புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:16 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காமம்..."கனிபோல இனிக்கும்; காய் போலத் துவர்க்கும்" Poll_c10காமம்..."கனிபோல இனிக்கும்; காய் போலத் துவர்க்கும்" Poll_m10காமம்..."கனிபோல இனிக்கும்; காய் போலத் துவர்க்கும்" Poll_c10 
17 Posts - 55%
heezulia
காமம்..."கனிபோல இனிக்கும்; காய் போலத் துவர்க்கும்" Poll_c10காமம்..."கனிபோல இனிக்கும்; காய் போலத் துவர்க்கும்" Poll_m10காமம்..."கனிபோல இனிக்கும்; காய் போலத் துவர்க்கும்" Poll_c10 
12 Posts - 39%
T.N.Balasubramanian
காமம்..."கனிபோல இனிக்கும்; காய் போலத் துவர்க்கும்" Poll_c10காமம்..."கனிபோல இனிக்கும்; காய் போலத் துவர்க்கும்" Poll_m10காமம்..."கனிபோல இனிக்கும்; காய் போலத் துவர்க்கும்" Poll_c10 
1 Post - 3%
rajuselvam
காமம்..."கனிபோல இனிக்கும்; காய் போலத் துவர்க்கும்" Poll_c10காமம்..."கனிபோல இனிக்கும்; காய் போலத் துவர்க்கும்" Poll_m10காமம்..."கனிபோல இனிக்கும்; காய் போலத் துவர்க்கும்" Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காமம்..."கனிபோல இனிக்கும்; காய் போலத் துவர்க்கும்" Poll_c10காமம்..."கனிபோல இனிக்கும்; காய் போலத் துவர்க்கும்" Poll_m10காமம்..."கனிபோல இனிக்கும்; காய் போலத் துவர்க்கும்" Poll_c10 
295 Posts - 45%
ayyasamy ram
காமம்..."கனிபோல இனிக்கும்; காய் போலத் துவர்க்கும்" Poll_c10காமம்..."கனிபோல இனிக்கும்; காய் போலத் துவர்க்கும்" Poll_m10காமம்..."கனிபோல இனிக்கும்; காய் போலத் துவர்க்கும்" Poll_c10 
279 Posts - 43%
mohamed nizamudeen
காமம்..."கனிபோல இனிக்கும்; காய் போலத் துவர்க்கும்" Poll_c10காமம்..."கனிபோல இனிக்கும்; காய் போலத் துவர்க்கும்" Poll_m10காமம்..."கனிபோல இனிக்கும்; காய் போலத் துவர்க்கும்" Poll_c10 
23 Posts - 4%
T.N.Balasubramanian
காமம்..."கனிபோல இனிக்கும்; காய் போலத் துவர்க்கும்" Poll_c10காமம்..."கனிபோல இனிக்கும்; காய் போலத் துவர்க்கும்" Poll_m10காமம்..."கனிபோல இனிக்கும்; காய் போலத் துவர்க்கும்" Poll_c10 
17 Posts - 3%
prajai
காமம்..."கனிபோல இனிக்கும்; காய் போலத் துவர்க்கும்" Poll_c10காமம்..."கனிபோல இனிக்கும்; காய் போலத் துவர்க்கும்" Poll_m10காமம்..."கனிபோல இனிக்கும்; காய் போலத் துவர்க்கும்" Poll_c10 
11 Posts - 2%
சண்முகம்.ப
காமம்..."கனிபோல இனிக்கும்; காய் போலத் துவர்க்கும்" Poll_c10காமம்..."கனிபோல இனிக்கும்; காய் போலத் துவர்க்கும்" Poll_m10காமம்..."கனிபோல இனிக்கும்; காய் போலத் துவர்க்கும்" Poll_c10 
9 Posts - 1%
Jenila
காமம்..."கனிபோல இனிக்கும்; காய் போலத் துவர்க்கும்" Poll_c10காமம்..."கனிபோல இனிக்கும்; காய் போலத் துவர்க்கும்" Poll_m10காமம்..."கனிபோல இனிக்கும்; காய் போலத் துவர்க்கும்" Poll_c10 
4 Posts - 1%
Guna.D
காமம்..."கனிபோல இனிக்கும்; காய் போலத் துவர்க்கும்" Poll_c10காமம்..."கனிபோல இனிக்கும்; காய் போலத் துவர்க்கும்" Poll_m10காமம்..."கனிபோல இனிக்கும்; காய் போலத் துவர்க்கும்" Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
காமம்..."கனிபோல இனிக்கும்; காய் போலத் துவர்க்கும்" Poll_c10காமம்..."கனிபோல இனிக்கும்; காய் போலத் துவர்க்கும்" Poll_m10காமம்..."கனிபோல இனிக்கும்; காய் போலத் துவர்க்கும்" Poll_c10 
4 Posts - 1%
jairam
காமம்..."கனிபோல இனிக்கும்; காய் போலத் துவர்க்கும்" Poll_c10காமம்..."கனிபோல இனிக்கும்; காய் போலத் துவர்க்கும்" Poll_m10காமம்..."கனிபோல இனிக்கும்; காய் போலத் துவர்க்கும்" Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காமம்..."கனிபோல இனிக்கும்; காய் போலத் துவர்க்கும்"


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Oct 01, 2012 12:38 pm

தலைமகன் தலைமகளிடையே தோன்றும் பிணக்கு அன்பான இல்லறத்தின் ஒரு பகுதி. கலவியால் உண்டாகும் மகிழ்ச்சி, புலவி, ஊடல், ஊடல் தீர்தல், பிரிவு ஆகியவையே கற்பு வாழ்க்கை (செய்யுளியல், 179) என்கிறது தொல்காப்பியம். புலவி, ஊடல், துனி என்று இப்பிணக்கு மூவகைப்படும். இவற்றுள் "புலவி' உள்ளத்தளவில் நிகழும் மனமாறுபாடு; "ஊடல்' குறிப்பாக அன்றி வெளிப்படையாகச் சொற்களால் மாறுபாட்டைத் தெரிவிப்பது; "துனி' எவ்வளவு விளக்கம் தந்தாலும் மாறுபாடு தீராமல் விலகி நிற்பது. இவற்றுள் புலவி குளிர்ப்பக் கூறலும், தளிர்ப்ப முயங்கலும் முதலியவற்றால் நீங்கும் என்றும், ஊடல் அதற்குக் காரணமாகிய பொருளின்மையைத் தெரிவிக்க நீங்கும் என்றும் விளக்கம் தருவர்.

÷ புலவியும் ஊடலும் சிறுபிணக்கு; துனி பெரும்பிணக்கு. திருவள்ளுவர் புலவி, ஊடல் இரண்டினையும் ஒரே பொருளிலேயே கையாண்டுள்ளார். புலவி, புலவி நுணுக்கம் என்னும் அதிகாரங்களில் "ஊடல்' என்னும் சொல்லையும், ஊடல் உவகை என்னும் அதிகாரத்தில் "புலவி' என்னும் சொல்லையும் பயன்படுத்தியுள்ளமை இதனை உணர்த்துகிறது.
துனியும் புலவியும் இல்லாயின் காமம்
கனியும் கருக்காயும் அற்று.(1306)

என்கிறது குறள். இதற்குப் பலரும், "துனியும் புலவியும் இல்லாவிட்டால் காமம் குழைந்துபோன பழத்தைப் போலச் சுவை கெட்டுப் போனதும், பச்சைப் பிஞ்சைப் போல் சுவை இல்லாததும் ஆகிவிடும்' என்று விளக்கம் கண்டுள்ளனர். ஒருசிலரே "துனி இல்லாயின் காமம் கனிபோல இனிக்கும்; புலவி இல்லாயின் காய் போலத் துவர்க்கும்' என்று பொருள் கண்டுள்ளனர். இப்படி இருவேறு விளக்கங்கள் எவ்வாறு எழுந்தன? இவற்றுள் எது சரியானது?
÷துனி என்னும் சொல்லே அதன் இயல்பினைக் காட்டும். திருக்குறளில்,
சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும்
இல்லாயின் வெல்லும் படை (769)


துனிஅரும்பித் துன்பம் வளர வரும் (1223)
என்னும் இடங்களில் துனி என்பது வெறுப்பு என்னும் பொருளிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது. அது மிகுந்த வேதனை தருவது.
÷பிறிதொரு குறள், உணவுக்கு உப்புப்போல் காதலர் அன்பு வாழ்க்கைக்கு ஊடல் தேவை. உப்பு மிகுந்துவிட்டால் உணவு கெட்டுவிடுவது போல ஊடல் மிகுந்துவிட்டால் இன்ப வாழ்க்கையும் உவர்த்துவிடும் (1302) என்கிறது. ஆதலின், எல்லை கடந்த பிணக்காகிய துனியும் காதல் வாழ்க்கைக்கு வேண்டும் என்று பொருள்கொள்வது அதற்கு மாறாக அமையும். இன்ப வாழ்க்கைக்கு வேண்டாதது அது.

÷கனி என்பதற்கு "சுவைகெட்ட மிகப் பழுத்த பழம்' என்று உரை காண்பதும் பொருந்தாது. இப்படிப் பொருள்காணக் குறளிலோ வேறு இலக்கியங்களிலோ சான்று ஏதும் இல்லை.
இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று (100)
தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே
காமத்துக் காழில் கனி (1191)

என்னும் குறட்பாக்களில் "கனி' என்பது "இனிமையான பழம்' என்றே கூறப்பட்டுள்ளது. திருமங்கை மன்னன் திருமாலைக் "கடல்கிடந்த கனி' என்றும், "அக்காரக்கனி' என்றும் போற்றுகிறார். திருமாளிகைத் தேவர் சிவனைக் "கற்றவர் விழுங்கும் கற்பகக் கனி' என்று குறிக்கிறார். கம்பர் ராமனை "இருட்கனி' என்றும், சீதையை "பெண்கனி' என்றும் சுட்டுகிறார். சீதை ராமனை "ஆசையின் கனி' என்று அன்பொழுக அறிவிக்கிறாள். இவ்விடங்களில் எல்லாம் "கனி' என்பது உண்ணத் தகுந்த பக்குவத்தில் உள்ள பழத்தையே குறிக்கிறது. எனவே, கனி என்பதற்கு அழுகிய பழம் என்றும், மிகப் பழுத்த பழம் என்றும் உரை காண்பது பொருத்தமாக அமையாது.

÷பரிமேலழகரும் ""மிக முதிர்ந்து இறும் எல்லைத்தாய கனி நுகர்வார்க்கு மிகவும் இனிமை செய்தலின் துனியில்லையாயின் கனியற்று'' என்றும், ""புலவி இல்லையாயின் கருக்காயற்று'' என்றும் கூறினான் என்று நேரிய பொருளையே கண்டுள்ளார். பரிமேலழகருக்குக் காலத்தால் முற்பட்ட மணக்குடவரே மாறுபட்ட உரையினை வரைந்தார். அவரே ""உணராது நீட்டிக்கின்ற துனியும் உணர மீள்கின்ற புலவியும் இல்லையாயின், காமம் அழுகிய பழம்போலப் புளிக்கும்; காய்போலத் துவர்க்கும்'' என்று உரையிட்டுள்ளார். மணக்குடவர், உரையைப் படித்த தாக்கத்தால் யாரோ ஒருவர் பரிமேலழகர் உரையில் ""இனிமை செய்தலின்'' என்று இருந்ததை, ""இனிமை செய்யாது ஆதலின்'' என்று திருத்திவிட்டார்.

÷அறிஞர்கள் அப்பிழையான பாடத்தையே மெய்யென்று கொண்டதனால் பரிமேலழகரின் உரையும் மணக்குடவர் உரையை ஒட்டியதாக அச்சிடப்பட்டுள்ளது. பரிமேலழகர் உரையில் புகுந்த தவறான பாடத்தினையொட்டி எளிய உரைவரைந்த பிற்காலத்தவர் பலர் உரையும் அதனையே எளிய சொற்களால் எழுதியுள்ளது.

÷அறிஞர் வை.மு.கோ இந்தச் சரியான பாடத்தினைத் தமது பரிமேலழகர் உரையோடு கூடிய திருக்குறள் பதிப்பின் மூலத்தில் குறிக்காது ஒதுக்கினாலும் அடிக்குறிப்பில், அதனைக் காட்டி "அது பொருந்தாது' என்று குறித்துள்ளார். "இனிமை செய்தலின்' என்ற பாடம் அமைவுறுவதாகத் தோன்றவில்லை என்பது அவரது அடிக்குறிப்பு. ஆனால் இதுவே சரியான பாடம். திருக்குறள் உரைவேற்றுமை எழுதிய முனைவர் இரா. சாரங்கபாணி "இனிமை செய்தலின்' என்றே பழைய பதிப்புகளில் காணப்படுகிறது என்று குறித்துள்ளார்.

÷எனவே, இக்குறளைத் "துனி இல்லாயின் காமம் கனி அற்று' என்றும், "புலவி இல்லாயின் காமம் கருக்காய் அற்று' என்றும் கூட்டி, "பெரும்பிணக்காகிய துனி இல்லாவிட்டால் காமம் கனிபோல் இனிப்பது என்றும்; சிறுபிணக்காகிய புலவி இல்லாவிட்டால் காமம் கருக்காய்போல் சுவையற்றது' என்றும் பொருள் காண்பதே தக்கது.

÷இப்படித்தான் பழைய உரையாசிரியர்களுள் பரிப்பெருமாள், காளிங்கர் என்னும் இருவரும் இக்காலத்து உரையாசிரியர்களுள் சிலரும் பொருள் கண்டுள்ளனர். இப்படிப் பொருள் காணும்போது "துனி தள்ளத் தக்கது என்பதும் புலவி கொள்ளத்தக்கது என்பதும்' தெளிவாகும். கனியும் புளிக்காமல் இனிக்கும்!
(நன்றி தினமணி)

avatar
Guest
Guest

PostGuest Mon Oct 01, 2012 1:48 pm

சூப்பருங்க புன்னகை சிறுபிணக்காகிய புலவி இல்லாவிட்டால் காமம் கருக்காய்போல் சுவையற்றது

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sat Oct 06, 2012 7:53 pm

அருமையான தமிழ்ப்பதிவு...
மிக்க நன்றி சூப்பருங்க



சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Oct 06, 2012 8:10 pm

மிகவும் அருமையான விளக்கம் சாமி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக