புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டத்தில் வன்முறை: போலீஸ் துப்பாக்கி சூடு-ஒருவர் பலி
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலியானார். கல்வீச்சில் போலீசார் உள்பட 30 பேர் காயம் அடைந்தனர்.
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
அணுஉலையில் எரிபொருள் நிரப்ப ஏற்பாடுகள் நடைபெற்று வருவதால் போராட்டத்தை தீவிரப்படுத்த போராட்ட குழு முடிவு செய்தது.
போராட்டத்தில் மோதல்
இதன்படி கூடங்குளம் அணுஉலையில் எரிபொருள் நிரப்புவதை நிறுத்த கோரி முற்றுகை போராட்டம் நடத்த முடிவானது. போராட்டத்துக்கு தடை விதித்த மாவட்ட நிர்வாகம் 144 தடை உத்தரவை பிறப்பித்தது. இதைத்தொடர்ந்து கூடங்குளத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் தொடங்கிய முற்றுகை போராட்டம் நேற்று 2-வது நாளாக தொடர்ந்தது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லுமாறு நேற்று காலை போலீசார் எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் நேரடி மோதல் ஏற்பட்டது.
இதன் காரணமாக போலீசார் தடியடி நடத்தி, கூட்டத்தை கலைத்தனர். கண்ணீர் புகை குண்டுகளும் வீசப்பட்டன. இந்த மோதலில் 10 போலீசார் உள்பட 30 பேர் காயம் அடைந்தனர்.
பஞ்சாயத்துக்கு தீவைப்பு
போலீசாரின் தடியடியைத் தொடர்ந்து கலைந்து சென்ற கிராம மக்கள் இடிந்தகரை கிராமம் வரை விரட்டி அடிக்கப்பட்டனர். இந்த நிலையில் கூடங்குளம் பஞ்சாயத்து அலுவலகத்துக்கு போராட்டக்காரர்கள் தீவைத்தனர். அங்கிருந்த டாஸ்மாக் கடையும் அடித்து நொறுக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து அங்கு விரைந்து வந்த போலீசார் மீண்டும் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதன் காரணமாக அப்பகுதியே போர்க்களமாக காட்சி அளித்தது. தொடர்ந்து கூடங்குளம் பகுதியில் பதற்றம் நிலவியது.
பக்கத்து மாவட்டத்துக்கும் பரவிய போராட்டம்
போராட்டக்காரர்களை போலீசார் தாக்கியதை கண்டித்து நெல்லை மாவட்டம் மட்டுமின்றி, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களின் மீனவ கிராமங்களில் போராட்டம் பரவியது. சில இடங்களில் வன்முறை சம்பவங்களும் அரங்கேறின.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகா மணப்பாடு பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கடந்த 2 நாட்களாக கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாமல் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வந்தனர்.
சோதனை சாவடிக்கு தீவைப்பு
இந்த நிலையில் கூடங்குளம் கடற்கரையில் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதை அறிந்து, மணப்பாடு மீனவர்கள் ஆத்திரம் அடைந்தனர். ஆவேசத்துடன் அவர்கள் திரண்டு மெயின்ரோடு பகுதிக்கு வந்தனர். சாலைகளில் மரக்கட்டைகள், பெரிய கற்களை போட்டு அடைத்தனர்.
குலசேகரன்பட்டினம் போலீஸ் நிலையம் சார்பில் அந்த பகுதியில் ஒரு சோதனை சாவடி அமைக்கப்பட்டு இருந்தது. அந்த சோதனை சாவடிக்கு திடீர் என்று தீ வைக்கப்பட்டது. எனவே போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். வன்முறையில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து கலைந்து செல்லும்படி போலீசார் எச்சரித்தனர். ஆனால், அவர்கள் கலைந்து போக மறுத்து போலீசார் மீதும் கல்வீசினர்.
துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி
இதைத்தொடர்ந்து போராட்டக்காரர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியது. இதில் துப்பாக்கி குண்டு பாய்ந்து மீனவர் ஒருவர் காயம் அடைந்தார். மற்றவர்கள் அங்கிருந்து சிதறி ஓடினர். காயம் அடைந்தவர் உடனடியாக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், செல்லும் வழியில் அவர் பரிதாபமாக இறந்தார்.
இறந்தவர் பெயர் அந்தோணி ஜான் (வயது 47). ஞானபிரகாசம் என்பவருடைய மகன் ஆவார். இவர் மணப்பாடு கிராமத்தில் ராஜா தெருவைச் சேர்ந்த மீனவர் ஆவார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக எடுத்துச்செல்லப்பட்டது.
போலீஸ் துப்பாக்கி சூடு காரணமாக மணப்பாடு பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.
தினத்தந்தி
கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலியானார். கல்வீச்சில் போலீசார் உள்பட 30 பேர் காயம் அடைந்தனர்.
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
அணுஉலையில் எரிபொருள் நிரப்ப ஏற்பாடுகள் நடைபெற்று வருவதால் போராட்டத்தை தீவிரப்படுத்த போராட்ட குழு முடிவு செய்தது.
போராட்டத்தில் மோதல்
இதன்படி கூடங்குளம் அணுஉலையில் எரிபொருள் நிரப்புவதை நிறுத்த கோரி முற்றுகை போராட்டம் நடத்த முடிவானது. போராட்டத்துக்கு தடை விதித்த மாவட்ட நிர்வாகம் 144 தடை உத்தரவை பிறப்பித்தது. இதைத்தொடர்ந்து கூடங்குளத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் தொடங்கிய முற்றுகை போராட்டம் நேற்று 2-வது நாளாக தொடர்ந்தது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லுமாறு நேற்று காலை போலீசார் எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் நேரடி மோதல் ஏற்பட்டது.
இதன் காரணமாக போலீசார் தடியடி நடத்தி, கூட்டத்தை கலைத்தனர். கண்ணீர் புகை குண்டுகளும் வீசப்பட்டன. இந்த மோதலில் 10 போலீசார் உள்பட 30 பேர் காயம் அடைந்தனர்.
பஞ்சாயத்துக்கு தீவைப்பு
போலீசாரின் தடியடியைத் தொடர்ந்து கலைந்து சென்ற கிராம மக்கள் இடிந்தகரை கிராமம் வரை விரட்டி அடிக்கப்பட்டனர். இந்த நிலையில் கூடங்குளம் பஞ்சாயத்து அலுவலகத்துக்கு போராட்டக்காரர்கள் தீவைத்தனர். அங்கிருந்த டாஸ்மாக் கடையும் அடித்து நொறுக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து அங்கு விரைந்து வந்த போலீசார் மீண்டும் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதன் காரணமாக அப்பகுதியே போர்க்களமாக காட்சி அளித்தது. தொடர்ந்து கூடங்குளம் பகுதியில் பதற்றம் நிலவியது.
பக்கத்து மாவட்டத்துக்கும் பரவிய போராட்டம்
போராட்டக்காரர்களை போலீசார் தாக்கியதை கண்டித்து நெல்லை மாவட்டம் மட்டுமின்றி, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களின் மீனவ கிராமங்களில் போராட்டம் பரவியது. சில இடங்களில் வன்முறை சம்பவங்களும் அரங்கேறின.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகா மணப்பாடு பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கடந்த 2 நாட்களாக கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாமல் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வந்தனர்.
சோதனை சாவடிக்கு தீவைப்பு
இந்த நிலையில் கூடங்குளம் கடற்கரையில் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதை அறிந்து, மணப்பாடு மீனவர்கள் ஆத்திரம் அடைந்தனர். ஆவேசத்துடன் அவர்கள் திரண்டு மெயின்ரோடு பகுதிக்கு வந்தனர். சாலைகளில் மரக்கட்டைகள், பெரிய கற்களை போட்டு அடைத்தனர்.
குலசேகரன்பட்டினம் போலீஸ் நிலையம் சார்பில் அந்த பகுதியில் ஒரு சோதனை சாவடி அமைக்கப்பட்டு இருந்தது. அந்த சோதனை சாவடிக்கு திடீர் என்று தீ வைக்கப்பட்டது. எனவே போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். வன்முறையில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து கலைந்து செல்லும்படி போலீசார் எச்சரித்தனர். ஆனால், அவர்கள் கலைந்து போக மறுத்து போலீசார் மீதும் கல்வீசினர்.
துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி
இதைத்தொடர்ந்து போராட்டக்காரர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியது. இதில் துப்பாக்கி குண்டு பாய்ந்து மீனவர் ஒருவர் காயம் அடைந்தார். மற்றவர்கள் அங்கிருந்து சிதறி ஓடினர். காயம் அடைந்தவர் உடனடியாக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், செல்லும் வழியில் அவர் பரிதாபமாக இறந்தார்.
இறந்தவர் பெயர் அந்தோணி ஜான் (வயது 47). ஞானபிரகாசம் என்பவருடைய மகன் ஆவார். இவர் மணப்பாடு கிராமத்தில் ராஜா தெருவைச் சேர்ந்த மீனவர் ஆவார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக எடுத்துச்செல்லப்பட்டது.
போலீஸ் துப்பாக்கி சூடு காரணமாக மணப்பாடு பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.
தினத்தந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டத்தில் வன்முறை: போலீஸ் துப்பாக்கி சூடு-ஒருவர் பலி
#845547அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டத்தில் வன்முறை: போலீஸ் துப்பாக்கி சூடு-ஒருவர் பலி
#845549 கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீது போலீஸ் தடியடி: அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்
கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதற்கு, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
விஜயகாந்த்
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கூடங்குளம் அணுமின் நிலையம் தொடங்கப்படுவதையொட்டி அப்பகுதி மக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
அங்கு எவ்வித முன்னெச்சரிக்கையும் இல்லாமல் அங்கு கூடியிருந்த தாய்மார்கள், குழந்தைகள் உள்பட அனைத்து பொதுமக்கள் மீதும் கண்ணீர் புகை வீசியும், தடியடி பிரயோகம் நடத்தியும் கூட்டத்தை கலைக்கிற நோக்கத்தோடு தாறுமாறாக தாக்கியுள்ளதாக அறிகிறேன். இது முற்றிலும் ஜனநாயக விரோத செயலாகும்.
இந்த சிக்கல் ஒரு பெரிய நெருக்கடியாக உருவாகாத வகையிலும் தீர்க்கப்பட வேண்டுமானால் முதல்-அமைச்சரே கூடங்குளம் பகுதிக்கு நேரில் சென்று அந்த மக்கள் பிரதிநிதிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண்பதுதான் ஒரே வழி என்று கருதுகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
டாக்டர் ராமதாஸ்
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
எந்த பிரச்சினையையும் வன்முறை மூலமாகவோ, ஒடுக்குமுறை மூலமாகவோ தீர்த்துவிட முடியாது என்பதை சிங்கூர் மற்றும் நந்திகிராம் நிகழ்வுகளில் இருந்து தமிழக அரசு புரிந்து கொள்ள வேண்டும். கூடங்குளம் மக்களின் உணர்வுகளை மிதிப்பதை விட்டுவிட்டு, அவர்களின் உணர்வுகளை மதித்து அரசு செயல்பட வேண்டும். கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரவுள்ள வழக்கு விசாரணை முடியும் வரை அணு உலையில் எரிபொருள் நிரப்புவதை மத்திய அரசு நிறுத்தி வைக்க வேண்டும். இது தொடர்பாக, தமிழக அமைச்சரவையை உடனடியாக கூட்டி தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று தமிழக முதல்-அமைச்சரை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
வைகோ
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கூடங்குளத்தில் தெருவில் போவோர் வருவோரையெல்லாம், போலீசார் கடுமையாகத் தாக்கி உள்ளனர். கடற்கரை நெடுகிலும் பதற்றம் ஏற்பட்டதற்கு, காவல்துறையின் நடவடிக்கைகளே முழுக்காரணம் ஆகும் என்பதால், ம.தி.மு.க. சார்பில் பலத்த கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாடு அரசு, கூடங்குளம் அணுமின் நிலையத்தை இயக்க அனுமதிக்கக்கூடாது. அப்பகுதி வாழ் மக்கள் மீது போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும், காவல்துறை திரும்பப்பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பொன்.ராதாகிருஷ்ணன்
பா.ஜ.க. மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராடக்காரர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியிருப்பது வருத்தத்திற்கும், கண்டனத்திற்கும் உரியதாகும். கூடங்குளத்தில் அணுமின் நிலையம் வருவதால், அப்பகுதி மக்களுக்கும், தமிழகத்திற்கும் ஏற்படக்கூடிய நன்மைகளை பற்றி மத்திய அரசு தெளிவு படுத்தியிருக்க வேண்டும்.
உயர்நீதிமன்றம் அணு உலை ஆபத்தில்லாதது என்றும் உலகின் பல பகுதிகளில் ஏற்பட்ட விபத்துகள் போல் இங்கு வர வாய்ப்பில்லை என்று தெளிவுபட தெரிவித்த உடன் மத்திய அரசு பணி தொடங்க காட்டிய அவசரத்தை மக்களின் பயத்தைப் போக்குவதற்கும், பொது மக்களுக்கு புரியவைப்பதற்கு மேற்கொண்டிருக்க வேண்டும். மக்களின் உணர்வுகளைக் கொஞ்சம் கூட புரிந்து கொள்ளாமல் சுமூகமாக நடந்து முடித்திருக்க வேண்டிய தொடக்கம், தற்போது கலவரமாக மாறியிருப்பதற்கு மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
திருமாவளவன்
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அணு உலைக்கு எதிராக அமைதியான முறையில் போராடி வரும் மக்கள் மீது காவல்துறையினரின் அடக்குமுறையைக் கைவிட்டு அணுஉலையில் எரிபொருள் நிரப்புவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், மகத்தான பல மாற்றங்கள் மக்களின் தீவிரமான போராட்டங்களாலேயே சாத்தியமாகியிருக்கின்றன என்று வரலாறு சொல்லும் செய்தியை புறந்தள்ளிவிடாமல் அரசு உடனடியாக போராட்டக்குழுவினருடன் பேச்சு வார்த்தை நடத்திட முன்வர வேண்டும். குறிப்பாக, போராட்டக் குழு தலைவர் உதயகுமாருடன் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்றும் விடுதலை சிறுத்தைகள் கேட்டுக்கொள்கிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பழ.நெடுமாறன்
மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் அமைப்பாளர் பழ.நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கூடங்குளத்தில் ஓராண்டு காலத்திற்கு மேலாக அந்த மக்கள் அணுமின் நிலையத்திற்கு எதிரான போராட்டத்தை நடத்தி வந்தார்கள். எந்த ஒரு கட்டத்திலும் ஒரு சிறு அளவு வன்முறைக்குக்கூட இடந்தராமல் அவர்கள் கட்டுப்பாடோடும், அமைதியோடும் அறவழியில் அந்தப் போராட்டத்தை நடத்தியிருக்கிறார்கள்.
அமைதியாக போராடிய மக்கள் மீது மிகக் கொடுமையான முறையில் காவல்துறை தாக்குதல் நடத்தியிருப்பதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். மக்களுக்கு அரசியல் சட்டம் அளித்துள்ள ஜனநாயக உரிமைகளுக்கு அதிகாரிகளின் இந்த நடவடிக்கை எதிரானதாகும். அறவழியில் போராட்டம் நடத்துவதற்கு சட்டம் அங்கீகரித்துள்ளது. அப்படி இருந்தும் காவல்துறை மேற்கொண்ட இந்த நடவடிக்கைக்கு எதிராக அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்று திரள வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
சீமான்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பாக தங்கள் அச்சத்தை மத்திய, மாநில அரசுகள் போக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் அடிப்படை கோரிக்கை. அந்த நியாயமான கோரிக்கையை கூட நிறைவேற்ற மறுத்தது மட்டுமின்றி அணு உலையை இயக்க முற்பட்டது தவறான நடவடிக்கை.
இந்த நிலையில், அமைதியான வழியில் மறியல் போராட்டம் நடத்திய அம்மக்கள் மீது பல்லாயிரக் கணக்கில் காவல்துறையினரையும், அதிரடிப்படையினரையும் ஏவிவிட்டு அவர்கள் மீது தடியடி நடத்தி கண்ணீர்புகை குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியிருப்பது கண்டனத்திற்குரியதாகும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மனிதநேய மக்கள் கட்சி
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கூடங்குளத்தில் தற்போது போராட்டத்தை ஒடுக்கும் விதமாக போராட்டக்காரர்கள் மீது தடியடி பிரயோகிக்கப்பட்டு கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டுள்ளன. குழந்தைகள், பெண்கள், முதியோர்கள் உள்பட அறவழியில் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கக்கூடிய நிலையில் போலீசாரின் இந்த நடவடிக்கை, இலங்கையின் முள்ளிவாய்க்கால் படுகொலைகள் சம்பவத்தையும், தாமிரபரணி படுகொலைகள் சம்பவத்தையும் நினைவுபடுத்துகிறது.
தமிழக அரசின் இந்த வன்முறையை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. உடனடியாக போலீஸ் வன்முறையை தமிழக அரசு கைவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
வேல்முருகன்
தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக கடந்த ஓராண்டு காலமாக அமைதி வழியில் போராடி வந்த பொதுமக்கள் மீது தடியடி நடத்தி, கண்ணீர் புகை குண்டு வீசி, துப்பாக்கி சூட்டை காவல்துறை நடத்தியிருப்பது கண்டனத்திற்குரியது.
அணுஉலைக்கு எதிராக போராடுவோரின் அச்சத்தை நியாயமான வகையில் போக்க வேண்டுமே தவிர இப்படியான அடக்குமுறைகளின் மூலம் மக்கள் போராட்டங்களை நசுக்கக் கூடாது. கூடங்குளம் மக்களின் அச்சத்தை போக்கும் நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதேபோல், புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி ஆகியோரும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதற்கு, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
விஜயகாந்த்
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கூடங்குளம் அணுமின் நிலையம் தொடங்கப்படுவதையொட்டி அப்பகுதி மக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
அங்கு எவ்வித முன்னெச்சரிக்கையும் இல்லாமல் அங்கு கூடியிருந்த தாய்மார்கள், குழந்தைகள் உள்பட அனைத்து பொதுமக்கள் மீதும் கண்ணீர் புகை வீசியும், தடியடி பிரயோகம் நடத்தியும் கூட்டத்தை கலைக்கிற நோக்கத்தோடு தாறுமாறாக தாக்கியுள்ளதாக அறிகிறேன். இது முற்றிலும் ஜனநாயக விரோத செயலாகும்.
இந்த சிக்கல் ஒரு பெரிய நெருக்கடியாக உருவாகாத வகையிலும் தீர்க்கப்பட வேண்டுமானால் முதல்-அமைச்சரே கூடங்குளம் பகுதிக்கு நேரில் சென்று அந்த மக்கள் பிரதிநிதிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண்பதுதான் ஒரே வழி என்று கருதுகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
டாக்டர் ராமதாஸ்
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
எந்த பிரச்சினையையும் வன்முறை மூலமாகவோ, ஒடுக்குமுறை மூலமாகவோ தீர்த்துவிட முடியாது என்பதை சிங்கூர் மற்றும் நந்திகிராம் நிகழ்வுகளில் இருந்து தமிழக அரசு புரிந்து கொள்ள வேண்டும். கூடங்குளம் மக்களின் உணர்வுகளை மிதிப்பதை விட்டுவிட்டு, அவர்களின் உணர்வுகளை மதித்து அரசு செயல்பட வேண்டும். கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரவுள்ள வழக்கு விசாரணை முடியும் வரை அணு உலையில் எரிபொருள் நிரப்புவதை மத்திய அரசு நிறுத்தி வைக்க வேண்டும். இது தொடர்பாக, தமிழக அமைச்சரவையை உடனடியாக கூட்டி தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று தமிழக முதல்-அமைச்சரை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
வைகோ
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கூடங்குளத்தில் தெருவில் போவோர் வருவோரையெல்லாம், போலீசார் கடுமையாகத் தாக்கி உள்ளனர். கடற்கரை நெடுகிலும் பதற்றம் ஏற்பட்டதற்கு, காவல்துறையின் நடவடிக்கைகளே முழுக்காரணம் ஆகும் என்பதால், ம.தி.மு.க. சார்பில் பலத்த கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாடு அரசு, கூடங்குளம் அணுமின் நிலையத்தை இயக்க அனுமதிக்கக்கூடாது. அப்பகுதி வாழ் மக்கள் மீது போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும், காவல்துறை திரும்பப்பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பொன்.ராதாகிருஷ்ணன்
பா.ஜ.க. மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராடக்காரர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியிருப்பது வருத்தத்திற்கும், கண்டனத்திற்கும் உரியதாகும். கூடங்குளத்தில் அணுமின் நிலையம் வருவதால், அப்பகுதி மக்களுக்கும், தமிழகத்திற்கும் ஏற்படக்கூடிய நன்மைகளை பற்றி மத்திய அரசு தெளிவு படுத்தியிருக்க வேண்டும்.
உயர்நீதிமன்றம் அணு உலை ஆபத்தில்லாதது என்றும் உலகின் பல பகுதிகளில் ஏற்பட்ட விபத்துகள் போல் இங்கு வர வாய்ப்பில்லை என்று தெளிவுபட தெரிவித்த உடன் மத்திய அரசு பணி தொடங்க காட்டிய அவசரத்தை மக்களின் பயத்தைப் போக்குவதற்கும், பொது மக்களுக்கு புரியவைப்பதற்கு மேற்கொண்டிருக்க வேண்டும். மக்களின் உணர்வுகளைக் கொஞ்சம் கூட புரிந்து கொள்ளாமல் சுமூகமாக நடந்து முடித்திருக்க வேண்டிய தொடக்கம், தற்போது கலவரமாக மாறியிருப்பதற்கு மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
திருமாவளவன்
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அணு உலைக்கு எதிராக அமைதியான முறையில் போராடி வரும் மக்கள் மீது காவல்துறையினரின் அடக்குமுறையைக் கைவிட்டு அணுஉலையில் எரிபொருள் நிரப்புவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், மகத்தான பல மாற்றங்கள் மக்களின் தீவிரமான போராட்டங்களாலேயே சாத்தியமாகியிருக்கின்றன என்று வரலாறு சொல்லும் செய்தியை புறந்தள்ளிவிடாமல் அரசு உடனடியாக போராட்டக்குழுவினருடன் பேச்சு வார்த்தை நடத்திட முன்வர வேண்டும். குறிப்பாக, போராட்டக் குழு தலைவர் உதயகுமாருடன் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்றும் விடுதலை சிறுத்தைகள் கேட்டுக்கொள்கிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பழ.நெடுமாறன்
மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் அமைப்பாளர் பழ.நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கூடங்குளத்தில் ஓராண்டு காலத்திற்கு மேலாக அந்த மக்கள் அணுமின் நிலையத்திற்கு எதிரான போராட்டத்தை நடத்தி வந்தார்கள். எந்த ஒரு கட்டத்திலும் ஒரு சிறு அளவு வன்முறைக்குக்கூட இடந்தராமல் அவர்கள் கட்டுப்பாடோடும், அமைதியோடும் அறவழியில் அந்தப் போராட்டத்தை நடத்தியிருக்கிறார்கள்.
அமைதியாக போராடிய மக்கள் மீது மிகக் கொடுமையான முறையில் காவல்துறை தாக்குதல் நடத்தியிருப்பதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். மக்களுக்கு அரசியல் சட்டம் அளித்துள்ள ஜனநாயக உரிமைகளுக்கு அதிகாரிகளின் இந்த நடவடிக்கை எதிரானதாகும். அறவழியில் போராட்டம் நடத்துவதற்கு சட்டம் அங்கீகரித்துள்ளது. அப்படி இருந்தும் காவல்துறை மேற்கொண்ட இந்த நடவடிக்கைக்கு எதிராக அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்று திரள வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
சீமான்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பாக தங்கள் அச்சத்தை மத்திய, மாநில அரசுகள் போக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் அடிப்படை கோரிக்கை. அந்த நியாயமான கோரிக்கையை கூட நிறைவேற்ற மறுத்தது மட்டுமின்றி அணு உலையை இயக்க முற்பட்டது தவறான நடவடிக்கை.
இந்த நிலையில், அமைதியான வழியில் மறியல் போராட்டம் நடத்திய அம்மக்கள் மீது பல்லாயிரக் கணக்கில் காவல்துறையினரையும், அதிரடிப்படையினரையும் ஏவிவிட்டு அவர்கள் மீது தடியடி நடத்தி கண்ணீர்புகை குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியிருப்பது கண்டனத்திற்குரியதாகும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மனிதநேய மக்கள் கட்சி
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கூடங்குளத்தில் தற்போது போராட்டத்தை ஒடுக்கும் விதமாக போராட்டக்காரர்கள் மீது தடியடி பிரயோகிக்கப்பட்டு கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டுள்ளன. குழந்தைகள், பெண்கள், முதியோர்கள் உள்பட அறவழியில் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கக்கூடிய நிலையில் போலீசாரின் இந்த நடவடிக்கை, இலங்கையின் முள்ளிவாய்க்கால் படுகொலைகள் சம்பவத்தையும், தாமிரபரணி படுகொலைகள் சம்பவத்தையும் நினைவுபடுத்துகிறது.
தமிழக அரசின் இந்த வன்முறையை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. உடனடியாக போலீஸ் வன்முறையை தமிழக அரசு கைவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
வேல்முருகன்
தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக கடந்த ஓராண்டு காலமாக அமைதி வழியில் போராடி வந்த பொதுமக்கள் மீது தடியடி நடத்தி, கண்ணீர் புகை குண்டு வீசி, துப்பாக்கி சூட்டை காவல்துறை நடத்தியிருப்பது கண்டனத்திற்குரியது.
அணுஉலைக்கு எதிராக போராடுவோரின் அச்சத்தை நியாயமான வகையில் போக்க வேண்டுமே தவிர இப்படியான அடக்குமுறைகளின் மூலம் மக்கள் போராட்டங்களை நசுக்கக் கூடாது. கூடங்குளம் மக்களின் அச்சத்தை போக்கும் நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதேபோல், புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி ஆகியோரும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டத்தில் வன்முறை: போலீஸ் துப்பாக்கி சூடு-ஒருவர் பலி
#845550அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டத்தில் வன்முறை: போலீஸ் துப்பாக்கி சூடு-ஒருவர் பலி
#845552இடிந்தகரை ஆலயத்தில் கிராம மக்கள் புதிய போராட்டம் 48 மணி நேர தொடர் உண்ணாவிரதத்தை தொடங்கினர்
கூடங்குளம் விவகாரத்தில் போலீசாரின் நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்து இடிந்தகரை ஆலயத்தில், அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் 48 மணி நேர உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர்.
ரோட்டை துண்டித்து பள்ளம்
கூடங்குளம் அணுமின் நிலைய முற்றுகை காரணமாக கூடங்குளம், இடிந்தகரையில் நேற்று மோதல் வெடித்தது. இடிந்தகரை கிராமத்தில் போலீசார் புகுந்து போராட்ட குழுவினரை கைது செய்ய தேடுதல் வேட்டை நடத்தினர். கூடங்குளத்திலும் வன்முறை சம்பவங்கள் அரங்கேறியதால், இடிந்தகரையில் நின்ற போலீசார் அங்கு உடனடியாக விரைந்து வந்தனர்.
இடிந்தகரை கிராமத்துக்குள் மீண்டும் போலீசார் வராதவாறு அந்த ஊருக்கு செல்லும் சாலைகளில் போராட்டக்காரர்கள் தடுப்புகள் ஏற்படுத்தினர். சாலைகளின் குறுக்கே பொக்லைன் மூலம் குழிகள் தோண்டி போலீஸ் வாகனங்கள் உள்ளே வர முடியாத அளவுக்கு செய்தனர்.
புதிய போராட்டம்
நேற்று மாலை 5.30 மணி அளவில் ஏற்கனவே போராட்டம் நடைபெற்ற லூர்து அன்னை ஆலயத்தில் மணி அடிக்கப்பட்டது. உடனே சுமார் 500 பேர் வரை தேவாலயத்தில் திரண்டனர். போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், புஷ்பராயன் ஆகியோர் வரவில்லை.
போராட்ட குழுவைச் சேர்ந்த மைபா ஜேசுராஜ் தலைமையில் ஆலயத்தில் அவர்கள் புதிய உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். 48 மணி நேரம் தொடர்ந்து உண்ணாவிரதம் இருக்கப்போவதாகவும் அறிவித்தனர்.
பின்னர் மைபா ஜேசுராஜ் பேசியதாவது:-
கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிரான போராட்டம் எந்த சூழ்நிலையிலும் கைவிடப்படமாட்டாது. நம்மை ஒடுக்க போலீசார் முயற்சிக்கின்றனர். அடக்குமுறைகளுக்கு அஞ்சிவிடக்கூடாது. எந்த தாக்குதலையும் எதிர் கொண்டு, துணிந்து செயல்பட வேண்டும். போராட்டத்தில் ஈடுபட்ட 7 பேரை போலீசார் பிடித்துச் சென்றுவிட்டனர். அவர்களை 24 மணி நேரத்தில் விடுவிக்க வேண்டும்.
அணு உலைக்கு எதிரான நமது போராட்டம் இடிந்தகரை ஆலயத்தில் தொடர்ந்து நடைபெறும். 48 மணி நேர இந்த உண்ணாவிரதத்தில் மக்கள் திரளாக வந்து கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு மைபா ஜேசுராஜ் பேசினர்.
இதற்கிடையே இடிந்தகரை ஆலயத்துக்குள் புகுந்த போலீசார் அங்கிருந்த மாதா சொரூபத்தை உடைத்து விட்டதாகவும், ஆலய வளாகத்தை அசுத்தம் செய்ததாகவும் கிராம மக்கள் குற்றம்சாட்டினர்.
கூடங்குளம் விவகாரத்தில் போலீசாரின் நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்து இடிந்தகரை ஆலயத்தில், அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் 48 மணி நேர உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர்.
ரோட்டை துண்டித்து பள்ளம்
கூடங்குளம் அணுமின் நிலைய முற்றுகை காரணமாக கூடங்குளம், இடிந்தகரையில் நேற்று மோதல் வெடித்தது. இடிந்தகரை கிராமத்தில் போலீசார் புகுந்து போராட்ட குழுவினரை கைது செய்ய தேடுதல் வேட்டை நடத்தினர். கூடங்குளத்திலும் வன்முறை சம்பவங்கள் அரங்கேறியதால், இடிந்தகரையில் நின்ற போலீசார் அங்கு உடனடியாக விரைந்து வந்தனர்.
இடிந்தகரை கிராமத்துக்குள் மீண்டும் போலீசார் வராதவாறு அந்த ஊருக்கு செல்லும் சாலைகளில் போராட்டக்காரர்கள் தடுப்புகள் ஏற்படுத்தினர். சாலைகளின் குறுக்கே பொக்லைன் மூலம் குழிகள் தோண்டி போலீஸ் வாகனங்கள் உள்ளே வர முடியாத அளவுக்கு செய்தனர்.
புதிய போராட்டம்
நேற்று மாலை 5.30 மணி அளவில் ஏற்கனவே போராட்டம் நடைபெற்ற லூர்து அன்னை ஆலயத்தில் மணி அடிக்கப்பட்டது. உடனே சுமார் 500 பேர் வரை தேவாலயத்தில் திரண்டனர். போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், புஷ்பராயன் ஆகியோர் வரவில்லை.
போராட்ட குழுவைச் சேர்ந்த மைபா ஜேசுராஜ் தலைமையில் ஆலயத்தில் அவர்கள் புதிய உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். 48 மணி நேரம் தொடர்ந்து உண்ணாவிரதம் இருக்கப்போவதாகவும் அறிவித்தனர்.
பின்னர் மைபா ஜேசுராஜ் பேசியதாவது:-
கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிரான போராட்டம் எந்த சூழ்நிலையிலும் கைவிடப்படமாட்டாது. நம்மை ஒடுக்க போலீசார் முயற்சிக்கின்றனர். அடக்குமுறைகளுக்கு அஞ்சிவிடக்கூடாது. எந்த தாக்குதலையும் எதிர் கொண்டு, துணிந்து செயல்பட வேண்டும். போராட்டத்தில் ஈடுபட்ட 7 பேரை போலீசார் பிடித்துச் சென்றுவிட்டனர். அவர்களை 24 மணி நேரத்தில் விடுவிக்க வேண்டும்.
அணு உலைக்கு எதிரான நமது போராட்டம் இடிந்தகரை ஆலயத்தில் தொடர்ந்து நடைபெறும். 48 மணி நேர இந்த உண்ணாவிரதத்தில் மக்கள் திரளாக வந்து கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு மைபா ஜேசுராஜ் பேசினர்.
இதற்கிடையே இடிந்தகரை ஆலயத்துக்குள் புகுந்த போலீசார் அங்கிருந்த மாதா சொரூபத்தை உடைத்து விட்டதாகவும், ஆலய வளாகத்தை அசுத்தம் செய்ததாகவும் கிராம மக்கள் குற்றம்சாட்டினர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டத்தில் வன்முறை: போலீஸ் துப்பாக்கி சூடு-ஒருவர் பலி
#845553போராட்ட ஒருங்கிணைப்பாளர்களை போலீஸ் தேடுகிறது
கூடங்குளம் அணுஉலை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அணுஉலை எதிர்ப்பு குழுவைச் சேர்ந்த பொதுமக்களை நேற்று போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைகுண்டு வீசியும், விரட்டி அடித்தனர்.
அப்போது, போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் எஸ்.பி.உதயகுமார், எம்.புஷ்பராயன், எம்.பி.ஜேசுராஜன் மற்றும் ஜெயகுமார் ஆகியோர் போலீசின் கைகளில் சிக்காமல் தப்பிச்சென்று விட்டனர். அவர்களை தேடி வருவதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.
கூடங்குளம் அணுஉலை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அணுஉலை எதிர்ப்பு குழுவைச் சேர்ந்த பொதுமக்களை நேற்று போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைகுண்டு வீசியும், விரட்டி அடித்தனர்.
அப்போது, போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் எஸ்.பி.உதயகுமார், எம்.புஷ்பராயன், எம்.பி.ஜேசுராஜன் மற்றும் ஜெயகுமார் ஆகியோர் போலீசின் கைகளில் சிக்காமல் தப்பிச்சென்று விட்டனர். அவர்களை தேடி வருவதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டத்தில் வன்முறை: போலீஸ் துப்பாக்கி சூடு-ஒருவர் பலி
#845554 ஐ.ஜி. தலைமையில் மேலும் 1,000 போலீசார் கூடங்குளம் விரைந்தனர். மத்திய அதிவிரைவு படையினர் 200 பேரும் சென்றனர்
கூடங்குளம் போராட்ட களத்துக்கு சென்னை மற்றும் இதர மாவட்டங்களில் இருந்து கூடுதலாக 1,000 போலீசார் நேற்று இரவோடு இரவாக அனுப்பி வைக்கப்பட்டனர். மத்திய அதிவரைவு படையினர் 200 பேரும் கோவையில் இருந்து கூடங்குளம் சென்றனர்.
கூடுதல் போலீஸ் படை
இதுதொடர்பாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் நேற்று இரவு கூறியதாவது:-
கூடங்குளத்தில் தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது. சிறிய சிறிய அளவில் வன்முறை சம்பவங்கள் நடக்கின்றன. அவை கட்டுப்படுத்தப்படும். சட்டம்-ஒழுங்கு கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. ஜார்ஜ் கூடங்குளத்தில் ஏற்கனவே முகாமிட்டுள்ளார். தென் மண்டல ஐ.ஜி. ராஜேஸ்தாஸ், நெல்லை சரக டி.ஐ.ஜி. வரதராஜு மற்றும் 3 மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் சுமார் 3 ஆயிரம் போலீசார் கூடங்குளத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணப்பன் தலைமையில் சென்னை உள்பட மற்ற மாவட்டங்களில் இருந்து சிறப்பு காவல்படை, ஆயுதப்படை, கமாண்டா படை போலீசார் 1,000 பேர் கூடங்குளம் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
டி.ஐ.ஜி.க்கள்- சூப்பிரண்டுகள்
இவர்களோடு டி.ஐ.ஜி.க்கள் ஜான்நிக்கல்சன், பெரியய்யா, அருண் மற்றும் சென்னை நகர துணை போலீஸ் கமிஷனர்கள் பிரேம்ஆனந்த்சின்கா, மகேஷ்வரன் மற்றும் 6 மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளும் கூடங்குளம் சென்றுள்ளனர்.
மத்திய அதிவிரைவு படைப்பிரிவைச் சேர்ந்த 200 பேர் கோவையில் இருந்து கூடங்குளம் அனுப்பி வைக்கப்பட்டனர். ஏற்கனவே கூடங்குளத்தில் 100 அதிவிரைவு படைவீரர்கள் முகாமிட்டுள்ளனர். தண்ணீரை பீச்சி அடிக்கும் வன்முறை தடுப்பு வாகனங்களும் மற்ற மாவட்டங்களில் இருந்து கூடங்குளம் சென்றுள்ளன.
இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்
நேற்று மாலை டி.ஜி.பி. ராமானுஜம், சென்னையில் அவரது அலுவலகத்தில், கூடங்குளம் பிரச்சினை குறித்து உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
கூடங்குளம் போராட்ட களத்துக்கு சென்னை மற்றும் இதர மாவட்டங்களில் இருந்து கூடுதலாக 1,000 போலீசார் நேற்று இரவோடு இரவாக அனுப்பி வைக்கப்பட்டனர். மத்திய அதிவரைவு படையினர் 200 பேரும் கோவையில் இருந்து கூடங்குளம் சென்றனர்.
கூடுதல் போலீஸ் படை
இதுதொடர்பாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் நேற்று இரவு கூறியதாவது:-
கூடங்குளத்தில் தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது. சிறிய சிறிய அளவில் வன்முறை சம்பவங்கள் நடக்கின்றன. அவை கட்டுப்படுத்தப்படும். சட்டம்-ஒழுங்கு கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. ஜார்ஜ் கூடங்குளத்தில் ஏற்கனவே முகாமிட்டுள்ளார். தென் மண்டல ஐ.ஜி. ராஜேஸ்தாஸ், நெல்லை சரக டி.ஐ.ஜி. வரதராஜு மற்றும் 3 மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் சுமார் 3 ஆயிரம் போலீசார் கூடங்குளத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணப்பன் தலைமையில் சென்னை உள்பட மற்ற மாவட்டங்களில் இருந்து சிறப்பு காவல்படை, ஆயுதப்படை, கமாண்டா படை போலீசார் 1,000 பேர் கூடங்குளம் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
டி.ஐ.ஜி.க்கள்- சூப்பிரண்டுகள்
இவர்களோடு டி.ஐ.ஜி.க்கள் ஜான்நிக்கல்சன், பெரியய்யா, அருண் மற்றும் சென்னை நகர துணை போலீஸ் கமிஷனர்கள் பிரேம்ஆனந்த்சின்கா, மகேஷ்வரன் மற்றும் 6 மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளும் கூடங்குளம் சென்றுள்ளனர்.
மத்திய அதிவிரைவு படைப்பிரிவைச் சேர்ந்த 200 பேர் கோவையில் இருந்து கூடங்குளம் அனுப்பி வைக்கப்பட்டனர். ஏற்கனவே கூடங்குளத்தில் 100 அதிவிரைவு படைவீரர்கள் முகாமிட்டுள்ளனர். தண்ணீரை பீச்சி அடிக்கும் வன்முறை தடுப்பு வாகனங்களும் மற்ற மாவட்டங்களில் இருந்து கூடங்குளம் சென்றுள்ளன.
இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்
நேற்று மாலை டி.ஜி.பி. ராமானுஜம், சென்னையில் அவரது அலுவலகத்தில், கூடங்குளம் பிரச்சினை குறித்து உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டத்தில் வன்முறை: போலீஸ் துப்பாக்கி சூடு-ஒருவர் பலி
#845555எங்கள் போராட்டம் தொடரும் உதயகுமார் அறிவிப்பு
எங்கள் போராட்டம் தொடரும் என்று போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் கூறினார்.
உதயகுமார் பேட்டி
கூடங்குளம் அணுமின் நிலையம் அருகே கடற்கரையில் முற்றுகை போராட்டம் நடத்திய மக்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். இது குறித்து போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் கூறியதாவது:-
கூடங்குளம் அணு மின் நிலையம் வேண்டாம் என்று ஒரு ஆண்டுக்கும் மேலாக மக்கள் போராடி வருகின்றனர். இத்தனை நாள் நாங்கள் நடத்திய போராட்டங்கள் எந்த வன்முறை பாதைக்கும் செல்லாமல், அமைதி அறவழியில் நடந்தது. இதுவரை எங்கள் போராட்டத்தை வேடிக்கை பார்த்த தமிழக அரசு, தற்போது கோர முகத்தை காட்டி இருக்கிறது.
நிராயுதபாணியாக முற்றுகை போராட்டத்துக்கு வந்த மக்கள் மீது போலீசார் வன்முறையை கட்டவிழ்த்து தாக்கி உள்ளனர். கூடங்குளம் பகுதி மக்களை அடக்கி ஒடுக்க நினைக்கின்றனர். பெண்கள், அப்பாவி குழந்தைகள் போராட்டத்தில் பங்கேற்று இருக்கிறார்கள் என்பது தெரிந்தும், இந்த தாக்குதல் நடந்திருக்கிறது. தங்களை பாதுகாத்துக் கொள்ள கடலில் நிறைய பேர் பாய்ந்தனர்.
போராட்டம் தொடரும்
போராட்டம் நடத்துகிறவர்களை அழைத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி இருக்க வேண்டும். ஆனால், யாரும் எங்களை பேச்சுக்கு அழைக்கவில்லை. கூட்டத்தினர் கலைந்து போக வாய்ப்பு அளித்து இருக்க வேண்டும். அதுவும் நடக்கவில்லை.
அடக்குமுறையின் மூலம் எங்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர முடியாது. எங்கள் போராட்டம் தொடரும். தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் எதிராக தொடர்ந்து போராடுவோம்.
இவ்வாறு உதயகுமார் கூறினார்.
எங்கள் போராட்டம் தொடரும் என்று போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் கூறினார்.
உதயகுமார் பேட்டி
கூடங்குளம் அணுமின் நிலையம் அருகே கடற்கரையில் முற்றுகை போராட்டம் நடத்திய மக்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். இது குறித்து போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் கூறியதாவது:-
கூடங்குளம் அணு மின் நிலையம் வேண்டாம் என்று ஒரு ஆண்டுக்கும் மேலாக மக்கள் போராடி வருகின்றனர். இத்தனை நாள் நாங்கள் நடத்திய போராட்டங்கள் எந்த வன்முறை பாதைக்கும் செல்லாமல், அமைதி அறவழியில் நடந்தது. இதுவரை எங்கள் போராட்டத்தை வேடிக்கை பார்த்த தமிழக அரசு, தற்போது கோர முகத்தை காட்டி இருக்கிறது.
நிராயுதபாணியாக முற்றுகை போராட்டத்துக்கு வந்த மக்கள் மீது போலீசார் வன்முறையை கட்டவிழ்த்து தாக்கி உள்ளனர். கூடங்குளம் பகுதி மக்களை அடக்கி ஒடுக்க நினைக்கின்றனர். பெண்கள், அப்பாவி குழந்தைகள் போராட்டத்தில் பங்கேற்று இருக்கிறார்கள் என்பது தெரிந்தும், இந்த தாக்குதல் நடந்திருக்கிறது. தங்களை பாதுகாத்துக் கொள்ள கடலில் நிறைய பேர் பாய்ந்தனர்.
போராட்டம் தொடரும்
போராட்டம் நடத்துகிறவர்களை அழைத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி இருக்க வேண்டும். ஆனால், யாரும் எங்களை பேச்சுக்கு அழைக்கவில்லை. கூட்டத்தினர் கலைந்து போக வாய்ப்பு அளித்து இருக்க வேண்டும். அதுவும் நடக்கவில்லை.
அடக்குமுறையின் மூலம் எங்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர முடியாது. எங்கள் போராட்டம் தொடரும். தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் எதிராக தொடர்ந்து போராடுவோம்.
இவ்வாறு உதயகுமார் கூறினார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டத்தில் வன்முறை: போலீஸ் துப்பாக்கி சூடு-ஒருவர் பலி
#845557போராட்டக்காரர்கள் தாக்கியதில் காயம்: 20 பெண் போலீசார் ஆஸ்பத்திரியில் அனுமதி
கூடங்குளத்தில் போராட்டக்காரர்களுடன் நடந்த மோதலில் கோவை அதிரடிப்படையை சேர்ந்த போலீஸ்காரர் பிரதீஸ், நெல்லை மாவட்ட தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் மற்றும் 20 பெண் போலீசாரும் காயம் அடைந்துள்ளனர்.
அவர்கள் அனைவரும் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கூடங்குளத்தில் போராட்டக்காரர்களுடன் நடந்த மோதலில் கோவை அதிரடிப்படையை சேர்ந்த போலீஸ்காரர் பிரதீஸ், நெல்லை மாவட்ட தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் மற்றும் 20 பெண் போலீசாரும் காயம் அடைந்துள்ளனர்.
அவர்கள் அனைவரும் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டத்தில் வன்முறை: போலீஸ் துப்பாக்கி சூடு-ஒருவர் பலி
#845558 கூடங்குளம் சம்பவத்தை கண்டித்து கோவையில் மறியல்; உருவப்படங்கள் எரிப்பு: 71 பேர் கைது
கூடங்குளம் சம்பவத்தை கண்டித்து கோவையில் சட்டக்கல்லூரி மாணவர்கள் அவினாசி ரோடு மேம்பாலத்தில் திடீர் மறியல் போராட்டத்தை நடத்தினார்கள். போலீசார் அங்கு குவிக்கப்பட்டதும் சட்டக்கல்லூரி மாணவர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு திடீர் மறியல் போராட்டம் நடத்தினார்கள். பிரதமர், முதல்-அமைச்சர், மத்திய மந்திரி நாராயணசாமி ஆகியோரின் உருவப்படங்களை தீவைத்து எரித்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் 13 பேரை கைது செய்தனர்.
பெரியார் திராவிடர் கழகம் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் காந்திபுரம் சிக்னல் பகுதியில் மறியல் போராட்டம் நடத்திய 43 பேர் கைது செய்யப்பட்டனர். நாம் தமிழர் கட்சி சார்பில் ஜி.பி.சிக்னல் பகுதியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 15 பேர் கைது செய்யப்பட்டனர். நேற்று நடந்த மறியல் போராட்டத்தில் மொத்தம் 71 பேர் கைது செய்யப்பட்டனர்.
கூடங்குளம் சம்பவத்தை கண்டித்து கோவையில் சட்டக்கல்லூரி மாணவர்கள் அவினாசி ரோடு மேம்பாலத்தில் திடீர் மறியல் போராட்டத்தை நடத்தினார்கள். போலீசார் அங்கு குவிக்கப்பட்டதும் சட்டக்கல்லூரி மாணவர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு திடீர் மறியல் போராட்டம் நடத்தினார்கள். பிரதமர், முதல்-அமைச்சர், மத்திய மந்திரி நாராயணசாமி ஆகியோரின் உருவப்படங்களை தீவைத்து எரித்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் 13 பேரை கைது செய்தனர்.
பெரியார் திராவிடர் கழகம் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் காந்திபுரம் சிக்னல் பகுதியில் மறியல் போராட்டம் நடத்திய 43 பேர் கைது செய்யப்பட்டனர். நாம் தமிழர் கட்சி சார்பில் ஜி.பி.சிக்னல் பகுதியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 15 பேர் கைது செய்யப்பட்டனர். நேற்று நடந்த மறியல் போராட்டத்தில் மொத்தம் 71 பேர் கைது செய்யப்பட்டனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டத்தில் வன்முறை: போலீஸ் துப்பாக்கி சூடு-ஒருவர் பலி
#845563சிவா wrote: கூடங்குளம் சம்பவத்தை கண்டித்து கோவையில் மறியல்; உருவப்படங்கள் எரிப்பு: 71 பேர் கைது
கூடங்குளம் சம்பவத்தை கண்டித்து கோவையில் சட்டக்கல்லூரி மாணவர்கள் அவினாசி ரோடு மேம்பாலத்தில் திடீர் மறியல் போராட்டத்தை நடத்தினார்கள். போலீசார் அங்கு குவிக்கப்பட்டதும் சட்டக்கல்லூரி மாணவர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு திடீர் மறியல் போராட்டம் நடத்தினார்கள். பிரதமர், முதல்-அமைச்சர், மத்திய மந்திரி நாராயணசாமி ஆகியோரின் உருவப்படங்களை தீவைத்து எரித்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் 13 பேரை கைது செய்தனர்.
பெரியார் திராவிடர் கழகம் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் காந்திபுரம் சிக்னல் பகுதியில் மறியல் போராட்டம் நடத்திய 43 பேர் கைது செய்யப்பட்டனர். நாம் தமிழர் கட்சி சார்பில் ஜி.பி.சிக்னல் பகுதியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 15 பேர் கைது செய்யப்பட்டனர். நேற்று நடந்த மறியல் போராட்டத்தில் மொத்தம் 71 பேர் கைது செய்யப்பட்டனர்.
கூடங்குளம்ன்னு ஊர் பேரு இருக்குரதுனாலத்தான் கூடாதுன்னு சொல்லுறதுக்கு எல்லோரு கூடுறான்களோ
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
» சத்தீஸ்காரில் துப்பாக்கி சூடு:; 4 மாவோயிஸ்டுகள் கொலை; ஒரு போலீஸ் அதிகாரி பலி
» கூடங்குளம் அணுமின் நிலைய விஞ்ஞானிகள் இன்று பணிக்கு திரும்புகிறார்கள்
» முல்லைப்பெரியாறு, கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சினை - ஜெயலலிதா அவசர ஆலோசனை
» போர்விமானம் தாக்கினாலும் கூடங்குளம் அணுமின்நிலையம் பாதிக்கப்படாது - அணுமின் நிலைய இயக்குனர்
» தெலுங்கானா : மாணவர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு
» கூடங்குளம் அணுமின் நிலைய விஞ்ஞானிகள் இன்று பணிக்கு திரும்புகிறார்கள்
» முல்லைப்பெரியாறு, கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சினை - ஜெயலலிதா அவசர ஆலோசனை
» போர்விமானம் தாக்கினாலும் கூடங்குளம் அணுமின்நிலையம் பாதிக்கப்படாது - அணுமின் நிலைய இயக்குனர்
» தெலுங்கானா : மாணவர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|