புதிய பதிவுகள்
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 கொஞ்சம் தெரிந்துகொள்வோம்  Poll_c10 கொஞ்சம் தெரிந்துகொள்வோம்  Poll_m10 கொஞ்சம் தெரிந்துகொள்வோம்  Poll_c10 
86 Posts - 43%
ayyasamy ram
 கொஞ்சம் தெரிந்துகொள்வோம்  Poll_c10 கொஞ்சம் தெரிந்துகொள்வோம்  Poll_m10 கொஞ்சம் தெரிந்துகொள்வோம்  Poll_c10 
72 Posts - 36%
i6appar
 கொஞ்சம் தெரிந்துகொள்வோம்  Poll_c10 கொஞ்சம் தெரிந்துகொள்வோம்  Poll_m10 கொஞ்சம் தெரிந்துகொள்வோம்  Poll_c10 
11 Posts - 5%
Anthony raj
 கொஞ்சம் தெரிந்துகொள்வோம்  Poll_c10 கொஞ்சம் தெரிந்துகொள்வோம்  Poll_m10 கொஞ்சம் தெரிந்துகொள்வோம்  Poll_c10 
10 Posts - 5%
mohamed nizamudeen
 கொஞ்சம் தெரிந்துகொள்வோம்  Poll_c10 கொஞ்சம் தெரிந்துகொள்வோம்  Poll_m10 கொஞ்சம் தெரிந்துகொள்வோம்  Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
 கொஞ்சம் தெரிந்துகொள்வோம்  Poll_c10 கொஞ்சம் தெரிந்துகொள்வோம்  Poll_m10 கொஞ்சம் தெரிந்துகொள்வோம்  Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
 கொஞ்சம் தெரிந்துகொள்வோம்  Poll_c10 கொஞ்சம் தெரிந்துகொள்வோம்  Poll_m10 கொஞ்சம் தெரிந்துகொள்வோம்  Poll_c10 
4 Posts - 2%
Guna.D
 கொஞ்சம் தெரிந்துகொள்வோம்  Poll_c10 கொஞ்சம் தெரிந்துகொள்வோம்  Poll_m10 கொஞ்சம் தெரிந்துகொள்வோம்  Poll_c10 
3 Posts - 1%
prajai
 கொஞ்சம் தெரிந்துகொள்வோம்  Poll_c10 கொஞ்சம் தெரிந்துகொள்வோம்  Poll_m10 கொஞ்சம் தெரிந்துகொள்வோம்  Poll_c10 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
 கொஞ்சம் தெரிந்துகொள்வோம்  Poll_c10 கொஞ்சம் தெரிந்துகொள்வோம்  Poll_m10 கொஞ்சம் தெரிந்துகொள்வோம்  Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 கொஞ்சம் தெரிந்துகொள்வோம்  Poll_c10 கொஞ்சம் தெரிந்துகொள்வோம்  Poll_m10 கொஞ்சம் தெரிந்துகொள்வோம்  Poll_c10 
86 Posts - 43%
ayyasamy ram
 கொஞ்சம் தெரிந்துகொள்வோம்  Poll_c10 கொஞ்சம் தெரிந்துகொள்வோம்  Poll_m10 கொஞ்சம் தெரிந்துகொள்வோம்  Poll_c10 
72 Posts - 36%
i6appar
 கொஞ்சம் தெரிந்துகொள்வோம்  Poll_c10 கொஞ்சம் தெரிந்துகொள்வோம்  Poll_m10 கொஞ்சம் தெரிந்துகொள்வோம்  Poll_c10 
11 Posts - 5%
Anthony raj
 கொஞ்சம் தெரிந்துகொள்வோம்  Poll_c10 கொஞ்சம் தெரிந்துகொள்வோம்  Poll_m10 கொஞ்சம் தெரிந்துகொள்வோம்  Poll_c10 
10 Posts - 5%
mohamed nizamudeen
 கொஞ்சம் தெரிந்துகொள்வோம்  Poll_c10 கொஞ்சம் தெரிந்துகொள்வோம்  Poll_m10 கொஞ்சம் தெரிந்துகொள்வோம்  Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
 கொஞ்சம் தெரிந்துகொள்வோம்  Poll_c10 கொஞ்சம் தெரிந்துகொள்வோம்  Poll_m10 கொஞ்சம் தெரிந்துகொள்வோம்  Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
 கொஞ்சம் தெரிந்துகொள்வோம்  Poll_c10 கொஞ்சம் தெரிந்துகொள்வோம்  Poll_m10 கொஞ்சம் தெரிந்துகொள்வோம்  Poll_c10 
4 Posts - 2%
Guna.D
 கொஞ்சம் தெரிந்துகொள்வோம்  Poll_c10 கொஞ்சம் தெரிந்துகொள்வோம்  Poll_m10 கொஞ்சம் தெரிந்துகொள்வோம்  Poll_c10 
3 Posts - 1%
prajai
 கொஞ்சம் தெரிந்துகொள்வோம்  Poll_c10 கொஞ்சம் தெரிந்துகொள்வோம்  Poll_m10 கொஞ்சம் தெரிந்துகொள்வோம்  Poll_c10 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
 கொஞ்சம் தெரிந்துகொள்வோம்  Poll_c10 கொஞ்சம் தெரிந்துகொள்வோம்  Poll_m10 கொஞ்சம் தெரிந்துகொள்வோம்  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொஞ்சம் தெரிந்துகொள்வோம்


   
   
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue Oct 09, 2012 9:33 pm

சயனைடு உட்கொள்வதால் மனிதன் இறப்பதேன் ?

சயனைடுகளில் - பொட்டாசியம் சயனைடு (KCN) ,சோடியம் சயனைடு (NaCN) ஆகியவை நச்சுத் தன்மை கொண்டவை . இந்த கனிம உப்பிலுள்ள சயனைடு அயனி (CN -) தான் நச்சுப் பண்புக்குக் காரணம் .
இந்த சயனைடை மனிதன் உட்கொண்டவுடன் சயனைடு அயனி எளிதில் ரத்த ஓட்டத்தை அடைகிறது ; இரத்துச் சிவப்பணுக்களில் உள்ள ஹீமொகுலோபினோடு ( சுவாச நிறமி ) இணைகிறது .குறிப்பாக ஹீமொகுலோபினில் உள்ள இரும்பு அணுக்களோடு இணைவதினால் ஆக்சிஜனை இணைக்கும் திறன் துண்டிக்கப் படுகிறது .இதனால் சுவாசம் தடைப்பட்டு நின்று விடுகிறது .உடல் உறுப்புகள் அனைத்தும் ஆக்சிஜன் இல்லாத நிலை ஏற்பட்டு இறப்பு உறுதியாகிறது

இயற்கை நிறங்காட்டிகள்

அமிலமா(acid ) ? காரமா (base) ? எனக் கண்டறிய சில காட்டிகளை (indicators) பயன்படுத்துவார்கள் .நீல லிட்மஸ் தாளை தேய்த்து எடுத்தால் சிகப்பாக மாறினால் அது அமிலம் என்றும் , சிகப்பு லிட்மஸ் நீல நிறமாக மாறினால் அது காரம் என்றும் கண்டறியலாம் . லிட்மஸ் கரைசலையும் பயன்படுத்தலாம் .
இயற்கையில் சில காட்டிகள் உள்ளன . அவை செம்பருத்தி பூ , சங்கு பூ என்றும் கூறலாம். செம்பருத்திப்பூ சிவப்பு லிட்மஸ் தாளாகவும் , சங்கு பூ நீல லிட்மஸ் தாளாகவும் செயல்படுகின்றன . செம்பருத்திப் பூவின் இதழை எடுத்து வெள்ளைத் தாளில் அல்லது காரப்பொருட்களில் (base) தேய்த்தால் அது நீல வண்ணமாக மாறும். அதில் எலுமிச்சைச் சாறை ( சிட்ரிக் அமிலம்) கலக்கும் போது சிவப்பு நிறமாக மாறும் .அமில கார வேறுபாட்டை அடையாளம் காட்டும்.
சங்குப்பூவை ( நீல நிறம் ) எடுத்து அமிலத்தில் தேய்த்தால் அது சிவப்பாக மாறும்.அதே பூவை கார கரைசலில் தேய்த்தால் பழைய படி நீல நிறமாக மாறுவதை பார்க்கமுடியும் .இதே போல் பண்புகளை கொண்ட இயற்கை காட்டிகளாக செயல்படுகின்ற பூக்கள் பல உள்ளன .

அறிவியலை பயன்படுத்தி கண்கட்டி வித்தைகள் ( போலி சாமியார்களின் மந்திர சக்திகள் )

சில வருடங்களுக்கு முன்னர் சென்னை குப்பங்களிலும் , விழுப்புர மாவட்டத்தின் ஒரு சில கிராமங்களிலும் இரவில் குடிசைகள் தானாக பற்றி எரிந்தன . கிராம மக்கள் கடவுள் குற்றம் என்று அஞ்சினார்கள் . சிலர் ஊரையே காலி செய்தனர் . இதற்கான காரணம் அறிவியலின் சிறப்பு பண்புகளில் இதுவும் ஒன்று . இதை ஒரு சிலர் தங்களது சுய லாபத்துக்காக பயன்படுத்திக் கொண்டார்கள் . வெண் பாஸ்பரஸ் என்ற தனிமத்தின் இயற்பியல் பண்புகளில் முக்கியமான ஒன்று , உலர்ந்த நிலையில் அது தானாகவே எறியும் . இந்த வெண் பாஸ்பரசை சாணத்தில் கலந்து குடிசை மீது சில அறிவு ஜீவிகள் வைத்து உள்ளனர் .சில மணி நேரங்களுக்கு பின் வெண் பாஸ்பரஸ் உலர்ந்து தன் வேலையை காட்ட ஆரம்பித்துள்ளது .

முட்டையை மந்திர சக்தி மூலம் பறக்க வைக்க முடியுமா ?

முடியும் . இதுவும் டூபாக்கூர் வேலைதான் .குருவி பறக்கலாம். முட்டை பறக்க முடியுமா? முடியும் ஒரு நல்ல கோழி முட்டையை மேல் புறத்தில் சிறிதாக ஓட்டை போட்டு உள்ளே இருக்கும் கருவை வேளியே எடுத்துவிட வேண்டும்.வெறும் முட்டை ஓட்டை மட்டும் மார்கழி மாத பனியில் இரவு முழுவதும் தொடர்ச்சியாக பத்து, இருபது நாள் வைத்து எடுத்து உள்ளே இருக்கும் பனித்துளி வெளியில் போகாத வண்ணம் மெழுகால் அடைத்து விட வேண்டும். பிறகு வெய்யிலில் வைத்தால் உள்ளே இருக்கின்ற பனி உருகி ஆவியாகி மேல் எழும்பும் கூடவே முட்டையும் தூக்கி கொண்டு பறக்கும்.

வாயுள்ள பிள்ளை பிழைக்கும் ( ஹிட்லர் )
சர்வாதிகார ஹிட்லர் பற்றி அனைவரும் அறிவர் . நாசிக் கட்சியின் தலைவர்,ஜெர்மனி நாட்டின் சான்சலர்,யூதர்களுக்கு எதிரானவர் , கொடுங்கோலர் , தனது சுய சரிதை புத்தகமான "மெயின் கேம்ப்" இல் இந்தியர்களை பற்றி இழிவாக எழுதியவர் , ஸ்டாலின் படைகளிடம் தோல்வியுற்று தற்கொலை செய்து கொண்டவர் , போன்ற தகவல்கள் நாம் அறிந்ததே . இதோடு இவரை பற்றிய மற்றொரு தகவல் இவர் ஒரு சிறந்த பேச்சளார் .அவருடைய பேச்சு எந்த அளவுக்கு இருந்தது என்பதை பின்வரும் தகவல்கள் மூலம் நீங்கள் அறியலாம் .


ஹிட்லரின் ஆரம்ப கால வாழ்க்கைப் பற்றி 'இயன் கெர்சா ' என்பவர் விரிவான புத்தகமொன்று எழுதியிருக்கிறார் . அதில் உள்ள தகவல்கள் :


நாசிக் கட்சியின் சிறிய கூட்டமொன்றில் 1919 ஆம் வருடம் ஹிட்லர் முதன்முறையாக மேடையேறிப் பேசினார் .கூட்டத்தில் இருந்தவர்கள் நூறு பேர் .ஆனால் அவர் பேச்சுத் திறமை விரைவில் பரவி , நாலு மாதத்துக்குப் பின் நடந்த கூட்டத்துக்கு 2000 பேர் வந்தார்கள் .நாலு வருடங்களில் சொந்தப் பத்திரிகை ஆரம்பித்தார் .55,000 பேர் சந்தா செலுத்தித் தொண்டர் படையில் சேர்ந்தார்கள் .
மேடைப் பேச்சின் பொது அட்டகாசமாக ஆர்ப்பாட்டம் செய்வது ஹிட்லரின் வழக்கம் .ஒரு முறை அவர் பேசி முடித்த போது ஐந்து பவுண்டு எடை குறைந்தது .இருபது புட்டி மினரல் வாட்டர் குடித்தார் . ( நமது அரசியல்வாதிகளால் முடியுமா ? )

அரசாங்க பைல்களை கவனிக்கும் விசயத்தில் ஹிட்லர் மகா சோம்பேறி .பல அமைச்சர்கள் விஷயத்தை வாயாலேயே சொல்லி ,வாய்மொழியாகவே உத்தரவு பெறுவார்கள் .பகல் மூன்று மணி வரை தூங்கி விட்டு ,சாப்பாடு முடிந்ததும் தோட்டத்தில் உலாவிவிட்டு ,சினிமா பார்த்தப் பின் அரசாங்க அலுவலைக் கவனிக்க ஆரம்பிப்பார் .வளவளவென்று பேசிக்கொண்டே இருப்பார் .மந்திரிகள் கொட்டாவி விடுவதும் கடிகாரத்தைப் பார்ப்பதுமாக இருப்பார்கள் .அதை ஹிட்லர் லட்சியம் பண்ண மாட்டார் .

( எது எப்படியே நமது சுதந்திர நாயகன் நேதாஜி , ஹிட்லரை சந்தித்தப் போது இந்திய விடுதலைப் பற்றி நேதாஜிக்கு சில ஆலோசனைகள் கூறியுள்ளார் . ஆனாலும் , "மெயின் கேம்ப்" புத்தகத்தில் உள்ள இந்தியர்கள் பற்றிய விமர்சனத்தை நேதாஜி அவர்கள் நீக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தும் நீக்க மறுத்து விட்டார் ஹிட்லர் .)

இங்கிலாந்தில் உள்ள ஒரு நிறுவனம் வருடந்தோறும் ஒரு வினோதமான காரியம் செய்து வருகிறது .ஒரு குறிப்பிட்ட வருடத்தில் இறந்து போனவர்களில் பிரபலமானவர்களைத் தேர்ந்தெடுத்து வகை வாரியாக பிரித்து , தனிதனி புத்தகமாக வெளியிட்டு வருகிறார்கள் .கிறுக்குத் தனமான புள்ளிகள், ஹீரோக்கள் ,பொழுதுபோக்கு கலைஞர்கள் , போக்கிரிகள் இது போன்ற தலைப்புகளில் புத்தகம் வருகிறது . மனிதர்களின் குணாதிசியங்களை காட்டுவதே தங்கள் நோக்கம் என்கிறார்கள் . அந்த புத்தகங்களில் இருந்த சில வினோத தகவல்கள் :

ஆர் .டி .லாங் என்ற மனோத்தத்துவ நிபுணர் ,தினம் ராத்திரி மொட்டை மாடிக்கு போய் உட்கார்ந்துக் கொண்டு சந்திரனைப் பார்த்து ஊளையிடுவாராம் . ( அமாவாசையன்று என்ன செய்வாரோ என்று தெரியவில்லை) . ஆல்பி ஹிண்ட்ஸ் என்ற கொள்ளைக்காரன் எப்போதும் தன வழக்குக்குத் தானே வழக்கறிஞராக ஆஜராவனாம் .ஏதாவது சட்டப் பிரச்சினையில் நீதிபதி தலையை சொரிந்து கொண்டாரானால் ' கனம் நீதிபதி அவர்களே , அந்தப் பிரச்சினையில் தங்களுக்கு உதவ செய்ய முடியும் என்று நினைக்கிறேன் என்று சொல்வானாம்

ஜெப்ரே பெர்னார்டு என்ற எழுத்தாளர் , தன் கல்லறையில் பொரிக்க வேண்டிய வாசகத்தை முன்னதாகவே எழுதி வைத்திருந்தாராம் . அதில் ' ... ..இவர் இரண்டு எழுதாத புத்தகங்களையும் , விரோதிகளாகிவிட்ட சில சிநேகிதர்களையும் விட்டுச் சென்றுள்ளார் ' என்று எழுதி இருக்கிறார்



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
 கொஞ்சம் தெரிந்துகொள்வோம்  1357389 கொஞ்சம் தெரிந்துகொள்வோம்  59010615 கொஞ்சம் தெரிந்துகொள்வோம்  Images3ijf கொஞ்சம் தெரிந்துகொள்வோம்  Images4px
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Oct 09, 2012 9:39 pm

கைலாயம் போயிட்டு எப்ப வந்தீங்க கேசவன் - ஆளையே காணோமே?

புதிய செய்திகள் நன்று.




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 09, 2012 10:03 pm

அருமை கேசவன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Wed Oct 10, 2012 5:26 am

ஆஹா இப்படியெல்லாம் இருக்கா? நன்றி K7 சார்

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed Oct 10, 2012 6:11 am

சுவாரஷ்யமான பதிப்பு . பதிப்பிற்கு நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக