புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 16 Poll_c10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 16 Poll_m10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 16 Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 16 Poll_c10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 16 Poll_m10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 16 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 16 Poll_c10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 16 Poll_m10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 16 Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 16 Poll_c10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 16 Poll_m10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 16 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 16 Poll_c10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 16 Poll_m10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 16 Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 16 Poll_c10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 16 Poll_m10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 16 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 16 Poll_c10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 16 Poll_m10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 16 Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 16 Poll_c10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 16 Poll_m10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 16 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்


   
   

Page 16 of 24 Previous  1 ... 9 ... 15, 16, 17 ... 20 ... 24  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 03, 2009 3:27 pm

First topic message reminder :

போலீஸாரால் கைது செய்யப்படுவதை அரசியல்வாதிகள் விரும்புவது ஏன் ?


அரசியல்வாதி என்றால் ( மக்களுக்காக ! ). ஒருமுறையாவது ஜெயிலுக்குப் போயிருக்க வேண்டும் என்கிற அபத்தமான தகுதி இங்கு உண்டு. ( சுதந்திரப் போராட்டம் என்பது வேறு !). ஆகவேதான் ஏதாவது போராட்டத்தை ஆரம்பித்து, சில நாட்கள் ( மட்டுமே !) ஜெயிலில் இருந்து விட்டு வருவார்கள். சில அரசியல்வாதிகள் வேறு குற்றங்களுக்காக ( எப்போதாவது ) கைது செய்யப்படுவதும் உண்டு. அப்போதும் வேனில் ஏறும் போது, "" அடக்குமுறை வீழ்க !'' என்று கூவி, தெருவில் கூடியிருக்கும் மக்களைத் திசை திருப்புவார்கள் !


avatar
Guest
Guest

PostGuest Sat Sep 25, 2010 12:07 pm

கலை wrote:ஒரு அருமையான திரி வீண் அரட்டையால் அவலமான சோகம் போக்க நீங்களாவது தொடர்ந்தீர்களே என்று பெருமைப்படுகிறேன் நண்பரே...!

மதன் பதிலில் கிண்டல் இருந்தாலும் விசயம் இருக்கும். திரி தொடர்ந்து எரிய வேண்டும். மகிழ்ச்சி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 13, 2013 12:52 am

கர்நாடக இசை ஒரு வட்டத்துக்குள்ளேயே சுற்றி வருகிறது! பெரும் பாலும் மேல்தட்டு மக்களை மட்டுமே சென்றடைகிறது! அதை இன்னும் எளிமையாக்கி எல்லோரிடமும் போய்ச் சேர என்ன வழி என்று பலரும் என்னிடம் கேட்கிறார்கள். அதையே உங்களிடம் நான் கேட்கிறேன்! பதில் என்ன?

அதற்காக ரொம்ப வருத்தப்பட்டு அதீதமாக ‘காம்ப்ரமைஸ்’ செய்து கொள்ளத் தேவையில்லை என்று நான் நினைக்கிறேன்! மேலை நாடு களில் அன்டோன்யோ விவால்டியின் மென்மையான ‘வயலின் கான் ஸெர்ட்டோ’வுக்கும், வேக்னரின் ஆபேராவுக்கும் வருகிற அளவான கூட்டம் வேறு. ‘ரோலிங் ஸ்டோன்ஸ்’ ராக் இசைக்கு அலைமோதும் கூட்டம் வேறு!

நீங்கள் கேட்டதை ஒரு Rhetoric விளைவாகவே எடுத்துக்கொண்டு நான் உங்கள் முன் சில கேள்விகளை வைக்கிறேன்!

1. சிம்பொனி இசையின் பிரமாண்ட அழகுக்கு (Grandeur) ஏராளமான வாத்தியங்களும் காரணம். ஏன் கர்நாடக இசையில் நாலைந்து வாத்தியங்களை மட்டும் (நிஜமாகவே ஒரு வட்டத்துக்குள்!) பயன்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள்?

2. நீங்கள் தியாகைய்யரின் கீர்த்தனையைப் பாடும்போது ராகத்தையும், உங்கள் குரலின் இனிமையையும் நான் ரசிக்கிறேன். அதன் அர்த்தம் புரியவில்லை. Lyrics -ம் முக்கியமில் லையா! ஏன், தமிழ் அர்த்தத்துடன் சிறு கையேடு தயாரித்து எல்லோருக்கும் தரக் கூடாது?

3. சினிமா ஒரு பெரும் சக்தி! உங்கள் குரு எம்.எல்.வி. பாடியதில் பல வருடங்களுக்கு தமிழகமெங்கும் பிரபலமாக இருந்த பாடல் ‘எல்லாம் இன்பமயம்...’தான்! ஏன், இப்போது சினிமாவில் (பின்னணியில் மிதந்து வருவது போலவாவது) ஒரே ஒரு கீர்த்தனையைக்கூடப் பயன்படுத்த மாட் டேன் என்கிறார்கள்?

எம்.எல்.வி. நம்மிடையே இல்லாத வெற்றிடத்தை நிரப்பிய நீங்கள்தான் சொல்ல வேண்டும்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 13, 2013 12:53 am

செல்லப் பிராணிகள் உட்பட, சர்க்கஸ்கள் மற்றும் விலங்குப் பண்ணைகளிலும்கூட விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் மனிதப் பெயர்களை வைத்துச் செல்லமாக அழைக்கிறார்களே... அவையும் புரிந்துகொண்டு சொல்படி செயல்படுகிறதே... எப்படி அவை தங்கள் பெயரை நினைவு வைத்துக்கொள்கின்றன?!

அந்தப் பெயரால் அழைக்கும் போது ஏற்படுகிற ஒலி உச்சரிப்பை வைத்துதான்! நீங்கள் கிளி வளர்க்க ஆரம்பித்ததி லிருந்து ‘ரங்கா, ரங்கா’ என்று தினமும் கூப்பிட்டால் போதும்... பக்கத்து ரூமிலிருந்து ‘ரங்கா’ என்றாலும், தூக்கத்தில் இருக்கும் கிளி எழுந்து உட்கார்ந்து திரும்பிப் பார்க்கும்! ‘ரங்கா’ என்பது ஒரு பெயர் என்பதோ, ரங்கநாதன், ரங்கபாஷ்யம், ரங்கராஜன் என்கிற பெயர்களுக் கெல்லாம் சுருக்கம் அது என் பதோ கிளிக்குத் தெரியாது. எல்லா செல்லப் பிராணி களுக்கும் இதே கதைதான்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 13, 2013 12:53 am

மென்மையான உடல்வாகும் மனமும் உடைய நண்பர் ஒருவர், தன்னை வர்மக்கலை பயின்ற யுவதி ஒருத்தி காதலிப்பதாகவும், அதை ஏற்றுக்கொள்வதா அல்லது தவிர்த்துவிடுவதா என்று என்னிடம் ஆலோசனை கேட்கிறார். நான் என்ன சொல்லட்டும்?

அதற்காக எச்சரிக்கையோடு உடல் முழுவதும் கவசம் அணிந்துகொண்டா காதலிக்க முடியும்! வர்மக்கலையையும் வீழ்த்தும் ஒரே கலை காதல் கலைதாங்க! ஆனால், காதலித்து விட்டுப் பிறகு பால்மாற முடியாது. கடைசி வரை ஏகபத்தினி விரதனாக வாழ வேண்டியிருக்கும். ஆகவே, யோசித்துவிட்டே ‘யெஸ்’ சொல்வது (உடலுக்கு) நல்லது!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 13, 2013 12:54 am

ஆண்கள் தங்கள் பெயருடன் சாதிப் பெயரைச் சேர்த்துக் கொள்வதைப் போல், பெண்கள் தங்கள் பெயருடன் சாதிப் பெயரைச் சேர்த்துக்கொள் வதில்லையே, ஏன்?

பண்டைய காலத்திலிருந்து ஆண்கள் வீடு, பசு, தோப்பு, தோட்டம் மாதிரி பெண்களையும் ஒரு பொருளாகவே ( commodity) கருதி நடத்தியதால், அவள் தன்சாதிப் பெயரைப் போட்டுக்கொள்ள அனுமதிக்கப்படவில்லை. திருமணமாகும் வரை அவள் தந்தையின் சாதி. ஆன பிறகு, கணவனின் சாதி! சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முன்பு, எல்லாவிதமான சுதந்திரங்களையும் அனுபவித்து வாழ்ந்த பெண்களை ஆண்கள் அடக்கி அடிமையாக்கியது மாபெரும் தந்திர வரலாறு!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 13, 2013 12:55 am

ஒரு ரூபாய் நோட்டு, ஆயிரம் ரூபாய் நோட்டு... என்ன வித்தியாசம் சார்? (மூணு சைபர் என்று கூற வேண்டாம்!)

அதை வாங்கும்போது முகத்தில் ஏற்படும் ‘எக்ஸ்பிரஷன்’தான் வித்தியாசம்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 13, 2013 12:55 am

பெரும்பாலான சினிமாக்களில் இறந்துவிடுபவர்கள் கண்களைத் திறந்துகொண்டே இறப்பதும், கதாநாயகனோ, நாயகியோ தங்கள் கையால் இறந்தவரின் இமைகளை மூடுவதும் ஏன்?

இறந்த இரண்டு, மூன்று மணி நேரத்தில், உடலில் உள்ள தசைகள் விறைத்துக்கொண்டுவிடும். பிறகு, கண் இமைகளை மூட முடியாது. எவ்வளவு முயன்றாலும் திறந்து கொள்ளும். அதுதான் காரணம். இதற்கு RIGOR MORTIS என்று பெயர். (ரைகர் - விறைத்துக் கொள்வது. மார்ட்டிஸ் - இறந்த பிறகு.) கண் இமைகளும் தசைகளே! விறைப்புத்தன்மை முதலில் துவங்குவதே இமைகளில்தான். பிறகு வாய்ப்பகுதி, கழுத்து, கை, கால்கள்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 13, 2013 12:56 am

அரசியல் தலைவர்களுக்குப் பட்டம் கொடுக்கும் பழக்கம் எப்போதிலிருந்து இருக்கிறது?

அரசர்கள் வந்த கையோடு பட்டங்களும் வந்துவிட்டன. ஆனால், அப்ப ரொம்ப பேஜார்! கப்பற் படையுடன் சென்று மெனக்கெட்டுப் போரிட்டு கடாரத்தை வென்று திரும்பினால்தான், ‘கடாரம்கொண்ட’ என்ற பட்டப் பெயர் கிடைக்கும். இப்ப ரொம்ப ஈஸி! மாங்காபேட்டையில் ஒரு தாதா, ஏதாவது லோக்கல் எலெக்ஷனில் ஜெயித்தாலே, ‘மாங்காபேட்டை மாவீரனே!’ என்று பட்டப் பெயரோடு அழைப்பார்கள்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 13, 2013 1:20 am

இலவசமாகத் தொலைக்காட்சி கொடுப்பதன் மூலம் மக்களின் அறிவை வளர்க்க முடியுமா? அல்லது ப்ளஸ் டூ மாணவ, மாணவிகளுக்கு இலவச கம்ப்யூட்டர் கொடுப்பதன் மூலம் நன்மை உண்டா?

அந்தக் காலத்தில் மன்னர்கள் விழாக் காலங்களின்போது யானை மீதிருந்து பொற்காசுகளை மக்களிடம் தூவினார்கள் - இலவச பொற்காசு! இன்று ஆளும் கட்சி டி.வி. பெட்டிகளைத் தூவுகிறது. வேர்க்கடலை வாங்கினாலும் கொசுறாகக் கிடைக்கும் வேர்க் கடலைகள் தரும் மகிழ்ச்சியே தனி! மனைவி காய்கறி வாங்கி னால் கொத்தமல்லி இலவசம். புடவை வாங்கினால் கர்ச்சீப் இலவசம். கர்ச்சீப் வாங்க மறந்துவிட்டால் ஆட்டோவில் மறுபடி கடைக்குப் போய் அதை வாங்கி வருவார்கள்!

ஒரு டி.வி. பெட்டிகூட எந்த ஒருவரு டைய சொந்தப் பணத்திலும் தருவது அல்ல. அத்தனையும் மக்களின் வரிப் பணம்தான். ஆகவே, டி.வி. இருக்கிற மக்கள் இல்லாதவர்களுக்கு டி.வி-யை டொனேஷனாகத் தருகிறார்கள்! சரி, உங்கள் கட்சி ஆட்சிக்கு வரும்போது கம்ப் யூட்டர் ‘ஃப்ரீ’யாகக் கிடைக்கும் என்று ஒரு எம்.எல்.ஏ-வாக நீங்கள் ‘ஹாய் மதன்’ மூலம் அறிக்கை விட்டுவிட்டீர்கள்!

குறிப்பு: ஆங்கிலத்தில் ஃப்ரீ (Free)! ஆகவே ஜெர்மன் மொழியில் Frei . ஸ்வீடிஷ் மொழியில் Fri. இந்த வார்த்தைகள் அத்தனையும் சம்ஸ்கிருத ‘பிரிய’ என்னும் வார்த்தையிலிருந்து பிறந்தவை. ‘டியர்’ என்று பொருள்! அதாவது - மக்களுக்கு ‘பிரிய’த்துடன் டி.வி!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 13, 2013 1:20 am

சர்க்கஸ் எப்போது தோன்றியது?

சர்க்கிள் (வட்டம்) என்கிற வார்த்தையிலிருந்து வந்ததுதான் சர்க்கஸ். ரோம் நாட்டில் கி.மு. ஆறாம் நூற்றாண்டிலேயே வட்டமான மைதானத்தில் குதிரை ரேஸ், ரேக்ளா ரேஸ், க்ளேடியேட்டர்கள் மோதல் எல்லாம் நடந்தன. பிறகு சுற்றிலும் ஸ்டேடியம் கட்டினார்கள். டார்க்வின் என்ற மன்னர் கட்டிய ‘சர்க்கஸ் மேக்ஸிமஸ்’ புகழ்பெற்ற ஒரு ஸ்டேடியம். ஜுலியஸ் சீசர் அதைப் புதுப்பித்து மூன்று லட்சம் மக்கள் அமர்ந்து பார்க்கும்படி விரிவுபடுத்தினர். அதெல்லாம் ரத்தமயமான சர்க்கஸ்!

18-ம் நூற்றாண்டில் இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் மாடர்ன் சர்க்கஸ் துவங்கியது. கி.பி. 1870-லேயே ‘த்ரீ ரிங் சர்க்கஸ்’ வந்துவிட்டது. சர்க்கஸை உலகப் புகழுக்குக் கொண்டுபோனவர் பி.டி.பார்னம் P.T.Barnum என்ற அமெரிக்கர். ஆனால், ஏனோ ரஷ்யாவில்தான் இன்றளவும் மிகத் திறமை வாய்ந்த சர்க்கஸ் வீரர்கள் இருக்கிறார்கள்.

Sponsored content

PostSponsored content



Page 16 of 24 Previous  1 ... 9 ... 15, 16, 17 ... 20 ... 24  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக