புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரமணியின் கவிதைகள்


   
   

Page 17 of 36 Previous  1 ... 10 ... 16, 17, 18 ... 26 ... 36  Next

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Wed Oct 31, 2012 1:22 pm

First topic message reminder :

கணினி போற்றுதும்!?
ரமணி, 18/08/2012

கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!
பணியெது வாகிலும் பாங்குறச் செய்திடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!

பலவகை வடிவினில் உலகில் உறைந்திடும்
பலவகை மனிதரும் பலவாறு உகந்திடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!

இன்றைய உலகின் எலிகள் போட்டியில்
பகலும் இரவும் மனிதர் வாழ்வினை
நிலைபெறச் செய்திடும் கணினி போற்றுதும்!

குழந்தை மனம்முதல் கிழவர் மனம்வரை
கலைகள் போற்றித் திறன்கள் வளர்த்து
கனவுகள் தந்திடும் கணிணி போற்றுதும்!

குடும்பம் முழுவதும் கணினி வகைகள்!
மேசைக் கணினியும் மடிமேல் கணினியும்
அலுவ லகத்திலும் வீட்டிலும் அமர்ந்து
ஆசான் தோழன் மருத்துவன் செயலர்
கணக்கன் தூதுவன் கேளிக்கை யாளன்
அனைவர் ’ரோல்’களில் ஆடிடும் பாடிடும்!

கைத்தொலை பேசியில் வன்பொருள் மென்பொருள்
இணைபொரு ளாக உறையும் கணினி
நின்ற விடத்தில் தொடர்பு கொண்டு
உறவினை தொழிலினை வம்பினை வளர்த்திட
ஏழை எளியோர் செல்வம் படைத்தோர்
யாவரும் முனைந்திட வழிவகை செய்திடும்.

உட்பகை வெளிப்பகை வானிலை பொருளியல்
விதிமுறை செயல்வகை என்றிவ் வாறு
அனைத்தும் அறிந்திட அரசுக் குதவி
அரசுகள் அமைக்கும், அரசுகள் கவிழ்க்கும்!

இறைவ னுக்குக் கரங்கள் பலவாம்
கணினி களுக்கும் கரங்கள் பலவே!

விரல்கள் சொடுக்கிட மின்னெலி ஒருகரம்
விரல்கள் தட்டிட விசைமணை ஒருகரம்
கண்கள் பார்த்திட ஒளிர்ந்திடும் திரைமுகம்
பிரதிகள் அச்சிட அச்சுப் பொறிக்கரம்
அச்சின் தாள்களை அலகிட்டு மின்பதியும்.

இணைய தளங்களை எட்டிட ஒருகரம்
மோடம் டெலிஃபோன் இணைப்புகள் தாங்கி
’யாதும் ஊரே யாவரும் கேளிர்’
என்ற முதுமொழி நனவில் காட்டிடும்.

இத்தனை செயல்களால் வாழ்வில் வளம்தரும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்?

தட்டெழுதித் தட்டெழுதிக்
கையெழுத்தை மறக்கச் செய்யும்
மின்னெலியில் விரல்வலிக்கச் சொடுக்கச் செய்யும்

பொழுதுகள் மறந்து அறநெறிகள் துறந்து
உடல்நலம் பேணுவது அசட்டை செய்து

பெரியவர் மனங்களில் வறியவர் ஆகவும்
சிறுவர் சிறுமியர் மடிமையர் ஆகவும்
இளையோர் நெறிகளில் இளைத்தோர் ஆகவும்

தீயோர் செயல்கள் கலியில் பெருகிட
மூவா மருந்தாய் விளங்கிப் பல்கிடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்?

கரணம் என்பது உபகரணம் ஆகி
மனிதன் அவற்றை ஆளும் வரையில்
காரணம் ஆகா மனிதன் அழிவுக்கு.

பொறிகளின் பொறிகள் மனிதன் மனதில்
அல்லதைச் சமைத்து நல்லதை அழித்தால்
பொறிகளின் நெருப்பு ஊழித் தீயாகி
உலகினை அழிக்க உபாயம் ஆகிவிடும்!

*****



ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Tue Apr 15, 2014 8:41 am

குறட்பா வித்தகம்: அடிமுடிமுரண் குறள்

இந்த உத்திக்கு வேண்டுவன மூன்று:
1. முதற்சீர், ஈற்றுச்சீர் சொற்களில் முரண் அமையவேண்டும்.
2. இந்த முரண் பொருளில் அமைய வேண்டும்.
3. இது தவிர, சீர்கள் 1-2, 3-4, 5-6 ஆகியவற்றில் முரண் அமையவேண்டும்.

(உத்தி அமைப்பு: இலந்தை ராமசாமி:
https://groups.google.com/forum/#!topic/santhavasantham/SZNKXJpVKOw)


செல்வம் வருமது தீர்ந்திடும் மீள்வரினும்
கல்லும் கொழுவற் கடம். ... 1

[கல்லும் = அரித்திடும்; கொழு = செழித்த; வற்கடம் = வறட்சி என்பது முரண்.]

உயிரும் உடலும் துயிலும் விழிக்கும்
கயிற்றில் அரவின் அழிவு. ... 2

[உயிர் அழிவற்றது என்பதால் இறுதிச் சொல் அழிவு என்பது முரண்.]

தூளியில் தூங்காக் குழந்தைதன் அன்னையை
ஏளனத்தில் போற்றத் தெளிவு. ... 3

[தூளி = குழந்தைத் தொட்டில், புழுதி; எனவே தெளிவு என்பது முரண்.

அன்னை எவ்வளவுதான் ஆட்டித் தூங்கவைக்க முயன்றாலும் தூங்காத குழந்தை
தூளியை விலக்கித் தன் அன்னையை ஏளனமாக எட்டிப் பார்க்கிறது. இருப்பினும்
அதன் பார்வையில் ஏளனத்தை விட அன்னையைப் போற்றும் பாசமே தெரிவதால்
அன்னைக்கு குழப்பமோ சினமோ விளையாது ஒரு தெளிவு பிறக்கிறது.]

சிவம்:
இயைபில் முரணாய் இலங்கி யொடுங்கி
முயல்விலே நிற்கும் முரண். ... 4

அலையெலாம் ஓய்ந்தபின் செய்திட எண்ணில்
நிலையாகிப் போகும் கரை. ... 5

கணமே யுகமாகிக் காதல் சினமாகும்
தணத்தல் அணத்தல் தனி. ... 6

[தணத்தல் = நீங்குதல், பிரிதல்; அணத்தல் = மேலெழும்புதல், பொருந்துதல்;
கணம் என்றால் கூட்டம் என்னும் பொருளில் தனி என்பது முரண்.]

நிருத்தத்தில் நிற்கும் இறையினைக் கல்லென்
றிருந்திடும் போக்கை நிறுத்து. ... 7

விருத்தம் இளமை விழிப்பினில் ஓய்வு
அருத்தனை முழுதும் ஒன்று. ... 8

[விருத்தம் = விருத்தி, மூப்பு. ஓன்று என்பது விருத்திக்கு முரண்.
அருத்தன் = பாதி உடலோன், எனவே முழுதும் என்றது முரண்.]

தூங்காமல் தூங்கிடும் தூக்க விழிப்பினில்
நீங்காமல் நிற்றல் விழிப்பு. ... 9

[ஈற்றுச் சீரில் விழிப்பு என்பதற்கு எச்சரிக்கை என்னும் பொருள்.]

மெய்யிது பொய்யெனும் எண்ணம் செயலுறுதல்
உய்வெனவே ஆழும் உயிர். ... 10

--ரமணி, 11/04/2014

*****


சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Tue Apr 15, 2014 9:41 pm

ரமணி சார்..இப்படியா ஆசை காட்டறது..ம்ம் கொஞ்சம் முயற்சி பண்ணியிருக்கேன்.. புன்னகை

விரித்துச் சிரித்தாலே விண்வரை கண்ணாம்
திரித்தே உதட்டைக் குவி..

போலி பலவாறாய்ப் போனாலும் எப்போதும்
ஆழிபோல் பொங்கும் அசல்..

ஓடி உழைத்து உலகத்தில் புண்ணியங்கள்
தேடியே சேர்த்துநீ நில்

ஒல்லியாய் ஆக உழைத்தே இருந்தீரேல்
துள்ளிடும் நெஞ்சமும் குண்டு..

ஓகேங்களா புன்னகை

சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Tue Apr 15, 2014 10:16 pm

கதிரவன் வந்தால் கடலுள்ளே வீழ்ந்தே
மதியை இழக்கும் மதி
*
காட்டினில் மன்னர் கடுந்தவம் செய்திட
நாட்டமாய் விட்டிடுவார் நாடு..


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Fri Apr 18, 2014 11:09 am

எல்லாமே அருமை!


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sat Apr 19, 2014 7:07 am

குறட்பா வித்தகம்: எதிரொலிக் குறள்

(ஈற்றுச் சொல் ஒரு கேள்வியாக முடிந்து, அதையொட்டியே விடையும் இருக்குமாறு புனைதல்.)

இணைக்கும் பிரிக்கும் பிணைக்கும் எரிக்கும்
தணலா வதெது மொழி? ... 1

சிந்தை சிவனாகி இன்றுநாளை யென்றுதள்ளி
முந்தாச் சிவநந் தனார்? ... 2

பரிமேல் அமர்ந்தவண்ணம் பாழியெல்லைக் காவல் ... [பாழி = ஊர்]
புரந்தருள் செய்யுமைய னார்? ... 3

வாழ்வில் உறுக்கும் வலிகளின் வீரியம்
தாழ எதுகா பணம்? ... 4 [காபணம் = ஒத்தடம், காக்கும் பணம்]

சப்பண மிட்டமர்ந்தே தர்ப்பணம் செய்விக்க
ஒப்ப-எது வாம்-அர்ப் பணம்? ... 5

எதுமிக வேண்டியே ஏரம்பன் முன்னால்
பொதுவில்போ டும்தொப் பணம்? ... 6 ... [தொப்பணம் = தோப்புக்கரணம்]

மிகுதேவை யாகவெது இன்னாளில் வாழ்வில்
தகையு றுநிரூ பணம்? ... 7

தன்மனத்தில் தான்போகத் தன்மணம் ஓங்கிடவே
முந்தும் எதுர மணம்? ... 8 ... [ரமணம் = ஆனந்தம் தருவது, ரமணரின் வழி]

வெள்ளைக் கலையுடுத்தி விள்ளாத ஞானத்தை
உள்ளிடும் பாரதி யார்? ... 9

சீதைக்கு ராகவன் என்ன உறவென்று
பேதையே இப்போது கேள்? ... 10

--ரமணி, 12/04/2014, கலி.29/12/5114

*****


சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Sat Apr 19, 2014 8:19 pm

எதிரொலிக் குறள் கொஞ்சம் கஷ்டம்தான்..

ஊறிய மேகம் உணர்ச்சியாய்த் தந்ததால்
காரிகைக் கூந்தலோ கார்..(சரியான்னு தெரிலை)

வெஞ்சினத்தில் வீறிடும் வார்த்தைகளும் தானிங்கு
விஞ்சுமன வேகமா சொல் (ஏதோ டபக்குனு எழுதிட்டேன்)

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sun Apr 20, 2014 9:36 am

வணக்கம் சின்னக்கண்ணன்.

இந்தத் தளத்தில் உள்ள எதிரொலிக் குறட்பாக்களைப் படித்துவிட்டுப் பின்னர் உங்கள் பாக்களைத் திருத்தி யிடவேண்டும் என்று தோன்றுகிறது. கேள்வியும் பதிலும் தெளிவாக இல்லை (என் குறட்பாக்களிலும் இந்தக் குறை இருக்கலாம்).

https://groups.google.com/forum/#!topic/santhavasantham/mcII8yxXKzw

ரமணி


சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Sun Apr 20, 2014 11:23 am

//(ஈற்றுச் சொல் ஒரு கேள்வியாக முடிந்து, அதையொட்டியே விடையும் இருக்குமாறு புனைதல்.)// ரமணி ஐயா இதில் தான் நான் குழம்பி விட்டேன்.. நீங்கள் கொடுத்த இணைப்பில் ஈற்றுச் சொல் விடையாக இருக்க வேண்டும் என இருக்கிறது..மறுபடி முயல்கிறேன்..மன்னிக்க..

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sun Apr 27, 2014 6:47 am

பிரதோஷத் துதி: கேடுதனைக் களைவாயே!
(அலங்காரபஞ்சகம்: வெண்பா, கலித்துறை, அகவல், விருத்தம்,
சந்தவிருத்தம் என ஐந்து பாவின நிரலில் அமைந்தது)


(வெண்பா)

எருதேறிக் கொம்பிடையே நின்றாடும் ஈச!
இருபுருவ மத்தியிலே தீயாய்க் கனன்றென்
வினையெரிய நன்மை விளைவித்தே ஆன்மத்
தனகினையே தந்தருள் வாய். ... 1
[தனகு = தன்+நகு = உள்ளக்களிப்பு]

(கலித்துறை: மா கூவிளம் விளம் விளம் மா)

திரண்ட நஞ்சினைத் தீங்கனி யாய்க்கொளும் சிவனே!
இருண்ட நெஞ்சகத் தீமையைக் கொள்வதும் என்றோ?
வரண்ட பாலையின் மாயையே வளமெனும் வாழ்வில்
விருப்பம் குன்றிட விழுமமே தந்தருள் விமல! ... 2

(அகவல்)

உமையோர் பாகமா யுகந்தே காக்கும்
நமச்சி வாயமென் நலிவைப் போக்கும்!
கணத்தை யாளும் காடுறை யீசன்
நணுகிட என்னுள் அவிழும் வேசம்!
செஞ்சடை மீதிழித் தீம்புன லாட
நெஞ்சகத் தீயதாம் நினைவுக ளோடும்!
மனத்தெழு நினைவின் மாயையில் ஊனம்
அனைத்தையும் கொண்டே ஆனேன் ஏனம்!
வனத்துறை யீசனென் வாழ்வினி லோங்கும்
அனத்தம் போக்கியே ஆட்கொள வேண்டும்! ... 3

(அறுசீர் விருத்தம்: விளம் மா தேமா விளம் மா தேமா)

சந்தியில் ஆடல் கண்டே
. சஞ்சலம் என்னுள் தீர்ந்தே
வெஞ்சினம் அகத்தில் வீழ்ந்தே
. எஞ்சுவ தன்பே யாகத்
தஞ்சமாய் ஈசன் தாளைத்
. தழுவியே என்னுள் ஓங்கும்
அஞ்சனம் அகல நானும்
. அரன்ருள் பெறுவ தென்றோ? ... 4

(வண்ண விருத்தம்:தந்ததனத் தானதனத் தனதான)

பந்தமுறக் காமமுறக் கடையேனாய்
. அந்தகமுற் றாமையெனச் செலும்வாழ்வில்
சிந்தையறத் தீமையுறத் தனியாகி
. எந்தையிணைத் தாளணையாப் பதரானேன்
நந்திதலைக் கோடுமிசைப் பதமேவி
. அஞ்சலெனச் சூலமெடுத் தழலாடும்
சந்திரனைச் சூடுதலைச் சடையோனே
. அந்தநிலைக் கேடுதனைக் களைவாயே. ... 5

--ரமணி, 26/04/2014, கலி.13/01/5115
(சனிப் பிரதோஷ நாள்)

*****

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sat May 03, 2014 12:43 pm

தெய்வ தரிசனம்: தில்லைக் கற்பக விநாயகர்
(விவரம்: http://natarajadeekshidhar.blogspot.in/2012/03/blog-post.html)
(குறும்பா)

தில்லைமேவும் கற்பகவி நாயகனே
எல்லையிலாப் பெருவெளியா யானவனே
. கற்புடைப்புக் கற்பகமாய்ச்
. சிற்பமான அற்புதமாய்
அல்லலற அருள்செய்யும் தூயவனே. ... 1

குடதிசையின் வீதியுன்றன் விழிபடவே
கடையெல்லாம் செல்வமுற வழிபடுமே
. கடையாளர் ஏற்றிடுவார்
. கடன்நீக்கித் தேற்றிடுவாய்
இடரேது உன்பாதம் வழிபடவே. ... 2

நள்ளிரவில் துருவாசர் தில்லைவரப்
பள்ளியது மூடிடவர் தொல்லையற
. அன்னையவள் அன்னம்தர
. இன்முகன்நீ முன்னம்வர
வெள்ளியனின் ஆடலுன்றன் விள்ளலென. ... 3

பதமாடும் செவியாடும் தலையாடும்
கதுப்புடலின் வளமெங்கும் அலையோடும்
. கிண்கிணியும் ஆர்த்திடவே
. கண்ணிமையாப் பார்த்திடவே
விதிர்ப்பினிலே களியுண்டார் சிலையாக. ... 4

சோழனின்பின் பாண்டியனின் திருப்பணியே
வேழமுகன் தில்லைமேவும் உருவணியே
. நந்திமுன்னே நடமாடும்
. தந்தனவன் இடம்நாட
ஆழமுறும் தரிசனத்தால் செறுத்தணிவே. ... 5

--ரமணி, 03/05/2014, கலி.20/01/5115
(சதுர்த்தி தினம்)

*****


Sponsored content

PostSponsored content



Page 17 of 36 Previous  1 ... 10 ... 16, 17, 18 ... 26 ... 36  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக