புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நவராத்திரிக்காக கவிதைகள் சில Poll_c10நவராத்திரிக்காக கவிதைகள் சில Poll_m10நவராத்திரிக்காக கவிதைகள் சில Poll_c10 
52 Posts - 61%
heezulia
நவராத்திரிக்காக கவிதைகள் சில Poll_c10நவராத்திரிக்காக கவிதைகள் சில Poll_m10நவராத்திரிக்காக கவிதைகள் சில Poll_c10 
24 Posts - 28%
வேல்முருகன் காசி
நவராத்திரிக்காக கவிதைகள் சில Poll_c10நவராத்திரிக்காக கவிதைகள் சில Poll_m10நவராத்திரிக்காக கவிதைகள் சில Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
நவராத்திரிக்காக கவிதைகள் சில Poll_c10நவராத்திரிக்காக கவிதைகள் சில Poll_m10நவராத்திரிக்காக கவிதைகள் சில Poll_c10 
3 Posts - 4%
viyasan
நவராத்திரிக்காக கவிதைகள் சில Poll_c10நவராத்திரிக்காக கவிதைகள் சில Poll_m10நவராத்திரிக்காக கவிதைகள் சில Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
நவராத்திரிக்காக கவிதைகள் சில Poll_c10நவராத்திரிக்காக கவிதைகள் சில Poll_m10நவராத்திரிக்காக கவிதைகள் சில Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நவராத்திரிக்காக கவிதைகள் சில Poll_c10நவராத்திரிக்காக கவிதைகள் சில Poll_m10நவராத்திரிக்காக கவிதைகள் சில Poll_c10 
244 Posts - 43%
heezulia
நவராத்திரிக்காக கவிதைகள் சில Poll_c10நவராத்திரிக்காக கவிதைகள் சில Poll_m10நவராத்திரிக்காக கவிதைகள் சில Poll_c10 
221 Posts - 39%
mohamed nizamudeen
நவராத்திரிக்காக கவிதைகள் சில Poll_c10நவராத்திரிக்காக கவிதைகள் சில Poll_m10நவராத்திரிக்காக கவிதைகள் சில Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
நவராத்திரிக்காக கவிதைகள் சில Poll_c10நவராத்திரிக்காக கவிதைகள் சில Poll_m10நவராத்திரிக்காக கவிதைகள் சில Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
நவராத்திரிக்காக கவிதைகள் சில Poll_c10நவராத்திரிக்காக கவிதைகள் சில Poll_m10நவராத்திரிக்காக கவிதைகள் சில Poll_c10 
13 Posts - 2%
prajai
நவராத்திரிக்காக கவிதைகள் சில Poll_c10நவராத்திரிக்காக கவிதைகள் சில Poll_m10நவராத்திரிக்காக கவிதைகள் சில Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நவராத்திரிக்காக கவிதைகள் சில Poll_c10நவராத்திரிக்காக கவிதைகள் சில Poll_m10நவராத்திரிக்காக கவிதைகள் சில Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
நவராத்திரிக்காக கவிதைகள் சில Poll_c10நவராத்திரிக்காக கவிதைகள் சில Poll_m10நவராத்திரிக்காக கவிதைகள் சில Poll_c10 
7 Posts - 1%
Guna.D
நவராத்திரிக்காக கவிதைகள் சில Poll_c10நவராத்திரிக்காக கவிதைகள் சில Poll_m10நவராத்திரிக்காக கவிதைகள் சில Poll_c10 
7 Posts - 1%
mruthun
நவராத்திரிக்காக கவிதைகள் சில Poll_c10நவராத்திரிக்காக கவிதைகள் சில Poll_m10நவராத்திரிக்காக கவிதைகள் சில Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நவராத்திரிக்காக கவிதைகள் சில


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Oct 19, 2012 6:17 pm


நவராத்திரி பாடல் 1

வீரத்தின் தேவி!, வெற்றியின் ஊற்றே!
வேண்டுவ தீந்துவிடு
சாரமும் கெட்டுத் தளர்ந்தவர் கண்டு
சக்தியை ஊற்றிக் கொடு
தூரத்தில் தோன்றுமச் சூரியச் சூழையில்
சொல்லொணாச் சக்தி வைத்தாய்
பாரத்தைக் கொண்டு பற்றினோம் கையைப்
பணிந்தனம் சக்திகொடு

ஆற்றுக்குவேகம் அனலுக்குதீய்ப்பு
அடித்திடும் புயற் துடிப்பு
சீற்றத்துக் காழி செழிப்பதில் பூக்கள்
சிறப்பென நீ படைத்தாய்
வீற்றிருக்குமுன் வெள்ளிமலைபோல்
வீறுடன் நாம் நிமிர
போற்றுகின்றோமெம் புன்மையழித்துப்
பூமியில் மாற்றிவிடு

சேற்றுக்குள் பூத்தால் செந்தாமரைப்பூ
சீ யென்று தள்ளுவதோ
காற்றெனும் மூச்சு காயத்தினோடு
கோபத்தைக் கொண்டிடவோ
மாற்றுக்கு ஏதும் மாறுதலின்றியே
மாவுல கோடிடுமோ
நூற்றுக்கு ஒன்றாய் நாம்வாழல்விட்டு
நிலைதனில் கெடுவதுவோ

கொட்டலாம் மேகம் குமுறலாம் ஆழி
கூரைகள் பிய்த்தெறிந்தே
பட்டதைச் சூறை பாதி முறித்தே
பலமென்று காட்டிடலாம்
வெட்டலாம் மின்னல் வீழலாம் தாரை
வெள்ளமாய் நீர் கொட்டலாம்
விட்டெலாம் நீங்கும் வேகங்கள் வாழ்வில்
வந்திடத் தேறுவமோ


சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Fri Oct 19, 2012 8:33 pm

பதமான பைந்தமிழ் பாத்து
பலகாலம் பறந்தாச்சு
பண்ணான பதமெடுத்து
பக்குமாய் பண்ணமைத்து
பாங்குடன் பண் பாடிய
பண்பான பாவலருக்கு
பணிவுடன் பாராட்டு
பாடல்கள் பரவட்டும்
பாரதி பன்மடங்கு அருளட்டும்


kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Oct 19, 2012 9:39 pm

சதாசிவம் wrote:பதமான பைந்தமிழ் பாத்து
பலகாலம் பறந்தாச்சு
பண்ணான பதமெடுத்து
பக்குமாய் பண்ணமைத்து
பாங்குடன் பண் பாடிய
பண்பான பாவலருக்கு
பணிவுடன் பாராட்டு
பாடல்கள் பரவட்டும்
பாரதி பன்மடங்கு அருளட்டும்

நன்றிகள் பல!! என் உள்ளத்திலிருந்து !!

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Oct 19, 2012 9:43 pm

2 வது கவிதை

கருணை காட்டு

அடிமனதிலெழும் கவலை
. அதையறிவ துனதுநிலை
. ஆற்றிவிடு சக்திதேவி
துடித் துளமும் துயருறவும்
. தொலைவிலிருந் தெமையறிவ
. திலைஎனவும் மறுப்பதா நீ
விடிவுகொள இவரெமது
. விளைவிலெழும் புதல்வரென
. விரும்பி எமக்கன்பை யருளி
முடிவையெடு இருகரமும்
. முகை மலரென் றிணையவுனை
. மனமுவந்து கேட்டோம் தேவி

தினம் நடந்த திங்கள்முகம்
. தனையிழந்து குறுகுதென
. தமிழ் சுவைத்து வாழ்ந்த இனமும்
தனமிழந்து தரமழிந்து
. தமிழ் குலைந்து தமையிழந்து
. தவிக்கும்வகை காண்பாய் சக்தி
மனமழிந்து வாழ்விழந்து
. மதிபிழன்று மானிடத்தின்
. மகிமைதனும் இழந்தே தேவி
கனமிழந்து வாடுமெமைக்
. காப்பதற்கு வேண்டுமுடன்
. கருணை கொண்டு காண்பாய் சக்தி


நகையிழந்த சிறுவர்முகம்
. முகையழிந்த மலர்க்கொடியும்
. சிகையிழந்த பெண்ணின் வடிவாய்
புகையிழந்த தீயுமொரு
. புனலிழந்த பொய்கையென
. வகையிழந்த வாழ்வில் இணைந்தோம்
பகையெழுந்த பூமிதனில்
. பழியெழுந்த விதமெதுவோ
. குகையொழித்த இருளும்போலே
மிகையழிய மேதினியில்
. அகமகிழ இருப்பதென்ன
. தொகையழியு முன்னர் காப்பாய்

**************************

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Oct 19, 2012 10:02 pm

நவராத்திரி பாடல் 3

தா வென்றேன்

அகிலின் புகையாய் வாசம் திகழும்
- அருமை பூவின்எழிலாய் வாழ
- அருளைத் தாவென்றேன்
துகிலும் சோரத் தாங்கும் கைகள்
- துவளும்நெஞ்சைத் தேற்றும் எண்ணம்
- தேவை கொடுவென்றேன்
மகிமை கொண்டாய் பாலை மண்ணில்
- மருளக் காணும் மானாய் ஆனோம்
- மாற்றம் செய்யென்றேன்
தகித்தே மனதில் தானென் றெண்ணம்
- தலையும் தூக்கா தென்னைக் காப்பாய்
- தமிழைக் கொடுஎன்றேன்

வளையும் கொடிகள் வாழ்வில் காணா
- வலிமை தன்னைத் தாராய் ஒளியே
- வந்தே சேரென்றேன்
துளையும் கொண்டோர் மூங்கில் குழலாய்
- துயரில் ஆடிக் கீதம் பாடித்
- தொழுதே அழுதிட்டேன்
அளையும் மனதின் அகம்பாவந்தான்
- அணியென் றென்னை அருகா துள்ளம்
- அழுக்கைக் களையென்றேன்
விளையும் பொழுதும் வீணென்றாகி
- வெயிலை போலும் வினைகள் சுடுமே
- வேண்டா மதுவென்றேன்

தழையும் கொடியும் ஆடும் உலகில்
- தலையும் மமதை கொண்டே ஆடும்
- தன்மை கொல்லென்றேன்
மழையும் வருமுன் கருமே கம்போல்
- மதியை வந்தே மூடும் இருளாம்
- மோகம் நீக்கென்றேன்
இழையும் உனது அருளால் தூறும்
- இனிமைத் துளிகள் வந்தே உள்ளம்
- எங்கும் பொலியென்றேன்
முளையில் பயிரும் மரமும் வேண்டி
- முகிலை இரக்கும் நிலையில் ஞான
- முதலே தாவென்றேன்

பிழியும் சோகம் விட்டேன் உள்ளப்
- பிறள்வை நீக்கிப் பின்னும் வாழப்
- பெரிதும் உதவென்றேன்
பழியும்தீரப் பகையுபோகப்0
- பணியும் மனதில் பலமும்தந்து
- பண்பை ஊட்டென்றேன்
அழியும் தீமை போகும் மிருளென்
- றாடும்காற்றில் அகலின்சுடராய்
- அன்பைக் கொடுவென்றேன்
இழியும் வண்ணம் இன்றிக் கால்கள்
- இறைமைகொண்டோர் தேசம்ஒன்றில்
- இருக்கும் நிலைகேட்டேன்

************************


நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Mon Oct 22, 2012 9:50 am

மிகவும் நன்று. தங்கள் கவிதைகள் பாரதியின் கவிதைகளை போன்று உள்ளன. பாராட்டுக்கள்.






Uploaded with ImageShack.us
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed Nov 14, 2012 4:48 pm

நாகசுந்தரம் wrote:மிகவும் நன்று. தங்கள் கவிதைகள் பாரதியின் கவிதைகளை போன்று உள்ளன. பாராட்டுக்கள்.


மிக்க நன்றிகள்!!

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Nov 14, 2012 9:49 pm

நகையிழந்த சிறுவர்முகம்
. முகையழிந்த மலர்க்கொடியும்
. சிகையிழந்த பெண்ணின் வடிவாய்
புகையிழந்த தீயுமொரு
. புனலிழந்த பொய்கையென
. வகையிழந்த வாழ்வில் இணைந்தோம்
பகையெழுந்த பூமிதனில்


உங்கள் கவிதை உணர்வை சாடிய விதம் அருமை

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Nov 15, 2012 3:05 am

பூவன் wrote:நகையிழந்த சிறுவர்முகம்
. முகையழிந்த மலர்க்கொடியும்
. சிகையிழந்த பெண்ணின் வடிவாய்
புகையிழந்த தீயுமொரு
. புனலிழந்த பொய்கையென
. வகையிழந்த வாழ்வில் இணைந்தோம்
பகையெழுந்த பூமிதனில்


உங்கள் கவிதை உணர்வை சாடிய விதம் அருமை

மிக்க நன்றிகள் பூவன்!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக