புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சீமான் -ஈழ ஆதரவாளர் எனக் "காட்டிக் கொள்ள" வில்லை Poll_c10சீமான் -ஈழ ஆதரவாளர் எனக் "காட்டிக் கொள்ள" வில்லை Poll_m10சீமான் -ஈழ ஆதரவாளர் எனக் "காட்டிக் கொள்ள" வில்லை Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
சீமான் -ஈழ ஆதரவாளர் எனக் "காட்டிக் கொள்ள" வில்லை Poll_c10சீமான் -ஈழ ஆதரவாளர் எனக் "காட்டிக் கொள்ள" வில்லை Poll_m10சீமான் -ஈழ ஆதரவாளர் எனக் "காட்டிக் கொள்ள" வில்லை Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
சீமான் -ஈழ ஆதரவாளர் எனக் "காட்டிக் கொள்ள" வில்லை Poll_c10சீமான் -ஈழ ஆதரவாளர் எனக் "காட்டிக் கொள்ள" வில்லை Poll_m10சீமான் -ஈழ ஆதரவாளர் எனக் "காட்டிக் கொள்ள" வில்லை Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
சீமான் -ஈழ ஆதரவாளர் எனக் "காட்டிக் கொள்ள" வில்லை Poll_c10சீமான் -ஈழ ஆதரவாளர் எனக் "காட்டிக் கொள்ள" வில்லை Poll_m10சீமான் -ஈழ ஆதரவாளர் எனக் "காட்டிக் கொள்ள" வில்லை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சீமான் -ஈழ ஆதரவாளர் எனக் "காட்டிக் கொள்ள" வில்லை Poll_c10சீமான் -ஈழ ஆதரவாளர் எனக் "காட்டிக் கொள்ள" வில்லை Poll_m10சீமான் -ஈழ ஆதரவாளர் எனக் "காட்டிக் கொள்ள" வில்லை Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
சீமான் -ஈழ ஆதரவாளர் எனக் "காட்டிக் கொள்ள" வில்லை Poll_c10சீமான் -ஈழ ஆதரவாளர் எனக் "காட்டிக் கொள்ள" வில்லை Poll_m10சீமான் -ஈழ ஆதரவாளர் எனக் "காட்டிக் கொள்ள" வில்லை Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
சீமான் -ஈழ ஆதரவாளர் எனக் "காட்டிக் கொள்ள" வில்லை Poll_c10சீமான் -ஈழ ஆதரவாளர் எனக் "காட்டிக் கொள்ள" வில்லை Poll_m10சீமான் -ஈழ ஆதரவாளர் எனக் "காட்டிக் கொள்ள" வில்லை Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
சீமான் -ஈழ ஆதரவாளர் எனக் "காட்டிக் கொள்ள" வில்லை Poll_c10சீமான் -ஈழ ஆதரவாளர் எனக் "காட்டிக் கொள்ள" வில்லை Poll_m10சீமான் -ஈழ ஆதரவாளர் எனக் "காட்டிக் கொள்ள" வில்லை Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீமான் -ஈழ ஆதரவாளர் எனக் "காட்டிக் கொள்ள" வில்லை


   
   
avatar
Guest
Guest

PostGuest Sat Oct 27, 2012 10:20 am

பேராசிரியர் சுப. வீரபாண்டியனுக்கு புலம்பெயர் தமிழ்மக்களிடையே ஓரளவு நல்ல பெயர் இருக்கிறது. நல்ல தமிழ் உணர்வாளர். பகுத்தறிவாளர். ஆனால் அவர் கருண...ாநிதி சொல்வதற்கு எல்லாம் கோயில் மாடுபோல தலையை எப்போது ஆட்டத்தொடங்கினார
ோ அன்று தொடக்கம் அரசியல்வாதி சுப. வீரபாண்டியனை யாரும் கணக்கில் எடுப்பதில்லை. கருணாநிதி வி.புலிகளை பயங்கரவாதப் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று தமிழ்நாடு சார்பாக இசைவு கொடுத்தவர்.

ஒருமுறை அல்ல பலமுறை. வன்முறை எனக்குப் பிடிக்காது வி.புலிகளுக்குக் கொடுத்த ஆதரவை எப்போதோ (திமுக) விலக்கிக் கொண்டு விட்டோம் என்று சட்ட சபையிலும் அதற்கு வெளியிலும் சொல்லித் திரிந்தவர். தேசியத் தலைவரின் 80 அகவைத் தாயார் மருத்துவத்துக்கு வந்த போது விமான நிலையத்தில் வைத்துத் திருப்பி அனுப்பியதற்கு உடைந்தையாக இருந்தவர். மீண்டும் வருவதற்கு ஏகப்பட்ட நிபந்தனைகளை அடுக்கியவர். அவர்தான் இன்று வீரபாண்டியனாரது அரசியல் குரு, தலைவர் எல்லாமே!

போகட்டும். இப்போது இளையராசாவுக்கு பேராசிரியர் பல்லக்குத் தூக்க வேண்டிய அவசியம் என்ன? அவரை யார் தமிழ்த் துரோகிகள் என்கிறார்கள். நொவம்பர் மாதம் வேண்டாம் நிகழ்ச்சியை ஒக்தோபரில் வைத்துக் கொள்ளுங்கள் அல்லது டிசெம்பரில் வைத்துக் கொள்ளுங்கள் என்றுதான் சீமான் போன்றோர் கேட்கிறார்கள். நொவெம்பர் மாதம் முழுதும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்தை புலம்பெயர் தமிழர்கள் இயன்றளவு தவிர்த்தே வருகின்றனர். குறிப்பாக மாவீரர் வாரத்திலும், கட்டாயமாக நொவெம்பர் 25,26,27 மூன்று நாளிலும் தவிர்த்துக் கொள்கிறார்கள்.

எனது வாதம் நொவெம்பர் மாதத்தில் மட்டுமல்ல எந்த மாதத்திலும் இளையராசாவின் இசை நிகழ்ச்சி இடம்பெறக்கூடாது என்பதுதான். எமது சொந்தங்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லபட்டபோது உரோம் எரிந்து கொண்டிருக்கும் போது பிடில்வாசித்துக் கொண்டிருந்த நீரோ மன்னன் போல முள்ளிவாய்க்கால் எரிந்து கொண்டிருந்த போது இளையராசா ஆர்மோனியம் வாசித்துக் கொண்டிருந்தார்.

திரையுலகக் கலைஞர்கள் நடத்திய போராட்டங்களில் ஒன்றிலேனும் அவர் பங்கு கொள்ளாதவர். அய்ந்து மொழிகள், 950 படங்கள், 4,000 பாடல்களுக்கு இசையமைத்த இளையராசா ஒரு எழுச்சிப் பாடலுக்கு இசையமைக்க வில்லை. சாதியை ஒழித்து தமிழ் சமூகத்தில் பார்ப்பனிய ஆதிக்கத்தை ஒழித்துக் கட்டிய பெரியார் பெயரில் எடுக்கப்பட்ட படத்துக்கு இசை அமைக்க மறுத்தவர்!

மாவீரர் நாள் என்பது அழுவதற்காக அன்று, மீண்டும் மீண்டும் எழுவதற்காக என்பதைப் புலிகளும், ஈழ மக்களும் நன்கறிவார்கள். �மொழியாகி, எங்கள் மூச்சாகி, நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி' என்று மொழியின் பெயரிலும், அடுத்ததாக, வழிகாட்டும் தலைவரின் பெயரிலும், அதற்கடுத்து, விழிமூடித் துயில்கின்ற மாவீரர்கள் பெயரிலும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டு, மீண்டும் தங்களின் இன விடுதலைக்காகத் தங்களைத் தாங்களே புதுப்பித்துக் கொள்ளும் நாள்தான் மாவீரர் நாள். ஆண்டு முழுவதும் போராளிகளையும், பொதுமக்களையும் அந்த ஈழ மண் இழந்திருந்தாலும், இயக்கத்தின் முதல் பலி நடைபெற்ற நாளை ஓர் அடையாளமாக மட்டுமே புலிகள் இயக்கம் அறிவித்தது முற்றிலும் உண்மைதான். ஆனால் மாவீரர் நாளன்று தங்கள் பிள்ளைகளை விடுதலைத் தீக்கு ஆகுதி செய்த தாய் - தந்தையர்கள் அவர்களது கல்லறையில் வீழ்ந்து கதறி அழும் காட்சிகள்தான் இடம்பெற்றன. மாவீரர் காணொளியைப் பார்த்தவர்களுக்கு அந்த நெஞ்சைப் பிளக்கும் காட்சிகள் மனதில் ஆழமாக பதிந்துள்ளன.

"1988ஆம் ஆண்டு, 'ஈழ மக்களைக் கொல்லாதே, இந்திய இராணுவமே திரும்பி வா' என்ற கோரிக்கையை முன்வைத்து, �ஈழத்தமிழர் உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பு' கையெழுத்து இயக்கம் ஒன்றை நடத்தியது. பல்வேறு துறைகளைச் சார்ந்த புகழ்பெற்ற 300 பேர் அவ்வறிக்கையில் கையொப்பமிட்டனர். நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ணய்யர், முரசொலி மாறன், சுரதா, வைரமுத்து, மு.மேத்தா, சுந்தரராமசாமி, அசோகமித்திரன், ஞாநி, பாலுமகேந்திரா, கலைப்புலி தாணு உள்ளிட்ட பலர் அன்று கையொப்பமிட்டனர். அந்த வரிசையில் ஒருவராய், இளையராசாவும் கையெழுத்திட்டிருந்தார் என்பதைப் புதிதாய்ப் புறப்பட்டிருக்கும் ஈழ ஆதரவாளர்கள் அறிவார்களா?" என்று வீரபாண்டியனார் வாள் சுற்றுகிறார்!

ஆக 1988 ஆம் ஆண்டு பத்தோடு பதினொன்றாக இளையராசா கையெழுத்து இட்டுள்ளார் எனவே அவர் பெரிய தமிழ்த் தேசியவாதி என்று பேராசிரியர் அவருக்கு சான்றிதழ் வழங்குகிறார். இது பசித்த பண்டிதர் பழம் பஞ்சாங்கத்தைப் பார்த்த கதை போன்றது. பாவம் பேராசிரியர். அதற்கு மேல் இளையராசாவின் "தமிழ்த் தேசியக் கற்பை" எண்பிக்க அவரிடம் வேறு சான்று அல்லது சான்றுகள் எதுவும் இல்லை. எனது கேள்வி என்னவென்றால் அதற்குப் பின்னர் கடந்த கால்நூற்றாண்டு காலமாக இளையராசா என்ன செய்தார் என்பதுதான். கண்ணுக்கு எட்டிய தூரத்தில் கூட அவரைப் பார்க்க முடியவில்லையே? மீளாத தூக்கத்தில் அல்லவா இளையராசா இருந்தார்?

" எப்போதும் ஈழவிடுதலை போன்ற நியாயமான கோரிக்கைகளை நோக்கி, வெவ்வேறு துறைகளிலும் உள்ள பலரையும் நாம் ஈர்க்க வேண்டும். அதுதான் அக்கோரிக்கைக்கு நாம் உண்மையாக இருக்கிறோம் என்பதற்கான அடையாளம். எல்லோரையும் அடித்துத் துரத்துவதும், துரோகிகளாகக் காட்ட முயல்வதும், நாம் முன்னெடுக்கும் கோரிக்கையின் வலிமையைக் குறைக்கும்" என்று பேராசிரியர் புதிய கீதா உபதேசம் செய்கிறார். அது சரியென்றால் நாங்கள் டக்லஸ் தேவானந்தா, கருணா, பிள்ளையான் போன்றவர்களையும் துரோகிகளாகக் காட்ட முயலக் கூடாது! அவர்களைத் துரத்தாது, ஓரங்கட்டாது சேர்த்துக் கொள்ள வேண்டும்!

பேராசிரியர் குறளைத் தலை கீழாகப் படித்தவர். பகையறிதல், உட்பகை பற்றி வள்ளுவர் இரண்டு அதிகாரமே எழுதியிருக்கிறார்.

முள்மரத்தை முதலிலேயே வெட்டி விடுவது சுலபம். வளர்ந்த பிறகு அதை வெட்டினால் அதனால் கைக்குத்தான் சேதம் ஏற்படும் என்கிறார்.

இளையராசா கனடாவுக்கு தமிழிசை வளர்க்க வரவில்லை. இரண்டு கோடி வாங்கிக் கொண்டுதான் வருகிறார். அதாவது இசையை பணம் பண்ணும் ஏதனமாக்கியுள்ளார். "கடல்கடந்து வாழும் உங்களைப் பார்க்க கடல் கடந்து" இளையராசா வருவது முழுக்க முழுக்க வணிக நோக்கோடுதான். அவரை அழைத்தவர்களும் அதே நோக்கோடு தான் வரவழைத்துள்ளார்கள். வன்னியில் வாழ்வாதாரங்கள் அனைத்தையும் இழந்து அல்லல்பட்டு அழுது கண்ணீர்விடும் எமது சொந்தங்களின் வாழ்வில் ஒரு சின்ன ஒளிக் கீற்றையாவது ஏற்றி வைக்க அவர் வரவில்லை! இதனைப் பேராசிரியர் தயவு செய்து புரிந்து கொள்ள வேண்டும்.

"தாங்கள் மட்டுமே ஈழ ஆதரவாளர்கள் என்று காட்டிக்கொள்ள முயலும் சிலரின் மலிவான உத்திதான் இது. ஈழ ஆதரவு என்பது எவர் ஒருவருக்கும் �மொத்தக் குத்தகைக்கு' விடப்படவில்லை" என்கிறார் பேராசிரியர். செந்தமிழன் சீமான், இயக்குநர் செல்வமணி போன்றோரை மனதில் வைத்துத்தான் இந்தச் சொல்லம்பை பேராசிரியர் தொடுக்கிறார் என்பதில் எந்த அய்யமும் இல்லை. சீமான் போன்றோர் ஈழ ஆதரவாளர்கள் எனக் "காட்டிக் கொள்ள" வில்லை. அதனை எண்பித்துள்ளார்கள்.

தமிழினத் தலைவர் ஆட்சிக் கட்டிலில் கொலுவீற்றிருந்த காலத்திலேயே மூன்று முறை சிறைப்பிடிக்கப்பட்டு சிறைவாசம் அனுபவித்தவர். கடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியை தமிழகத்தில் வீழ்த்திக் காட்டியவர். மனம், வாக்குக் காயம் மூன்றினாலும் ஈழவிடுதலைக்குப் பாடுபடுகிறார். இன்று ஈழவிடுதலைத் தீ தமிழ்நாட்டில் கொளுந்து விட்டு எரிகிறதென்றால் அதற்கு சீமான், வைகோ போன்றவர்கள்தான் பேரளவு காரணம். பேராசிரியர்தான் தெசோ மாநாட்டில் ஈழம் என்ற சொல்லை காங்கிரஸ் கட்சி கேட்டுக் கொண்டதன் பேரில் உச்சரிக்காது விட்டவர்!

முடிவாக மீண்டும் வள்ளுவர் சொன்னதை பேராசிரியருக்கு நினைவு படுத்த விரும்புகிறேன்.

ஒத்தறிவான் உயிர் வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும். (குறள் 214)

இந்தக் குறளுக்கு "இலக்கணமாகவும் இலக்கியமாகவும்" விளங்குபவா இளையராசா. அவரது கனடா வருகை அவரது முகத்திரையை விலக்கவும் அவரது மறுபக்கத்தை மக்கள் பார்க்கவும் உதவியுள்ளது.

--
முக நூல்

avatar
Guest
Guest

PostGuest Sat Oct 27, 2012 10:24 am

இந்த கட்டுரை நோக்கம் இளையராசா அவர்களுக்கும் , சீமான் அண்ணனுக்கும் சண்டை மூட்ட எழுத பட்டது அல்ல .. இரு ஆடுகளை மோத விட்டு நடுவில் வழியும் ரத்தத்தை குடிக்க துடிக்கும் தமிழ் இன துரோகிகளை உங்களுக்கு காட்டவே ...

sureshyeskay
sureshyeskay
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 19/10/2012

Postsureshyeskay Sat Oct 27, 2012 10:47 am

Translation :
Who knows what's human life's befitting grace,
He lives; the rest 'mongst dead men have their place.
Explanation :
He truly lives who knows (and discharges) the proper duties (of benevolence). He who knows them not will be reckoned among the dead.
மு.வ உரை :
ஒப்புரவை அறிந்து போற்றிப் பிறர்க்கு உதவியாக வாழ்கின்றவன் உயிர்வாழ்கின்றவன் ஆவான், மற்றவன் செத்தவருள் சேர்த்துக் கருதப்படுவான்.
நன்றி: எழுத்து டாட் காம்


சென்னையன்
சென்னையன்
பண்பாளர்

பதிவுகள் : 161
இணைந்தது : 14/10/2012

Postசென்னையன் Sat Oct 27, 2012 6:43 pm

புரட்சி wrote:இந்த கட்டுரை நோக்கம் இளையராசா அவர்களுக்கும் , சீமான் அண்ணனுக்கும் சண்டை மூட்ட எழுத பட்டது அல்ல .. இரு ஆடுகளை மோத விட்டு நடுவில் வழியும் ரத்தத்தை குடிக்க துடிக்கும் தமிழ் இன துரோகிகளை உங்களுக்கு காட்டவே ...
உங்கள் கருத்தை நான் ஏற்று கொள்கிறேன்.ஆனால் உண்மை என்னவெனில் ஒரு பழமொழி உண்டு.
ஊர் ரெண்டுப்பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்.என்று.

ஆனந்த கூத்தாட வேண்டியவர்களை {ஈழ தமிழர்கள்] விட இரண்டு மண்ணிலும் உள்ளவர்கள் ஆனந்த கூத்தாடுகிறார்கள் என்பது தான் உண்மை.



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக