புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உயிர் கொடுத்தவள் Poll_c10உயிர் கொடுத்தவள் Poll_m10உயிர் கொடுத்தவள் Poll_c10 
11 Posts - 33%
ayyasamy ram
உயிர் கொடுத்தவள் Poll_c10உயிர் கொடுத்தவள் Poll_m10உயிர் கொடுத்தவள் Poll_c10 
11 Posts - 33%
Dr.S.Soundarapandian
உயிர் கொடுத்தவள் Poll_c10உயிர் கொடுத்தவள் Poll_m10உயிர் கொடுத்தவள் Poll_c10 
6 Posts - 18%
i6appar
உயிர் கொடுத்தவள் Poll_c10உயிர் கொடுத்தவள் Poll_m10உயிர் கொடுத்தவள் Poll_c10 
3 Posts - 9%
Jenila
உயிர் கொடுத்தவள் Poll_c10உயிர் கொடுத்தவள் Poll_m10உயிர் கொடுத்தவள் Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
உயிர் கொடுத்தவள் Poll_c10உயிர் கொடுத்தவள் Poll_m10உயிர் கொடுத்தவள் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உயிர் கொடுத்தவள் Poll_c10உயிர் கொடுத்தவள் Poll_m10உயிர் கொடுத்தவள் Poll_c10 
105 Posts - 42%
ayyasamy ram
உயிர் கொடுத்தவள் Poll_c10உயிர் கொடுத்தவள் Poll_m10உயிர் கொடுத்தவள் Poll_c10 
88 Posts - 35%
i6appar
உயிர் கொடுத்தவள் Poll_c10உயிர் கொடுத்தவள் Poll_m10உயிர் கொடுத்தவள் Poll_c10 
16 Posts - 6%
Dr.S.Soundarapandian
உயிர் கொடுத்தவள் Poll_c10உயிர் கொடுத்தவள் Poll_m10உயிர் கொடுத்தவள் Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
உயிர் கொடுத்தவள் Poll_c10உயிர் கொடுத்தவள் Poll_m10உயிர் கொடுத்தவள் Poll_c10 
8 Posts - 3%
mohamed nizamudeen
உயிர் கொடுத்தவள் Poll_c10உயிர் கொடுத்தவள் Poll_m10உயிர் கொடுத்தவள் Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
உயிர் கொடுத்தவள் Poll_c10உயிர் கொடுத்தவள் Poll_m10உயிர் கொடுத்தவள் Poll_c10 
7 Posts - 3%
Guna.D
உயிர் கொடுத்தவள் Poll_c10உயிர் கொடுத்தவள் Poll_m10உயிர் கொடுத்தவள் Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
உயிர் கொடுத்தவள் Poll_c10உயிர் கொடுத்தவள் Poll_m10உயிர் கொடுத்தவள் Poll_c10 
2 Posts - 1%
Jenila
உயிர் கொடுத்தவள் Poll_c10உயிர் கொடுத்தவள் Poll_m10உயிர் கொடுத்தவள் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயிர் கொடுத்தவள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 18, 2012 5:46 am

உயிர் கொடுத்தவள் Head410
"அம்மா''

"அன்றைய செய்தித்தாளைப் படித்துக் கொண்டிருந்த மதுரம், மகள் தாரா கூப்பிடுவதைக் கேட்டதும் என்ன என்பது போல அவளைப் பார்த்தாள்.

"ஆபீசுலேருந்து மத்தியானம் சாந்தி சித்தி கிட்டே பேசினேன். எனக்கு கல்யாணம் நிச்சயமாயிருக்கிற செய்தியை சொன்னேன் சந்தோஷப்பட்டாங்க. பத்திரிகை அடிக்கக் கொடுத்திருக்கோம். வந்ததும் அனுப்பறேன்னு சொன்னேன். அப்புறம் வந்து..'' தயங்கினாள் தாரா..

"என்னடி வந்து... போயின்னு... சொல்லித் தொலையேன்''

"அம்மா சித்தியோட பேச்சை எடுத்தாலே உனக்கு பிடிக்காதுன்னு எனக்குத் தெரியும். இருந்தாலும் அவங்ககிட்டே, "எங்கம்மாவும் உங்களை கூப்பிடுவாங்கன்னு'' சொன்னேன். சித்தப்பாவும், சித்தியும் தான் மனையிலே உட்கார்ந்து எனக்கு கல்யாணம் செய்து வைக்கணும்னு ஆசைப்படறேன்மா''

"உன்னையே வேண்டாம்னு ஒதுக்கிட்டுப் போனவ தான் தாரை வார்த்துத் தரணுமா? முடி யாது. என்னோட பெரிய பொண்ணு தான் மனையிலே உட்காருவா'' என்றாள், சற்றே கோபத்துடன்.

மதுரத்தின் சொந்த தங்கை தான் சாந்தி. மதுரத் தின் கோபத்திற்கும் காரணம் இருந்தது.

மதுரத்தின் கணவர் சம்பந்தம் பள்ளிக்கூடத்தில் எழுத்தர் வேலையில் இருந்தார். ஆண் குழந்தை வேண்டும் என்று ஆசைப்பட்டவருக்கு மூன்றாவ தாகத்தான் மகன் பிறந்தான். முதல் இரண்டும் பெண் குழந்தைகள். நடுத்தர வர்க்கத்திற்கு இந்த மூன்று குழந்தைகளே அதிகம் என்று நினைத்த மதுரம், எதிர்பாராமல் நான்காவதாக கர்ப்பம் தரித்தபோது அதிர்ந்து தான் போனாள்.

"மதுரம்...இந்த மூன்று குழந்தைகளையும் நாம ஒழுங்கா வளர்த்தா போதும். நாலாவது குழந்தை நமக்கு வேண்டாம். நாப்பது நாள் தானே ஆயிருக்கு. வா லேடி டாக்டரை பார்த்துவிட்டு வருவோம்'' என்று கணவர் சம்பந்தம் கூறவே, மதுரத்திற்கும் அதுவே சரியென்று பட்டது.

மருநாள் மதுரம் ஆஸ்பத்திரிக்கு, கிளம்பிக் கொண்டிருந்தாள். அந்த சமயம் பார்த்து அவள் தங்கை சாந்தி உள்ளே நுழைந்தாள். கல்யாணம் ஆகி பத்து வருஷம் ஆகியும் தாயாகும் பாக்கியம் அவளுக்கு கிடைக்கவில்லை.

"அக்கா... கருவிலே இருக்கற சிசுவை அழிச்சுடாதே. உன் வயிற்றிலே வளர்றது என்னோட குழந்தைன்னு நினைச்சுக்கோ. குழந்தை பிறந்ததும் நானே என் சொந்தக் குழந்தை மாதிரி வளர்ப்பேன் ப்ளீஸ் அக்கா ப்ளீஸ்'' என்று கெஞ்சிய தங்கையைப் பார்க்க பாவமாக இருக்கவே, ஆஸ்பத்திரிக்குச் செல்லும் எண்ணத்தை கைவிட்டாள்.

ஆஸ்பத்திரியில் பெண் குழந்தையை பெற்றெடுத்த நேரத்தில் தங்கைக்கும் தகவல் அனுப்பினாள். தங்கை சாந்தியும் குடும்பத்தோடு வந்தாள். ஆனால் நடந்தது...

"ஆண் குழந்தையா இருந்தா தூக்கிட்டுப் போகலாம்னு நெனச்சேன். பொம்பளப் பிள்ளை எங்களுக்கு வேண்டாம்'' என்று சாந்தியின் மாமியார் பட்டென்று சொல்லி விட்டார்.

"என் மாமியாரை எதிர்த்து என்னாலே எதுவும் செய்ய முடியாதுக்கா...'' என்று சாந்தியும் சொல்லி விட்டாள். தங்கையின் பேச்சும் செய்கையும் மதுரத்தின் உள்ளத்தை துளைத்து விட்டது. அதிலிருந்து அக்கா-தங்கைக்குள் சரியான பேச்சு வார்த்தை இல்லாமல் போனது..

அடுத்த வருடமே சாந்தி உண்டானாள். என் மகளை வேண்டாம் என்று சொன்னவளுக்கு பெண் குழந்தை தான் பிறக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தாள் அக்கா மதுரம்.. அவள் வாக்கு பலித்தது. மதுரத்திற்கு பெண் குழந்தை பிறந்ததும் சொல்ல முடியாத சந்தோஷம் மதுரத்திற்கு.

கொடிக்கு காய் பாரமா? கஷ்டப்பட்டு நான்கு குழந்தைகளையும் மதுரம் படிக்க வைத்தாள். மூத்த மகள் இரண்டாவது மகள் இருவருக்கும் நல்ல இடத்தில்
திருமணம் செய்து கொடுத்தாள். பையன் என்ஜினீயருக்குப் படித்து முடிக்கும்
சமயத்தில் அவள் கணவர் சம்பந்தம் இறந்து விட்டார். தாராவுக்கும் வேலை கிடைக்க, முன்பு போல் பணக் கஷ்டம் இல்லை. ஏனோ தன்னை ஏமாற்றிய தங்கையை அவளால் மன்னிக்க முடியவில்லை.

மகள் மறுபடியும் பேச ஆரம்பிக்க மதுரம் நிகழ்காலத்திற்கு வந்தாள்.

"அம்மா...இன்னிக்கும் பெண் குழந்தை பிறந்தா கள்ளிப் பாலை கொடுத்து சாகடிக்கும் நிலமை இருக்கத்தான் செய்கிறது. மாமியார் வேண்டாம்னு சொன்னதால சித்திக்கு தைரியம் இல்லை. ஆனா நான் இந்த உலகத்துக்கு வர காரணமா இருந்தவங்களே அவங்க தானே. நீ அழிக்க நினைச்சே. ஆனா அவங்க தடுத்து நிறுத்தி எனக்கு உயிர்ப்பிச்சை கொடுத்தது அவங்க. பத்து மாதம் என்னை சுமக்காதவங்க தான். என்னை பாலூட்டி சீராட்டி வளர்க்காதவங்க தானே. அதனால அவங்களும் எனக்கு அம்மா மாதிரி தான். `உன்னை அழிக்கணும்னு நினைச்சேன். ஆனா நீ மரகதச் சிலையா இருக்கே'ன்னு அடிக்கடி நீ என்கிட்ட சொல்வே இல்லே... மணவறையில தாயாக உட்கார்ந்து என்னை தாரை வார்த்துக் கொடுக்கும் போது அவங்க மனசிலேயும் அந்த நிமிஷத்திலாவது என்னை வேண்டாம்னு மறுத்த குற்ற உணர்வு வந்து தானே போகும்!''

மகள் கூறியவற்றில் உள்ள உண்மை உறைத்தது மதுரத்திற்கு.

"சரி உன் இஷ்டப்படியே நடக்கட்டும்மா'' கசப்பு மறந்து கனிவோடு மகளைப் பார்த்தாள் அம்மா .


உயிர் கொடுத்தவள் Head410




உயிர் கொடுத்தவள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Sep 18, 2012 1:45 pm

உயிர் குடுத்தவள் ... ரொம்ப அருமையான கதை... அருமையிருக்கு
பகிர்வுக்கு நன்றி தம்பி... அன்பு மலர்




z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக