புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜெ. அதிரடி - உருளும் தலைகள்; மிரளும் பிரமுகர்கள்! Poll_c10ஜெ. அதிரடி - உருளும் தலைகள்; மிரளும் பிரமுகர்கள்! Poll_m10ஜெ. அதிரடி - உருளும் தலைகள்; மிரளும் பிரமுகர்கள்! Poll_c10 
14 Posts - 70%
heezulia
ஜெ. அதிரடி - உருளும் தலைகள்; மிரளும் பிரமுகர்கள்! Poll_c10ஜெ. அதிரடி - உருளும் தலைகள்; மிரளும் பிரமுகர்கள்! Poll_m10ஜெ. அதிரடி - உருளும் தலைகள்; மிரளும் பிரமுகர்கள்! Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
ஜெ. அதிரடி - உருளும் தலைகள்; மிரளும் பிரமுகர்கள்! Poll_c10ஜெ. அதிரடி - உருளும் தலைகள்; மிரளும் பிரமுகர்கள்! Poll_m10ஜெ. அதிரடி - உருளும் தலைகள்; மிரளும் பிரமுகர்கள்! Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
ஜெ. அதிரடி - உருளும் தலைகள்; மிரளும் பிரமுகர்கள்! Poll_c10ஜெ. அதிரடி - உருளும் தலைகள்; மிரளும் பிரமுகர்கள்! Poll_m10ஜெ. அதிரடி - உருளும் தலைகள்; மிரளும் பிரமுகர்கள்! Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஜெ. அதிரடி - உருளும் தலைகள்; மிரளும் பிரமுகர்கள்! Poll_c10ஜெ. அதிரடி - உருளும் தலைகள்; மிரளும் பிரமுகர்கள்! Poll_m10ஜெ. அதிரடி - உருளும் தலைகள்; மிரளும் பிரமுகர்கள்! Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
ஜெ. அதிரடி - உருளும் தலைகள்; மிரளும் பிரமுகர்கள்! Poll_c10ஜெ. அதிரடி - உருளும் தலைகள்; மிரளும் பிரமுகர்கள்! Poll_m10ஜெ. அதிரடி - உருளும் தலைகள்; மிரளும் பிரமுகர்கள்! Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
ஜெ. அதிரடி - உருளும் தலைகள்; மிரளும் பிரமுகர்கள்! Poll_c10ஜெ. அதிரடி - உருளும் தலைகள்; மிரளும் பிரமுகர்கள்! Poll_m10ஜெ. அதிரடி - உருளும் தலைகள்; மிரளும் பிரமுகர்கள்! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
ஜெ. அதிரடி - உருளும் தலைகள்; மிரளும் பிரமுகர்கள்! Poll_c10ஜெ. அதிரடி - உருளும் தலைகள்; மிரளும் பிரமுகர்கள்! Poll_m10ஜெ. அதிரடி - உருளும் தலைகள்; மிரளும் பிரமுகர்கள்! Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
ஜெ. அதிரடி - உருளும் தலைகள்; மிரளும் பிரமுகர்கள்! Poll_c10ஜெ. அதிரடி - உருளும் தலைகள்; மிரளும் பிரமுகர்கள்! Poll_m10ஜெ. அதிரடி - உருளும் தலைகள்; மிரளும் பிரமுகர்கள்! Poll_c10 
8 Posts - 2%
prajai
ஜெ. அதிரடி - உருளும் தலைகள்; மிரளும் பிரமுகர்கள்! Poll_c10ஜெ. அதிரடி - உருளும் தலைகள்; மிரளும் பிரமுகர்கள்! Poll_m10ஜெ. அதிரடி - உருளும் தலைகள்; மிரளும் பிரமுகர்கள்! Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
ஜெ. அதிரடி - உருளும் தலைகள்; மிரளும் பிரமுகர்கள்! Poll_c10ஜெ. அதிரடி - உருளும் தலைகள்; மிரளும் பிரமுகர்கள்! Poll_m10ஜெ. அதிரடி - உருளும் தலைகள்; மிரளும் பிரமுகர்கள்! Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஜெ. அதிரடி - உருளும் தலைகள்; மிரளும் பிரமுகர்கள்! Poll_c10ஜெ. அதிரடி - உருளும் தலைகள்; மிரளும் பிரமுகர்கள்! Poll_m10ஜெ. அதிரடி - உருளும் தலைகள்; மிரளும் பிரமுகர்கள்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஜெ. அதிரடி - உருளும் தலைகள்; மிரளும் பிரமுகர்கள்! Poll_c10ஜெ. அதிரடி - உருளும் தலைகள்; மிரளும் பிரமுகர்கள்! Poll_m10ஜெ. அதிரடி - உருளும் தலைகள்; மிரளும் பிரமுகர்கள்! Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
ஜெ. அதிரடி - உருளும் தலைகள்; மிரளும் பிரமுகர்கள்! Poll_c10ஜெ. அதிரடி - உருளும் தலைகள்; மிரளும் பிரமுகர்கள்! Poll_m10ஜெ. அதிரடி - உருளும் தலைகள்; மிரளும் பிரமுகர்கள்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெ. அதிரடி - உருளும் தலைகள்; மிரளும் பிரமுகர்கள்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 10, 2012 4:27 pm


“ஒரு சிற்பி செய்த சிலையைத் தெய்வச் சிலையாக மக்கள் வணங்குகிறார்கள். செய்த சிலையின் கண் திறப்பு என்பது சிற்பிக்குச் சவால் விடும் பணி. அந்தப் பணியைச் செய்யும் போது சிற்பியின் கண்களும் உளியும் எப்படிப்பட்ட உச்சநிலை விழிப்புணர்வுடன் செயல்படுகிறதோ, அந்த அளவு விழிப்புணர்வுடன் நான் இந்த அரசை நடத்திக் கொண்டிருக்கிறேன். இந்த அரசுக்கு நல்ல பெயர் கிடைக்கக் கூடாதென்று மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுகிறது. இதுவரை தமிழகத்தை ஆண்ட அரசுகளைவிட இந்த அரசு மிகச் சிறப்பாக செயல்படுகிறது என்று மக்கள் நினைக்கும் வகையில் நான் ஆட்சியை நடத்த முயல்கிறேன். எனவே நீங்கள் மிகவும் கட்டுப்பாடாக நேர்மையாக இருக்க வேண்டும். படாடோபமும், ஆடம்பரமும் கூடவே கூடாது’ என்று பொதுக் குழுவிலும் பலமுறை அறிக்கைகளிலும் சொல்லியிருக்கிறார் புரட்சித் தலைவி.

“அதையெல்லாம் மறந்துவிட்டு, தொண்டர்களை உசுப்பிவிட்டு ஆர்ப்பாட்டமாகப் பிறந்தநாளைக் கொண்டாடியதுடன், “கேட்டை’யில் பிறந்து, நாளை “கோட்டையாளப் போகிறவரே’ என்று ஃப்ளக்ஸ் பேனர் வைத்தால் பதவி பறிபோகத்தான் செய்யும்!’ என்று சபாநாயகர் ஜெயக்குமார் ராஜினாமா பற்றிக் குறிப்பிட்டார் சென்னை புறநகர்ப் பகுதி அ.இ.அ.தி.மு.க. பிரமுகர்.

அம்மாவுக்கும், கட்சிக்கும் ஒரு துளியளவுகூட துரோகம் நினைக்காமல், முழுவிசுவாசியாக இருந்த ஜெயகுமார், அம்மாவின் கருணைப் பார்வையிலிருந்து விலக்கப்பட்டது கட்சிக்குள் அதிர்வலைகளை எழுப்பியிருக்கிறது.

பொதுவாக மீடியாவில் மேற்சொன்ன காரணம் அலசப்பட்டாலும், ஜெயக்குமார் பதவி பறிப்புக்கு வேறு பல காரணங்களும் உலா வருகின்றன. சபாநாயகர் பொறுப்பில் இருப்பதால் பல அமைச்சர்களிடம் “நாட்டாமை’ செய்தே அவர்களது இலாக்காக்களில் காரியங்களைச் செய்து கொண்டார் என்று புலம்புகின்றனர் சிலர்.

சபாநாயகராக இருந்ததால் கட்சி விவகாரங்களில் நேரடியாகத் தலையிட முடியாது. எனவே, சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் தமது ஆதரவாளர்கள் மூலம், தனி ஆவர்த்தனம் நடத்த காரணமாகியிருந்தாராம். தமது பிறந்த நாளை முன்னிட்டு அம்மாவின் ஆசி வாங்க நேரம் கேட்க, நேரம் கொடுக்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டார் ஜெயக்குமார். ஏதோ புகைந்து கொண்டிருப்பது அவருக்குப் புரிந்துவிட்டது. அதைப் பற்றி எரியவிடாமல் தமது ஆதரவாளர்களை அடக்கி வாசிக்க வைத்திருந்தால் ஜெயக்குமார் தலை தப்பியிருக்கும் என்கிறார்கள்.

ஆனால், அவரது விதி வேறு வகையில் வேலை செய்துவிட்டது. இருந்தும், இன்னமும் ஜெயக்குமாரின் தீவிர ஆதரவாளர்கள், “நல்ல திறமையான அமைச்சர்கள் இல்லாததால் மிகவும் சிரமப்படுகிறார் அம்மா. எனவே அண்ணன் அமைச்சர் ஆனாலும் ஆகக்கூடும்’ என்கிறார்கள்.

அ.தி.மு.க.வில் எப்போது அதிர்ஷ்டக் காற்று வீசும்; எப்போது சுனாமி சூறையாடும் என்று யாருக்கும் தெரியாதே. ஜெயக்குமாரைத் தூக்கியடித்த சுனாமியில் இரண்டு பிரமுகர்கள் கட்சிப் பதவியை இழந்தனர். பன்னிரண்டு பிரமுகர்கள் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டிருக்கிறார்கள்.

“நிலையாமை’ தத்துவத்தை ஆளும் கட்சிப் பிரமுகர்களைவிட வேறு யாரும் சரியாகப் புரிந்து கொண்டிருக்க முடியாது. “எப்போது நம் தலையில் கத்தி விழும்’ என்று அமைச்சர்களுக்குத் தெரியாததால், அவர்களது செயல்திறமை பாதிக்கப்படுகிறது. மேலும் பதவி பறிக்கப்படுமோ என்ற டென்ஷனில் குறுகிய காலத்துக்குள் வளத்தைச் சேர்க்க முற்படும்போது விஷயங்கள் அம்பலமாகின்றன. கடைசியில் அதுவே பதவியை விட்டுத் தூக்குவதற்குக் காரணமாய் அமைந்துவிடுகிறது.

ஓர் அமைச்சரைத் தூக்கும்போது எதற்காக நீக்குகிறார் முதல்வர் என்ற காரணம் வெளியில் சொல்லப்படுவதில்லை. அதே அமைச்சர் மீண்டும் சேர்க்கப்படுகிறார். அப்போது செய்த “தவறு’ சரியாக்கப்பட்டு விட்டதா என்பதும் மக்களுக்குத் தெரியாது. அமைச்சர் சிவபதி ஏன் நீக்கப்பட்டார்; பின்பு மீண்டும் ஏன் சேர்க்கப்பட்டார் என்று யாருக்கும் தெரியாது.

“ஒருவரை அமைச்சராக்கும் போது அவர் திறமையாளர், பண்பாளர், அனுபவஸ்தர் என்றெல்லாம் எழுதி அவரது சாதகமான அம்சங்களைப் பட்டியலிடுகிறார்கள். புரட்சித் தலைவி அவரை நீக்கியபின் அவர் செய்த தவறுகள், கட்சி விரோத நடவடிக்கைகளும் பட்டியலிடப்படுகின்றன. மீடியாதான் இரண்டையும் செய்கிறது! நீக்கத்துக்குப் பல காரணங்கள் சொல்லப் படுகிற போது, அவற்றில் ஏதாவது ஒரு காரணத்துக்காக அவரை நீக்கியிருக்கலாம் அல்லவா புரட்சித் தலைவி?’ என்று கேட்கிறார் ஒரு மூத்த அ.தி.மு.க. பிரமுகர்.

ஜெயக்குமார் போன்ற சீனியர்களே அம்மாவில் அறிவிப்புகளை புறக்கணித்து செயல்படுவது சரிதானா? தவிர இப்படித் தலையில் கத்தி தொங்குவதால் செயல்பாடு பாதிக்கப்படுகிறது என்பதும் சரியல்ல. உதாரணத்துக்கு நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, செந்தில்பாலாஜி போன்றவர்கள் சிறப்பாக செயல்படுகிறார்களே. மேலும் பொதுப்பணித்துறை லஞ்ச லாவண்யத்துக்கு பெயர் பெற்றது. அந்ததுறையை புகாரின்றி கையாள்கிறாரே ராமலிங்கம். ஓர் அமைச்சர் செயல்படுகிறாரா... இல்லையா என்பதை கணிக்கக்கூடியவர் முதல்வர் மட்டுமே என்று நம்மிடம் சொன்னார் அவர்.

சிவபதியை போல் செங்கோட்டையன், இசக்கி,உதயகுமார், வேலுமணி போன்றோரும், பறிக்கப்பட்ட அமைச்சர் பதவி மீண்டும் கைவசமாகும் என்று ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

அமைச்சர்கள் சந்திக்கும் பதற்றம் சீனியர் ஐ.ஏ.எஸ். மற்றும் போலீஸ் அதிகாரிகளிடத்திலும் இருக்கிறது. டம்மி போஸ்டிங் கிடைக்கும் அதிகாரிகள் பசையான போஸ்டிங் கிடைக்க பல நிழல் வேலைகளில் இறங்குகிறார்கள்.

இச்சூழலில் மற்றொரு அதிரடியாக சி.வி.சண்முகமும் நீக்கப்பட்டிருக்கிறார். நல்ல நிர்வாகியா இருந்தும் அவர் நீக்கப்பட்டது ஏன்? என்று ஆளுங்கட்சி வட்டாரத்தில் கேட்டபோது சி.வி.சண்முகத்தின் சகோதரர் அமைச்சர் பேரை சொல்லி ரொம்பவே விளையாடி விட்டார் என்கிறார்கள்.

துணை சபாநாயகர் தனபால் சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது குறித்து தாழ்த்தப்பட்ட சமூகம் குஷியாகியிருக்கிறது. தமிழக சட்டசபை சபாநாயகராக இதுவரை 18 பேர் பொறுப்பு வகித்திருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் கூட தலித் இல்லை.

செங்கோட்டையன், ஜெயக்குமார், விவகாரங்கள் காரணமாக கட்சி பிரச்னைகளில் சசிகலாவின் தலையீடு மீண்டும் தொடங்கியிருக்கிறது. நிச்சயமாக கிடையாது. சசிகலா தற்போது உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிக்கிறார். அவரது வலது கண் பார்வை முழுக்க பாதிக்கப்பட்டிருக்கிறது. கோயில்களை தவிர வேறெங்கும் செல்வதில்லை. அறைக்குள்ளே முடங்கியிருக்கிறார் என்கிறது போயஸ் தோட்டத் தகவல்.

முதல்வரின் மகா நட்சத்திரம், சிம்ம ராசிக்கு சந்திராஷ்டமம் வரும் தினங்களில் (நவக்கிரக நடமாட்டப்படி சந்திராஷ்டமம் என்பது கெட்ட பலன்கள் நடக்கும் நாட்கள்), அமைச்சர்கள் மற்றும் கட்சி பிரமுகர்களிடையே யார் தலை உருளபோகிறதே, யார் தலை உயரப்போகிறதோ என்ற பதற்றம் இருக்கிறது.

இப்போது புதிதாக சேர்க்கப்பட்டிருக்கும் போகனை தவிர மேலும் பல புதுமுகங்கள் இடம் பெறும் வாய்ப்பு இருப்பதாக கட்சி வட்டாரத்தில் பேச்சாக இருக்கிறது.

-ப்ரியன்



ஜெ. அதிரடி - உருளும் தலைகள்; மிரளும் பிரமுகர்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed Oct 10, 2012 9:40 pm

ஒவ்வெரு நாள் காலையிலும் அமைச்சர்களும் அதிகாரிகளும் செய்தித்தாளைப் பார்த்து தான் தெரிந்துகொள்ளவேண்டியிருக்கிறது இன்றைக்கு நமக்கு எந்த துறை என்று இன்னும் சில பேர் நமது பெயர் (நீக்கம்)வந்துவிடக்கூடாது என்றும் சிலர் வராதா(சேர்ப்பு) என்றும் கணக்கிட்டு கொண்டிருக்கின்றனர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக