புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிசேரியன் - சில அதிர்ச்சித் தகவல்கள் Poll_c10சிசேரியன் - சில அதிர்ச்சித் தகவல்கள் Poll_m10சிசேரியன் - சில அதிர்ச்சித் தகவல்கள் Poll_c10 
7 Posts - 64%
heezulia
சிசேரியன் - சில அதிர்ச்சித் தகவல்கள் Poll_c10சிசேரியன் - சில அதிர்ச்சித் தகவல்கள் Poll_m10சிசேரியன் - சில அதிர்ச்சித் தகவல்கள் Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
சிசேரியன் - சில அதிர்ச்சித் தகவல்கள் Poll_c10சிசேரியன் - சில அதிர்ச்சித் தகவல்கள் Poll_m10சிசேரியன் - சில அதிர்ச்சித் தகவல்கள் Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிசேரியன் - சில அதிர்ச்சித் தகவல்கள் Poll_c10சிசேரியன் - சில அதிர்ச்சித் தகவல்கள் Poll_m10சிசேரியன் - சில அதிர்ச்சித் தகவல்கள் Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
சிசேரியன் - சில அதிர்ச்சித் தகவல்கள் Poll_c10சிசேரியன் - சில அதிர்ச்சித் தகவல்கள் Poll_m10சிசேரியன் - சில அதிர்ச்சித் தகவல்கள் Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
சிசேரியன் - சில அதிர்ச்சித் தகவல்கள் Poll_c10சிசேரியன் - சில அதிர்ச்சித் தகவல்கள் Poll_m10சிசேரியன் - சில அதிர்ச்சித் தகவல்கள் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
சிசேரியன் - சில அதிர்ச்சித் தகவல்கள் Poll_c10சிசேரியன் - சில அதிர்ச்சித் தகவல்கள் Poll_m10சிசேரியன் - சில அதிர்ச்சித் தகவல்கள் Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
சிசேரியன் - சில அதிர்ச்சித் தகவல்கள் Poll_c10சிசேரியன் - சில அதிர்ச்சித் தகவல்கள் Poll_m10சிசேரியன் - சில அதிர்ச்சித் தகவல்கள் Poll_c10 
8 Posts - 2%
prajai
சிசேரியன் - சில அதிர்ச்சித் தகவல்கள் Poll_c10சிசேரியன் - சில அதிர்ச்சித் தகவல்கள் Poll_m10சிசேரியன் - சில அதிர்ச்சித் தகவல்கள் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சிசேரியன் - சில அதிர்ச்சித் தகவல்கள் Poll_c10சிசேரியன் - சில அதிர்ச்சித் தகவல்கள் Poll_m10சிசேரியன் - சில அதிர்ச்சித் தகவல்கள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சிசேரியன் - சில அதிர்ச்சித் தகவல்கள் Poll_c10சிசேரியன் - சில அதிர்ச்சித் தகவல்கள் Poll_m10சிசேரியன் - சில அதிர்ச்சித் தகவல்கள் Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
சிசேரியன் - சில அதிர்ச்சித் தகவல்கள் Poll_c10சிசேரியன் - சில அதிர்ச்சித் தகவல்கள் Poll_m10சிசேரியன் - சில அதிர்ச்சித் தகவல்கள் Poll_c10 
3 Posts - 1%
வேல்முருகன் காசி
சிசேரியன் - சில அதிர்ச்சித் தகவல்கள் Poll_c10சிசேரியன் - சில அதிர்ச்சித் தகவல்கள் Poll_m10சிசேரியன் - சில அதிர்ச்சித் தகவல்கள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிசேரியன் - சில அதிர்ச்சித் தகவல்கள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 12, 2009 1:41 am

இன்று சுகப் பிரசவங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம் போலிருக்கிறதே! தனியார் மருத்துவமனைகளில் சுகப்பிரசவம் என்பது ஆச்சரியமான நிகழ்ச்சிதான். இன்னும் நாலைந்து ஆண்டுகளில் 700 சதவீதம் சிசேரியன் பிரசவங்கள் என்றாகி விடுமாம். சிசேரியன் என்பது தாய்சேய் உயிர்காக்க வேண்டிய அவசியம் ஏற்படும் போது மட்டுமே செய்வார்கள். அமெரிக்க அரசின் யுத்தவெறி எல்லையில் வந்து நின்று ரத்தப் பற்களால் சிரித்தபோது ஈராக் கர்ப்பிணி பெண்கள் அவசரமாக மருத்துவமனைகளுக்கு விரைந்து சிசேரியன் செய்து குறைமாதத்திலேயே குழந்தை பெற்றுக் கொண்டார்கள். யுத்தம் தொடங்கிவிட்டால் அப்புறம் மருத்துவ மின்சார வசதிகள் இருக்காது. 2000ம் ஆண்டு முடிந்து புதிய மில்லனியம் பிறந்தபோது தனது குழந்தையும் அந்த நேரத்தில் பிறக்கவேண்டும் என்று உலகம் முழுக்க சிசேரியன் செய்துகொண்டவர்கள் ஏராளம். ஆனால் நாமோ யுத்தமின்றி மில்லனியம் இன்றி வெளிநாடுகளின் சிசேரியன் விகிதத்தை வேகமாக எட்டிப் பிடித்துக் கொண்டிருக்கிறோம்.


சிசேரியன் எண்ணிக்கை அதிகமானது என்பது உண்மைதான். ஆனால் அதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கு. விஞ்ஞானம் இவ்வளவு வளர்ந்த பின்னும் நமக்கு கர்ப்ப காலம் பற்றிய முழுமையான அறிவு இல்ல. முறையான செக்கப் உணவு உடற்பயிற்சி பரா மரிப்பு தைரியம்.. இப்படி பல அம்சங்கள் சேர்ந்துதான் சுகப் பிரசவத்துக்கு வழிவகுக்கும். நம்ம பெண்கள்கிட்ட இப்ப கவனக்குறைவு அதிகமாயிட்டே வருது. முன்னெல்லாம் கூட்டுக் குடும்பமா வாழ்ந்தாங்க. வீட்டில் நாலு பெரியவங்க எப்போதும் இருந்தாங்க. நிறைய குழந்தைகளை பெற்ற அனுபவசாலிகள் இருந்ததால் கர்ப்பிணிகளை நல்ல முறையில் கவனிப்பாங்க. இப்படி உக்காராதே அப்படி படுக்காதே குனிஞ்சு நிமிர்ந்து வேலை பாரு என்று கண்காணிப்பு இருந்துகிட்டே இருக்கும். இப்ப எல்லாரும் தனிக்குடித்தனம் போயிட்டாங்க. நிறைய பெண்கள் வேலைக்கு போறாங்க. பிரசவத்துக்கு பத்து நாளைக்கு முன்னாடிதான் லீவு போடுறாங்க. இதனால வெயிட் கூடுது. ரத்த அழுத்தம் கர்ப்பகால ஜன்னி பனிக்குடம் உடையறது அப்படின்னு பல பிரச்னைகளோடதான் டாக்டர்கிட்டே வர்றாங்க. எங்களுக்கு அம்மா குழந்தை இரண்டு பேருடைய உயிரும் முக்கியம். வேற வழி இல்லாம சிசேரியன் செய்ய வேண்டியிருக்கு. அரசு மருத்துவமனையில் சுகப்பிரசவம் ஆனா எங்களுக்கு ரொம்ப நல்லது. சீக்கிரம் வீட்டுக்கு அனுப்பிடுவோம். சிசேரியன் நடந்தா பத்து நாள் பெட்ல வெச்சிருந்து அனுப்பணும். மத்த வங்களுக்கும் கஷ்டம்.. என்கிறார் டாக்டர் சுந்தர வல்லி.

அறிவியல் வளர வளர அன்றாட வாழ்க்கைமுறை மாறுது. இது பெண்களின் உடலமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்து என்கிறார் சுந்தரவல்லி. வயித்துல இருக்கிற குழந்தை தானாக வெளியே வரணும்னா இடுப்பு எலும்பு கொஞ்சம் விட்டுக் கொடுக்கணும். முன்னெல்லாம் பதினாறு பதினேழு வயசுல கல்யாணம் ஆனதால எலும்புகள் இளசா இருக்கும். பிரசவம் பிரச்னையாக இல்லை. இப்ப பெண்களுக்கு இருபத்தெட்டு முப்பது வயசுலதான் கல்யாணம் ஆகுது. நல்லா படிச்சு வேலைக்கு போய் சம்பாதிக்க ஆரம்பிச்ச பிறகுதான் கல்யாணம் பண்றாங்க. கல்யாணத்துக்கு அப்புறமும்கூட உடனே குழந்தை வேணாமேன்னு தள்ளிப்போடுவாங்க. முப்பது வயசுக்கு பிறகு இடுப்பு எலும்பு முதிர்ச்சி அடைஞ்சிடும். வலி பொறுக்க முடியலையே.. சிசேரியன் பண்ணிடுங்க!ன்னு கேக்குறாங்க. நாலு சதவீத சிசேரியன் ஆபரேஷன் உறவுமுறை திருமணங்களால நடக்குது. ரொம்ப நெருக்கமான உறவுகள்ல திருமணம் செய்தால் பல சிக்கல்கள் வரும். எனக்கு தெரிய சில பணக்கார பெண்களுக்கு வேலைன்னா என்ன என்பதே தெரியாது. அவங்களுக்கு சும்மா தண்ணீரை தரையில் ஊற்றி அதை பெருக்கிவிடச் சொல்லுவாங்க. சொகுசான வாழ்க்கைக்கு வந்துட்டா அதோட லாப நஷ்டங்க ளையும் ஏத்துகிட்டு தானே ஆகணும் என்கிறார்.

உடல் பலவீனம் தான் அதிக சிசேரியனுக்கு முதல் காரணம் என்று அடித்து சொல்கிறார் சிவகாமி. நாம கொஞ்ச கொஞ்சமா நாகரீக கோமாளிகளா மாறிட்டு வர்றோம். கருப்பை வளர்ச்சி பதிமூணு வயசுல தொடங்குது. டயட்டுங்கிறது டீன்ஏஜ்லதான் தொடங்கணும். புல்லா கேஸ் அடைச்ச கூல்டிரிங்ஸ் குடிச்சிட்டு பல பொண்ணுங்க காலத்தை ஓட்டுறாங்க. வெறும் சிப்ஸ் சாப்பிட்டு வாழுற பெண்களை எனக்குத் தெரியும். சாதாரணமா வாழவே இவங்களுக்கு கலோரி போதாது. இதுல சுகபிரசவம் எங்கிருந்து சாத்தியம் கர்ப்பமா இருக்கிறபோது மட்டும் ஹார்லிக்ஸா குடிச்சா உடம்புல சத்து வந்துடாது. டீன்ஏஜ்ல இருந்தே சரியான சாப்பாட்டை தொடங்கணும். ஸ்லிம்மா இருக்கணும்னு ஆசைப்பட்டு உள்ளதும் போயிடுது. நிறைய சாப்பிட சொல்லல. சத்தான உணவை சாப்பிடணும். நார்ச்சத்து இரும்புசத்து கால்சியம்னு புரோட்டின் கார்போ ஹைட்ரேட் இதெல் லாம் உடம்புல ஒரு குறிப்பிட்ட அளவு இருக்கணும். இதெல்லாம் கண்டிப்பா நம்ம பாஸ்ட்புட் கடைகள்ல இருக் காது. பெண்கள் உடல் நிலையில் பெற்றவர்கள்கூட போதிய கவனம் செலுத்தறது இல்ல. பீட்ஸா சாப்பிட்டு சுகமா பிள்ளை பெத்துக்கணும்னு ஆசைப்பட்டா எப்படி கோலாக்களை விட்டுட்டு இளநீர் தர்பூஸ் வெள்ளரி மோர்னு சாப்பிடணும். 100 கிராம் சோயா பீன்ஸ்ல 40 கிராம் புரோட்டின் இருக்கு. எல்லா கீரையிலும் சத்துகள் இருக்கு. மூணு வேளைக்கு இரண்டு வேளை உண்ணா விரதம் இருந்து மத்தியானம் கொஞ்சம் தயிர் சாதம் மட்டும் சாப்பிட்டா சிசேரியன் கன்பர்ம்டு! என்று அழுத்தம் திருத்தமாக கண்டிக்கிறார் சிவகாமி.

நவீன ஸ்கேன் கருவி வந்த பிறகும் சிசேரியன் அதிகமாவது எப்படி ?

இந்தியா மொத்தமும் பத்துல இருந்து பதினைந்து சதவீதம்தான் சிசேரியன் கேஸ். மீதியெல்லாம் நார்மல் டெலிவரிதான். சிசேரியன் ஒண்ணும் பெரிய டேஞ்சர் இல்லை. வலி தாங்கமுடியாம ஆபரேஷன் பண்ணச் சொல்லி கேக்கிறவங்க அதிகம். இப்ப எபியூடரல் அனஸ்தீசியாங்கிற முறை வந்தாச்சு. முதுகுத் தண்டுல மயக்க ஊசி போட்டு வலி இல்லாம குழந்தை பெத்துக் கலாம். இது எல்லா மருத்துவமனைக்கும் பரவிய பிறகு சிசேரியன் குறையும். உடம்பு பலவீனமா இருக்கிறவங்கள வெச்சுகிட்டு எத்தனை ஸ்கேன் மெஷின் கண்டுபிடிச்சும் என்ன பலன் நிரந்தர வெற்றிக்காக தற்காலிக தோல்வியை ஏற்கலாம். சிசேரியன் அப்படித்தான். எத்தனையோ தாய்மார்கள் உயிர் அதனாலதான் காப்பாத்தப்படுது. அந்தக் காலத்துல சிசேரியன் தெரியாம செத்துப்போனவங்க எத்தனை பேரோ என்று சிக்கலை ஸ்கேன் செய்து பேசுகிறார்.

அந்தக் காலத்தில் கர்ப்பிணிகள் என்ன உணவு முறைகளை கடைப்பிடித்தனர்?

கண்டிப்பா புழுங்கல் அரிசி சாதம்தான். அதுவும் கைக்குத்தல் அரிசி. மிஷின் வாசமே புள்ளத் தாய்ச்சி உடம்புல பட விடமாட்டோம். சோறு அலுமினிய பாத்திரத்துல ஆக்கமாட்டோம். கர்ப்பிணிகளுக்கு பானை சோறுதான் பதம். சோறு ஒரு வேளைதான். நாட்டு அவரைக்காய் தனியா காஞ்ச மிளகாய் வெங்காயம் சீரகம் மிளகு கருவேப்பிலை இதையெல்லாம் விளக்கெண்ணெய் விட்டு பொன்னாட்டம் வறுப்போம். இதை சாதத்தோடு கலந்து தந்தா இரண்டு வருஷத்துக்கு தாய்ப்பாலுக்கு பஞ்சமில்ல. தாய்ப்பால் கொடுக்க கொடுக்க அடுத்த சினைமுட்டை தள்ளிப்போகும். மொதக் குழந்தைக்காக பானை மாதிரி வந்த வயிறு மொத்தமா இறுகிடும். அப்புறம்தான் அடுத்த பிரசவம். வைத்தியர் வந்து பித்தநாடி கர்ப்பநாடி பாத்துட்டு தேதி சொல்லிட்டு போனாருன்னா தப்பவே தப்பாது. ஏழாவது மாசம் வெந்தயப்பொடி ஓமப்பொடி நார்த்தங்கா ஊறுகாயோடு தாய்வீட்டுக்கு போனா கையில பிள்ளையோட திரும்பி வருவாளுங்க. கர்ப்பமான உடனே தாய்வீட்டுக்கு போனா வேலை செய்யாம ஏமாத்திடுவாங்க. மாமியார்கிட்ட குனிஞ்சு நிமிர்ந்து வேலை பார்த்ததுல சுகப்பிரசவம் உறுதியாயிடும். எங்க ஊர்ல வெறகு பொறுக்க போய் முட்டி போட்டு புள்ளை பெத்து தோள்லயும் வெறகை தலைலயும் தூக்கிட்டு நடந்து வர்றத எங்கண்ணால பாத்திருக்கேன். சாப்பிட்ட ஊட்டம் உடம்புல ஊறி தெம்பு தரும். அப்பல்லாம் பச்ச ஒடம்புக்காரி பதவிசா நடக்கணும்னு சொல்லுவோம் புருசன்கிட்ட. இப்ப ஆப்பரேசன் ஒடம்புக்காரி அண்டாம பாத்துக்கோன்னு சொல்ல வேண்டி இருக்கு. எல்லாம் காலம் செய்ற கோலம்! என்று குறும்பாக சிரிக்கிறார் லிங்கேஸ்வரி.

இந்த காரணங்கள் தவிர குறிப்பிட்ட நாள் நட்சத்திரத்தில் குழந்தை பிறக்க வேண்டும் என்று சிசேரியன் செய்ய சொல்லி வற்புறுத்துபவர்கள் ஒருபக்கம். தொண்டு என்று இருந்த மருத்தவம் தொழில் என்று மாறியதால் வந்த பணத்தாசை ஒருபக்கம். பெண் பிரசவிக்கும்போது கணவனும் உடனிருக்க வேண்டும் என்ற கருத்து வலியுறுத்தப்படும் வேளையில் ஆயுத உதவியால் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையை குறைக்கும் பொறுப்பு மக்களிடம் பாதியும் மருத்துவர்களிடம் மீதியும் இருப்பதாகத்தான் சொல்லவேண்டும்.



சிசேரியன் - சில அதிர்ச்சித் தகவல்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Oct 12, 2009 1:50 am

பயனுள்ள மருத்துவத்தகவல் சிவா அண்ணா

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Oct 12, 2009 6:50 am

இப்போது வலி இல்லாமல் குழந்தை பெற விரும்புகிறார்கள்..
ஷிவா அண்ணா அருமையான தகவலை தந்து இருக்கின்றீர்கள்



தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Oct 12, 2009 8:41 am

அருமை அருமை சிவா அண்ணா.... சிசேரியன் - சில அதிர்ச்சித் தகவல்கள் 678642

சுடர் வீ
சுடர் வீ
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 606
இணைந்தது : 14/08/2009

Postசுடர் வீ Mon Oct 12, 2009 8:51 am

ஆனால் அனஸ்திசியா முறையால் பிற்காலத்தில் பெண்கள் பாதிப்படைவதாக அறிகிறேன்.



இருப்பதை கொடுப்படதன்று ஈகை, இறந்தும் கொடுப்பதே!!!

சுடர் வீ
mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Mon Oct 12, 2009 10:21 am

சிசேரியன் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் தகவலை தந்த சிவா அண்ணன் அவர்களுக்கு எனது நன்றிகள். சிசேரியன் - சில அதிர்ச்சித் தகவல்கள் 678642



சிசேரியன் - சில அதிர்ச்சித் தகவல்கள் Eegaraitkmkhan
சிசேரியன் - சில அதிர்ச்சித் தகவல்கள் Logo12
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Mon Oct 12, 2009 11:02 am

வணக்கம்
சிசேரியன் மூலம் குழ்ந்தைகள் பெற்றுக் கொண்டால் மாதவிலக்கு நின்றவுடன் அவர்களுக்குப் பக்கவாத நோயும் வரும் வாய்ப்பு இருக்கிறது என்றும் விஞ்ஞான நூல்கள் கூறுகின்றன.விழிப்புணர்வு உண்டாக்கிய மதிப்புக்குரிய சிவாவுக்கு நன்றி
அன்புடன்
நந்திதா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக