புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தவறு செய்தவர்களை மன்னியுங்கள்! I_vote_lcapதவறு செய்தவர்களை மன்னியுங்கள்! I_voting_barதவறு செய்தவர்களை மன்னியுங்கள்! I_vote_rcap 
5 Posts - 63%
heezulia
தவறு செய்தவர்களை மன்னியுங்கள்! I_vote_lcapதவறு செய்தவர்களை மன்னியுங்கள்! I_voting_barதவறு செய்தவர்களை மன்னியுங்கள்! I_vote_rcap 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
தவறு செய்தவர்களை மன்னியுங்கள்! I_vote_lcapதவறு செய்தவர்களை மன்னியுங்கள்! I_voting_barதவறு செய்தவர்களை மன்னியுங்கள்! I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தவறு செய்தவர்களை மன்னியுங்கள்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 24, 2012 8:39 am


தவறு செய்யாத மனிதர்களே பூமியில் இல்லை. இறைவன் கூட மனிதனாகப் பிறக்கும் போது, தர்மத்தைக் காப்பதற்காக, மனித இயல்புக்கேற்ப சில சமயங்களில் வாழ்க்கை நியதிகளை மீற வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அதே நேரம், தவறு செய்தவர்களை ஒரேயடியாக வெறுத்து விட வேண்டும் என்ற அவசியமில்லை.

நம்மில் பலர், சிலரால் ஏமாற்றப்பட்டிருக் கலாம், வஞ்சிக்கப்பட்டிருக்கலாம். அவர்கள் நமக்கு செய்த துரோகம், நம் இதயத்தில் தீராத காயத்தை ஏற்படுத்தி இருக்கும். ஆனாலும், அவற்றை மறந்து மன்னிப்பதே, இறைவனின் சன்னிதானத்தில் நமக்கு பெருமையைத் தரும். அத்தகைய பெருமைக்கு சொந்தக்காரர் தான், மாமன்னர் நரசிங்க முனையரையர்.

திருமுனைப்பாடி நாட்டை ஆட்சி செய்தவர் நரசிங்க முனையரையர். இவரது நண்பர் சடையனார், திருநாவலூரில் வசித்து வந் தார். சடையனாரின் மனைவி இசைஞானியார். இவர்களுக்கு பிறந்த மகனே சுந்தரர். குழந்தை சுந்தரர் மிகவும் அழகாக இருப்பார். இக்காலத்தில், குழந்தைகள் நடை வண்டி ஓட்டி விளையாடுவது போல, அன்று, சிறு தேர்களை குழந்தைகள் ஓட்டி விளை யாடுவர். குழந்தையான சுந்தரரும் அவ்வாறு விளையாடிக் கொண்டிருந்த சமயத்தில், மன்னர் நரசிங்க முனையரையர் அவ்வழியாக தேரில் வந்தார்.

சிறுதேரை, பல குழந்தைகள் ஓட்டி விளையாடிக் கொண்டிருந் தாலும், சுந்தரரின், "பளிச்' அழகு, முனையரையரை கவர்ந்தது. அந்த குழந்தையைத் தானே வளர்த்தால் என்ன என்ற எண்ணம் மேலிடவே, குழந்தை யின் பெற்றோரைப் பற்றி விசாரித்தார். அந்த குழந்தை, தன் நண்பர் சடையனாரின் குழந்தை என்பதை அறிந்து மகிழ்ந்தார். அவரிடம் பேசி, குழந்தையை அரண்மனையிலேயே வளர்க்க அனுமதி கேட்டார். சடை யனாரும் ஒப்புக்கொண்டார்.

பக்தனுக்கு அடிப்படை குணம் இரக்கம். அது நிறையவே இருந்தது மன்னர் முனையரையரிடம்; அவர் சிறந்த சிவபக்தர்.

ஒருமுறை, திருவாதிரை திருநாளன்று மன்னர், பக்தர் களுக்கு பொன்னும், மணியும் அள்ளிக் கொடுத்துக் கொண்டிருந்தார். அந்த வரிசையில் ஒரு பெண் பித்தனும் நின்றான். அவனுக்கு பெண் பித்து காரணமாக நோய் ஏற்பட்டிருந்தது. உடலில் புண்கள் நிறைந்து காணப்பட்டன. அவனுடன் வரிசையில் நின்றவர்கள் ஒதுங்கி நிற்க ஆரம்பித்தனர்.

அவனுக்கு ஆறுதல் தருவார் யாருமில்லை. மன்னர், அவனை கண்டதும் கையெடுத்து வணங்கினார். யாரொருவர் உடல் முழுவதும் திருநீறு அணிந்து சைவப்பழமாகக் காட்சியளிக் கிறாரோ, அவர் விரோதி ஆயினும் அவர்களுக்கு சேவை செய்வது மன்னரின் பழக்கம். அந்த பித்தனும் மேனியெங்கும் திருநீறு பூசி வந்ததால், மன்னர் அவனை மார்போடு அணைத்து ஆறுதல் கூறினார். அவனுக்கு நோய் இருந்தாலும், இரக்கத்துடன் அவனைத் தழுவியது, அவனுக்கு பெரும் ஆறுதலைத் தந்தது. எல்லாரும் வெறுத்த நிலை யில், நாட்டின் மன்னன், கடவுள் போல ஆறுதல் அளித்தது இதமாய் இருந்தது. அவனுக்கும் பொருட்களை வாரி வழங்கினார் மன்னர். இவ்வாறு தவறு செய்து துன்பப்படும் உயிர்களிட மும் கருணை காட்டிய வள்ளலாகத் திகழ்ந்தார் முனையரையர்.

சுந்தரரை வளர்ப்பு மகனாகப் பெற்ற இவர், கொடுத்து வைத்தவராகவும் விளங்கினார். சுந்தரர் சிவ பெருமானின் நண்பராகும் பேறு பெற்றார். அத்தகைய பிள்ளையை வளர்க்கும் பாக்கியத்தை இறைவன் முனையரையருக்கு அளித்தார். அதன் காரணமாகவும், சிவத் தொண்டு காரணமாகவும், நரசிங்க முனையரையரும் நாயன்மார் வரிசையில் இடம் பெற்றார். அவரது குருபூஜை, புரட்டாசி மாதம், சதயம் நட்சத்திரத்தில் அனுஷ்டிக் கப்படுகிறது. இந்நாளில், சிவாலயங்களில் உள்ள நாயன்மார் சன்னிதியில் பூஜை செய்ய வேண்டும். நரசிங்க முனையரையருக்கு பட்டு வஸ்திரம் சாத்த வேண்டும். தவறு செய்தவர்களையும் மன்னிக்கும் மனோ நிலையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

தி. செல்லப்பா



தவறு செய்தவர்களை மன்னியுங்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Sep 24, 2012 11:44 am

தவறு செய்தவர்களை எளிதாக மன்னித்து மறந்தும் விடுவேன் தல, ஆனால் துரோகம் செய்பவர்களை கண்டால் தான பிடிக்க மாட்டேங்குது

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Sep 24, 2012 3:21 pm

தவறு செய்தவர்களை மன்னிப்பது தான் மனித குணம். மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக