புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ரங்கராஜன் குறிப்புகள் - Page 2 Poll_c10ரங்கராஜன் குறிப்புகள் - Page 2 Poll_m10ரங்கராஜன் குறிப்புகள் - Page 2 Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
ரங்கராஜன் குறிப்புகள் - Page 2 Poll_c10ரங்கராஜன் குறிப்புகள் - Page 2 Poll_m10ரங்கராஜன் குறிப்புகள் - Page 2 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
ரங்கராஜன் குறிப்புகள் - Page 2 Poll_c10ரங்கராஜன் குறிப்புகள் - Page 2 Poll_m10ரங்கராஜன் குறிப்புகள் - Page 2 Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
ரங்கராஜன் குறிப்புகள் - Page 2 Poll_c10ரங்கராஜன் குறிப்புகள் - Page 2 Poll_m10ரங்கராஜன் குறிப்புகள் - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ரங்கராஜன் குறிப்புகள் - Page 2 Poll_c10ரங்கராஜன் குறிப்புகள் - Page 2 Poll_m10ரங்கராஜன் குறிப்புகள் - Page 2 Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
ரங்கராஜன் குறிப்புகள் - Page 2 Poll_c10ரங்கராஜன் குறிப்புகள் - Page 2 Poll_m10ரங்கராஜன் குறிப்புகள் - Page 2 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
ரங்கராஜன் குறிப்புகள் - Page 2 Poll_c10ரங்கராஜன் குறிப்புகள் - Page 2 Poll_m10ரங்கராஜன் குறிப்புகள் - Page 2 Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
ரங்கராஜன் குறிப்புகள் - Page 2 Poll_c10ரங்கராஜன் குறிப்புகள் - Page 2 Poll_m10ரங்கராஜன் குறிப்புகள் - Page 2 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரங்கராஜன் குறிப்புகள்


   
   

Page 2 of 2 Previous  1, 2

Rangarajan Sundaravadivel
Rangarajan Sundaravadivel
பண்பாளர்

பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012

PostRangarajan Sundaravadivel Wed Oct 24, 2012 4:11 pm

First topic message reminder :


(அவ்வப்போது படித்த புத்தகங்கள், பார்த்த திரைப்படங்கள், உரையாடிய கருத்துகள் போன்றவற்றைப் பற்றிய எனது அனுபவங்களை இத்திரியில் தொடர்ந்து பகிர விரும்புகிறேன். தோழர்கள் தங்கள் கருத்துகளைப் பதிவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.)


Five Past Midnight in Bhopal - Dominique Lapierre, Javier Moro
நள்ளிரவில் சுதந்திரம் (Freedom At Midnight) நூலின் ஆசிரியர்களுள் ஒருவரான டொமினிக் லேப்பியரும், Mountain Of Buddha நூலின் ஆசிரியரும் இணைந்து இந்நூலைப் படைத்துள்ளனர். ஒரு வரலாற்று நூல் என்ற அளவில் மிகக் கடுமையான ஆய்வுடன் இந்நூல் செதுக்கப்பட்டிருக்கிறது என்றே சொல்லலாம்.

"அனைத்து தொழில்நுட்ப முயற்சிகளிலும் மனிதனின் பாதுகாப்பே முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டும். உங்கள் வரைபடங்களுக்கும் சமன்பாடுகளுக்குமிடையில் இதை மறக்காதீர்கள்" என்ற ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மேற்கோளுடன் தொடங்குகிறது இந்நூல்.

தொடர்ந்து ஒரிசாவிலிருந்து பஞ்சம்பிழைக்க வந்த ஒரு குடும்பத்தின் கதையையும், யூனியன் கார்பைடு நிறுவனம் உருவான கதையையும் அடுத்தடுத்த அத்தியாயங்களில் கொண்டு செல்கிறது இந்நூல்.

ராஜ்குமார் கேஷ்வானி என்ற நிருபர் முதன்முதலில் அத்தொழிற்சாலையின் அபாயத்தை வெளிப்படுத்தியதையும், அதை யாரும் கவனிக்காததையும் நூல் கூறுகிறது. தொடர்ந்து ஒரு பணியாளர் இறந்ததையும், சிலர் காயமடைந்திருக்கிறார்கள். அப்பொழுது அந்த மாநில அமைச்சர் ஒருவர் அந்த தொழிற்சாலை பாதுகாப்பானது என்று கூறியிருக்கிறார். அப்பொழுது முதல்வராயிருந்த அர்ஜுன்சிங் மக்களின் பாதுகாப்பில் காட்சிய அலட்சியமும் நூலில் வெளிப்படுத்தப்படுகிறது. (அதே அர்ஜுன் சிங் பிற்பாடு மத்திய அமைச்சரவையில் பணியாற்றினார். இத்தகைய அபூர்வங்களை இந்தியர்களால் மட்டுமே சகிக்க முடியும்)

நூலைப் படித்து முடித்த பிறகு தோன்றியது, "வரலாறு மீண்டும் வருகிறது". கூடங்குளத்திலும் இத்தகைய விஷயங்களே நடந்தேறுகின்றன. இறுதியாக ஒரு கேள்வி எழுந்தது. மக்களின் பிணங்களின் மீதான் தொழில்மயமாக்கலும் வளர்ச்சியும் தேவையா?






கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.

Rangarajan Sundaravadivel
Rangarajan Sundaravadivel
பண்பாளர்

பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012

PostRangarajan Sundaravadivel Fri Oct 26, 2012 6:41 pm


வில் டுரன்ட் தனது Story of Philosophy என்ற நூலில் பிளேட்டோ விரும்பிய அரசியல் முறையைப் பற்றி குறிப்பிடுகிறார்.

இம்முறைப்படி பெற்றோர்களின் பழக்கவழக்கங்கள் குழந்தையிடம் படியாமல் இருக்க அவர்களைச் சிறு வயதிலேயே பெற்றோரிடமிருந்து பிரித்து கல்வி நிலையத்துக்கு அனுப்பி விடுவார்கள். அங்கு ஆரம்ப வருடங்களில் அவர்களுக்கு உடல் வலிவூட்டும் பயிற்சிகள் அளிக்கப்படும். பின்பு இசைப்பயிற்சி அளிக்கப்படும். அதற்குப் பின்பு அவர்களுக்கு கணிதம், வரலாறு முதலிய பாடங்கள் கற்றுக் கொடுக்கப்படும். இவை முடிந்த பின்பு முதல் சுற்றுத் தேர்வு நடக்கும். அதில் தோல்வியடைந்தவர்கள் வெளியேற்றப்படுவார்கள். அவர்கள் விவசாயிகளாகவும், வணிகர்களாகவும், கைவினைஞர்களாகவும் மாறுவார்கள்.

அடுத்து வெற்றியடைந்தவர்களுக்கு இன்னும் பத்து வருடம் கல்வி அளிக்கப்படும். அதற்குப் பின்பு நடக்கும் தேர்வில் தோல்வியடைந்தவர்கள் அரசு, ராணுவ அதிகாரிகளாக நியமிக்கப்படுவார்கள்.

இவ்வனைத்துத் தேர்வுகளிலும் வெற்றியடைந்தவர்களுக்கு அடுத்த வருடங்களில் தத்துவப்பயிற்சி, சிறப்பாக அரசியலில் அளிக்கப்படும். அவர்களுக்கு முப்பத்தி ஐந்து வயதாகும் போது, அவர்கள் கல்வி நிலையத்தில் இருந்து வெளியேற்றப்படுவார்கள். அதற்கு மேல் பதினைந்து வருடங்கள் அவர்கள் ஏதேனும் ஒரு வகையில் உழைத்து வாழ்க்கைப் பயிற்சி அடைய வேண்டும். இந்த பதினைந்து வருடமும் தாக்குப்பிடித்தவர்களுக்கு ஆட்சிப் பொறுப்புகள் அளிக்கப்பட வேண்டும். இம்முறையை எதிர்த்து யாரும் கிளர்ச்சி செய்யாமல் இருக்க கடவுள் பெயரைச் சொல்லி பயமுறுத்த வேண்டும் என்கிறார் பிளேட்டோ.

இதைப் படிக்கும் போது எனக்கு சில விஷயங்கள் தோன்றின. ஒரு மருத்துவர் மருத்துவம் படித்து அதற்கான பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். இல்லையென்றால் போலி மருத்துவர் என்கிறோம். ஒரு வழக்கறிஞருக்கும் அதே நிலை தான். ஏன் நம்மை ஆளப் போகிறவர்கள் மீது நமக்கு இத்தகைய எதிர்பார்ப்புகள் இல்லை? உண்மையைச் சொல்லப் போனால் ஜனநாயகத்தின் சிறப்பும் அது தான், சாபக் கேடும் அது தான். "யார் வேண்டுமானாலும் ஆட்சியாளராகலாம்".

அவர்களுக்குத் தேவை மக்களின் ஆதரவு மட்டுமே. ஆனால் நாம் எத்தகையோரை ஆதரிக்கிறோம்? திரையுலகக் கதாநாயகர்களைத் தான். கதாநாயக வழிபாடுகளும், பிம்பங்களும் இச்சமூகத்தின் இரத்தவோட்டத்தில் அழுக்காக மாறிப் போய்க் கிடக்கிறது.

உண்மையில் நமக்கு நல்ல ஆட்சியாளர்கள் வேண்டுமானால் நாம் செய்ய வேண்டிய விஷயங்கள் என நான் கருதுபவை இவை:

1. கதாநாயக வழிபாடு என்னும் நோய் இச்சமூகத்தில் இருந்து மாற்றப்பட வேண்டும். சமூக ஆர்வமும், கலைநயமும், பொழுது போக்குத் திறனும் மிக்க படைப்புகள் வரவேற்கப்பட வேண்டும். கதாநாயக வழிபாட்டைத் தூண்டும் குப்பைகள் ஒதுக்கப்பட வேண்டும்.

2. அரசியல்வாதியிடம் நமக்கு வேறு எந்த எதிர்பார்ப்பும் இல்லாவிட்டாலும் அவரது நேர்மையிலும், செயல்திறனிலும் நமக்கு நம்பிக்கை இருக்குமாறு அவரது செயல்பாடுகள் இருக்க வேண்டும். இவரை விட அவர் குறைவாக காசு வாங்குவார், 71 லட்சம் ரூபாய் எல்லாம் ஒரு தொகையா என்பது போன்ற வாசகங்கள் இனி வரக்கூடாது.

3.எல்லாவற்றுக்கும் மேலாக நாம் நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும். சிறு சிறு விஷயங்களில் இருந்து தான் பெரிய மாற்றங்கள் ஏற்படும். "மக்கள் முட்டாள்களாக இருக்கும் வரை அவர்களை ஆள்பவர்கள் அயோக்கியர்களாகத் தான் இருப்பார்கள்", என்று எங்கோ எப்போதோ படித்த ஒரு தொடர் நினைவுக்கு வந்து போகிறது.





கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக