புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இரத்தக் குழாய்களை வெடிக்கச் செய்யும் மரணக் குண்டுகள் Poll_c10இரத்தக் குழாய்களை வெடிக்கச் செய்யும் மரணக் குண்டுகள் Poll_m10இரத்தக் குழாய்களை வெடிக்கச் செய்யும் மரணக் குண்டுகள் Poll_c10 
1 Post - 50%
வேல்முருகன் காசி
இரத்தக் குழாய்களை வெடிக்கச் செய்யும் மரணக் குண்டுகள் Poll_c10இரத்தக் குழாய்களை வெடிக்கச் செய்யும் மரணக் குண்டுகள் Poll_m10இரத்தக் குழாய்களை வெடிக்கச் செய்யும் மரணக் குண்டுகள் Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரத்தக் குழாய்களை வெடிக்கச் செய்யும் மரணக் குண்டுகள் Poll_c10இரத்தக் குழாய்களை வெடிக்கச் செய்யும் மரணக் குண்டுகள் Poll_m10இரத்தக் குழாய்களை வெடிக்கச் செய்யும் மரணக் குண்டுகள் Poll_c10 
284 Posts - 45%
heezulia
இரத்தக் குழாய்களை வெடிக்கச் செய்யும் மரணக் குண்டுகள் Poll_c10இரத்தக் குழாய்களை வெடிக்கச் செய்யும் மரணக் குண்டுகள் Poll_m10இரத்தக் குழாய்களை வெடிக்கச் செய்யும் மரணக் குண்டுகள் Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
இரத்தக் குழாய்களை வெடிக்கச் செய்யும் மரணக் குண்டுகள் Poll_c10இரத்தக் குழாய்களை வெடிக்கச் செய்யும் மரணக் குண்டுகள் Poll_m10இரத்தக் குழாய்களை வெடிக்கச் செய்யும் மரணக் குண்டுகள் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
இரத்தக் குழாய்களை வெடிக்கச் செய்யும் மரணக் குண்டுகள் Poll_c10இரத்தக் குழாய்களை வெடிக்கச் செய்யும் மரணக் குண்டுகள் Poll_m10இரத்தக் குழாய்களை வெடிக்கச் செய்யும் மரணக் குண்டுகள் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இரத்தக் குழாய்களை வெடிக்கச் செய்யும் மரணக் குண்டுகள் Poll_c10இரத்தக் குழாய்களை வெடிக்கச் செய்யும் மரணக் குண்டுகள் Poll_m10இரத்தக் குழாய்களை வெடிக்கச் செய்யும் மரணக் குண்டுகள் Poll_c10 
20 Posts - 3%
prajai
இரத்தக் குழாய்களை வெடிக்கச் செய்யும் மரணக் குண்டுகள் Poll_c10இரத்தக் குழாய்களை வெடிக்கச் செய்யும் மரணக் குண்டுகள் Poll_m10இரத்தக் குழாய்களை வெடிக்கச் செய்யும் மரணக் குண்டுகள் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இரத்தக் குழாய்களை வெடிக்கச் செய்யும் மரணக் குண்டுகள் Poll_c10இரத்தக் குழாய்களை வெடிக்கச் செய்யும் மரணக் குண்டுகள் Poll_m10இரத்தக் குழாய்களை வெடிக்கச் செய்யும் மரணக் குண்டுகள் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
இரத்தக் குழாய்களை வெடிக்கச் செய்யும் மரணக் குண்டுகள் Poll_c10இரத்தக் குழாய்களை வெடிக்கச் செய்யும் மரணக் குண்டுகள் Poll_m10இரத்தக் குழாய்களை வெடிக்கச் செய்யும் மரணக் குண்டுகள் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இரத்தக் குழாய்களை வெடிக்கச் செய்யும் மரணக் குண்டுகள் Poll_c10இரத்தக் குழாய்களை வெடிக்கச் செய்யும் மரணக் குண்டுகள் Poll_m10இரத்தக் குழாய்களை வெடிக்கச் செய்யும் மரணக் குண்டுகள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
இரத்தக் குழாய்களை வெடிக்கச் செய்யும் மரணக் குண்டுகள் Poll_c10இரத்தக் குழாய்களை வெடிக்கச் செய்யும் மரணக் குண்டுகள் Poll_m10இரத்தக் குழாய்களை வெடிக்கச் செய்யும் மரணக் குண்டுகள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரத்தக் குழாய்களை வெடிக்கச் செய்யும் மரணக் குண்டுகள்


   
   
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Oct 10, 2009 10:26 pm

இரத்தக் குழாய்களை வெடிக்கச் செய்யும் மரணக் குண்டுகள் Pittuகாலையில் பாண், இரவில் கடையில் வாங்கிய கொத்து அல்லது நூடில்ஸ். பல வீடுகளில் தினமும் இவ்வாறு கடை உணவுதான்.

சமைப்பதற்கும் நேரம் இல்லை.

மதியம் ஒரு நேரத்திற்கு மட்டும் சோறு, அதுவும் சமைப்பதற்கு இலகுவான அதிக காஸ் செலவாகாத நன்கு 'பொலிஸ்' பண்ணிய சம்பா அரிசி. அல்லது அதிலும் சுலபமான நூடில்ஸ்.

இவ்வாறுதான் காலம் கழிகிறது

இன்றைய வாழ்வு நெருக்கடிகளுக்கு உள்ளாகிவிட்டது. நீண்ட வேலை நேரங்கள், கணவனும் மனைவியும் உழைக்கப் போக வேண்டிய நிர்ப்பந்தம், பிள்ளைகளின் படிப்பு ரியூசன் என நேரத்துடன் போராட வேண்டிய வாழ்க்கை. மிகுதியுள்ள சொற்ப நேரம் தொலைக்காட்சியில் முடங்கிவிடுகிறது. எனவே சமையலிலும் சாப்பாட்டிலும்தான் நேரத்தை மிச்சப்படுத்த முடிகிறது.

இதனால் எமது பாரம்பரிய உணவுகளான குத்தரிச் சோறு, தவிட்டுமா இடியப்பம், அரசிக் கஞ்சி, ஒடியல் பிட்டு, குரக்கன் ரொட்டி, களி போன்ற பலவும் சிலருக்கு மறந்தே போய்விட்டன.
இரத்தக் குழாய்களை வெடிக்கச் செய்யும் மரணக் குண்டுகள் String-hoppersஇடியாப்பம் நன்றி :-www.roshani.co.uk/.../recipes-vegetables/

குடும்பமாகக் கூடியியிருந்து சாப்பிடும் வழக்கம் அருகிக் கொண்டே போகிறது. உணவு வேளையின் கலந்துரையாடலும், பகிர்ந்து உண்ணும் ஆனந்தமும் நழுவி ஓடிவிட்டன.

உடல் உழைப்பு என்றால் என்னவென்று கேட்கும் காலமாயிற்று. உடற் பயிற்சிக்கும் நேரம் கிடையாது.

பாரம்பரிய உணவுகளின் நன்மை என்ன?

அவற்றின் முழுமைத் தன்மையிலிருந்து கிட்டுகிறது.
அதாவது அவை அதிகம் சுத்திகரிக்கப்படாதவை.
அவற்றில் மாப்பொருள், விட்டமின், புரதம், கொழுப்பு, கனிமம் யாவும் உள்ளன. எதுவுமே அதிகமல்லாமல் தேவையான அளவில் மட்டும் உண்டு.
நார்ப்பொருள் மட்டுமே அதிகம் உண்டு.
உணவில் நார்ப்பொருள் என்பது முருங்கைக்காய், வாழைக்காய் தோல் போன்றவற்றிலிருக்கும், நாம் வெட்டி நீக்கும் நார் அல்ல.
மாறாக சப்பித் துப்பும் நாருமல்ல.
உணவோடு உணவாகச் சேர்ந்திருப்பவை.

அரிசியின் தவிடு நல்ல உதாரணம். இரத்தக் குழாய்களை வெடிக்கச் செய்யும் மரணக் குண்டுகள் Red+and+white+rice

இது குத்தரிசியில் மாத்திரமல்ல, சம்பா அரிசியிலும் இருக்கவே செய்கிறது. ஆயினும் நன்றாகத் தீட்டப்பட்டால் அவை மாட்டுத் தீவனமான தவிடாக அகன்று விடும்.
நன்றாகத் தீட்டப்படாத சம்பா அரியிலும் சற்று மஞ்சளடித்து போல இருப்பதும் தவிடு தான்.
மாறாக நன்கு தீட்டப்பட்ட குத்தரிசியில் குறைவாகவே இருக்கும். அரிசியில்

மாத்திரமின்றி பழங்களிலும், காய்கறிகளிலும் கூட நார்ப்பொருள் உண்டு.

நார்ப் பொருள் என்பது என்ன?

நார்ப் பொருள் என்பதை எமது உணவில் உள்ள சக்கை எனலாம். அதாவது எமது உடலால் ஜீரணிக்க முடியாதவையும், உணவுக் கால்வாயால் உறிஞ்சப்பட முடியாதவையும் ஆகும். உணவில் உள்ள மாப்பொருள், புரதம், கொழுப்பு ஆகியன உணவுக் கால்வாயில் சமிபாடடைந்து உறிஞ்சப்பட்டு உடல் வளர்ச்சிக்கும், செயற்பாட்டிற்குமான போஷணைப் பொருட்களைக் கொடுக்கின்றன.

ஆனால் நார்ப் பொருள் சக்கையாக மலத்துடன் வெளியேறுகிறது.
இரத்தக் குழாய்களை வெடிக்கச் செய்யும் மரணக் குண்டுகள் Images
அப்படியாயின் அது ஏன் எமக்குத் தேவை?

உணவில் உள்ள நார்ப்பொருள் இரண்டாக வகைப்படுத்தப்படுகிறது.

  1. கரையும் நார்ப்பொருள் (soluble fiber).


  1. கரையாத நார்ப்பொருள் (insoluble fiber).


  • கரையாத நார்ப்பொருளானது, உணவு உணவுக்கால்வாய் ஊடாக இலகுவாகப் பயணம் செய்வதற்கும் மலம் நன்றாக வெளியேறுவதற்கும் உதவுகின்றது.
  • மலச்சிக்கல் உள்ளவர்களுக்கும், மலம் ஒழுங்காகக் கழியாதவர்களுக்கும் இது உதவும்.


  • அத்துடன் குடல் புற்றுநோய் வராமல் தடுக்கவும் செய்யும்.
தீட்டாத அரிசி, கோதுமை, வகைகள், காய்கறிகள் போன்றவற்றில் இது அதிகம் உண்டு.

இரத்தக் குழாய்களை வெடிக்கச் செய்யும் மரணக் குண்டுகள் Soluble+fibreகரையும் நார்ப்பொருளானது நீரில் கரைந்து ஜெல் போன்ற ஒரு பொருளாக மாறுகிறது. இது குருதியில் கொலஸ்டரோல், சீனி ஆகியன அதிகரிப்பதைத் தடுக்கவல்லது. அவரை இன உணவுகள், கரட், புளிப்புத்தன்மை உள்ள பழங்கள். ஆப்பிள், ஓட்ஸ், பார்லி, psyllium போன்றவற்றில் தாராளமாகக் கிடைக்கும்.

நார்ப் பொருட்கள் மலச்சிக்கலை நீக்குகிறது என்றோம்.
இதனை அது இரண்டு வழிகளில் செய்கிறது.

  1. நார்ப்பொருள் செமிபாடடையாதது என்பதால் மலத்தின் அளவை அதிகரிக்கச் செய்கின்றது.
  2. இரண்டாவதாக மலம் இறுகாமல், மெதுமையாக இருப்பதற்கு உதவுகிறது. இதனால் முக்கி வேதனைப்பட வேண்டிய தேவை இன்றி மலம் தானாகவே சுலபமாக நழுவி வெளியேறும்.
'இது செமிபாடடையாது என்றும், சளிக்கு கூடாது' என்று வயதானவர்களும், ஆஸ்த்மா போன்ற சளி நோயுள்ளவர்களும் பழங்களைத் தவிர்க்கிறார்கள். அத்துடன் பத்தியம் பார்த்து பல்வேறு மரக்கறிகளையும் சாப்பிடாது ஒதுக்குகிறார்கள்.

வேறு சிலர் சோயா, கடலை, பயறு, உழுந்து, பயிற்றை, போஞ்சி, அவரை போன்ற சத்துணவுகள் பலவற்றையும் 'வாய்வுச் சாப்பாடு, சமிப்பதில்லை' என ஒதுக்கிவிடுகிறார்கள்.

இவை தவறான கருத்துக்கள். இவற்றைக் குளிர் என்றும், செமிபாடடையாது எனவும் ஒதுக்குவது பிழையானது. பழங்கள், காய்கறிகள் போன்றவை சளியைத் தூண்டாது.

அத்துடன் செமிபாடு அடையாது என அவர்கள் குறிப்பிடும் உணவு வகைகள் உண்மையில் மெதுவாகச் செமிபாடு அடைவதால் நீரிழிவு, கொலஸ்டரோல் போன்ற தீவிர நோய்கள் அதிகரிக்காமல் பாதுகாக்கின்றன.

அதிகமாகச் சப்பிச் சாப்பிட வேண்டியவை நார்ப்பொருளுள்ள உணவுகள்.


  • அதனால் உண்பதற்கு சற்று அதிக நேரம் எடுக்கும்.


  • அவசரப்படாது ஆறுதலாக நன்கு மென்று உண்பது உடலுக்கு நல்லது.


  • நேரம் எடுப்பதால் தேவையற்ற வீண் பசியை தணிந்துவிடும்.


  • தேவைக்கு அதிகமாக உண்ண வேண்டியிருக்காது.


  • அத்தகைய உணவுகள் வயிறை நிரப்புவதால் நீண்ட நேரத்திற்கு மீண்டும் பசியெடுக்காது.


  • நார்ப் பெர்ருள் உணவுகளில் கலோரிச் சக்தியும் குறைவு.


  • எனவே எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கும் ஏற்றது எனலாம்.

மாறாக இன்று நாம் உண்பவை என்ன?
இரத்தக் குழாய்களை வெடிக்கச் செய்யும் மரணக் குண்டுகள் Pitza_r
பாண், பேஹர் பணிஸ், பிஷா, நூடில்ஸ், கொத்து என சுலப உணவுகள்.

போதாக்குறைக்கு இடையே கொறிக்க ரோல்ஸ், கட்லற், பற்றிஸ் மிக்சர், பகோடா, வடை, ஐஸ்கிறீம் போன்றவை.

இவற்றில் மாப் பொருளும் எண்ணெய் மாஜரீன், அஜினமோட்டோ போன்றவையும் தானே உள்ளன.

வெற்றுக் கலோரிக் குண்டுகள்!

நார்ப்பொருள், விட்டமின், கனியம் புரதம் போன்ற போஷாக்குகள் அற்றவை.

உதாரணத்திற்கு நூடில்சை எடுத்துக் கொள்ளுங்கள்.

அதில் ஏறத்தாள 70சதவிகிதம் மாப்பொருளும், 17 சதவிகிதம் கொழுப்பும் உள்ளது. அதிலுள்ள உப்பு 1500 மிகி முதல் 3000 மிகி வரையாகும்.

இது அமெரிக்க அரசு அங்கீகரித்த அளவை விட 60 சதவிகிதம் அதிகமாகும்.
உப்பிற்கும் உயர் இரத்த அழுத்தத்திற்கும் உள்ள இறுக்கமான காதலை நீங்கள் நிச்சயம் அறிந்திருப்பீர்கள்.

இத்தகைய வெற்று கலோரிக் குண்டுகள் என்ன செய்யும்?

உடலை ஊதச் செய்யும். நீரிழிவு, பிரஸர், கொலஸ்டரோல் போன்றவற்றை வா வாவென அழைக்கும்.

மூளையிலும், இருதயத்திலும் இரத்தக் குழாய்களை வெடிக்கச் செய்து
மரணத்தை முற் கூட்டியே வரவேற்கும்.

உங்கள் தேர்வு எது?

பாரம்பரிய உணவா? நவ நாகரீக உணவா?

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்



mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Sun Oct 11, 2009 1:30 am

இவ்வளவு விசயங்களை தெளிவு படுத்திய பிறகும் ந்வ நாகரீக உணவுகள் வேண்டும் என்று சொல்வோமா.........

பாரம்பரிய உணவுதான் வேண்டும்.

ஆனால் வெளி நாட்டில் சில நேரங்களில் நாம் தேடினாலும் பாரம்பரிய உணவு கிடைப்பதில்லை என்பது மிகவும் வருத்தப்படக்கூடிய ஒன்று.

- நன்றி மீனு.



இரத்தக் குழாய்களை வெடிக்கச் செய்யும் மரணக் குண்டுகள் Eegaraitkmkhan
இரத்தக் குழாய்களை வெடிக்கச் செய்யும் மரணக் குண்டுகள் Logo12

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக