புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாட்டி சொன்ன கதைகள்
Page 1 of 1 •
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
நண்பர்களே இணையத்தில் நான் மிகவும் ரசித்து படிக்கும் விசயங்களை இங்கே பகிர்கிறேன். இது எனது ஆக்கம் அல்ல... உண்மையான படைப்பாளிக்கு எனது இருகரம் கூப்பி நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
அதிசய மோதிரம்!
முன்னொரு காலத்தில், கிராமம் ஒன்றில் ஒரு விவசாயி வாழ்ந்து வந்தான். செய்வதற்கு வேலையும் கிடைக்காமல், அப்படி வேலை கிடைத்தாலும், அதன் மூலம் போதிய வருமானம் இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருந்தான்.
அந்த சமயத்தில் ஒருநாள்....
தேவதை ஒன்று விவசாயியின் முன் தோன்றி உனக்கு என்ன துன்பம் என்னிடம் சொல் தீர்த்து வைக்கிறேன் என்றது.
அந்தத் தேவதையிடம் அவன், தனது வாழ்க்கையில் அவன் படும் கஷ்டங்களையெல்லாம் சொன்னான். தனக்கு ஒரு விடிவு காலம் வருமாறு வழிவகை செய்ய வேண்டுமென்றும், தேவதையிடம் வேண்டிக் கொண்டான்.
“நான் சொல்கிறபடி செய்.... நேராக இதோ எதிரே தெரியும் காட்டுக்குள் செல். அங்கு பல வகையான மரங்கள் உள்ளன. அவற்றில் எல்லா மரங்களையும் விட ஒரு மரம் உயரமாக வளர்ந்து நிற்கும். அந்த மரத்தின் பெயர் பைன் மரம். அதை அப்படியே வெட்டிப் போடு. அப்புறம் அதிர்ஷ்டம் உன்னைத் தேடி வரும். உன் கஷ்டங்கள் எல்லாம் தீரும்,'' என்று அந்த தேவதை ஏழை விவசாயிக்கு வழிகாட்டியது.
அடுத்த நாளே, அந்த ஏழை விவசாயி கையில் கோடாரியை எடுத்துக் கொண்டு காட்டை சென்றடைந்தான். காட்டுக்குள் இருந்த பைன் மரத்தைக் கண்டுபிடிக்க இரண்டு நாட்கள் அங்குமிங்கும், தேடி அலைந்தான். இறுதியில் ஓங்கி உயர்ந்து நின்று கொண்டிருந்த பைன் மரத்தைக் கண்டு, மகிழ்ச்சி அடைந்தான். பிறகு, தனது கையிலிருந்த கோடாரியால் பைன் மரத்தின் அடிப்பாகத்தை ஓங்கி வெட்டினான். அது தரையின் மீது விழும் போது, அதன் முனைப் பகுதியில் இருந்து ஒரு பறவைக் கூடும் விழுந்தது. அக்கூட்டில் இரண்டு முட்டைகள் இருந்தன.
விழுந்த வேகத்தில் அந்த முட்டைகள் உருண்டோடி உடைந்தன. ஒரு முட்டையிலிருந்து ஒரு கழுகுக் குஞ்சு வெளிப்பட்டது. இன்னொரு முட்டையிலிருந்து, ஒரு மோதிரம் வெளிவந்து உருண்டோடியது.
கழுகுக் குஞ்சு பெரிதாக வளர்ந்து கொண்டே போனது. அந்த விவசாயியின் பாதியளவுக்குப் பெருத்து விட்டது. இந்தக் காட்சியைக் கண்டு விவசாயிக்கு ஒரே ஆச்சரியம். அவனால் தனது கண்களையே நம்ப முடியவில்லை. அந்தக் கழுகு தனது சிறகை அடித்துப் பறக்கும் முன் விவசாயியைப் பார்த்து, “எனது அடிமைத்தளத்திலிருந்து எனக்கு விடுதலை அளித்துவிட்டீர்கள். உங்களுக்கு எனது நன்றி.
அடுத்த முட்டையிலிருந்து வெளிவந்துள்ள மோதிரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அது ஓர் ஆச்சரியமான அதிசய மோதிரம். நீங்கள் எதைக் கேட்டாலும் அது கொடுக்கும். ஆனால், அதை ஒரே ஒரு தடவை பயன்படுத்தி விட்டால், அது சாதாரண மோதிரம் ஆகிவிடும். இதுதான் அந்த மோதிரத்தின் அற்புத சக்தியாகும். எனவே, ஆழ்ந்து சிந்தித்து முடிவெடுங்கள். அசட்டையாய் இருந்து விட்டால், பின்னர் வருத்தப்பட நேரிடும்,'' என்று கழுகு சொல்லிவிட்டு உயரே பறந்து கண்ணுக்குத் தெரியாமல் மறைந்தது.
மிகவும் மகிழ்ச்சி அடைந்தான் விவசாயி. அந்த மோதிரத்தை எடுத்துக் கொண்டு வீட்டை நோக்கி புறப்பட்டான். செல்லும் வழியில், அங்குள்ள நகைக் கடைக்குச் சென்றான்.
நகை வணிகரிடம் அந்த மோதிரத்தைக் காட்டி, “இதன் மதிப்பு என்ன இருக்கும்?'' என்று கேட்டான். மோதிரத்தை வாங்கிப் பார்த்த நகை வணிகர், “இதற்கு ஈடாக யாரும் ஒரு புல்லுக்கட்டு கூடத் தரமாட்டார்,'' என்று கூறினான்.
நகை வணிகர் கூறியதைக் கேட்ட விவசாயி சிரித்துக் கொண்டே அவரிடம், “இந்த மோதிரத்தின் மகிமையைப் பற்றி உனக்கு தெரியாது. உலகத்திலுள்ள எல்லா மோதிரங்களையும் சேர்த்தாலும் இதன் மதிப்புக்கு ஈடாகாது,'' என்று கூறிய விவசாயி, அந்த மோதிரம் தனக்கு எப்படிக் கிடைத்தது என்றும் விளக்கமாகக் கூறினான்.
விவசாயி கூறியதைக் கேட்டு, மோதிரத்தின் மகிமையை அறிந்து கொண்ட நகை வணிகனின் உள்ளத்தில் பேராசை தலை தூக்கியது. அவன் அந்த மோதிரத்தை அபகரிக்க திட்டம் போட்டான்.
விவசாயியிடம் வணிகர் மிகவும் கனிவாக, “ஐயா, நீங்கள் இன்று இரவு எனது வீட்டில் தங்கிவிட்டு, நாளை காலையில் செல்ல வேண்டும் என்பது என் விருப்பம்,'' என்று கூறினான். விவசாயியும் அதற்குச் சம்மதித்தார்.
அன்று இரவு விவசாயிக்கு நல்ல அறுசுவை விருந்து. விருந்தின் முடிவில் திராட்சை ரசம் வேறு. அதை வாங்கிக் குடித்த விவசாயி சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தான்.
அந்த சமயம் பார்த்து விவசாயியின் கையிலிருந்த மோதிரத்தை திருடிக் கொண்டு, ஒரு சாதாரண மோதிரத்தை மாட்டிவிட்டான் வணிகன்.
விவசாயி நன்றாகத் தூங்கினான். "மோதிரத்தைப் பயன்படுத்தி உலகின் முதல் பணக்காரனாக ஆகி விடலாம்' என்று எண்ணி ஆனந்த வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தான் வணிகன்.
மறுநாள் பொழுது விடிந்தது. சிறப்பான விருந்து கொடுத்தமைக்கு நன்றி சொல்லிவிட்டு, நகை வணிகனிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு தனது வீட்டை நோக்கிப் புறப்பட்டான் விவசாயி.
நகை வியாபாரியோ, அந்த மாய மோதிரத்தைக் தன் கை விரலில் அணிந்துகொண்டு, ஒய்யாரமாகத் தன் இருக்கையில் அமர்ந்தவாறே, மாய மோதிரத்தைப் பார்த்து, “எனக்கு ஐந்தாயிரம் பொற்காசுகள் மழைபோல கூரையை பிய்த்துக்கொண்டு கொட்டவேண்டும்,'' என்று கேட்டான்.
மோதிரம் தனக்குள்ளாக, "அடப்பாவி! ஒரு அப்பாவி ஏழையை ஏமாற்றி, அவனிடமிருந்து என்னைத் திருடி, என் மூலம் உலகப் பணக்காரன் ஆகப் பார்க்கிறாயா? இதோ, உன் கதையை இப்போதே முடித்து விடுகிறேன்' என்று சொல்லிக் கொண்டது.
நகை வணிகன் கேட்டுக் கொண்ட மாதிரியே, அந்த மோதிரம் தங்கக் காசுகளை அவனது தலையில் மழைபோல் பெய்து கொண்டிருந்தது.
தங்கக் காசுகள், "பட் பட்' என்று அவனது தலை மீது விழுந்தன.
“தலை வலிக்கிறது, போதும் போதும்!'' என்று கத்தினான். ஆனால், தங்க மழை நின்றபாடில்லை.
கடைசித் தங்கக் காசு அவனது தலையில் விழுந்தவுடன் தங்க மழை ஓய்ந்து போனது.
ஆனால், விழுந்து கிடந்த தங்கக் காசுகளை அந்த வணிகனால் எடுக்க முடியவில்லை. காரணம், தங்க மழை ஓய்வதற்கு முன்பே, அவனது உடலை, விட்டு அவனது உயிர் போய் விட்டது.
தங்க மழை பெய்ததால், நகை வியாபாரி இறந்துவிட்டார் என்ற செய்தி காட்டுத் தீ போல் பரவியது.
நகை வியாபாரியின் வீட்டை நோக்கி ஓடினர். நகை வியாபாரி மீது தங்கக் காசுகள் குவிந்து கிடந்தன.
"இப்படி மழைபோல் தங்க காசுகள் வந்தால், தீமையும் வராமலா போய் விடும்' என்று வந்தவர்கள் பேசிக்கொண்டனர். பின்னர் ஆளுக்கு இரண்டு தங்கக் காசுகள் எடுத்துக் கொண்டு அவரவர் வீட்டை நோக்கிச் சென்றனர்.
பின்னர் நகை வியாபாரியின் கைவிரலில் இருந்த அந்த மாயமோதிரம் தானே கழன்று, அந்த விவசாயியின் வீட்டை நோக்கி பறந்து சென்றது.
தொடரும்...
அதிசய மோதிரம்!
முன்னொரு காலத்தில், கிராமம் ஒன்றில் ஒரு விவசாயி வாழ்ந்து வந்தான். செய்வதற்கு வேலையும் கிடைக்காமல், அப்படி வேலை கிடைத்தாலும், அதன் மூலம் போதிய வருமானம் இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருந்தான்.
அந்த சமயத்தில் ஒருநாள்....
தேவதை ஒன்று விவசாயியின் முன் தோன்றி உனக்கு என்ன துன்பம் என்னிடம் சொல் தீர்த்து வைக்கிறேன் என்றது.
அந்தத் தேவதையிடம் அவன், தனது வாழ்க்கையில் அவன் படும் கஷ்டங்களையெல்லாம் சொன்னான். தனக்கு ஒரு விடிவு காலம் வருமாறு வழிவகை செய்ய வேண்டுமென்றும், தேவதையிடம் வேண்டிக் கொண்டான்.
“நான் சொல்கிறபடி செய்.... நேராக இதோ எதிரே தெரியும் காட்டுக்குள் செல். அங்கு பல வகையான மரங்கள் உள்ளன. அவற்றில் எல்லா மரங்களையும் விட ஒரு மரம் உயரமாக வளர்ந்து நிற்கும். அந்த மரத்தின் பெயர் பைன் மரம். அதை அப்படியே வெட்டிப் போடு. அப்புறம் அதிர்ஷ்டம் உன்னைத் தேடி வரும். உன் கஷ்டங்கள் எல்லாம் தீரும்,'' என்று அந்த தேவதை ஏழை விவசாயிக்கு வழிகாட்டியது.
அடுத்த நாளே, அந்த ஏழை விவசாயி கையில் கோடாரியை எடுத்துக் கொண்டு காட்டை சென்றடைந்தான். காட்டுக்குள் இருந்த பைன் மரத்தைக் கண்டுபிடிக்க இரண்டு நாட்கள் அங்குமிங்கும், தேடி அலைந்தான். இறுதியில் ஓங்கி உயர்ந்து நின்று கொண்டிருந்த பைன் மரத்தைக் கண்டு, மகிழ்ச்சி அடைந்தான். பிறகு, தனது கையிலிருந்த கோடாரியால் பைன் மரத்தின் அடிப்பாகத்தை ஓங்கி வெட்டினான். அது தரையின் மீது விழும் போது, அதன் முனைப் பகுதியில் இருந்து ஒரு பறவைக் கூடும் விழுந்தது. அக்கூட்டில் இரண்டு முட்டைகள் இருந்தன.
விழுந்த வேகத்தில் அந்த முட்டைகள் உருண்டோடி உடைந்தன. ஒரு முட்டையிலிருந்து ஒரு கழுகுக் குஞ்சு வெளிப்பட்டது. இன்னொரு முட்டையிலிருந்து, ஒரு மோதிரம் வெளிவந்து உருண்டோடியது.
கழுகுக் குஞ்சு பெரிதாக வளர்ந்து கொண்டே போனது. அந்த விவசாயியின் பாதியளவுக்குப் பெருத்து விட்டது. இந்தக் காட்சியைக் கண்டு விவசாயிக்கு ஒரே ஆச்சரியம். அவனால் தனது கண்களையே நம்ப முடியவில்லை. அந்தக் கழுகு தனது சிறகை அடித்துப் பறக்கும் முன் விவசாயியைப் பார்த்து, “எனது அடிமைத்தளத்திலிருந்து எனக்கு விடுதலை அளித்துவிட்டீர்கள். உங்களுக்கு எனது நன்றி.
அடுத்த முட்டையிலிருந்து வெளிவந்துள்ள மோதிரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அது ஓர் ஆச்சரியமான அதிசய மோதிரம். நீங்கள் எதைக் கேட்டாலும் அது கொடுக்கும். ஆனால், அதை ஒரே ஒரு தடவை பயன்படுத்தி விட்டால், அது சாதாரண மோதிரம் ஆகிவிடும். இதுதான் அந்த மோதிரத்தின் அற்புத சக்தியாகும். எனவே, ஆழ்ந்து சிந்தித்து முடிவெடுங்கள். அசட்டையாய் இருந்து விட்டால், பின்னர் வருத்தப்பட நேரிடும்,'' என்று கழுகு சொல்லிவிட்டு உயரே பறந்து கண்ணுக்குத் தெரியாமல் மறைந்தது.
மிகவும் மகிழ்ச்சி அடைந்தான் விவசாயி. அந்த மோதிரத்தை எடுத்துக் கொண்டு வீட்டை நோக்கி புறப்பட்டான். செல்லும் வழியில், அங்குள்ள நகைக் கடைக்குச் சென்றான்.
நகை வணிகரிடம் அந்த மோதிரத்தைக் காட்டி, “இதன் மதிப்பு என்ன இருக்கும்?'' என்று கேட்டான். மோதிரத்தை வாங்கிப் பார்த்த நகை வணிகர், “இதற்கு ஈடாக யாரும் ஒரு புல்லுக்கட்டு கூடத் தரமாட்டார்,'' என்று கூறினான்.
நகை வணிகர் கூறியதைக் கேட்ட விவசாயி சிரித்துக் கொண்டே அவரிடம், “இந்த மோதிரத்தின் மகிமையைப் பற்றி உனக்கு தெரியாது. உலகத்திலுள்ள எல்லா மோதிரங்களையும் சேர்த்தாலும் இதன் மதிப்புக்கு ஈடாகாது,'' என்று கூறிய விவசாயி, அந்த மோதிரம் தனக்கு எப்படிக் கிடைத்தது என்றும் விளக்கமாகக் கூறினான்.
விவசாயி கூறியதைக் கேட்டு, மோதிரத்தின் மகிமையை அறிந்து கொண்ட நகை வணிகனின் உள்ளத்தில் பேராசை தலை தூக்கியது. அவன் அந்த மோதிரத்தை அபகரிக்க திட்டம் போட்டான்.
விவசாயியிடம் வணிகர் மிகவும் கனிவாக, “ஐயா, நீங்கள் இன்று இரவு எனது வீட்டில் தங்கிவிட்டு, நாளை காலையில் செல்ல வேண்டும் என்பது என் விருப்பம்,'' என்று கூறினான். விவசாயியும் அதற்குச் சம்மதித்தார்.
அன்று இரவு விவசாயிக்கு நல்ல அறுசுவை விருந்து. விருந்தின் முடிவில் திராட்சை ரசம் வேறு. அதை வாங்கிக் குடித்த விவசாயி சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தான்.
அந்த சமயம் பார்த்து விவசாயியின் கையிலிருந்த மோதிரத்தை திருடிக் கொண்டு, ஒரு சாதாரண மோதிரத்தை மாட்டிவிட்டான் வணிகன்.
விவசாயி நன்றாகத் தூங்கினான். "மோதிரத்தைப் பயன்படுத்தி உலகின் முதல் பணக்காரனாக ஆகி விடலாம்' என்று எண்ணி ஆனந்த வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தான் வணிகன்.
மறுநாள் பொழுது விடிந்தது. சிறப்பான விருந்து கொடுத்தமைக்கு நன்றி சொல்லிவிட்டு, நகை வணிகனிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு தனது வீட்டை நோக்கிப் புறப்பட்டான் விவசாயி.
நகை வியாபாரியோ, அந்த மாய மோதிரத்தைக் தன் கை விரலில் அணிந்துகொண்டு, ஒய்யாரமாகத் தன் இருக்கையில் அமர்ந்தவாறே, மாய மோதிரத்தைப் பார்த்து, “எனக்கு ஐந்தாயிரம் பொற்காசுகள் மழைபோல கூரையை பிய்த்துக்கொண்டு கொட்டவேண்டும்,'' என்று கேட்டான்.
மோதிரம் தனக்குள்ளாக, "அடப்பாவி! ஒரு அப்பாவி ஏழையை ஏமாற்றி, அவனிடமிருந்து என்னைத் திருடி, என் மூலம் உலகப் பணக்காரன் ஆகப் பார்க்கிறாயா? இதோ, உன் கதையை இப்போதே முடித்து விடுகிறேன்' என்று சொல்லிக் கொண்டது.
நகை வணிகன் கேட்டுக் கொண்ட மாதிரியே, அந்த மோதிரம் தங்கக் காசுகளை அவனது தலையில் மழைபோல் பெய்து கொண்டிருந்தது.
தங்கக் காசுகள், "பட் பட்' என்று அவனது தலை மீது விழுந்தன.
“தலை வலிக்கிறது, போதும் போதும்!'' என்று கத்தினான். ஆனால், தங்க மழை நின்றபாடில்லை.
கடைசித் தங்கக் காசு அவனது தலையில் விழுந்தவுடன் தங்க மழை ஓய்ந்து போனது.
ஆனால், விழுந்து கிடந்த தங்கக் காசுகளை அந்த வணிகனால் எடுக்க முடியவில்லை. காரணம், தங்க மழை ஓய்வதற்கு முன்பே, அவனது உடலை, விட்டு அவனது உயிர் போய் விட்டது.
தங்க மழை பெய்ததால், நகை வியாபாரி இறந்துவிட்டார் என்ற செய்தி காட்டுத் தீ போல் பரவியது.
நகை வியாபாரியின் வீட்டை நோக்கி ஓடினர். நகை வியாபாரி மீது தங்கக் காசுகள் குவிந்து கிடந்தன.
"இப்படி மழைபோல் தங்க காசுகள் வந்தால், தீமையும் வராமலா போய் விடும்' என்று வந்தவர்கள் பேசிக்கொண்டனர். பின்னர் ஆளுக்கு இரண்டு தங்கக் காசுகள் எடுத்துக் கொண்டு அவரவர் வீட்டை நோக்கிச் சென்றனர்.
பின்னர் நகை வியாபாரியின் கைவிரலில் இருந்த அந்த மாயமோதிரம் தானே கழன்று, அந்த விவசாயியின் வீட்டை நோக்கி பறந்து சென்றது.
தொடரும்...
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
அடுத்த கதை :
முட்டாளுக்கு புத்தி சொல்வது வீண்!
ஒரு காட்டில் பல குரங்குகள் கூட்டமாக வசித்து வந்தன. குளிர்காலத்தில் ஒருநாள் மிகவும் கடுமையான குளிராக இருந்தது. குரங்குகளால் குளிரைத் தாங்க முடியவில்லை.
கொஞ்சம் நெருப்பு கிடைத்தால் சருகுகளைப் போட்டுத் தீமூட்டி குளிர் காயலாம் என்று ஒரு கிழக்குரங்கு கூறிற்று. நெருப்புக்கு எங்கே போவது என்று குரங்குகள் யோசித்துக் கொண்டிருந்தபோது ஒரு மின்மினிப் பூச்சி பளிச் பளிச் சென்று மின்னியவாறு பறந்து சென்று கொண்டிருந்தது. அதைக் கண்ட ஒரு குரங்கு அதோ நெருப்பு போகிறது என்று கூறிற்று. மற்றொரு குரங்கு அந்த மின்மினிப் பூச்சியைப் பிடித்து வந்து தரையில் போட்டது.
மற்ற குரங்குகள் சுற்றிலும் கிடந்த குப்பை கூளங்களைச் சேகரித்து வந்து மின்மினிப் பூச்சிமீது போட்டன. பிறகு குரங்குகள் நெருப்பு கொழுந்து விட்டு எரியப் போகிறது என எதிர்பார்த்து சூழ்ந்து அமர்ந்து கொண்டன. ஆனால் தீ எரியும் வழியைக் காணோம்
பிறகு குரங்குகள் வாயினால் குப்பையை ஊதி நெருப்பை எரிய விடும் முயற்சியில் ஈடுபட்டன. மரத்தில் அமர்ந்து குரங்குகளின் கோமாளிக் கூட்டத்தைக் கவனித்துக் கொண்டிருந்த ஒரு பறவை கலகலவென்று சிரித்தபடி மரத்தை விட்டிறங்கி கீழே வந்து அமர்ந்தது,
பிறகு குரங்குகளை நோக்கி நண்பர்களே மின்மினிப் பூச்சியை நெருப்பு என்று எண்ணிக் கொண்டு தீ மூட்ட வீண் பிரயாசை எடுக்கிறீர்கள். நீங்கள் என்னதான் வாயால் ஊதினாலும் மின்மினிப் பூச்சியிடமிருந்து நெருப்பு வரவே வராது. வீண் வேலையை விட்டுவிடுங்கள் என்று புத்திமதி கூறிற்று. உனக்கு ஒன்றும் தெரியாது. வாயை மூடிக்கொண்டு உன் வேலையைப் பார் என்று கூறிவிட்டு குரங்குகள் மறுபடியும் குப்பையை வாயால் ஊதித் தீ உண்டாக்க முயற்சியெடுத்தன.
பறவை, குரங்குகளின் முட்டாள்தனத்தை எண்ணிப் பரிதாபப்பட்டு திரும்பத் திரும்ப குரங்குகளுக்கு புத்திமதி கூறிக் கொண்டிருந்தது. இதனால் கோபமுற்ற குரங்குகள் பறவை மீது பாய்ந்து அதனைப் பிடித்து தரையில் மோதிக் கொன்று விட்டன.
பாடம் : முட்டாளுக்கு புத்தி சொன்னால் வினைநமக்குதான்…
முட்டாளுக்கு புத்தி சொல்வது வீண்!
ஒரு காட்டில் பல குரங்குகள் கூட்டமாக வசித்து வந்தன. குளிர்காலத்தில் ஒருநாள் மிகவும் கடுமையான குளிராக இருந்தது. குரங்குகளால் குளிரைத் தாங்க முடியவில்லை.
கொஞ்சம் நெருப்பு கிடைத்தால் சருகுகளைப் போட்டுத் தீமூட்டி குளிர் காயலாம் என்று ஒரு கிழக்குரங்கு கூறிற்று. நெருப்புக்கு எங்கே போவது என்று குரங்குகள் யோசித்துக் கொண்டிருந்தபோது ஒரு மின்மினிப் பூச்சி பளிச் பளிச் சென்று மின்னியவாறு பறந்து சென்று கொண்டிருந்தது. அதைக் கண்ட ஒரு குரங்கு அதோ நெருப்பு போகிறது என்று கூறிற்று. மற்றொரு குரங்கு அந்த மின்மினிப் பூச்சியைப் பிடித்து வந்து தரையில் போட்டது.
மற்ற குரங்குகள் சுற்றிலும் கிடந்த குப்பை கூளங்களைச் சேகரித்து வந்து மின்மினிப் பூச்சிமீது போட்டன. பிறகு குரங்குகள் நெருப்பு கொழுந்து விட்டு எரியப் போகிறது என எதிர்பார்த்து சூழ்ந்து அமர்ந்து கொண்டன. ஆனால் தீ எரியும் வழியைக் காணோம்
பிறகு குரங்குகள் வாயினால் குப்பையை ஊதி நெருப்பை எரிய விடும் முயற்சியில் ஈடுபட்டன. மரத்தில் அமர்ந்து குரங்குகளின் கோமாளிக் கூட்டத்தைக் கவனித்துக் கொண்டிருந்த ஒரு பறவை கலகலவென்று சிரித்தபடி மரத்தை விட்டிறங்கி கீழே வந்து அமர்ந்தது,
பிறகு குரங்குகளை நோக்கி நண்பர்களே மின்மினிப் பூச்சியை நெருப்பு என்று எண்ணிக் கொண்டு தீ மூட்ட வீண் பிரயாசை எடுக்கிறீர்கள். நீங்கள் என்னதான் வாயால் ஊதினாலும் மின்மினிப் பூச்சியிடமிருந்து நெருப்பு வரவே வராது. வீண் வேலையை விட்டுவிடுங்கள் என்று புத்திமதி கூறிற்று. உனக்கு ஒன்றும் தெரியாது. வாயை மூடிக்கொண்டு உன் வேலையைப் பார் என்று கூறிவிட்டு குரங்குகள் மறுபடியும் குப்பையை வாயால் ஊதித் தீ உண்டாக்க முயற்சியெடுத்தன.
பறவை, குரங்குகளின் முட்டாள்தனத்தை எண்ணிப் பரிதாபப்பட்டு திரும்பத் திரும்ப குரங்குகளுக்கு புத்திமதி கூறிக் கொண்டிருந்தது. இதனால் கோபமுற்ற குரங்குகள் பறவை மீது பாய்ந்து அதனைப் பிடித்து தரையில் மோதிக் கொன்று விட்டன.
பாடம் : முட்டாளுக்கு புத்தி சொன்னால் வினைநமக்குதான்…
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
இதோ அடுத்த கதை :
முன்னொரு காலத்தில் கோணங்கி பட்டினம் என்ற ஊரில் மந்தை மேய்ப்பன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவனிடம் நிறைய ஆடுகள் இருந்தன. அவற்றை அவனால் காவல்காக்க முடியவில்லை. தினமும் ஒவ்வொரு ஆட்டை ஓநாய்கள் கவர்ந்து சென்றன.
இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் வேட்டை நாய் இரண்டை வாங்கி காவலுக்கு வைத்தான். அவற்றிற்கு தினமும் மாமிச உணவு கொடுக்க வேண்டுமே.. இதற்காக தினமும் இரண்டு எலிகளை அடித்து உணவாக கொடுத்தான்.
அப்படி இருந்தும் தினமும் ஒரு ஆடு காணாமல் போனது. இதனால் மேய்ப்பனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. வேட்டை நாய்கள் மீது கோபம் கோபமாக வந்தது..
ஒரு நாள் என்ன நடக்கிறது என்பதை மறைந்திருந்து கவனித்தான். அப்பொழுது ஓநாய் ஒன்று வந்து ஆட்டை கொன்று இழுத்து சென்றது. அது சாப்பிட்டுவிட்டு போடும் மீதி ஆட்டை இந்த வேட்டை நாய்கள் இன்பமாக தின்றன. இப்படி நடப்பதை கண்ட அவன் திடுக்கிட்டான். மிகவும் சோகமாக உட்கார்ந்தான்.
அப்பொழுது அந்த வழியாக முனிவர் ஒருவர் வந்தார். அவரிடம் தன் கஷ்டத்தை சொல்லி அழுதான் மந்தை மேய்ப்பவன்.
அதற்கு முனிவர், “மகனே யாருக்கும் வயிறார உணவு கொடுத்தால் தான் வேலை செய்வர். நீயோ இரண்டு எலிகளை மாத்திரம் நாய்களுக்கு உணவாக கொடுக்கிறாய். இது அவைகளுக்கு பத்தாது.
“நீ அவ்வப்போது உன் வீட்டிற்காக ஆட்டை வெட்டுகிறாய் அல்லவா? அந்த மாமிசத்திலிருந்து சிறு துண்டுகளையாவது எடுத்து இந்த நாய்களுக்கு கொடுக்க வேண்டும். அப்படி கொடுத்தால்தான் அவைகள் உனக்காக நன்கு வேலை செய்யும்,'' என்றார்.
அதன்படியே செய்வதாக ஒப்பு கொண்டான் மேய்ப்பன். அப்படியே செய்து வந்தான். அதற்கு நல்ல பலன் கிடைத்தது. அன்றிலிருந்து மந்தையில் ஆடுகள் குறையவில்லை.
மறுநாள் ஓநாய்கள் ஆட்டை திண்ண வந்தன. அதை கண்ட வேட்டை நாய்கள் அவைகளை விரட்டின. “என்ன இத்தனை நாட்களாக நாங்கள் விட்டு சென்ற மாமிசத்தை தின்றீர்கள். இப்பொழுது உங்களுக்கு என்னவாயிற்று?'' என்றன.
“உங்களது எச்சில் மாமிசம் எங்களுக்கு வேண்டாம். எங்கள் தலைவர் வயிறு நிறைய எங்களுக்கு மாமிசம் கொடுக்கிறார்,'' என்றன.
அவற்றை மீறி ஓநாய்கள் மந்தைக்குள் நுழைந்தன. அவைகள் மீது பாய்ந்து கிழித்து கொன்றன வேட்டை நாய்கள். மிகவும் மகிழ்ச்சி அடைந்தான் மந்தை மேய்ப்பன்.
நீதி : நம்மிடம் வேலை செய்பவர்களுக்கு நாம் வயிறு நிறைய சாப்பாடு கொடுக்க வேண்டும். தகுதியான சம்பளம் கொடுக்க வேண்டும். அப்பொழுதுதான் நமக்கு உண்மையாக உழைப்பர்.
ஆட்டைக் காணோம்!
![பாட்டி சொன்ன கதைகள் 83586](https://2img.net/h/eluthu.com/images/poemimages/i/83586.gif)
![பாட்டி சொன்ன கதைகள் 83586](https://2img.net/h/eluthu.com/images/poemimages/i/83586.gif)
முன்னொரு காலத்தில் கோணங்கி பட்டினம் என்ற ஊரில் மந்தை மேய்ப்பன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவனிடம் நிறைய ஆடுகள் இருந்தன. அவற்றை அவனால் காவல்காக்க முடியவில்லை. தினமும் ஒவ்வொரு ஆட்டை ஓநாய்கள் கவர்ந்து சென்றன.
இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் வேட்டை நாய் இரண்டை வாங்கி காவலுக்கு வைத்தான். அவற்றிற்கு தினமும் மாமிச உணவு கொடுக்க வேண்டுமே.. இதற்காக தினமும் இரண்டு எலிகளை அடித்து உணவாக கொடுத்தான்.
அப்படி இருந்தும் தினமும் ஒரு ஆடு காணாமல் போனது. இதனால் மேய்ப்பனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. வேட்டை நாய்கள் மீது கோபம் கோபமாக வந்தது..
ஒரு நாள் என்ன நடக்கிறது என்பதை மறைந்திருந்து கவனித்தான். அப்பொழுது ஓநாய் ஒன்று வந்து ஆட்டை கொன்று இழுத்து சென்றது. அது சாப்பிட்டுவிட்டு போடும் மீதி ஆட்டை இந்த வேட்டை நாய்கள் இன்பமாக தின்றன. இப்படி நடப்பதை கண்ட அவன் திடுக்கிட்டான். மிகவும் சோகமாக உட்கார்ந்தான்.
அப்பொழுது அந்த வழியாக முனிவர் ஒருவர் வந்தார். அவரிடம் தன் கஷ்டத்தை சொல்லி அழுதான் மந்தை மேய்ப்பவன்.
அதற்கு முனிவர், “மகனே யாருக்கும் வயிறார உணவு கொடுத்தால் தான் வேலை செய்வர். நீயோ இரண்டு எலிகளை மாத்திரம் நாய்களுக்கு உணவாக கொடுக்கிறாய். இது அவைகளுக்கு பத்தாது.
“நீ அவ்வப்போது உன் வீட்டிற்காக ஆட்டை வெட்டுகிறாய் அல்லவா? அந்த மாமிசத்திலிருந்து சிறு துண்டுகளையாவது எடுத்து இந்த நாய்களுக்கு கொடுக்க வேண்டும். அப்படி கொடுத்தால்தான் அவைகள் உனக்காக நன்கு வேலை செய்யும்,'' என்றார்.
அதன்படியே செய்வதாக ஒப்பு கொண்டான் மேய்ப்பன். அப்படியே செய்து வந்தான். அதற்கு நல்ல பலன் கிடைத்தது. அன்றிலிருந்து மந்தையில் ஆடுகள் குறையவில்லை.
மறுநாள் ஓநாய்கள் ஆட்டை திண்ண வந்தன. அதை கண்ட வேட்டை நாய்கள் அவைகளை விரட்டின. “என்ன இத்தனை நாட்களாக நாங்கள் விட்டு சென்ற மாமிசத்தை தின்றீர்கள். இப்பொழுது உங்களுக்கு என்னவாயிற்று?'' என்றன.
“உங்களது எச்சில் மாமிசம் எங்களுக்கு வேண்டாம். எங்கள் தலைவர் வயிறு நிறைய எங்களுக்கு மாமிசம் கொடுக்கிறார்,'' என்றன.
அவற்றை மீறி ஓநாய்கள் மந்தைக்குள் நுழைந்தன. அவைகள் மீது பாய்ந்து கிழித்து கொன்றன வேட்டை நாய்கள். மிகவும் மகிழ்ச்சி அடைந்தான் மந்தை மேய்ப்பன்.
நீதி : நம்மிடம் வேலை செய்பவர்களுக்கு நாம் வயிறு நிறைய சாப்பாடு கொடுக்க வேண்டும். தகுதியான சம்பளம் கொடுக்க வேண்டும். அப்பொழுதுதான் நமக்கு உண்மையாக உழைப்பர்.
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
சோம்பேறி
![பாட்டி சொன்ன கதைகள் 83552](https://2img.net/h/eluthu.com/images/poemimages/i/83552.gif)
![பாட்டி சொன்ன கதைகள் 83552](https://2img.net/h/eluthu.com/images/poemimages/i/83552.gif)
ஒரு ஊரில் ஒரு சோம்பேறி இருந்தானம். எந்த வேலையும் செய்யாமல் உண்பதும், தூங்குவதும் மட்டும் செய்ததால் அவனுக்கு ஏகப்பட்ட வியாதிகள்.
வைத்தியர் வீட்டுக்குப் போகக்கூட முடியாமல், ஒரு வைத்தியரை வீட்டுக்கு வரவழைத்தானாம்.
அவர் ஒரு பாட்டில் நிறைய சூரணம் (சூரணம் என்பது நன்கு பொடி செய்யப்பட்ட மருந்து) கொடுத்து எப்போதெல்லாம் வியர்வை வருகிறதோ அப்போதெல்லாம் சாப்பிடு. சூரணம் தீர்ந்ததும் வியாதியும் பறந்துடும்னு சொன்னாராம்.
சோம்பேறி வீட்டுக்கு வந்து காத்திருந்தானாம்.
எதற்கு? எப்போது வேர்க்குமென்று.
அப்போது அவன் மனைவி சொன்னாளாம் 'நீங்கள் ஏதாச்சும் வேலை செஞ்சாதான் வேர்க்கும்' என்று.
அவனும் தன் துணிகளைத் துவைப்பது, தோட்ட வேலை செய்வது, கடைக்குப் போவது, நிலத்தில் வேலை செய்வது என் உழைக்க ஆரம்பித்தானாம்.
ஒவ்வொரு முறை வியர்க்கும் போதும் சூரணம் சாப்பிடவும் மறக்கவில்லை.
கொஞ்சநாளிலேயே வியாதி குணமடைந்து ஆரோக்கியமாக இருந்தான்.
ஆனால் சூரணம் பாதிதான் தீர்ந்திருந்தது.
மீதியை வைத்தியரிடம் கொடுத்து விட்டு கேட்டானாம் "எப்படி பாதி மருந்திலேயே எனக்கு குணமானது?" என்று.
அதற்கு அவர் "உன் வியாதி மருந்தால் தீரவில்லை. சுறுசுறுப்பான உன் வேலைகளால் சோம்பேறித்தனம் போய் குண்மடைந்து விட்டாய். நான் கொடுத்தது மருந்தேயில்லை. வெறும் துளசி, வெல்லம் கலந்தது" என்றாராம்.
அவனும் நன்றி சொல்லி விட்டுச் சென்றானாம்.
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
சீரைத் தேடின் கீரையைத் தேடு
ஒரு அரசனின் மகனும், சாதாரண சேவகன் மகனும் ஒன்றாகப் படிப்பவர்கள். மாலை நேரத்தில் விளையாடும்பொழுது, சிறிது சூரிய ஒளி குன்றிய நேரம் அரசகுமாரனுக்கு விளையாடும் பொருள் தெரியாது. சேவகன் மகனுக்கு எல்லாம் தெரியும்.
அரசனின் உத்தரவுப்படி, அரச வைத்தியர் இருவரையும் பரிசோதித்து, அவர்கள் உண்ணும் உணவு வகைகள் பற்றி விசாரிக்கிறார். அரசகுமாரன் விலை உயர்ந்த காய் கனிகளையும், சேவகன் மகன் சாதாரணமாக விளையும் விலை மலிவான, பசுமையான கீரையையும் சாப்பிடுவதை அறிந்தார்.
அரசன் மகனுக்கு பசுமையான கீரையைச் சாப்பிடாததனால்தான் மாலைக்கண் நோய் பாதிப்பு ஏற்பட்டது என அறிந்ததும், அந்த நாட்டில் யாருக்கும் மாலைக்கண் நோய் பாதிப்பு ஏற்படக்கூடாது என்றும், அனைவரும் கீரையைத் தினமும் சாப்பிடவேண்டுமென்றும் அரசன் ஆணையிட்டான். அந்த நாட்டிலுள்ள நிலங்களிலெல்லாம் கீரை பயிரிடவேண்டும் என்றும் ஆணையிட்டான். அதனால் அவன் நாடும் கீரைப்பட்டணம் என்று அழைக்கப்பட்டது.
இதிலிருந்து கீரையின் மகத்துவம் என்னவென்று யாவரும் புரிந்து கொண்டோம்.
நாளும் ஒரு கீரை!
பாட்டி செய்த சமையலிலே
நாளும் உண்டு ஒரு கீரை!
குழம்பில் தண்டுக் கீரையாம்
கூட்டில் முருங்கைக் கீரையாம்!
பொன்போல் மேனி பெற்றிடவே
பொன்னாங் கண்ணிக் கீரையாம்!
அகத்தின் சூடு குறைந்திடவே
அகத்திக் கீரை உண்டிடலாம்!
அனைவரும் விரும்பும் சிறுகீரை
ஆற்றல் தந்திடும் முளைக்கீரை!
ஞாபக சக்தி வளர்ந்திடவே
வாகாய் வல்லாரைக் கீரையாம்!
நாளும் உணவில் ஒருகீரை
நீயும் உண்ணப் பழகிவிட்டால்
நோய் நொடியின்றி வாழ்ந்திடலாம்
நூறு வயது பெற்றிடலாம்!
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
சிலந்தியிடம் பாடம் கற்ற அரசன்!
போரில் தோல்வி அடைந்த அரசன் தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடி ஒளிந்தான். அரசன் மிகவும் வீரத்துடன் போரிட்டாலும் அவனின் படை மிகவும் சிறியதாக இருந்ததினால் அவனால் வெல்ல முடியவில்லை. எதிரியிடம் மாபெரும் படை இருந்ததினால் வெற்றி பெற்றன்.
தோல்வியுற்ற அரசனை கொலை செய்யுமாறு அவனை வென்ற அரசன் கட்டளை பிறப்பித்தான். அதனால் அவன் காட்டிற்கு ஓடிச் சென்றுஅங்கு இருந்த ஒரு குகையில் ஒளிந்து கொண்டான்.
தோல்வி கண்ட அரசன் மிகவும் மனவருத்தம் கொண்டான். மனச்சோர்வினால் துணிவு இழந்தான். ஒருநாள் சோம்பலுடன் அரசன் குகையில் படுத்திருந்தான். அந்தக் குகையினுள் ஒரு சிலந்தி வாழ்ந்து வந்தது.
அந்த சிறிய சிலந்தியின் செயல் அவன் கவனத்தைக் கவர்ந்தது. குகையின் ஒரு பகுதியினுள் ஒரு வலையைப் பின்னக் கடுமையாக முயற்சி செய்து கொண்டிருந்தது. சுவரின் மீது ஊர்ந்து செல்லும் போது வலையினில் பின்னிய நூல் அறுந்து சிலந்தி கீழே விழுந்து விட்டது.
இவ்வாறு பலமுறை நடந்தது. ஆனாலும், அது தன் முயற்சியைக் கைவிடாமல் மறுபடியும் மறுபடியும் முயன்றது. கடைசியில் வெற்றிகரமாக வலையைப் பின்னி முடித்தது. அரசன் “இச் சிறு சிலந்தியே பல முறை தோல்வியடைந்தும் தன் முயற்சியைக் கைவிடவில்லை. நான் ஏன் விடவேண்டும்?
நானோ அரசன். நான் மறுபடியும் முயற்சி செய்ய வேண்டும்” என்று எண்ணினான் மறுபடியம் தன் எதிரியுடன் போர் புரிய தீர்மானித்தான். அரசன் தான் வசித்த காட்டிற்கு வெளியே சென்று தன் நம்பிக்கையான ஆட்களைச் சந்தித்தான்.
தன் நாட்டில் உள்ள வீரர்களை ஒன்று சேர்த்து பலம் மிகுந்த ஒரு படையை உருவாக்கினான். தன் எதிரிகளுடன் தீவிரமாகப் போர் புரிந்தான். கடைசியில் போரில் வெற்றியும் பெற்றான். அதனால் தன் அரசைத் திரும்பப் பெற்றான். தனக்கு அறிவுரை போதித்த அந்த சிலந்தியை அவன் என்றுமே மறக்கவில்லை.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நல்ல நல்ல கதைகளா விடுறாரே அசுரன்.
நல்ல பகிர்வுக்கு நன்றி.
![யினியவன்](https://2img.net/u/1813/71/41/02/avatars/14526-44.jpg)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
நல்ல பகிர்வுக்கு நன்றி.
![யினியவன்](https://2img.net/u/1813/71/41/02/avatars/14526-44.jpg)
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
பொன் முட்டையிடும் வாத்து!
ஒரு ஊரில் ஒரு விவசாயி இருந்தான். அவன் ஒரு பேராசை பிடித்தவன். அவன் நிறைய வாத்துக்கள் வளர்த்து வந்தான். அந்த வாத்துக்களில் ஒன்று ஒவ்வொரு நாளும் ஒரு தங்க முட்டை இட்டு வந்தது. அந்த விவசாயி அந்த தங்க முட்டைகளை விற்றுப் பணக்காரன் ஆனான்.
வாத்து ஒவ்வொரு நாளும் ஒரு தங்க முட்டைதானே இடுகிறது. இதற்காக ஒவ்வொரு நாளாகக் காத்திருக்க வேண்டுமா? வாத்தின் வயிற்றுக்குள் தான் நிறைய தங்க முட்டைகள் இருக்கும் என யோசிக்க தொடங்கினான்.
எல்லாவற்றையும் ஒன்றாக எடுத்து விற்றால், ஒரே நாளில் மிகப் பெரிய பணக்காரன் ஆகலாம் என நினைத்தான்.
அடுத்தநாள், விவசாயி எல்லா தங்க முட்டைகளையும் ஒன்றாக எடுப்பதற்காக, ஒரு கத்தியை எடுத்தான்.
வாத்தின் வயிற்றைக் கீறினான். வாத்து துடிதுடித்து இறந்தது. அதன் வயிற்றினுள் அன்றைய தினம் போட வேண்டிய ஒரே ஒரு தங்க முட்டை மட்டும் இருந்தது.
வாத்து இறந்ததினால் ஒவ்வொரு நாளும் கிடைத்து வந்த தங்க முட்டையும் அவனுக்கு கிடைக்காமல் போய்விட்டது.
விவசாயி தான் செய்த முட்டாள்தனமான செயலை எண்ணி கவலைப்பட்டு வருந்தி "பேராசை பெரும் நஷ்டம் கொடுக்கும்" என உணர்ந்தான்.
பாடம் : பேராசை பெரும் நஷ்டம் கொடுக்கும்.
ஒரு ஊரில் ஒரு விவசாயி இருந்தான். அவன் ஒரு பேராசை பிடித்தவன். அவன் நிறைய வாத்துக்கள் வளர்த்து வந்தான். அந்த வாத்துக்களில் ஒன்று ஒவ்வொரு நாளும் ஒரு தங்க முட்டை இட்டு வந்தது. அந்த விவசாயி அந்த தங்க முட்டைகளை விற்றுப் பணக்காரன் ஆனான்.
வாத்து ஒவ்வொரு நாளும் ஒரு தங்க முட்டைதானே இடுகிறது. இதற்காக ஒவ்வொரு நாளாகக் காத்திருக்க வேண்டுமா? வாத்தின் வயிற்றுக்குள் தான் நிறைய தங்க முட்டைகள் இருக்கும் என யோசிக்க தொடங்கினான்.
எல்லாவற்றையும் ஒன்றாக எடுத்து விற்றால், ஒரே நாளில் மிகப் பெரிய பணக்காரன் ஆகலாம் என நினைத்தான்.
அடுத்தநாள், விவசாயி எல்லா தங்க முட்டைகளையும் ஒன்றாக எடுப்பதற்காக, ஒரு கத்தியை எடுத்தான்.
வாத்தின் வயிற்றைக் கீறினான். வாத்து துடிதுடித்து இறந்தது. அதன் வயிற்றினுள் அன்றைய தினம் போட வேண்டிய ஒரே ஒரு தங்க முட்டை மட்டும் இருந்தது.
வாத்து இறந்ததினால் ஒவ்வொரு நாளும் கிடைத்து வந்த தங்க முட்டையும் அவனுக்கு கிடைக்காமல் போய்விட்டது.
விவசாயி தான் செய்த முட்டாள்தனமான செயலை எண்ணி கவலைப்பட்டு வருந்தி "பேராசை பெரும் நஷ்டம் கொடுக்கும்" என உணர்ந்தான்.
பாடம் : பேராசை பெரும் நஷ்டம் கொடுக்கும்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|