புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காஞ்சி பெரியவரும் பத்திரிக்கையாளர் ராவும்  - Page 2 Poll_c10காஞ்சி பெரியவரும் பத்திரிக்கையாளர் ராவும்  - Page 2 Poll_m10காஞ்சி பெரியவரும் பத்திரிக்கையாளர் ராவும்  - Page 2 Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
காஞ்சி பெரியவரும் பத்திரிக்கையாளர் ராவும்  - Page 2 Poll_c10காஞ்சி பெரியவரும் பத்திரிக்கையாளர் ராவும்  - Page 2 Poll_m10காஞ்சி பெரியவரும் பத்திரிக்கையாளர் ராவும்  - Page 2 Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
காஞ்சி பெரியவரும் பத்திரிக்கையாளர் ராவும்  - Page 2 Poll_c10காஞ்சி பெரியவரும் பத்திரிக்கையாளர் ராவும்  - Page 2 Poll_m10காஞ்சி பெரியவரும் பத்திரிக்கையாளர் ராவும்  - Page 2 Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
காஞ்சி பெரியவரும் பத்திரிக்கையாளர் ராவும்  - Page 2 Poll_c10காஞ்சி பெரியவரும் பத்திரிக்கையாளர் ராவும்  - Page 2 Poll_m10காஞ்சி பெரியவரும் பத்திரிக்கையாளர் ராவும்  - Page 2 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
காஞ்சி பெரியவரும் பத்திரிக்கையாளர் ராவும்  - Page 2 Poll_c10காஞ்சி பெரியவரும் பத்திரிக்கையாளர் ராவும்  - Page 2 Poll_m10காஞ்சி பெரியவரும் பத்திரிக்கையாளர் ராவும்  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காஞ்சி பெரியவரும் பத்திரிக்கையாளர் ராவும்  - Page 2 Poll_c10காஞ்சி பெரியவரும் பத்திரிக்கையாளர் ராவும்  - Page 2 Poll_m10காஞ்சி பெரியவரும் பத்திரிக்கையாளர் ராவும்  - Page 2 Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
காஞ்சி பெரியவரும் பத்திரிக்கையாளர் ராவும்  - Page 2 Poll_c10காஞ்சி பெரியவரும் பத்திரிக்கையாளர் ராவும்  - Page 2 Poll_m10காஞ்சி பெரியவரும் பத்திரிக்கையாளர் ராவும்  - Page 2 Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
காஞ்சி பெரியவரும் பத்திரிக்கையாளர் ராவும்  - Page 2 Poll_c10காஞ்சி பெரியவரும் பத்திரிக்கையாளர் ராவும்  - Page 2 Poll_m10காஞ்சி பெரியவரும் பத்திரிக்கையாளர் ராவும்  - Page 2 Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
காஞ்சி பெரியவரும் பத்திரிக்கையாளர் ராவும்  - Page 2 Poll_c10காஞ்சி பெரியவரும் பத்திரிக்கையாளர் ராவும்  - Page 2 Poll_m10காஞ்சி பெரியவரும் பத்திரிக்கையாளர் ராவும்  - Page 2 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
காஞ்சி பெரியவரும் பத்திரிக்கையாளர் ராவும்  - Page 2 Poll_c10காஞ்சி பெரியவரும் பத்திரிக்கையாளர் ராவும்  - Page 2 Poll_m10காஞ்சி பெரியவரும் பத்திரிக்கையாளர் ராவும்  - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காஞ்சி பெரியவரும் பத்திரிக்கையாளர் ராவும்


   
   

Page 2 of 2 Previous  1, 2

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Oct 14, 2012 4:17 pm

First topic message reminder :

காஞ்சி பெரியவரும் பத்திரிக்கையாளர் ராவும்  - Page 2 Rao%20sir%20column%2018%20

ஒரு பத்திரிக்கைக்காரன் என்கிற முறையில் பரமாச்சாரியார் பற்றி இரண்டு முக்கிய செய்திகளில் நான் பங்கு பெற நேர்ந்தது.

ஒன்று - நான் நிருபராக ஒரு மாலை பத்திரிக்கையில் பணிபுரிந்த போது . வயது இருபது தான் இருக்கும்.

அடுத்தது - assosiate editor ஆக வார இதழில் பணிபுரிந்தபோது !

அது 1962 என்று நினைக்கிறேன் . அன்று ஞாயிற்றுக்கிழமை . மாலை பத்திரிக்கைக்கு பரபரப்பாக ஏதாவது வேண்டுமே! அன்று நானும் நியூஸ் எடிட்டரும் என்னன்னவோ செய்தும் - பெரிய சேதி கிடைக்கவில்லை .

ஒரு மணி . எல்லாரும் சாப்பிட்டுக்கொண்டிருக்க , நான் தபாலில் வந்தவைகளை பிரித்து பார்த்துக்கொண்டிருந்தேன். மத சம்பந்தமான ஒரு இதழ் . பிரித்து பார்த்தேன். அதிர்ச்சி அடைந்தேன்.

'திருக்குறளை படிக்க வேண்டாம்' என்று பரமாச்சாரியர்கள் சொன்னதாக ஒரு செய்தி . அது மார்கழி மாதம்.

திருப்பாவையில் - பாவை நோன்பு கடைபிடிப்பது பற்றி ஆண்டாள் . ' நெய் உண்ணோம் . பால் உண்ணோம் ' என்று வரிசைப் படுத்துகிறார். அப்போது தீக்குறளை சென்றோதோம்' என்று அந்தப்பாடலில் வருகிறது.

இதற்குப்பொருளாக - 'திருக்குறளை படிக்கக்கூடாது ' என்று பரமாச்சாரியார் கூறியதாக அதில் இருந்தது !

தீக்குறளை சென்றோதோம் என்றால் - ஒருவரைப்பற்றி ' கோள் ' சொல்வது - புறம்கூறுவது செய்ய மாட்டோம் என்று தான் பொருள்.

திருப்பாவை வேதத்தின் சாரம் என்று சொல்லப்படுவது . ஒருவரைப்பற்றி பொல்லாங்கு - கோள் - சொல்வதை வேதம் மாபெரும் பாவம் , தவறு என்று கூறுகிறது. ஆண்டாள் அதைத்தான் கூறினார்.

பரமாச்சாரியார் இப்படி கூறியிருப்பாரா ? எங்கோ தவறு நடந்திருக்கிறது என்று நினைத்தவாறு - அந்தப்பகுதியை நியூஸ் எடிட்டர் பார்வைக்கு அனுப்பினேன் . பிறகு மறந்தேன்

அன்று மாலை பேப்பரை பார்த்து திடுக்கிட்டேன்.

'திருக்குறளைப் படிக்காதே - காஞ்சி சங்கராச்சாரியார் உத்தரவு !" என்று வெளியிடப்பட்டிருந்தது. இது பரபரப்பு ஏற்படுத்திவிட்டது .தமிழ் அறிஞர்கள் திடுக்கிட்டார்கள் . பெரும் கண்டனம் தமிழ் அறிஞர்களிடம் இருந்து கிளம்பியது.

எனக்கு வருத்தமாக இருந்தது. நிச்சயம் ஏதோ பிழை என்று தோன்றியதை செய்தி ஆசிரியரிடம் கூற தவறி விட்டேனே என்று உள்ளம் உறுத்தியது.

மற்ற தமிழ் நாளிதழ்களிலும் அடுத்தடுத்து வந்த நாட்களில் தினமும் இந்த செய்தி பெரிதுபடுத்தபட்டது. தினம் ஒரு கண்டன அறிக்கை !

ஆச்சாரிய சுவாமிகளிடமிருந்து விளக்கம் வராது என்பது எனக்கு தெரியும் . யாராவது அவரிடம் போய் பேசினால் , தவறு திருத்தப்பட வாய்ப்பு ஏற்படும்.

அதற்குள் ' குமுதம் ' இதழில் இது குறித்து தலையங்கம் எழுதப்பட்டு விட்டது. தலைப்பு -
'யானைக்கும் அடி சறுக்கும்?'

குமுதம் தலையங்கம் அக்காலத்தில் மிகவும் விறுவிறுப்புடன் இருக்கும் . சுடச்சுட விஷயங்களைத் தொடுவார் எஸ்.ஏ.பி.

இந்த தலையங்கம் பலன் தந்தது . திருமதி சௌந்திரா கைலாசம் , காஞ்சி பெரியாரை தரிசிக்க சென்றார்.அப்போது இந்த விஷயத்தை மெதுவாக எழுப்பினார். பெரியவர் கூறியது தவறாக வந்திருக்கலாம் என்று சுட்டிக்காட்டினார்.

காஞ்சி பெரியவர் கூறிய விளக்கம் அடுத்த குமுதம் இதழில் செய்தியாக திருமதி கைலாசம் எழுதினார் :

"மார்கழி மாதம் கடவுளைப்பற்றிய நினைவுகளுக்கு மட்டுமே செலுத்த வேண்டிய மாதம் .
தீக்குறள் மட்டுமல்ல - திருக்குறள் போன்ற மிக உயர்ந்த நல்ல விஷயங்களைக்கூட கூறாமல் - கடவுள் நாமத்தையே சொல்ல வேண்டும் "

பெரியவர் இப்படி மார்கழி மாதத்தில் இறைவனை மட்டுமே நினைக்க வேண்டியதை வலியுறுத்த சொல்லி இருக்கிறார் !

இந்த விளக்கம் வந்தவுடன் அமைதி ஏற்பட்டுவிட்டது . சௌந்திரா கைலாசம் அவர்களுக்கு என் மனம் நன்றி கூறியது.

அடுத்த நிகழ்ச்சி - 1987 ம் ஆண்டு .

ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகள் காஞ்சி மடத்தை விட்டு வெளியேறியதை அடுத்து ஏற்பட்ட பரபரப்பு நிகழ்ச்சி.

பல்வேறு அவதூறான செய்திகள் வந்து கொண்டிருந்தன. எனது இதழுக்காக உண்மைகளை சேகரித்தேன்.

காஞ்சிபுரம் சென்று ஸ்ரீமடத்திலும் மெல்ல தகவல் சேகரித்தேன். மகா பெரியவர் - ஓரிடத்தில் அமர்ந்திருப்பதைப் பார்த்தேன். இந்த விஷயமாக மகா பெரியவரை பேட்டி எடுத்தால் என்ன என்றே தோன்றியது. 1962 நிகழ்ச்சியில் - ' அவசரப்பட்டதுபோல' இப்போது கூடாது . எதிரே காட்சி தருகிறாரே ... கேட்கலாமே என்று மனசாட்சி கூறியது . பணிந்தேன்.

சுவாமிகளிடம் நான் பேச முற்பட்ட போது சுற்றி இருந்த வயதான பக்தர்கள் தடுத்தார்கள். ' பெரியவரிடம் இதைப்பற்றி எல்லாம் கேட்பதா ? அவரை பேட்டி எடுப்பதா ' என்று சினந்து என்னை வெளியேறச் சொன்னார்கள்.

"என்ன .... என்ன .... அவன் என்ன கேட்கிறான் ?" என்று சுவாமிகள் நாற்புறமும் திரும்பி
விசாரித்தும் - அதற்கு பக்தர்கள் பதில் கூறாமல் என்னை விரட்டுவதிலேயே குறியாக இருந்தார்கள்.

நான் ஸ்ரீமடத்தைவிட்டு வெளியே வந்து , டிபன் சாப்பிட போகலாம் என்று நினைத்தேன். அதற்குள் ஒரு வயதான பக்தர் ஓடிவந்தார். " பெரியவா கூப்பிடுகிறார்" என்றார். நான் ஓடினேன்.

"என்ன சந்தேகம் ..... கேளு " என்று மெதுவான குரலில் பரமச்சாரியார் கூறினார். நான் கேள்விகளை பணிவுடன் கேட்டேன்.

"பரமாச்சாரியாரிடம் கோபித்துக் கொண்டே ஜெயேந்திரர் வெளியேறினாரா ? என்று கேட்டேன் . பக்தர்கள் முகத்தில் கோபம் பளிச்சிட்டது.

' அப்படி இல்லை . அவருக்கு என் மீது ரொம்ப அன்பு . எனக்கு கனகாபிஷேகம் செய்து பார்த்தரே " என்று பரமாச்சாரியார் கூறும் போது ஜெயேந்திரர் மீது அவருக்கு இருந்த அன்பு வெளிப்பட்டது.

" ஸ்ரீ மடத்திலிருந்து பணம் எடுத்துச் சென்றாரா ?" என்று கேட்க நேர்ந்தது.

பரமாச்சாரியார் மறுத்து தலையாட்டினார். " அவருக்கு எதற்கு பணம் ? அவர் நினைத்தால் பணம் கொட்டும் . இந்த மடம் ஏழை மடமாக இருந்தது. அதை மாற்றி - பல நல்ல காரியங்களை செய்பவர் அவர் " - சுவாமிகள் கூறினார்.

வெளியே சொல்லப்பட்ட வதந்திகளை நான் கேட்க நேர்ந்தது.

"இம் மாதிரி நிகழ்ச்சி ஸ்ரீ மடம் பற்றி மக்கள் என்னவாறு நினைக்க செய்யும் "....

"மக்கள் மிக உயர்ந்தவர்கள் . அவர்கள் கருத்து எதுவானாலும் அது முக்கியம் . அதை அலட்சியப்படுத்தமுடியுமா ?" - பெரியவர் கூறினார். இன்னும் பல கேள்விகள் எழுப்பினேன் !

பத்திரிக்கையில் இந்த பேட்டி பரபரப்பாக வந்தது. ஜெயேந்திரர் பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி விழுந்தது. அடுத்து சில நாட்களில் ஜெயேந்திரர் திரும்பினார்.

பரமாச்சாரியாரிடம் சங்கடமான கேள்விகள் கேட்டதற்கு ஒரு சில பக்தர்கள் என்னை திட்டினாலும் , ஜெயேந்திரர் பற்றி பரமாச்சாரியார் அந்த பேட்டியில் உயர்வாக கூறியிருந்தது - தமிழகம் முழுவதும் இருந்த பக்தர்களுக்கு மகிழ்ச்சியும் உற்சாகமும் அளித்தது.

நன்றி:- அந்திமழை



ஈகரை தமிழ் களஞ்சியம் காஞ்சி பெரியவரும் பத்திரிக்கையாளர் ராவும்  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Oct 14, 2012 7:16 pm

காவியில் பாவியாகி டிவியில் தெரிய நான் சித்தி பெற்ற நித்தி அல்ல



ஈகரை தமிழ் களஞ்சியம் காஞ்சி பெரியவரும் பத்திரிக்கையாளர் ராவும்  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Oct 14, 2012 8:45 pm

பாலாவின் பழமைகாலம், வேதம் கற்ற வித்யார்த்தி, பத்திரிகை ஆசிரிய சேவை பல பல.
உங்கள் தற்போதைய நகைச்சுவை விருந்தை விரும்பி ரசித்தவன். இருப்பினும் மகாபெரியவா , பரமாச்சார்யர் அவர்களுடன் பேட்டி எடுத்தது, இவைகளை படிக்கையில் உம் மதிப்பு அதிகம் உயர்ந்தது.
எங்கள் குலகுரு பரமாச்சார்யா சந்திரசேகரசரஸ்வதி என்று கூறும் பொழுதே , எழுதும் போதே என் கண்களில் ஆனந்த கண்ணீர் துளிகள். விடை காணா விஷயங்கள் குழப்பும் போதெல்லாம் "பெரியவா" நாமம் கூறி தெளிவு பெற்ற நேரங்கள் பல.

தற்போதைய சமாச்சாரங்கள் பேசாமல் இருப்பதே மனதிற்கு நிம்மதி.

பதிவுக்கு நன்றி, பாலா. மூன்று வருட அனுபவங்கள் எழுதலாமே.!!

ரமணியன்

badri7986
badri7986
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 32
இணைந்தது : 01/10/2012

Postbadri7986 Mon Oct 15, 2012 9:34 am

ஜெயேந்திரர் ஓடி போனாரா ? அது என்ன நிகழ்ச்சி ? யாரேனும் தெளிவுபடுத்த முடியுமா ?

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Oct 15, 2012 9:48 am

badri7986 wrote:ஜெயேந்திரர் ஓடி போனாரா ? அது என்ன நிகழ்ச்சி ? யாரேனும் தெளிவுபடுத்த முடியுமா ?

அவர் ஓடினதும் அவர் பின்னாலேயே பா.கா ஓடினதும் ஊரே சேர்ந்து மூவரையும்(?) துரத்தியதையும் எப்படி வெளியே சொல்வார் ஓமன் கிளை ஓனர்?...
புன்னகை சிரி சிரி புன்னகை சிரி சிரி ஜாலி



காஞ்சி பெரியவரும் பத்திரிக்கையாளர் ராவும்  - Page 2 224747944

காஞ்சி பெரியவரும் பத்திரிக்கையாளர் ராவும்  - Page 2 Rகாஞ்சி பெரியவரும் பத்திரிக்கையாளர் ராவும்  - Page 2 Aகாஞ்சி பெரியவரும் பத்திரிக்கையாளர் ராவும்  - Page 2 Emptyகாஞ்சி பெரியவரும் பத்திரிக்கையாளர் ராவும்  - Page 2 Rகாஞ்சி பெரியவரும் பத்திரிக்கையாளர் ராவும்  - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
avatar
Guest
Guest

PostGuest Mon Oct 15, 2012 10:48 am

என்ன என்னமோ பேசறாங்க ..

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Oct 15, 2012 11:20 am

ஓடாத ஓட்டம் என்ன
ஓடியதின் காரணம் என்ன
என்ன என்ன என்ன என்ன என
அறிய துடிக்கும் பத்ரிக்கு காரணம் சொல்லுங்க பாஸ்...

அது நாடறிந்த ரகசியம் தானே - ரொம்ப வருஷத்துக்கு அப்புறம் கேட்டா என்னத்த சொல்றது?




Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக