புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குண்டலகேசி Poll_c10குண்டலகேசி Poll_m10குண்டலகேசி Poll_c10 
96 Posts - 49%
heezulia
குண்டலகேசி Poll_c10குண்டலகேசி Poll_m10குண்டலகேசி Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
குண்டலகேசி Poll_c10குண்டலகேசி Poll_m10குண்டலகேசி Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
குண்டலகேசி Poll_c10குண்டலகேசி Poll_m10குண்டலகேசி Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
குண்டலகேசி Poll_c10குண்டலகேசி Poll_m10குண்டலகேசி Poll_c10 
7 Posts - 4%
prajai
குண்டலகேசி Poll_c10குண்டலகேசி Poll_m10குண்டலகேசி Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
குண்டலகேசி Poll_c10குண்டலகேசி Poll_m10குண்டலகேசி Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
குண்டலகேசி Poll_c10குண்டலகேசி Poll_m10குண்டலகேசி Poll_c10 
2 Posts - 1%
Barushree
குண்டலகேசி Poll_c10குண்டலகேசி Poll_m10குண்டலகேசி Poll_c10 
2 Posts - 1%
cordiac
குண்டலகேசி Poll_c10குண்டலகேசி Poll_m10குண்டலகேசி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குண்டலகேசி Poll_c10குண்டலகேசி Poll_m10குண்டலகேசி Poll_c10 
223 Posts - 52%
heezulia
குண்டலகேசி Poll_c10குண்டலகேசி Poll_m10குண்டலகேசி Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
குண்டலகேசி Poll_c10குண்டலகேசி Poll_m10குண்டலகேசி Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
குண்டலகேசி Poll_c10குண்டலகேசி Poll_m10குண்டலகேசி Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
குண்டலகேசி Poll_c10குண்டலகேசி Poll_m10குண்டலகேசி Poll_c10 
16 Posts - 4%
prajai
குண்டலகேசி Poll_c10குண்டலகேசி Poll_m10குண்டலகேசி Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
குண்டலகேசி Poll_c10குண்டலகேசி Poll_m10குண்டலகேசி Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
குண்டலகேசி Poll_c10குண்டலகேசி Poll_m10குண்டலகேசி Poll_c10 
2 Posts - 0%
Barushree
குண்டலகேசி Poll_c10குண்டலகேசி Poll_m10குண்டலகேசி Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
குண்டலகேசி Poll_c10குண்டலகேசி Poll_m10குண்டலகேசி Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குண்டலகேசி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 09, 2012 12:40 am



குண்டலகேசி ஒரு பௌத்த சமய நூல். குண்டலகேசி விருத்தம் எனவும் இந்நூல் குறிப்பிடப்படுகிறது. ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றாக இந்நூல் குறிப்பிடப்படுகிறது. சமய வாதங்களைக் கூறுகிற நீலகேசி, பிங்கலகேசி, அஞ்சனகேசி, காலகேசி முதலிய கேசி நூல்களில் ஒன்றாகவும் இந்நூல் கருதப்படுகிறது. குண்டலகேசி பற்றிய செய்திகள் இங்குத் தொகுத்துக் கூறப்படுகின்றன.

நூல் வரலாறு

கேசி என்பது பெண்ணின் கூந்தலால் (முடி) வந்த பெயர். சுருண்ட கூந்தல் காரணமாகக் குண்டலகேசி என இக்காப்பியத் தலைவி பெயர் பெற்றாள். அவள் பெயரையே தலைப்பாகக் கொண்டுள்ளது இந்நூல். யாப்பருங்கல விருத்தி நான்கு இடங்களில் இந்நூல் பற்றிக் குறிப்பிடுகிறது. வீரசோழிய உரை இந்நூலை இரண்டு இடங்களில் குறிப்பதுடன் இதன் ஒரு பாடலையும் மேற்கோள் காட்டுகிறது. புறத்திரட்டில் இந்நூலின் பாடல்கள் 10 எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. திருவொற்றியூர் ஞானப்பிரகாசர், தம் சிவஞான சித்தியார் பரபக்க உரையில் இதன் பாடல்கள் சிலவற்றைக் குறிப்பிடுகிறார். வைசிய புராணம் குண்டலகேசி பெயரால் ஒரு கதை சொல்கிறது. என்றாலும் நீலகேசி உரையே குண்டலகேசி வரலாற்றை அறிய உதவுகிறது. குண்டலகேசியின் வாதத்தை மறுப்பதாகப் பல பாடல்களின் முதற்குறிப்பைத் தருகிறது நீலகேசி. மறைந்து போன தமிழ் நூல்கள் என்ற நூலில் ஏறத்தாழ 92 குண்டலகேசிப் பாடல்களின் முதற்குறிப்பைத் தொகுத்துத் தந்துள்ளார் மயிலை. சீனி. வேங்கடசாமி, அவர்கள். 14ஆம் நூற்றாண்டு வரை இந்நூல் இருந்து, பின்னர் அழிந்திருக்கக் கூடும்.

“தருக்கமாவன: ஏகாந்த வாதமும் அனேகாந்த வாதமும் என்பன. அவை குண்டலம், நீலம், பிங்கலம், அஞ்சனம், தத்துவ தரிசனம், காலகேசி முதலிய செய்யுட்களுள்ளும், சாங்கியம் முதலிய ஆறு தரிசனங்களுள்ளும் காண்க” என யாப்பருங்கலவிருத்தி குறிப்பிடுவதால், இந்நூல் தருக்க வாதம் குறித்த ஒன்று என அறிய முடிகிறது. வீரசோழிய உரையாசிரியர் பெருந்தேவனார், குண்டலகேசி விருத்தம் என இந்நூலைக் குறிப்பிடுகிறார். இதனைத் ‘தெரியாத சொல்லும் பொருளும் வந்த அகலக் கவி’ (நீண்ட கவிதை) என்கிறார்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 09, 2012 12:40 am



நூலாசிரியர்

குண்டலகேசி காவியத்தை இயற்றியவர் நாதகுத்தனார் எனும் பௌத்தர் என்று நீலகேசி உரை (பாடல் 344) குறிப்பிடுகிறது. நாதகுப்தனார் என்பதே மருவி நாதகுத்தனார் என வழங்கிற்று என்பர். சோழ நாட்டில் வாழ்ந்த பௌத்தத் துறவி காசியப தேவர், விமதிவினோதனீ எனும் பாலிமொழி நூலுக்குத் தாம் எழுதிய டீகா என்னும் உரையில் குண்டலகேசி ஆசிரியர் நாகசேனர் என்கிறார். அவர் கூறுவதாவது, “பழங்காலத்தில், இந்தத் தமிழ்நாட்டில் மாறுபட்ட கொள்கை உடைய நாகசேனனன் என்னும் ஒரு தேரர், எதிரிகளின் கொள்கைகளை அழிக்க எண்ணிக் குண்டலகேசி என்ற காப்பியத்தைத் தமிழில் இயற்றினார்.” குப்தர் என்பது செட்டி மரபின் ஒரு பெயர் என்கிறார் மு. அருணாசலம்.

இந்நூலாசிரியர் புத்தரிடம் பக்தி மிக்கவர் என்பதும், அவருடைய முற்பிறப்பு வரலாறு முழுவதையும் நன்கு அறிந்தவர் என்பதும், உலகியல் அறிவு மிக்கவர் என்பதும், அரச வாழ்வில் தொடர்புடையவர் என்பதும் அவர்தம் பாடல் மூலமாக அறிய முடிகிறது. நூலாசிரியரின் காலம் நீலகேசியின் காலமான கி.பி. 10ஆம் நூற்றாண்டு என யூகிக்க முடிகிறது.

கதை

குண்டலகேசி கதை வடமொழியில் தேரீகாதை உரையிலும் (தர்ம பாலர்), தேரீ அவதானம், தம்மபதாட்ட கதா, அங்குத்தர நிகாய என்னும் நூல்களிலும் தமிழில் நீலகேசி மொக்கலவாதச் சருக்க உரையிலும் (சமய திவாகர முனிவர் உரை - பாடல் 286) சிற்சில வேறுபாடுகளுடன் கூறப்படுகிறது.

கதைச் சுருக்கம்

இராச கிருக நாட்டு அமைச்சன் மகள் பத்திரை. அவள் தனது மாளிகையில் விளையாடிக் கொண்டிருந்தபோது, அரச சேவகர்கள் கள்வன் ஒருவனைக் கொலைக்களத்திற்கு அழைத்துச் சென்றதைக் கண்டாள். அவனுடைய இளமையும் அழகும் அவள் மனதைக் கவர்ந்தன. அவன்மேல் அவள் காதல் கொண்டாள். இதை அறிந்த தந்தை, கள்வனை விடுவித்துத் தன் மகளை அவனுக்குத் திருமணம் செய்து வைக்கிறான். இருவரின் அன்பு வாழ்க்கை, காதல் வாழ்க்கை இனிதே நடக்கிறது. ஒரு நாள் ஊடல் கொண்ட பத்திரை, ‘நீ கள்வன் மகன் அல்லனோ’ என விளையாட்டாகச் சொல்ல, அது அவன் உள்ளத்தைப் பாதிக்கிறது. அவளைக் கொல்லக் கருதிய அவன், அவளை மலை உச்சிக்கு அழைத்துச் சென்று, அவளைக் கீழே தள்ளிக் கொல்லப் போவதாகக் கூறுகிறான். நிலைமையை உணர்ந்த பத்திரை, அவனுக்கு உடன்பட்டவள் போல் நடித்து, “நான் இறப்பதற்குமுன் உம்மை வலம் வரவேண்டும்’ என்கிறாள். பின் அவனை வலம் வருபவளைப் போல, பின் சென்று அவனைக் கீழே தள்ளிக் கொன்று விடுகிறாள்.

பிறகு, பத்திரை, வாழ்க்கையை வெறுத்தவளாய், பல இடங்களில் அலைந்து திரிந்து, பின் சமண சமயத்தவர் வாழும் மடத்தை அடைந்து, சமணத் துறவியாகிறாள். அங்குச் சமணக் கொள்கைகளைக் கற்றுத் தேர்ந்து, பின் பிற சமயக் கருத்துகளை எல்லாம் முறைப்படி கற்றுத் தேர்கிறாள். பின் சமயவாதம் செய்யப் புறப்பட்டு, நாவல் கிளையை நட்டுச் சமய வாதம் செய்து வென்று, பலரைச் சமண சமயம் சாரச் செய்கிறாள். ஒரு நாள், நாவல் நட்டு விட்டு ஊருக்குள் பிச்சை ஏற்கச் செல்கிறாள். அப்போது கௌதம புத்தரின் மாணவர் சாரிபுத்தர், பத்திரை நட்டு வைத்த நாவலைப் பிடுங்கி எறிந்து விடுகிறார். இதனால் இருவருக்கும் இடையே சமய வாதம் நிகழ்கிறது. வாதத்தில் பத்திரை தோற்க, சாரிபுத்தர் ஆணைப்படி பௌத்தத் துறவியாகிறாள். சாரிபுத்தர் குண்டலகேசியைப் (பத்திரை) பகவான் புத்தரிடம் அழைத்துச் செல்ல, அவர் முன்னிலையில் அவள் பௌத்தத் துறவியாகிறாள்.

இங்குப் பத்திரை சமண சமயம் சார்ந்தபோது அவள் தலைமயிர் மழிக்கப்பட, அது உடனடியாகச் சுருண்டு வளர்கிறது. இதனால் அவள் குண்டலகேசி எனப் பெயர் பெறுகிறாள். இக்கதையில் ‘கள்வன் மகன் அல்லனோ’ என்றதற்காக அவளைக் கொல்லத் துணிகிறான். ஆனால் தேரீ அவதானம் முதலான வடமொழிக் கதைகளில், குண்டலகேசியின் (பத்திரை) கணவன், அவள் நகைகளைக் கொள்ளையடிப்பதற்காகவே அவளைக் கொல்லப் போவதாகக் குறிப்பிடுகிறான்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 09, 2012 12:42 am

நூல் நுவலும் பொருள்

‘சமயம் இல்லையேல் காப்பியம் இல்லை’ என்னும் அளவிற்குப் பெரும்பாலான காப்பியங்கள் சமயக் கருத்துகளைப் பரப்புவதில் முனைந்து செயல்படுகின்றன. இதற்குக் குண்டலகேசியும் விதிவிலக்கு அல்ல. கிடைத்துள்ள பாடல்களில் தீவினை அச்சம், கூடா ஒழுக்கம், புணர்ச்சி விழையாமை, யாக்கை நிலையாமை, தூய தன்மை, இறைமாட்சி, குற்றம் கடிதல், இடுக்கண் அழியாமை முதலான உலகியல் நீதிகள் வலியுறுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

யாக்கை நிலையாமை

இளமை மற்றும் யாக்கை நிலையாமை குறித்த பாடல் இங்குக் குறிப்பிடத்தக்கது. ‘நாம் அனைவரும் ஒவ்வொரு நாளும் செத்துச் செத்துப் பிழைக்கிறோம். அதற்கெல்லாம் அழுது புலம்பாத நாம், இவ்வுடலை விட்டு உயிர் பிரிகிறபோது மட்டும் அழுவது ஏன்’ என்று கேட்கிறார் ஆசிரியர்.

பாளையாம் தன்மை செத்தும் பாலனாம் தன்மை செத்தும்
காளையாம் தன்மை செத்தும் காமுறும் இளமை செத்தும்
மீளும் இவ் இயல்பும் இன்னே மேல்வரும் மூப்பும் ஆகி
நாளும் நாள் சாகின்றாமால் நமக்குநாம் அழாதது என்னோ


(பாளையாம் = இளமை; நாளும் நாள் சாகின்றாமால் = தினம் தினம் செத்துக் கொண்டிருக்கிறோம்)



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 09, 2012 12:44 am

அறிவுடையார் செயல்

எது நிகழ்ந்தாலும் அதை விருப்பு வெறுப்பில்லாமல் ஏற்றுக் கொள்வார்கள் அறிவுடையார் என்று அறிவுடையாரின் செயல் இந்நூலில் கூறப்பட்டுள்ளது.

‘எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது; எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது’ என்ற கீதையின் வார்த்தைகளை நினைவுகூரச் செய்கிறது பின்வரும் பாடல்.

மறிப மறியும் மலிர்ப மலிரும்
பெறுப பெறும் பெற்றுஇழப்ப இழக்கும்
அறிவது அறிவார் அழுங்கார் உவவார்
உறுவதும் உறும் என்று உரைப்பது நன்று


(மறிப மறியும் = நடப்பது நடந்தே தீரும்; மலிர்ப மலிரும் = நடக்க இருப்பது நடந்தே ஆகவேண்டும்; பெறுப பெறும் = நமக்குக் கிடைக்க வேண்டியது கிடைத்தே தீரும்)

பொருள்:

நடப்பது நடந்தே தீரும். நடக்க இருப்பது நடந்தே ஆகவேண்டும். நமக்குக் கிடைக்க வேண்டியது கிடைத்தே தீரும். நாம் பெற்றதை இழக்க நேரிடும்போது இழந்தே தீர வேண்டும், இதனை யாரும் தடுக்க முடியாது. இதற்காக அழுவதோ, உவப்பதோ செய்யார் அறிவுடையார்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 09, 2012 12:46 am

குற்றம் கடிதல்

‘நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே’ என இறைவனோடு வாதாடிய நக்கீரன் வாழ்ந்த மண் இது. எனவே இங்கு யார் தவறு செய்தாலும் தவறு தவறுதான் என்று சுட்டிக் காட்டுகிறார் ஆசிரியர்.

மண்ணுளார் தம்மைப் போல்வார் மாட்டதே அன்று வாய்மை
நண்ணினார் திறத்தும் குற்றம் குற்றமே நல்ல ஆகா
விண்ணுளார் புகழ்தற்கு ஒத்த விழுமியோன் நெற்றி போழ்ந்த
கண்ணுளான் கண்டம் தன்மேல் கறையை யார் கறையன்று என்பார்?


பொருள்:

சாதாரண மனிதர்க்கு மட்டுமன்றி, வாய்மை மிக்க சான்றோர் தவறு செய்யினும் தவறுதான். நெற்றிக் கண்ணன் சிவன் கண்டத்திலுள்ள கறை கறைதான்; அன்று என்று யாரும் சொல்லார்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 09, 2012 12:48 am

இலக்கிய நயம்

குண்டலகேசிப் பாடல்கள் கிடைத்துள்ளவை சிலவே ஆகினும் இலக்கியச் சிறப்பும் நயமும் மிக்கன என்பது குறிப்பிடத்தக்கது. சிறந்த சொல்லாட்சியாலும், உவமை நயத்தாலும் இந்நூல் சிறந்து விளங்கியுள்ளது என்பது விளங்கும். மேலும், சிறந்த கற்பனை வளமும் மிகுந்துள்ளது.

உவமை நயம்

‘நாவாய் (ஓடம்) காற்றை நம்பியே செல்லும். அது போலவே வாழ்க்கையானது ஊழ்வினையை அடிப்படையாக் கொண்டே அமையும். மேலும் மனத்தூய்மை என்பது, எவ்விதத் தீமையும் நினைக்காத தூய சிந்தனையுடைய புத்த பிரானை நாளும் நினைவில் நிறுத்துவதே’ ஆகும். இதனை உணர்த்தும் பாடல் பின்வருமாறு:

வாயுவினை நோக்கியுள மாண்டவய நாவாய்
ஆயுவினை நோக்கியுள வாழ்க்கை யதுவேபோல்
தீயவினை நோக்கும் இயல் சிந்தனையும் இல்லாத்
தூயவனை நோக்கியுள துப்புரவும் எல்லாம்


(வாயுவினை = காற்று; மாண்ட வய = சிறப்பு மிக்க; ஆயுவினை = ஊழ்; தூயவனை = புத்த பிரானை; துப்புரவு = தூய்மை)



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 09, 2012 12:49 am

காமத்தைக் கைவிடல் பற்றிய உவமை

துறவிகளுக்குக் காமம் கூடாது என்பது சமண, பௌத்த மதங்களின் போதனை. இதனை மிகச் சிறந்த உவமை வாயிலாக விளக்கிச் செல்கிறார் ஆசிரியர். ‘காமத்தைப் புணர்ச்சியினால் அடக்குவம் என்பது வெள்ளத்தை நீரால் அடைக்க முடியும்’ என்பதற்கு ஒத்தது என்கிறார். மேலும் அது தீயை நெய் ஊற்றி அணைப்பதற்கு ஒப்பாவது என்றும் கூறிக் காமத்தைப் புணர்ச்சி இன்பம் துய்த்து அடக்க முடியாது என்பதைத் தெளிவுபடுத்துகிறார். இதோ பாடல் வருமாறு:

வகைஎழில் தோள்கள் என்றும் மணிநிறம் குஞ்சி என்றும்
புகழ்எழ விகற்பிக்கின்ற பொருளில் காமத்தை மற்றோர்
தொகைஎழும் காதல் தன்னால் துய்த்துயாம் துடைத்தும் என்பார்
அகைஅழல் அழுவம் தன்னை நெய்யினால் அவிக்க லாமோ


(குஞ்சி = கூந்தல்; அகைஅழல் அழுவம் = கொழுந்துவிட்டு எரியும் அனல்கடல்)



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Oct 09, 2012 2:18 pm

குண்டலகேசியை முழுமையாக படிக்க முடியவில்லை என்றாலும் முழுவதும் படித்த திருப்தி அடைந்தேன். மிக்க நன்றி சிவா அண்ணா



[You must be registered and logged in to see this link.]


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக