புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:22 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திரு ஐந்தெழுத்து மந்திரம் – தொடர் பதிவு! - Page 2 Poll_c10திரு ஐந்தெழுத்து மந்திரம் – தொடர் பதிவு! - Page 2 Poll_m10திரு ஐந்தெழுத்து மந்திரம் – தொடர் பதிவு! - Page 2 Poll_c10 
6 Posts - 46%
heezulia
திரு ஐந்தெழுத்து மந்திரம் – தொடர் பதிவு! - Page 2 Poll_c10திரு ஐந்தெழுத்து மந்திரம் – தொடர் பதிவு! - Page 2 Poll_m10திரு ஐந்தெழுத்து மந்திரம் – தொடர் பதிவு! - Page 2 Poll_c10 
3 Posts - 23%
Dr.S.Soundarapandian
திரு ஐந்தெழுத்து மந்திரம் – தொடர் பதிவு! - Page 2 Poll_c10திரு ஐந்தெழுத்து மந்திரம் – தொடர் பதிவு! - Page 2 Poll_m10திரு ஐந்தெழுத்து மந்திரம் – தொடர் பதிவு! - Page 2 Poll_c10 
2 Posts - 15%
Ammu Swarnalatha
திரு ஐந்தெழுத்து மந்திரம் – தொடர் பதிவு! - Page 2 Poll_c10திரு ஐந்தெழுத்து மந்திரம் – தொடர் பதிவு! - Page 2 Poll_m10திரு ஐந்தெழுத்து மந்திரம் – தொடர் பதிவு! - Page 2 Poll_c10 
1 Post - 8%
T.N.Balasubramanian
திரு ஐந்தெழுத்து மந்திரம் – தொடர் பதிவு! - Page 2 Poll_c10திரு ஐந்தெழுத்து மந்திரம் – தொடர் பதிவு! - Page 2 Poll_m10திரு ஐந்தெழுத்து மந்திரம் – தொடர் பதிவு! - Page 2 Poll_c10 
1 Post - 8%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திரு ஐந்தெழுத்து மந்திரம் – தொடர் பதிவு! - Page 2 Poll_c10திரு ஐந்தெழுத்து மந்திரம் – தொடர் பதிவு! - Page 2 Poll_m10திரு ஐந்தெழுத்து மந்திரம் – தொடர் பதிவு! - Page 2 Poll_c10 
372 Posts - 49%
heezulia
திரு ஐந்தெழுத்து மந்திரம் – தொடர் பதிவு! - Page 2 Poll_c10திரு ஐந்தெழுத்து மந்திரம் – தொடர் பதிவு! - Page 2 Poll_m10திரு ஐந்தெழுத்து மந்திரம் – தொடர் பதிவு! - Page 2 Poll_c10 
239 Posts - 32%
Dr.S.Soundarapandian
திரு ஐந்தெழுத்து மந்திரம் – தொடர் பதிவு! - Page 2 Poll_c10திரு ஐந்தெழுத்து மந்திரம் – தொடர் பதிவு! - Page 2 Poll_m10திரு ஐந்தெழுத்து மந்திரம் – தொடர் பதிவு! - Page 2 Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
திரு ஐந்தெழுத்து மந்திரம் – தொடர் பதிவு! - Page 2 Poll_c10திரு ஐந்தெழுத்து மந்திரம் – தொடர் பதிவு! - Page 2 Poll_m10திரு ஐந்தெழுத்து மந்திரம் – தொடர் பதிவு! - Page 2 Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
திரு ஐந்தெழுத்து மந்திரம் – தொடர் பதிவு! - Page 2 Poll_c10திரு ஐந்தெழுத்து மந்திரம் – தொடர் பதிவு! - Page 2 Poll_m10திரு ஐந்தெழுத்து மந்திரம் – தொடர் பதிவு! - Page 2 Poll_c10 
25 Posts - 3%
prajai
திரு ஐந்தெழுத்து மந்திரம் – தொடர் பதிவு! - Page 2 Poll_c10திரு ஐந்தெழுத்து மந்திரம் – தொடர் பதிவு! - Page 2 Poll_m10திரு ஐந்தெழுத்து மந்திரம் – தொடர் பதிவு! - Page 2 Poll_c10 
6 Posts - 1%
sugumaran
திரு ஐந்தெழுத்து மந்திரம் – தொடர் பதிவு! - Page 2 Poll_c10திரு ஐந்தெழுத்து மந்திரம் – தொடர் பதிவு! - Page 2 Poll_m10திரு ஐந்தெழுத்து மந்திரம் – தொடர் பதிவு! - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
திரு ஐந்தெழுத்து மந்திரம் – தொடர் பதிவு! - Page 2 Poll_c10திரு ஐந்தெழுத்து மந்திரம் – தொடர் பதிவு! - Page 2 Poll_m10திரு ஐந்தெழுத்து மந்திரம் – தொடர் பதிவு! - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
திரு ஐந்தெழுத்து மந்திரம் – தொடர் பதிவு! - Page 2 Poll_c10திரு ஐந்தெழுத்து மந்திரம் – தொடர் பதிவு! - Page 2 Poll_m10திரு ஐந்தெழுத்து மந்திரம் – தொடர் பதிவு! - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
திரு ஐந்தெழுத்து மந்திரம் – தொடர் பதிவு! - Page 2 Poll_c10திரு ஐந்தெழுத்து மந்திரம் – தொடர் பதிவு! - Page 2 Poll_m10திரு ஐந்தெழுத்து மந்திரம் – தொடர் பதிவு! - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரு ஐந்தெழுத்து மந்திரம் – தொடர் பதிவு!


   
   

Page 2 of 2 Previous  1, 2

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri Sep 28, 2012 7:18 pm

First topic message reminder :

நமசிவய


மந்திரம் என்ற சொல்லிற்கு உரிய இலக்கணங்கள் எல்லாம் அமைந்ததும், எல்லா மந்திரங்களுக்கும் முதன்மையானதும், தமிழன் கொண்ட இறைக் கொள்கை அனைத்தையும் உள்ளடக்கியதும் ஆகிய மந்திரம் ஐந்தெழுத்து ஆகும்.

நமசிவய எனும் ஐந்தெழுத்தில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பொருளைக் குறிக்கும். அதன் விவரம் வருமாறு:
ந – நடப்பு,
ம – மறைப்பு,
சி – சிறப்பு,
வ –வனப்பு,
ய – யாப்பு

இதில்,
நடப்பு – உயிர் உலகில் பிறந்து உலகியல் நடப்பு வாழ்வதைக் குறிக்கும்.
மறைப்பு – அறியும் பொருளான உயிரை அறியாமையாகிய இருள் மறைப்பது குறிக்கப் படுகிறது.
சிறப்பு – எல்லோரும் ஒப்புக் கொள்கிற சிறப்பிற்கெல்லாம் சிறப்பான பரம்பொருளைக் (சிவபெருமானை) குறிக்கும்.
வனப்பு – பேராற்றல் படைத்த பரம்பொருள் மிகச்சிறிய ஆற்றல் படைத்த உயிருடன் தொடர்பு கொள்ளுவது குறிக்கப்படுகிறது.
யாப்பு – அனுபவம் கொடுத்து உயிருக்கு அறிவை ஏற்றுவதற்காக அல்லது அறியாமையைத் தேய்ப்பதற்காக உயிர் ஓர் உடலில் கட்டப்படுவது குறிக்கப் படுகிறது. யாக்கப்படுவதால் யாப்பு.

பஞ்சாட்சரம் (ஐந்து அட்சரம்) எனும் வடமொழிச் சொல் நமது ஐந்தெழுத்து எனும் தமிழ்ச் சொல்லிற்கு ஒரு மொழி பெயர்ப்பே. அவ்வளவுதான். எப்படி ஆங்கிலத்தில் FIVE LETTERS என்று கூறுகிறோமோ அதைப் போல. அதற்கு எந்த இறைக் கொள்கையும் கிடையாது. மூலமந்திரமான இந்த தமிழ் ஐந்தெழுத்து மந்திரத்தைப் பற்றிய நமது அருளாளர்களின் பதிகங்களைப் இனிப் பார்ப்போம்.
(மந்திரம் தொடர்ந்து ஒலிக்கும்)


சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Oct 08, 2012 10:29 pm

பாடல் எண் : 4
இயமன் றூதரு மஞ்சுவ ரின்சொலால்
நயம்வந் தோதவல் லார்தமை நண்ணினால்
நியமந் தானினை வார்க்கினி யானெற்றி
நயனன் நாமம் நமச்சி வாயவே.


பொழிப்புரை :
தன்னை நாடோறும் தியானித்து வழிபடும் அடியவர்கட்கு என்றும் நன்மை செய்பவனும் , நெற்றிக்கண்ணை உடையவனுமான சிவபெருமானின் திருநாமம் ` நமச்சிவாய ` என்ற திருவைந்தெழுத்தாகும் . இனிமையான சொற்களால் திருவைந்தெழுத்தை நயம்பட ஓதவல்லவர்களை எவரேனும் அண்டினால் , அங்ஙனம் அண்டியவர்களையும் அணுக இயமன் தூதன் பயப்படுவான் .

பாடல் எண் : 5
கொல்வா ரேனுங் குணம்பல நன்மைகள்
இல்லா ரேனு மியம்புவ ராயிடின்
எல்லாத் தீங்கையு நீங்குவ ரென்பரால்
நல்லார் நாமம் நமச்சி வாயவே.


பொழிப்புரை :
கொலைத்தொழிலில் ஈடுபட்டவர்களாக இருப்பினும் , நற்குணமும் , பல நல்லொழுக்கங்களும் இல்லாதவர் ஆயினும் ஏதேனும் சிறு பூர்வ புண்ணியத்தால் திருவைந்தெழுத்தை உச்சரிப்பார்களேயானால் எல்லாவிதமான தீங்குகளினின்றும் நீங்குவர் என்று பெரியோர்கள் கூறுவர் . அத்தகைய சிறப்புடையது எல்லோருக்கும் நன்மையே செய்பவனாகிய சிவபெருமானின் திருப்பெயரான ` நமச்சிவாய ` என்னும் திருவைந்தெழுத்தேயாகும் .

பாடல் எண் : 6
மந்த ரம்மன பாவங்கண் மேவிய
பந்த னையவர் தாமும் பகர்வரேல்
சிந்தும் வல்வினை செல்வமு மல்குமால்
நந்தி நாமம் நமச்சி வாயவே.


பொழிப்புரை :
மந்தர மலை போன்ற பாவங்களைச் செய்து பாசங்களால் கட்டுண்டவர்களும் , திருவைந்தெழுத்தை உச்சரிப்பார்களேயானால் அவர்களது கொடியவினைகள் தீர்ந்து போகும் . அவர்கட்குச் செல்வமும் பெருகும் . அத்தகைய சிறப்புடையது நந்தி என்னும் பெயருடைய சிவபெருமானின் திருநாமமான ` நமச்சிவாய ` என்பதாகும் .

(மந்திரம் தொடர்ந்து ஒலிக்கும்)

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Oct 10, 2012 4:27 pm

பாடல் எண் : 7
நரக மேழ்புக நாடின ராயினும்
உரைசெய் வாயின ராயி னுருத்திரர்
விரவி யேபுகு வித்திடு மென்பரால்
வரதன் நாமம் நமச்சி வாயவே.


பொழிப்புரை :
ஏழ் நரகங்கட்குச் செல்லக் கூடிய பாவிகளானாலும் திருவைந்தெழுத்தைப் பக்தியோடு உச்சரிப்பார்களேயானால் , உருத்திர கணத்தாரோடு சேர்ந்து வசிக்கும் பேற்றினைப் பெறுவர் . அடியவர்கள் கேட்ட வரமெல்லாம் தரும் சிவபெருமானின் திருநாமமும் திருவைந்தெழுத்தே ஆகும் .

பாடல் எண் : 8
இலங்கை மன்ன னெடுத்த வடுக்கன்மேல்
தலங்கொள் கால்விரல் சங்கர னூன்றலும்
மலங்கி வாய்மொழி செய்தவ னுய்வகை
நலங்கொள் நாமம் நமச்சி வாயவே.


பொழிப்புரை :
இலங்கை மன்னனான இராவணன் திருக்கயிலையைப் பெயர்த்து எடுக்க முயல , சங்கரன் தன் காற்பெருவிரலை ஊன்றவும் , கயிலையின் கீழ் நெருக்குண்டு அவன் வாய்விட்டு அலற அவனுக்கு உய்யும்நெறி அருளி , நன்மை செய்வதையே தன் இயல்பாக உடைய சிவபெருமானின் திருநாமமாகிய ` நமச்சிவாய ` என்ற திருவைந்தெழுத்தாகும் .

பாடல் எண் : 9
போதன் போதன கண்ணனு மண்ணல்தன்
பாதந் தான்முடி நேடிய பண்பராய்
யாதுங் காண்பரி தாகி யலந்தவர்
ஓதும் நாமம் நமச்சி வாயவே.


பொழிப்புரை :
தாமரை மலரில் வீற்றிருக்கின்ற பிரமனும் , தாமரை மலர் போன்ற கண்களையுடைய திருமாலும், எல்லோருக்கும் தலைவரான சிவபெருமானின் திருமுடியையும், திருவடியையும் தேட முயன்று காண இயலாதவராகித் தம் செயலுக்கு வருந்திப் பின்னர் அவர்கள் நல்லறிவு பெற்று ஓதி உய்ந்தது `நமச்சிவாய` என்ற திருவைந்தெழுத்தேயாகும்.
(மந்திரம் தொடர்ந்து ஒலிக்கும்)

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Oct 11, 2012 12:54 pm

பாடல் எண் : 10
கஞ்சி மண்டையர் கையிலுண் கையர்கள்
வெஞ்சொன் மிண்டர் விரவில ரென்பரால்
விஞ்சை யண்டர்கள் வேண்ட வமுதுசெய்
நஞ்சுண் கண்டன் நமச்சி வாயவே
.


பொழிப்புரை :
தேவர்கள் வேண்ட நஞ்சினை உண்டு அதை கழுத்தில் தேக்கிய நீலகண்டனான சிவபெருமானின் திருநாமமாகிய ` நமச்சிவாய ` என்னும் திருவைந்தெழுத்து மந்திரத்தை , மண்டை என்னும் ஒருவித பாத்திரத்தில் கஞ்சியைக் குடிக்கும் வழக்கமுடைய பௌத்தர்களும் , கைகளையே பாத்திரமாகக் கொண்டு அதில் உணவு ஏற்றுப் புசிக்கும் வழக்கமுடைய சமணர்களும் ஓதும் பேறு பெற்றிலர் .

பாடல் எண் : 11
நந்தி நாமம் நமச்சிவா யவெனும்
சந்தை யாற்றமிழ் ஞானசம் பந்தன்சொல்
சிந்தை யால்மகிழ்ந் தேத்தவல் லாரெலாம்
பந்த பாசம் அறுக்கவல் லார்களே
.


பொழிப்புரை :
நந்தி என்னும் பெயருடைய சிவபெருமானின் திருநாமமாகிய ` நமச்சிவாய ` என்னும் திருவைந்தெழுத்தைச் சந்தம் மிகுந்த தமிழ் கொண்டு ஞானசம்பந்தன் அருளிச் செய்த இத்திருப் பதிகத்தைச் சிந்தை மகிழ ஓத வல்லவர்கள் பந்தபாசம் அறுக்க வல்லவர் ஆவர் .
(மூன்றாம் திருமுறை / பொது / திருஞான சம்பந்தர் தேவாரம்: பதிக எண்:49 முடிவுற்றது)
(மந்திரம் தொடர்ந்து ஒலிக்கும்)

ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Thu Oct 11, 2012 8:24 pm

இத்தனை பாடல்களா ஐந்தெழுத்து மந்திரத்திற்கு!
அப்பாடியோவ் !

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Oct 16, 2012 9:27 am

ஆறாம் திருமுறை பதிக எண்: 50 திருவீழிமிழலை, திருநாவுக்கரசு சுவாமிகள் அருளியது.
பாடல் எண் : 4
தூயானைச் சுடர்ப்பவளச் சோதி யானைத்
தோன்றிய எவ்வுயிர்க்குந் துணையாய் நின்ற
தாயானைச் சக்கரமாற் கீந்தான் தன்னைச்
சங்கரனைச் சந்தோக சாமம் ஓதும்
வாயானை மந்திரிப்பார் மனத்து ளானை
வஞ்சனையால் அஞ்செழுத்தும் வழுத்து வார்க்குச்
சேயானைத் திருவீழி மிழலை யானைச்
சேராதார் தீநெறிக்கே சேர்கின் றாரே.


பொழிப்புரை :
தூயனாய்ப் பவளத்தின் ஒளியை உடையவனாய் , எல்லா உயிர்களுக்கும் துணையாக நின்ற தாயாய்த் திருமாலுக்குச் சக்கரம் ஈந்தவனாய் , எல்லாருக்கும் நன்மை செய்பவனாய் இசைத் தமிழ் (சாமம்) ஓதுபவனாய் , மந்திரங்களை எண்ணுபவர் மனத்து உறைபவனாய்த் திருவைந்தெழுத்தின் பயனைத் தெளியாது ஐயுற்று ஓதுபவர்களுக்குத் தொலைவில் உள்ளவனாய் , உள்ள திருவீழிமிழலையானைச் சேராதார் தீ நெறிக்கண் செல்பவராவர் .

(மந்திரம் தொடர்ந்து ஒலிக்கும்)

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri Oct 19, 2012 5:31 pm

நான்காம் திருமுறை / திருப்பாதிரிபுலியூர்/ அப்பர் தேவாரம்: பதிக எண்:94

பாடல் எண் : 5
வைத்த பொருணமக் காமென்று சொல்லி மனத்தடைத்துச்
சித்த மொருக்கிச் சிவாய நமவென் றிருக்கினல்லால்
மொய்த்த கதிர்மதி போல்வா ரவர்பா திரிப்புலியூர்
அத்த னருள்பெற லாமோ வறிவிலாப் பேதைநெஞ்சே.


பொழிப்புரை :
மெய்யுணர்தல் இல்லாத அறியாமையை உடைய மனமே ! நமக்கு என்று சேமவைப்பாக உள்ள பொருள் சிவபெருமானே என்று சொல்லி அவனை மனத்தில் தியானித்து மனத்தை ஒருவழிப்படுத்திச் சிவாய நம என்று திருவைந்தெழுத்தை எப்பொழுதும் ஓதிக் கொண்டிருந்தால் அல்லது , செறிந்த கிரணங்களையுடைய சந்திரனைப்போன்று பல கலைகளில்வல்ல சான்றோர்கள் வாழும் திருப்பாதிரிப்புலியூரிலுள்ள தலைவனுடைய அருளைப் பெறுதல் இயலுமோ ?

குறிப்புரை :
அறிவு இல்லாப் ` பேதை நெஞ்சே , நமக்கு வைத்த பொருள் ஆம் என்று சொல்லி , மனத்து அடைத்து , சித்தம் ஒருக்கி ` சிவாய நம ` என்று சொல்லிக் கொண்டிரு . அப்படி இருக்கின் அல்லால் அத்தன் அருள் பெறலாகுமோ ? ஆகாது . சிவாயநம என்று இரு .

(மந்திரம் தொடர்ந்து ஒலிக்கும்)

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Oct 24, 2012 5:35 pm

பாடல் எண் : 6
கருவாய்க் கிடந்துன் கழலே நினையுங் கருத்துடையேன்
உருவாய்த் தெரிந்துன்ற னாமம் பயின்றே னுனதருளால்
திருவாய்ப் பொலியச் சிவாய நமவென்று நீறணிந்தேன்
தருவாய் சிவகதி நீபா திரிப்புலி யூரரனே.


பொழிப்புரை :
திருப்பாதிரிப்புலியூர்ப் பெருமானே ! தாயின் கருவிலே கிடந்த போது உன் திருவடிகளையே தியானிக்கும் கருத்து உடையேனாய் இருந்தேன் . கருவின் நீங்கி வெளிப்பட்ட உருவம் கிட்டிய பிறகு உன் அருளினால் இப்பொழுது ஆராய்ந்து உன் திருநாமங்களைப் பலகாலும் சொல்லப் பழகியுள்ளேன் . வாய்க்குச் செல்வம் விளங்குமாறு திருவைந்தெழுத்தை ஓதித் திருநீறு இப் பொழுது அணியப் பெற்றேன் ஆதலின் அடியேனுக்கு மங்கலமான மார்க்கத்தைத் தருவாயாக .

(மந்திரம் தொடர்ந்து ஒலிக்கும்)

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri Dec 14, 2012 11:29 pm

ஒன்பதாம் திருமுறை / 003 கோயில் - ``உறவாகிய யோகம்`` / பாடல் எண் : 11

உற்றாய் என் னும் உன்னை யன்றி மற்றொன்
றுணரேன் என் னும் உணர் வுள்கலக்கப்
பெற்றாய ஐந்தெழுத் தும்பிதற்றிப்
பிணிதீர் வெண் ணீறிடப் பெற்றேன் என்னும்
சுற்றாய சோதி மகேந்திரம் சூழ
மனத்திருள் வாங்கிச்சூ ழாத நெஞ்சில்
குற்றாய் என் னும் குணக் குன்றே என்னும்
குலாத்தில்லை யம்பலக் கூத்தனையே.


பொழிப்புரை :
என்மகள் குலாத்தில்லை அம்பலக் கூத்தனை உருவெளித் தோற்றத்தில் கண்டு: "என்னோடு பொருந்தியவனே! உன்னைத் தவிர வேறொரு தெய்வத்தையும் நான் நினைக்க மாட்டேன். சுற்றிலும் ஒளிவீசும் மகேந்திர மலையைத் தியானித்து, மனத்திலுள்ள அறியாமையாகிய இருளைப் போக்கி உன்னைத் தியானம் செய்யாதவர் நெஞ்சில் பொருந்தாதவனே! குணக்குன்றே!" என்று அவனை அழைத்து, "என் அறிவினுள் கலக்கப்பெற்ற திருவைந் தெழுத்தையும் பிதற்றிக் கொண்டு, அறியாமையாகிய பிணி நீங்குமாறு வெண்ணீற்றை அணிந்துள்ளேன்" என்று பிதற்றுகிறாள்.

(மந்திரம் தொடர்ந்து ஒலிக்கும்)

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக