புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது உங்கள் இடம்..! - Page 17 Poll_c10இது உங்கள் இடம்..! - Page 17 Poll_m10இது உங்கள் இடம்..! - Page 17 Poll_c10 
40 Posts - 63%
heezulia
இது உங்கள் இடம்..! - Page 17 Poll_c10இது உங்கள் இடம்..! - Page 17 Poll_m10இது உங்கள் இடம்..! - Page 17 Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
இது உங்கள் இடம்..! - Page 17 Poll_c10இது உங்கள் இடம்..! - Page 17 Poll_m10இது உங்கள் இடம்..! - Page 17 Poll_c10 
2 Posts - 3%
வேல்முருகன் காசி
இது உங்கள் இடம்..! - Page 17 Poll_c10இது உங்கள் இடம்..! - Page 17 Poll_m10இது உங்கள் இடம்..! - Page 17 Poll_c10 
2 Posts - 3%
viyasan
இது உங்கள் இடம்..! - Page 17 Poll_c10இது உங்கள் இடம்..! - Page 17 Poll_m10இது உங்கள் இடம்..! - Page 17 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது உங்கள் இடம்..! - Page 17 Poll_c10இது உங்கள் இடம்..! - Page 17 Poll_m10இது உங்கள் இடம்..! - Page 17 Poll_c10 
232 Posts - 42%
heezulia
இது உங்கள் இடம்..! - Page 17 Poll_c10இது உங்கள் இடம்..! - Page 17 Poll_m10இது உங்கள் இடம்..! - Page 17 Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
இது உங்கள் இடம்..! - Page 17 Poll_c10இது உங்கள் இடம்..! - Page 17 Poll_m10இது உங்கள் இடம்..! - Page 17 Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
இது உங்கள் இடம்..! - Page 17 Poll_c10இது உங்கள் இடம்..! - Page 17 Poll_m10இது உங்கள் இடம்..! - Page 17 Poll_c10 
21 Posts - 4%
prajai
இது உங்கள் இடம்..! - Page 17 Poll_c10இது உங்கள் இடம்..! - Page 17 Poll_m10இது உங்கள் இடம்..! - Page 17 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
இது உங்கள் இடம்..! - Page 17 Poll_c10இது உங்கள் இடம்..! - Page 17 Poll_m10இது உங்கள் இடம்..! - Page 17 Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
இது உங்கள் இடம்..! - Page 17 Poll_c10இது உங்கள் இடம்..! - Page 17 Poll_m10இது உங்கள் இடம்..! - Page 17 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
இது உங்கள் இடம்..! - Page 17 Poll_c10இது உங்கள் இடம்..! - Page 17 Poll_m10இது உங்கள் இடம்..! - Page 17 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
இது உங்கள் இடம்..! - Page 17 Poll_c10இது உங்கள் இடம்..! - Page 17 Poll_m10இது உங்கள் இடம்..! - Page 17 Poll_c10 
7 Posts - 1%
mruthun
இது உங்கள் இடம்..! - Page 17 Poll_c10இது உங்கள் இடம்..! - Page 17 Poll_m10இது உங்கள் இடம்..! - Page 17 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது உங்கள் இடம்..!


   
   

Page 17 of 23 Previous  1 ... 10 ... 16, 17, 18 ... 23  Next

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Oct 29, 2012 1:30 pm

First topic message reminder :

நன்றி: வாரமலர்

வேண்டாம் சுய வைத்தியம்!

என் நண்பனை, தற்செயலாக மருத்துவமனையில் சந்தித்தேன். உடல்நிலை மோசமாகி பலவீனமாகி விட்டான். என்ன பிரச்னை என்று விசாரித்தேன்.
அவனுக்கு ஓயாமல் இருமல் இருந்ததாம். இன்னொரு நண்பர், "பிராந்தியுடன் மிளகுத் தூள் கலந்து சாப்பிடு, இருமலும், சளியும் பறந்து விடும்...' என்று கூறினாராம். அவர் கூறியபடியே இவனும் மிளகுத்தூள் போட்டு பிராந்தி சாப்பிட்டிருக்கிறான். தொண்டையும், வயிறும் புண்ணானதுதான் மிச்சம். அதற்கு தான் சிகிச்சை பெற வந்திருக்கிறான்.
சுய வைத்தியம் எனும் பெயரில், இது போன்ற வைத்தியத்தை பின்பற்றி, உடலை கெடுத்து கொள்ளாதீர். அதோடு, இலவச அறிவுரை என்ற பெயரில், தயவு செய்து மருத்துவ ஆலோசனை வழங்காதீர்கள் நண்பர்களே!

— ஷோபனாதாசன், சிவகங்கை.


அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Jun 16, 2013 2:07 pm

கட்டாயப்படுத்தாதீர் பெற்றோரே...

எங்கள் ஊரில் ஒரு பெண்ணுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றிருந்த நிலையில், திடீரென தற்கொலை செய்து கொண்டாள் அந்த மணப்பெண். பெண்ணுக்கு விருப்பமில்லாத, உறவுக்கார மாப்பிள்ளையை நிச்சயித்ததாகவும், அந்த பெண் மறுத்தும், அந்த வரனை தான் திருமணம் செய்ய வேண்டுமென்று பெற்றோர் கட்டாயப்படுத்தியதால், அந்தப் பெண் தற்கொலை செய்து கொண்டாள்.

பெற்றோரே...வாழ்க்கை நடத்தப் போவது உங்கள் மகளோ, மகனோ தான். அவர்களின் விருப்பமில்லாமல், கட்டாயப்படுத்தி, "பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம்...' என்ற போலியான உடன்படிக்கையில், இளம் உயிர்களை கருக செய்து விடாதீர்.

இனிமேலாவது பெற்றோர், தம் பிள்ளைகளின் விருப்பப்படி திருமணம் செய்ய முன் வருவரா?

— பார்வதி கனகராஜ், திருப்பூர்.

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Jun 16, 2013 2:08 pm

எதற்கும் ஓர் அளவு உண்டு!

என் கணவர் ஒரு வெகுளி. சகஜமாக எல்லாருக்கும் உதவி செய்வார். எங்கள் வீட்டுக்கு எதிரே ஒரு தம்பதி. என் கணவரிடம் அடிக்கடி சிரித்து, சிரித்து பேசுவாள், அந்த வீட்டுப் பெண்மணி; ஆனால், என்னிடம் ஒரு வார்த்தை கூட பேசியதில்லை.
என் கணவரை எச்சரித்தேன்; அவரோ, "நான் தான் ஒரு நல்ல பெண்ணைப் பற்றி தவறாக நினைக்கிறேன்...' என்று கூறினார்.

ஆனால், போகப் போக நிலைமை வேறு விதமாக மாறியது. சிறு சிறு வேலைகளை கூட என் கணவரிடம் கொடுக்க ஆரம்பித்தாள். உதாரணமாக, ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை, "எனக்காக கொஞ்சம் வங்கியில் பணம் எடுத்து தர முடியுமா... ப்ளீஸ்' என்று ஒரு வேண்டுகோள். அவள் கணவர் ஊருக்கு போயிருக்கிறாராம்.

ஏன், கணவர் ஊருக்குப் போயிருந்தால், தானே வங்கிக்கு சென்று வர முடியாதா? யோசித்துப் பார்த்தேன்...எனக்கு வேறு வழி தெரியவில்லை. கணவரிடம், "இந்த வீடு ராசியில்லை, அது, இது...' என்று சாக்கு போக்கு சொல்லி வீட்டையும், ஏரியாவையும் மாற்றி விட்டேன். பெண்களே...நானும் ஒரு பெண் என்ற முறையில் சொல்கிறேன். அளவுக்கு மீறி பிற ஆடவர்களின் உதவியை நாடி, வீட்டிலுள்ளவர்களுக்கு, "டென்ஷன்' ஏற்படுத்தாதீர்.

— மதுமதி கண்ணன், காரைக்குடி.


அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Jun 16, 2013 2:10 pm

கோவில் சுத்தமாக இருக்க...

கோவில்கள் இன்னும் கொஞ்சம் தூய்மையாக இருக்கக் கூடாதா என்ற ஆதங்கம், நம் எல்லார் மனதிலும் உண்டு. சில கோவில்கள், விதிவிலக்காக தூய்மையாக இருக்கின்றன என்பதை நிதர்சனமாகப் பார்த்த என் அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறேன்.

சென்ற வாரம் திண்டுக்கல் அருகில், 8 கி.மீ., தூரத்தில் இருக்கும் தாடிக்கொம்பு என்ற சிற்றூருக்குச் சென்றிருந்தோம். அங்கே, 800 ஆண்டு பழமை மிக்க அழகான சிற்பங்களுடன், ஸ்ரீ சவுந்தர ராஜப்பெருமாள், சவுந்தரவல்லித் தாயாரின் கோவில் இருக்கிறது.

கோவிலையும், சிற்பங்களை யும் ரசித்தபின், பெருமாளுக்கு அர்ச்சனை செய்தோம். தீபம் காண்பித்து அர்ச்சகர் தட்டில் குங்குமத்துடன் வந்து, எல்லாரை யும், குங்குமம் எடுத்துக் கொள்ளச் சொன்னார். எங்களுக்கு வேண்டி யதை எடுத்துக் கொண்டோம்.

பின்னர், அர்ச்சகரிடம் கேட்டேன். "இது என்ன புதுமையாக இருக்கிறது. எல்லாக் கோவில் களிலும் அர்ச்சகர்கள் தானே பிரசாதம் தருகின்றனர். இங்கு ஏன் அவரவர்களை எடுத்துக் கொள்ளச் சொல்கிறீர்கள்?' என்று கேட்டேன்.

அதற்கு அர்ச்சகர், "எல்லா கோவில்களையும் பாருங்கள். நாங்கள் எடுத்துக் கொடுக்கும் விபூதியையும், குங்குமத்தையும் கொஞ்சம் உபயோகித்து விட்டு, மீதியை என்ன செய்வது என்று தெரியாமல், அருகே இருக்கிற தூண்களில் தூவி விட்டு போய் விடுகின்றனர். இங்கே, அவரவர் களுக்கு வேண்டியதை அவர்களே எடுத்துக் கொள்வதால்

அனைத்து தூண்களும் சுத்தமாக இருக் கிறது...' என்றார். மற்ற அர்ச்சகர்களும், தாங்கள் பணிபுரியும் கோவில்களில் இதை செயல்படுத்த முன் வர வேண்டும்.

— ஒய்.தண்டபாணி, சென்னை.

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Jun 26, 2013 2:35 pm

அரசு அதிகாரி என்றாலே லஞ்சம் வாங்குவதுதானோ!

என் நண்பர் ஒருவர், அரசு பணியிலிருந்து சமீபத்தில் ஓய்வு பெற்றார். தன் பதவி காலத்தில், அலுவலகத்திற்கு தணிக்கைக்கு வரும் மேலதிகாரிகளை, "குளிப்பாட்ட' வேண்டிய கடமையும் (?), நிர்பந்தமும், உடன் பணியாற்றுவோரின் தொல்லைகளுக்கு பயந்தும், லஞ்சம் வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகி, வேறு வழி இல்லாமல் குறைந்த அளவில் லஞ்சமும் வாங்கியிருக்கிறார். இப்போது, அவருடைய ஓய்வூதியம் மற்றும் நிலுவை தொகையைப் பெற, தினமும் அலுவலகத்திற்கும், வீட்டுக்குமாக நடையாய் நடந்து கொண்டிருக்கிறார்.

அங்கு புதிதாக பதவியேற்றுள்ள அதிகாரி, இவரிடம், "என்ன சார், உங்க சர்வீஸ் காலத்தில், மக்களை இப்படி கெடுத்து வெச்சுருக்கீங்க... வருபவனெல்லாம், அஞ்சு, பத்துக்கு மேல் லஞ்சம் தரமாட்டேன்கிறான்...' என்று சலித்துக் கொண்டிருக்கிறார்.
"பத்து வருஷமாகவே, இந்த ஊரில் இப்படித்தான் பழக்கம்... ' என்று கூறி சமாளித்திருக்கிறார் நண்பர். "என்ன சார், அன்றைக்கும், இன்றைக்கும் விலைவாசி அப்படியே வா இருக்கு? நூற்றுக்கணக்கில் வாங்கிய இந்த கை, இப்போது பத்தும், இருபதும் வாங்குவதற்கு கேவலமாக இருக்கிறது.

வீட்டில் என் பெண்டாட்டியிடம், இந்த வெட்கக்கேட்டை சொன்னால், நம்ப மாட்டேங்கிறாள்...' என்று வருத்தமாக கூறியிருக்கிறார் அந்தப் புதிய அதிகாரி.
அரசு அதிகாரிகளே... சம்பளம், போனஸ், வருடத்திற்கு ஆறு மாதம் விடுமுறை, பயணப் படி, எல்.டி.சி., மருத்துவ செலவு என்று எத்தனை சலுகைகள் உங்களுக்கு கிடைக்கின்றன.

இன்னும் ஏன் ஆலாய் பறக்கிறீர்கள்? உங்களை விட திறமைசாலிகள், குறைந்த சம்பளத்துடனும், சலுகையுடனும் தனியார் துறையில் பணியாற்றுவோர் லட்சோப லட்சம் பேர் உண்டு. லஞ்சம் வாங்குவதே தவறு!

அதில் இப்படி குறைக் கூறி, நல்லவர்களையும் கெடுத்து, உங்கள் வேலைக்கு நீங்களே உலை வைத்து கொள்ளாதீர்கள்!

— என்.பன்னீர் செல்வம், சென்னை.

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Jun 26, 2013 2:36 pm

வித்தியாசமான பிறந்தநாள் விழா!

எங்கள் பேத்தியின் பிறந்தநாள் விழாவை, வித்தியாசமாக கொண்டாட விரும்பினோம். வழக்கமாக, அனாதை ஆசிரமங்களுக்கு உணவு அளிப்போம். இம்முறை, அவர்களை ஒரு நாள் சுற்றுலாவாக அழைத்து செல்ல எண்ணி, சென்னை அருகே உள்ள ஒரு முதியோர் இல்லத்தை அணுகினோம். அவர்களும் அனுப்ப சம்மதித்தனர்.

இல்லத்தில் இருப்போர், 51 பேர் அதில்: 40 பேர் வருவர் என்று கூறினர். தனியார் பேருந்தை ஏற்பாடு செய்து, பேத்தியின் பிறந்த நாளன்று, அவர்கள் இல்லத்தை அடைந்து, பிறந்த நாள் கேக் வெட்டி, எல்லாருக்கும் வழங்கி, சுற்றுலா கிளம்பினோம்.

சுற்றுலா வராமல், இல்லத்தில் இருந்தோருக்கு, வெளியில் இருந்து அவர்கள் விரும்பியதை சாப்பிட, ஏற்பாடு செய்து விட்டு வந்தோம். மொத்தத்தில், அவர்கள் இல்ல கிச்சனுக்கு, அன்று முழுவதும் விடுமுறை.

காலை உணவு, விரும்பியதை விரும்பியவாறு சாப்பிட வைத்து, சென்னையில் உள்ள அஷ்டலட்சுமி கோவிலுக்கு அழைத்து சென்றோம். பிறகு முட்டுக்காடு போட்டிங். விருப்பபட்டவர்கள், 16 பேர் மட்டும் போட்டிங் சென்றனர். பின், மகாபலிபுரத்தில் மதிய சாப்பாடு; சைவம், அசைவம் என, விரும்பியதை சாப்பிட வைத்தோம். பின், 6:00 மணிக்கு கடற்கரை, 7:00 மணிக்கு திருவிடந்தை நித்ய பெருமாள் கோவில் தரிசனம்.

இரவு டின்னரை முடித்து, இல்லம் வந்து, நினைவு பரிசாக அனைவருக்கும் கோ.ஆப்டெக்ஸ் பெட்ஷீட்டை வழங்கினோம். அவர்கள் அடைந்த மகிழ்ச்சி அளவிடற்கரியது. அதை விட, நாங்கள் அடைந்த மகிழ்ச்சி எல்லையில்லாதது.

செலவு கொஞ்சம் அதிகம் என்றாலும், வசதி படைத்தோர், ஆதரவு அற்ற முதியோர்களை, அவர்கள் பார்க்க விரும்பும் இடங்களுக்கு அழைத்துச் சென்று அசத்தலாமே! —

எம்.மாரியப்பன், சிட்லபாக்கம்.


அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Jun 26, 2013 2:38 pm

வளர்ப்பதெல்லாம் வளர்ச்சிக்கே!

எங்களது குடும்ப நண்பரான தாத்தா ஒருவரின் வீட்டிற்கு சென்றிருந்தேன். நலம் விசாரிப்பு, உபசரிப்பு முடிந்ததும், அவரது வீட்டைச் சுற்றிக்காட்ட என்னை அழைத்தார். வீட்டுக்கு வெளியே இருந்த சிறிய இடத்தைக் கூட வெற்றிடமாக விடாமல், நிறைய செடிகள், கொடிகள், மரங்கள் என நட்டு, வளர்த்திருந்தார். ஆங்காங்கே, நாய், பூனை, கோழி, ஆடுகளுக்கென்று சிறுகுடில்களும் அமைத்திருந்தார்.

எல்லாவற்றையும் பார்த்து, பிரமிப்போடு விசாரித்து, "உங்கள் வீட்டில் இடம் இருப்பதால், இதையெல்லாம் வளர்க்க முடிகிறது. எங்கள் வீட்டில் இடம் இல்லையே...' என்றேன்

ஏக்கத்தோடு. அதற்கு அவர், இருக்கும் இடத்தில் மீன்தொட்டி, தேனீக்கள் கூடு, பூந்தொட்டி, மூலிகைச்செடி போன்றவற்றை வளர்க்க, ஆலோசனை கூறியதோடு, சில விதைகளும், தொட்டிகளும் எனக்கு தந்து உற்சாகப்படுத்தினார். நானும், தொட்டிகளில் செடிகளை வளர்க்கத் துவங்கி விட்டேன்.
குறைந்த செலவில் வீட்டிலேயே பொழுதுபோக்க, பலன்களை பெற, வருமானம் பெற, அதோடு, பல உயிர்களை வளர்க்கிறோம், பராமரிக்கிறோம் என்ற ஆத்ம திருப்தியை பெறும் வழியை, அந்த தாத்தா எனக்கு காட்டியுள்ளார்.

நானும், என் நண்பர்களுக்கு இதைச் சொல்ல, பலரது வீடுகளில், மீன், புறா, தேனீக்கள், மூலிகை, காய்கறிகள் என, வளர்க்கத் துவங்கி விட்டனர். அவ்வப்போது ஒவ்வொருவர் வீட்டிற்கும், "விசிட்' செய்து, எங்கள் வளர்ப்பு முறையை பரிமாறிக் கொள்கிறோம்.

இதுபோல செய்வதால், வீண் அரட்டை, வெட்டியாக சுற்றித் திரிவது, கெட்ட சகவாசங்கள் எங்களிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விடைபெற்றுவிட்டன. என்பது உண்மை. "நாம் பிற உயிர்களை நேசித்து வளர்க்கும் போது, மனோரீதியாக நாமும் வளர்கிறாம்...' என்று தாத்தா கூறியது, எனக்கு மட்டுமல்ல எல்லாருக்கும் தான். நீங்களும் முயற்சிக்கலாமே!

— எ.சீனிவாசன், மதுரை.

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Jun 26, 2013 2:39 pm

விவாகரத்து பெற்றவள் என்றால்...

விவாகரத்து பெற்ற இளம் பெண்ணான நான், மறுமணம் செய்து கொள்ள எண்ணி, பத்திரிகையில் விளம்பரம் செய்தேன். அதற்கு பதில் அனுப்பிய ஆண்கள் பலரும் என்னை, "சின்ன வீடா'க வைத்துக் கொள்ளவும், முதல் மனைவி இருக்கும் போதே, இரண்டாவது தாரமாக வைத்துக் கொள்ளவுமே விரும்பி எழுதியிருந்தனர்.

விவாகரத்து பெற்ற பெண் என்றால், அவ்வளவு இளக்காரமா என, நான் கொதித்துப் போனேன். என் போல, விவாகரத்து பெற்று சட்டப்படி மனைவியைப் பிரிந்த ஆணுடனோ, மனைவியை இழந்த ஒருவருடனோ வாழ்க்கையைத் தொடரவே, நான் விரும்புகிறேன்.
மேட்ரிமோனியல் விளம்பரங்களுக்கு பதில் தரும் ஆண்களே... விளம்பரம் தரும் பெண்களின் மன உணர்வுகளையும், நியாயமான எதிர்பார்ப்புகளையும் புரிந்து கொண்டு பதிலளியுங்கள்.

வாழ்க்கையை எதிர்பார்க்கும் அவர்களை, வார்த்தைகளால் புண்படுத்தாதீர்கள்.

— டி.கவிதா, மதுரை.


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jun 26, 2013 3:05 pm

அருண் wrote:விவாகரத்து பெற்றவள் என்றால்...

விவாகரத்து பெற்ற இளம் பெண்ணான நான், மறுமணம் செய்து கொள்ள எண்ணி, பத்திரிகையில் விளம்பரம் செய்தேன். அதற்கு பதில் அனுப்பிய ஆண்கள் பலரும் என்னை, "சின்ன வீடா'க வைத்துக் கொள்ளவும், முதல் மனைவி இருக்கும் போதே, இரண்டாவது தாரமாக வைத்துக் கொள்ளவுமே விரும்பி எழுதியிருந்தனர்.

விவாகரத்து பெற்ற பெண் என்றால், அவ்வளவு இளக்காரமா என, நான் கொதித்துப் போனேன். என் போல, விவாகரத்து பெற்று சட்டப்படி மனைவியைப் பிரிந்த ஆணுடனோ, மனைவியை இழந்த ஒருவருடனோ வாழ்க்கையைத் தொடரவே, நான் விரும்புகிறேன்.
மேட்ரிமோனியல் விளம்பரங்களுக்கு பதில் தரும் ஆண்களே... விளம்பரம் தரும் பெண்களின் மன உணர்வுகளையும், நியாயமான எதிர்பார்ப்புகளையும் புரிந்து கொண்டு பதிலளியுங்கள்.

வாழ்க்கையை எதிர்பார்க்கும் அவர்களை, வார்த்தைகளால் புண்படுத்தாதீர்கள்.

— டி.கவிதா, மதுரை.

சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Jul 01, 2013 6:19 pm

எண்களை தமிழில் சொல்ல தெரியுமா?

பத்தாம் வகுப்பு படிக்கும் பக்கத்து விட்டுப் பெண்ணிடம், தமிழ் புத்தகத்தை வாங்கிப் பார்த்தேன். அதில், 1-ல் இருந்து 0 வரை, உள்ள எண்களை, தமிழில் எழுதும்படி கேட்கப் பட்டிருந்தது. எனக்கு, அது தெரியாது என்பதால், அப்பெண்ணிடமே கேட்டேன்.
உடனே அப்பெண், "1 2 3 4 5 6 7 8 9 0 என்ற எண்ணுக்கு முறையே, க, உ, ங,ச, ரு, சா, எ, அ, கூ, 0' என்றாள். "இதை எப்படி மனப்பாடம் செய்தாய்?' எனக் கேட்டேன். அத்தமிழ் எழுத்துக்களை வரிசைப்படுத்தி, வாக்கியமாக்கி மனப்பாடம் செய்ததாக கூறினாள்.
அதாவது, "க'டுகு, "உ'ளுந்து, "ங'னைச்சு, "ச'மைச்சு, "ரு'சிச்சு, "சா'ப்பிட்டேன், "எ'ன, "அ'வன், "கூ'றினான்; "ஓ' என்றாள்.
இதைக்கேட்டு, வியந்து பாராட்டினேன். இக்காலப் பெண்கள், எதிலும் சளைத்தவர்கள் அல்ல எனப் புரிந்தது. தமிழின் சுவையை, அவ்வாக்கியத்தின் மூலம் அறியவும் செய்தேன். "தமிழுக்கு அமுதென்று பேர்...' என சும்மாவா சொன்னார்கள்?

— மா.தனலட்சுமி மாரிமுத்து, விருதுநகர்.

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Jul 01, 2013 6:21 pm

உறவினரால் நேர்ந்த அவமானம்!

தனியார் நிறுவனம் ஒன்றில், வேலை பார்க்கும் திருமணமான பெண் நான். எனக்கும், என் கணவருக்கும் ஏற்பட்ட சிறு பிரச்னையால், அவரை விட்டு பிரிந்து, அம்மா வீட்டில் இருக்கிறேன். ஒரு நாள் மாலை அலுவலகத்திலிருந்து, பஸ்சில் வீடு திரும்பி கொண்டிருந்தேன்.

நான் அமர்ந்திருந்த இருக்கைக்கு, இரண்டு இருக்கை தள்ளி, ஆண்கள் அமரும் பகுதியில், என் நெருங்கிய உறவினர் ஒருவர் அமர்ந்திருந்தார். என்னைப் பார்த்ததும், தான் அமர்ந்திருந்த இடத்திலிருந்தே, "என்னம்மா, உனக்கும், உன் கணவருக்கும் சண்டையாமே... அம்மா வீட்டில் இருக்கிறாயாமே...' என்று சப்தம் போட்டு கேட்டார்.
பஸ்சில் இருந்த அனைவரும் என்னை திரும்பி பார்த்தனர். எனக்கு மிகவும் அவமானமாக போய் விட்டது.

யார் வீட்டில் தான் பூசல் இல்லை. அதற்காக, எல்லார் முன்னிலையிலும் இப்படி வெளிச்சம் போட்டு காட்ட வேண்டுமா? உறவினர்களே... உங்களால் உதவ முடியாவிட்டாலும் பரவாயில்லை; தொந்தரவு தராமல் இருக்கலாமே!

— சி.சுபத்ரா, சிவகங்கை.

Sponsored content

PostSponsored content



Page 17 of 23 Previous  1 ... 10 ... 16, 17, 18 ... 23  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக