புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
விருந்தெனும் ஆடம்பரம்...!!!  ‎  Poll_c10விருந்தெனும் ஆடம்பரம்...!!!  ‎  Poll_m10விருந்தெனும் ஆடம்பரம்...!!!  ‎  Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
விருந்தெனும் ஆடம்பரம்...!!!  ‎  Poll_c10விருந்தெனும் ஆடம்பரம்...!!!  ‎  Poll_m10விருந்தெனும் ஆடம்பரம்...!!!  ‎  Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
விருந்தெனும் ஆடம்பரம்...!!!  ‎  Poll_c10விருந்தெனும் ஆடம்பரம்...!!!  ‎  Poll_m10விருந்தெனும் ஆடம்பரம்...!!!  ‎  Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
விருந்தெனும் ஆடம்பரம்...!!!  ‎  Poll_c10விருந்தெனும் ஆடம்பரம்...!!!  ‎  Poll_m10விருந்தெனும் ஆடம்பரம்...!!!  ‎  Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
விருந்தெனும் ஆடம்பரம்...!!!  ‎  Poll_c10விருந்தெனும் ஆடம்பரம்...!!!  ‎  Poll_m10விருந்தெனும் ஆடம்பரம்...!!!  ‎  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விருந்தெனும் ஆடம்பரம்...!!!  ‎  Poll_c10விருந்தெனும் ஆடம்பரம்...!!!  ‎  Poll_m10விருந்தெனும் ஆடம்பரம்...!!!  ‎  Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
விருந்தெனும் ஆடம்பரம்...!!!  ‎  Poll_c10விருந்தெனும் ஆடம்பரம்...!!!  ‎  Poll_m10விருந்தெனும் ஆடம்பரம்...!!!  ‎  Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
விருந்தெனும் ஆடம்பரம்...!!!  ‎  Poll_c10விருந்தெனும் ஆடம்பரம்...!!!  ‎  Poll_m10விருந்தெனும் ஆடம்பரம்...!!!  ‎  Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
விருந்தெனும் ஆடம்பரம்...!!!  ‎  Poll_c10விருந்தெனும் ஆடம்பரம்...!!!  ‎  Poll_m10விருந்தெனும் ஆடம்பரம்...!!!  ‎  Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
விருந்தெனும் ஆடம்பரம்...!!!  ‎  Poll_c10விருந்தெனும் ஆடம்பரம்...!!!  ‎  Poll_m10விருந்தெனும் ஆடம்பரம்...!!!  ‎  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விருந்தெனும் ஆடம்பரம்...!!! ‎


   
   
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
பண்பாளர்

பதிவுகள் : 240
இணைந்தது : 23/09/2012
http://thoorikaisitharal.blogspot.in/

Postகாயத்ரி வைத்தியநாதன் Sat Oct 13, 2012 1:50 pm


பொதுவாக இன்றைய காலக்கட்டங்களில் விருந்து, திருமணம் எனில் ‎பலவகையான பெயர் புரியாத உணவு வகைகளை கணக்கில் கூட கொள்ள ‎முடியாத அளவு இருக்க வேண்டும் என்ற நியதியை வரையறுக்கப்படாத ‎சட்டமாகவே கடைபிடித்து வருகிறோம். இது அவசியமா..?? இப்படி ‎செய்வதன் காரணம்தான் என்ன..?

முன்பெல்லாம் ஓரிரு இனிப்பு வகைகள், இரண்டு வகை கரி, கூட்டு, பச்சடி, ‎சாம்பார், ரசம் போன்ற அத்தியாவசிய உணவு வகைகள் விருந்தில் ‎இடம்பெறும். விருந்து கொடுப்பவர் ஒவ்வொருவரையும் அணுகி எப்படி ‎இருக்கிறது, நன்றாக சாப்பிடுங்கள் என அன்புடன் விசாரித்து உபசரிக்க ‎அனைவரும் உண்ட மகிழ்வு ஒருபுறமும், உபசரித்த விதத்திலான மகிழ்வு ‎ஒருபுறமுமாக மனநிறைவுடன் செல்வார்கள்.

இன்று, விருந்திற்கு வந்தவரை உபசரிக்கவும் ஆட்கள் கிடையாது. ‎உண்டனரா எனக் கேட்கவும் ஆட்கள் கிடையாது. அவரவர் எது ‎வேண்டுமோ போட்டு சாப்பிடலாம். சாப்பிட்டாரா இல்லையா என்றும் கூட ‎அழைத்தவர்க்கு தெரியாது. எதை சாப்பிடுவது, எதை தவிர்ப்பது என ‎முடிவு செய்ய முடியாத அளவிலான உணவு வகைகள். இது யாருக்காக...?

சராசரியாக ஒரு மனிதன் தன் வயிற்றிற்கு எவ்வளவு உணவு சாப்பிட ‎முடியும்..?? தாங்கள் அதிக வகையிலான உணவுவகைகள் ‎வைத்திருப்பதால் அனைத்தையும் சாப்பிட முடியுமா..?? சரி என்னவென்று ‎பார்க்கலாமே என்ற எண்ணத்தில் எடுக்கப்படும் உணவுகள் எச்சிலிலையில் ‎ஏராளமாக குப்பைத்தொட்டியில் வீசப்படுகின்றது. இது யாரை யார் திருப்தி ‎செய்யவதற்கான ஏற்பாடு..?? உங்கள் வீட்டுக்கு வரும் விருந்தினர்கள் ‎உங்கள் இல்ல விழாவில் கலந்துகொள்ளத்தானே வருகின்றனர் அல்லது ‎உங்கள் வீட்டு விருந்தில் எவ்வளவு வகையான உணவு வகைகள் ‎பரிமாறப்படுகின்றன என்பதை பார்க்கவா..??

உங்கள் உடைகளையும், உணவு வகைகளையும் பார்த்துதான் மற்றவர்கள் ‎உங்கள் தரத்தை எடை போடவேண்டுமா..?? அப்படி உங்களுடைய ‎ஆடைகளுக்காகவும் ஆடம்பரமான உபசரிப்புக்காகவும் மதிப்பவன், நாளை ‎உங்களைவிட அதிக ஆடம்பரமாக ஒருவன் உபசரிக்கத் துவங்கினால், ‎உங்களை மறந்துவிடுவான் தானே..?? அப்படியிருக்க, தற்காலிகமாக ஒரு ‎சில நாட்கள் கிடைக்கப்போகும் அல்லது உங்களைப் பற்றி விமரிசையாக ‎பேசப்படும் ஒரு நிகழ்விற்காக இத்துனை ஆடம்பரம் தேவைதானா..??
ஏன் இந்த மனோநிலை..??

மேல்தட்டு நாகரீகமாக மட்டும் இருந்து வந்த இந்தப் பழக்கம், இன்று ‎நடுத்தர வர்க்கத்தினரிடையேயும் பரவுகிறது. தங்களால் இயலாவிட்டாலும் ‎ஒருவரைவிட ஒருவர் அதிகம் செய்து காட்ட வேண்டும் என்ற ‎எண்ணத்தில் அவர்களுக்கு ஈடுகொடுக்க முயற்சி செய்கிறார்கள். பாசம், ‎அன்புப் பகிர்வதில் போட்டியிடலாம். ஆடம்பரத்திலும் இந்த போட்டி ‎தேவையா..?? சில தவிர்க்க இயலாத சந்திப்புகளில் எனில் சரி. ஆனால் ‎இதையே வழக்கம் என மாற்றிக்கொண்டு வரும் நபர்கள் சற்றேனும் ‎சிந்திப்பார்களா..??

இன்று உங்கள் இலையில் அதிகமாக அல்லது நாகரீகம் எனக்கருதி ‎உங்களால் சுவைக்கப்படாமலேயே விரயமாக்கப்படும் உணவு எத்துனை ‎பேரின் வாழ்வாதாரமாக அமையும் என்பதை ஏன் சிந்திக்கத் ‎தவறுகிறோம்.?

இனியாவது யார் என்ன நினைப்பார்களோ என்பதற்காக இல்லாமல் நான் ‎இதைச்செய்வதனால் பலர் பயனடைகிறார்கள் என்ற நோக்கில் நம் மன ‎திருப்திக்காக மனிதம் கடைபிடித்து ஆடம்பரம் தவிர்த்து ‎வாழத்துவங்குவோமே..!!

மாற்றம் என்பது அதிசயத்தக்க வகையில் நிகழாது. நாமாக ‎துவங்குவதுதானே மாற்றம். முதலில் நமது இல்லத்தில் இருந்து ‎துவங்கலாமே. நமது இல்ல விழாவில் ஆடம்பரமும், விரயமும் தவிர்த்து ‎நிகழ்த்திக் காட்டுவோம். வயிற்றுக்குத் தேவையானவற்றை விருந்தளித்து ‎மனமாற அன்புசெலுத்தி மகிழ்விப்போம். ஆடம்பரம் மட்டுமே விரும்பி, ‎நம்மை நாலு பேர் இகழ்ந்து பேசுவதனால் நாம் தாழ்ந்துவிடப்போவது ‎இல்லையே.. பத்து பேருக்கு உண்டான உணவை விரயத்திலிருந்து ‎காப்பாற்றின மனநிறைவே போதுமான மகிழ்வை அளிக்கும். அதை ‎அனுபவித்து உணர்வோம்.

‎”நாம் இன்று உண்ணும் உணவிற்காக என்றோ உழைக்கத்துவங்கியவன் ‎விவசாயி..
‎ நாம் உண்ணும் இந்த வேளையில் அவன் உண்டானா...
பட்டினியில் சுருண்டு உறங்கினானா...?? அறியோம்..” சோகம்சோகம்சோகம்

அவன் வாழ மனதார வாழ்த்துவோம்..
அவன் வாழ நாம் வாழ்வோம். நாம் வாழ அவன் வாழ்வான். வாழ்க ‎வளமுடன்.‎


காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
பண்பாளர்

பதிவுகள் : 240
இணைந்தது : 23/09/2012
http://thoorikaisitharal.blogspot.in/

Postகாயத்ரி வைத்தியநாதன் Sat Oct 13, 2012 1:51 pm

இந்தக்கட்டுரை...விருந்துகளில் வீணாக்கப்படும் உணவுகள் கண்டு எமக்குள் எழுந்த உணர்வே..தோழமைகளும் இதுபற்றிய தங்கள் கருத்துக்களைப் பகிரவும்..நன்றி..புன்னகை



நட்புடன் காயத்ரி வைத்தியநாதன் :வணக்கம்:
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::

http://tamilkkudil.blogspot.in/p/blog-page.html
http://thoorikaisitharal.blogspot.in
https://www.facebook.com/ThamizhkkudilTrust
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Oct 13, 2012 1:55 pm

மிக அருமையான கட்டுரை அக்கா! மகிழ்ச்சி
இருக்கப்பட்டவங்க எல்லாரும் பேரும் புகழுக்காவே
இப்படி செய்கிறார்கள் என்ன செய்வது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Oct 13, 2012 1:58 pm

மிகவும் ஆதங்கமான கட்டுரை ஆனால் இன்றைய சூழ்நிலையில் இது போன்ற ஆடம்பரங்கள் சொந்த பந்தங்களுக்காகவும் பெரிய இடத்து நண்பர்களுக்காகவும் நடத்தபடுகிறது ஒவ்வொருவரும் தாங்களாகவே உணர்ந்து திருந்தினால் ஒழிய இதுபோன்ற ஆடம்பரங்களை தடுக்கமுடியாது



ஈகரை தமிழ் களஞ்சியம் விருந்தெனும் ஆடம்பரம்...!!!  ‎  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Oct 13, 2012 2:01 pm

பகட்டுக்காக பந்தி போடுபவனுக்கு
பஞ்சத்தில் அழிபவனின் நினைவு
நினைவிற்கு வருவதேயில்லை

பஞ்சமா பாதகத்தில் இதுவும் ஒன்று...




காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
பண்பாளர்

பதிவுகள் : 240
இணைந்தது : 23/09/2012
http://thoorikaisitharal.blogspot.in/

Postகாயத்ரி வைத்தியநாதன் Sat Oct 13, 2012 2:12 pm

அருண் wrote:மிக அருமையான கட்டுரை அக்கா! மகிழ்ச்சி
இருக்கப்பட்டவங்க எல்லாரும் பேரும் புகழுக்காவே
இப்படி செய்கிறார்கள் என்ன செய்வது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
நன்றி தம்பி,.,,//எல்லாரும் பேரும் புகழுக்காவே
இப்படி செய்கிறார்கள் என்ன செய்வது// முடிந்தவரை நாமாவது நம் இல்லத்தில் பகட்டுக்காக இல்லாது உறவிற்காக மட்டும் விருந்துவழங்கலாமே..மாற்றத்தை நம்மில் இருந்து துவங்குவோம்..



நட்புடன் காயத்ரி வைத்தியநாதன் :வணக்கம்:
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::

http://tamilkkudil.blogspot.in/p/blog-page.html
http://thoorikaisitharal.blogspot.in
https://www.facebook.com/ThamizhkkudilTrust
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Oct 13, 2012 2:18 pm

மிக அவசியமான-ஆலோசிக்கத் தக்க ஒரு கட்டுரை...
எழுத்தில் உண்மை-நேர்மை இரண்டும் இயைந்து வருவது இயல்பாக இருக்கிறது...
நன்று காயத்ரி...



விருந்தெனும் ஆடம்பரம்...!!!  ‎  224747944

விருந்தெனும் ஆடம்பரம்...!!!  ‎  Rவிருந்தெனும் ஆடம்பரம்...!!!  ‎  Aவிருந்தெனும் ஆடம்பரம்...!!!  ‎  Emptyவிருந்தெனும் ஆடம்பரம்...!!!  ‎  Rவிருந்தெனும் ஆடம்பரம்...!!!  ‎  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
பண்பாளர்

பதிவுகள் : 240
இணைந்தது : 23/09/2012
http://thoorikaisitharal.blogspot.in/

Postகாயத்ரி வைத்தியநாதன் Sat Oct 13, 2012 2:25 pm

ரா.ரா3275 wrote:மிக அவசியமான-ஆலோசிக்கத் தக்க ஒரு கட்டுரை...
எழுத்தில் உண்மை-நேர்மை இரண்டும் இயைந்து வருவது இயல்பாக இருக்கிறது...
நன்று காயத்ரி...
மிக்க மகிழ்ச்சி தோழமையே..புன்னகை உண்மை-நேர்மை இரண்டும் இயைந்து எம்மோடு இறுதிவரை பயணிக்கட்டும்..புன்னகை



நட்புடன் காயத்ரி வைத்தியநாதன் :வணக்கம்:
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::

http://tamilkkudil.blogspot.in/p/blog-page.html
http://thoorikaisitharal.blogspot.in
https://www.facebook.com/ThamizhkkudilTrust
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Oct 13, 2012 2:35 pm

காயத்ரி வைத்தியநாதன் wrote:
ரா.ரா3275 wrote:மிக அவசியமான-ஆலோசிக்கத் தக்க ஒரு கட்டுரை...
எழுத்தில் உண்மை-நேர்மை இரண்டும் இயைந்து வருவது இயல்பாக இருக்கிறது...
நன்று காயத்ரி...
மிக்க மகிழ்ச்சி தோழமையே..புன்னகை உண்மை-நேர்மை இரண்டும் இயைந்து எம்மோடு இறுதிவரை பயணிக்கட்டும்..புன்னகை

அப்படியே ஆகட்டும்...வாழ்த்துகள்...



விருந்தெனும் ஆடம்பரம்...!!!  ‎  224747944

விருந்தெனும் ஆடம்பரம்...!!!  ‎  Rவிருந்தெனும் ஆடம்பரம்...!!!  ‎  Aவிருந்தெனும் ஆடம்பரம்...!!!  ‎  Emptyவிருந்தெனும் ஆடம்பரம்...!!!  ‎  Rவிருந்தெனும் ஆடம்பரம்...!!!  ‎  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக