புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனிதன் மா மனிதன் Poll_c10மனிதன் மா மனிதன் Poll_m10மனிதன் மா மனிதன் Poll_c10 
68 Posts - 41%
heezulia
மனிதன் மா மனிதன் Poll_c10மனிதன் மா மனிதன் Poll_m10மனிதன் மா மனிதன் Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
மனிதன் மா மனிதன் Poll_c10மனிதன் மா மனிதன் Poll_m10மனிதன் மா மனிதன் Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
மனிதன் மா மனிதன் Poll_c10மனிதன் மா மனிதன் Poll_m10மனிதன் மா மனிதன் Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
மனிதன் மா மனிதன் Poll_c10மனிதன் மா மனிதன் Poll_m10மனிதன் மா மனிதன் Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
மனிதன் மா மனிதன் Poll_c10மனிதன் மா மனிதன் Poll_m10மனிதன் மா மனிதன் Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
மனிதன் மா மனிதன் Poll_c10மனிதன் மா மனிதன் Poll_m10மனிதன் மா மனிதன் Poll_c10 
2 Posts - 1%
manikavi
மனிதன் மா மனிதன் Poll_c10மனிதன் மா மனிதன் Poll_m10மனிதன் மா மனிதன் Poll_c10 
1 Post - 1%
prajai
மனிதன் மா மனிதன் Poll_c10மனிதன் மா மனிதன் Poll_m10மனிதன் மா மனிதன் Poll_c10 
1 Post - 1%
Guna.D
மனிதன் மா மனிதன் Poll_c10மனிதன் மா மனிதன் Poll_m10மனிதன் மா மனிதன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனிதன் மா மனிதன் Poll_c10மனிதன் மா மனிதன் Poll_m10மனிதன் மா மனிதன் Poll_c10 
319 Posts - 50%
heezulia
மனிதன் மா மனிதன் Poll_c10மனிதன் மா மனிதன் Poll_m10மனிதன் மா மனிதன் Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
மனிதன் மா மனிதன் Poll_c10மனிதன் மா மனிதன் Poll_m10மனிதன் மா மனிதன் Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
மனிதன் மா மனிதன் Poll_c10மனிதன் மா மனிதன் Poll_m10மனிதன் மா மனிதன் Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
மனிதன் மா மனிதன் Poll_c10மனிதன் மா மனிதன் Poll_m10மனிதன் மா மனிதன் Poll_c10 
21 Posts - 3%
prajai
மனிதன் மா மனிதன் Poll_c10மனிதன் மா மனிதன் Poll_m10மனிதன் மா மனிதன் Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
மனிதன் மா மனிதன் Poll_c10மனிதன் மா மனிதன் Poll_m10மனிதன் மா மனிதன் Poll_c10 
3 Posts - 0%
Barushree
மனிதன் மா மனிதன் Poll_c10மனிதன் மா மனிதன் Poll_m10மனிதன் மா மனிதன் Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
மனிதன் மா மனிதன் Poll_c10மனிதன் மா மனிதன் Poll_m10மனிதன் மா மனிதன் Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
மனிதன் மா மனிதன் Poll_c10மனிதன் மா மனிதன் Poll_m10மனிதன் மா மனிதன் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதன் மா மனிதன்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 24, 2012 8:04 am




இந்த மண்ணில் நாள்தோறும் உயிர்கள் தோன்றியபடியும் மறைந்தபடியுமே இருக்கின்றன. ஆதாம் ஏவாள் நாள் முதல் மனிதத் தோன்றல்கள் என்றால் அந்த நாளில் இருந்தே இது தான் உலகின் நிலைப்பாடு!

ஆனால் இந்தப் பிறப்புக்கும் இறப்புக்குமான வாழ்க்கையில் சிலரால் மட்டுமே ஒரு நோன்பு போல அனுஷ்டிக்க முடிகிறது. அந்தச் சிலரில் காட்டுக்குள் சென்றுவிட்டவர்களை முனிவர்கள் சித்தர்கள் என்று கூறி வணங்கவும் செய்கிறோம்.

ஆனால் நாட்டுக்குள் இருந்தபடியே சமுதாய நலனுக்காக நோன்பு நோற்பவர்கள் இதிலும் வெகுசிலர்தான்! இந்த சிலரை இனம் பிரித்தால் அதில் எழுத்தாள இனம் முதலில் நிற்கும். செம்மாந்த தன் பிரக்ஞையாலும் கற்பனையாலும் இந்த இனமே அன்றும் இன்றும் மானுட நலனுக்காக எழுதியும் பேசியும் வருகிறது.

அவர்களில் கூடப் பலர் திசைமாறி வர்த்தக வளையத்துக்குள் சிக்கிப் பொழுது போக்காய் போய் விடுகிறார்கள். ஆனால் அதே பொழுதை பொன்மயமாய்த் தானும் கருதி, வாசிப்பவர்களையும் கருதச் செய்த எழுத்தாளர்களுள் திரு. ஏ.எஸ். ராகவனும் ஒருவர்! ஆனந்த விகடனில் 1952ல் சலீமா பேகம் எனும் சிறுகதை மூலம் எழுதத் தொடங்கியவர் 350க்கும் மேலான சிறு கதைகள், 15க்கும் மேலான நாவல்கள், நாடகங்கள் என்று இருபதாண்டு காலம் தமிழ்ப் பத்திரிகை உலகையே இவர் ஆட்சி செய்தார் என்றால் மிகையில்லை.

அது ஒரு பொற்காலம்!

அகிலன், நா.பா., கு.பா.ரா., அழகிரிசாமி, ஜெயகாந்தன், ஜெகசிற்பியன், விக்கிரமன் என்று அன்று தான் எத்தனை ஜாம்பவான்கள்!

அவர்களுக்கு நடுவில்தான் திரு. ராகவனின் கொடியும் பறந்தது. இவரை ஏ.எஸ்.ராகவன் என்று அறிந்தவர்களை விட “மனிதன் ராகவன்’ என்று அறிந்தவர்களே அதிகம்.

காரணம் இவரது “மனிதன்’ எனும் புதினம். ஆனந்த விகடன் வெள்ளிவிழா நாவல் போட்டியில் பரிசு பெற்ற இந்தத் தொடர் வாசக உலகையே திபரும்பிப் பார்க்க வைத்தது. இப்போது திரும்பவும் திபருமகள் பதிப்பகத்தாரால் புத்தகமாக வெளியிடப் பட்டுள்ளது.

உலகின் மேலான உயிரினம் மனித இனம்.

பிறப்பால் மனிதனாகப் பிறந்து விடுவதை விட வாழ்வில் மனத்தால், குணத்தால், செயலால் தலை சிறந்து விளங்குவதில்தான் மனிதர்களுக்கான சிறப்பே உள்ளது. இதைத்தான் அந்த நாவலில் திரு. ஏ.எஸ்.ஆர் வலியுறுத்தியிருந்தார்.

அதன் சிறப்புக்கு பின்னாலே ரசமான பல சங்கதிகள் உள்ளன. அதை வளரும் எழுத்தாளனாய் நான் இருந்த நாளில் என்னிடம் நிறைய முறை கூறி இருக்கிறார்.

என்னிடம் வலிந்து கூறிய ஒரு வலிமையான காரணமும் உண்டு. நான் இவரது அடிமை ஒற்றி எழுதவந்த இவரின் தம்பி மகன்.

ஆம் திரு. ஏ.எஸ்.ராகவன் என் பெரியப்பா ஆவார்! எங்கள் குடும்பத்தையே எழுத்தாளர் குடும்பம் என்பார்கள். நான் மட்டுமல்ல பெரியப்பாவின் புதல்வரான ராஜரிஷி, புதல்வியான ஷைலஜா என்கிற மைதிலி நாராயணன் ஆகியோரும் எழுத்தாளர்களே!

ஒருவேகமான வளர்ச்சியை விரும்பிப் பெரிதும் முனைந்த எனக்கு பெரியப்பாதான் எல்லாம்! தேரானது தெருவில் இழுத்து வரப்படும் போது அதன் ஓட்டம் அதைக் கவிழ்த்து விடாத படியும் அது பள்ளங்களில் அகப்பட்டு விடாதபடியும் இருக்க ஒரு வர் அதன் சக்கரங்களை நெறிப்படுத்தியபடியே உடன் வருவார்.

அப்படித்தான் பெரியப்பாவும் என் வரையில் உடன் வந்தார்.

“மனிதன்’ நாவல் பரிசு பெற்ற நிலையில் அதனுள் சில மேலான மாற்றங்களையும், இன்னும் சில விஸ்தாரங்களையும் செய்தால் அந்த நாவல் மேலும் ஜொலிக்கும் என்று விகடன் ஆசிரியரான திரு. எஸ்.பாலசுப்ரமணியன் அவர்களுக்குத் தோன்றியதாம். அதன் காரணமாக ஸ்ரீரங்கத்து வாசியான பெரியபபாவை சென்னையிலுள்ள அலுவலகத்துக்கு வரவழைத்து தன் கருத்தைக் கூறி அவ்வாறு எழுதித்தர இயலுமா என்று அவர்கள் கேட்கவும் பெரியப்பாவுக்கு ஒரே மகிழ்ச்சி.

ஊருக்குப் போய் எழுதி அனுப்பி விடுகிறேன் என்றவரிடம் இங்கேயே ஒரு இரண்டு நாளோ இல்லை நான்கு நாளோ இருந்து முடித்துத் தந்து விடலாமே என்றாராம் ஆசிரியர்.

உடனே ஊருக்கு திரும்பி விடும் எண்ணத்துடன் மாற்றுத் துணிக்கூட எடுத்துவரவில்லை என்று பெரியப்பா கூறவும் அதனால் பாதகமில்லை உங்களுக்குப் புதிய உடைகளே கிடைக்கும் என்றாராம் ஆசிரியர்!

அதன் எதிரொலியாக அன்று உதவி ஆசிரியராக இருந்த திரு மணியன் பெரியப்பாவை துணிக்கடைக்கு அழைத்துச் சென்று வேஷ்டி, ஜிப்பா, பனியன் என்று சகலத்தையும் வாங்கித் தந்து, ஹோட்டலிலும் ரூம் போட்டுத் தந்து மேலான உபசரிப்பைக் காட்டி நல்ல விதமாய் எழுதி வாங்கிக் கொண்டார்கள் என்று அவர் கூறியபோது எனக்கு வியப்பாக இருந்தது.

ஆனால் அதைத் தொடர்ந்து பெரியப்பா அவர்கள் கூறியதுதான் மிகச் சிறப்பான் விஷயம்.

“செல்வந்தர் நம் படைப்பு மட்டும் தரத்தோடு தெளிவாக இருந்து விட்டால் அதற்குரிய வரவேற்பு நிச்சயமாகக் கிடைத்து விடும். இதை நந் தனிப்பட்ட முறையில் செய்யத் தேவையே இல்லை. நம்படைப்பே செய்து கொண்டு விடும்’ என்று அவர் கூறிய போது எனக்கு எல்லாமே ஆச்சரியமளித்தது.

குறிப்பாக விகடன் ஒரு புதினம் வரையில் காட்டும் மேலான அணுகுமுறை என்னை வியக்கச் செய்தது. பின்நாளில் நான் விகடனில் “கோட்டைப்புரத்து வீடு’ என்கிற தொடரினை எழுத விழைந்த போது இதே அனுபவம் எனக்கு ஆசிரியர் பாலசுப்ரமணியனிடம் வேறு மாதிரியாக ஏற்பட்டது.

அத்தியாயங்களை வாசித்து விட்டு அதை மேம்படுத்த அவர் அளித்த ஆலோசனைகளும், அதனால் கிடைத்த பெயரை அவர் அப்படியே எழுத்தாளனுக்கு வழங்கிய விதம் என்று எல்லாமே உன்னதம்.

கிட்டத்தட்ட பெரியப்பாவுக்கு நேரிட்ட பல இலக்கிய அனுபவங்கள் எனக்கும் ஏற்பட்டன. நான் திசைமாறாமல் பயணிக்க அவர் பெரிதும் காரணமாக திகழ்ந்தார்.

ஒரு கதை பிரசுரமானால் போதும் என்று எண்ணிவிடக்கூடாது. ஒவ்வொரு சிறு கதையும் ஒரு தோட்டாவைப் போல சீறிச் சென்று உரிய இலக்கைத் தாக்கியே தீர வேண்டும்.

எப்போது நினைத்தாலும் ஞாபகத்திற்கு வந்து மனதை அதன் தன்மைக்கேற்ப பாதிக்க வேண்டும். இதைச் செய்யத் தவறக் கூடாது என்பார்.

அவரது “மனிதன்’ தொடர் மட்டுமல்ல கலைமகளில் அவர் எழுதிய “பின்னணி’ என்கின்ற சிறுகதை ஓர் உலகத் தரமான சிறுகதை. இலக்கிய சிந்தனை சிறந்த சிறுகதைகளுக்கான விருதினை அளிக்க முன்வந்த போது அதனிடம் முதலில் பரிசு பெற்றது “பின்னணி’தான்!

அதன்பிறகு எவ்வளவோ பரிசுகள்!

ஆனால் அந்தப் பரிசுகள் பற்றி எல்லாம் பெரியப்பா எவரிடமும் பெரிதாய்ப் பேசவே மாட்டார்.

“ஒரு எழுத்தாளனின் கண்களும் காதுகளும் எப்போதும் விழிப்போடு இருக்க வேண்டும். இதயம் அஹிம்சையில் நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும். அவன் உள்ளம் விரிவாக வானம் போல பரந்து கிடக்க வேண்டும்’ என்பார்.

“உலக மொழிகளில் தமிழ் மொழி ஓர் அதிசயம். அதன் உயிரெழுத்துகளும் மெய்யெழுத்துகளும் மிகுந்த உட்பொதி உடையவை. இந்த எழுத்துக்களைக் கொண்டே திருக்குறள் வரை பிரபந்தங்கள் வரை சகலமும் தோன்றின.

பின்னாளில் பாரதி வந்து இந்தத் தமிழால் தான் உலக மனித குலத்தையே அளந்து தெளிந்தான். எனவே பேனா பிடித்து தமிழ் எழுதும் எவரும் எழுத்துப்பிழையோடு மட்டுமல்ல கருத்துப் பிழையோடும் தவறியும் எழுதக்கூடாது’ என்பார்.

பெரியப்பா சொன்ன வண்ணமே எழுதியவர், வாழ்ந்தவர், வழி காட்டியவரும் கூட! அவரை காலன் கடந்த 8.7.2012 அன்று விண்ணிற்கு அழைத்துக் கொண்டான்.

நான்தான் எனக்கான ஒரு குடையை, ஒரு மரநிழலை, ஓர் ஆசானை இழந்து நிற்கின்றேன். அவரது ஆத்மா வழி காட்டும் என்கின்ற நம்பிக்கை மட்டுமே எனக்கு இப்போது ஒரே ஆறுதல் ஆகும்!

- இந்திரா சௌந்தர்ராஜன்





மனிதன் மா மனிதன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Sep 24, 2012 8:36 am

மிகவும் நன்று...இவரின் சில சிறுகதைகளை நானும் படித்து இருக்கின்றேன் மகிழ்ச்சி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக