புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 பிள்ளையார் போற்றி நானூறு I_vote_lcap பிள்ளையார் போற்றி நானூறு I_voting_bar பிள்ளையார் போற்றி நானூறு I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
 பிள்ளையார் போற்றி நானூறு I_vote_lcap பிள்ளையார் போற்றி நானூறு I_voting_bar பிள்ளையார் போற்றி நானூறு I_vote_rcap 
236 Posts - 37%
mohamed nizamudeen
 பிள்ளையார் போற்றி நானூறு I_vote_lcap பிள்ளையார் போற்றி நானூறு I_voting_bar பிள்ளையார் போற்றி நானூறு I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
 பிள்ளையார் போற்றி நானூறு I_vote_lcap பிள்ளையார் போற்றி நானூறு I_voting_bar பிள்ளையார் போற்றி நானூறு I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
 பிள்ளையார் போற்றி நானூறு I_vote_lcap பிள்ளையார் போற்றி நானூறு I_voting_bar பிள்ளையார் போற்றி நானூறு I_vote_rcap 
19 Posts - 3%
prajai
 பிள்ளையார் போற்றி நானூறு I_vote_lcap பிள்ளையார் போற்றி நானூறு I_voting_bar பிள்ளையார் போற்றி நானூறு I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
 பிள்ளையார் போற்றி நானூறு I_vote_lcap பிள்ளையார் போற்றி நானூறு I_voting_bar பிள்ளையார் போற்றி நானூறு I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
 பிள்ளையார் போற்றி நானூறு I_vote_lcap பிள்ளையார் போற்றி நானூறு I_voting_bar பிள்ளையார் போற்றி நானூறு I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
 பிள்ளையார் போற்றி நானூறு I_vote_lcap பிள்ளையார் போற்றி நானூறு I_voting_bar பிள்ளையார் போற்றி நானூறு I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
 பிள்ளையார் போற்றி நானூறு I_vote_lcap பிள்ளையார் போற்றி நானூறு I_voting_bar பிள்ளையார் போற்றி நானூறு I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிள்ளையார் போற்றி நானூறு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 25, 2012 11:56 pm

நிலைமண்டில ஆசிரியப்பா

ஓமெனும் எழுத்தாம் ஓருரு அதுவே
தாமென வந்த தற்பர போற்றி!

தோற்றம்

முக்கட் கடவுள் உமை யொடு மகிழ்ந்து
மக்கட் களித்த முன்னவ போற்றி!
கணபதி வணக்கம்
கண்டேன் கணபதி களிற்றைக் கைதலைக்
கொண்டே குட்டி வணங்கினன் போற்றி!
கோப்பாய் காதிரு கரங்கள் கோர்த்து
தோப்பு கரணம் தொடர்ந்தனன் போற்றி!

இதயம் இருத்தல்

கொஞ்சக் கொஞ்சக் குழைவாய் வந்து
நெஞ்சத் தமர்ந்த நாத போற்றி!
திருப்பெயர்கள்
பேரே ஊரே இல்லாப் பிள்ளை
யாரே பலபேர் ஏற்றாய் போற்றி!

திருத்தலங்கள்

எத்தனை தலங்கள் எங்கெலாம் மேவி
பத்தரை காக்கும் பரமா போற்றி!
ஆவடு துறையுள் மேவிடு மூர்த்தம்
பூவிடும் அழகிய விநாயக போற்றி!
வந்தனை மகிழ அத்தலம் விளங்கிய
நந்துணை வந்த விநாயக போற்றி!
பவந்தனை யொழிக்க அப்பதி விளங்கும்
சிவப்பிர காச விநாயக போற்றி!
திருநறை யூர்சித் தீச்சுரந் தன்னில்
மருவிய ஆண்ட விநாயக போற்றி!
ஐயா றதனில் அன்பாய் மேவிய
சைவா ஆதி விநாயக போற்றி!
விருத்தா சலத்தே விளங்கிடு வேழமே
திருவா ழத்துப் பிள்ளையே போற்றி!
திருச்சி யுச்சிப் பிள்ளை யெனப்புகழ்
விரிச்சி ருக்கும் விநாயக போற்றி!
திருவிடை மருதில் கருவிடைப் போகா
மருவிடும் ஆண்ட விநாயக போற்றி!
குடந்தைக் கீழ்க்கோட் டப்பேர் தலத்தில்
மடந்தை கங்கை கணபதி போற்றி!
திருக்கா றாயில் தலத்தே விளங்கி
இருக்கும் கடுக்காய் விநாயக போற்றி!
நாகே சுரத்தில் நலமாய் விளங்கும்
வேகக் கங்கை விநாயக போற்றி!
சால வுயர்ந்த திருக்கச் சூரில்
தால மூல விநாயக போற்றி!
அத்தல மதனில் அழகுற விளங்கிய
சித்தியல் கருக்கடி விநாயக போற்றி!
உள்ளற் காய கடவூர் தன்னில்
கள்ள வாரணப் பிள்ளையார் போற்றி!
திருக்கடிக் குளத்தில் தேவைக் கருளி
உருப்பெறும் கற்பக விநாயக போற்றி!
முருகன் பூண்டி யதனில் மேவிய
சிறுவா கூப்பிடு பிள்ளை போற்றி!
திருக்குரு காவூர் தலத்தில் திகழும்
பெரும்பேர் கற்பக விநாயக போற்றி!
திருநாட்டியத்தான் குடியில் மேவிய
ஒருகை காட்டி விநாயக போற்றி!
தில்லை திகழ்ந்து தனிப்பெருங் கருணை
எல்லையில் கற்பக விநாயக போற்றி!
ஒருவரை சுட்டா உயர்தல மதனில்
திருமுறை சுட்டிய விநாயக போற்றி!
அங்கே விளங்கும் அரிய பொய
துங்கமுக் குறுணி விநாயக போற்றி!
என்பால் வருக எனவத் தலத்தில்
அன்புச் சிட்ட விநாயக போற்றி!
வரத மாக அத்தலம் விளங்கும்
நரமுக விநாயக நாத போற்றி!
மயலறு தில்லைத் தலமதில் மருவும்
உயர்செங் கழுநீர் பிள்ளையார் போற்றி!
திருக்கொட்டை யூரில் திகழ்ந்தினி தருளைப்
பெருக்குங் கோடி விநாயக போற்றி!
திருமறைக் காட்டில் திகழ்தரு கோலம்
ஒருசிந் தாமணி விநாயக போற்றி!
தீரம் திகழ தலமதில் அமர்ந்த
வீர கத்தி விநாயக போற்றி!
வெந்திறல் வினையை வீட்டுகீழ் வேளூர்
சுந்தர கணபதி சேவடி போற்றி!
போதந் திகழ திருவுசாத் தான
சூதவ னப்பிள்ளை யாரே போற்றி!
அன்பிலா லந்துறை ஆய்ந்ததி லமர்ந்த
நன்செவி சாய்ந்த விநாயக போற்றி!
நள்ளா றதனில் நடுவுற வமர்ந்த
விள்ளரும் சொர்ண விநாயக போற்றி!
திருமழ பாடியில் திருவீற் றிருக்கும்
ஒருபெருஞ் சுந்தர கணபதி போற்றி!
பனையூர் தன்னில் பாங்குற வமர்ந்த
வினைத்துணை யிருந்த விநாயக போற்றி!
நானை தன்னில் நலமுர விளங்கிய
வாகை மாவடி விநாயக போற்றி!
போகா வினைகள் போக்கி யாங்கிரு
நாகா பரணப் பிள்ளையார் போற்றி!
விஞ்சிய முத்தி வழங்கி யாங்கிரு
பஞ்ச முககண பதியே போற்றி!
திருவின் ன்ம்பர் தேர்ந்ததில் திகழும்
நிருத்தன விநாயக நாதா போற்றி!
திருப்பதி வீழி மிழலையில் திகழும்
ஒருபடிக் காசு விநாயக போற்றி!
புறம்பய மதனில் அறம்பல ஆற்றி
சிறந்த சுவைத்தேன் விநாயக போற்றி!
வரம்பல வழங்கி புறம்பயம் விளங்கும்
பிரளயங் காத்த பிள்ளையார் போற்றி!
வெய்ய வினைதணி மாகறல் விளங்கும்
பொய்யா விநாயக புண்ணிய போற்றி!
குருசம் பந்தன் காழியில் விளங்கி
கருதா பத்துக் காத்தாவ போற்றி!
நாரை யூரில் நேருற விளங்கும்
வாரப் பொல்லாப் பிள்ளையார் போற்றி!
அம்பல் எனும் ஊரில் அமர்ந்து
உம்பர் சுட்டு விநாயக போற்றி!
வெண்ணெய் நல்லூர் விளங்கி யிருக்கும்
புண்ணிய பொல்லாப் பிள்ளையார் போற்றி!
சாற்றருந் தலமாம் திருவா ரூரில்
மாற்று ரைத்த விநாயக போற்றி!
ஆலுந் தலமாம் திருவா ரூரில்
மூலா தார கணபதி போற்றி!
இருவா தனையும் இரியுமத் தலந்திகழ்
திருவா தாபி விநாயக போற்றி!
ஆல வாயில் அழகுற வமர்ந்த
சீலமுக் குறுணிப் பிள்ளையார் போற்றி!
வல்லந் தன்னில் விளங்கி யருள்கூர்
நல்வர சித்தி விநாயக போற்றி!
திருமா யூரம் திகழறு கோடு
வருமுக் குறுணிப் பிள்ளையார் போற்றி!
திருக்களர் தன்னில் உருக்கிளர்ந் தாவன
விருத்திசெய் வலம்புரி விநாயக போற்றி!
ஆணிப் பொன்னென அன்பருக் கமைந்த
காணிப் பாக்கம் கணேச போற்றி!
இகபரம் வழங்கிக் காஞ்சியில் இருக்கும்
விகட சக்கர விநாயக போற்றி!
அத்திக் கடவுளய் அத்தி கிரியில்
சித்தி வலம்புரி விநாயக போற்றி!
திருப்புக லூரில் திருப்புகழ் விளங்கி
மருவுவா தாபி விநாயக போற்றி!
செங்காட் டங்குடி சேர்ந்தினி தருளும்
துங்கவா தாபி விநாயக போற்றி!
வலஞ்சுழி யதனில் வீறுடன் விளங்கி
நலஞ்செயும் வெள்ளை விநாயக போற்றி!
வேதி குடியில் போதித் திருக்கும்
ஆதி வேதிப் பிள்ளையார் போற்றி!
நாளும் நல்லூர் நயந்தி திருக்கும்
சாளக் கிராம விநாயக போற்றி!
திருந்து தேவன் குடியில் தெளிவாய்ப்
பொருந்துகர்க் கடக விநாயக போற்றி!
மயூர புரந்தனில் மகிழ்ந்தினி தருளும்
மயூர கணபதி மாயிறை போற்றி!
காசி தன்னில் கவின்பெற விளங்கும்
தேசுடைத் துண்டி விநாயக போற்றி!
மெய்த்தமிழ் விளங்கும் மதுரையில் அடியார்
உய்த்த சித்தி விநாயக போற்றி!
பெருங்கா ளத்தி புண்ணிய தலத்தில்
திருமஞ் சந்தி விநாயக போற்றி!
திருக்கோ கர்ணம் தலத்தினில் விளங்கி
இருக்கும் இறைமகா கணபதி போற்றி!
விழுமிய பழுவூர் விமலன் கோவிலில்
கெழுமிய சுந்தர கணபதி போற்றி!
தெங்கா சித்தலம் திருவுடன் விளங்கி
மன்னும் லட்சுமி கணபதி போற்றி!
செல்லக் கதிர்கா மந்தனில் செறிந்த
நல்லமா ணிக்க விநாயக போற்றி!
வேலூர் சேண்பாக் கத்தே தானாய்
ஆலித் தெழுந்த கணபதி போற்றி!
சித்தியல் வள்ளி மலைத்தவப் பீட
கைத்தல நிறைகனி கணபதி போற்றி!
சின்னம் மாறி சுசீந்திர மதனில்
மன்னும் கஜானனி கணபதி போற்றி!
சல்பூ ரருகே பீரோ கேட்டில்
இபப்பெண் வடிவ கஜானனி போற்றி!
மும்பை நகால் பற்பல சந்தி
தம்பா லெழுந்த தயவே போற்றி!
ஒய்சலந் தன்னில் ஓங்கி யெழுந்த
தெய்வ நிருத்த கணபதி போற்றி!
தானாய் முளைக்கும் கணபதி குண்ட
பாணக் கணபதி பரமா போற்றி!
பிள்ளையார் பட்டியில் பேருரு வெடுத்து
கொள்ளை யருல்தரும் கணபதி போற்றி!
அகப்புறச் சமயங்களில் கணபதி
அகப்புற சமயம் அன்புடன் வணங்க
இகபரம் நல்கும் கணபதி போற்றி!
காணா பத்தியம் கனிவுடன் வணங்கும்
கேணான் எனவரு கணபதி போற்றி!
சாக்தே யர்சிறந் தேத்தி வழிபடும்
சூக்த சத்தி கணபதி போற்றி!
தெய்வத் தற்பரம் சிவமொன் றேயெனும்
சைவர் துதிசிவ கணபதி போற்றி!
வகுளா பரணனே பரமெனும் வைணவர்
உகளும் விட்டுணு கணபதி போற்றி!
சாங்கியர் தம்மதம் சாற்றி வணங்கும்
பாங்கியல் தத்துவ கணபதி போற்றி!
மீமாஞ் சகர்மே னாளில் முறையுரை
நாம தேவ கணபதி போற்றி!
வையா கரணிகள் வழிபா டியற்றும்
தெய்வா சப்த கணபதி போற்றி!
நித்தம் சோதிடம் நினைபவர் வணங்கும்
உத்திராட கணபதி போற்றி!
எண்ணிய லாளர் ஏத்தி வணங்க
ஒன்றில் ஒன்றிய கணபதி போற்றி!
தாயுள் ளம்புரை ஆயுள் வேதியர்
வாயுள் மூல கணபதி போற்றி!
புறப்புறச் சமயங்களில் கணபதி
புறப்புறச் சமயம் பிறபல நாடும்
உறவொடு வணங்கும் உத்தம போற்றி!
காந்தி பிறந்த குஜராத் தன்னில்
ஏந்தலே அருகர் ஏத்தினர் போற்றி!
சாக்கியச் சான்றோர் கணபதி இருதய
பாக்கிய மந்திரம் பகர்ந்தனர் போற்றி!
ஞான தேவன் எனச்சாக் கியர்சொல்
மான வணக்கம் மகிழ்ந்தனை போற்றி!
புத்தர் சூட்டிய பெருந்தலைப் பாகை
மெத்த அணிந்த மகோதர போற்றி!
கம்போ டியாவில் சங்கொடு சக்கரம்
நம்பா விளங்க நின்றனை போற்றி!
ஜாவா காந்தி சிங்க சாரியில்
மேவி யிருக்கும் கணபதி போற்றி!
விவேகா நந்தர் வேண்டி யெடுத்த
நவ்வமெ ரிக்க விநாயக போற்றி!
பர்மிய மொழிகளில் மகாபிணி யென்ன
தர்ம தேவதை யானாய் போற்றி!
மங்கோ லியத்தில் தோத்க ரென்னும்
எங்கோ நிறையே கணபதி போற்றி!
அம்மொழி தன்னில் அபுன்கா காமெனும்
செம்பொருட் சிவமே கணபதி போற்றி!
திபேத்திய மொழியில் த்சோக்பிராக் கென்னும்
குபேர லட்சுமி கணபதி போற்றி!
கம்போ டியமொழி பிராக்கணே சென்று
தம்பேர் சொல்லத் திகழ்ந்தனை போற்றி!
சீன மொழியில் குவான்சிடி யிக்கென
ஆன ஆனைக் கணபதி போற்றி!
சப்பான் மொழியில் விநாயகச் சாவெனும்
அப்பேர் விளங்கு மப்பனே போற்றி!
உலகம் எங்கணும் மேவி யிருந்து
நலம்பல அடியார்க் கருளினை போற்றி!

கணபதி பூசை

கணபதி பத்திர மண்டல மிட்டு
குணமியை யெந்திரம் இட்டனன் போற்றி!
அமைத்த கலசம் ஆங்கோ ருருவம்
சமைத்துச் சேர்த்து வணங்கினன் போற்றி!

சங்கல்பம்

மணங்கமழ் மறைத்தமிழ் உரைத்துளம் உருகி
கணபதி பூசை யியற்றுவன் போற்றி!

கண்ட பூசை

என்னு ளொலிக்கும் தசநா தத்தை
மன்னி யொலிக்கும் மணியே போற்றி!

பிராணாயாமம்

செயிர் தீர் வாசி சேர்த்துத் திரட்டி
உயிரா வனமிருந் துள்கினன் போற்றி!

சகளீகரணம்

முடிமுதல் அடிவரை என்னுடல் மேவி
கடிதில் கலந்தருள் கணபதி போற்றி!

தியானம்

ஓம்கண பதியென் றன்பெலாந் திரட்டி
ஆம்படி வேண்டி யுள்கினேன் போற்றி!

ஆவாகனம்

செப்பிய ஆகம வழிகண பதியே
இப்பொழு திங்கே எழுவாய் போற்றி!

ஆசனம்

நாதம் விளங்கிய நற்றிரு வணையைப்
போதக் கணபதிக் கிட்டேன் போற்றி!
பன்னிறங் கிளரொளி பன்மணி யணைமேல்
மன்னுக மகாகண பதியே போற்றி!

பாத்யம்

கணபதி பாதக் கமலங் கழுவி
இனமலர் தூவி ஏத்தினன் போற்றி!

அர்க்கியம்

ஆனைக் கடவுள் அணிமுட் விளக்கி
மானக் கங்கை விடுத்தேன் போற்றி!

ஆசமனம்

எனையாள் கணபதி மணிவாய் விளக்க
சுனைநீர் அதனைச் சொரிந்தேன் போற்றி!

நெய்யபிடேகம்

வையகம் காக்கும் வரத என்று
நெய்யபிடேகம் செய்தனன் போற்றி!
மூலப் பொருளே மெய்யொளிப் பொருளே
தூல ஆரத்தி எடுத்தேன் போற்றி!

நெய்யபி டேகம் நேர்ந்தனன் முடிவில்
துய்யநீர் ஆட்டி வணங்கினன் போற்றி!

பாலபிடேகம்

ஏலமு தெமக்கு எனநினைந் தேத்தி
பாலமு தஞ்சொரிந் தாட்டினன் போற்றி!
மூலம் பொருளே மெய்யொளிப் பொருளே
தூலவா ரத்தி யெடுத்தேன் போற்றி!
பாலபி டேகம் பரவிய பின்னர்
வாலநீ ராட்டி வணங்கினன் போற்றி!

தயிரபிடேகம்

உயிர்களின் உறவே ஒருதனித் துணையே
தயிரமு தஞ்சொரிந் தாட்டினன் போற்றி!
மூலப் பொருளே மெய்யொளிப் பொருளே
தூலவா ரத்தி யெடுத்தேன் போற்றி!
தயிரபி டேகம் தாழ்த்திய பின்னர்
செயிர்தீர் நீர்விடுத் தாட்டினன் போற்றி!

தேனபிடேகம்

வானமு தெமக்கு வாய்த்தது வென்று
தேனபி டேகம் செய்தனன் போற்றி!
மூலப் பொருளே மெய்யொளிப் பொருளே
தூலவா ரத்தி யெடுத்தேன் போற்றி!
தேனபி டேகம் தேர்ந்ததன் பின்னர்
ஆனநீர் சொரிந்துடன் ஆட்டினன் போற்றி!

பஞ்சாமிருத அபிடேகம்

தஞ்சம் நீயலால் வேறிலை யென்று
பஞ்சா மிருதம் பொழிந்தேன் போற்றி!
மூலப் பொருளே மெய்யொளிப் பொருளே
தூலவா ரத்தி யெடுத்தேன் போற்றி!
பஞ்சா மிருதம் படர்ந்ததன் பின்னர்
எஞ்சா தியைநீர் ஆட்டினன் போற்றி!

விபூதி அபிடேகம்

வெவ்விய வினைகள் வேரற விபூதி
அவ்விய மாகச் சொரிந்தனன் போற்றி!
மூலப் பொருளே மெய்யொளிப் பொருளே
தூலவா ரத்தி யெடுத்தேன் போற்றி!
நீற்றபி டேகம் நிகழ்ந்ததன் பின்னர்
ஆற்றுநீர் சொரிந்துட னாட்டினன் போற்றி!

ஆசமனம்

திருமஞ் சனமிவை துய்த்ததன் பின்னர்
திருவாய் விளக்கநீர் தந்தனன் போற்றி!

பட்டுடுத்தல்

தூமென் துகிலால் துடைத்த பின்னர்
தோமில் பட்டுடை புனைந்தனன் போற்றி!

கந்தமிடல்

கடிமணப் பன்னீர் களப கத்தூரி
அடிமுடி யெங்கு மிறைத்தனன் போற்றி!

ஆபரணம் புனைதல்

நவமணி பொதிந்த நல்லாபரணம்
சிவமணி யெழில்பெற புனைந்தனன் போற்றி!

நீறிடல்

ஆற்றல் அதுவுடை அழகர் திருவுரு
நீற்றுக் கோடியில் நிமிர்த்தினன் போற்றி!

சந்தனமிடல்

புந்தி விளங்கும் புருவ நடுவில்
சந்தனம் சாத்தி மகிழ்ந்தனன் போற்றி!

குங்குமமிடல்

அந்தச் சந்தனம் அழகுற விளங்க
சிந்துரக் குங்குமம் சேர்த்தனன் போற்றி!

மலர்மாலையிடல்

பொதியெனப் பல்வகை மணமலர் தொடுத்து
அதியெழில் மாலைகள் அணிதோள் போற்றி!

தூபம்

சால வுயர்ந்த சாம்பி ராணி
ஏலப் புகைசூழ்ந் தேத்தினன் போற்றி!

ஏகதீபம்

உய்யும் வகைதந் தருளிட ஒருதிரி
நெய்யிடு தீபம் நேர்ந்தனன் போற்றி!

நைவேத்தியம்

அப்பம் மோதகம் அமுதுபல் வகைகள்
இப்பொழு திங்கே படைத்தனன் போற்றி!

கனியமுது

வழை மாபலா மணிதிகழ் மாதுளை
ஏழை யளித்தேன் ஏற்க போற்றி!

தாம்பூலம்

முற்றா இளந்தளிர் எண்ணி யெடுத்த
வெற்றிலை பாக்கு வழங்கினன் போற்றி!

தட்சிணை

பொன்னும் நவமணி குவையும் பொதியும்
என்னா லியல்பா சேற்க போற்றி!

சோடச உபசாரம்

எண்ணிரண் டெடுத்த கலையாய் விரியக்
கண்ணுப சாரம் களிக்க போற்றி!

மந்திர புஷ்பம்

பன்னும் மந்திரம் பன்னிரு திருமுறை
உன்னுசொல் மாலை உகக்க போற்றி!

புஷ்பாஞ்சலி

நானா விதத்து நவிலும் பூமழை
சேனா பத்தரொடு சொரிந்தனன் போற்றி!

மகா தீபாராதனை

பெருங்கற் பூர தீப மெடுத்தேன்
திருமங் களந்தத் தருளுக போற்றி!

பிரதிட்டை

பொலிக இவ்விடம் பொலிந்தி தருளி
மலிக திருவருள் எங்கணும் போற்றி!

வேண்டுதல்

இட்டது நன்மலர் உரைத்து மந்திரம்
சிட்டனே ஏற்றனன் என்றருள் போற்றி!
இடும்பைக் கிடும்பை படுத்தென் னிடரெலாம்
நடுங்கி யொழிய நேர்க போற்றி!
நாளும் கோளும் நல்லன வன்றி
மூளா தெம்மை யாள்க போற்றி!
இம்மையில் செல்வமும் மறுமையில் வீடும்
மெய்ம்மை யாக மகிழ்ந்தருள் போற்றி!

வாழ்த்து

அந்தணர் வானவர் ஆனினம் வான்மழை
தந்தர சுலகம் தழைக்க போற்றி!
தூயவை ஓங்கி தீயவை ஆழ்ந்து
நேயவுன் நாமமே சூழ்க போற்றி!
போற்றி போற்றி பழம்பொருள் அறிவே
போற்றி இன்ப வாரிதி போற்றியே!

கணபதியருளால் இயற்றியவர் சித்தாந்த கவிமணி மு.பெ. சத்தியவேல்முருகன்



 பிள்ளையார் போற்றி நானூறு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Sep 26, 2012 9:44 am

நன்று !
சாமி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சாமி

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Sep 09, 2013 7:12 am

பிள்ளையார் பெருநான்மை அன்று
இந்த 400 போற்றிகளைச் சொல்லுங்கள்.
வளம் உண்டாகும்.

செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Mon Sep 09, 2013 9:20 am

பிள்ளையாரின் அருள் அனைவருக்கும் (எனக்கும் சேர்த்து) கிடைக்க பிள்ளையாரை வேண்டுகிறேன்



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 09, 2013 12:47 pm

நல்ல பகிர்வு சிவா புன்னகை நன்றி நன்றி அன்பு மலர் 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக