானன தானன)
நினைவுறும் உளமதில் நிறைவேறிடும் ஈசனவன்
வினையுறும் உயிரதன் விழைவேறிட ஈவனவன்
சுனையுறும் வளமென உயிரேறிடும் ஏகனவன்
நனைவுறும் அனையென அணுகேனவன் பால்வணமே.

[நனைவுறும் அனை = ஈரமும் ஊறும் அன்னை]

--ரமணி, 12/05/2014, கலி.29/01/5115

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Tue May 13, 2014 5:38 pm

ஆன்மீகச் செய்திக் கவிதை 4.
சித்திரை 30

இன்று ஶ்ரீநரசிம்ம ஜயந்தி.

ரமணியின் கவிதைகள் - Page 18 3534d1399982776t-2958-2985-3021-2965-2997-3007-2980-3016-2990-3009-2991-2993-3021-2970-3007-2965-2995-3021-date-20140513

நரசிம்ம ஜயந்தி
(வெளிவிருத்தம்)

எனக்கொருவன் இரணியனாய் இருக்கின்றான் ஆள்கின்றான் - நரசிம்மா!
தனக்குநிகர் இல்லையெனத் தன்வயங்கொள் அசுரனவன் - நரசிம்மா!
வனப்புவிழை மேனியவன் ஐம்புலனாம் ஆனைகளால் - நரசிம்மா!
தினம்வதைத்துத் தன்கூட்டில் எனைவைக்கும் கொடுங்கோலன் - நரசிம்மா! ... 1

உன்மகனாய் விரலளவே உயரமுள்ள என்னையவன் - நரசிம்மா!
தன்னுருவாய் எண்ணமுற்றுச் சன்னதமாய் நஞ்சேற்றி - நரசிம்மா! ... [சன்னதம் = ஆவேசம், கடுஞ்சினம்]
என்னுள்ளம் நானெனவே எழுமயக்கம் கொளச்செய்வான் - நரசிம்மா!
இன்னுமவன் ஆயுதமாய் என்வாக்கால் எனைவதைப்பான் - நரசிம்மா! ... 2

இந்தமன மொழிமெய்யாம் இருஞ்சிறையில் வருந்துகிறேன் - நரசிம்மா! ... [இருஞ்சிறை = நரகம், காவல்]
இந்தமூன்று தூண்களையும் பிளந்தெனைநீ ஆட்கொள்வாய் - நரசிம்மா!
அந்தவொலி ஓங்கார ஆளியொலி யுடனுருத்தே - நரசிம்மா! ... [ஆளி = சிங்கம்]
வந்துநீயென் இருமையெனும் மாயைகீறிக் காத்தருள்வாய் - நரசிம்மா! ... 3

--ரமணி, 13/05/2014

*****



ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Wed May 14, 2014 7:48 pm

ஆன்மீகச் செய்திக் கவிதை 5.
சித்திரை 31

இன்று சித்திரைப் பௌர்ணமி: சித்தரகுப்தன் வழிபாட்டு நாள்

கணக்கும் கூற்றும்!
(வெளிவிருத்தம்)

சித்திரம் சத்தமாய் எத்தனை வித்துகள் - கூற்றுவனே!
சித்தமி ழித்துநான் இத்தரை நத்தினேன் - கூற்றுவனே!
புத்தியின் சுத்திசெய் ஒத்தண மெத்திலை - கூற்றுவனே!
செத்தையை முத்தென எத்தனை எத்தனம் - கூற்றுவனே! ... 1

[நத்துதல் = விரும்புதல்; ஒத்தணம் = ஒற்றடம்; எத்தனம் = முயற்சி]

அத்தனை செத்தையும் அத்தனை சத்தமும் - கூற்றுவனே!
சித்திர புத்ரனின் சித்திரப் புத்தகம் - கூற்றுவனே!
செத்ததும் ஒத்திகைச் செத்தலைச் சத்தமாய்க் - கூற்றுவனே!
இத்தள நித்திய மித்திய எத்தனம் - கூற்றுவனே! ... 2

[செத்தலை = உழவுக் கணக்கு; சத்தம் = கூலி; மித்தியம் = பொய், மாயை]

அத்தனை பேர(து) அகத்தின் பிரக்ஞைநீ - சித்ரகுப்த!
புத்தகம் வைத்துநீ புத்தியை ஆய்ந்திடும் - சித்ரகுப்த!
பத்தும் வரவும் பதிந்தெமை யேற்றும்நீ - சித்ரகுப்த!
உத்தமன் குற்றமில் கூற்றாய் வணங்குவோம் - சித்ரகுப்த! ... 3

--ரமணி, 14/05/2014, கலி.31/01/5115

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Thu May 15, 2014 9:28 am

ஆன்மீகச் செய்திக் கவிதை 6.
வைகாசி 1

இன்று காரைக்குடி ஶ்ரீகொப்புடையம்மன் ஹம்ஸ வாகனத்தில் திருவீதி உலா.

கோயில் விவரம்:
http://temple.dinamalar.com/New.php?id=568
http://maduravmpathi.blogspot.in/2009/01/blog-post.html
http://www.vikatan.com/new/astrolokondex.php?type=article&nid=7373

கொப்புடை யம்மன் காப்பு
(இன்னிசை வெண்பா)

காரைக் குடிநகர்க் காரிகையே நீயின்றுத்
தேரினில் வந்தே திருவருள் செய்வதால்
ஊரினில் யாவர்க்கும் உன்னெழில் தோற்றத்தை
வேருடன் காணும் விழி.

குழந்தைவரம் வேண்டியே கொப்புடைத் தாய்க்குக்
கழையினால் தூளியிடக் கன்னல் விழியாள்
குழைந்தருள் செய்யக் குடும்பம் வளரும்
கழிநலம் செய்யுமவள் காப்பு.

வீரச் சுவையிலே ஈரமும் தாங்கியே
கோரச் செயலழிக்கும் கொப்புடை அம்மனைக்
காரைத் தலமதில் கண்டு நெகிழவே
சீர்வரும் துன்பமெலாம் தீர்ந்து.

--ரமணி, 15/05/2014, கலி.01/02/5115

*****


Sponsored content

PostSponsored content



Page 18 of 36 Previous  1 ... 10 ... 17, 18, 19 ... 27 ... 36  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக