புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருப்புகழ் -964 Poll_c10திருப்புகழ் -964 Poll_m10திருப்புகழ் -964 Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
திருப்புகழ் -964 Poll_c10திருப்புகழ் -964 Poll_m10திருப்புகழ் -964 Poll_c10 
3 Posts - 7%
heezulia
திருப்புகழ் -964 Poll_c10திருப்புகழ் -964 Poll_m10திருப்புகழ் -964 Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
திருப்புகழ் -964 Poll_c10திருப்புகழ் -964 Poll_m10திருப்புகழ் -964 Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
திருப்புகழ் -964 Poll_c10திருப்புகழ் -964 Poll_m10திருப்புகழ் -964 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

திருப்புகழ் -964


   
   
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Wed Oct 24, 2012 9:16 am



கலைமேவு ஞானப் பிரகாசக்
கடலாடி ஆசைக் ...... கடலேறிப்

பலமாய வாதிற் பிறழாதே
பதிஞான வாழ்வைத் ...... தருவாயே

மலைமேவு மாயக் குறமாதின்
மனமேவு வாலக் ...... குமரேசா

சிலைவேட சேவற் கொடியோனே
திருவாணி கூடற் ...... பெருமாளே.


சரியை , கிரியை ,யோகம் எனப்பட்ட கலைகளின் பயனாக விளைகிற ஞானத்தின் பிரகாசமே ! தாம் ஒருவரே மெய்ஞானமாகிய சற்குருனாதரே !
உமது ஞானகடலில் மூழ்கிதிளைப்பதால் மட்டுமே பொன்னாசை , பெண்ணாசை , மண்ணாசை என்ற மூவகை ஆசைக்கடலை கடரமுடியும் !
அவ்வாறு ஞானக்கடலாடும் போது பகுதி உண்மைகளை கண்டு மயங்கி தாங்கள் கண்டது மட்டுமே பெரியது என கருதிக்கொண்டு ஏனைய பகுதி உண்மைகளுடன் பலமாக சண்டையிடும் தர்க்கவியல்போதையில் நான் கவிழ்ந்துபோகாமல் முழுமையான ஞானத்தில் வளரும்படியாக கடவுளை சரணடையும் நிலையை தருவாயாக !
மலையே மூழ்கிவிடுமளவு விதவிதமான மாயைகள் குவிந்து கிடக்கும் பக்தர்களாகிய குறத்தியின் மனதிலே குடிகொண்டு சோர்ந்துபோகாமல் கடவுளுடன் ஐக்கியப்படுத்தும் சற்குருவே !
ஒவ்வொரு மாயையையும் கடறமுடியாமல் ஆத்துமாக்கள் தேங்கி சிலைபோல ஆகிவிடும்போது அந்த மாயையை வேட்டையாடி விழிப்படைய செய்யும் உபகுருக்கள் -- சேவல்கள் பலரை அணுப்பி பட்டறிவால் அருளும்ஞானமும் கூடும்படி செய்கிற யுகபுருஸனே ! படைக்கபட்ட எல்லாவற்றிற்கும் பெரியவரான பெருமாளே !


கலைமேவு ஞானப் பிரகாசக்
கடலாடி ஆசைக் ...... கடலேறி


சரியை , கிரியை , யோகம் எனப்பட்ட கலைகளின் அப்பியாசத்தால் மட்டுமே அத்துமாவில் ஞானம் விளையமுடியும் ! அதற்கு ஆத்துமா பிறவியெடுத்து ஒரு சரீரத்தில் இருந்தால் மட்டுமே முடியும் ! ஆத்துமா மரணித்து நித்திரையில் பாதாளத்தில் இருக்கும்போது அதனால் ஞானத்தில் வளரமுடியாது ! அந்தளவில் உடலும் உயிரும் ஆத்துமாவுக்கு அவசியமாயிருக்கிறது ! பிறவிக்கடல் நீந்தினால்மட்டுமே ஆத்தும்மவில் உள்ள ``தான் தனது `` என்ற அகம்பாவம் நீங்க முடியும் ! ஒரு ஆத்துமா சுயத்தை வெறுமையாக்கி படைத்தவரின் கரத்தில் தன்னை ஒரு கருவியாக மட்டுமே ஒப்படைக்கிற நிலையே -- முழுசரணாகதியே பிறவாப்பெறு நிலை அல்லது ஜீவன்முக்தி எனப்படுவது ! அந்தனிலையில் ஒளியுடம்பு பெற்று உயிர் பிரியாமல் மரணத்தை வெண்ற நித்திய ஜீவனை ஆத்துமாக்கள் பெற்று பரலோக வாழ்வுக்குள் தேவதூதனாக மாறி நுழைய முடியும் ! அது இந்த லவ்கீகஉடம்பில் அடைவதல்ல ! இந்த உடலை வெல்லுவதால் அருளப்படுகிற ஒளியுடம்பு பெறுவதால் உண்டாவது ! இந்த லவ்கீக உடம்பு மட்டுமே ஆணாகவோபெண்ணாகவோ உள்ளது ! அதனால் பெண்ணாசை . பொன்னாசை . மண்ணாசை என்ற ஆசையால் நிறம்பபட்டதாக இருக்கிறது ! இந்த ஆசைகள் முற்றிலும் நீங்கி பரிசுத்தம் அடைந்தால் மட்டுமே மாசுமருவற்ற ஒளியுடம்பு தேகத்தை வள்ளலார் போல பெறமுடியும் ! அதற்கு இந்த உடம்பில் பூமிக்குரிய வாழ்வில் -- பிறவிப்பெருங்கடலில் நீந்தி ஆசைகடலை கடறவேண்டும் !

சரியை , கிரியை , யோகம் எனப்பட்ட கலைகளின் அப்பியாசத்தால் நம்முள் விளைகிற அரைகுறை ஞானத்தை கொண்டு ஞானமே பிரகாசமான யுகபுருஸன் -- சற்குருனாதரின் முற்றறிவாகிய மெய்ஞானக்கடலில் ஆடப்பழகவேண்டும் !


பலமாய வாதிற் பிறழாதே
பதிஞான வாழ்வைத் ...... தருவாயே


சரி ! அப்படி வாழ்வின் பட்டறிவால் ஞானமார்க்கத்தில் நுழைந்து விட்ட ஆத்துமாக்களுக்கு அடுத்து என்ன நடக்கிறது ! மனித சிற்றறிவால் விழைந்த ஞானமே அதி உண்ணதமானதைப்போல பிரமையை ஏற்படுத்துகிறது ! ஒவ்வொரு ஞானிகளும் - உபகுருக்களும் சொல்லிய விசயங்களே ஒரு சாதகனுக்கு எட்டாகணியாக உள்ளது ! அதை அப்பியாசித்து முழுமையடைவதே முடியாமலேயே போய் விடுகிறது ! அதை அப்பியாசித்து அணுபவம் பெறுதல் என்பது நடக்காமலேயே அதை அறிந்து கொண்டதற்கே ஒரு சுயபெருமை மனிதனை பிடித்துக்கொள்ளுகிறது ! தான் கொண்ட ஒரு குரு மார்க்கத்தை அணுபவத்தில் அப்பியாசிக்கும் போது நாம் எத்தனை முறை வழுக்கிவழுக்கி விழுகிறோம் என்பதை அனுபவப்பட்ட ஆத்துமா அறிவதற்கும் உள்விளைந்த ஞானத்திற்கும் வித்தியாசம் உள்ளது என்பதை கண்டுணர்ந்து ``மனத்தாழ்மை`` பொறுமை, சாந்தம் என்ற தெய்வீக குணத்தை அடையும் !

நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாயிருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். (மத்தேயு 11:29 ) என்பது யுகபுருஷன் இயேசுவின் வெளிப்பாடு !

அப்போது எதையும் கிரகிக்கிர -- உள்வாங்கும் இயல்பு உண்டாகும் ! அப்படியில்லாமல் அறிந்து கொண்டதற்கே சுயபெருமை பாராட்டுகிற நபர்கள் தாங்கள் தெரிந்துவைத்திருப்பதை மட்டுமே துருத்திக்கொண்டு திரிவார்கள் ! அடுத்தவர் அணுபவத்தை உள்வாங்க மாட்டார்கள் ! அதனால் நான் சொல்லுவதுதான் பெருசு நீ சொல்லுவது சிறுசு என மார்க்கபேதங்கள் உண்டாகி சண்டைசச்சரவுகள் செய்து மண்டையையும் உடைப்பார்கள் !

உதாரணமாக இன்றைய காலகட்டத்தில் `` இந்து மதம் `` என்ற அளவில் சைவம் வைணவம் என்ற பேதங்களை அங்கீகரித்துக்கொள்ளும் அல்லது பெரிது படுத்தாத சூழ்னிலை வந்துவிட்டது ! ஆனால் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு சைவமா வைணவமா என்பதற்கு சண்டைசச்சரவுகள் செய்து பலரை கொண்றார்கள் ! ரத்த ஆறை ஓட விட்டார்கள் ! தசாவதரம் என்ற சிணிமாவில் கூட சிவபக்தனான மன்னன் ஒருவன் மனைவிமக்கள் கதறி அழுதபோதும் விடாமல் ஒரு வைணவ பட்டரை கொண்ற ஒரு பாடல் பிரபலமாய் வந்தது ! அடுத்த நூற்றாண்டுகளில் வேற்றுமையை அங்கீகரிக்கப்போகிற ஒரு சமுதாயத்தில் எதற்காக பலரை கொண்றார்கள் ? இன்றைக்கும் வேற்றுமையை அங்கீகரிக்காத மத தீவிரவாதிகள் ஒருவரை ஒருவர் கொண்று கொண்டுதான் உள்ளனர் ! அதுவும் கடவுளுக்காக பிறரை கொல்லுவதாகவும் அதற்கு சொர்க்கம் பரிசாக கிடைக்கபோவதாகவும் தங்களைத்தாங்களே ஏமாற்றிக்கொள்வது எவ்வளவு அஞ்ஞானம் பாருங்கள் !

கடவுளை அடைகிற பாதையில் மெய்ஞானத்தை எட்டுகிற வளர்ச்சியில் ஒரு சிறு ஞானம் கிடைத்தாலும் அதன் பிறகும் விடவேண்டிய அஞ்ஞானங்கள் எத்தனை எத்தனை ? கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக நமது ஆத்துமாவிலிருந்து இன்னும் எத்தனை தீய இயல்புகள் வெளிப்படும் ? ஞான வளர்ச்சியில் பக்குவப்பட்ட ஆத்துமாவுக்கு `` பலமாகிய வாது -- பல மாயமாகிய வாதுகளை `` கடந்து நீடிய பொறுமை சாந்தம் சித்திக்கும் ! தான் செல்ல வேண்டிய தூரம் அதிகம் என்பதும் ; மனித முயற்சியால் ஒவ்வொன்றையும் வெல்லுவது சுலபமல்ல என்கிற நிதானமும் . கடவுளையே கதி என சரணடையும் `` பதிஞான வாழ்வும் `` சித்திக்கும் ! அந்த சரணாகதியை தருகிறவர் சற்குருனாதரே !

மலைமேவு மாயக் குறமாதின்
மனமேவு வாலக் ...... குமரேசா


மனித ஆத்துமாவில் உண்டாகிற விதவிதமான மாய்மாலங்கள் சாக்குபோக்குகள் கடும்பற்றுகள் கோபதாபங்களின் அளவை சொல்லிமாளமுடுயுமா ? அது பெரிய மலையையே மூடக்கூடியது ! பரிசுத்தம் என்பது ஒரு பிறவியில் அல்லது சில பிறவியில் எட்டக்கூடியதல்ல ! எவ்வளவோ வளர்ந்த நபரிடமிருந்து சந்தர்ப்பம் வாய்த்தவுடன் தீமை பொத்துக்கொண்டு வந்துவிடுகிறது ! கலியுக முடிவில் நியாயத்தீர்ப்பு நாளன்று முடிந்த அளவு தங்களோடு மனித ஆத்துமாக்கள் அழிக்க படவேண்டும் என்பதில் அசுர சக்திகள் தீவிரமாக செயல்படுகின்றன ! அவை மனிதனுக்குள் உள்ள ஒரு சின்ன தீய விசயத்தையும் அதற்குரிய சந்தர்ப்ப சூழ்னிலையை உருவாக்கி ஊக்குவித்து விடுகின்றன ! ஆனாலும் தவறுகளுக்கு மனித ஆத்துமாக்கள் மட்டும் காரணமல்ல என்பதால் இறைபயம் உள்ளார்ந்த பக்தி என்ற ஒன்றுமட்டும் இருந்தால் போதுமானது ! எவ்வளவு கீழான இயல்புள்ள ஆத்துமாவையும் அதன் பக்தி காரணமாக நேசிக்கிற -- விடாமுயற்சியுள்ள சலிப்படையாத சற்குருனாதர் கடவுளின் பிரதினிதியாக இருந்து நம்மை தேற்றுகிறார் ! ஆத்துமாக்கள் அழிவுக்குள்ளாகதபடி ``சதிபதி`` பாசமானது பரமாத்துமாவால் நம் மீது வெளிப்படுத்தப்படுகிறது !

(மாற்கு 10:27) இயேசு அவர்களைப் பார்த்து: மனுஷரால் இது கூடாததுதான்; கடவுளால் இது கூடாததல்ல; கடவுளாலே எல்லாம் கூடும் என்றார்.!


சிலைவேட சேவற் கொடியோனே
திருவாணி கூடற் ...... பெருமாளே.


ஆத்துமா ஞானவளர்ச்சி அடையும்போது ஒன்றை விட்டால் இன்னொன்று வெளிப்பட்டு பூதகரமாய் அழுத்திக்கொள்ளுகிறது ! சூரனை அழிக்க அழிக்க அவன் இன்னொரு வேடமெடுத்துவிடுகிறான் என்பது அதுவே ! ஒவ்வொரு மாயையையும் வெளிப்பட்ட உடன் அதிலிருந்து விடுபடமுடியாமல் ஆத்துமா அதனால் பீடிக்கபட்டு தேங்கி விடுகிறது !இந்த தேக்கனிலைமை சிலையைப்போன்றது ! ஒரு சிலை என்பதும் பாடுபாட்டு செதுக்கியே உருவாக்குகிறார்கள் ! அதன் பிறகோ அது வைத்த இடத்தில் அப்படியே நின்றுகிடக்கிறது ! பாடுபட்டு வளர்ந்த ஆத்துமா மீண்டும் ஒரு தேக்கத்தில் போய் மாட்டிக்கொள்ளுகிறது ! இந்த சிலை தண்மையை வேட்டையாடுவதற்கென்றே பல உபகுருனாதர்களான சேவல்களை -- நன்மையோ தீமையோ செய்து நமக்கு படிப்பினை உண்டாக்குகிற சேவல்கள் பல சற்குருவால் அணுப்பபட்டு கொண்டே இருக்கிறது ! ஆத்துமாக்களை விழிப்படைய செய்தல் என்பதை பறை சாற்றூவதே சேவல் கொடியாகும் ! அப்படிப்பட்ட தேற்றுகிற பணியால் நமது ஆத்துமாவில் கடவுளின் அருளும் எத்தனை பிறவியெடுத்தாலும் மாறாமல் ஆணியாக அறையப்பட்ட ஞானமும் கூடிகூடி பெருகிவரும்படியாக யுகபுருஸணானவர் பார்த்துக்கொள்ளுகிறார் !


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக