புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கதை எண். 16 - இதோ உதவி (சிறுகதை சின்னத்திருவிழா)
Page 1 of 1 •
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
இதோ உதவி
எதிர் வீட்டில் ஏற்பட்ட அமளி, துப்பறியும் நாவல் ஒன்றில் ஆழ்ந்திருந்த என் கவனத்தைத் திருப்பியது. என்ன என்று என் மனைவியை விசாரித்தேன்.
“காலேஜ்ல படிக்கிற அவங்க பையன் தற்கொலை செய்துக்கப் போறதாய் சொல்லி அறைக்குள்ளே போய் கதவைத் தாழ் போட்டுகிட்டிருக்கிறான். தட்டினால் கதவைத் திறக்க மாட்டேன்கிறான். இதுக்கு முன்னாடி ரெண்டு தடவையும் இப்படி சொல்லிட்டு பிறகு தற்கொலை செய்துக்கலைன்னாலும் அவங்கப்பாவும் அம்மாவும் பயப்படறாங்க... ஒரு தடவை இருக்கற மனசு இன்னொரு தடவை இருக்கும்னு சொல்ல முடியாதில்லையா?”
“என்ன காரணமாம்?”
“அவன் கேட்ட பைக் வாங்கித் தரலையாம். இப்ப காசில்லை, அடுத்த வருஷம் பார்த்துக்கலாம்னு சொன்னதுக்கு கோவிச்சுகிட்டு தான் இப்படி செய்திருக்கான்...”
உடனே பீரோவில் பத்திரப்படுத்தி வைத்திருந்த ஒரு ஃபைலை எடுத்துக் கொண்டு நான் எதிர் வீட்டுக்குப் புறப்பட்டேன்.
எதிர் வீட்டில் அக்கம் பக்கத்தினர் நிறைய பேர் சேர்ந்திருந்தனர். ஒவ்வொருவர் ஒவ்வொரு ஆலோசனை சொல்லிக் கொண்டிருந்தனர். எதிர் வீட்டு அம்மாளின் புடவைத் தலைப்பு கண்ணீரால் நிறையவே நனைந்திருந்தது. அவரது கணவரின் முகத்திலும் பயம் பரவி இருந்தது. ”கதிர், சொன்னா கேளுப்பா. முட்டாள் தனமா ஏதாவது செய்துக்காதப்பா. முதல்ல கதவைத் திற....” என்று கதவைத் தட்டி கெஞ்சிக் கொண்டிருந்தார்.
என்னைக் கண்டவுடன் அழாத குறையாய் சொன்னார். “ஒரே பையன்னு ரொம்பவே செல்லம் கொடுத்து கேட்டதை எல்லாம் என்ன பாடுபட்டாவது வாங்கிக் கொடுத்து வளர்த்திட்டோம். ஒத்தை சம்பாத்தியத்தில் இந்த விலைவாசியில் இவனோட படிப்புச் செலவையும் வீட்டுச் செலவையும் சமாளிக்க முடியாமல் திண்டாடறேன். அதை எல்லாம் புரிஞ்சுக்காம உங்க பிள்ளையா இருக்கறதுக்கு சாகலாம்னு சொல்லிட்டு உள்ளே போயிருக்கான்... நீங்களே நியாயம் சொல்லுங்க”
நான் அவரிடம் அமைதியாய் இருக்க சைகை செய்து விட்டு கதிர் என்கிற கதிரேசனின் அறைக்கதவருகே சத்தமாய் சொன்னேன். “கதிர் நான் எதிர்த்த வீட்டு அங்கிள் பேசறேன்ப்பா. உனக்கு உதவி செய்ய வந்திருக்கேன். நீ ஆசைப்பட்ட படியே செஞ்சிடலாம். கதவைத் திறப்பா”
உடனடியாக அவன் கதவைத் திறக்கவில்லை என்றாலும் மேலும் இருமுறை அவனுக்கு உதவி செய்ய வந்திருக்கிறேன் என்று சொன்ன பிறகு மெல்ல கதவைத் திறந்தான். நான் உள்ளே போய் கதவை மீண்டும் சாத்திக் கொண்டேன்.
நான் எதிர்பார்த்தபடியே உள்ளே அவன் தற்கொலைக்கு ஆயத்தமான அறிகுறி எதுவும் தென்படவில்லை. அவன் கணிணியில் ஏதோ பார்த்துக் கொண்டிருந்தான் என்பது புரிந்தது.
நான் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தபடியே சொன்னேன். ”மனிதன் வாழ்ந்தால் விருப்பப்பட்டபடி வாழணும். அப்படி வாழ முடியாட்டி செத்துப் போறது நல்லது தான். அந்த உரிமை ஒவ்வொருத்தருக்கும் தரப்படணும்னு நினைக்கறவன் நான். பிறக்கறது நம்ம அனுமதி இல்லாமயே நடந்துடுது. ஆசைப்படறப்ப சாகவாவது அனுமதி வேணும்கிறது தான் என்னோட அபிப்பியாயம்.” என்று சொல்லி என் கையில் இருந்த ஃபைலை அவனிடம் நீட்டினேன்.
”இது என்ன?” என்று அவன் சந்தேகத்தோடு கேட்டான்.
“தற்கொலை செய்துக்க எத்தனை வழிகள் இருக்கோ அத்தனை வழிகளையும் இண்டர்நெட்டில் இருந்து முழு விவரத்தோட எடுத்து வச்சிருக்கேன். சயனைடு, சாணிப்பவுடர், துப்பாக்கி, கத்தி, கயிறு, இரயில் வண்டி, தூக்க மாத்திரை மட்டும் அல்ல இன்னும் புது விதமா எத்தனை வழிகள் இருக்கோ அத்தனையில் இதில் இருக்கு”
நான் உதவி என்று சொன்னதை அவன் பைக் வாங்க உதவி என்று நினைத்துத் தான் உள்ளே விட்டான் என்பதும், கண்டிப்பாக தற்கொலை செய்து கொள்ள உதவி செய்ய ஒருவன் வருவான் என்று அவன் சிறிதும் எதிர்பார்க்கவில்லை என்பதும் அவன் முகபாவனையில் இருந்தே தெரிந்தாலும் நான் சீரியஸாக முகத்தை வைத்துக் கொண்டு அவனை ஆர்வமாகப் பார்த்தேன்.
அவன் வேண்டா வெறுப்பாக அந்தப் ஃபைலைத் திறந்து பார்த்தான். ஒவ்வொரு விதமான தற்கொலை விதமும் முடிந்த வரை கோரமாக அதில் விளக்கப்பட்டிருந்தது. அந்தந்த முறையில் எத்தனை காலத்திற்குள் மரணம் நிகழும் என்பதும், மரண காலத்திற்குள் உடல் என்னென்ன உபாதைகளை அனுபவிக்கும் என்பதும் மிக விரிவாக விளக்கப் பட்டிருந்தது. செத்துப் போனவர்களின் பரிதாபப் படங்களும் நிறைய உடனிருந்தன.
அவன் கைகள் சில பக்கங்களை மேலோட்டமாய் புரட்டியதிலேயே நடுங்கியது.
“எதுக்கு.... இந்த மாதிரி ஒரு ஃபைலை வச்சிருக்கீங்க?” என்று அவன் பலவீனமான குரலில் கேட்டான்.
“என் சொந்தக்காரப் பையன் ஒருத்தன் தற்கொலை செய்துக்கணும்னு ஆசைப்பட்டான். அவனுக்கு உதவறதுக்காக இதைக் கஷ்டப்பட்டு தயாரிச்சுட்டு போய் கொடுத்தேன். அவன் கோழை. கடைசியில் தற்கொலை செய்துக்க மறுத்துட்டான். அதை விடுப்பா. இது உனக்காவது உபயோகமாகுதான்னு பார்க்கலாம்.... உனக்கு எந்த வழி ஓக்கேன்னு சொல்லு... நான் அதுக்கு உதவி கண்டிப்பா செய்யறேன்.... பின்னே நீ அந்தப் படங்களையும் நல்லா பார்த்துக்கோ. தற்கொலை செய்துகிட்டா பத்திரிக்கைல படத்தோட செய்தி வரும். உன்னோட கடைசி படமா அது இருக்கும்கிறதால எப்படி வரணும்கிறதையும் நீ முடிவு செய்துக்கோ...”
அவன் ஒருசில படங்களைப் பார்த்து விட்டு ஒன்றும் பேசாமல் முகமெல்லாம் வெளுத்துப் போய் அந்த ஃபைலை என்னிடம் திருப்பித் தந்தான்.
“எந்த முறை உனக்குப் பிடிச்சிருக்கு? எப்ப தற்கொலை செய்துக்கறதா முடிவு செஞ்சிருக்கே?”
அவன் முறைத்தபடி சொன்னான். “நான் தற்கொலை செய்துக்கப் போறதில்லை. நீங்க போகலாம்....”
”நல்லா யோசிச்சு தான் சொல்றியா?”
அவன் எரிச்சலோடு சொன்னான். “ஆமாம்....”
“இந்த ஃபைல் உனக்கும் உபயோகமாகலை பாரு. பரவாயில்லை... இப்ப இல்லைன்னாலும் உனக்கு எப்ப தேவைப்பட்டாலும் என்னைக் கேளு. நான் எதிர் வீட்டுல தான் இருக்கேன். இந்த ஃபைலும் எப்பவும் என் கிட்ட தான் இருக்கும்.. என்ன உதவியானாலும் செய்யறேன். சரியா?”
அவன் வேண்டா வெறுப்பாக தலையாட்டினான். நான் போனால் போதும் என்பது போல அவன் இருந்தான்.
நான் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தேன்.
அவனுடைய தந்தை கவலையோடு கேட்டார். “என்ன சொல்றான்?”
“தற்கொலை செய்துக்க மாட்டேன்னு பிடிவாதமா சொல்றான்”
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|