புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கதை எண்.19 - சொர்க்கத்தின் வாசல்... (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண்.19 - சொர்க்கத்தின் வாசல்... (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண்.19 - சொர்க்கத்தின் வாசல்... (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
கதை எண்.19 - சொர்க்கத்தின் வாசல்... (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண்.19 - சொர்க்கத்தின் வாசல்... (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண்.19 - சொர்க்கத்தின் வாசல்... (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
கதை எண்.19 - சொர்க்கத்தின் வாசல்... (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண்.19 - சொர்க்கத்தின் வாசல்... (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண்.19 - சொர்க்கத்தின் வாசல்... (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
கதை எண்.19 - சொர்க்கத்தின் வாசல்... (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண்.19 - சொர்க்கத்தின் வாசல்... (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண்.19 - சொர்க்கத்தின் வாசல்... (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
கதை எண்.19 - சொர்க்கத்தின் வாசல்... (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண்.19 - சொர்க்கத்தின் வாசல்... (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண்.19 - சொர்க்கத்தின் வாசல்... (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
கதை எண்.19 - சொர்க்கத்தின் வாசல்... (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண்.19 - சொர்க்கத்தின் வாசல்... (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண்.19 - சொர்க்கத்தின் வாசல்... (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
கதை எண்.19 - சொர்க்கத்தின் வாசல்... (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண்.19 - சொர்க்கத்தின் வாசல்... (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண்.19 - சொர்க்கத்தின் வாசல்... (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
2 Posts - 1%
prajai
கதை எண்.19 - சொர்க்கத்தின் வாசல்... (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண்.19 - சொர்க்கத்தின் வாசல்... (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண்.19 - சொர்க்கத்தின் வாசல்... (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
2 Posts - 1%
Manimegala
கதை எண்.19 - சொர்க்கத்தின் வாசல்... (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண்.19 - சொர்க்கத்தின் வாசல்... (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண்.19 - சொர்க்கத்தின் வாசல்... (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
கதை எண்.19 - சொர்க்கத்தின் வாசல்... (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண்.19 - சொர்க்கத்தின் வாசல்... (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண்.19 - சொர்க்கத்தின் வாசல்... (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கதை எண்.19 - சொர்க்கத்தின் வாசல்... (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண்.19 - சொர்க்கத்தின் வாசல்... (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண்.19 - சொர்க்கத்தின் வாசல்... (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
435 Posts - 47%
heezulia
கதை எண்.19 - சொர்க்கத்தின் வாசல்... (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண்.19 - சொர்க்கத்தின் வாசல்... (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண்.19 - சொர்க்கத்தின் வாசல்... (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
கதை எண்.19 - சொர்க்கத்தின் வாசல்... (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண்.19 - சொர்க்கத்தின் வாசல்... (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண்.19 - சொர்க்கத்தின் வாசல்... (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
கதை எண்.19 - சொர்க்கத்தின் வாசல்... (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண்.19 - சொர்க்கத்தின் வாசல்... (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண்.19 - சொர்க்கத்தின் வாசல்... (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
கதை எண்.19 - சொர்க்கத்தின் வாசல்... (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண்.19 - சொர்க்கத்தின் வாசல்... (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண்.19 - சொர்க்கத்தின் வாசல்... (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
30 Posts - 3%
prajai
கதை எண்.19 - சொர்க்கத்தின் வாசல்... (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண்.19 - சொர்க்கத்தின் வாசல்... (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண்.19 - சொர்க்கத்தின் வாசல்... (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
கதை எண்.19 - சொர்க்கத்தின் வாசல்... (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண்.19 - சொர்க்கத்தின் வாசல்... (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண்.19 - சொர்க்கத்தின் வாசல்... (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
5 Posts - 1%
sugumaran
கதை எண்.19 - சொர்க்கத்தின் வாசல்... (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண்.19 - சொர்க்கத்தின் வாசல்... (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண்.19 - சொர்க்கத்தின் வாசல்... (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
கதை எண்.19 - சொர்க்கத்தின் வாசல்... (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண்.19 - சொர்க்கத்தின் வாசல்... (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண்.19 - சொர்க்கத்தின் வாசல்... (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
கதை எண்.19 - சொர்க்கத்தின் வாசல்... (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண்.19 - சொர்க்கத்தின் வாசல்... (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண்.19 - சொர்க்கத்தின் வாசல்... (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கதை எண்.19 - சொர்க்கத்தின் வாசல்... (சிறுகதை சின்னத்திருவிழா)


   
   
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Oct 13, 2012 7:49 pm

சொர்க்கத்தின் வாசல்...

விசுவநாதன், விசாலாட்சி தம்பதி கண் மூடி சிவன் சன்னிதியில் பிரார்த்திக்க யார் பேர்ல ‎அர்ச்சனை..? அர்ச்சகரின் குரல் கேட்டு..சின்னவன் பேருக்கு சாமி. சிவா, பரணி நட்சத்திரம். ‎அர்ச்சகர் சங்கல்பம் செய்தபடியே நகர. கடவுளே என் மகன், மருமகள் நல்லபடியா இருக்கனும். ‎

‎“இந்தாங்கோ பிரசாதம்… என்ன விசாலாட்சி அம்மா இன்னிக்கு என்ன விசேசம்? “‎
‎“என் மகனும், மருமகளும் இன்னிக்கு அமெரிக்கா போறாங்க சாமி அதான் அர்ச்சனை ‎பண்ணிட்டு போலாம்னு வந்தோம்.”‎

‎“அப்படியா ரொம்ப சந்தோசம். அவன் அருளால எல்லாம் நல்லபடியா நடக்கும் ‎கவலைப்படாதீங்கோ..”‎
‎“சரி சாமி நேரமாச்சு நாங்க கிளம்பறோம்.” என்றபடி கோவிலில் இருந்து கிளம்பினர்.

மூத்தவன் ரவிக்கு படிப்பிற்கேற்றவாறு நல்ல உத்தியோகம் கிடைக்க மனைவி, ‎குழந்தைகளுடன் சிங்கப்பூரில் வசிக்கத் துவங்கிவிட்டான். இரண்டாமவன் சந்துரு ஐந்து ‎வருடமாக துபாயில் மனைவி, மகனுடன் வசிக்கிறான்.

மூன்றாமவன்தான் சிவா கடைக்குட்டி அம்மாவின் செல்லப்பிள்ளை. காலேஜ் போனாலும் ‎அம்மா அம்மா என சுற்றி சுற்றி வருவான். சென்ற மாதம்தான் சங்கரியோடு திருமணம் ‎நிகழ்ந்தது. சங்கரி பணக்கார வீட்டு பெண், படித்தவள் இருப்பினும் கொஞ்சமும் அந்த பகட்டு ‎இல்லாமல் அத்தை, மாமா என அனைவரிடமும் மிகவும் அன்பாகவே நடந்துகொள்பவள். ‎இப்பொழுது சிவா வேலை பார்த்த நிறுவனமே அவனையும், மனைவியையும் அமெரிக்கா ‎அனுப்புவதின் விளைவு இன்றைய பயணம் .

விஸ்வநாதனும், விசாலாட்சியும் ஆரம்பகாலத்தில் மிகவும் கஷ்டப்பட்டாலும், குழந்தைகள் ‎படித்து வேலைக்கு செல்லத்துவங்கியதும் நல்ல நிலைக்கு வந்து விட்டனர். வசதிக்கு ‎குறைவில்லை. மருமகள்களும் வந்துசெல்லும் நேரம் மட்டுமன்றி அவ்வப்பொழுது ‎அழைத்துப்பேசி, இந்தியா வருபவர்களிடம் அத்தை, மாமாவிற்கு தேவையானதை அனுப்பி ‎வைத்தனர்.

மாலை..சிவா, சங்கரி கிளம்பும் நேரமும் வர..விசாலாட்சி தன் மனக்கவலையினை வெளியில் ‎காட்டிக்கொள்ளாமல் வழியனுப்ப முயற்சித்தாள்.

அம்மா, அப்பா நாங்க கிளம்பறோம் எங்கள ஆசீர்வாதம் பண்ணுங்க..என இருவரும் காலில் ‎விழ நல்லபடியா போயிட்டு வாங்க என கண்ணீர் மல்க ஆசீர்வதித்தாள் விசாலம். உடம்ப ‎கவனமா பார்த்துக்கோங்க. எதுவா இருந்தாலும் எந்த நேரம்னாலும் போன் பண்ணுங்க. ‎பிரபுகிட்ட சொல்லியிருக்கேன் அவனும் அப்பப்போ வந்து பார்த்துப்பான். நான் தினம் போன் ‎பண்றேன்.

மாமா, அத்தை நாங்க கிளம்பறோம் என்ற சங்கரியிடம் பிரியாவிடைகொடுத்தபடியே, ‎
‎“நாங்களும் ஏர்போர்ட் வரேன் சொன்னா ஏன் வேண்டாங்கிறே..??”‎
‎“அப்படி இல்லேம்மா அங்க வந்து என்ன செய்யப்போறீங்க..வாசலோட திரும்பனும் எதுக்கு ‎உங்களுக்கு வீண் சிரமம்ன்னுதான் வேண்டாம் சொல்றேன்.”‎
‎“சரிப்பா இரண்டு பேரும் கவனமா போயிட்டு வாங்க..கடவுள் என்னிக்கும் துணையிருப்பார்.”‎

அன்றிரவு முழுவதும் மகனைப்பிரிந்த ஏக்கத்தில் விசாலம் உறங்காமல் விழித்திருந்தவள் ‎அதிகாலை சற்றே கண்ணயர.. கணவனின் குரல் கேட்டு வேகமாக எழுந்தவள் அவர் ‎யாருடனோ போனில் பேசுவதைக் கண்டு “யாருங்க நம்ம சிவாவா..?” என ஆவலாய் ‎கேட்டாள். அவள் பக்கம் திரும்பி “ம்....” என்றவர் “இருப்பா அம்மாகிட்ட கொடுக்கறேன்.” ‎என்றார்.‎
‎“சிவா, எப்படிப்பா இருக்க..நல்லபடியா போய் சேர்ந்தியா.வீடு நல்லா இருக்கா..யாரும் ‎ஏர்போர்ட் வந்தாங்களா” என அடுக்க... “எல்லாம் வசதியா இருக்கும்மா.நீங்க ‎கவலைப்படாதீங்க.” என்றதும் சரிப்பா என சங்கரியிடமும் விசாரித்தவள் சற்றே ‎மனநிம்மதியுடன் காணப்பட்டாள்..‎

இவர்களது பாசம் இப்படியே போனில் தொடர்ந்தது. அவர்களது பரபரப்பான வாழ்வில் ‎ஆறுமாதம் ஆறுவாரம்போல் கடந்தது. ஒரு நாள் இரவு திடீரென அப்பாவிடமிருந்து ‎அழைப்பு....‎

‎“என்னப்பா இந்த நேரத்தில்...?” சற்றே திகிலுடன் சிவா வினவ.. “அம்மாவிற்கு மாலையில் ‎இருந்து நெஞ்சு வலிப்பா. நம்ம டாக்டர் வந்து பார்த்துட்டு போயிருக்கார். நாளை ‎ஹாஸ்பிடல் அழைத்துவர சொல்லியிருக்கார் ஏதோ டெஸ்ட்டெல்லாம் எடுக்கனுமாம்.” ‎
‎“அய்யோ...இப்ப எப்படிப்பா இருக்காங்க...நாங்க பேசலாமா..?”‎

‎“இல்லப்பா மாத்திரை சாப்பிட்டு தூங்கறா.. நீ கவலைப்படுவே உன்கிட்ட சொல்லவேணாம்னு ‎சொன்னா. எனக்குத்தான் பயமா இருந்திச்சு அதான் போன் பண்ணேன். சரி நீ வருந்தாத. ‎நாளை ஹாஸ்பிடல் போயிட்டு அங்கிருந்து போன் பண்றேன்.”‎

சங்கரியிடம் அம்மாவின் உடல்நிலை குறித்து வெகுநேரம் கவலையுடன் ‎பேசிக்கொண்டிருந்தவன் எப்பொழுது உறங்கினான் என்றே தெரியவில்லை..‎

போன் சத்தம் அலர..அதிர்ந்து எடுத்தவன் “என்னாச்சுப்பா..” பதற்றமாய் கேட்டான்.‎
‎“சிவா உங்க அம்மாவை ஹாஸ்பிடல்ல அட்மிட் செய்திருக்கேன். ரொம்ப சீரியஸாம். ‎உடனே எல்லார்க்கும் தெரிவிங்கன்னு சொல்லிட்டாருப்பா நம்ம டாக்டரு.” எதிர் முனையில் ‎அப்பாவின் குரல் உடைந்திருந்தது. “அய்யோ அம்மா.. என்னப்பா இது.. ஆமா ‎அண்ணாக்கெல்லாம் சொல்லிட்டீங்களா..??” ‎

‎“இப்பதான் பேசினேன்பா.. பெரியவன் வேல விசயமா ஜெர்மனி போயிருக்கானாம். தொடர்பு ‎கொள்ள முடியல. அடுத்தவன் பிளைட் டிக்கட் எவ்வளவு முயற்சி செய்தும் கிடைக்கலன்னு ‎ஒரே அழுகை.”‎

‎“அய்யோ... அப்பா இப்ப என்னாலயும் உடனே வரமுடியாதே. நாளை ஒரு அவசர மீட்டிங் ‎இருக்கு. அதுக்கு போகலேன்னா கோடிக்கணக்கில் நாம நஷ்ட ஈடு தரமாதிரி இருக்குமே.. ‎எனக்கு என்ன செய்யறதுன்னே தெரியலியே... கண்கள் குளம் கட்ட, “அப்பா... அங்க நம்ம ‎டாக்டருகிட்ட கேட்டு கேமரா ஆன்பண்ண சொல்லுங்கப்பா. அம்மாவைப் பார்க்கனும் போல ‎இருக்கு.” என்றான்.‎

‎“இல்லப்பா ஐ.சி.யுவில இருக்கிறதால அனுமதி இல்ல. மூன்று பசங்க இருந்தும் கடைசி ‎நேரத்தில் ஒருத்தர்கூட பக்கத்தில் இருக்க கொடுப்பன இல்லாத பாவியாயிட்டோம் நாங்க...” ‎என விசுவநாதன் கதற. ‎

‎“அப்பா அழாதீங்க.. அதெல்லாம் ஒண்ணும் ஆகாது” என இவன் கதற...‎

‎“என்னாச்சுங்க” சங்கரி சிவாவை உலுக்கி எழுப்பினாள். ‎

திடுக்கிட்டு எழுந்தவன்., நான் கண்டது கனவா..?? என மணி பார்த்தான். காலை 6 மணி. ‎அதிகாலை கனவு பலிக்கும் என்பார்களே என குழம்பியபடியே எழுந்து வழக்கம்போல் ‎அலுவலகம் கிளம்பிச் சென்றான்.‎

அலுவலகம் சென்றவன், மேலதிகாரியிடம் தனது ராஜினாமாக் கடிதத்தை கொடுக்க..‎
‎“என்னாச்சு சிவா, சொர்க்கம் மாதிரி வசதிகள் செய்து கொடுத்திருக்கோம்.. இன்னும் வேற ‎என்ன வேணுமோ கேளு..அதுக்கு ஏன் ராஜினாமா செய்யனும்..??” என வினவ...‎

‎“சொர்க்கம் மாதிரி வசதிகளுக்கு அடிமையாகித்தான் அம்மா, அப்பாவுடன் சேர்ந்து வாழும் ‎சொர்க்கத்தையே இழந்துட்டு நிக்கறோம். போதும் சொர்க்கத்தின் வாசலை ‎அடைத்துவிட்டு சொர்க்கத்திற்கு போகும் வழி தேடறோம் நாங்க எல்லாம். ‎கஷ்டப்பட்ட காலத்தில் காசுமேல ஆசை இருந்தது உண்மைதான்..ஆனா அப்பகூட ‎சந்தோசமாத்தான் இருந்தோம். இப்ப காசு, வசதிகள் இருக்கு..ஆனா இந்த உலகுக்கு ‎அழைத்துவந்த அம்மா, அப்பாவை தவிக்கவிட்டு அவங்க மரணப்படுக்கையில் ‎இருக்கும்போதுகூட போன்ல அழற நரக வாழ்வு எனக்கு வேண்டாம் சார்...” எனக்கூறி ‎தன் இருக்கைக்குத் திரும்பியவனை மனைவி சங்கரி போனில் அழைக்க.. “என்னாச்சும்மா..? ‎

மாமா போன் செய்தார்ங்க..அத்தைக்கு ஒன்றும் இல்லையாம். சாதாரண கேஸ், அப்புறம் ‎உங்களப்பிரிஞ்ச கவலை இரண்டும் சேர்ந்த்தாலத்தானு டாக்டர் சொல்லிட்டாராம். நீங்க ‎கவலைப்பட வேணாம்னு மாமா சொல்லச்சொன்னார் என்றாள் சந்தோஷமாக.‎
நன்றி கடவுளே என்றவன், தான் ராஜினாமாக் கடிதம் கொடுத்துவிட்டதையும், அடுத்த ‎வாரமே இந்தியாவோடு செல்ல முடிவெடுத்திருப்பதாகவும் மனைவியிடன் கூற, ரொம்ப ‎சந்தோசங்க. உங்க முடிவு மிகவும் சரியானது. எனக்கும் மகிழ்ச்சி என்றவள் தன் கணவனை ‎நினைத்து பெருமிதப்பட்டவாறே இந்தியாப் புறப்பட என்ன என்ன செய்யவேண்டும் என ‎திட்டமிடலானாள் மனதினுள்...!!!‎
@@@@@@@@@@@


kumar006
kumar006
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 14/10/2012

Postkumar006 Sun Oct 14, 2012 10:37 pm

கதை நல்லாயிருக்கு... எழுதிய கதை ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக