புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்னுமா இருக்கிறது காதல்  - Page 3 Poll_c10இன்னுமா இருக்கிறது காதல்  - Page 3 Poll_m10இன்னுமா இருக்கிறது காதல்  - Page 3 Poll_c10 
59 Posts - 55%
heezulia
இன்னுமா இருக்கிறது காதல்  - Page 3 Poll_c10இன்னுமா இருக்கிறது காதல்  - Page 3 Poll_m10இன்னுமா இருக்கிறது காதல்  - Page 3 Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
இன்னுமா இருக்கிறது காதல்  - Page 3 Poll_c10இன்னுமா இருக்கிறது காதல்  - Page 3 Poll_m10இன்னுமா இருக்கிறது காதல்  - Page 3 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
இன்னுமா இருக்கிறது காதல்  - Page 3 Poll_c10இன்னுமா இருக்கிறது காதல்  - Page 3 Poll_m10இன்னுமா இருக்கிறது காதல்  - Page 3 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
இன்னுமா இருக்கிறது காதல்  - Page 3 Poll_c10இன்னுமா இருக்கிறது காதல்  - Page 3 Poll_m10இன்னுமா இருக்கிறது காதல்  - Page 3 Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
இன்னுமா இருக்கிறது காதல்  - Page 3 Poll_c10இன்னுமா இருக்கிறது காதல்  - Page 3 Poll_m10இன்னுமா இருக்கிறது காதல்  - Page 3 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
இன்னுமா இருக்கிறது காதல்  - Page 3 Poll_c10இன்னுமா இருக்கிறது காதல்  - Page 3 Poll_m10இன்னுமா இருக்கிறது காதல்  - Page 3 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
இன்னுமா இருக்கிறது காதல்  - Page 3 Poll_c10இன்னுமா இருக்கிறது காதல்  - Page 3 Poll_m10இன்னுமா இருக்கிறது காதல்  - Page 3 Poll_c10 
1 Post - 1%
Guna.D
இன்னுமா இருக்கிறது காதல்  - Page 3 Poll_c10இன்னுமா இருக்கிறது காதல்  - Page 3 Poll_m10இன்னுமா இருக்கிறது காதல்  - Page 3 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
இன்னுமா இருக்கிறது காதல்  - Page 3 Poll_c10இன்னுமா இருக்கிறது காதல்  - Page 3 Poll_m10இன்னுமா இருக்கிறது காதல்  - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்னுமா இருக்கிறது காதல்  - Page 3 Poll_c10இன்னுமா இருக்கிறது காதல்  - Page 3 Poll_m10இன்னுமா இருக்கிறது காதல்  - Page 3 Poll_c10 
54 Posts - 55%
heezulia
இன்னுமா இருக்கிறது காதல்  - Page 3 Poll_c10இன்னுமா இருக்கிறது காதல்  - Page 3 Poll_m10இன்னுமா இருக்கிறது காதல்  - Page 3 Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
இன்னுமா இருக்கிறது காதல்  - Page 3 Poll_c10இன்னுமா இருக்கிறது காதல்  - Page 3 Poll_m10இன்னுமா இருக்கிறது காதல்  - Page 3 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
இன்னுமா இருக்கிறது காதல்  - Page 3 Poll_c10இன்னுமா இருக்கிறது காதல்  - Page 3 Poll_m10இன்னுமா இருக்கிறது காதல்  - Page 3 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
இன்னுமா இருக்கிறது காதல்  - Page 3 Poll_c10இன்னுமா இருக்கிறது காதல்  - Page 3 Poll_m10இன்னுமா இருக்கிறது காதல்  - Page 3 Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
இன்னுமா இருக்கிறது காதல்  - Page 3 Poll_c10இன்னுமா இருக்கிறது காதல்  - Page 3 Poll_m10இன்னுமா இருக்கிறது காதல்  - Page 3 Poll_c10 
1 Post - 1%
Guna.D
இன்னுமா இருக்கிறது காதல்  - Page 3 Poll_c10இன்னுமா இருக்கிறது காதல்  - Page 3 Poll_m10இன்னுமா இருக்கிறது காதல்  - Page 3 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
இன்னுமா இருக்கிறது காதல்  - Page 3 Poll_c10இன்னுமா இருக்கிறது காதல்  - Page 3 Poll_m10இன்னுமா இருக்கிறது காதல்  - Page 3 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இன்னுமா இருக்கிறது காதல்  - Page 3 Poll_c10இன்னுமா இருக்கிறது காதல்  - Page 3 Poll_m10இன்னுமா இருக்கிறது காதல்  - Page 3 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
இன்னுமா இருக்கிறது காதல்  - Page 3 Poll_c10இன்னுமா இருக்கிறது காதல்  - Page 3 Poll_m10இன்னுமா இருக்கிறது காதல்  - Page 3 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்னுமா இருக்கிறது காதல்


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

ருக்மணி
ருக்மணி
பண்பாளர்

பதிவுகள் : 62
இணைந்தது : 01/10/2012

Postருக்மணி Sun Oct 14, 2012 7:01 pm

First topic message reminder :

இன்னுமா இருக்கிறது காதல்


காதல்..
மிக சிறிய சொல்,
பிரம்மாண்டமான சக்தி,
புராதன வேட்கை
வினோத சித்தபிரம்மை,
விந்தையான மனஎழுச்சி,
ஆதி உணர்வு,

நாகரிக மாற்றத்தை எதிர்த்து நம்மிடையே எஞ்சியிருக்கும் பழமைகளில் ஓன்று, அது ஒருவருக்குள் ஒருவரை அடிமைப்படுத்தும்....

உலகம் திறந்து வைத்த
முதல் சாவி காதல் தான்
திறந்தவன் தொலைத்து விட்டான்
இன்னும் அந்த தேடல் தான்...

இப்படி பலவாறாக காதலை எழுதாத கவிஞர்கள் உண்டோ?? பாடாத பாடகர்களும் உண்டோ?? இவற்றையெல்லாம் கேட்கும் போதே காதலின்றி வாழ்தல் சாத்தியமோ என்ற கேள்வி எல்லோருக்கும் வரும்...

ஹார்மோன் மாற்றமே:

காதல் ஒரு ஹார்மோன் மாற்றமே!! இதனால் கண்டதும் காதல் வயப்படும் வாய்ப்பும் உண்டு. கண்டவர்கள் மீதும் காதல் வயப்பட வாய்ப்பு உண்டு. ஆனால் இந்த காதல் நீடிக்குமா ?? என்பதில் தான் ஐயமே... இளைய சமுதாயத்தினர் தங்கள் டீன் ஏஜ் பருவத்தை கடக்கும் முன்னரே இந்த மாய வலையில் தங்களை சிக்க வைத்துக் கொள்கின்றனர். காதலுக்கும் எதிர் பாலின கவர்ச்சிக்கும் வித்தியாசத்தை அவர்கள் அறிவதில்லை. இந்த வகையான காதலில் சிக்கல் உண்டு. தன் காதலனை(காதலியை) விட அழகானவனோ, அல்லது இதர திறமைகளில் சிறந்தவனை பார்க்கும் போது இவர்கள் காதல் மாறும் வாய்ப்பும் உண்டு. இதை பார்க்கும் போது இன்னுமா இருக்கிறது காதல்? எனத் தோன்றுகிறது.

இன்றைய சமூக நிலை:

வயது வந்த பின்னர் ஒருவரையொருவர் புரிந்து வரும் காதல் என்பது தற்போது மிக குறைவே. இன்றைய சமூகத்தில் எந்த ஒரு ஆணும் உண்மையாய் காதலுக்காக ஏங்கி தேவதாஸ் ஆவதுமில்லை. எந்த ஒரு பெண்ணும் முன் பின் தெரியாத ஒருவனை நம்பி ஏமாறுவதுமில்லை. ஒத்து வராத காதலர்கள் கை குலுக்கி நண்பர்களாக பிரிகின்றனர். சேது சீயானையும், காதல் முருகனையும் படங்களில் மட்டுமே காண முடியும்.

காதல்:

காதல் ஒரு வித சித்த பிரம்மை. தன் நிலை மறந்து துணையை பற்றியே சிந்திக்க தூண்டும். உணவு உறக்கம் மறந்து வாழும் நிலை வரும். கனவு உலகம் மட்டுமே பிடிக்கும். அடிக்கடி பொய் சொல்ல வைக்கும்.

ஒரு தலை காதல்:

முன்னாளில் ஒரு தலை காதலில் தங்களை தாங்களே துன்புறுத்திக் கொண்டனர். காதல் நிறைவேறாத, ஏற்காத பட்சத்தில் போதை பழக்கத்திற்கு அடிமையாகி தங்கள் வாழ்வை தாங்களே தொலைத்தனர். பெற்றோர்களின் கண்ணீரை பொருட்படுத்தாமல் தங்கள் வாழ்வே அந்த பெண்ணுடனே முடிந்தது என்பது போல செயல்பட்டனர்.

இந்நாளில் ஒரு தலை காதலில் பலர் வன்முறையை ஆயுதமாக எடுக்கின்றனர். ஒரு பெண் தன் காதலை ஏற்காத பட்சத்தில் அவள் மீது திராவகம் வீசுவது, கொலை செய்வது என காதல் என்ற பெயரில் வெறியோடு நடக்கின்றனர். தினம் தினம் செய்தி தாள்களில் இது போன்ற பல செய்திகள் வருவதை யாராலும் மறுக்க முடியாது.

மற்றுமொரு ரக ஒரு தலை காதலும் உண்டு. தங்கள் காதல் ஏற்கப்படாத பட்சத்தில் தங்கள் காதலையே மாற்றிக் கொள்கின்றனர். “திரிஷா இல்லைனா திவ்யா” என்ற கொள்கையோடு இருக்கின்றனர். இது முன்னர் கூறிய காதலை விட மேல் என்றாலும் இவற்றையெல்லாம் பார்க்கும் போது இன்னுமா இருக்கிறது காதல் எனத் தோன்றுகிறது.

முறையற்ற காதல்:

இந்த கலியுகத்தில் முறையற்ற காதல்களும் பெருகி கொண்டு தான் இருக்கின்றன. ஒரே பாலின காதல்களும் தற்போது ஏற்படுகிறது. இது இயற்கைக்கு முற்றிலும் மாறுபட்ட ஒன்று. சமூகத்தால் ஏற்கப்படாத ஒன்று. இதை தவிர முறையற்ற உறவுகளுக்கு இடையேயும் காதல் ஏற்படுகிறது.. இதுவும் சமூகம் ஏற்க முடியாத ஒன்றே. இன்றைய திரைப்படங்களும் தவறான உதாரணங்களை மக்களுக்கு எடுத்துக் காட்டுகிறது. வயதில் மூத்த பெண்ணை காதலித்தல், அல்லது உங்கள் கல்லூரி பேராசிரியர் (பேராசிரியை) காதலித்தல் இவையெல்லாம் உங்கள் அபிமான நாயகன் உங்களுக்கு கற்று தரும் பாடம். இது திரையுலகில் மட்டும் அல்ல.. நிஜ வாழ்க்கையிலும் நடக்கின்றது.

இருதலை காதல்:

இரு தரப்பினரும் பேசி பழகி வரும் காதல் மட்டும் எல்லா வகையிலும் யோக்கியமா என்று கேட்காதீர்கள்!! காதலை தெரிவிக்கும் முன்னோ, காதலை தெரிவிக்கும் போதோ காதலனோ, காதலியோ செய்யும் சின்ன விஷயத்தை கூட பாராட்டும் மனம் காதலின் போதோ, கல்யாணத்தின் பின்னோ மாறி விடும்.அது போலத் தான் காதலிக்கும் போது செய்யும் பெரிய தவறை கூட மறந்து மன்னிக்கும் குணம் பின்னாளில் மறைந்து விடும்.

ஒவ்வொன்றுக்கும் விவாதம் வைக்கும். விட்டுக் கொடுக்கும் மனம் காணாமல் போய்விடும். தான் வெற்றி பெற வேண்டும் என நினைத்து இருவரும் வாழ்வில் தோல்வியை சந்திக்கின்றனர். தன் துணை தானாகவே முன் வந்து விட்டு கொடுக்க தோன்றும். காதல் திருமணங்கள் செய்ய அவசர அவசரமாக பதிவு திருமண அலுவலக வாயிலில் நின்றவர்கள் இன்று அதை விட அவசரமாக நீதிமன்ற வாயிலில் விவகாரத்திற்கு நிற்கின்றனர்.

காதலர்களிடையேயும் திருமணமானவர்களிடையேயும்‌ துணை தனக்கே சொந்தமானவள் என்ற எண்ணம் அதிகப்படையாக இருக்கிறது. தனக்கானவன், தனக்கானவள் என்ற உரிமை இருப்பதில் தவறில்லை. அதுவே விலங்காக மாறி துணையை கட்டி போடாமல் இருந்தால் சரி. நம்பிக்கை வாழ்வின் மிக முக்கிய அடித்தளம். இது இருந்தால் போதுமே தனக்கானவள் என்ற எண்ணம் வேண்டிய இடத்தில் மட்டும் இருக்குமே. ஆனால் பலர் அதை மறந்து அதீத அன்பினால் துணையை நோகடிக்கின்றனர். சந்தேகத்தினால் தாங்களும் நிம்மதி இழக்கின்றனர். இவற்றை பார்க்கும் போது இன்னுமா இருக்கிறது காதல் எனத் தோன்றுகிறது.

பெற்றோர் நிச்சயித்த திருமணம்:

பெற்றோர்கள் பார்த்து நடத்தி வைக்கும் திருமணங்களும் முக்கியத்துவம் கொடுப்பது ஜாதி, மதம், படிப்பு, தொழில், அந்தஸ்து இவற்றுக்கே. மனங்கள் இணைவது இரண்டாம் பட்சமே.

பெற்றோருக்காக பிடிக்காத வாழ்வை ஏற்போர் சிலர். இவர்கள் திருமணம் என்ற சடங்கை வேண்டுமானால் பெற்றோருக்காக ஏற்கலாம். அதன் மூலம் வரும் உறவை ஏற்க சிரம படுவர். வாழ்க்கையில் சில விஷயங்களில் விட்டுக் கொடுத்து வாழலாம். ஆனால் வாழ்க்கையையே விட்டுக் கொடுத்து வாழ முடியாது.

இரண்டாம் ரகத்தினர் எந்த வித எதிர்பார்ப்பும், எதிர்ப்பும் இல்லாமல் வாழ்வை ஏற்போர். இவர்களை தங்கள் வாழ்க்கை துணையால் தங்களுக்கு ஏற்றபடி மாற்ற முடியும். சில நாட்களிலேயே அவர்கள் தங்கள் வாழ்வை, வாழ்க்கை துணையை விரும்ப ஆரம்பித்து விடுவர்.

கடைசி ரகத்தினர் பல வித எதிர்பார்ப்புகள், ஆசைகளுடன் திருமண வாழ்வில் அடி எடுத்து வைப்பவர்கள். இவர்களின் வாழ்க்கை துணை எதிர்பார்ப்புகள், ஆசைகளை நிறைவேற்றும் பட்சத்தில் இவர்கள் வாழ்வும் மகிழ்ச்சியாகவே அமையும். இல்லையேல் ஏமாற்றத்தினால் இவர்கள் வாழ்வு விரக்தி அடையும். இன்னொரு துணையை நாடவும் வாய்ப்பு உண்டு. இவற்றை எல்லாம் பார்க்கும் போது இன்னுமா இருக்கிறது காதல் எனத் தோன்றுகிறது.

அப்படினா காதலே இல்லையா என்று தானா கேட்கிறீர்கள்?? இருக்கு.. ஒரு ஆணிற்கும் பெண்ணிற்கும் இடையே ஏற்படுவது என்றே பலரும் எண்ணி கொண்டிருக்கிறோம். முதலில் காதல் என்பது மனிதர்களுக்கு மட்டுமான உணர்வு இல்லை. இவ்வுலகில் உள்ள ஜீவராசிகள் அனைத்துமே காதலித்து கொண்டு தான் இருக்கிறது. அன்பே கடவுள் என்று சிலர் கூறுகின்றனர். அன்பும் காதலின் ஒரு வகையான வெளிப்பாடு தான் என்பதால் காதலும் கடவுளும் ஒன்றே தான் என்று கூட கூறலாம். காதலின் சின்னம் என்றால் பலரும் தாஜ்மகாலை தான் கூறுவார்கள். ஒரு கணவன் தன் மனைவியின் மீது வைத்திருந்த உன்னதமான காதலின் சின்னமே தாஜ்மஹால். நம்மில் பல தம்பதிகள் தங்கள் துணையின் மீது அளவில்லா காதலை கொண்டுள்ளனர். அப்படிப்பட்டவர்களை போற்றும் சின்னமே ஆக்ராவில் அமைந்துள்ள அந்த சின்னம்.

முடிவுரை:

அழகை பார்த்து காதல் வந்தால் அது இன கவர்ச்சி. படிப்பு, தொழில் பார்த்து காதல் வந்தால் அது சுயநலம். தனக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைக்கும் என்ற எண்ணம். திறமையை பார்த்து காதல் வந்தால் அது அந்த கலையின் மீது ஏற்படும் நாட்டமே அன்றி காதல் அல்ல. இவைகளுக்கு அப்பாற்பட்டு ஒருவருக்கொருவர் பேசி புரிந்து கடைசி வரை ஒத்து வாழ்வதே காதல். இதற்கு இருவருக்கும் ஒரே மாதிரியான எண்ணங்கள், கருத்துக்கள், விருப்பங்கள் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை. ஒருவர் மற்றவரின் எண்ணங்களுக்கு, கருத்துக்களுக்கு, ஆசைகளுக்கு மதிப்பு கொடுத்து நடந்தாலே போதும்.

சின்ன சின்ன ஆசைகள், சின்ன சின்ன சந்தோஷங்கள், சின்ன சின்ன ஆச்சரியங்கள், சின்ன சின்ன சண்டைகள், சின்ன சின்ன மன்னிப்பு, சின்ன சின்ன சமாதானம் இவைகள் தான் வாழ்வை இனிமையாக்கும். காதல் என்ற உணர்வு கடைசி மூச்சு வரை நம்முடன் இருக்கும். “இன்னுமா இருக்கிறது காதல்?” என்ற கேள்விக்கும் அவசியம் இருக்காது.



அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Oct 16, 2012 11:35 am

இந்த வயசுல இப்படி ஒரு பிரச்சனையா இந்த புள்ளைக்கு! சரிசரி மதன் அவரை கட்டம் கட்டாதீங்கப்பா

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Oct 16, 2012 11:41 am

அகல் wrote: அண்ணே நீங்களும் வந்திட்டிங்களா..?? எதாச்சும் இருந்தாதான சொல்றதுக்கு.. இங்க எல்லாம் total dry அண்ணா.. நான் என்ன வச்சுகிட்டா வஞ்சகம் பண்றேன் புன்னகை...

அதானே அப்படி ஏதாவதி இருந்தாலும் இங்க வேற நிறையா வெளிநாட்டு மாப்பிளைகள் வேற இருக்காங்க குறிப்பா ஓமன், துபாய், மலேசியான்னு பப்ளிக்கா சொல்லமுடியுமா



ஈகரை தமிழ் களஞ்சியம் இன்னுமா இருக்கிறது காதல்  - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Tue Oct 16, 2012 11:42 am

balakarthik wrote:
அகல் wrote: அண்ணே நீங்களும் வந்திட்டிங்களா..?? எதாச்சும் இருந்தாதான சொல்றதுக்கு.. இங்க எல்லாம் total dry அண்ணா.. நான் என்ன வச்சுகிட்டா வஞ்சகம் பண்றேன் புன்னகை...

அதானே அப்படி ஏதாவதி இருந்தாலும் இங்க வேற நிறையா வெளிநாட்டு மாப்பிளைகள் வேற இருக்காங்க குறிப்பா ஓமன், துபாய், மலேசியான்னு பப்ளிக்கா சொல்லமுடியுமா
ஐயோ ராமா ராமா, பாலா பாலா..



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
avatar
Guest
Guest

PostGuest Tue Oct 16, 2012 11:44 am

அகல் wrote:
balakarthik wrote:
அகல் wrote: அண்ணே நீங்களும் வந்திட்டிங்களா..?? எதாச்சும் இருந்தாதான சொல்றதுக்கு.. இங்க எல்லாம் total dry அண்ணா.. நான் என்ன வச்சுகிட்டா வஞ்சகம் பண்றேன் புன்னகை...

அதானே அப்படி ஏதாவதி இருந்தாலும் இங்க வேற நிறையா வெளிநாட்டு மாப்பிளைகள் வேற இருக்காங்க குறிப்பா ஓமன், துபாய், மலேசியான்னு பப்ளிக்கா சொல்லமுடியுமா
ஐயோ ராமா ராமா, பாலா பாலா..

பல உண்மைகள் வெளிய வரும் போல .. ம்ம் பட்டய கிளப்புங்கள் ..

ருக்மணி
ருக்மணி
பண்பாளர்

பதிவுகள் : 62
இணைந்தது : 01/10/2012

Postருக்மணி Wed Oct 17, 2012 12:19 pm

நன்றி அகல், சிவா

avatar
Guest
Guest

PostGuest Wed Oct 17, 2012 2:07 pm

அருமை ருக்மணி அவர்களே ..

avatar
Guest
Guest

PostGuest Wed Oct 17, 2012 2:08 pm

விருப்ப பொத்தனை பாவித்தேன் ...

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Oct 17, 2012 2:28 pm

புரட்சி wrote:விருப்ப பொத்தனை பாவித்தேன் ...

விருப்பமான பகுதி அதான் விருப்ப பொத்தான் .....
இது கொஞ்சம் உருக்கமா இருக்கு .........

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Oct 17, 2012 2:30 pm

பூவன் wrote:
புரட்சி wrote:விருப்ப பொத்தனை பாவித்தேன் ...

விருப்பமான பகுதி அதான் விருப்ப பொத்தான் .....
இது கொஞ்சம் உருக்கமா இருக்கு .........

நறுக் என்று சுருக்கமாக சொன்ன பூவனுக்கு நன்றி



ஈகரை தமிழ் களஞ்சியம் இன்னுமா இருக்கிறது காதல்  - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Oct 17, 2012 2:32 pm

நீங்க கொஞ்சம் சுருக்குனு சொல்லிடீங்க .......

Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக